AshrafHameedaT
Administrator
அலை – 10
சிவராமனை அங்கே எதிர்பார்க்காத நேத்ரா அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தாள்.
“நாம இந்த வார்த்தையை சொல்லும் போதெல்லாம் இந்த மனுஷன் தான் வந்து நிக்கிறாரு. பாவம், யாரு பெத்த புள்ளையோ?...” என உச்சுக்கொட்டியபடி நேத்ரா சென்றுவிட்டாள். நேத்ராவிற்கு இன்னுமே அது ரிஷியின் தந்தை என தெரிந்திருக்கவில்லை.
சிவராமனுக்கு அதிர்ச்சியான அதிர்ச்சி. நேத்ராவை அவர் மறக்கவே இல்லை. மகன் விரும்பியதாக மகனுக்கு நெருக்கமாக நின்று தன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய அவள் முகத்தை அவரால் எப்படி மறக்கமுடியும்?
அவருக்கு புரியவே இல்லை நேத்ரா எப்படி இங்கு வந்தாள்? என்று.
இதற்கே இப்படி மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருந்தவருக்கு தன் மகன் அவளுடன் வம்பிழுத்துக்கொண்டிருந்ததை பார்த்திருந்தால்?
ஏதேதோ நினைத்தபடி சுமங்கலியிடம் வந்தவர்,
“ஏன் சுமா, இந்த வருஷமாவது உன் பையன் காவடியை தூக்க வந்திருக்கலாம்ல? வேணும்னே தானே இப்படி செய்றான்? அய்யாவுக்கு தெரிஞ்சா எவ்வளோ வருந்துவாரு?...”
தனது தந்தை என்ன நினைப்பாரோ என எண்ணி கவலையானவர் ஞாபகம் வந்ததை போல,
“என்னாச்சு சென்னை போன விஷயம்? உன்கிட்ட சொன்னானா?...” கூர்மையான பார்வையில் எதிர்பார்ப்பை கொஞ்சம் கலக்கவிட்டு சுமங்கலியிடம் கேட்க,
“ஹ்ம் சொன்னான். கோபப்படாம கேளுங்க. அவனுக்கு இந்த சம்பந்தத்துல சுத்தமா விருப்பம் இல்லை. அவன் நேராவே அந்த பொண்ணுவீட்ல பிடிக்கலை இஷ்டமில்லைன்னு சொல்லிட்டு வந்துட்டான்...” தயங்கி சொல்ல,
“என்ன? இவனா என்ன முடிவெடுக்கிறது? அய்யா ஒரு இடம் சொன்னா அது நிச்சயம் இவனுக்கு ஏத்ததா தானே இருக்கும். இவனுக்கு ஏன் இது புரியமாட்டிக்கு? எதுவும் ஏட்டிக்கு போட்டி...” எரிச்சல் மிகுந்து இருந்தது குரலில்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க. நானே அவன்கிட்ட பேசறேன்...”
“என்ன பொறுமையா இருந்து என்ன செய்ய? அதான் செய்யவேண்டியதை செஞ்சிட்டு வந்துட்டாரே உன் சீமந்த புத்திரன். என்ன ஆனாலும் சரி. நான் அவனை மும்பைக்கு அனுப்பவே மாட்டேன்...” தோளில் கிடந்த துண்டை உதறிக்கொண்டு எரிச்சலாக சென்றார்.
திலகவதி வந்து சுமங்கலியிடம் என்னவென கேட்க நடந்ததை விவரித்தார் சுமங்கலி.
“இவங்க பஞ்சாயம் என்னைக்கு தீருமோ? அதுக்காக புள்ளைக்கு விருப்பமில்லாம அங்கன புடிச்சு தள்ளவா முடியும்? வாழப்போறவன் அவன் தானே?. நீ கண்டுக்காத...”
“அதுக்கில்லைக்கா, ஏற்கனவே ரிஷியோட பேர் ஒரு பொண்ணு விஷயத்துல அடிபட்ருச்சு. வீட்ல எல்லோருக்கும் இப்போ தெரியலைனாலும் எப்பவுமே தெரியாமலேவா இருந்துடும். அது அவனோட எதிர்காலத்தை பாதிக்குமோன்னு...”
