Hi dear ladies and girliesssssssss..thanks alottttttttttt..
here comes the next update of ??
-----------------------------------------------------------------------------
காதல் 11
வீட்டிற்கு வந்த மதுரவசனியின் உள்ளம் கொதித்தது. என்ன ஆணவம் அவனுக்கு? எல்லாமே அவன் இஷ்டம் தானா? அவன் மேல கட்டுங்காடாத ஆத்திரத்தில் இருந்தவளுக்கு அழுகை தான் வந்தது. என்ன வார்த்தை சொல்லிவிட்டான் அவன்?
‘டைம்ண்ட் குரூப்ஸ் மருமக ஆகனும்னுதான உன் ஆசை...’ இது அவள் காதில் ஒலிக்க இன்னும் அழுகைப் பீறிட்டது. அவனைப் பற்றி எதுவுமே அறியாத போதிலும் அவன் கண்ணில் தெரிந்த உண்மையை மட்டுமே நம்பி அவனது காதலை ஏற்றவளைப் போய் என்ன வார்த்தைச் சொல்லிவிட்டான். கோபம் இருப்பதால் என்ன வார்த்தை வேண்டுமானாலும் பேசுவானா அவன்.. நீ வேண்டாம் என்று சொல்ல எப்படி முடிகிறது அவனால்.?இப்படி ஒரு பிடிவாதம் கொண்டவனை ஏன் அவளுக்குப் பிடிக்கிறது என்ற சுயபச்சாதாபத்திலேயே அவள் மேலும் அழுதாள்.
அவளால் அவனைத் தவிர யாரையும் நேசிக்க முடியாது என்று தெரிந்தும் அதைப் பயன்படுத்தி இவளைக் கட்டுப்படுத்த நினைக்கிறானே ஒழிய அவளுக்காகக் கூட அவனது நிலையில் இருந்து இறங்காமல் இருக்கிறானே அப்புறம் என்ன ஈர வெங்காய காதல் என்று அவனைப் போலவே நினைத்தாள்.
மனதில் இருப்பதை யாரிடமும் சொல்ல முடியாத வேதனையை அழுது தீர்த்தாள். ஹம்சா வேலைக்குப் போயிருந்ததால் தப்பித்தாள் இல்லாவிடில் அவள் இவள் அழுவதைப் பார்த்து கேள்விக் கேட்டுத் துளைத்தெடுத்திருப்பாள். ஏற்கனவே ராஜாவுடனான சம்மந்தம் ஹம்சாவுக்குப் பிடிக்கவில்லை. மதுவிடம் வந்து ,
“அந்த மனுசன் தான் அப்படி ஹார்ஷா நடந்துக்கிட்டாரே டி… நீ வீட்ல சொல்ல வேண்டியது தானே… வீட்டை எப்போவும் எதிர்ப்ப... இதுக்கு அவங்களை கேக்கலயா..? அவங்க சொன்னா மண்டையை ஆட்டுவியா…? அந்தாள் குணம் தான் தெரியும்ல… எனக்குப் பிடிக்கலன்னு சொல்ல என்ன உனக்கு…?” எனக் கடிய
“இல்லடி… அவர் ரொம்ப நல்லவர்… பெரியப்பா விசாரிச்சிட்டாரு… அவங்க வீட்ல எல்லாருமே ரொம்ப நல்லவங்க.. அதான் ஒத்துக்கிட்டேன்..” என்றாள் மதுரவசனி. மதுவுக்கு உள்ளே குற்றவுணர்ச்சி. இப்படி உற்ற தோழியிடம் பொய்யுரைக்கிறோமே என. ஹம்சாவிடம் காதலிக்கிறேன் என்று சொன்னால் செவிட்டிலேயே நாலு அறை விடுவாள். அதுவும் நந்தனை என்றால் சொல்லவே வேண்டாம். எப்படியோ ஹம்சாவை சமாதானப்படுத்தினாள் மது. பெரியவர்கள் பேசிய சம்மந்தம் என்ற போதிலே இவளுக்கு ராஜாவை பிடிக்கவில்லை இதில் காதல் என்று தெரிந்தால் ஒரேடியாக போய் வீட்டில் சொல்லிக் கல்யாணத்தை நிறுத்திவிடுவாள்.
