Episode -3
எவ்வளவு நேரம் நின்றானோ தாத்தா அழைத்த பிறகே உள்ளே சென்று படியேற 'எங்கடா போற வந்து சூடா சாப்டுட்டு போ' ஆச்சி அழைக்க 'வெயில்ல நின்றது கசகசனு இருக்கு போய் சட்டுனு குளிச்சுட்டு வரேன்' என மேலேற ' காக்கா குளியலா சரி சரி வேகமா வா' 'கிண்டலு உன்ன வந்து கவனிச்சுக்றேன்' என மாடியேறி தன்னறை நோக்கி செல்ல சடன் பிரேக் அடித்து நின்றான் அங்கே வார்த்தைக்கும் வலிக்குமோ அளவு மென்குரலில் கேட்ட பாட்டில்
"தண்ணீரை கூசிக்கொண்டு
மெல்ல செல்லும்
பிம்பங்கள் நீயாகிறாய் எதிரே
என்னோடு காதல் வந்து
என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே
ஏனோ இன்று ஏனோ
நான் உந்தன் நானோ
நீயோ இல்லை நானோ
நாம் என்னும் நாமோ
தூண்டிலா நீ ஊஞ்சலா
தூரலா நீ காணலா
ப்ரத்யோக மௌனம்
நீ கொண்டு வந்தாய்
என் வாா்த்தை ஆனதே
இல்லாத ஊாில் இல்லாத போில்
நம் காதல் வாழுமே ஹோய் நம் காதல் வாழுமே"
பாடல் வந்த திசை நோக்கி சென்றவன் ஓர் அறை வாயிலில் நின்று பார்க்க உள்ளே காலையில் பார்த்த அதே பெண் கர்மசிரத்தையாக தன் மீன்விழிகளுக்கு மேலும் மெருகேற்ற ஐ- லைனர் வைத்து கொண்டு இருந்தால். இதழ்களோ பாடலை முனுமுனுத்து கொண்டு இருந்தது. ஒருவன் கதவருகே நின்று தன்னை பார்ப்பதை கூட பேதையவள் அறிய வில்லை . இளமஞ்சள் நிற குர்தியும் டார்க் பர்பிள் நிற ஸ்கட்டில் ஆங்காங்கே வெள்ளை பூக்கள் தெளித்தது போன்ற உடையில் நீள முடியை சிறு கிளிப்ல் அடக்கி காதில் வெள்ளை கற்கள் பதித்த ஸ்டார் கம்மல் கையில் மெல்லிய பிரேஸ்லெட் நெற்றியில் சிறு கறுப்பு பொட்டு என கீழே செல்ல தயாராகினாள்.
அவளில் அசைவு தெரியவும் சட்டென பக்கத்தில் உள்ள தன்னறைக்குள் நுழைந்து கொண்டான். கடகடவென குளித்து இலகுவாக இருக்கும் t.shirt pant அணிந்து கீழே உணவறை சென்றான். அவனுக்கு முன்பே அங்கே தாத்தா ஆச்சி மதி காத்திருந்தனர். தனக்கு ஒரு நாற்காலி இழுத்து அமர்ந்து கொண்டவன் ' என்ன ஆச்சி இன்னைக்கு spl.. நா எதிர்பாத்த எந்த வாசமும் கிட்சன்ல இருந்து வரலயை... ஏன் கிழவி சமைக்க ஆள் யாரயாச்சு வெச்சுடியா, ' அதெல்லாம் ஒன்னும் இல்ல இன்னைக்கு நா சமைக்கல அவ்வளவு தான் சொல்வேன்' 'சரி சொல்லு என்ன மெனு' ஆச்சி மெனுவை சொல்ல அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்த முகிலன் ' நா சுத்த நான்-வெஜிடேரியன் னு உனக்கு தெரியாது, Y ஆச்சி Y this kolaveri.என்ன பண்ணேன் உன்ன ஏன் இந்த சதி' ' டேய் ஓவர் ஆக்டிங் ஓடம்புக்கு ஆகாது.. என்ற பேத்தி ஆசையா செஞ்சுருக்கா சும்மா தொன தொனக்காம சாப்ட்டு பாத்துட்டு சொல்லு'.
சரி சரி போடு அப்டி என்ன உம்பேத்தி செஞ்சானு பாக்றேன் என மெல்ல முணுமுணுக்க அது சரியாக மதி காதிலும் விழுந்தது. வாழைஇலை போட்டு முதலில் நெய்யில் உருகும் கேசரி ,அவியல், கூட்டு, வறுவல் இட்டு சுடச்சுட சாதம் போட்டு சாம்பார் ஊற்றி சிறிது நெய் ஊற்றினார். ரொம்ப பேசாம சாப்ட்றா ... ஆச்சி இத விட்டுடோம் என சொல்லி நெத்திலி பொரிச்சதை எடுத்துக் கொடுத்தாள்...தந்த அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி உணவை உண்டான். உணவின் ருசி நாக்கில் நர்தணமாட கண்மூடி சுவையை அனுபவித்தபடி ' ஹம்ம் நல்லாத பண்ணிருக்கா கிழவி உம்பேத்தி பரவால சாப்ட முடியுது. நா கூட பயந்துடேன் எங்க பெரிய ஆஸ்பத்திரிக்கு போகனுமோனு ' என கிண்டலடிக்க.. மதியோ அப்பட்டமாய் முகிலனை முறைத்தாள். கொழுப்பு தான்டா உனக்கு வக்கனையா சாப்டு பேச்ச பாரு, பாக்க தான போறேன் உனக்கு வரவ எப்டி ஆக்குறானும் நீ அத எப்டி திணறிக்கிட்டு சாப்புறனு '
'போ கிழவி நான்லா பொண்ணு பாக்க போகும் போதே ஸ்டவ்-அ கையோட கொண்டு போய் சமைக்க வெச்சு தான் பொண்ணே ஸெலக்ட் பண்ணுவேன்' எப்படி ஐயாவோட ஐடியா!!.