காதல் 16:
ராஜ் நந்தன் மதுவிடம், “என்ன கார்னர் செய்றியா…?” என்றான் கோபத்துடன். கண்கள் எல்லாம் சிவக்கக் கேட்டக் கணவனைக் கண்டு பயந்த போதும் தைரியமாக அவனை எதிர்கொண்டாள் மதுரவசனி.
சில நேரங்களில் துணிந்து தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டி தான் உள்ளது.
“ஆமா… அப்படிதான்… கார்னராவும் எடுத்துக்கலாம்.. என்னோட ஆசைன்னு நினைச்சிக்கலாம்…” என்று மிடுக்காய்ச் சொல்ல
ராஜ் நந்தனின் மனதிலும் அதே எண்ணம் தான்.சில காலங்களாக தாயின் மடிக்குத் தவிக்கத் தொடங்கியிருக்கிறான். தாயை மனம் மிகவும் தேடியது. அதுவும் ‘வெறுப்பை அழிக்க முடியாது… வெறுப்பவர்களை அழிக்க முடியும்…’ என்பதைப் போல அன்பானவர்களை விலக்கி வைத்தாலும் அன்பை விலக்கி வைக்க முடியுமா என்ன…? ஆனாலும் அவர்களிடம் தாமாகச் செல்ல ஈகோ தடுத்தது. இப்போது மதுரவசனியும் அதே சொல்ல ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் இருமனதாய்த் தவித்தான் ராஜ் நந்தன்.
ஆனால் அவன் நிலையிறங்காமல் மதுவே அப்படி ஒரு யோசனை சொல்லவும் அவனுக்கு அது பிடித்து இருந்தது. அது மட்டுமின்றி தன் மனைவியின் ஆசை என்று வந்து விட்டப் பின் அதை நிறைவேற்றாமல் அவனால் இருக்க முடியாதே…!
“உன்னிஷ்டம்… அப்போ நாம வரோம்னு நீயே போன் செஞ்சு உன் மாமியார்கிட்டச் சொல்லிடு…” என்றபடி அவன் உறங்க,
தலையணையில் சாய்ந்துக் கொண்டு ரசனையோடு கணவனின் முகம் நோக்கினாள். எவ்வளவு பிடிவாதம் இருந்தாலும் பாசத்தின் முன் அவன் இன்னும் சிறுகுழந்தை தான் என்ற நினைவுத் தோன்ற அவனின் கேசத்தை நேசத்தோடு கோதினாள்.
‘எனக்கு தெரியும் நந்து... நீங்க என்னை இங்க என் அப்பா அம்மா… ஆத்தான்னு சொந்தம் கூடப் பார்க்கும்போது உங்க வீட்டை ரொம்ப மிஸ் பண்றீங்கன்னு…. இனிமே நீங்க மிஸ் பண்ண வேண்டாம்… இப்ப உங்களுக்கு என் மேல கோவம் இருந்தாலும் கொஞ்ச நாள் கழிச்சு என்னைப் புரிஞ்சிப்பீங்க..’ என்று மனதில் நினைத்தவள் தன் மன்னவனோடு மஞ்சத்தில் உறங்கினாள்.
அடுத்த நாள் காலையிலேயே நந்தன் கிளம்ப வேண்டும் என்று சொல்ல,
மதுரவல்லி, “தம்பி…. மாசமா இருக்கப் பொண்ணு… நல்லா பாத்துக்கோப்பா… நீ நல்லா பாத்துப்பேன்னு தெரியும்… இன்னும் மூணு மாசம் கழிச்சு ஐஞ்சாம் மாசம் மருந்து கொடுக்கனும்.. நான் அம்மாகிட்ட பேசுறேன்.. நீங்க அப்போ இவளை அழைச்சிட்டு வாங்க…” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
மாசமாக இருக்கும் மகள் என்பதால் பலவிதமான அறிவுரைகள் பலகாரங்கள் என்று தடபுடலாக அவர்களை வழியனுப்பினார்கள் மதுரவசனியின் பிறந்த வீட்டினர்.
சென்னை விமான நிலையத்தில் ரகு காருடன் காத்திருக்க, அவனது காரில் ஏறிய ராஜா வீடு வரும் வரையில் அமைதியாக இருந்தான்.