கலக்கமாக கூறியவரின் மனக்கண்ணில் காவேரியின் துவேஷப்பார்வை வந்து இன்னும் அவரின் கலக்கத்தை அதிகமாக்கியது.
காவேரி மூலமாகத்தானே ரிஷி இன்னொரு பெண்ணுடன் பேசி இருந்தது தெரிந்தது. அதனால் அவருக்கு கொஞ்சம் பயமும் கூட.
“பயப்படறயாக்கும்? நம்ம புள்ளை அம்புட்டு விளக்கம் சொல்லியும் உனக்கு நம்பிக்கை இல்லாம போச்சா?...”
“நம்பிக்கை இல்லையா? என் பிள்ளை மேலையா? என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அக்கா? இந்த உலகத்துல என் புருஷனுக்கு அடுத்ததா நான் நம்பிக்கை வச்சிருக்கிற ஆள் ரிஷி தான்...”திடனாக கூற,
“அப்புறம் ஏன் இந்த கவலை? விட்டுத்தள்ளு. பொண்ணு வீட்ல ஒன்னும் இவனை வேண்டாம்ன்னு சொல்லலையே. இவன் தானே சொல்லிட்டு வந்துருக்கான்...” என்றவர்,
“ஆகாத போகாத விஷயத்தை நினச்சுட்டு இருக்காம இதை பெரியவர்கிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிப்போம். வீட்டுக்கு போனதும் பேசுவோம். வா பூசைக்கு நேரமாச்சு...” அவரை இழுத்துக்கொண்டு திலகவதி சென்றார்.
ஒரு மரநிழலில் நின்று மொபைலை நோண்டிக்கொண்டிருந்த ரிஷியை, “அண்ணா வாங்க சாமி கும்பிட. அய்யா கூட்டிட்டு வர சொன்னாங்க...”
ரிஷியின் சித்தப்பா சிகாமணியின் மகன் அன்புமணி வந்து அவனை அழைக்க அவனை முறைத்த ரிஷி,
“ஏண்டா எத்தனை தடவை சித்தப்பாவை அப்பான்னு கூப்பிடுன்னு சொல்லிருக்கேன். அதென்ன அய்யா?...” அதட்டல் குரலில் சொல்ல,
“தினேஷ் அண்ணா கூட சின்னைய்யான்னு சொல்றாரே அண்ணா...” என்றவன் ரிஷியின் முறைப்பில் அடங்கி,
“அதெல்லாம் சரிவராது அண்ணா. நீங்க வாங்க. உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க அய்யா...” ரிஷியின் கோபத்தை கண்டுகொள்ளாத குரலில் கூற,
“நீ என்னனுதான் வக்கீலுக்கு படிச்சியோ? நீயெல்லாம் ஒரு பேமஸ் லாயர். உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. நீ போ, எனக்கு ஒரு போன் கால் வரவேண்டியதிருக்கு. நானே வரேன்...” எனவும் அன்புமணி மனமில்லாமல் உள்ளே கிளம்பினான்.
அதே நேரம் காவேரி குடும்பமும் கோவிலுக்குள் நுழைய அங்கிருக்க பிடிக்காத ரிஷி கோவிலை விட்டு வெளியேறி அதை சுற்றி நடக்க ஆரம்பித்தான்.
என்றைக்கு தன் தாயையே அவள் உதாசீனம் செய்து கண்ணீரை வரவழைத்தாளோ அன்றிலிருந்து அவளின் முகத்தில் விழிப்பதற்கு கூட ரிஷிக்கு மனம் ஒப்பவில்லை.
அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தவன் பார்வையில் நேத்ரா விழ அவனின் சோர்ந்த மனதிற்கு ஏதோ இதம் சேர்த்தது அவளின் வளவள பேச்சு.
கோவிலை சுற்றி சிறு சிறு கடைகள் போடப்பட்டிருக்க அங்கே ஒவ்வொன்றை பற்றியும் கேட்டு அவர்களிடம் வாயடித்துக்கொண்டிருந்தாள்.
“இவ வாய் மட்டும் இல்லைனா...” என நினைத்து சிரித்துக்கொண்டவனுக்கு தன்னை நினைத்தே அவ்வளவு ஆச்சர்யம்.
