“மண்ணாங்கட்டி குணம்….”
“சரி சார்… இப்போ நான் அங்கே வரேன்.. எந்த ஹாஸ்பிட்டல்னு சொல்லுங்க…” என்றுத் தன்மையாய் சொல்ல, தீபனும் ஹாஸ்பிட்டல் பேரைச் சொல்லிப் போனை வைத்தான்.
அதற்குள் மது கண்விழித்து விட, ஹம்சா அவளைப் போய் பார்த்தாள்.
தீபன் அவர்களுக்குத் தனிமைக் கொடுத்து வெளியே நின்றான். ரகுவுக்காக அவன் காத்திருந்தான்.
உள்ளே போன ஹம்சா மதுவை விசாரிக்க அவள் நடந்த அனைத்தையும் சொல்ல
“என்ன நினைச்சிட்டு இருக்கடி நீ…..? நம்மளுக்கு இதெல்லாம் தேவையா என்ன…? இந்த ரிப்போர்டர் வேலையெல்லாம் வேண்டாம்னு சொன்னேனே கேட்டியா… நம்ம வீட்டுக்குத் தெரிஞ்சா பெரிய ப்ரச்சனை ஆகும்…. மது…. உனக்கு அசட்டுத் துணிச்சல் ஜாஸ்தியாச்சு…?” என்று பொரிய ,
லேசாக சிரித்த மது, “ப்ளீஸ் ஹம்சு….கோச்சுக்காதடி ராசாத்தி…………என் ஆசைக்குக் கொஞ்ச நாள் இருந்திக்கிறேனே…….. இதெல்லாம் த்ரில் டி..” எனச் சொல்ல
“உங்க ஆத்தாவுக்குத் தெரிஞ்சா தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடும்டி…..த்ரில்லாம் த்ரில்….. ஆனாலும் என்னால நம்ப முடியல…. நந்தன் சாரோட வாய்ஸ்ல இருக்க அந்த மென்மைக்கும் அவரோட செயலுக்கும்… எல்லாம் வெளிவேஷம் போல….”
“ம்ம்.. அப்படியும் இருக்கலாம்… இல்லன்னா அவர் என்னைக்காவது நான் இப்படின்னு சொல்லியிருக்காரா என்ன..? அவர் குரல் தானடி நமக்குத் தெரியும்.. குணமா தெரியும்…..?..விடு…”
“யார் குணம் தான் நமக்கு தெரியுது……..?” என ஹம்சா சலித்துக்கொள்ள
“ஏன் டி……என்னாச்சு…?”
“அந்த தீபன் இருக்காரே அவர் என்னை மரியாதை இல்லாம பேசுறாரு….. நான் செல்வண்ணாவுக்குப் போன் போடப் போனா... என் போனைப் பிடுங்கி அவர் வைச்சிக்கிட்டாரு…. நீ சொன்னது சரிதான்… அவர் என்னையும் ஒரு மாறிதான் பார்க்கிறாரு.. உன்னை மட்டுமில்ல..” எனத் தீபனின் நடவடிக்கைக் குறித்து ஹம்சா புகார் சொல்ல
“ஆத்தாடி…. அவர் என்னை பார்க்கலடி.. உன்னைத் தான் பார்க்கிறார்…..?” என அவள் அதிர
அவளை விடவும் அதிர்ந்தவள் , “என்னடி உளர்ற…..?”
“உளறலாம் இல்ல… நிஜமா…” என்றவள் அன்று தீபனுக்கும் அவளுக்குமான உரையாடலைச் சொன்னாள்.
அன்று மதுவின் கேள்விக்கு ஒரு நொடி, அதிர்ந்த தீபன் பின்னர் நிதானமாய்,
“மது…..நான் பார்த்தது உண்மைதான்.. ஆனா உங்களை இல்ல.. நீங்க என் சிஸ்டர் மாறி…” என்று சொல்ல
“அப்பாடா…” என்ற உணர்வு மதுவுக்கு..ஆனாலும்..?
