காதல் 13:
திருமணம் முடிந்து இரு நாட்கள் கழித்து மறுவீட்டுக்குச் செல்ல ஆயத்தமானார்கள் ராஜ் நந்தன் – மதுரவசனி தம்பதியர்.
காரில் இருவரும் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்கையில் மது அமைதியாகவே வர ,
“என்ன மது சைலண்டா இருக்க…”
“ஒன்னுமில்லங்க… சும்மா வெளியே வேடிக்கைப் பார்க்கிறேன்” என மதுரவசனி பதிலளிக்க,
“மது… லிஸன் டூ மீ… நான் உங்கூட இருக்கும்போது நான் மட்டுமே உன் நினைப்புல நான் மட்டும் தான் இருக்கனும்.. வேடிக்கையை வெளியே பார்க்காத.. சீ மீ…” எனச் சொல்ல
“ப்ச்…என்னங்க நீங்க.. நீங்க என் நினைப்புல இல்லன்னு யார் சொன்னா…. அதுக்காக எவ்வளவு நேரம் அப்படியே பார்க்கிறது..?”
“பார்க்க போரடிச்சா அப்போ பேசுடி..”
“வண்டி ஓட்டும்போது பேசக் கூடாது.. உங்க கவனம் சிதறிடும்..”
“ஆஹான்… இப்ப நான் கவனமாவா வண்டி ஓட்டுறேன்.. என் முழு கவனமும் உன் மேல தான் மது….” என்றவனின் தோளில் அடித்து விட்டு அவள் சாய்ந்துக் கொள்ள
“ம்ம்.. இது பொண்டாட்டி லட்சணம்..” என்றபடி காரை செலுத்தினான்.
மதுரவசனியின் வீட்டு வாயிலில் காரை நிறுத்தி இறங்கவும் ஒரே தடபுடலான வரவேற்பு தான். இவர்களுக்கு முன்னரே சுந்தரம் தன் குடும்பத்தினரோடு வந்து விட்டார். தீபன் மட்டும் அலுவலைக் கவனிக்க வேண்டிச் சென்னை சென்றுவிட்டான். வைரம், சுந்தர் ராஜன், கீர்த்திகா மட்டுமே வந்திருந்தனர்.
கீர்த்தி ராஜாவைக் கண்டு விட்டு ‘அண்ணா’ என ஓடி வர அவளை ஆதரவாய் அணைத்தவன் ,
“கீதுமா… எப்படா வந்த…” எனக் கேட்க
“அண்ணா…. உளறாதீங்க. நம்ம ஒன்னா இருக்கோம்னு இவங்க நினைக்கிறாங்க இல்ல...” என அவள் மெதுவாய் சொல்ல
“டேய்… கீதுமா… இவனுங்க நம்மளை எங்க நோட் பண்றானுங்க.. இரண்டு நாள் பார்க்காத தங்கச்சிக்கு என்ன சீன் போடுறானுங்க பாரு…” எனக் கிண்டலடிக்க
“நீங்க கூட தான் என்னைப் பார்த்து இரண்டு நாள் ஆச்சு… ஆனா இப்போ என்னைப் பார்த்தவுடனே வரலயாண்ணா.. அது மாதிரி தான்…” எனச் சொல்ல
“நான் தான் இவங்களா..?” எனக் கொஞ்சம் கோபம் காட்டிக் கேட்கவும்,
“அய்யோ.. நீங்க தான் அண்ணா பெஸ்ட்… நோ கோவம்.. மாமியார் வீட்டு விருந்து.. சோ மூக்குப் பிடிக்க சாப்பிடலாம்னு வந்திருக்கேன்…. நோ கத்திங்க்ஸ்” எனச் சொல்ல
“வாலு.. வா…” என்றபடியே செல்ல, ராஜா மது இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
ராஜா உள்ளே சென்றதுமே குட்டிப்பெண் ப்ரியா வந்து ,
“மாமா…மாமா…நீங்க பெரிய சிங்கர் தானே…?” எனக் கேட்க
குழந்தையைப் புன்னகையோடு கண்டவன், “நான் பெரிய சிங்கர்லாம் இல்லடா சின்ன சிங்கர் தான் “ எனச் சொல்ல
“மாமா.. நீங்க சினிமால பாடி இருக்கீங்க தானே… என் ப்ர்ண்ட்ஸ்ட்ட அப்போ எங்க மாமா சிங்கர்னு நான் சொல்லலாம் தானே” என ஆசையாய் கேட்க ,
“கண்டிப்பா சொல்லிக்கோ டா..” என அவன் சொல்ல
“மாமா.. நீங்க பாடினதுல உங்க ஃபேவரைட் சாங் என்ன மாமா..” எனக் கேட்டான் திருவமுதன்.