அவனது கடந்தகாலம் தெரிந்தவுடன் மதுவுக்குமே வேதனைதான் வருத்தம் தான். ஆனால் இவனது இன்றையை பிடிவாதத்தை அவள் மனம் ரசிக்கவில்லை. அவனையும் விட முடியாது அவள் குடும்பத்தையும் விட முடியாது. காதலிக்கும் ஒரு சராசரியானப் பெண்ணாக தான் இருந்தாள் மது. ஒரு கண்ணைக் காக்க இன்னொரு கண்ணை யாரும் குத்திக் கொள்வது இல்லையே.
இப்படியே பலவித உணர்வுகளால் கட்டுண்டவள் வைரத்தின் செல்பேசி அழைப்பு வரவும் தான் நிலைப்பெற்றாள்.
மகன் கோபமாகப் பேசிச் சென்றதை நினைத்து வருந்தியவர் என்னவாயிற்றோ எனப் பதறி ரகுவுக்குப் போன் செய்ய, அவனுக்குமே இவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடல் தெரியாத காரணத்தால் வைரம் வேறு வழியின்றி மருமகளுக்கே அழைத்தார்.
“சொல்லுங்க அத்த”
“மதும்மா…. ராஜாவைப் பார்க்க போனியாமா…?” எனத் தயக்கத்தோடு கேட்க
“ஆமா.. அத்த….பார்த்தேன்…”
“என்ன சொன்னான்மா அவன்….?” என அவர் பயத்தோடு கேட்க
“கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு சொன்னாரு..”
“அய்யோ….” என்றவர் பதறிப் போய் அழ
மதுவோ அமைதியாகவே இருந்தாள். அவளது அமைதி மேலும் அவரை வருந்தச் செய்ய
“நீ..என்னமா சொன்ன….?”
“நீங்கதான் என் கழுத்துல தாலி கட்டனும்னு சொன்னேன்..”
“அவன் ஒத்துக்கிட்டானா மா?”
“இல்ல அத்த… ஆனா அவரை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்…” என்றவளின் மனம் புரிந்தவர் மேலும் தன்னால் தனது மகனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என அழ,
“ப்ச்… இப்படி எல்லாத்துக்கும் அழதுட்டே இருக்காதீங்க... இப்படி அழாம அன்னிக்கே உங்க புள்ளப் பின்னாடிப் போயிருந்தா உங்க புள்ளை இன்னிக்கு இப்படி என் உயிர வாங்க மாட்டாரு..” என இவள் கடிய
மதுரவசனிக்கு பெரியவரிடம் இப்படி பேசுகிறோமே என்றெல்லாம் இல்லை. அவள் பொறுமைசாலியெல்லாம் கிடையாது. இப்படி எதாவது எதிர்த்துப் பேசி தான் வீட்டில் திட்டு வாங்குவாள். வீட்டில் பேசுவது போல் பட்டென்று பேசிவிட்டவள் பின்னர் தான் தனது தவறை உணர்ந்தாள்.
“சாரி அத்த… நான் ஏதோ கோவம்.. அதான்…”
“உன்ட்ட எல்லாத்தையும் சொல்லிட்டானமா?” என்றார் வைரம் வலி மட்டுமே மிகுந்த குரலில்.