“அப்போ… நீங்க யாரைப் பார்த்திங்க…..?” என்று கேட்கவும் மனமில்லை. ஏற்கனவே தலையில் எரிந்தப் பல்பை வேறு தட்டிவிட வில்லையே…? மீண்டும் பல்ப் வாங்க முடியாது என்பதால் அமைதியாய் நிற்க
“நான் அக்சுவலி உங்க பின்னாடி சீட்ல இருக்க ஹம்சாவை தான் பார்த்தேன்… அவங்க என்னைப் பார்க்கற மாதிரி இருக்கும்போது டக்குனு நான் முன்னாடி பார்த்தா.. நீங்க தானே தெரிவிங்க… இங்க இருந்தும் பார்த்தா ஹம்சா சேர் தான் தெரியும்… உங்கள நான் பார்க்கல… சாரிம்மா…” என்று சொல்ல
‘வாட்…? ஹம்சாவா…?’ என மீண்டும் ஷாக்கானவள்
“எதுக்கு அவளைப் பார்க்கிறீங்க….?” எனத் தோழி மீது கொண்ட அக்கறையில் கேட்க
“பிடிச்சிருக்குப் பார்க்கிறேன்… பார்த்தவுடனேயே பிடிச்சுப்போச்சு…….. ஐ லவ்.. ஹெர்….. அவ கிட்டச் சொல்ல வெயிட் பண்றேன்…”
“நிறுத்துங்க சார்.. இதெல்லாம் செட் ஆகாது… எங்க ஃபெமிலிக்கெல்லாம் லவ் மேரேஜ்லாம் ஒத்துவராது…..”
“அதை ஹம்சா சொல்லட்டும் மது”
“என் ப்ரண்ட் பத்தி எனக்குத் தெரியாதா.. சார்…. இதெல்லாம் வேண்டாம்.. அவளை டிஸ்டர்ப் செய்யாதிங்க சார்…” எனக் கொஞ்சம் ஸ்டீரிக்ட் ஆபிஸராகச் சொல்ல
“அதெல்லாம் நான் செய்ய மாட்டேன் மது… எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா…. சோ.. நீ உன் ப்ரண்டை நினைச்சு கவலைப்பட வேண்டாம்… பின்னாடியே சுத்திட்டெல்லாம் இருக்க மாட்டேன்”
“இதுக்கு மேல உங்க இஷ்டம்.. இது ஒத்துவராது…. தட்ஸ் ஆல்… நான் சொல்வேன்….” என்றபடி அறையை விட்டு வெளியே வந்தாள் மதுரவசனி.
அன்று நடந்தவற்றை மது ஹம்சாவிடம் சொல்ல, ஹம்சாவின் முகத்தில் டென்ஷன் ஏறிக்கொண்டே போனது.
“உனக்கு அறிவில்லன்னு அடிக்கடி நிருப்பிக்கறடி… முன்னாடி ஏன் நீ சொல்லல எங்கிட்ட… சொல்லியிருந்தா நான் அப்போவே… நான் அவரை விட்டு விலகியிருப்பேன்ல..” என்று கடுப்பாய்க் கேட்க
“ஏன்.. இப்போ மட்டும் என்ன அவரை ஒட்டிட்டா திரியிற…”
“ஏய்…” என ஹம்சா கத்த
“இதோ…. இப்படி டென்ஷன் ஆவன்னு தான் டி நான் சொல்லல… சொல்லு அவரு உன்னை எதாவது டிஸ்டர்ப் செஞ்சாரா என்ன…?”
“அதிகமா உரிமை எடுத்துக்கிட்டாருடி…. இன்னிக்கு… எனக்கு சுத்தமா பிடிக்கல… அவர் முன்னாடியே நான் இருந்தேன்னா… அவருக்கு என் நினைப்பு ஜாஸ்திதான் ஆகும்….. அது நல்லதுக்கில்ல…… எனக்கு எங்க அம்மா, அண்ணன் தான் முக்கியம்…….. அவங்களுக்கு தலைகுனிவெல்லாம் ஏற்படுத்த முடியாதுடி….”
“சரி……………….. சரி…. திரும்பவும் என்னை மயக்கம் போட வைச்சிடாத…. அவர வர சொல்லு… நான் பேசுறேன்…”
“முதல்ல என் போனை வாங்கித் தா… ட்ரிப்ஸ் முடிஞ்சதும் நம்ம போயிடலாம்…” என ஹம்சா அவசரப்படுத்த
“சரி..சரி..சாரிடி… தேவையில்லாம உன்னை குழப்ப வேண்டாம்னு தான் நான் சொல்லல… கோபமா..?” என மது சோகமாய் இழுக்க
“ப்ச்… விடு… ஆளாளுக்கு அவங்க நியாயம்… ஆனா இதை தொடரவிடக் கூடாது.. நான் போய் அவரைக் கூப்பிடுறேன்…” என்றவள் வெளியே செல்ல உள்ளே வந்ததோ வேறொருவன்.
அவனின் கண்களைப் பார்த்தால் எங்கோ பார்த்தாற் போல் இருந்தது. அவன் பின்னாலேயே ராஜதீபன், ரகு, ஹம்சா எல்லாரும் பதட்டமாக வந்தனர்.