“மதுவாய் மலராய் மங்கை ஒருத்தி என் வாழ்விலே” என அவன் பாட அங்கே அனைவர் முகத்திலும் புன்னகை என்றால் மதுவுக்கோ வெட்கம் தாளவில்லை. சின்னவர்கள் “ஓஹோ” எனக் கத்த
மதுரவல்லி தான், “என்ன சத்தம் இது…. முதல்ல வந்தவரை சாப்பிட விடுங்க…. இவங்க தான் சின்னப்பசங்க.. நீங்க என்ன குழந்தைகளா… போய் சாப்பாடு எடுத்து வைங்க..” என மருமகள்களிடம் காய,
அனைவரும் அவர் சொல்லுக்கு அடங்கி சாப்பாடு எடுத்து வைக்க, ஒருவழியாய் காலை உணவு முடிந்தது.
அதன்பின் மதுரவசனியின் குலதெய்வ கோவிலுக்குச் செல்ல அனைவரும் கிளம்பினார்கள். மது, ராஜா, கீர்த்தி, ஹரிணி, ஸ்ரீராம், ஆயுஷ் எல்லாம் ஒரு காரில் செல்ல, ஸ்ரீசரண், மோகனா, கார்த்திக்கேயன், அமுதன், ப்ரியா, ஸ்ரீவத்சன் ஒரு காரிலும், பெரியவர்கள் அனைவரும் ஒரு காரிலும், வைரம், சுந்தரம் தங்கள் காரிலும் தஞ்சாவூரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த அவர்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்தனர்.
பெண்கள் அனைவரும் பொங்கல் வைப்பதில் ஈடுபட்டிருக்க, ஆண்கள் எல்லாம் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, குழந்தைகள் அனைவரும் அங்கிருந்த ஆலமரத்தின் விழுதுகளில் தொங்கி ஊஞ்சலாடினர்.
ஸ்ரீசரணும் ஸ்ரீராமும் பெண்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொடுத்து உதவி செய்ய, ராஜாவோ மதுவைப் பார்வை வட்டத்துக்குள் வைத்த வண்ணமே பெரியவர்கள் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
கீர்த்திகாவுக்குத் தான் என்ன செய்வதென தெரியாமல், அப்படியே குழந்தைகள் இருக்கும் இடம் சென்றாள். அவர்கள் ஆலமரத்தில் ஆடவும் இவளுக்கும் அதில் ஆட ஆவல் கொள்ள, உடனே அவர்களிடம் சென்று,
“குட்டீஸ் நானும் ஆடப்போறேன்” எனச் சொல்ல
“ஐய் அக்கா… ஜாலி.ஜாலி..” என அவர்களும் கூவ, இவளும் ஒரு விழுதில் தொங்கினாள்.
அந்த ஆலமரத்தின் அருகில் ஒரு குளம் இருக்க, அதன் விழுதுகளில் சில குளத்தின் அருகிலேயே அமைந்திருக்கும். கீர்த்தி ஆடிய விழுதும் அப்படியே. அவள் சுவாரசியமாய் ஆட, திடீரென ஒரு கட்டெறும்பு சுள்ளென கடிக்க, விழுதைப் பிடித்திருந்தப் பிடியை உதறக் குளத்தில் விழுந்தாள் அவள்.
இதைப் பார்த்த சிறுவர்கள், “அய்யோ அக்கா” எனப் பயந்து கத்த, அந்தப்பக்கம் விறகு எடுக்க வந்த ஸ்ரீசரணின் காதில் இது விழுந்து வைக்க, அவன் குழந்தைகளிடம் சென்று என்னவென விசாரிக்க,
“அண்ணா.. கீர்த்தி அக்கா இருக்காங்கள. அவங்க குளத்துக்குள்ள விழுந்துட்டாங்க..” எனப் பதற்றமாய் அமுதன் சொல்ல
உடனே ஸ்ரீசரணும் குளத்துக்குள் குதித்தான். ஒருவழியாக ஸ்ரீசரண் அவளை மீட்டு கரைச் சேர்த்த போது மொத்தக் குடும்பமும் அங்கே கூடிவிட்டது. வைரம் பதற்றத்திலும் பயத்திலும் அழத்துவங்க, அவரைத் தேற்றினார்கள். சுந்தரமோ அப்படியே அமர்ந்து விட, அங்கே பதட்டமான சூழ் நிலை நிலவியது.
