கரிசல் 16:
“கையைப் பிடிச்சா..நீ அடிப்பியா..?” என்று முத்துவின் அம்மா கேட்க...
“கண்டிப்பா அடிப்பேன்...!” என்றான் முகிலன் இப்போதும் உறுதியாக.
“கேட்டுக்கங்க நியாயத்தை...! எல்லார் முன்னாடியும் தான சொல்றான்..!” என்று அவர் அங்கிருந்தவர்களை நியாயத்திற்கு அழைக்க...
“என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்பு முகிலா..!” என்று அங்கிருந்தவர்கள் அவனுக்கு அறிவுரை வழங்க....
“என்ன நீங்க..? எங்க மருமகப் பிள்ளையைத் தப்பு சொல்றிங்க..? இதுக்கெல்லாம் காரணமானவ..அங்க சிவனேன்னு இருக்கா...இங்க என்னடான்னா...முகிலன் பண்ணது தான் தப்புங்கிற மாதிரி பேசுறிங்க..!” என்று திலகா பிரச்சனையை ஊத்தி விட...
தன் அம்மா சண்டை போடுவதைக் கண்டு அந்த இடத்திற்கு முத்துவும் வந்தான். அவன் வந்தது முகிலனுக்கு அறவே பிடிக்கவில்லை.
“அந்த வண்ண மதியைக் கூப்பிட்டுக் கேளுங்க...!” என்று அரசியும் எடுத்துக் கொடுக்க...
“தேவையில்லை..இதுல எதுக்கு அவளை இழுக்குறிங்க..! அவ சின்ன பொண்ணு...!” என்றான் முகிலன்.
“யாரு அவளா சின்ன பொண்ணு..அவ ஆளும்,நடையும்,மேனா மினுக்கித் தனமும்....நாங்களும் பார்த்துகிட்டு தான இருக்கோம்..!”
என்று திலகா சொல்ல...அதுவரை அவளை நல்ல விதமாய் நினைத்தவர்களுக்கு கூட லேசாக சந்தேகம் வர ஆரம்பித்தது.
“மதியை அப்படி பேசாதிங்க அண்ணி..!” என்று மலரும் பரிந்து கொண்டு வர...அவர்கள் மதிக்கு ஆதரவாய் பேச பேச...திலகாவிற்கு உள்ளே கனன்று கொண்டே இருந்தது.அவர்களிடம் மதி நல்ல பெயர் வாங்கிவிட்டால்.. அவருடைய திட்டம் தவிடு பொடியாகி விடும் என்ற கவலை அவருக்கு.
“அம்மா..நீ வாம்மா..!” என்று முத்து அவன் அம்மாவை இழுக்க....அவரும் கொஞ்சம் மனம் இறங்கி செல்லலாம் என நினைக்க போக...
“இதென்ன..? கிடைச்ச சந்தர்ப்பம் இப்படி வீணாப் போகப் போகுதே..! விடக்கூடாதே...!” என்று நினைத்த திலகா....
“என்ன முத்து..முகம் எல்லாம் இப்படி வீங்கிப் போயிருக்கு...?” என்று ஒன்றும் அறியாதவராய் கேட்டு வைக்க...அதுவரை கொஞ்சம் மனம் மாறி இருந்த அவனுடைய அம்மாவுக்கு...மீண்டும் சாமி ஏறிக் கொண்டது.
“முகிலன் என் பையனை அடிச்சதுக்கு மன்னிப்புக் கேட்டாதான்....நாங்க இங்க இருந்து நகருவோம்..!” என்று அவரும் நின்று விட்டார்.
“நான் எந்த தப்பும் பண்ணலை..என்னால மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது..?” என்று தெனாவெட்டாய் நின்றான் முகிலன்.
“மன்னிப்பு தான முகிலா..கேட்டுடு...!” என்று மலரும் சொல்ல...
“அம்மா..! நான் தான் தப்பு பண்ணலையே..! ரெண்டு மூணு தடவை சொன்னேன்..அவன் கேட்கலை..! அப்பறம் தான் வாங்கிக் கட்டிகிட்டான்..!” என்றான்.
தான் அடிவாங்கியது அனைவருக்கும் தெரிந்ததையே அவமானமாய் உணர்ந்தான் முத்து.
“நான் ஒரு தப்பும் செய்யலை..வேணுமின்னா மதிகிட்டையே கேட்டுப்பாருங்க..!” என்று முத்துவும் வாயை விட..