“ஹ்ம்ம்”
“உனக்கும் என் மேல கோவமாடா? என் புள்ளையை நான் என்னிக்குமே விடனும்னு நினைச்சதில்லமா… அவன் இல்லாம நான் நிம்மதியா தூங்கவே இல்ல தெரியுமா…? இங்க சின்னவனையும் சரி கீர்த்தியையும் சரி நான் கவனிக்கறதே இல்ல… அவன் நினைப்புதான் எப்போதுமே… அவன் என்னைக்காவது ஒரு நாள் பேசிட மாட்டானா அப்படினு தான் ஒவ்வொரு நாளும் நினைச்சிட்டே எழுந்திருக்கிறேன்…” என அவர் சொல்லி அழ
“அய்யோ…அத்த...விடுங்க.. ஏதோ நடந்து போச்சு…… இப்ப ஆக வேண்டியது பேசலாம்… அழாதீங்க ப்ளீஸ்……” என மதுரவசனி மாமியாரை சமாதானம் செய்ய ,
“நான் உங்கிட்ட பேசனும் மது… வீட்டிற்கு… இல்ல... சாய் பாபா கோவில் இங்க பக்கமா இருக்கு வரியாம்மா..” எனக் கேட்க மதுவும் சம்மதித்தாள். ஒரு நாலு மணியளவில் வீட்டை விட்டு கிளம்பினாள் மது. போகும் முன் ஹம்சாவுக்கு போன் செய்து சொல்லியும் விட்டாள்.
கோவிலில் இவளுக்கு முன்பே வந்து வைரம் காத்திருந்தார். அவரது சோர்ந்த கண்களையும் களைந்தத் தோற்றத்தையும் கண்டவளுக்கு தன்னால் தானோ எனக் குற்றவுணர்வு தலை தூக்கியது. அவரருகே அவள் செல்ல, அவளைக் கண்டவர்
“எப்படிம்மா இருக்க…?” என நலம் விசாரிக்க
“நல்லாயிருக்கேன் அத்த” என்று சொன்ன மதுவின் குரலும் உள்ளே போயிருந்தது. கோவிலைச் சுற்றி விட்டு அமர்ந்தவர்களிடையே அமைதியே நிலவியது.
பின்னர் நடந்த அனைத்தையும் மது வைரத்திடம் சொன்னாள். அதைக் கேட்டவருக்கு மகன் எவ்வளவு காயப்பட்டிருக்கிறான் எனப் புரிந்தது. அது புரியவும் கண்ணிலிருந்து நீரும் சேர்ந்து வழிய ஆரம்பித்தது.
“அத்த ப்ளீஸ் அழாதீங்க அத்த…” என்ற மதுவுமே அழுதாள்.
மருமகள் அழுவதைக் கண்ட வைரம், “மது.. நீ அழாதடா.. என் பையனுக்கு ஒரு பழக்கம்… எதாவது ஒரு விசயம் பிடிச்சாச்சா.. அதை விடவே மாட்டான்… உன்னை அவன் விட மாட்டான் டா” என கையைப் பிடித்து சமாதானம் சொல்ல
“உங்களையும் தானே பிடிக்கும். இப்போ உங்களை விடலயா?அப்புறம் என்னை மட்டும் எப்படி?” எனக் கலக்கமான குரலில் மது வினவ
“இல்லடா… உன்னை அவன் எங்களை விட விரும்புறான்… எங்க மேல அவனுக்குக் கோபம் இருக்கு.. உன் மேல அவனுக்கு என்ன கோபமிருக்கபோவுது சொல்லு… நீ எந்த தப்பும் செய்யலடா”
“இல்லத்த… ஏற்கனவே வீட்ல சொல்லலனு குற்றவுணர்ச்சியா இருக்கு… எப்போவாது தெரிஞ்சுடுமோன்னு பயம் வேற… இதுல இவர் வேற… எனக்கு பயமா இருக்குத்த… அவரை என்னால விட முடியாதுன்னு தெரிஞ்சே என்னைக் கார்னர் செய்றார் அத்த… என்னைப் புரிஞ்சிக்கவே மாட்றார்… கல்யாணத்துக்கு ஒத்துக்காம என்னை டார்ச்சர் செய்றார்” என சிறுப் பிள்ளையாய் அழ
here comes the next update of ??
