Hi dear ladies and girliessss...????
thanksssssssssss so much??????
'காதல் என்பது சேர்வதல்ல....வாழ்வது....' - இதான் tagline.
here comes the next update
share your views friendsssssss...
-------------------------------------------------------------------------------------------------
காதல் 8:
“ராஜா மாதிரி உனக்கு மாப்பிள்ளை வருவார்னு நான் சொன்னேன்… அது சரியா போச்சு பார்த்தியா மது…?” என்றபடி வந்தார் மோகனா சித்தி.
மதுவின் அறையில் என்ன புடவை கட்டலாம் என ஹரிணி தேர்வு செய்ய , மதுவோ மனமெல்லாம் பயப்புயல் அடிக்கக் கலங்கி போய் அமர்ந்திருந்தாள். கடவுளிடம் தீராத வேண்டுதலோடு அமைதியாய் இருந்தாள்.
‘எப்படியாவது இந்த சம்மந்தம் நடந்து விடக்கூடாது’ என்பதையே கடவுளிடம் கோரிக்கையாக வைத்தாள். இனி அவளின் செயல் என்று ஒன்று இல்லை என்பதாகவே அவளுக்குத் தோன்றியது.
‘எல்லாம் அவனின் செயல் தான்’
மோகனா கூறியதைக் கேட்ட ஹரிணி, “என்னத்த சொல்றீங்க.. மாப்ள பேரு ராஜாவா…?” என ஆர்வமாய்க் கேட்க
‘மாப்பிள்ளையா…? என்னதிது இப்படி முடிவே செஞ்சிடுவீங்களா..?’ என மனதில் ஹரிணியை அர்ச்சித்தாள் மது.
“ஹே..! ஹரிணி… உனக்கு இன்னொரு விசயம் சொன்னா நீ துள்ளிக் குதிப்ப…… அந்த மாப்ள உன்னோட ஃப்வேரைட் சிங்கர் ராஜ் நந்தன்… தெரியுமா?” என்று சொல்ல, மதுவின் மனம் மூளை எல்லாம் ஒரு நொடி ஸ்தம்பித்தது.
மனமெங்கும் மழைச்சாரல் என்று சொல்வதை விட வெள்ளம் தான். அளப்பரிய மகிழ்ச்சி அவளின் முகத்தில். அன்றில் தனது ஜோடியுடன் சேரப் போகிறதல்லவா…?
பாலைவனமாய்ப் போய் விடுமோ என்ற பயத்தில் இருந்தவளுக்குப் பன்னீர் நதியென இப்படி ஒரு செய்திக் காதில் கேட்க அவளால் அதை நம்பக் கூட முடியவில்லை. சில நேரங்களில் அதீத சந்தோசத்தையும் மனம் நம்ப மறுக்குமல்லவா..?
எங்கே கேட்டச் செய்தி பொய்யாகி விடுமோ என்ற பயமும் நிஜமாக இருக்க வேண்டும் என்ற தவிப்பும் சேர்ந்து கண்களில் கண்ணீரை உற்பத்தி செய்தது. அவள் செய்தப் புண்ணியம் அவளின் மனதை அரித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஹரிணி மோகனாவிடம் கேள்வி கேட்க, அந்த பதில்களில் மதுரவசனியின் மனதுக்குள் தேனருவி திகட்டத் திகட்ட ஓடியது.
“என்னத்த சொல்றீங்க…….?” என ஹை பிட்சில் ஹரிணி கத்த
“அம்மாடி ஹனி.. கொஞ்சம் அமைதியா பேசு……. வெளில வீட்டாளுங்க எல்லாரும் உட்கார்ந்திருக்கவோ… சரியா….?” என மருமகளை அதட்ட
“ஹி ஹி.. ஒரு எக்சைட்மெண்ட் தான் அத்த.. நிஜமா நந்தனா நம்ம வீட்டு மாப்ள….”