“வயசு பிள்ளையை அப்படி எல்லாம் கூட்டிட்டு வந்து கேட்க முடியாது..!” என்றான் முகிலன்.
“உன் மேல தான் தப்பு இல்லையே..? அப்பறம் ஏன் பயப்படுற..?” என்றான் முத்து.
“யாரு நான் பயப்படுறேன்...! நீ பார்த்த...வாங்குன அடி மறந்து போய்டுச்சு போல...!” என்றான் முகிலன்.
“மதி வந்தா தான உண்மை தெரியும்..!” என்றான் முத்து.எப்படியும் மதி தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில்.
“வேண்டாம்...மதியை இங்க எல்லாம் கூப்பிட வேண்டாம்...நான் மன்னிப்பே கேட்குறேன்..!” என்று முகிலன் சொல்ல...
“நீ எதுக்கு மருமவனே மன்னிப்பு கேட்கணும்...! அவ வந்து சொன்னா பிரச்சனை முடிய போகுது..” என்று அரசியும் சொல்ல..
“உங்க வேலையைப் பாருங்க முதல்ல...ஒண்ணுமில்லாத பிரச்னையை பெரிசாக்குறதே உங்களுக்கு வேலையா போய்டுச்சு..” என்றான்.
“பார்த்திங்களா மதினி...நான் இவனுக்கு ஒசரம் பேசுனா..என்னையவே இப்படி பேசிப்புட்டான்..!” என்று அரசி சொல்ல...
“என்ன முகிலா..அத்தைகிட்ட போய் அப்படி பேசுற..?” என்று மலர் யாருக்குப் பேசுவது என்று தெரியாமல் முழிக்க...அதற்குள் பிரச்சனை பார்வதியின் காதுகளை எட்டி விட்டது.
அவர் காதில் வதந்தியாய் பரவிய விஷயங்கள் விழ..வேகமாக வீட்டிற்குள் சென்றவர்...”மதிஈஈ...” என்று கத்தினார்.
“அம்மா...!” என்றபடி அவள் வர..
“என்ன நடந்தது ரோட்ல...?” என்றார் கோபமாய்.
“ஒன்னும் நடக்கலைமா...” என்று சொல்லி முடிப்பதற்குள்..அங்கிருந்த குச்சி விளக்கு மாரை எடுத்தவர் அவளை அடித்து விளாசித்தள்ள...
“அம்மா..விடும்மா..வலிக்குதும்மா...விடும்மா..வலிக்குதும்மா...!” என்று அவள் தன் அம்மாவைத் தடுக்க...தன் பிள்ளையை ஒருத்தர் இப்படி சொல்லிவிட்டாரே என்ற கோபம் அவர் கண்ணை மறைத்து விட்டது.
“எத்தனை தடவை சொன்னேன்..! அந்த முத்து பய கூட பேசாத, பேசாதன்னு...கேட்டியா...? இப்ப பாரு ஊறுதுன்னா பறக்குதுன்னு சொல்ற ஊர்ல இருந்துகிட்டு இந்த பேரு உனக்குத் தேவையா..தேவையா..?” என்று அவளை வெளுத்து வாங்க...
“அம்மா..நான் ஒண்ணுமே பண்ணலம்மா...விட்டுடுங்கம்மா..!” என்று அவள் தேம்பித் தேம்பித் அழ...அவர் விட்ட பாடில்லை.
எங்கிருந்து தான் வந்தானோ முகிலன் தெரியவில்லை.அசுர வேகத்தில் உள்ளே வந்தான்.
“அத்தை..என்ன பண்றிங்க..? விடுங்க முதல்ல..விடுங்கன்னு சொல்றேன்ல...!” என்றபடி அவரைத் தடுக்க...
“மணி மாமா..மணி மாமா...! அம்மாகிட்ட சொல்லுங்க மாமா...நான் ஒன்னும் பண்ணலைன்னு..!” என்று அவனின் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டவள்..அவன் சட்டையை இறுகப் பிடிக்க...அந்த நிமிடம் முகிலன் செத்தே விட்டான்.
அவளின் கண்ணீர்..அவனின் முதுகுப்புற சட்டையை முழுதாய் நனைக்க...அந்த கண்ணீருக்கு தானும் ஒரு காரணம் ஆகிவிட்டோம் என்று உள்ளுக்குள் செத்தே விட்டான்.
