நந்தன் மனதோ மதுரவசனியின் நினைவிலேயே உழன்றது. அவளது செயலால் அவனது செல்கள் அனைத்தும் புத்துயிர் பெற்றன. புரியாத உணர்வு புதிராய் அவனை ஆட்டிவைக்க, அந்த புதிருக்குள் புதைந்து போகவே அவன் விரும்பினான்.
மதுவிடம் பேச வேண்டுமென தோன்ற, அவனது ஆல் இன் ஆல் அழகுராஜாவான ரகுவை அழைக்க ,
“என்னண்ணா…?”
“எனக்கு மது நம்பர் வேணும் ரகு…?”
“எந்த மது…?”
நந்தனோ பதில் சொல்லாமல் அவனை முறைக்க, “ஒஹ். காலையில ஒரு பொண்ணைக் காய்ச்சி எடுத்தீங்களே.. அந்த அப்பாவியா… ஆமா…. இப்போ என்ன…. சீசன் 2 வா..?” என்று கிண்டலடிக்க அதை ரசிக்காதவனாய்
“இப்போ உன்னால எனக்கு அவ நம்பர் வாங்கித் தர முடியுமா முடியாதா..?” என்றான் அழுத்தமாக.
“அண்ணா…ஆர் யூ சிரியஸ்….?”
“வர வர நீ நான் சொல்றதைக் கேட்க மாட்றடா ரகு……காது கீது அவுட் ஆச்சா.. இல்ல உடம்புல கொழுப்பாச்சா?”
“அய்யோ….. அது இல்லண்ணா…. இப்போ எதுக்கு மது நம்பர்…?”
“அவட்ட நான் இப்போவே பேசனும்.. எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லனுமா என்ன?”
“இப்போவே வா… நைட் 9 மணி.. இப்போ போய் அவங்களுக்கு போன் அடிக்கலாமா.. அவங்க வீட்ல தப்பா நினைச்சுட்டா…?”
நந்தன் ரகுவை கோபமாய் ஒரு பார்வைப் பார்த்து விட்டு, அவன் அறைக்குள் செல்ல முயல ,
‘அவன் உதவா விட்டால் இவனே எதாவது செய்வான்’ என்றறிந்த ரகு,
“ஒரு டூ மினிட்ஸ் இருங்க……. நானே வாங்கித் தரேன்….” என்றவன் தீபனுக்குப் போன் செய்து அவனை காலில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்க, தீபன் ஆபிஸ் டேட்டாபேஸிலிருந்து மதுவின் எண்ணை எடுத்துக் கொடுத்தான்.
ஆனால் தீபனின் மனதில் ஏதோ சரியில்லையென்று பட்டது. ரகு நம்பர் தந்த பின், நந்தன் அவனது அறைக்குள் சென்று பால்கனியில் சில்லென்று கடற்காத்து அவன் முகத்தில் வீச, அதில் அவனது தலைமூடிப் பறக்க, மதுவைப் பற்றி நினைத்தாலே இனித்தது.
அந்த தூரத்தில் தெரிந்த கடலும் அதன் உள்ளே இருக்கும் ஆழ்ந்த அமைதியையும் அவன் மனம் உணர்ந்தது. அந்த அமைதிக்குக் காரணம் மது என்று அவன் மனம் அறியும்.
‘எத்தனை இரவுகள் அவன் அலைப்புறுதலோடு கழித்திருப்பான். மனம் விட்டு சிரித்து எத்தனை ஆண்டுகள் ஆயிற்று. ஆனால் ஒற்றை வார்த்தையில் அவனது மனதின் பாரத்தை எல்லாம் லேசாக்கி விட்டாள் அவனது மது.
ஆம்..!! அவனது மது தான்.
அவளது நினைவுகள் அதிகமாக, உடனே அவளுக்குப் போன் செய்தான் ராஜ்நந்தன்.
ஹம்சா சீக்கிரமே தூங்க போய் விட, மதியம் முழுவதும் தூங்கியதால் தூக்கம் வராமல் தவித்தவள் பாட்டு சேனல் ஒன்றை ஓட விட்டு சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.
போன் அடிக்க அதை எடுத்தவள் ,
டீவியில் ஓடிக்கொண்டிருந்த பாட்டை முணுமுணுத்தவாறே ,
“யாரு…?” என அறியாமல் அவள் கேட்க
“என்னை விட நீ நல்லா பாடுற மது..?”
“நந்தன் சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?” என இவள் ஆச்சரியமாய்க் கேட்க
“எஸ்.. ஆமா எப்படி கண்டுபிடிச்ச…. நீ?”
“உங்கப் பாட்டை எத்தன தடவக் கேட்கிறோம்… எங்களுக்குத் தெரியாதா..?”
“ம்…. உன் வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு மது.. உன் பெயரை மாதிரியே..”
அதுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. மனதில் ஏன் அவன் போன் செய்தான்.. என் எண் அவனிடம் எப்படி..? என்று பல கேள்விகள். விடை தெரியா வினாக்கள்…? அதனால் அவள் அமைதியாக இருக்க
“என்ன மது அமைதியாகிட்ட…”
“தே..தேங்க்ஸ் சார்..”
“என்ன மது வாய்ஸ் திக்குதே…”
“ஒ..ன்னுமில்ல…சார்… நீங்க ஏன் எனக்கு போன் செஞ்சிங்க…?”
அவள் வீட்டைப் பொருத்தவரையில் இப்படி இரவு நேரத்தில் போன் பேசும் வழக்கமெல்லாம் இல்லை…. அதுவும் இப்படி அந்நிய ஆணிடம் பேசும் பழக்கம் அறவே இல்லை.. என்ன தான் பெரிய பாடகனாக இருந்தாலும் இவள் வெறும் ரசிகை தானே… அதைத் தாண்டி எதுவுமில்லாத போது எதுக்கு அவனோடு பேச வேண்டும் என்று மனம் வினா தொடுக்க
“உன்னை விசாரிக்கலாம்னு தான் மது.? எப்படி இருக்கு உன் ஹெல்த்..?”
“ம்ம்…நல்லாயிருக்கு சார்”
“தேங்க்ஸ் மது..?”
“எதுக்கு சார்..?”
“என்னை விட்டுக்கொடுக்காம இருந்ததுக்கு..” என்றவன் நிதானமாய்
நெஞ்சை உருக்கும் குரலில்
“என்னை எப்போவுமே விட்டுக்கொடுக்காம இருப்பியா மது..?” என்றுக் கேட்க அவன் பேசியதன் அர்த்தம் உறைக்க அவன் வார்த்தைகள் மனதை பிசைய, கைகள் நடுங்கப் போனைக் கட் செய்தாள் மதுரவசனி.
-------------------------------------------------
உள்ளத்துக்குள்ள நீ சொன்ன கத நூறு
நெனச்சுப்பார்த்தா இனிக்கும் பாரு
கண்ணுக்குள் உன்ன நாகட்டி வச்சேன் பாரு
கலைப்பதாரு பிரிப்பதாரு
தேனோட பாலும் தினம் நான் ஊட்ட வேணும்
பூவான வானம் அதில் போய் ஆட வேணும்
இனி மேலே என்ன வேணும்
நாளும் பொழுதெல்லாம் உன்ன நினைக்கிறேன்
தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்
ராஜா ராணி போலே
இந்த பாட்டுல இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சது...இப்ப ரீசண்டா தான் கேட்டேன்...இன்னிக்கு.....ராஜா ராணி போலன்னு வருது...அதுவும் மனோ அண்ட் சித்ராம்மா....கேட்டு பாருங்க...
ஆட்டம் தொடரும்…!!!