heyyyyyyyyyy ladiesssssss and girliesssssssss..
thankssssssssssss alot.........
share your viewssss
here comes the next update of Raja Rani ? ❤ ?
---------------------------------------------------------------------
காதல் 10:
புயலின் வேகத்திலும் புலியின் சீற்றத்தோடும் உள்ளே நுழைந்த ராஜ் நந்தனையும் அவன் பின்னால் கலவரமான முகத்தோடு வந்த ராஜ தீபனையும் பார்த்தக் குடும்பத்தாருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
ஹாலுக்குள் நுழைந்தவுடனேயே தீபனின் கன்னத்தில் பளாரென்று ஒன்று விட்டான் ராஜா. டைனிங் டேபிளை சுத்தம் செய்துக் கொண்டிருந்த வைரம் இதைக் கண்டு பதறி, “ராஜா என்னாச்சுடா…?” எனக் கேட்க,
டீவி பார்த்துக் கொண்டிருந்த அப்பாவும் மகளும் ராஜாவின் செயலில் அதிர்ந்து போய் எழ,
தீபனோ, “அண்ணா சாரிண்ணா…..இனி செய்ய மாட்டேன்…ப்ளீஸ்ணா….” எனக் கெஞ்ச
“ஷட் அப் ராஸ்கல்…..! இப்போ ஏன் டா இப்படி செஞ்ச…” என மீண்டும் தீபனை அடிக்க,
வைரமோ, “ராஜா என்னாச்சுடா…. தீபா என்னடா செஞ்ச…. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்டா… பொறந்த நாள் அதுவுமா அடிக்காதப்பா ப்ளீஸ்…” எனக் கண்ணீரோடு கெஞ்ச,
“பொறந்த நாள். ப்ளடி…….. அதை சாக்கா வைச்சு என்ன செஞ்சான்னு தெரியுமாம்மா…?” என சிவந்த முகத்தோடு கர்ஜித்தான்.
“பர்த்டேக்கு டிரிட்னு சொல்லி ப்ர்ண்ட்ஸோட சேர்ந்து குடிச்சிட்டு ஒரு பொண்ணை கிண்டல் செஞ்சு…… போலிஸ் ஸ்டேஷன் போய் நான் இவனை கூட்டிட்டு வரேன்…….” என்றான் ஆத்திரத்தில் இம்மியளவும் குறையாமல். ராஜா எப்போவுமே இப்படித்தான்.அன்பென்றாலும் சரி ஆத்திரமென்றாலும் சரி அவனுக்கு அதிகம் தான்.
அன்பு கொண்டவர்களிடம் அண்டார்டிகா பிரதேசத்தைப் போல் அவர்களை உறைய வைப்பவன், கோபம் என்று வந்துவிட்டால் நெருப்பு பிழம்பாய் வெறுப்பையும் ஆத்திரத்தையும் உமிழ்வான்.
ராஜ்நந்தனைப் பொருத்தவரை எல்லாமே அதீதம்தான்.
அதீதங்கள் என்றுமே ஆபத்தானவை தானே..!!
தீபனின் பிறந்த நாள் பார்ட்டிக்காக அவனது நண்பர்கள் டிரிங்க்ஸ் பார்ட்டி கேட்க, தீபனும் அதற்கான ஏற்பாடுகள் செய்துக் கொடுத்து அவனும் கொஞ்சம் குடித்து விட, அவனது நண்பர்கள் எல்லை மீறிக் குடித்து ரோட்டில் போவோர் வருவோரிடம் எல்லாரிடமும் வம்பு செய்ய, ரோந்து வந்த போலிஸ் அவர்களை பிடித்துக் கொண்டு போய் விட, விசயம் அறிந்த ராஜாவுக்குக் கோபம் உச்சத்தைத் தொட்டது.
ராஜாவைப் பொருத்தவரையில் என்ன தான் பணமிருந்தாலும் இந்த குடி, போதை, சிகரெட் போன்ற பழக்கங்கள் எல்லாம் சுத்தமாய் பிடிக்காது. அவனது தந்தைக்கு இப்பழக்கமில்லாததால் அவனும் அவரைப் பின்பற்றி ஒழுக்கமானவனாய் இருந்தான்.
இந்த சோசியல் டிரிங்கர் போன்ற பசப்பு வார்த்தைகள்பால் அவனுக்கு நம்பிக்கை கிடையாது. அதெல்லாம் குடிகாரர்கள் கள்ளச்சாராயத்தைக் கலர் டின்களில் திருட்டுத்தனமாய் அல்லாது கௌரவத்துக்காக குடிக்கச் செய்த நாகரீக ஏற்பாடு.