“நீ விலகு முகிலா..இவளுக்கு குளிர் விட்டுப் போய்டுச்சு...! எத்தனை தடவை சொன்னேன்..! கேட்டாளா..?” என்று அவர் மூச்சு வாங்க...
“அவமேல எந்த தப்பும் இல்லை...! நான் சொல்றேன்ல விடுங்க..!” என்று அவன் சொல்ல...
விளக்கமாரை கீழே போட்டவர் ஓய்ந்து அமர்ந்து அழத் தொடங்கினார்.
“இவ படிச்சு...நல்ல வேலைக்கு போவான்னு நான் இருந்தா....இப்படி பேரு வாங்கிட்டு வந்து நிக்குறாளே..!” என்று பார்வதி தலையில் கைவைத்து அழ..
“இப்ப என்ன நடந்து போய்டுச்சு...இதெல்லாம் ஒரு விஷயமா..எனக்கும் அவனுக்கும் தான் பிரச்சனை...இதுல மதியோட தப்பு எங்க இருக்கு..?” என்று முகிலன் புரியாமல் கேட்க....
அப்போதுதான்..அந்த விஷயம் ஊருக்குள் எப்படி பரவி இருக்கிறது என்றே அவனுக்குத் தெரிந்தது.தெரிந்த நிமிடம் துடித்து விட்டான் முகிலன்.
மதியை தன் பின்னால் இருந்து இழுக்க...அவளோ பயத்துடன் அவன் முதுகுப் பக்கமே ஒண்டினாள்.
அவளை இழுத்துக் கொண்டு வெளியே சென்றவன்...வெளியில் இருந்த மற்றவர்களின் முன்னால் நிறுத்தினான்.அவன் வந்த உடனேயே...அந்த கூடமும் பின்னே வந்திருந்தது.முத்துவும் அவன் அம்மாவும் அவர்கள் வீட்டுத் திண்ணையில் கோபமாய் இருக்க...
“யாரு மதியை தப்பா பேசினது..? சொல்லுங்க முத்து கூட வச்சு யார் பேசினது..?” என்றான் கோபமாய்.
“என்ன மருமவனே...இல்லாததையா பேசிட்டாங்க..! நெருப்பில்லாம புகையாது.இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் விஷயம் வெளிய தெரிஞ்சிருக்கும்..!” என்று திலகா சொல்ல...
“வாயை மூடுங்க..!” என்றான்.
அதுவரை அமைதியாக இருந்த முத்துவின் அம்மா...வேகமாய் எழுந்து வந்தவர்...
“மதியை யாரு தப்பா பேசினது.நான் முகிலன் ஏன் என் மகனை அடிச்சான்னு கேட்க தான் போனேன்..! மதியைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்..அவ புடம் போட்ட தங்கம்..!” என்று அவரும் வக்காலத்து வாங்க...
அவரின் பேச்சில் பார்வதியும் வெளியே வர...
“இங்க பாருங்க மதினி...இவுக இவ்வளவு பேசினதுக்கு அப்பறம்....சும்மா இருக்க கூடாது...மதி பேசாம எனக்கு மருமகளா வந்துடுடி..அத்தை நான் நல்லா பார்த்துக்கறேன்..! பேசாம முத்துவைக் கட்டிக்க..!” என்றார் ஒரே போடாய்.
“என்னது கட்டிக்கிறதா...உங்க பையன் வயசு என்னன்னு தெரியுமா...? “ என்று முகிலன் நக்கலாய் கேட்க..
“நல்லா தெரியுமே..அந்த காலத்துல இவன் அப்பாவுக்கு கூட பதினெட்டு வயசுல தான் கல்யாணம்..அவரு கல்யாணம் பண்ணலை...இதோ இவனை நாங்க பெக்கலை..?” என்று அவர் கேட்க...
“நான் கல்யாணம் எல்லாம் பண்ண மாட்டேன்...!” என்றாள் மதி முதன் முறையாக வாய் திறந்து..!”
“நீ சின்ன பிள்ளை...பேசாம இரு..நாங்க பேசிக்கிறோம்..! நீங்க சொல்லுங்க பார்வதி மதினி...மதியை பேசாம முத்துக்கு குடுத்துடுங்க...பையன் இல்லாத வீட்டுக்கு உங்களுக்கு பையனா இருப்பான்..!” என்றார் அவர்.