அவன் அறையில் ஓய்வெடுக்கப் போக, மதுரவசனியோ எல்லா துணிகளையும் அடுக்கி பேக் செய்ய,
அதைக் கண்டவன் ,
“அடியே…. கொஞ்ச நாள் பார்ப்போம் டி.. பிடிக்கலன்னா வரலாம்.. அப்படியே மூட்டை முடிச்சைக் கட்டாத…” எனச் சத்தம் போட
“அதெல்லாம் அங்க போனதும் அம்மா முந்தானையை பிடிச்சிட்டு சுத்துவீங்க நீங்க… பேசாம இருங்க..”என அவனை அதட்டியவள் எல்லாவற்றையும் அடுக்க
ராஜா எழுந்து சென்று கிச்சனில் அவளுக்காக ஜூஸ் போட்டு எடுத்து வந்து ,
“முதல்ல இதைக் குடி டி…” எனச் சொல்ல
“இப்ப தானேங்க… ஏர்ப்போர்ட்ல எனக்குக் காபி வாங்கித் தந்தீங்க.. அதுக்குள்ள எனக்குப் பசிக்குமா… அப்புறம் சாப்பிடுறேன்..” எனத் துணியை எடுக்கப் போனவளின் கையில் இருந்தத் துணியை எறிந்தவன்
“ஏன் டி ஒரு மனுஷன் ஆசையாய் ஜூஸ் போட்டுக் கொடுத்தா குடிக்காம.. சும்மா என்ன பேச்சு.. அது உனக்குக் காபி.. என் புள்ளைக்கு ஜூஸ்…. வாயைத் திறந்து குடி…” என்றான் மிரட்டலாய்.
அவனை குண்டு கண்களால் முறைத்த வண்ணம் அவள் ஜூஸை வாங்க,
“சிரிச்சிட்டே குடி…டி… என் புள்ளை அப்போதான் சிரிக்கும்.. டக்குனு குடிக்கிறியா இல்லை.. நான் வாயில ஊத்துவா.. இம்சையாகிட்ட நீ….” என வைதவாறே அவள் வாயில் ஜூஸை ஊற்ற,
அவன் கைவளைவில் இருந்து கொண்டு ஜூஸைப் பருகியவள், அவன் சட்டையில் வாயை வைத்துத் துடைக்க, ராஜாவோ அவள் தலையில் குட்டினான்.
“லூசு…வைட் ஷர்ட்….” என்று அதட்ட
“வைட் ஷர்ட் முக்கியமா… இல்லை வைஃப் முக்கியமா..?” என மது கேட்க
“என்னடி ரொம்பத்தான் மிரட்டுற….? ஊருக்குப் போயிட்டு வந்த கொழுப்பா..?”
“இல்ல.. ஜூனியர் ராஜா உள்ள இருக்கக் கொழுப்பு..” என்றவளை அணைத்து அழுத்தமாய் அவள் கன்னத்தில் இதழ்ப் பதித்தவன்
“சூப்பர் டி பொண்டாட்டி…” என்றவன் அவளை இன்னும் அழுத்தமாய் அணைத்து அவளுள் புதைய முயற்சித்தான். அவளது மேனியின் மென்மையில் தன்னைத் தொலைத்தவன், சுற்றுமும் மறந்தான்.
இப்படி இவர்கள் இருக்கையில் வாசல் மணி ஓசைக் கேட்டு மனைவியை விட்டு விலகிய ராஜா,
“நம்ம வீட்டுக்கு எந்த கரடி டி வந்திருக்கு…? போய் பார்க்கிறேன்.." என்றபடி அவன் கதவைத் திறக்க,
அங்குப் பார்த்தால் வைரமும் சுந்தர் ராஜனும் நிற்க, ஒரு நொடி அவர்களைப் பார்த்து திகைத்தவன் பின்னர் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்கும் பொருட்டு,
“வாங்கம்மா…. வாங்கப்பா…” எனச் சொல்ல, வைரத்தின் முகம் மலர்ந்துப் போனது.
உள்ளே வந்தவர்களை மதுரவசனி மருமகளாய் வரவேற்றாள்.
