இந்த chess game update எப்ப வரும்னு எதிர்பார்த்துட்டே இருந்தேன்.
சிங்காரம்,.ரெண்டே வார்த்தையில் ஒரு telugu phrase பேசி, அதுல அவன் அக்கறையெல்லாம் கொட்டி, கல்கியை ஷாந்தப்படுத்தறானோ இல்லையோ நம்மள அவன் பக்கம் சாய்க்கிறான்.
இன்னிக்கி உதய் ரொம்ப irritate பண்ணிட்டார். ஏம்மா யமுனா நீ கொஞ்சம் பட்டும் படாமல் இதெல்லாம் கேட்க கூடாதா? உங்க பையன் கேட்டாலும் கோவிக்கறீங்க. கல்கிக்கு இங்க வந்தும் நிம்மதி இல்லை.
ஜெகா possessiveness -ல் பொங்கறதே அவளை அவன் கிட்ட இருந்து தள்ளச்செய்யுது. அம்மா- அப்பா வழி சொந்தங்கள் நமக்கு நெருக்கமோ இல்லையோ ஒரு வழி உறவினரை இன்னொரு வழி உறவினர் கிட்ட தப்பாவோ, விட்டுக்கொடுத்தோ பேசாமல் இருக்கணும். ஏன்னா நமக்கு அதே மாதிரி அவங்க குறை சொன்னால் மனசுக்கு ஒப்பாது. கல்கி ஒரு ஆதங்கத்தில் பேசின பேச்செல்லாம் ஜெகக்கு அவளோட அத்தை வீட்டை பத்தி பேச உரிமை கொடுக்க போய் வந்த வினை இது.
ஒருவேளை அவன் வந்து ஒரு முறை நல்ல சூழலில் சீரு கிட்ட பேசி இருந்தால் இவ்வளவு கோவப்பட்டு இருக்க மாட்டானோ. விதி வலியதுடா தம்பி. ஒன்னும் செய்ய முடியாது.