“எப்போது பார்த்தாலும் எரிச்சலோடு அவளை திட்டி தீர்க்கும் தான் இன்று இலகுவாக அவளிடம் பேசிவிட்டேனே? அதுவும் சீண்டலுடன்...” என நினைத்தவன்,
“தக்காளி...” நானா பேர் வச்சேன் அவளுக்கு? அடடே ஆச்சர்யகுறி! தனக்கு தானே வியந்துகொண்டான் இதழ்களில் பூத்த குறுநகையோடு.
“ஹ்ம் அவளும் தக்காளி பழமாட்டம் தான் இருக்கிறா. கொஞ்சம் செவ செவன்னு. கொஞ்சம் லைட் பிங்க். ம்ஹூம் இவ கோபப்படும் போது இன்னொரு கலர். அது கொஞ்சம் ஆரஞ்ச் மிக்ஸிங்...” அத்தோடு தன் கற்பனைக்கு கடிவாளமிட்டவன்,
“ஹைய்யோடா ரிஷி, உனக்கு என்னாச்சு? நினைப்பெல்லாம் தறிகெட்டு ஓடுது. துரைக்கு தெரிஞ்சது துப்பாக்கிதான் மவனே. பேசாம வந்த வேலையை பார்...” புத்தி சத்தமில்லாமல் கத்தியை சொருக நிதர்சனத்தை உணர்ந்தான்.
ஆனாலும் நேத்ராவை பற்றிய சிந்தனையை விட்டு முழுவதுமாக வெளிவரமுடியவில்லை.
வீட்டிற்கு சென்றால் தேவையில்லாமல் ஏதாவது பேசி தலைவலி வந்துவிடும் என எண்ணியே அவன் நேராக கோவிலுக்கு வர உள்ளே நுழையும் போதே நேத்ராவை பார்த்துவிட்டான்.
இவளெங்கே இங்கே? என யோசனையோடு வர அதற்குள் அவள் நடத்திய களேபரமும் வாங்கிய மூக்குடைப்பும் கண்ணில் பட அடக்கமாட்டாமல் சிரிப்பும் பொத்துக்கொண்டு வந்தது.
சிவராமனை அங்கே எதிர்பார்க்காத நேத்ரா அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தாள்.
“நாம இந்த வார்த்தையை சொல்லும் போதெல்லாம் இந்த மனுஷன் தான் வந்து நிக்கிறாரு. பாவம், யாரு பெத்த புள்ளையோ?...” என உச்சுக்கொட்டியபடி நேத்ரா சென்றுவிட்டாள். நேத்ராவிற்கு இன்னுமே அது ரிஷியின் தந்தை என தெரிந்திருக்கவில்லை.
சிவராமனுக்கு அதிர்ச்சியான அதிர்ச்சி. நேத்ராவை அவர் மறக்கவே இல்லை. மகன் விரும்பியதாக மகனுக்கு நெருக்கமாக நின்று தன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய அவள் முகத்தை அவரால் எப்படி மறக்கமுடியும்?
அவருக்கு புரியவே இல்லை நேத்ரா எப்படி இங்கு வந்தாள்? என்று.
இதற்கே இப்படி மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருந்தவருக்கு தன் மகன் அவளுடன் வம்பிழுத்துக்கொண்டிருந்ததை பார்த்திருந்தால்?
ஏதேதோ நினைத்தபடி சுமங்கலியிடம் வந்தவர்,
“ஏன் சுமா, இந்த வருஷமாவது உன் பையன் காவடியை தூக்க வந்திருக்கலாம்ல? வேணும்னே தானே இப்படி செய்றான்? அய்யாவுக்கு தெரிஞ்சா எவ்வளோ வருந்துவாரு?...”