“இருங்கத்த… நான் போய் குடிக்க எதாவது எடுத்துட்டு வந்துடுறேன்…” எனச் சொல்ல
அவள் கையைப் பிடித்து அமர வைத்த வைரம்,
“புள்ளத் தாச்சிப் பொண்ணு.. நீ அலையாத… சும்மா உட்காருடா…” எனச் சொல்ல
ராஜாவோ அவன் அறைக்குள் புகுந்தான். மூவரும் அவனை யோசனையாய் பார்க்க, மதுரவசனியோ ,
“ஒன்னுமில்லத்த… இருங்க வந்துடுவார்… அவர் தான் வீட்டுக்கு வர ஓகே சொல்லிட்டாரே….” எனச் சொல்ல
சுந்தரமும், “ரொம்ப தேங்க்ஸ்டா மது….. உன்னை மாதிரி ஒரு மருமக கிடைக்கக் கொடுத்து வைச்சிருக்கனும்…. குடும்பத்தைப் பிரிக்கிற மருமகளுங்க இருக்க இந்த காலத்துல என் குடும்பத்தைச் சேர்க்கிற நீ கிடைச்சது நாங்க செஞ்ச புண்ணியம்… ரொம்ப நாள் கழிச்சு என் மனசு லேசா இருக்கு… நீ எனக்கு நல்லா ஸ்வீட்டாவே எடுத்துட்டு வா… அதுவும் என்னோட பேரக்குழந்தையை வேற சீக்கிரம் எங்களுக்குப் பெத்துத் தரப்போற..” என்றார் உணர்ச்சிமிகுதியில்.
வைரமும், “இவர் இவ்வளவு பேசுற ஆளே இல்ல மது…. உன்னைப் பார்த்ததும் என்னமோ பேசுறார்..” எனச் சொல்ல
“இருங்க அத்த..ஒரு பத்து நிமிசம்…. சாப்பிட ரெடி செஞ்சுட்டு வந்துடுறேன்… நீங்க அவர்ட்ட பேசுங்க.. நான் உங்க புள்ளையைக் கூப்பிடுறேன்…” என மதுரவசனி தங்கள் அறைக்குள் போனாள்.
அங்கே ராஜா சட்டையை மாற்றிக்கொண்டு இருந்தான் ,
“ஏன் டி…. நான் சரின்னு சொன்னதுமே உடனே தகவல் அனுப்பிட்டியா.. பொசுக்குன்னு வந்து நிக்குறாங்க..?”
“நான் ஊர்ல இருக்கும்போதே சொல்லிட்டேங்க… அது இருக்கட்டும்.. என்னங்க… அவங்க வந்துருக்காங்க… நீங்க பாட்டுக்கு வந்துட்டீங்க… எங்கப் போறீங்க.. சட்டை மாத்துறீங்க…?” எனப் பரபரக்க,
“உஷ்…. மெதுவா பேசுடி…. நான் என்ன அப்படியே வா உள்ளே வந்தேன்.. வாங்கன்னு சொன்னேன் தானே…. நீ நல்லா சாஞ்சு வெள்ளைச் சட்டையில ஜூஸ் கரை நல்லா தெரியுது…. பெரியவங்க முன்னாடி அப்படி போய் நிக்கவா நான்…ம்ம்….முதல்ல நீ வந்தவங்களுக்கு சாப்பிடக் கொடு…” என அவளை அதட்ட
அவளும் தலையசைத்து விட்டு சமையலறைக்குள் புகுந்தாள். பார்த்தால் பின்னாடியே ராஜாவும் உள்ளே வர,
“என்னங்க… அங்க போய் பேசாம.. இங்க ஏன் வரீங்க..?” என மது வினவ
“மது…. நான் ஒரு நிமிசம்னு சொல்லிட்டு தான் வந்தேன்.. இம்சை பண்ணாத…. தள்ளு நான் டீ போடுறேன்…” எனச் சொல்ல
“ப்ச்… நான் ஒன்னும் அவ்வளவு வீக் இல்ல… நானே போடுவேன்..” என அவள் மறுக்க
“மது….. நீ வீக்னு நான் சொல்லல… அது…. நீ போ…” என அவன் மழுப்ப
“என்ன… நான் நல்ல டீ தான் போடுவேன்…” என அவள் கோபமாய்ச் சொல்ல
“லூசு பொண்டாட்டி.. அது அப்பா டீன்னா ரொம்ப ஆசையாக் குடிப்பாரு…. அதான்.. நீ டீன்னு சொல்லி தண்ணியைக் கொடுத்தாலும் நான் குடிப்பேன்… நீ போடுற டீ சூப்பர் தான் இல்லன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா நான் அப்பாவுக்குப் பிடிச்ச மாதிரி போடுவேன்.. சரியா…” என்று சொல்லி விட்டு டீ போட்டான்.