“நந்தன்… சொன்னா கேளு… ஏற்கனவே உன்னால தான் அவ டென்சன் ஆகி மயங்கிட்டா… இப்போ போய் மறுபடியும் அவளை டென்ஷன் செய்யப் போறியா… இப்போ நீ போகல…. நான் என்ன செய்வேன்னு தெரியாதுடா..?” என்ற தீபனின் மிரட்டலையோ
,
“சார்…… வேண்டாம்….” என்ற ரகுவின் பேச்சையோ கேட்காது மதுவின் அருகில் வந்தவன் சாட்சாத் நந்தனே.
நந்தன் எப்போதும் பொது இடங்களுக்குப் போகும்போது ஒரு தாடியை ஒட்ட வைத்திருப்பான். கூடவே ஒரு கூலிங் க்ளாஸ் வேறு.. அதனால் தான் மதுவுக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் இவர்களின் பேச்சின் மூலம் தெரிந்து விட்டது வந்தவன் நந்தன் என.
மருந்துக்குக் கூட இவர்களை மதிக்காதவன் மதுவின் அருகில் வந்து ,
“இங்க பாரு மது உங்கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசனும்……. இவங்களை போக சொல்லு…. உன்னால இப்போ எங்கிட்டப் பேச முடியுமா முடியாதா..?” என்றவனின் குரலில் காலையில் இருந்த ஆத்திரம் இல்லை ஆனால் ஒரு அழுத்தம் இருந்தது.
‘சொன்னதை செய்’ என்ற கட்டளை அவன் குரலில்.
ஏற்கனவே இழுத்து வைத்திருக்கும் பிரச்சனை போதுமென நினைத்தவள் , அனைவரையும் பார்த்து ,
“சார் கிட்ட நான் பேசிக்கிறேன்… நீங்க கொஞ்சம் வெளியே இருங்க..” என்று சொல்ல
ஹம்சவோ தோழியின் மீதுள்ள பாசத்தால், “இல்ல… மது… அட்லீஸ்ட் நான்..” என்றவளை இடைமறித்த மது ,
“நான் பார்த்துக்கிறேன் ஹம்சா…” என்று சொல்ல அதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பாது அனைவரும் வெளியே வர
மதுவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த நந்தன், சில நொடிகள் அவனது தலையை இருகைகளால் தாங்கி கண் மூடினான்.
அவன் கத்துவான் இல்லை மன்னிப்புக் கேட்பான் என்று மது எதிர்ப்பார்க்க, அவனோ அவள் எதிர்ப்பாராத வகையில் மென்மையாய் பேசினான்.
“மது………….. காயப்பட்டவங்களை விட சில நேரம் காயப்படுத்தியவங்களுக்கு வலி அதிகமாய் இருக்கும்……” என
‘என்ன..?’ என்பதாய் அவள் பார்த்து வைக்க
“புரியுதா உனக்கு..... எனக்கு கோபம் வந்தால் நிதானம் தவறிடுவேன்…”
“கோபம் வரும்போது தான் நாம நிதானமா இருக்கனும் சார்…” என்றாள் மதுரவசனி பட்டென்று.
அவனது செய்கையில் அவளுக்கு கோபம், வருத்தமெல்லாம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் இப்படி பேச வேண்டுமென்று அவள் நினைக்கவில்லை தானாகவே வாயில் வந்து விட்டது.
அவள் சொன்னதுக்கு அவன் கோபமெல்லாம் படவில்லை. மாறாக ,
“எஸ்….. நீ சொல்றது கரெக்ட்தான்… ஆனா அங்க தான் நான் தவறிடுவேன்… என்னால சில சிட்ச்வேஷன்லாம் சரியா ஹேண்டில் செய்ய முடியாது மது….. முடியாதுன்னு சொல்றதை விடத் தெரியாது… இன்னிக்கும் அப்படி ஒரு நாள்… என்னால எந்த சூழ்நிலையிலையும் இறங்கிப் போக முடியாது… அப்படி இருக்கும்போது அந்த நியூஸ்… எனக்குப் பெரிய தலையிறக்கமில்லையா… அதான் அப்படி நடந்துக்கிட்டேன்…….”
“வாழ்க்கையில யாரையும் நான் காயப்படுத்தினது இல்ல….. அப்படி நினைச்சதும் இல்லை…… பட்…. இந்த நாள் ரொம்ப மோசமா போயிடுச்சு….” என்றவன் ஒரு பெரு மூச்சை வெளியேற்றினான்.
மதுவுக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்து போனது. ‘மன்னிப்பு’ என்ற ஒற்றை வார்த்தைக் கேட்டால் எங்கே அவன் தலையில் உள்ள கீரிடம் இறங்கிவிடுமோ எனப் பயந்து இப்படி சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறான் என்று.