தனது தந்தை என்ன நினைப்பாரோ என எண்ணி கவலையானவர் ஞாபகம் வந்ததை போல,
“என்னாச்சு சென்னை போன விஷயம்? உன்கிட்ட சொன்னானா?...” கூர்மையான பார்வையில் எதிர்பார்ப்பை கொஞ்சம் கலக்கவிட்டு சுமங்கலியிடம் கேட்க,
“ஹ்ம் சொன்னான். கோபப்படாம கேளுங்க. அவனுக்கு இந்த சம்பந்தத்துல சுத்தமா விருப்பம் இல்லை. அவன் நேராவே அந்த பொண்ணுவீட்ல பிடிக்கலை இஷ்டமில்லைன்னு சொல்லிட்டு வந்துட்டான்...” தயங்கி சொல்ல,
“என்ன? இவனா என்ன முடிவெடுக்கிறது? அய்யா ஒரு இடம் சொன்னா அது நிச்சயம் இவனுக்கு ஏத்ததா தானே இருக்கும். இவனுக்கு ஏன் இது புரியமாட்டிக்கு? எதுவும் ஏட்டிக்கு போட்டி...” எரிச்சல் மிகுந்து இருந்தது குரலில்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க. நானே அவன்கிட்ட பேசறேன்...”
“என்ன பொறுமையா இருந்து என்ன செய்ய? அதான் செய்யவேண்டியதை செஞ்சிட்டு வந்துட்டாரே உன் சீமந்த புத்திரன். என்ன ஆனாலும் சரி. நான் அவனை மும்பைக்கு அனுப்பவே மாட்டேன்...” தோளில் கிடந்த துண்டை உதறிக்கொண்டு எரிச்சலாக சென்றார்.
திலகவதி வந்து சுமங்கலியிடம் என்னவென கேட்க நடந்ததை விவரித்தார் சுமங்கலி.
“இவங்க பஞ்சாயம் என்னைக்கு தீருமோ? அதுக்காக புள்ளைக்கு விருப்பமில்லாம அங்கன புடிச்சு தள்ளவா முடியும்? வாழப்போறவன் அவன் தானே?. நீ கண்டுக்காத...”
“அதுக்கில்லைக்கா, ஏற்கனவே ரிஷியோட பேர் ஒரு பொண்ணு விஷயத்துல அடிபட்ருச்சு. வீட்ல எல்லோருக்கும் இப்போ தெரியலைனாலும் எப்பவுமே தெரியாமலேவா இருந்துடும். அது அவனோட எதிர்காலத்தை பாதிக்குமோன்னு...”
கலக்கமாக கூறியவரின் மனக்கண்ணில் காவேரியின் துவேஷப்பார்வை வந்து இன்னும் அவரின் கலக்கத்தை அதிகமாக்கியது.
காவேரி மூலமாகத்தானே ரிஷி இன்னொரு பெண்ணுடன் பேசி இருந்தது தெரிந்தது. அதனால் அவருக்கு கொஞ்சம் பயமும் கூட.
“பயப்படறயாக்கும்? நம்ம புள்ளை அம்புட்டு விளக்கம் சொல்லியும் உனக்கு நம்பிக்கை இல்லாம போச்சா?...”
“நம்பிக்கை இல்லையா? என் பிள்ளை மேலையா? என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அக்கா? இந்த உலகத்துல என் புருஷனுக்கு அடுத்ததா நான் நம்பிக்கை வச்சிருக்கிற ஆள் ரிஷி தான்...”திடனாக கூற,
“அப்புறம் ஏன் இந்த கவலை? விட்டுத்தள்ளு. பொண்ணு வீட்ல ஒன்னும் இவனை வேண்டாம்ன்னு சொல்லலையே. இவன் தானே சொல்லிட்டு வந்துருக்கான்...” என்றவர்,
“ஆகாத போகாத விஷயத்தை நினச்சுட்டு இருக்காம இதை பெரியவர்கிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிப்போம். வீட்டுக்கு போனதும் பேசுவோம். வா பூசைக்கு நேரமாச்சு...” அவரை இழுத்துக்கொண்டு திலகவதி சென்றார்.
ஒரு மரநிழலில் நின்று மொபைலை நோண்டிக்கொண்டிருந்த ரிஷியை, “அண்ணா வாங்க சாமி கும்பிட. அய்யா கூட்டிட்டு வர சொன்னாங்க...”