சமையல் மேடையில் ஏறியமர்ந்தவள், அவனை ஆழமாக நோக்கினாள். எப்படி இவன் இவ்வளவு பாசமாக இருக்கிறான்….? ஒரு நேரம் வெயிலாய் காய்கிறான்… சில நேரம் நிலவாய் குளிர்கிறான். ஆனால் இவனைப் போல் ஒருவரை உளமாற நேசிக்க யாருமில்லை என்பதை மது உணர்ந்து கொண்டாள். அவன் மேல் கொண்ட காதல் இன்னும் இன்னும் பெருகி உள்ளம் உடையவன்பால் உருகியது.
ஆழமான அன்பு சில நேரம் ஆதிக்கமாக மாறிப் போகிறது என்று தான் மதுவுக்குத் தோன்றிற்று.
இவனது அன்பிற்கு வரையறை… வரைமுறை விதிமுறை எதுவும் இல்லை.. சொல்லப்போனால் பொதுவாகவே அன்பு என்பது விதிமுறைக்கு அப்பாற்பட்டது. அது கண்டிஷன்ஸ் அப்ளை பிரிவில் வராது. அன்கண்டிஷனல் அதாகப்பட்டது நிபந்தனையற்றதுதான் அன்பு…!!
நீ கொடுக்கிறாய் நானும் திருப்பிக் கொடுக்கிறேன் என்றால் அது அன்பாகாது…! கடனாகிவிடும்…!! நீ கொடுத்தாலும் மறுத்தாலும் விலக்கினாலும் விலகினாலும் நான் கொடுப்பேன் என்ற நிலைதான் தூய நேசம்…!! அது தான் அன்பின் விலாசம்..!!
அடியாழம் வரை ஆழ்ந்து அக்கறைக் கொண்டு அர்த்தமான அன்பைப் பல்வேறு அர்த்தங்களாய் வெளிப்படுத்த இவனால் மட்டுமே முடியும். எதுவாகினும் அதீது தான். கோபமானாலும் சரி அன்பானாலும் சரி என்று கணவனைக் கண்டு பெருமைக் கொண்டாள் மதுரவசனி.
ராஜ் நந்தன் மதுவிடம், “என்ன கார்னர் செய்றியா…?” என்றான் கோபத்துடன். கண்கள் எல்லாம் சிவக்கக் கேட்டக் கணவனைக் கண்டு பயந்த போதும் தைரியமாக அவனை எதிர்கொண்டாள் மதுரவசனி.
சில நேரங்களில் துணிந்து தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டி தான் உள்ளது.
“ஆமா… அப்படிதான்… கார்னராவும் எடுத்துக்கலாம்.. என்னோட ஆசைன்னு நினைச்சிக்கலாம்…” என்று மிடுக்காய்ச் சொல்ல
ராஜ் நந்தனின் மனதிலும் அதே எண்ணம் தான்.சில காலங்களாக தாயின் மடிக்குத் தவிக்கத் தொடங்கியிருக்கிறான். தாயை மனம் மிகவும் தேடியது. அதுவும் ‘வெறுப்பை அழிக்க முடியாது… வெறுப்பவர்களை அழிக்க முடியும்…’ என்பதைப் போல அன்பானவர்களை விலக்கி வைத்தாலும் அன்பை விலக்கி வைக்க முடியுமா என்ன…? ஆனாலும் அவர்களிடம் தாமாகச் செல்ல ஈகோ தடுத்தது. இப்போது மதுரவசனியும் அதே சொல்ல ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் இருமனதாய்த் தவித்தான் ராஜ் நந்தன்.
ஆனால் அவன் நிலையிறங்காமல் மதுவே அப்படி ஒரு யோசனை சொல்லவும் அவனுக்கு அது பிடித்து இருந்தது. அது மட்டுமின்றி தன் மனைவியின் ஆசை என்று வந்து விட்டப் பின் அதை நிறைவேற்றாமல் அவனால் இருக்க முடியாதே…!
“உன்னிஷ்டம்… அப்போ நாம வரோம்னு நீயே போன் செஞ்சு உன் மாமியார்கிட்டச் சொல்லிடு…” என்றபடி அவன் உறங்க,
தலையணையில் சாய்ந்துக் கொண்டு ரசனையோடு கணவனின் முகம் நோக்கினாள். எவ்வளவு பிடிவாதம் இருந்தாலும் பாசத்தின் முன் அவன் இன்னும் சிறுகுழந்தை தான் என்ற நினைவுத் தோன்ற அவனின் கேசத்தை நேசத்தோடு கோதினாள்.