ஒரு நல்ல மன்னிப்பு என்பது மூன்றுப் பகுதிகளைக் கொண்டது. ஒன்று மன்னிப்புக் கேட்பது. இரண்டாவது தவறை ஒத்துக்கொள்வது. மூன்றாவது தவறைச் சரி செய்வது.
நந்தனின் மன்னிப்பு இரண்டாவது வகை. தவறை ஒத்துக்கொள்வதற்குக் கூட ஒரு மனம் வேண்டுமில்லயா?
அவனது குரலில் இருந்த வலிக் கொண்ட மென்மையை உணர்ந்த மதுரவசனி, தன் கோபம் மறந்தாள்.
“இட்ஸ் ஒகே சார்….. லீவ் இட்……. நான் சரியா சாப்பிடல…. அதான் மயங்கிட்டேன்.. நீங்க இதுக்காக ஃபீல் செய்ய வேண்டாம்..” என்றாள் ஆறுதலாக.
மன்னிப்புக் கேட்கப் பெரிய மனது வேண்டும். மன்னிக்க அதை விடப் பெரிய மனது வேண்டும்.. ஆனால் பெருந்தன்மையான மனது இருந்தால் தான் கேட்கப்படாத மன்னிப்பைக் கூட ஏற்றுக்கொள்ள முடியும். எஸ்….Life becomes easier when you learn to accept the apology you never got என்ற வரிகளுக்கு ஏற்ப மது நடந்துக் கொண்டாள்.
நந்தனின் முகம் மதுவின் கூற்றில் பளிச்சென்று மின்னியது. அவனது மனப்பாரத்தை எல்லாம் ஒரு வார்த்தையில் தீர்த்து விட்டாளே..!!
‘லீவ் இட்’ என்று அவள் சொன்னப் பின் காலையிலிருந்து கனத்த நெஞ்சம் லேசாகி விட்டாற்போல் ஒரு உணர்வு. கீர்த்தியிடம் பேசிக் கொஞ்சம் சரியான மனது மீண்டும் ரகு சொன்னச் செய்தியில் வாடத் தொடங்கிவிட்டது.
கீர்த்தியிடம் பேசிய பின்பும் கூட அலைப்பாய்ந்தது அவன் நெஞ்சம். பசி வேறு எடுக்க, வீட்டுத் தொலைப்பேசி மூலமாய் ரகுவை அழைத்தான்.
“டேய்.. எங்க சுத்திட்டு இருக்க நீ…. எனக்குப் பசிக்குது…. எதாவது வாங்கிட்டு வா…. உனக்கும் சேர்த்து…” என நந்தன் சொல்ல
‘சுத்திட்டு இருக்க’ என்ற வார்த்தைகள் ரகுவை சூடாக்கப் போதுமானதாய் இருந்தன,
“நீங்க செஞ்சு வைச்ச வேலைக்கு நான் சுத்திட்டா இருக்க முடியும்… பொண்ணுன்னு கூடப் பார்க்காம அவ கழுத்தைப் பிடிச்சு இப்போ அந்த பொண்ணு ஹாஸ்பிட்டல்ல இருக்கா… சார்…. அவளைப் பார்க்கத்தான் நான் போய்ட்டு இருக்கேன்……” என்று உளறி வைக்க
உளறல்களெல்லாம் உளறிய பின் தான் அவை உளறல்கள் என்றே நமக்குப் புரிகின்றன.
நந்தனோ, “ஹே….! என்ன ரகு சொல்ற நீ… அந்த பொண்ணுக்கு என்னாச்சுடா….?” என டென்ஷனாய்க் கேட்க
‘அய்யோ…. இவர்க்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாமோ..’ என்று தோன்றியது ரகுவுக்கு.
“இல்ல… சார்…. ஒன்னும் பிரச்சனை இல்லை… நான் பார்த்துக்கிறேன்……” என்று சமாளிக்க,
“ப்ச்…. எந்த ஹாஸ்பிட்டல்னு சொல்லுடா..”
“இல்ல சார்… நீங்க வர வேண்டாம் ….” என்று அவன் எவ்வளவோ சொல்லியும் கூட நந்தன் பிடிவாதமாய் ஹாஸ்பிட்டல் பெயரைக் கேட்டுச் சில நொடிகளில் விரைந்து வந்துவிட்டான்.
அவன் செயலால் அவனே வெட்கினான். மதுவிடம் தான் நடந்துக் கொண்ட முறை சரியில்லை என்று அவனுக்கு நன்றாய்த் தெரியும் இருந்தும் கூட மன்னிப்பு என்று கேட்க பிடிக்கவில்லை.. பாரமெல்லாம் பனியென விலகி விட்டன அவளது பேச்சில்.அ