“ஆமா… ஆமா…. இப்போதான் நாங்க கேட்டதுக்குப் பெரிய மாமா சொன்னாரு…… நந்தனோட குடும்பத்துக்கு பூர்வீகம் கும்பகோணமாம்…… அவருக்கு மியுசிக்ல ஆர்வம் அதிகம்னால அவர் பாடகராகிட்டாராம்…. பெரிய மாமா விசாரிச்ச வரைக்கும் ரொம்ப நல்ல மாதிரியாம்…. ஒரு நியூஸ் பேப்பர்ல மட்டும் இவரை ஏதோ நடிகை கூட இணைச்சு செய்தி வந்திருக்கும்போல.. ஆனால் நம்ம வீட்டாளுங்க விசாரிச்சதுல.. அந்த நடிகை மேல தான் தப்பாம்…. அந்த பத்திரிக்கை ஆபிஸ்லையும் அப்படிதான் சொன்னாங்க.. நம்ம பங்காளி வீட்டு பையன் திலக் டைரக்டர் தானே… அவன்ட்ட கேட்டதுக்குக் கோபம் வரும்.. ஆனால் ரொம்ப ரொம்ப நல்லவர்னு சர்டிஃபிகேட் கொடுத்தானாம்.. அவனே ஒருத்தர புகழ்ந்து பேசுறதுன்னா.. அதெல்லாம் அதிசயம் தான்….. அவங்க அம்மாவுக்கு நம்ம பொலுவாயன் அதான் ஆனால் ஒன்னு மாமா தூரத்து சொந்தமாம்…. அவர் நம்ம மது பத்திச் சொல்ல அவங்களுக்கும் பிடிச்சுப் போய் நந்தனோட அப்பா ஆபிஸ்ல வந்து பெரிவங்ககிட்டப் பேசியிருக்காரு…. ரொம்ப மரியாதையான குடும்பம் போல… நம்ம மாறி பிஸீனஸும் இருக்கு.. அதனால நம்ம வீட்டு ஆளுங்க எல்லாம் ஃப்ளாட்…” என விளக்க
“அத்த….. உங்க வாய்க்குச் சர்க்கரைப் போடனும்.. அன்னிக்கு சொன்ன மாதிரியே மதுவுக்கு ராஜாவே மாப்பிள்ளையா வந்துட்டாரு பாருங்களேன். செம செம… என்ன ஒரே ஒரு வருத்தம் நந்தனை இனி சைட் அடிக்க முடியாது….. எனக்கு அண்ணனாயிட்டாரே….. ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குத்த… என்ன மது… உனக்கும் சந்தோசம் தானே… இன்னிக்குக் கூட சாரோட பாட்டுத்தானே கேட்டே நீ…”
மதுவும் மனதில் மலையென எழுந்த உணர்வுகளை அடக்க வழி தெரியாது , தன்னை நிலைப்படுத்தி “நம்ம வீட்ல எது செஞ்சாலும் எனக்கு ஓகே அண்ணி…” எனச் சொல்ல
“அதெல்லாம் சரிதான்.. உனக்கு ஸ்பெஷலா எதுவும் சந்தோசம் இல்லயா… ஒரு சிங்கர்…. அதுவும் உனக்குப் பிடிச்சவர் உனக்கு மாப்பிள்ளையா வரப்போறாரே….” என்று ஹரிணி சொல்ல
“நீ வேற ஹனிம்மா… அத்தை சினிமாவுல பாடுறார்னு சொன்னதும் ஒத்துக்கலயாம்… அப்புறம்…. பெரியவர் தான் சமாதானம் செஞ்சிருக்கார்.. நம்ம ஊர்ப்பக்கம்… ஆனால் ஒன்னு மாமா சொன்ன சம்மதம்… சினிமாவுல இருக்கறவங்க எல்லாரும் ஒன்னும் தப்பானவங்க இல்ல.. இந்த தம்பி நம்ம தியாகராஜர் ஆராதனைக்குக் கூட திருவையாத்துல பாடுவாப்புல…. கர்நாடக இசை கத்துக்கிட்டவர்.. நம்ம ஊர்ல இருந்துட்டு சங்கீதம் தெரியாம இருக்க முடியுமா என்ன…? அப்படின்னு ரொம்ப சமாளிச்சு ஒத்துக்க வைச்சிருக்கார்…. இப்போ நந்தன் அமெரிக்காவுல இருக்காறாம்ல… அதான் அவர் வீட்டு சனங்க மட்டும் பார்க்க வராங்களாம்…” என்றார் மோகனா.
“ஓ…. இது வேறயா….. அவர் பின்னணி பாடகர் தான் அத்த… ஒன்னும் ப்ரச்சனையில்ல….. சரி மது. நீ நான் கேட்டதுக்குப் பதில் சொல்லவே இல்ல….?” என ஹனிக் கண்ணாகக் கேட்க
“அண்ணி…..எனக்குப் பிடிச்ச சிங்கர்.. அவர் குரல கேட்ருக்கேன்….. அதனால் ஒரு பிடித்தம் உண்டு அவ்வளவுதான்.. ஆனா இப்போ ஹாப்பி தான்…” என்று சமாளித்து வைத்தாள்.
“ஹரிணிம்மா… புள்ள கத்துறான் பாரு.. போய் சோறு ஊட்டி தூங்க வை அவன… அந்திக்கு அப்போதான் அமைதியா இருப்பான்..” என சுலோச்சனா குரல் கொடுக்க, ஹனியும் மதுவிடம் ,
“மது உனக்கு இந்த சேலை நல்லா இருக்கும்… ஓகேவான்னு பாரு… நான் அயர்ன் பண்ணி தரேன்… இதுக்கு மேட்சா செட் இருக்கான்னுப் பார்த்து எடுத்து வைக்கிறேன்.. இப்போ போய் அந்த குட்டிச் சாத்தான தூங்க வைக்கிறேன்…” என்றபடியே மதுவின் அறையிலிருந்து வெளியேறினாள்.