ஆதலால் கல்லூரி காலத்தில் கூட நண்பர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் கூட அவன் மதுவை தொட்டதெயில்லை. தனது தம்பி மது குடித்ததே ராஜாவுக்குக் கோபமென்றால் அவன் போலிஸ் ஸ்டேஷனில் இருந்துக் கொண்டு போன் செய்யவும் அது பெருங்கோபமாயிற்று.
தனது தம்பி போலிஸ் ஸ்டேஷனில் அதுவும் படிக்கும் பையன் இருப்பதை அவனால் என்ன முயன்றும் ஜீரணிக்க முடியவில்லை. வண்டியில் வரும்வரை அடக்கி வைத்திருந்த அனைத்து கோபத்தையும் தனது ஒற்றை அடியில் காட்டினான் ராஜ்நந்தன்.
போலிஸ் ஸ்டேஷன் சென்றதும் பயந்து போன தீபன் தந்தைக்குத் தெரிந்தால் திட்டுவார் என பயந்து தமையனை அழைக்க, அவனோ தந்தைக்கு மேல் இருப்பான் என தீபன் கிஞ்சிற்றும் நினைக்கவில்லை.
நல்ல தமையன் தந்தையைப் போல் தானே..!!
நடந்ததை ராஜா சொல்லி முடிக்க, தீபன், “சாரிம்மா…சாரிப்பா…நான் யாரையும் கிண்டல் செய்யல… என் ப்ர்ண்ட்ஸ் தான்……” எனச் சொல்ல
“அப்படி பட்ட ப்ர்ண்ட்ஸை வைச்சிக்கிட்டது உன் தப்புடா… ராஸ்கல்… படிக்கிற வயசில குடிக்கிற நீ……” என சீற
அவனது கோபத்தில் நியாயம் இருப்பதால் வைரம் அமைதியாய் இருந்து விட்டார். அவருக்குமே மகனது செயலில் வருத்தம் தான். தனது வளர்ப்பா இப்படி என..
சுந்தரமோ, “அடிச்சு திருத்த முடியாது விடு ராஜா….. இவனுக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு….” என அவரும் சீற, கீர்த்தியோ பயந்த விழிகளில் கண்ணீர் பாத்திக் கட்டியிருக்க நிற்க,
“கீர்த்தி உள்ளே போ…” என அதட்டினான் ராஜா.
“அண்….ணா..” என அவள் திக்க,
“ஐ சே யூ டூ கோ….போ” என அவனது சத்தத்துக்குக் கட்டுப்பட்டு அவள் அறைக்குச் செல்ல, அந்த சத்தம் தான் ஒரு யுத்தம் நடைபெற காரணமாய் அமைந்தது.
நந்தனின் சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த ராஜகோபாலும் வைதேகியும் வர,
தீபன் அப்போதுதான், “அண்ணா… இப்படில்லாம் ஆகும்னு எனக்குப் ப்ராமிஸா தெரியாதுண்ணா….. நான் எந்த தப்பும் செய்யல..” எனக் கண்ணீரோடு மன்றாட,
“தெரியாத நீ எந்த ஈர வெங்காயத்துக்குடா குடிச்ச….. டிரிங்க்ஸ் பார்ட்டி வைக்கிற அளவுக்கு பெரிய மனுசனாயிட்ட நீ….. காலேஜ் சேர்ந்து ஒரு எக்சாம் கூட எழுதி முடிக்கல…. பாடம் கத்துக்காம இப்படி குடிக்கவும் பொறுக்கித்தனம் செய்யவும் தான் கத்துக்கிட்டியா டா….” என அவனை மீண்டும் ஒரு அடி அடிக்க,
“நிறுத்துடா…” என மேல் மூச்சு கீழ மூச்சு வாங்க கத்தினார் ராஜகோபால்.
“படிக்கத் துப்பில்லாம யாரும் எடுக்காத குருப் எடுத்துப் படிச்ச நாயீ நீ… என் பேரனை குறை சொல்றீயா..?” என நடந்ததெதுவும் அறியாது ராஜகோபால் நந்தன் தீபனை அடித்த ஒன்றை மட்டும் கண்டு விட்டு எகிற,
எப்போதும் இருக்கும் கட்டுப்பாடு கட்டுப்பாடற்று போய்விட அதீத கோபத்தில் இருந்த ராஜாவும் தாத்தாவின் பேச்சில் கட்டுப்படாமல் கத்தத் தொடங்கினான்.