‘எனக்கு தெரியும் நந்து... நீங்க என்னை இங்க என் அப்பா அம்மா… ஆத்தான்னு சொந்தம் கூடப் பார்க்கும்போது உங்க வீட்டை ரொம்ப மிஸ் பண்றீங்கன்னு…. இனிமே நீங்க மிஸ் பண்ண வேண்டாம்… இப்ப உங்களுக்கு என் மேல கோவம் இருந்தாலும் கொஞ்ச நாள் கழிச்சு என்னைப் புரிஞ்சிப்பீங்க..’ என்று மனதில் நினைத்தவள் தன் மன்னவனோடு மஞ்சத்தில் உறங்கினாள்.
அடுத்த நாள் காலையிலேயே நந்தன் கிளம்ப வேண்டும் என்று சொல்ல,
மதுரவல்லி, “தம்பி…. மாசமா இருக்கப் பொண்ணு… நல்லா பாத்துக்கோப்பா… நீ நல்லா பாத்துப்பேன்னு தெரியும்… இன்னும் மூணு மாசம் கழிச்சு ஐஞ்சாம் மாசம் மருந்து கொடுக்கனும்.. நான் அம்மாகிட்ட பேசுறேன்.. நீங்க அப்போ இவளை அழைச்சிட்டு வாங்க…” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
மாசமாக இருக்கும் மகள் என்பதால் பலவிதமான அறிவுரைகள் பலகாரங்கள் என்று தடபுடலாக அவர்களை வழியனுப்பினார்கள் மதுரவசனியின் பிறந்த வீட்டினர்.
சென்னை விமான நிலையத்தில் ரகு காருடன் காத்திருக்க, அவனது காரில் ஏறிய ராஜா வீடு வரும் வரையில் அமைதியாக இருந்தான்.
அவன் அறையில் ஓய்வெடுக்கப் போக, மதுரவசனியோ எல்லா துணிகளையும் அடுக்கி பேக் செய்ய,
அதைக் கண்டவன் ,
“அடியே…. கொஞ்ச நாள் பார்ப்போம் டி.. பிடிக்கலன்னா வரலாம்.. அப்படியே மூட்டை முடிச்சைக் கட்டாத…” எனச் சத்தம் போட
“அதெல்லாம் அங்க போனதும் அம்மா முந்தானையை பிடிச்சிட்டு சுத்துவீங்க நீங்க… பேசாம இருங்க..”என அவனை அதட்டியவள் எல்லாவற்றையும் அடுக்க
ராஜா எழுந்து சென்று கிச்சனில் அவளுக்காக ஜூஸ் போட்டு எடுத்து வந்து ,
“முதல்ல இதைக் குடி டி…” எனச் சொல்ல
“இப்ப தானேங்க… ஏர்ப்போர்ட்ல எனக்குக் காபி வாங்கித் தந்தீங்க.. அதுக்குள்ள எனக்குப் பசிக்குமா… அப்புறம் சாப்பிடுறேன்..” எனத் துணியை எடுக்கப் போனவளின் கையில் இருந்தத் துணியை எறிந்தவன்
“ஏன் டி ஒரு மனுஷன் ஆசையாய் ஜூஸ் போட்டுக் கொடுத்தா குடிக்காம.. சும்மா என்ன பேச்சு.. அது உனக்குக் காபி.. என் புள்ளைக்கு ஜூஸ்…. வாயைத் திறந்து குடி…” என்றான் மிரட்டலாய்.
அவனை குண்டு கண்களால் முறைத்த வண்ணம் அவள் ஜூஸை வாங்க,
“சிரிச்சிட்டே குடி…டி… என் புள்ளை அப்போதான் சிரிக்கும்.. டக்குனு குடிக்கிறியா இல்லை.. நான் வாயில ஊத்துவா.. இம்சையாகிட்ட நீ….” என வைதவாறே அவள் வாயில் ஜூஸை ஊற்ற,
அவன் கைவளைவில் இருந்து கொண்டு ஜூஸைப் பருகியவள், அவன் சட்டையில் வாயை வைத்துத் துடைக்க, ராஜாவோ அவள் தலையில் குட்டினான்.