மோகனா மதுவிடம், “மதும்மா….. முதல் முதல்லா பொண்ணுப் பார்க்க வராங்க.. கொஞ்சம் பயம் பதட்டமெல்லாம் இருக்கும்…… ஆமா நான் கேட்கனும் நினைச்சேன் பெரியப்பா சொன்னாரு… நீ வொர்க் செய்யுற டைமண்ட் குரூப்ஸ் அவங்களுதானமே… அப்படியா… நீ அப்போ நந்தனைப் பார்த்திருக்கியா…?” எனக் கேட்க
“இல்ல சித்தி…. நான் அவர டீவியில தான் பார்த்திருக்கேன்…. அங்க வேறொருத்தர் தான் எம்டி….. அவங்கப்பா தான் கம்பெனியைப் பார்த்துக்கிறார்…. எனக்கே நீங்க சொல்லிதான் நந்தன் சாரோட கம்பெனின்னு தெரியும்….” என டன் டன்னாக தன்னெஞ்சறியப் பொய்யுரைக்க
“ஓஹ்……. ஆமா….. அவர் தம்பி தான் கம்பெனியைப் பார்த்துக்கிறாராம்… பிரபலமா இருக்கறதால குடும்பத்துக்குத் தொந்தரவு வரக்கூடாதுன்னு தனியா இருக்காராம்.. அப்போ நீ பார்க்க வாய்ப்பில்லதான்…” என மோகனாவே தனது கேள்விக்கு விடையும் சொல்லிக் கொண்டார்.
“சரி மது.. கொஞ்சம் நேரம் நீ தூங்கி எழு.. அப்போதான் அந்திக்கு நல்லா இருப்ப.. ரெண்டு நாளா விசேஷத்துல ஓய்ஞ்சு போயிட்ட டா…. முதல்ல வந்து சாப்பிடு அப்புறமா செத்த நேரம் தூங்கு” என்று சொல்லிவிட்டுச் செல்ல மதுவும் சாப்பிட்டு விட்டு அவளறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அப்படியே தரையில் அமர்ந்தவளுக்குக் கண்களில் தலைக்காவிரி போல் கண்ணீர் கரைப் புரண்டு ஓடியது.
சிறிது நேரத்தில் அவளுக்கு உயிர் வரை வலித்ததுக்கு விழி நீரே வலி துடைப்பதாய் அமைந்தது.
பெண்களால் என்றுமே சுய நலமாய் சிந்திக்க முடியாது. அப்படியே இருந்தாலும் தன் குடும்பம் என்று தான் சிந்தனை ஓடும். மதுவும் அப்படித்தான் அவளால் குடும்பத்தின் நம்பிக்கையையும் உடைத்துத் தன் காதலை சொல்லவும் முடியவில்லை காதலனின் நம்பிக்கையைப் பொய்யாக்கவும் துணிவில்லை. அரக்கனுக்கும் அலைக்கடலுக்கும் நடுவில் நடுவில் மாட்டிக் கொண்ட நிலையில் தவித்தவளுக்கு மனம் கொண்ட மன்னவனே மணாளனாக வரப்போகிறான் என்பது வார்த்தையால் விவரிக்க முடியாத நிம்மதியை அளித்தது.
அதே நேரம் நந்தன் மீது ஆத்திரமாக வந்தது. சில நொடிகள் தான் என்றாலும் வேறாரோ மாப்பிள்ளைப் பார்க்க வருகிறார்கள் என்றச் செய்தியைக் கேட்டு அவள் துடித்த துடிப்பென்ன…? அவள் போன் செய்ய வேண்டாம் என்று சொன்னால் அதற்காக இப்படி ஒரு முக்கியமான விடயத்தைக் கூடச் சொல்ல மாட்டானா அவன்.. சொல்ல வேண்டும் என்ற அறிவில்லாத மட்டி மங்குனியா அவன்…?