“வாயை முடுங்க தாத்தா… இவன் என்ன செஞ்சான் தெரியுமா…?” எனக் கத்த , நிலைமையின் தீவிரம் உணர்ந்த சுந்தரம் ,
“அப்பா…இவன் ப்ர்ண்ட்ஸோட சேர்ந்துக் குடிச்சிட்டு கலாட்டவாகி போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் பிரச்சனை ஆகியிருக்கு…. அதனால தான் ராஜா கண்டிக்கிறான்…. அவனை எதுவும் சொல்லாதீங்க…” என மூத்த மகனுக்குப் பரிந்துப் பேச
பேரனின் செய்கையில் பிடித்தம் இல்லாமல் இருந்தாலும் கூட ராஜாவின் முன் அவனை விட்டுக்கொடுக்க முடியாமல், “ஊர் உலகத்துல யாரும் செய்யாததையா என் பேரன் செஞ்சான்….? வயசு பிள்ள கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்… அதுக்காக இவன் இப்படி மாடு மாதிரி அடிப்பான் நீயும் உன் பொண்டாட்டி கூடச் சேர்ந்து வேடிக்கைப் பார்க்கிறியா சுந்தர்…. என்னடா நீயும் உன் பொண்டாட்டி மாதிரி பெத்தவனை விட வளர்த்தவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சீட்டீங்களா…?” என கேட்ட நொடி அனைவரும் அவரை அதிர்ந்து நோக்க
“என்னங்க… சும்மா இருங்க…… சின்னவன் செஞ்சது தப்புதான்…” என வைதேகி சொல்ல
“அப்பா…… என்னப்பா……” என சுந்தரமும் தந்தையைத் தடுக்க முயற்சி செய்ய
“என்னடா… என்ன அப்பா…. என்ன வைதேகி… சின்னவன் தப்பு செஞ்சா.. அதைக் கேட்க அவன் அப்பா அம்மா இருக்காங்க… அநாதை கழுத.. இவன் எப்படி என் பேரனை… அதுவும் ராஜகோபாலோட ஒரே வாரிசை அடிக்கலாம்…..” என உண்மையைப் போட்டு உடைக்க,
thankssssssssssss alot.........
share your viewssss
here comes the next update of Raja Rani ? ❤ ?
---------------------------------------------------------------------
காதல் 10:
புயலின் வேகத்திலும் புலியின் சீற்றத்தோடும் உள்ளே நுழைந்த ராஜ் நந்தனையும் அவன் பின்னால் கலவரமான முகத்தோடு வந்த ராஜ தீபனையும் பார்த்தக் குடும்பத்தாருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
ஹாலுக்குள் நுழைந்தவுடனேயே தீபனின் கன்னத்தில் பளாரென்று ஒன்று விட்டான் ராஜா. டைனிங் டேபிளை சுத்தம் செய்துக் கொண்டிருந்த வைரம் இதைக் கண்டு பதறி, “ராஜா என்னாச்சுடா…?” எனக் கேட்க,
டீவி பார்த்துக் கொண்டிருந்த அப்பாவும் மகளும் ராஜாவின் செயலில் அதிர்ந்து போய் எழ,
தீபனோ, “அண்ணா சாரிண்ணா…..இனி செய்ய மாட்டேன்…ப்ளீஸ்ணா….” எனக் கெஞ்ச
“ஷட் அப் ராஸ்கல்…..! இப்போ ஏன் டா இப்படி செஞ்ச…” என மீண்டும் தீபனை அடிக்க,
வைரமோ, “ராஜா என்னாச்சுடா…. தீபா என்னடா செஞ்ச…. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்டா… பொறந்த நாள் அதுவுமா அடிக்காதப்பா ப்ளீஸ்…” எனக் கண்ணீரோடு கெஞ்ச,
“பொறந்த நாள். ப்ளடி…….. அதை சாக்கா வைச்சு என்ன செஞ்சான்னு தெரியுமாம்மா…?” என சிவந்த முகத்தோடு கர்ஜித்தான்.
“பர்த்டேக்கு டிரிட்னு சொல்லி ப்ர்ண்ட்ஸோட சேர்ந்து குடிச்சிட்டு ஒரு பொண்ணை கிண்டல் செஞ்சு…… போலிஸ் ஸ்டேஷன் போய் நான் இவனை கூட்டிட்டு வரேன்…….” என்றான் ஆத்திரத்தில் இம்மியளவும் குறையாமல். ராஜா எப்போவுமே இப்படித்தான்.அன்பென்றாலும் சரி ஆத்திரமென்றாலும் சரி அவனுக்கு அதிகம் தான்.