“கையைப் பிடிச்சா..நீ அடிப்பியா..?” என்று முத்துவின் அம்மா கேட்க...
“கண்டிப்பா அடிப்பேன்...!” என்றான் முகிலன் இப்போதும் உறுதியாக.
“கேட்டுக்கங்க நியாயத்தை...! எல்லார் முன்னாடியும் தான சொல்றான்..!” என்று அவர் அங்கிருந்தவர்களை நியாயத்திற்கு அழைக்க...
“என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்பு முகிலா..!” என்று அங்கிருந்தவர்கள் அவனுக்கு அறிவுரை வழங்க....
“என்ன நீங்க..? எங்க மருமகப் பிள்ளையைத் தப்பு சொல்றிங்க..? இதுக்கெல்லாம் காரணமானவ..அங்க சிவனேன்னு இருக்கா...இங்க என்னடான்னா...முகிலன் பண்ணது தான் தப்புங்கிற மாதிரி பேசுறிங்க..!” என்று திலகா பிரச்சனையை ஊத்தி விட...
தன் அம்மா சண்டை போடுவதைக் கண்டு அந்த இடத்திற்கு முத்துவும் வந்தான். அவன் வந்தது முகிலனுக்கு அறவே பிடிக்கவில்லை.
“அந்த வண்ண மதியைக் கூப்பிட்டுக் கேளுங்க...!” என்று அரசியும் எடுத்துக் கொடுக்க...
“தேவையில்லை..இதுல எதுக்கு அவளை இழுக்குறிங்க..! அவ சின்ன பொண்ணு...!” என்றான் முகிலன்.
“யாரு அவளா சின்ன பொண்ணு..அவ ஆளும்,நடையும்,மேனா மினுக்கித் தனமும்....நாங்களும் பார்த்துகிட்டு தான இருக்கோம்..!”
என்று திலகா சொல்ல...அதுவரை அவளை நல்ல விதமாய் நினைத்தவர்களுக்கு கூட லேசாக சந்தேகம் வர ஆரம்பித்தது.
“மதியை அப்படி பேசாதிங்க அண்ணி..!” என்று மலரும் பரிந்து கொண்டு வர...அவர்கள் மதிக்கு ஆதரவாய் பேச பேச...திலகாவிற்கு உள்ளே கனன்று கொண்டே இருந்தது.அவர்களிடம் மதி நல்ல பெயர் வாங்கிவிட்டால்.. அவருடைய திட்டம் தவிடு பொடியாகி விடும் என்ற கவலை அவருக்கு.
“அம்மா..நீ வாம்மா..!” என்று முத்து அவன் அம்மாவை இழுக்க....அவரும் கொஞ்சம் மனம் இறங்கி செல்லலாம் என நினைக்க போக...
“இதென்ன..? கிடைச்ச சந்தர்ப்பம் இப்படி வீணாப் போகப் போகுதே..! விடக்கூடாதே...!” என்று நினைத்த திலகா....
“என்ன முத்து..முகம் எல்லாம் இப்படி வீங்கிப் போயிருக்கு...?” என்று ஒன்றும் அறியாதவராய் கேட்டு வைக்க...அதுவரை கொஞ்சம் மனம் மாறி இருந்த அவனுடைய அம்மாவுக்கு...மீண்டும் சாமி ஏறிக் கொண்டது.
“முகிலன் என் பையனை அடிச்சதுக்கு மன்னிப்புக் கேட்டாதான்....நாங்க இங்க இருந்து நகருவோம்..!” என்று அவரும் நின்று விட்டார்.
“நான் எந்த தப்பும் பண்ணலை..என்னால மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது..?” என்று தெனாவெட்டாய் நின்றான் முகிலன்.
“மன்னிப்பு தான முகிலா..கேட்டுடு...!” என்று மலரும் சொல்ல...
“அம்மா..! நான் தான் தப்பு பண்ணலையே..! ரெண்டு மூணு தடவை சொன்னேன்..அவன் கேட்கலை..! அப்பறம் தான் வாங்கிக் கட்டிகிட்டான்..!” என்றான்.
தான் அடிவாங்கியது அனைவருக்கும் தெரிந்ததையே அவமானமாய் உணர்ந்தான் முத்து.