கோபத்தோடு செல்லை எடுத்து அவனது இந்திய எண்ணுக்கு அடிக்க, அதை எடுத்தது ரகு,
“ஹலோ.. நந்தன்… உங்க மனசில என்ன நினைச்சிட்டு இருக்கீங்க… அவ்வளவு திமிரா உங்களுக்கு..?” என இவள் கோபத்தில் பொரிய
ரகுவோ பதறி, “அய்யோ அண்ணி.. நான் ரகு…. அண்ணா யு.எஸ்க்குப் போன் எடுத்துட்டு போகல…. இந்த போன் எங்கிட்ட தான் இருக்கும்…” எனச் சொல்ல
‘இவனால.. என் மூளை வேலையே செய்ய மாட்டேங்குது……. லூசு மாதிரி ஃபோன் பேசுறேன்…. அமெரிக்கா நம்பர் கூட வாங்கி வைக்கல……. இவனைப் பார்த்த நாளிலேர்ந்து என்னை எப்பவுமே இந்த நியூஸ்காரங்க மாதிரி பதட்டமாவே வைச்சிருக்கான்…. லூசு நந்தன்..’ எனத் தன்னவனை மனதில் தாளித்தாள்.பின்னர் ரகுவிடம்
“ஓ… சாரி.. சாரிங்க… நான் அவர்னு நினைச்சிட்டேன்… அவரோட நம்பர் தர முடியுமா….”
“அண்ணா அங்க போன்லாம் எடுத்துட்டு போகல… அங்க உள்ள மானேஜர் கிட்ட தான் நான் பேசுவேன்… அண்ணாவுக்கா எனக்குப் பேசனும்னு தோணிச்சின்னா கால் பண்ணுவார்….. அது மட்டுமில்லாம இப்போ மிட் நைட் வேற அங்க…” என ரகு நினைவூட்ட
‘மது…. அவனோட சேர்ந்து… இல்ல… இன்னும் சேரல… நினைச்சுத்துக்கே அவனை மாதிரி மங்குனி மதுவாகிட்ட…. ஆனா இப்போ எப்படி இதை அவன்ட்ட சொல்றது…’ என அவளின் யோசனை ஓட,
ரகுவே, “அண்ணா வீட்ல இன்னிக்கு உங்களைப் பார்க்க வராங்களாமே அதைப் பத்தி பேசனுமா..” என எடுத்துக்கொடுக்க
“அப்போ… உங்களுக்கும் உங்க அண்ணனுக்கும் தெரிஞ்சே எங்கிட்ட சொல்லல……. ஒரு வார்த்தை சொன்னா என்ன குறைஞ்சிடுறாரு அவரு.. இது எவ்வளவு முக்கியமான விசயம்ங்க…..” என இவள் குறைபட
“அண்ணி…. ப்ளீஸ்.. அண்ணாவுக்கே இந்த விசயம் தெரியாது….” என ரகு கூற அதில் ஆச்சரியமானவள் அடுத்த அவன் சொன்னதில் அதிர்ச்சியானாள்.
“அண்ட்… இப்போதைக்கு அண்ணாவுக்கு இது தெரியவும் வேண்டாம்….. அவருக்குத் தெரியாம தான் அவர் வீட்ல உங்களைப் பொண்ணுக் கேட்டு வராங்க…” என்று உண்மையைச் சொல்லிவிட மதுவுக்கு மூளை குழம்பிப் போனது.
‘நந்தனுக்கு சொல்லாமல் ஏன் வரனும்..? அவருக்குத் தான் என்னைப் பிடிக்குமே… அவரே வந்து பேசுறேன்னுதானே சொன்னார்…’ எனக் கேள்விகளை அவளைத் துளைத்தெடுக்க அதையெல்லாம் ரகுவிடம் தொடுக்க, அவனோ,
“உங்க கிட்ட எல்லாத்தையும் அண்ணாதான் சொல்லனும்.. என்னால இப்போதைக்கு இதைதான் சொல்ல முடியும்…… அண்ணாவுக்கும் அவர் ஃபேமிலிக்கும் ப்ரச்சனை… சில வருசமாவே… பேச்சு வார்த்தையே இல்ல… அவருக்கு தன்மானம் ஜாஸ்தி… குடும்பமா இருந்தா கூடக் கௌரவம் எதிர்ப்பார்ப்பார்…… அவரே தனியா வந்துப் பொண்ணுக் கேட்டாலும் கேட்பார் குடும்பத்தோட வர மாட்டார்…. அப்படி தனியா வந்தா உங்க வீட்ல தருவாங்களா என்ன…? அதான் அவர் உங்களை விரும்புறது எனக்குத் தெரியும்… தீபன் அண்ணாவுக்கும் தெரியும்…… அதனால் அவர் அமெரிக்காவுல இருக்க நேரத்தில உங்க வீட்ல பேசி சம்மதிக்க வைச்சிக்கலாம்னு நினைச்சோம்….. உங்களுக்குப் புரியுதா அண்ணி…?”
“ம்ம்…” என்றவளுக்கு தன்னைவன் ஒரு புரியாதப் புதிராகவே தெரிந்தான்.
ஆனால் அவளுக்கு மிகவும் பிடித்தப் புதிராக போனதுதான் அவளது துர்திர்ஷ்டம்.
thanksssssssssss so much??????