அன்பு கொண்டவர்களிடம் அண்டார்டிகா பிரதேசத்தைப் போல் அவர்களை உறைய வைப்பவன், கோபம் என்று வந்துவிட்டால் நெருப்பு பிழம்பாய் வெறுப்பையும் ஆத்திரத்தையும் உமிழ்வான்.
ராஜ்நந்தனைப் பொருத்தவரை எல்லாமே அதீதம்தான்.
அதீதங்கள் என்றுமே ஆபத்தானவை தானே..!!
தீபனின் பிறந்த நாள் பார்ட்டிக்காக அவனது நண்பர்கள் டிரிங்க்ஸ் பார்ட்டி கேட்க, தீபனும் அதற்கான ஏற்பாடுகள் செய்துக் கொடுத்து அவனும் கொஞ்சம் குடித்து விட, அவனது நண்பர்கள் எல்லை மீறிக் குடித்து ரோட்டில் போவோர் வருவோரிடம் எல்லாரிடமும் வம்பு செய்ய, ரோந்து வந்த போலிஸ் அவர்களை பிடித்துக் கொண்டு போய் விட, விசயம் அறிந்த ராஜாவுக்குக் கோபம் உச்சத்தைத் தொட்டது.
ராஜாவைப் பொருத்தவரையில் என்ன தான் பணமிருந்தாலும் இந்த குடி, போதை, சிகரெட் போன்ற பழக்கங்கள் எல்லாம் சுத்தமாய் பிடிக்காது. அவனது தந்தைக்கு இப்பழக்கமில்லாததால் அவனும் அவரைப் பின்பற்றி ஒழுக்கமானவனாய் இருந்தான்.
இந்த சோசியல் டிரிங்கர் போன்ற பசப்பு வார்த்தைகள்பால் அவனுக்கு நம்பிக்கை கிடையாது. அதெல்லாம் குடிகாரர்கள் கள்ளச்சாராயத்தைக் கலர் டின்களில் திருட்டுத்தனமாய் அல்லாது கௌரவத்துக்காக குடிக்கச் செய்த நாகரீக ஏற்பாடு.
ஆதலால் கல்லூரி காலத்தில் கூட நண்பர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் கூட அவன் மதுவை தொட்டதெயில்லை. தனது தம்பி மது குடித்ததே ராஜாவுக்குக் கோபமென்றால் அவன் போலிஸ் ஸ்டேஷனில் இருந்துக் கொண்டு போன் செய்யவும் அது பெருங்கோபமாயிற்று.
தனது தம்பி போலிஸ் ஸ்டேஷனில் அதுவும் படிக்கும் பையன் இருப்பதை அவனால் என்ன முயன்றும் ஜீரணிக்க முடியவில்லை. வண்டியில் வரும்வரை அடக்கி வைத்திருந்த அனைத்து கோபத்தையும் தனது ஒற்றை அடியில் காட்டினான் ராஜ்நந்தன்.
போலிஸ் ஸ்டேஷன் சென்றதும் பயந்து போன தீபன் தந்தைக்குத் தெரிந்தால் திட்டுவார் என பயந்து தமையனை அழைக்க, அவனோ தந்தைக்கு மேல் இருப்பான் என தீபன் கிஞ்சிற்றும் நினைக்கவில்லை.
நல்ல தமையன் தந்தையைப் போல் தானே..!!
நடந்ததை ராஜா சொல்லி முடிக்க, தீபன், “சாரிம்மா…சாரிப்பா…நான் யாரையும் கிண்டல் செய்யல… என் ப்ர்ண்ட்ஸ் தான்……” எனச் சொல்ல
“அப்படி பட்ட ப்ர்ண்ட்ஸை வைச்சிக்கிட்டது உன் தப்புடா… ராஸ்கல்… படிக்கிற வயசில குடிக்கிற நீ……” என சீற
அவனது கோபத்தில் நியாயம் இருப்பதால் வைரம் அமைதியாய் இருந்து விட்டார். அவருக்குமே மகனது செயலில் வருத்தம் தான். தனது வளர்ப்பா இப்படி என..