வந்த இடத்தில் இப்படியாகி விட்டதே என அனைவரும் பயம் கொள்ள சரண் காப்பாற்றியதும் தான் நிம்மதி அடைந்தனர்.
கீர்த்தியின் கன்னத்தில் பலமாகத் தட்டிய ஸ்ரீசரண், அவள் கண் விழித்ததும் ,
“அறிவிருக்கா உனக்கு… லூசாடி நீ… சின்னப்பிள்ளையா நீ…. இப்படியா விழுந்து தொலப்ப.. ஒன்னு கிடக்கா ஒன்னு ஆகியிருந்தா…… கீழா…” எனத் திட்ட
“சரண்..” என அதட்டியது ரவிச்சந்திரனின் குரல். அப்போதுதான் அனைவரும் அங்கே வந்து விட்டிருந்ததை உணர்ந்தான். ரவிக்கோ எங்கே தன் மகன் அவர்கள் வீட்டுப்பெண்ணை திட்டுவதைத் தவறாக எடுப்பார்களோ என்ற எண்ணத்தில் மகனைக் கண்டிக்க,
ராஜாவும், “சரண்… அவளே பயந்துப் போயிருப்பா.. நீ திட்டாத..” என அவன் சொல்லி விட்டு ,
“கீதுக்குட்டி… ஒன்னுமில்லடா…. பாரு… அண்ணா பாரு..” என அவளைத் தன் மடியில் தாங்கிப் பேச
“தம்பி திட்டுறதுல்ல என்ன தப்பு… இவள் அங்கே ஒழுங்கா எங்களுக்கு உதவி செஞ்சிட்டு இருந்திருக்கலாம் இல்லையா…? இப்படி ஆகியிருக்காது இல்ல.. எல்லாத்திலேயும் விளையாட்டு….” என மகளை வைரம் அழுகைக் குறைந்துக் கடிந்துக் கொள்ள, ராஜா அவரை முறைத்த முறைப்பில் அவர் கப் சிப் என்றானார்.
திருமணம் முடிந்து இரு நாட்கள் கழித்து மறுவீட்டுக்குச் செல்ல ஆயத்தமானார்கள் ராஜ் நந்தன் – மதுரவசனி தம்பதியர்.
காரில் இருவரும் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்கையில் மது அமைதியாகவே வர ,
“என்ன மது சைலண்டா இருக்க…”
“ஒன்னுமில்லங்க… சும்மா வெளியே வேடிக்கைப் பார்க்கிறேன்” என மதுரவசனி பதிலளிக்க,
“மது… லிஸன் டூ மீ… நான் உங்கூட இருக்கும்போது நான் மட்டுமே உன் நினைப்புல நான் மட்டும் தான் இருக்கனும்.. வேடிக்கையை வெளியே பார்க்காத.. சீ மீ…” எனச் சொல்ல
“ப்ச்…என்னங்க நீங்க.. நீங்க என் நினைப்புல இல்லன்னு யார் சொன்னா…. அதுக்காக எவ்வளவு நேரம் அப்படியே பார்க்கிறது..?”
“பார்க்க போரடிச்சா அப்போ பேசுடி..”
“வண்டி ஓட்டும்போது பேசக் கூடாது.. உங்க கவனம் சிதறிடும்..”
“ஆஹான்… இப்ப நான் கவனமாவா வண்டி ஓட்டுறேன்.. என் முழு கவனமும் உன் மேல தான் மது….” என்றவனின் தோளில் அடித்து விட்டு அவள் சாய்ந்துக் கொள்ள
“ம்ம்.. இது பொண்டாட்டி லட்சணம்..” என்றபடி காரை செலுத்தினான்.
மதுரவசனியின் வீட்டு வாயிலில் காரை நிறுத்தி இறங்கவும் ஒரே தடபுடலான வரவேற்பு தான். இவர்களுக்கு முன்னரே சுந்தரம் தன் குடும்பத்தினரோடு வந்து விட்டார். தீபன் மட்டும் அலுவலைக் கவனிக்க வேண்டிச் சென்னை சென்றுவிட்டான். வைரம், சுந்தர் ராஜன், கீர்த்திகா மட்டுமே வந்திருந்தனர்.