'காதல் என்பது சேர்வதல்ல....வாழ்வது....' - இதான் tagline.
here comes the next update
share your views friendsssssss...
-------------------------------------------------------------------------------------------------
காதல் 8:
“ராஜா மாதிரி உனக்கு மாப்பிள்ளை வருவார்னு நான் சொன்னேன்… அது சரியா போச்சு பார்த்தியா மது…?” என்றபடி வந்தார் மோகனா சித்தி.
மதுவின் அறையில் என்ன புடவை கட்டலாம் என ஹரிணி தேர்வு செய்ய , மதுவோ மனமெல்லாம் பயப்புயல் அடிக்கக் கலங்கி போய் அமர்ந்திருந்தாள். கடவுளிடம் தீராத வேண்டுதலோடு அமைதியாய் இருந்தாள்.
‘எப்படியாவது இந்த சம்மந்தம் நடந்து விடக்கூடாது’ என்பதையே கடவுளிடம் கோரிக்கையாக வைத்தாள். இனி அவளின் செயல் என்று ஒன்று இல்லை என்பதாகவே அவளுக்குத் தோன்றியது.
‘எல்லாம் அவனின் செயல் தான்’
மோகனா கூறியதைக் கேட்ட ஹரிணி, “என்னத்த சொல்றீங்க.. மாப்ள பேரு ராஜாவா…?” என ஆர்வமாய்க் கேட்க
‘மாப்பிள்ளையா…? என்னதிது இப்படி முடிவே செஞ்சிடுவீங்களா..?’ என மனதில் ஹரிணியை அர்ச்சித்தாள் மது.
“ஹே..! ஹரிணி… உனக்கு இன்னொரு விசயம் சொன்னா நீ துள்ளிக் குதிப்ப…… அந்த மாப்ள உன்னோட ஃப்வேரைட் சிங்கர் ராஜ் நந்தன்… தெரியுமா?” என்று சொல்ல, மதுவின் மனம் மூளை எல்லாம் ஒரு நொடி ஸ்தம்பித்தது.
மனமெங்கும் மழைச்சாரல் என்று சொல்வதை விட வெள்ளம் தான். அளப்பரிய மகிழ்ச்சி அவளின் முகத்தில். அன்றில் தனது ஜோடியுடன் சேரப் போகிறதல்லவா…?
பாலைவனமாய்ப் போய் விடுமோ என்ற பயத்தில் இருந்தவளுக்குப் பன்னீர் நதியென இப்படி ஒரு செய்திக் காதில் கேட்க அவளால் அதை நம்பக் கூட முடியவில்லை. சில நேரங்களில் அதீத சந்தோசத்தையும் மனம் நம்ப மறுக்குமல்லவா..?
எங்கே கேட்டச் செய்தி பொய்யாகி விடுமோ என்ற பயமும் நிஜமாக இருக்க வேண்டும் என்ற தவிப்பும் சேர்ந்து கண்களில் கண்ணீரை உற்பத்தி செய்தது. அவள் செய்தப் புண்ணியம் அவளின் மனதை அரித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஹரிணி மோகனாவிடம் கேள்வி கேட்க, அந்த பதில்களில் மதுரவசனியின் மனதுக்குள் தேனருவி திகட்டத் திகட்ட ஓடியது.
“என்னத்த சொல்றீங்க…….?” என ஹை பிட்சில் ஹரிணி கத்த
“அம்மாடி ஹனி.. கொஞ்சம் அமைதியா பேசு……. வெளில வீட்டாளுங்க எல்லாரும் உட்கார்ந்திருக்கவோ… சரியா….?” என மருமகளை அதட்ட
“ஹி ஹி.. ஒரு எக்சைட்மெண்ட் தான் அத்த.. நிஜமா நந்தனா நம்ம வீட்டு மாப்ள….”