“லூசு…வைட் ஷர்ட்….” என்று அதட்ட
“வைட் ஷர்ட் முக்கியமா… இல்லை வைஃப் முக்கியமா..?” என மது கேட்க
“என்னடி ரொம்பத்தான் மிரட்டுற….? ஊருக்குப் போயிட்டு வந்த கொழுப்பா..?”
“இல்ல.. ஜூனியர் ராஜா உள்ள இருக்கக் கொழுப்பு..” என்றவளை அணைத்து அழுத்தமாய் அவள் கன்னத்தில் இதழ்ப் பதித்தவன்
“சூப்பர் டி பொண்டாட்டி…” என்றவன் அவளை இன்னும் அழுத்தமாய் அணைத்து அவளுள் புதைய முயற்சித்தான். அவளது மேனியின் மென்மையில் தன்னைத் தொலைத்தவன், சுற்றுமும் மறந்தான்.
இப்படி இவர்கள் இருக்கையில் வாசல் மணி ஓசைக் கேட்டு மனைவியை விட்டு விலகிய ராஜா,
“நம்ம வீட்டுக்கு எந்த கரடி டி வந்திருக்கு…? போய் பார்க்கிறேன்.." என்றபடி அவன் கதவைத் திறக்க,
அங்குப் பார்த்தால் வைரமும் சுந்தர் ராஜனும் நிற்க, ஒரு நொடி அவர்களைப் பார்த்து திகைத்தவன் பின்னர் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்கும் பொருட்டு,
“வாங்கம்மா…. வாங்கப்பா…” எனச் சொல்ல, வைரத்தின் முகம் மலர்ந்துப் போனது.
உள்ளே வந்தவர்களை மதுரவசனி மருமகளாய் வரவேற்றாள்.
“இருங்கத்த… நான் போய் குடிக்க எதாவது எடுத்துட்டு வந்துடுறேன்…” எனச் சொல்ல
அவள் கையைப் பிடித்து அமர வைத்த வைரம்,
“புள்ளத் தாச்சிப் பொண்ணு.. நீ அலையாத… சும்மா உட்காருடா…” எனச் சொல்ல
ராஜாவோ அவன் அறைக்குள் புகுந்தான். மூவரும் அவனை யோசனையாய் பார்க்க, மதுரவசனியோ ,
“ஒன்னுமில்லத்த… இருங்க வந்துடுவார்… அவர் தான் வீட்டுக்கு வர ஓகே சொல்லிட்டாரே….” எனச் சொல்ல
சுந்தரமும், “ரொம்ப தேங்க்ஸ்டா மது….. உன்னை மாதிரி ஒரு மருமக கிடைக்கக் கொடுத்து வைச்சிருக்கனும்…. குடும்பத்தைப் பிரிக்கிற மருமகளுங்க இருக்க இந்த காலத்துல என் குடும்பத்தைச் சேர்க்கிற நீ கிடைச்சது நாங்க செஞ்ச புண்ணியம்… ரொம்ப நாள் கழிச்சு என் மனசு லேசா இருக்கு… நீ எனக்கு நல்லா ஸ்வீட்டாவே எடுத்துட்டு வா… அதுவும் என்னோட பேரக்குழந்தையை வேற சீக்கிரம் எங்களுக்குப் பெத்துத் தரப்போற..” என்றார் உணர்ச்சிமிகுதியில்.
வைரமும், “இவர் இவ்வளவு பேசுற ஆளே இல்ல மது…. உன்னைப் பார்த்ததும் என்னமோ பேசுறார்..” எனச் சொல்ல
“இருங்க அத்த..ஒரு பத்து நிமிசம்…. சாப்பிட ரெடி செஞ்சுட்டு வந்துடுறேன்… நீங்க அவர்ட்ட பேசுங்க.. நான் உங்க புள்ளையைக் கூப்பிடுறேன்…” என மதுரவசனி தங்கள் அறைக்குள் போனாள்.
அங்கே ராஜா சட்டையை மாற்றிக்கொண்டு இருந்தான் ,
“ஏன் டி…. நான் சரின்னு சொன்னதுமே உடனே தகவல் அனுப்பிட்டியா.. பொசுக்குன்னு வந்து நிக்குறாங்க..?”