கீர்த்தி ராஜாவைக் கண்டு விட்டு ‘அண்ணா’ என ஓடி வர அவளை ஆதரவாய் அணைத்தவன் ,
“கீதுமா… எப்படா வந்த…” எனக் கேட்க
“அண்ணா…. உளறாதீங்க. நம்ம ஒன்னா இருக்கோம்னு இவங்க நினைக்கிறாங்க இல்ல...” என அவள் மெதுவாய் சொல்ல
“டேய்… கீதுமா… இவனுங்க நம்மளை எங்க நோட் பண்றானுங்க.. இரண்டு நாள் பார்க்காத தங்கச்சிக்கு என்ன சீன் போடுறானுங்க பாரு…” எனக் கிண்டலடிக்க
“நீங்க கூட தான் என்னைப் பார்த்து இரண்டு நாள் ஆச்சு… ஆனா இப்போ என்னைப் பார்த்தவுடனே வரலயாண்ணா.. அது மாதிரி தான்…” எனச் சொல்ல
“நான் தான் இவங்களா..?” எனக் கொஞ்சம் கோபம் காட்டிக் கேட்கவும்,
“அய்யோ.. நீங்க தான் அண்ணா பெஸ்ட்… நோ கோவம்.. மாமியார் வீட்டு விருந்து.. சோ மூக்குப் பிடிக்க சாப்பிடலாம்னு வந்திருக்கேன்…. நோ கத்திங்க்ஸ்” எனச் சொல்ல
“வாலு.. வா…” என்றபடியே செல்ல, ராஜா மது இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
ராஜா உள்ளே சென்றதுமே குட்டிப்பெண் ப்ரியா வந்து ,
“மாமா…மாமா…நீங்க பெரிய சிங்கர் தானே…?” எனக் கேட்க
குழந்தையைப் புன்னகையோடு கண்டவன், “நான் பெரிய சிங்கர்லாம் இல்லடா சின்ன சிங்கர் தான் “ எனச் சொல்ல
“மாமா.. நீங்க சினிமால பாடி இருக்கீங்க தானே… என் ப்ர்ண்ட்ஸ்ட்ட அப்போ எங்க மாமா சிங்கர்னு நான் சொல்லலாம் தானே” என ஆசையாய் கேட்க ,
“கண்டிப்பா சொல்லிக்கோ டா..” என அவன் சொல்ல
“மாமா.. நீங்க பாடினதுல உங்க ஃபேவரைட் சாங் என்ன மாமா..” எனக் கேட்டான் திருவமுதன்.
“மதுவாய் மலராய் மங்கை ஒருத்தி என் வாழ்விலே” என அவன் பாட அங்கே அனைவர் முகத்திலும் புன்னகை என்றால் மதுவுக்கோ வெட்கம் தாளவில்லை. சின்னவர்கள் “ஓஹோ” எனக் கத்த
மதுரவல்லி தான், “என்ன சத்தம் இது…. முதல்ல வந்தவரை சாப்பிட விடுங்க…. இவங்க தான் சின்னப்பசங்க.. நீங்க என்ன குழந்தைகளா… போய் சாப்பாடு எடுத்து வைங்க..” என மருமகள்களிடம் காய,
அனைவரும் அவர் சொல்லுக்கு அடங்கி சாப்பாடு எடுத்து வைக்க, ஒருவழியாய் காலை உணவு முடிந்தது.
அதன்பின் மதுரவசனியின் குலதெய்வ கோவிலுக்குச் செல்ல அனைவரும் கிளம்பினார்கள். மது, ராஜா, கீர்த்தி, ஹரிணி, ஸ்ரீராம், ஆயுஷ் எல்லாம் ஒரு காரில் செல்ல, ஸ்ரீசரண், மோகனா, கார்த்திக்கேயன், அமுதன், ப்ரியா, ஸ்ரீவத்சன் ஒரு காரிலும், பெரியவர்கள் அனைவரும் ஒரு காரிலும், வைரம், சுந்தரம் தங்கள் காரிலும் தஞ்சாவூரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த அவர்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்தனர்.
பெண்கள் அனைவரும் பொங்கல் வைப்பதில் ஈடுபட்டிருக்க, ஆண்கள் எல்லாம் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, குழந்தைகள் அனைவரும் அங்கிருந்த ஆலமரத்தின் விழுதுகளில் தொங்கி ஊஞ்சலாடினர்.
