Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

♥️♥️மனதை பரவசபடுத்திய ♥️♥️ கோமதி அருணின் 💕💕 நினைவே சுவாசக் காற்றாய் 💕💕

Advertisement

Ram priya

Well-known member
Member
IMG_20240224_163022.jpgஎழுத்தாளருக்கு: Love & love only போட்டியில் காதலை கருவாக கொண்டு எழுத தொடங்கிய கதையின் மையப்புள்ளியாக நாயகனின் அளப்பரிய காதலையும் மற்றும் சமுகத்தில் பெண்களுக்கு எதிரான அநீதியையும் வன்கொடுமையும் கதைகளமாக எடுத்து எந்த இடத்திலும் தொய்வில்லாமல் மிக சுவாரஸ்யமாக கதையை கொண்டு சென்று நிறைவாக முடித்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகளும் நன்றிகளும் ✍️✍️👌👌👏👏👏



அவ்யுதகண்ணன்: நம் கதையின் நாயகன்.... அவனின் நினைவு பெட்டகத்துடன் ஆரம்பித்த கதை... கண்ணன் அவனுடைய ராதாவை சந்தித்த நாளில் ஆரம்பமாகும் நினைவு பெட்டகம் அவள் வேறொருவரின் கை சேர்ந்ததில் நிறைவு பெறும் 😍😍😍

கண்ணன் தன் ராதாவின் நினைவியையே தன்னுடைய சுவாசக் காற்றாய் நினைத்து வாழ்ந்தவன் என்று சொன்னால் மிகையில்லை ❤️❤️❤️

கண்ணன் தன் ராதாவின் மீது கொண்ட தூய்மையான காதலுக்காக தன் ஒழுக்கத்தையே சிதைத்து கொண்ட காதல் கிறுக்கன் என்று சொன்னால் மிகையில்லை ❤️❤️

கண்ணன் தன் ராதாவின் மீது கொண்ட அளவில்லா காதலுக்காக தன் அன்னையிடம் நம்பும்படியாக தன் கை சேராத காதல் கதையை சொன்ன காதல் பித்தன் என்று சொன்னால் மிகையில்லை ❤️❤️❤️

இந்த நவீன யுக கண்ணன் தன் ராதாவின் மீது கொண்ட அளப்பரிய காதலுக்காக தன் characterயே assassin செய்து கொண்ட காதல் போறாளி என்று சொன்னால் மிகையில்லை ❤️❤️

கண்ணன் தனக்கும் ராதாவுக்கும் பிறந்த குழந்தை என்றும் தன் காதல் முறிவடைந்து விட்டதென்றும் கூறி ஆதினியை தன் அன்னை தேவகியிடம் அறிமுகம் செய்கிறான்.... இதனால் தன் அன்னையின் மதிப்பில் தான் தரமிறங்கி போவோம் என்று தெரிந்தும் தன் பெண்ணுக்கு தாய் பாசம் தான் கிட்டவில்லை பாட்டியின் நேசமும் அரவனைப்பும் கட்டாயம் தேவை என்ற காரணத்திற்காக தன் ஒழுக்கத்தை பலி கொடுத்த கண்ணின் காதல் நம்மை பிரமிக்க செய்வதாய் 😍😍😍


தேவகி: தெய்வத்தாய் என்று சொன்னால் சரியாக இருக்கும்... தன் பிள்ளையின் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் ஆதினியை தன் சொந்த பேத்தியாக வரித்துக் கொண்ட பாசம் மிகுந்த அன்னையாவார் ❤️❤️

ஆதினி: cute little Dad's princess .... வயதிற்கு மீறிய முதிர்ச்சியும் நற்பண்புகளை கொண்டு தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று இருக்கும் அற்புதமான குழந்தை 😘😘😘🥰🥰🥰


அம்ரிதா: நம் கதையின் நாயகி... குருநாதன் என்ற தாயுமானவருக்கு ஒற்றை மகளாக பிறந்து நற்பண்புகளையும் நேர்மையான குணத்தையும் தைரியத்தையும் ஒருங்கே பெற்ற அருமையான பெண் 🥰🥰🥰 ஒரு கேடுகெட்ட கயவனாள் வன்கொடுமைக்கு ஆளாகி அவனை எதிர்க்கும் போராட்டத்தில் தன் பெண்மை பலரால் விமர்சிக்க படுவதை கண்டு மனம் வெதும்பி ஆண் வர்க்கத்தையே வெறுத்து ஒதுக்கியவள் 😥😥😥😨😨😨
தன் தந்தையின் விருப்பத்திற்காக திருமணத்திற்கு சம்மதித்து அவ்யதகண்ணனை சந்தித்து அவனின் attitude & approachல் மனம் கவர்தவளாய் அவனின் பேச்சில் விளைந்த நம்பிக்கையில் அவ்யதுடனான திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறாள் 😍😍😍

அம்ரிதா தன் காதலை உணரும் தருணம்.... மலர் என்ற காலேஜ் பெண்ணிற்கு தன்னுடன் படித்த ஒருவனுடன் நடந்த harrasment போது தான் 😱😱😱 அவ்யுத் தான் மேற்கொண்ட காவல் துறையினரின் துணைக் கொண்டு மலரின் பிரச்சனையை சிறப்பாக முடித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அத்தருணம் தான் அம்ரிதா அவ்யுத் மீதான தன் மனம் கனிந்த காதலையும் உணர்கிறாள் 💕💕💕💞💞💞
அவ்யுதின் பிரமிப்பூட்டும் காதலுக்கு தன்னையே பரிசாக தந்து அவ்யுதகண்ணனின் பரிசுத்தமான காதலை முழுமையடைய செய்கிறாள் 💖💖💗💗💓💓💞💞💕💕💘💘💘♥️♥️

அவ்யுதகண்ணன் என்ற அற்புதமான மனிதன் கட்டிய கூட்டில் வந்து சேர்ந்த புது வரவு குட்டி கண்ணன் (ஆதவ்)
அம்ரி _ அவ்யுத் அளவற்ற காதலுக்கான அழகான பரிசு 🥳🥳🥳 கடவுள் தந்த மாபெரும் வரம் 😘😘🥰🥰

அவ்யுத் _ அம்ரிதாவுக்கு என்னுடைய பிக்...👇👇👇👇

IMG_20240224_163319.jpg

மிக அருமையான கதை 🤩 🤩 🤩
மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰🥰
 
Last edited:
வாவ் வாவ் சூப்பர்.🤩🤩🤩🤩🤩🤩
மறுபடியும் ஒரு மச்சியோட ஆவ்சம்மான ரிவ்யூ.🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.
அவ்யூ அம்ரியை மறுபடியும் சுவாசிக்கும் சந்தர்ப்பம் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.View attachment 7369
thank-you-thank-u.gifமிக்க நன்றி மச்சி ♥️ ♥️ ♥️
உங்களுடைய ஒவ்வொரு பாராட்டுக்களும் மனசுக்கு அத்தனை புத்துணர்ச்சியை கொடுக்குது சிஸ் 🥰🥰🥰 நெஞ்சம் நிறைந்த நன்றிகள் மச்சி 😘😘😘😘😘😘😘
 
Top