“ஆமா… ஆமா…. இப்போதான் நாங்க கேட்டதுக்குப் பெரிய மாமா சொன்னாரு…… நந்தனோட குடும்பத்துக்கு பூர்வீகம் கும்பகோணமாம்…… அவருக்கு மியுசிக்ல ஆர்வம் அதிகம்னால அவர் பாடகராகிட்டாராம்…. பெரிய மாமா விசாரிச்ச வரைக்கும் ரொம்ப நல்ல மாதிரியாம்…. ஒரு நியூஸ் பேப்பர்ல மட்டும் இவரை ஏதோ நடிகை கூட இணைச்சு செய்தி வந்திருக்கும்போல.. ஆனால் நம்ம வீட்டாளுங்க விசாரிச்சதுல.. அந்த நடிகை மேல தான் தப்பாம்…. அந்த பத்திரிக்கை ஆபிஸ்லையும் அப்படிதான் சொன்னாங்க.. நம்ம பங்காளி வீட்டு பையன் திலக் டைரக்டர் தானே… அவன்ட்ட கேட்டதுக்குக் கோபம் வரும்.. ஆனால் ரொம்ப ரொம்ப நல்லவர்னு சர்டிஃபிகேட் கொடுத்தானாம்.. அவனே ஒருத்தர புகழ்ந்து பேசுறதுன்னா.. அதெல்லாம் அதிசயம் தான்….. அவங்க அம்மாவுக்கு நம்ம பொலுவாயன் அதான் ஆனால் ஒன்னு மாமா தூரத்து சொந்தமாம்…. அவர் நம்ம மது பத்திச் சொல்ல அவங்களுக்கும் பிடிச்சுப் போய் நந்தனோட அப்பா ஆபிஸ்ல வந்து பெரிவங்ககிட்டப் பேசியிருக்காரு…. ரொம்ப மரியாதையான குடும்பம் போல… நம்ம மாறி பிஸீனஸும் இருக்கு.. அதனால நம்ம வீட்டு ஆளுங்க எல்லாம் ஃப்ளாட்…” என விளக்க
“அத்த….. உங்க வாய்க்குச் சர்க்கரைப் போடனும்.. அன்னிக்கு சொன்ன மாதிரியே மதுவுக்கு ராஜாவே மாப்பிள்ளையா வந்துட்டாரு பாருங்களேன். செம செம… என்ன ஒரே ஒரு வருத்தம் நந்தனை இனி சைட் அடிக்க முடியாது….. எனக்கு அண்ணனாயிட்டாரே….. ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குத்த… என்ன மது… உனக்கும் சந்தோசம் தானே… இன்னிக்குக் கூட சாரோட பாட்டுத்தானே கேட்டே நீ…”
மதுவும் மனதில் மலையென எழுந்த உணர்வுகளை அடக்க வழி தெரியாது , தன்னை நிலைப்படுத்தி “நம்ம வீட்ல எது செஞ்சாலும் எனக்கு ஓகே அண்ணி…” எனச் சொல்ல
“அதெல்லாம் சரிதான்.. உனக்கு ஸ்பெஷலா எதுவும் சந்தோசம் இல்லயா… ஒரு சிங்கர்…. அதுவும் உனக்குப் பிடிச்சவர் உனக்கு மாப்பிள்ளையா வரப்போறாரே….” என்று ஹரிணி சொல்ல
“நீ வேற ஹனிம்மா… அத்தை சினிமாவுல பாடுறார்னு சொன்னதும் ஒத்துக்கலயாம்… அப்புறம்…. பெரியவர் தான் சமாதானம் செஞ்சிருக்கார்.. நம்ம ஊர்ப்பக்கம்… ஆனால் ஒன்னு மாமா சொன்ன சம்மதம்… சினிமாவுல இருக்கறவங்க எல்லாரும் ஒன்னும் தப்பானவங்க இல்ல.. இந்த தம்பி நம்ம தியாகராஜர் ஆராதனைக்குக் கூட திருவையாத்துல பாடுவாப்புல…. கர்நாடக இசை கத்துக்கிட்டவர்.. நம்ம ஊர்ல இருந்துட்டு சங்கீதம் தெரியாம இருக்க முடியுமா என்ன…? அப்படின்னு ரொம்ப சமாளிச்சு ஒத்துக்க வைச்சிருக்கார்…. இப்போ நந்தன் அமெரிக்காவுல இருக்காறாம்ல… அதான் அவர் வீட்டு சனங்க மட்டும் பார்க்க வராங்களாம்…” என்றார் மோகனா.
“ஓ…. இது வேறயா….. அவர் பின்னணி பாடகர் தான் அத்த… ஒன்னும் ப்ரச்சனையில்ல….. சரி மது. நீ நான் கேட்டதுக்குப் பதில் சொல்லவே இல்ல….?” என ஹனிக் கண்ணாகக் கேட்க
“அண்ணி…..எனக்குப் பிடிச்ச சிங்கர்.. அவர் குரல கேட்ருக்கேன்….. அதனால் ஒரு பிடித்தம் உண்டு அவ்வளவுதான்.. ஆனா இப்போ ஹாப்பி தான்…” என்று சமாளித்து வைத்தாள்.
“ஹரிணிம்மா… புள்ள கத்துறான் பாரு.. போய் சோறு ஊட்டி தூங்க வை அவன… அந்திக்கு அப்போதான் அமைதியா இருப்பான்..” என சுலோச்சனா குரல் கொடுக்க, ஹனியும் மதுவிடம் ,
“மது உனக்கு இந்த சேலை நல்லா இருக்கும்… ஓகேவான்னு பாரு… நான் அயர்ன் பண்ணி தரேன்… இதுக்கு மேட்சா செட் இருக்கான்னுப் பார்த்து எடுத்து வைக்கிறேன்.. இப்போ போய் அந்த குட்டிச் சாத்தான தூங்க வைக்கிறேன்…” என்றபடியே மதுவின் அறையிலிருந்து வெளியேறினாள்.