“நான் ஊர்ல இருக்கும்போதே சொல்லிட்டேங்க… அது இருக்கட்டும்.. என்னங்க… அவங்க வந்துருக்காங்க… நீங்க பாட்டுக்கு வந்துட்டீங்க… எங்கப் போறீங்க.. சட்டை மாத்துறீங்க…?” எனப் பரபரக்க,
“உஷ்…. மெதுவா பேசுடி…. நான் என்ன அப்படியே வா உள்ளே வந்தேன்.. வாங்கன்னு சொன்னேன் தானே…. நீ நல்லா சாஞ்சு வெள்ளைச் சட்டையில ஜூஸ் கரை நல்லா தெரியுது…. பெரியவங்க முன்னாடி அப்படி போய் நிக்கவா நான்…ம்ம்….முதல்ல நீ வந்தவங்களுக்கு சாப்பிடக் கொடு…” என அவளை அதட்ட
அவளும் தலையசைத்து விட்டு சமையலறைக்குள் புகுந்தாள். பார்த்தால் பின்னாடியே ராஜாவும் உள்ளே வர,
“என்னங்க… அங்க போய் பேசாம.. இங்க ஏன் வரீங்க..?” என மது வினவ
“மது…. நான் ஒரு நிமிசம்னு சொல்லிட்டு தான் வந்தேன்.. இம்சை பண்ணாத…. தள்ளு நான் டீ போடுறேன்…” எனச் சொல்ல
“ப்ச்… நான் ஒன்னும் அவ்வளவு வீக் இல்ல… நானே போடுவேன்..” என அவள் மறுக்க
“மது….. நீ வீக்னு நான் சொல்லல… அது…. நீ போ…” என அவன் மழுப்ப
“என்ன… நான் நல்ல டீ தான் போடுவேன்…” என அவள் கோபமாய்ச் சொல்ல
“லூசு பொண்டாட்டி.. அது அப்பா டீன்னா ரொம்ப ஆசையாக் குடிப்பாரு…. அதான்.. நீ டீன்னு சொல்லி தண்ணியைக் கொடுத்தாலும் நான் குடிப்பேன்… நீ போடுற டீ சூப்பர் தான் இல்லன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா நான் அப்பாவுக்குப் பிடிச்ச மாதிரி போடுவேன்.. சரியா…” என்று சொல்லி விட்டு டீ போட்டான்.
சமையல் மேடையில் ஏறியமர்ந்தவள், அவனை ஆழமாக நோக்கினாள். எப்படி இவன் இவ்வளவு பாசமாக இருக்கிறான்….? ஒரு நேரம் வெயிலாய் காய்கிறான்… சில நேரம் நிலவாய் குளிர்கிறான். ஆனால் இவனைப் போல் ஒருவரை உளமாற நேசிக்க யாருமில்லை என்பதை மது உணர்ந்து கொண்டாள். அவன் மேல் கொண்ட காதல் இன்னும் இன்னும் பெருகி உள்ளம் உடையவன்பால் உருகியது.
ஆழமான அன்பு சில நேரம் ஆதிக்கமாக மாறிப் போகிறது என்று தான் மதுவுக்குத் தோன்றிற்று.
இவனது அன்பிற்கு வரையறை… வரைமுறை விதிமுறை எதுவும் இல்லை.. சொல்லப்போனால் பொதுவாகவே அன்பு என்பது விதிமுறைக்கு அப்பாற்பட்டது. அது கண்டிஷன்ஸ் அப்ளை பிரிவில் வராது. அன்கண்டிஷனல் அதாகப்பட்டது நிபந்தனையற்றதுதான் அன்பு…!!
நீ கொடுக்கிறாய் நானும் திருப்பிக் கொடுக்கிறேன் என்றால் அது அன்பாகாது…! கடனாகிவிடும்…!! நீ கொடுத்தாலும் மறுத்தாலும் விலக்கினாலும் விலகினாலும் நான் கொடுப்பேன் என்ற நிலைதான் தூய நேசம்…!! அது தான் அன்பின் விலாசம்..!!
அடியாழம் வரை ஆழ்ந்து அக்கறைக் கொண்டு அர்த்தமான அன்பைப் பல்வேறு அர்த்தங்களாய் வெளிப்படுத்த இவனால் மட்டுமே முடியும். எதுவாகினும் அதீது தான். கோபமானாலும் சரி அன்பானாலும் சரி என்று கணவனைக் கண்டு பெருமைக் கொண்டாள் மதுரவசனி.