-----------------------------------------------------------------------------
காதல் 11
வீட்டிற்கு வந்த மதுரவசனியின் உள்ளம் கொதித்தது. என்ன ஆணவம் அவனுக்கு? எல்லாமே அவன் இஷ்டம் தானா? அவன் மேல கட்டுங்காடாத ஆத்திரத்தில் இருந்தவளுக்கு அழுகை தான் வந்தது. என்ன வார்த்தை சொல்லிவிட்டான் அவன்?
‘டைம்ண்ட் குரூப்ஸ் மருமக ஆகனும்னுதான உன் ஆசை...’ இது அவள் காதில் ஒலிக்க இன்னும் அழுகைப் பீறிட்டது. அவனைப் பற்றி எதுவுமே அறியாத போதிலும் அவன் கண்ணில் தெரிந்த உண்மையை மட்டுமே நம்பி அவனது காதலை ஏற்றவளைப் போய் என்ன வார்த்தைச் சொல்லிவிட்டான். கோபம் இருப்பதால் என்ன வார்த்தை வேண்டுமானாலும் பேசுவானா அவன்.. நீ வேண்டாம் என்று சொல்ல எப்படி முடிகிறது அவனால்.?இப்படி ஒரு பிடிவாதம் கொண்டவனை ஏன் அவளுக்குப் பிடிக்கிறது என்ற சுயபச்சாதாபத்திலேயே அவள் மேலும் அழுதாள்.
அவளால் அவனைத் தவிர யாரையும் நேசிக்க முடியாது என்று தெரிந்தும் அதைப் பயன்படுத்தி இவளைக் கட்டுப்படுத்த நினைக்கிறானே ஒழிய அவளுக்காகக் கூட அவனது நிலையில் இருந்து இறங்காமல் இருக்கிறானே அப்புறம் என்ன ஈர வெங்காய காதல் என்று அவனைப் போலவே நினைத்தாள்.
மனதில் இருப்பதை யாரிடமும் சொல்ல முடியாத வேதனையை அழுது தீர்த்தாள். ஹம்சா வேலைக்குப் போயிருந்ததால் தப்பித்தாள் இல்லாவிடில் அவள் இவள் அழுவதைப் பார்த்து கேள்விக் கேட்டுத் துளைத்தெடுத்திருப்பாள். ஏற்கனவே ராஜாவுடனான சம்மந்தம் ஹம்சாவுக்குப் பிடிக்கவில்லை. மதுவிடம் வந்து ,
“அந்த மனுசன் தான் அப்படி ஹார்ஷா நடந்துக்கிட்டாரே டி… நீ வீட்ல சொல்ல வேண்டியது தானே… வீட்டை எப்போவும் எதிர்ப்ப... இதுக்கு அவங்களை கேக்கலயா..? அவங்க சொன்னா மண்டையை ஆட்டுவியா…? அந்தாள் குணம் தான் தெரியும்ல… எனக்குப் பிடிக்கலன்னு சொல்ல என்ன உனக்கு…?” எனக் கடிய
“இல்லடி… அவர் ரொம்ப நல்லவர்… பெரியப்பா விசாரிச்சிட்டாரு… அவங்க வீட்ல எல்லாருமே ரொம்ப நல்லவங்க.. அதான் ஒத்துக்கிட்டேன்..” என்றாள் மதுரவசனி. மதுவுக்கு உள்ளே குற்றவுணர்ச்சி. இப்படி உற்ற தோழியிடம் பொய்யுரைக்கிறோமே என. ஹம்சாவிடம் காதலிக்கிறேன் என்று சொன்னால் செவிட்டிலேயே நாலு அறை விடுவாள். அதுவும் நந்தனை என்றால் சொல்லவே வேண்டாம். எப்படியோ ஹம்சாவை சமாதானப்படுத்தினாள் மது. பெரியவர்கள் பேசிய சம்மந்தம் என்ற போதிலே இவளுக்கு ராஜாவை பிடிக்கவில்லை இதில் காதல் என்று தெரிந்தால் ஒரேடியாக போய் வீட்டில் சொல்லிக் கல்யாணத்தை நிறுத்திவிடுவாள்.