மோகனா மதுவிடம், “மதும்மா….. முதல் முதல்லா பொண்ணுப் பார்க்க வராங்க.. கொஞ்சம் பயம் பதட்டமெல்லாம் இருக்கும்…… ஆமா நான் கேட்கனும் நினைச்சேன் பெரியப்பா சொன்னாரு… நீ வொர்க் செய்யுற டைமண்ட் குரூப்ஸ் அவங்களுதானமே… அப்படியா… நீ அப்போ நந்தனைப் பார்த்திருக்கியா…?” எனக் கேட்க
“இல்ல சித்தி…. நான் அவர டீவியில தான் பார்த்திருக்கேன்…. அங்க வேறொருத்தர் தான் எம்டி….. அவங்கப்பா தான் கம்பெனியைப் பார்த்துக்கிறார்…. எனக்கே நீங்க சொல்லிதான் நந்தன் சாரோட கம்பெனின்னு தெரியும்….” என டன் டன்னாக தன்னெஞ்சறியப் பொய்யுரைக்க
“ஓஹ்……. ஆமா….. அவர் தம்பி தான் கம்பெனியைப் பார்த்துக்கிறாராம்… பிரபலமா இருக்கறதால குடும்பத்துக்குத் தொந்தரவு வரக்கூடாதுன்னு தனியா இருக்காராம்.. அப்போ நீ பார்க்க வாய்ப்பில்லதான்…” என மோகனாவே தனது கேள்விக்கு விடையும் சொல்லிக் கொண்டார்.
“சரி மது.. கொஞ்சம் நேரம் நீ தூங்கி எழு.. அப்போதான் அந்திக்கு நல்லா இருப்ப.. ரெண்டு நாளா விசேஷத்துல ஓய்ஞ்சு போயிட்ட டா…. முதல்ல வந்து சாப்பிடு அப்புறமா செத்த நேரம் தூங்கு” என்று சொல்லிவிட்டுச் செல்ல மதுவும் சாப்பிட்டு விட்டு அவளறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அப்படியே தரையில் அமர்ந்தவளுக்குக் கண்களில் தலைக்காவிரி போல் கண்ணீர் கரைப் புரண்டு ஓடியது.
சிறிது நேரத்தில் அவளுக்கு உயிர் வரை வலித்ததுக்கு விழி நீரே வலி துடைப்பதாய் அமைந்தது.
பெண்களால் என்றுமே சுய நலமாய் சிந்திக்க முடியாது. அப்படியே இருந்தாலும் தன் குடும்பம் என்று தான் சிந்தனை ஓடும். மதுவும் அப்படித்தான் அவளால் குடும்பத்தின் நம்பிக்கையையும் உடைத்துத் தன் காதலை சொல்லவும் முடியவில்லை காதலனின் நம்பிக்கையைப் பொய்யாக்கவும் துணிவில்லை. அரக்கனுக்கும் அலைக்கடலுக்கும் நடுவில் நடுவில் மாட்டிக் கொண்ட நிலையில் தவித்தவளுக்கு மனம் கொண்ட மன்னவனே மணாளனாக வரப்போகிறான் என்பது வார்த்தையால் விவரிக்க முடியாத நிம்மதியை அளித்தது.
அதே நேரம் நந்தன் மீது ஆத்திரமாக வந்தது. சில நொடிகள் தான் என்றாலும் வேறாரோ மாப்பிள்ளைப் பார்க்க வருகிறார்கள் என்றச் செய்தியைக் கேட்டு அவள் துடித்த துடிப்பென்ன…? அவள் போன் செய்ய வேண்டாம் என்று சொன்னால் அதற்காக இப்படி ஒரு முக்கியமான விடயத்தைக் கூடச் சொல்ல மாட்டானா அவன்.. சொல்ல வேண்டும் என்ற அறிவில்லாத மட்டி மங்குனியா அவன்…?
