Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara 4 - Precap

Advertisement

AshrafHameedaT

Administrator
Check out the precap for the 4th episode of "Kadhal Valam Vara"


Please subscribe and share our channel - Mallika Manivannan Publications

Not so welcoming responses on the new venture, we welcome every response though. It is a change from the usual but a step towards the growth. Any change meets resistance majorly before being accepted. Hopefully, we will breeze through this one too soon.

We accept about the glitches in the video, not really a well-made one but just a maiden step. We assure you that we shall bring better engaging PRECAP VIDEOS in the future. The text version of the same will be posted a day later and the following is the same of the above video.

Thanking you all, seeking your support, love and co-operation as always.
---------------------------------------------------------

Part - 1

“கரண்ட் பிரச்சனை தம்பி இந்த மாசமாவே இருக்குறது... இப்போ அதிகமா இருக்கு, இப்போ நமக்கு கொள்முதல் அதிகம், இப்போ பிரச்சனையாச்சுன்னா வேலை தாமதமாகுது”

“அந்த கரண்ட் ஆபிசுல வந்திருக்குற புது ஆபிசரு ஆத்மன் ஐயாக்கு வேண்டப்பட்டவர்னு ஒரு சேதி!”

“அப்படியா... நல்லா தெரியுமா?”

“அதுவும் தெரியலை... பேச்சு தான்!”

“சரியா தெரிஞ்சு சொல்லுங்க... என்னன்னு பார்த்துடலாம் , இவ்வளவு நாளா இல்லாம இப்போ என்ன புதுசா?”
“இப்ப சில மாசம் முன்ன உங்க கல்யாணம் உங்க அத்தை பொண்ணோட ன்னு அவர் காதுக்கு போயிருக்கு போல...” என தயங்கி சொல்ல

Part 2

“இவ்வளவு நாளா பெரியப்பா வார்த்தைக்காக விட்டேன், அப்போவும் நாம திருப்பி அடிக்கறோம்னு தெரிஞ்ச பிறகு தான் அவன் விட்டான். இப்போ மட்டும் இது அவனோட வேலையா இருக்கட்டும் திருப்பி எல்லாம் அடிக்க மாட்டேன்... நான் புதுசா அடிக்கறேன்” என்று சொன்ன ராஜராஜனின் முகத்தினில் இருந்த ரௌத்திரம்!

Part 3

"என்ன கிழவி பண்ணுது? என்றான் அக்கறையாய்

“தெரியலை உடம்புக்கு என்னவோ பண்ணுச்சு, அதான் உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்” என்றார்

“ஏன்.. உன்கூட உன் பேத்தி இருப்பாளே?”

“சொல்லலைய்யா! சொன்னா பயந்துக்குமோ என்னவோன்னு...” என

“அதெல்லாம் பயப்படற ஆள் கிடையாது. உன்னை உடனே ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்கும், நீ வா...நாம போகலாம்” என்றவன்...

Part 4

“காய்ச்சல் இருக்கு... வேற என்ன பண்ணுது?” என்றான்

“வயிறு வலிக்குது... வயிதாளையும் போகுது...” என

“சாப்பிட்டது சேராம இருக்கும், வா ஒரு குளுகோஸ் போட்டா சரியாகிடும்” என்றான்

அவன் கைபிடித்து எழுப்ப எழுப்பவே மயங்கி சரிய…பயந்து விட்டான்


Part 5


“ராஜா அவ கிட்ட சொல்லனும்டா. காலையில உன்னை பார்க்க போறேன் சொல்லி வந்தேன்...புள்ள பயந்துக்கும்… என்ன இன்னும் காணோம்னு” என்று சொல்ல

“அதெல்லாம் தகவல் சொல்ல சொல்லிட்டேன்”

Part 6

“வயசாச்சுன்னு உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? வீட்டுக்கு வந்து மருமகள்களை ஏவி வேலை வாங்கிட்டு சௌகரியமா உட்கார்ந்து இருக்காமா ஏம்மா இப்படி பண்றீங்க?” என்று கத்த,

“என்னம்மா நீங்க அப்பா சில வருஷமா படுக்கையில இருந்தார் ...அவரை கவனிக்கவே முழு நேரமும் இருந்தீங்க சிரமப்பட்டீங்க...

இப்போ ஹாயா இருக்குறதை விட்டு அந்த பொண்ணோட போய் இருக்கீங்க அங்க வேலைக்கும் ஆள் இல்லை நீங்களே செய்யறீங்க” என

Part 7

இதெல்லாம் வாசலில் நின்ற அங்கையர்கண்ணி கேட்டிருந்தாள்.... என்னவோ இவர்கள் பேச்சுக்களை எல்லாம் கேட்டது அப்படி ஒரு வருத்தமாய் இருந்தது,

Part 8

அவள் வெளியில் நிற்ப்பதை அப்போது தான் ராஜராஜன் பார்க்க,
“உள்ள வா” என்றான்

அப்போது தான் பார்த்த சுவாமிநாதன் அவனை முறைக்க, “அவ பாட்டியை அவ பார்க்க வந்திருக்கா...” என்று சொல்ல அவர் வெளியில் சென்று நின்று கொள்ள அவள் உள்ளே வந்தாள்.


எண்ணமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
 
Last edited:
Hi
படிப்பது தான் நிறைவு..
வீடியோல படிச்சது முதல் அனுபவம்...
ஆனால் நிறைய இருக்கு...
ஆத்மன் இன்னுமா பழி வாங்குறான் :eek: :eek:
பாட்டிக்கு உடம்பு முடியல...
பேத்தி ராஜா வீடு தேடி வந்தாச்சு.
 
Last edited:
இது ஒரு முறை படிச்சா பத்தாது போலவே .......

Text படிச்சா மாதிரி இல்லையே எனக்கு :unsure::unsure::unsure:
 
Last edited:
அங்கையை உள்ளே கூப்பிட்டாச்சு......
மாமா வெளியே போய்ட்டாரு........

பாட்டி பசங்களோட வந்தாச்சு......
அப்போ அங்கைக்கு துணை யாரு???
மாமா வீட்டில் தானா???
 
Last edited:
Top