சுந்தரமோ, “அடிச்சு திருத்த முடியாது விடு ராஜா….. இவனுக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு….” என அவரும் சீற, கீர்த்தியோ பயந்த விழிகளில் கண்ணீர் பாத்திக் கட்டியிருக்க நிற்க,
“கீர்த்தி உள்ளே போ…” என அதட்டினான் ராஜா.
“அண்….ணா..” என அவள் திக்க,
“ஐ சே யூ டூ கோ….போ” என அவனது சத்தத்துக்குக் கட்டுப்பட்டு அவள் அறைக்குச் செல்ல, அந்த சத்தம் தான் ஒரு யுத்தம் நடைபெற காரணமாய் அமைந்தது.
நந்தனின் சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த ராஜகோபாலும் வைதேகியும் வர,
தீபன் அப்போதுதான், “அண்ணா… இப்படில்லாம் ஆகும்னு எனக்குப் ப்ராமிஸா தெரியாதுண்ணா….. நான் எந்த தப்பும் செய்யல..” எனக் கண்ணீரோடு மன்றாட,
“தெரியாத நீ எந்த ஈர வெங்காயத்துக்குடா குடிச்ச….. டிரிங்க்ஸ் பார்ட்டி வைக்கிற அளவுக்கு பெரிய மனுசனாயிட்ட நீ….. காலேஜ் சேர்ந்து ஒரு எக்சாம் கூட எழுதி முடிக்கல…. பாடம் கத்துக்காம இப்படி குடிக்கவும் பொறுக்கித்தனம் செய்யவும் தான் கத்துக்கிட்டியா டா….” என அவனை மீண்டும் ஒரு அடி அடிக்க,
“நிறுத்துடா…” என மேல் மூச்சு கீழ மூச்சு வாங்க கத்தினார் ராஜகோபால்.
“படிக்கத் துப்பில்லாம யாரும் எடுக்காத குருப் எடுத்துப் படிச்ச நாயீ நீ… என் பேரனை குறை சொல்றீயா..?” என நடந்ததெதுவும் அறியாது ராஜகோபால் நந்தன் தீபனை அடித்த ஒன்றை மட்டும் கண்டு விட்டு எகிற,
எப்போதும் இருக்கும் கட்டுப்பாடு கட்டுப்பாடற்று போய்விட அதீத கோபத்தில் இருந்த ராஜாவும் தாத்தாவின் பேச்சில் கட்டுப்படாமல் கத்தத் தொடங்கினான்.
“வாயை முடுங்க தாத்தா… இவன் என்ன செஞ்சான் தெரியுமா…?” எனக் கத்த , நிலைமையின் தீவிரம் உணர்ந்த சுந்தரம் ,
“அப்பா…இவன் ப்ர்ண்ட்ஸோட சேர்ந்துக் குடிச்சிட்டு கலாட்டவாகி போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் பிரச்சனை ஆகியிருக்கு…. அதனால தான் ராஜா கண்டிக்கிறான்…. அவனை எதுவும் சொல்லாதீங்க…” என மூத்த மகனுக்குப் பரிந்துப் பேச
பேரனின் செய்கையில் பிடித்தம் இல்லாமல் இருந்தாலும் கூட ராஜாவின் முன் அவனை விட்டுக்கொடுக்க முடியாமல், “ஊர் உலகத்துல யாரும் செய்யாததையா என் பேரன் செஞ்சான்….? வயசு பிள்ள கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்… அதுக்காக இவன் இப்படி மாடு மாதிரி அடிப்பான் நீயும் உன் பொண்டாட்டி கூடச் சேர்ந்து வேடிக்கைப் பார்க்கிறியா சுந்தர்…. என்னடா நீயும் உன் பொண்டாட்டி மாதிரி பெத்தவனை விட வளர்த்தவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சீட்டீங்களா…?” என கேட்ட நொடி அனைவரும் அவரை அதிர்ந்து நோக்க
“என்னங்க… சும்மா இருங்க…… சின்னவன் செஞ்சது தப்புதான்…” என வைதேகி சொல்ல
“அப்பா…… என்னப்பா……” என சுந்தரமும் தந்தையைத் தடுக்க முயற்சி செய்ய
“என்னடா… என்ன அப்பா…. என்ன வைதேகி… சின்னவன் தப்பு செஞ்சா.. அதைக் கேட்க அவன் அப்பா அம்மா இருக்காங்க… அநாதை கழுத.. இவன் எப்படி என் பேரனை… அதுவும் ராஜகோபாலோட ஒரே வாரிசை அடிக்கலாம்…..” என உண்மையைப் போட்டு உடைக்க,