அவனது கடந்தகாலம் தெரிந்தவுடன் மதுவுக்குமே வேதனைதான் வருத்தம் தான். ஆனால் இவனது இன்றையை பிடிவாதத்தை அவள் மனம் ரசிக்கவில்லை. அவனையும் விட முடியாது அவள் குடும்பத்தையும் விட முடியாது. காதலிக்கும் ஒரு சராசரியானப் பெண்ணாக தான் இருந்தாள் மது. ஒரு கண்ணைக் காக்க இன்னொரு கண்ணை யாரும் குத்திக் கொள்வது இல்லையே.
இப்படியே பலவித உணர்வுகளால் கட்டுண்டவள் வைரத்தின் செல்பேசி அழைப்பு வரவும் தான் நிலைப்பெற்றாள்.
மகன் கோபமாகப் பேசிச் சென்றதை நினைத்து வருந்தியவர் என்னவாயிற்றோ எனப் பதறி ரகுவுக்குப் போன் செய்ய, அவனுக்குமே இவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடல் தெரியாத காரணத்தால் வைரம் வேறு வழியின்றி மருமகளுக்கே அழைத்தார்.
“சொல்லுங்க அத்த”
“மதும்மா…. ராஜாவைப் பார்க்க போனியாமா…?” எனத் தயக்கத்தோடு கேட்க
“ஆமா.. அத்த….பார்த்தேன்…”
“என்ன சொன்னான்மா அவன்….?” என அவர் பயத்தோடு கேட்க
“கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு சொன்னாரு..”
“அய்யோ….” என்றவர் பதறிப் போய் அழ
மதுவோ அமைதியாகவே இருந்தாள். அவளது அமைதி மேலும் அவரை வருந்தச் செய்ய
“நீ..என்னமா சொன்ன….?”
“நீங்கதான் என் கழுத்துல தாலி கட்டனும்னு சொன்னேன்..”
“அவன் ஒத்துக்கிட்டானா மா?”
“இல்ல அத்த… ஆனா அவரை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்…” என்றவளின் மனம் புரிந்தவர் மேலும் தன்னால் தனது மகனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என அழ,
“ப்ச்… இப்படி எல்லாத்துக்கும் அழதுட்டே இருக்காதீங்க... இப்படி அழாம அன்னிக்கே உங்க புள்ளப் பின்னாடிப் போயிருந்தா உங்க புள்ளை இன்னிக்கு இப்படி என் உயிர வாங்க மாட்டாரு..” என இவள் கடிய
மதுரவசனிக்கு பெரியவரிடம் இப்படி பேசுகிறோமே என்றெல்லாம் இல்லை. அவள் பொறுமைசாலியெல்லாம் கிடையாது. இப்படி எதாவது எதிர்த்துப் பேசி தான் வீட்டில் திட்டு வாங்குவாள். வீட்டில் பேசுவது போல் பட்டென்று பேசிவிட்டவள் பின்னர் தான் தனது தவறை உணர்ந்தாள்.
“சாரி அத்த… நான் ஏதோ கோவம்.. அதான்…”
“உன்ட்ட எல்லாத்தையும் சொல்லிட்டானமா?” என்றார் வைரம் வலி மட்டுமே மிகுந்த குரலில்.