கோபத்தோடு செல்லை எடுத்து அவனது இந்திய எண்ணுக்கு அடிக்க, அதை எடுத்தது ரகு,
“ஹலோ.. நந்தன்… உங்க மனசில என்ன நினைச்சிட்டு இருக்கீங்க… அவ்வளவு திமிரா உங்களுக்கு..?” என இவள் கோபத்தில் பொரிய
ரகுவோ பதறி, “அய்யோ அண்ணி.. நான் ரகு…. அண்ணா யு.எஸ்க்குப் போன் எடுத்துட்டு போகல…. இந்த போன் எங்கிட்ட தான் இருக்கும்…” எனச் சொல்ல
‘இவனால.. என் மூளை வேலையே செய்ய மாட்டேங்குது……. லூசு மாதிரி ஃபோன் பேசுறேன்…. அமெரிக்கா நம்பர் கூட வாங்கி வைக்கல……. இவனைப் பார்த்த நாளிலேர்ந்து என்னை எப்பவுமே இந்த நியூஸ்காரங்க மாதிரி பதட்டமாவே வைச்சிருக்கான்…. லூசு நந்தன்..’ எனத் தன்னவனை மனதில் தாளித்தாள்.பின்னர் ரகுவிடம்
“ஓ… சாரி.. சாரிங்க… நான் அவர்னு நினைச்சிட்டேன்… அவரோட நம்பர் தர முடியுமா….”
“அண்ணா அங்க போன்லாம் எடுத்துட்டு போகல… அங்க உள்ள மானேஜர் கிட்ட தான் நான் பேசுவேன்… அண்ணாவுக்கா எனக்குப் பேசனும்னு தோணிச்சின்னா கால் பண்ணுவார்….. அது மட்டுமில்லாம இப்போ மிட் நைட் வேற அங்க…” என ரகு நினைவூட்ட
‘மது…. அவனோட சேர்ந்து… இல்ல… இன்னும் சேரல… நினைச்சுத்துக்கே அவனை மாதிரி மங்குனி மதுவாகிட்ட…. ஆனா இப்போ எப்படி இதை அவன்ட்ட சொல்றது…’ என அவளின் யோசனை ஓட,
ரகுவே, “அண்ணா வீட்ல இன்னிக்கு உங்களைப் பார்க்க வராங்களாமே அதைப் பத்தி பேசனுமா..” என எடுத்துக்கொடுக்க
“அப்போ… உங்களுக்கும் உங்க அண்ணனுக்கும் தெரிஞ்சே எங்கிட்ட சொல்லல……. ஒரு வார்த்தை சொன்னா என்ன குறைஞ்சிடுறாரு அவரு.. இது எவ்வளவு முக்கியமான விசயம்ங்க…..” என இவள் குறைபட
“அண்ணி…. ப்ளீஸ்.. அண்ணாவுக்கே இந்த விசயம் தெரியாது….” என ரகு கூற அதில் ஆச்சரியமானவள் அடுத்த அவன் சொன்னதில் அதிர்ச்சியானாள்.
“அண்ட்… இப்போதைக்கு அண்ணாவுக்கு இது தெரியவும் வேண்டாம்….. அவருக்குத் தெரியாம தான் அவர் வீட்ல உங்களைப் பொண்ணுக் கேட்டு வராங்க…” என்று உண்மையைச் சொல்லிவிட மதுவுக்கு மூளை குழம்பிப் போனது.
‘நந்தனுக்கு சொல்லாமல் ஏன் வரனும்..? அவருக்குத் தான் என்னைப் பிடிக்குமே… அவரே வந்து பேசுறேன்னுதானே சொன்னார்…’ எனக் கேள்விகளை அவளைத் துளைத்தெடுக்க அதையெல்லாம் ரகுவிடம் தொடுக்க, அவனோ,
“உங்க கிட்ட எல்லாத்தையும் அண்ணாதான் சொல்லனும்.. என்னால இப்போதைக்கு இதைதான் சொல்ல முடியும்…… அண்ணாவுக்கும் அவர் ஃபேமிலிக்கும் ப்ரச்சனை… சில வருசமாவே… பேச்சு வார்த்தையே இல்ல… அவருக்கு தன்மானம் ஜாஸ்தி… குடும்பமா இருந்தா கூடக் கௌரவம் எதிர்ப்பார்ப்பார்…… அவரே தனியா வந்துப் பொண்ணுக் கேட்டாலும் கேட்பார் குடும்பத்தோட வர மாட்டார்…. அப்படி தனியா வந்தா உங்க வீட்ல தருவாங்களா என்ன…? அதான் அவர் உங்களை விரும்புறது எனக்குத் தெரியும்… தீபன் அண்ணாவுக்கும் தெரியும்…… அதனால் அவர் அமெரிக்காவுல இருக்க நேரத்தில உங்க வீட்ல பேசி சம்மதிக்க வைச்சிக்கலாம்னு நினைச்சோம்….. உங்களுக்குப் புரியுதா அண்ணி…?”
“ம்ம்…” என்றவளுக்கு தன்னைவன் ஒரு புரியாதப் புதிராகவே தெரிந்தான்.
ஆனால் அவளுக்கு மிகவும் பிடித்தப் புதிராக போனதுதான் அவளது துர்திர்ஷ்டம்.