யமுனாவால அஞ்சனாவும் கல்கியும் அரைப்பட்டது போக இப்ப யமுனா அரைபடறாங்க அவங்க மருமக வாயில. அதை கேட்க வேண்டிய நிலை அவங்க பையனுக்கு.
ஏம்மா கல்கி, ஏதாவது பேசணும்னு பேசுவியா? யோசிக்க வேண்டாமா?
யமுனா விரும்பினது சிரிபுரத்து சூர்யாவை. அவர் யாரு, அவரோட குடும்பம் - கலாசாரம் எப்படி இது எதுவுமே தெரியாது அப்ப. ஆனால் இப்ப அப்பிடி இல்லையே நீ உங்க அத்தை பையனைத் தானே விரும்பற. உங்க தாத்தா ஆரம்பிச்ச விஷயம் தானே. அப்ப எதுக்கு யமுனாவை இழுக்குற? உனக்கு தைரியமில்லை அப்பா கிட்ட சொல்ல. Love பண்ணமாட்டேன்னு சொன்ன உனக்கு காதலிக்கறோமென்னு குற்றவுணர்ச்சி. எனக்கு அத்தானை கல்யாணம் செய்யற அளவுக்கு அவரோட குணம் பிடிச்சுருக்குன்னு சொல்லும்மா. இப்படி உன்னோட குழப்பத்துக்கு அவன் மனசை நோகடிச்சுட்டியே.