ஸ்ரீசரணும் ஸ்ரீராமும் பெண்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொடுத்து உதவி செய்ய, ராஜாவோ மதுவைப் பார்வை வட்டத்துக்குள் வைத்த வண்ணமே பெரியவர்கள் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
கீர்த்திகாவுக்குத் தான் என்ன செய்வதென தெரியாமல், அப்படியே குழந்தைகள் இருக்கும் இடம் சென்றாள். அவர்கள் ஆலமரத்தில் ஆடவும் இவளுக்கும் அதில் ஆட ஆவல் கொள்ள, உடனே அவர்களிடம் சென்று,
“குட்டீஸ் நானும் ஆடப்போறேன்” எனச் சொல்ல
“ஐய் அக்கா… ஜாலி.ஜாலி..” என அவர்களும் கூவ, இவளும் ஒரு விழுதில் தொங்கினாள்.
அந்த ஆலமரத்தின் அருகில் ஒரு குளம் இருக்க, அதன் விழுதுகளில் சில குளத்தின் அருகிலேயே அமைந்திருக்கும். கீர்த்தி ஆடிய விழுதும் அப்படியே. அவள் சுவாரசியமாய் ஆட, திடீரென ஒரு கட்டெறும்பு சுள்ளென கடிக்க, விழுதைப் பிடித்திருந்தப் பிடியை உதறக் குளத்தில் விழுந்தாள் அவள்.
இதைப் பார்த்த சிறுவர்கள், “அய்யோ அக்கா” எனப் பயந்து கத்த, அந்தப்பக்கம் விறகு எடுக்க வந்த ஸ்ரீசரணின் காதில் இது விழுந்து வைக்க, அவன் குழந்தைகளிடம் சென்று என்னவென விசாரிக்க,
“அண்ணா.. கீர்த்தி அக்கா இருக்காங்கள. அவங்க குளத்துக்குள்ள விழுந்துட்டாங்க..” எனப் பதற்றமாய் அமுதன் சொல்ல
உடனே ஸ்ரீசரணும் குளத்துக்குள் குதித்தான். ஒருவழியாக ஸ்ரீசரண் அவளை மீட்டு கரைச் சேர்த்த போது மொத்தக் குடும்பமும் அங்கே கூடிவிட்டது. வைரம் பதற்றத்திலும் பயத்திலும் அழத்துவங்க, அவரைத் தேற்றினார்கள். சுந்தரமோ அப்படியே அமர்ந்து விட, அங்கே பதட்டமான சூழ் நிலை நிலவியது.
வந்த இடத்தில் இப்படியாகி விட்டதே என அனைவரும் பயம் கொள்ள சரண் காப்பாற்றியதும் தான் நிம்மதி அடைந்தனர்.
கீர்த்தியின் கன்னத்தில் பலமாகத் தட்டிய ஸ்ரீசரண், அவள் கண் விழித்ததும் ,
“அறிவிருக்கா உனக்கு… லூசாடி நீ… சின்னப்பிள்ளையா நீ…. இப்படியா விழுந்து தொலப்ப.. ஒன்னு கிடக்கா ஒன்னு ஆகியிருந்தா…… கீழா…” எனத் திட்ட
“சரண்..” என அதட்டியது ரவிச்சந்திரனின் குரல். அப்போதுதான் அனைவரும் அங்கே வந்து விட்டிருந்ததை உணர்ந்தான். ரவிக்கோ எங்கே தன் மகன் அவர்கள் வீட்டுப்பெண்ணை திட்டுவதைத் தவறாக எடுப்பார்களோ என்ற எண்ணத்தில் மகனைக் கண்டிக்க,
ராஜாவும், “சரண்… அவளே பயந்துப் போயிருப்பா.. நீ திட்டாத..” என அவன் சொல்லி விட்டு ,
“கீதுக்குட்டி… ஒன்னுமில்லடா…. பாரு… அண்ணா பாரு..” என அவளைத் தன் மடியில் தாங்கிப் பேச
“தம்பி திட்டுறதுல்ல என்ன தப்பு… இவள் அங்கே ஒழுங்கா எங்களுக்கு உதவி செஞ்சிட்டு இருந்திருக்கலாம் இல்லையா…? இப்படி ஆகியிருக்காது இல்ல.. எல்லாத்திலேயும் விளையாட்டு….” என மகளை வைரம் அழுகைக் குறைந்துக் கடிந்துக் கொள்ள, ராஜா அவரை முறைத்த முறைப்பில் அவர் கப் சிப் என்றானார்.