“ஹ்ம்ம்”
“உனக்கும் என் மேல கோவமாடா? என் புள்ளையை நான் என்னிக்குமே விடனும்னு நினைச்சதில்லமா… அவன் இல்லாம நான் நிம்மதியா தூங்கவே இல்ல தெரியுமா…? இங்க சின்னவனையும் சரி கீர்த்தியையும் சரி நான் கவனிக்கறதே இல்ல… அவன் நினைப்புதான் எப்போதுமே… அவன் என்னைக்காவது ஒரு நாள் பேசிட மாட்டானா அப்படினு தான் ஒவ்வொரு நாளும் நினைச்சிட்டே எழுந்திருக்கிறேன்…” என அவர் சொல்லி அழ
“அய்யோ…அத்த...விடுங்க.. ஏதோ நடந்து போச்சு…… இப்ப ஆக வேண்டியது பேசலாம்… அழாதீங்க ப்ளீஸ்……” என மதுரவசனி மாமியாரை சமாதானம் செய்ய ,
“நான் உங்கிட்ட பேசனும் மது… வீட்டிற்கு… இல்ல... சாய் பாபா கோவில் இங்க பக்கமா இருக்கு வரியாம்மா..” எனக் கேட்க மதுவும் சம்மதித்தாள். ஒரு நாலு மணியளவில் வீட்டை விட்டு கிளம்பினாள் மது. போகும் முன் ஹம்சாவுக்கு போன் செய்து சொல்லியும் விட்டாள்.
கோவிலில் இவளுக்கு முன்பே வந்து வைரம் காத்திருந்தார். அவரது சோர்ந்த கண்களையும் களைந்தத் தோற்றத்தையும் கண்டவளுக்கு தன்னால் தானோ எனக் குற்றவுணர்வு தலை தூக்கியது. அவரருகே அவள் செல்ல, அவளைக் கண்டவர்
“எப்படிம்மா இருக்க…?” என நலம் விசாரிக்க
“நல்லாயிருக்கேன் அத்த” என்று சொன்ன மதுவின் குரலும் உள்ளே போயிருந்தது. கோவிலைச் சுற்றி விட்டு அமர்ந்தவர்களிடையே அமைதியே நிலவியது.
பின்னர் நடந்த அனைத்தையும் மது வைரத்திடம் சொன்னாள். அதைக் கேட்டவருக்கு மகன் எவ்வளவு காயப்பட்டிருக்கிறான் எனப் புரிந்தது. அது புரியவும் கண்ணிலிருந்து நீரும் சேர்ந்து வழிய ஆரம்பித்தது.
“அத்த ப்ளீஸ் அழாதீங்க அத்த…” என்ற மதுவுமே அழுதாள்.
மருமகள் அழுவதைக் கண்ட வைரம், “மது.. நீ அழாதடா.. என் பையனுக்கு ஒரு பழக்கம்… எதாவது ஒரு விசயம் பிடிச்சாச்சா.. அதை விடவே மாட்டான்… உன்னை அவன் விட மாட்டான் டா” என கையைப் பிடித்து சமாதானம் சொல்ல
“உங்களையும் தானே பிடிக்கும். இப்போ உங்களை விடலயா?அப்புறம் என்னை மட்டும் எப்படி?” எனக் கலக்கமான குரலில் மது வினவ
“இல்லடா… உன்னை அவன் எங்களை விட விரும்புறான்… எங்க மேல அவனுக்குக் கோபம் இருக்கு.. உன் மேல அவனுக்கு என்ன கோபமிருக்கபோவுது சொல்லு… நீ எந்த தப்பும் செய்யலடா”
“இல்லத்த… ஏற்கனவே வீட்ல சொல்லலனு குற்றவுணர்ச்சியா இருக்கு… எப்போவாது தெரிஞ்சுடுமோன்னு பயம் வேற… இதுல இவர் வேற… எனக்கு பயமா இருக்குத்த… அவரை என்னால விட முடியாதுன்னு தெரிஞ்சே என்னைக் கார்னர் செய்றார் அத்த… என்னைப் புரிஞ்சிக்கவே மாட்றார்… கல்யாணத்துக்கு ஒத்துக்காம என்னை டார்ச்சர் செய்றார்” என சிறுப் பிள்ளையாய் அழ