ரிஷியின் சித்தப்பா சிகாமணியின் மகன் அன்புமணி வந்து அவனை அழைக்க அவனை முறைத்த ரிஷி,
“ஏண்டா எத்தனை தடவை சித்தப்பாவை அப்பான்னு கூப்பிடுன்னு சொல்லிருக்கேன். அதென்ன அய்யா?...” அதட்டல் குரலில் சொல்ல,
“தினேஷ் அண்ணா கூட சின்னைய்யான்னு சொல்றாரே அண்ணா...” என்றவன் ரிஷியின் முறைப்பில் அடங்கி,
“அதெல்லாம் சரிவராது அண்ணா. நீங்க வாங்க. உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க அய்யா...” ரிஷியின் கோபத்தை கண்டுகொள்ளாத குரலில் கூற,
“நீ என்னனுதான் வக்கீலுக்கு படிச்சியோ? நீயெல்லாம் ஒரு பேமஸ் லாயர். உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. நீ போ, எனக்கு ஒரு போன் கால் வரவேண்டியதிருக்கு. நானே வரேன்...” எனவும் அன்புமணி மனமில்லாமல் உள்ளே கிளம்பினான்.
அதே நேரம் காவேரி குடும்பமும் கோவிலுக்குள் நுழைய அங்கிருக்க பிடிக்காத ரிஷி கோவிலை விட்டு வெளியேறி அதை சுற்றி நடக்க ஆரம்பித்தான்.
என்றைக்கு தன் தாயையே அவள் உதாசீனம் செய்து கண்ணீரை வரவழைத்தாளோ அன்றிலிருந்து அவளின் முகத்தில் விழிப்பதற்கு கூட ரிஷிக்கு மனம் ஒப்பவில்லை.
அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தவன் பார்வையில் நேத்ரா விழ அவனின் சோர்ந்த மனதிற்கு ஏதோ இதம் சேர்த்தது அவளின் வளவள பேச்சு.
கோவிலை சுற்றி சிறு சிறு கடைகள் போடப்பட்டிருக்க அங்கே ஒவ்வொன்றை பற்றியும் கேட்டு அவர்களிடம் வாயடித்துக்கொண்டிருந்தாள்.
“இவ வாய் மட்டும் இல்லைனா...” என நினைத்து சிரித்துக்கொண்டவனுக்கு தன்னை நினைத்தே அவ்வளவு ஆச்சர்யம்.
“எப்போது பார்த்தாலும் எரிச்சலோடு அவளை திட்டி தீர்க்கும் தான் இன்று இலகுவாக அவளிடம் பேசிவிட்டேனே? அதுவும் சீண்டலுடன்...” என நினைத்தவன்,
“தக்காளி...” நானா பேர் வச்சேன் அவளுக்கு? அடடே ஆச்சர்யகுறி! தனக்கு தானே வியந்துகொண்டான் இதழ்களில் பூத்த குறுநகையோடு.
“ஹ்ம் அவளும் தக்காளி பழமாட்டம் தான் இருக்கிறா. கொஞ்சம் செவ செவன்னு. கொஞ்சம் லைட் பிங்க். ம்ஹூம் இவ கோபப்படும் போது இன்னொரு கலர். அது கொஞ்சம் ஆரஞ்ச் மிக்ஸிங்...” அத்தோடு தன் கற்பனைக்கு கடிவாளமிட்டவன்,
“ஹைய்யோடா ரிஷி, உனக்கு என்னாச்சு? நினைப்பெல்லாம் தறிகெட்டு ஓடுது. துரைக்கு தெரிஞ்சது துப்பாக்கிதான் மவனே. பேசாம வந்த வேலையை பார்...” புத்தி சத்தமில்லாமல் கத்தியை சொருக நிதர்சனத்தை உணர்ந்தான்.
ஆனாலும் நேத்ராவை பற்றிய சிந்தனையை விட்டு முழுவதுமாக வெளிவரமுடியவில்லை.
வீட்டிற்கு சென்றால் தேவையில்லாமல் ஏதாவது பேசி தலைவலி வந்துவிடும் என எண்ணியே அவன் நேராக கோவிலுக்கு வர உள்ளே நுழையும் போதே நேத்ராவை பார்த்துவிட்டான்.
இவளெங்கே இங்கே? என யோசனையோடு வர அதற்குள் அவள் நடத்திய களேபரமும் வாங்கிய மூக்குடைப்பும் கண்ணில் பட அடக்கமாட்டாமல் சிரிப்பும் பொத்துக்கொண்டு வந்தது.