“நான் ஒரு தப்பும் செய்யலை..வேணுமின்னா மதிகிட்டையே கேட்டுப்பாருங்க..!” என்று முத்துவும் வாயை விட..
“வயசு பிள்ளையை அப்படி எல்லாம் கூட்டிட்டு வந்து கேட்க முடியாது..!” என்றான் முகிலன்.
“உன் மேல தான் தப்பு இல்லையே..? அப்பறம் ஏன் பயப்படுற..?” என்றான் முத்து.
“யாரு நான் பயப்படுறேன்...! நீ பார்த்த...வாங்குன அடி மறந்து போய்டுச்சு போல...!” என்றான் முகிலன்.
“மதி வந்தா தான உண்மை தெரியும்..!” என்றான் முத்து.எப்படியும் மதி தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில்.
“வேண்டாம்...மதியை இங்க எல்லாம் கூப்பிட வேண்டாம்...நான் மன்னிப்பே கேட்குறேன்..!” என்று முகிலன் சொல்ல...
“நீ எதுக்கு மருமவனே மன்னிப்பு கேட்கணும்...! அவ வந்து சொன்னா பிரச்சனை முடிய போகுது..” என்று அரசியும் சொல்ல..
“உங்க வேலையைப் பாருங்க முதல்ல...ஒண்ணுமில்லாத பிரச்னையை பெரிசாக்குறதே உங்களுக்கு வேலையா போய்டுச்சு..” என்றான்.
“பார்த்திங்களா மதினி...நான் இவனுக்கு ஒசரம் பேசுனா..என்னையவே இப்படி பேசிப்புட்டான்..!” என்று அரசி சொல்ல...
“என்ன முகிலா..அத்தைகிட்ட போய் அப்படி பேசுற..?” என்று மலர் யாருக்குப் பேசுவது என்று தெரியாமல் முழிக்க...அதற்குள் பிரச்சனை பார்வதியின் காதுகளை எட்டி விட்டது.
அவர் காதில் வதந்தியாய் பரவிய விஷயங்கள் விழ..வேகமாக வீட்டிற்குள் சென்றவர்...”மதிஈஈ...” என்று கத்தினார்.
“அம்மா...!” என்றபடி அவள் வர..
“என்ன நடந்தது ரோட்ல...?” என்றார் கோபமாய்.
“ஒன்னும் நடக்கலைமா...” என்று சொல்லி முடிப்பதற்குள்..அங்கிருந்த குச்சி விளக்கு மாரை எடுத்தவர் அவளை அடித்து விளாசித்தள்ள...
“அம்மா..விடும்மா..வலிக்குதும்மா...விடும்மா..வலிக்குதும்மா...!” என்று அவள் தன் அம்மாவைத் தடுக்க...தன் பிள்ளையை ஒருத்தர் இப்படி சொல்லிவிட்டாரே என்ற கோபம் அவர் கண்ணை மறைத்து விட்டது.
“எத்தனை தடவை சொன்னேன்..! அந்த முத்து பய கூட பேசாத, பேசாதன்னு...கேட்டியா...? இப்ப பாரு ஊறுதுன்னா பறக்குதுன்னு சொல்ற ஊர்ல இருந்துகிட்டு இந்த பேரு உனக்குத் தேவையா..தேவையா..?” என்று அவளை வெளுத்து வாங்க...
“அம்மா..நான் ஒண்ணுமே பண்ணலம்மா...விட்டுடுங்கம்மா..!” என்று அவள் தேம்பித் தேம்பித் அழ...அவர் விட்ட பாடில்லை.
எங்கிருந்து தான் வந்தானோ முகிலன் தெரியவில்லை.அசுர வேகத்தில் உள்ளே வந்தான்.
“அத்தை..என்ன பண்றிங்க..? விடுங்க முதல்ல..விடுங்கன்னு சொல்றேன்ல...!” என்றபடி அவரைத் தடுக்க...
“மணி மாமா..மணி மாமா...! அம்மாகிட்ட சொல்லுங்க மாமா...நான் ஒன்னும் பண்ணலைன்னு..!” என்று அவனின் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டவள்..அவன் சட்டையை இறுகப் பிடிக்க...அந்த நிமிடம் முகிலன் செத்தே விட்டான்.
அவளின் கண்ணீர்..அவனின் முதுகுப்புற சட்டையை முழுதாய் நனைக்க...அந்த கண்ணீருக்கு தானும் ஒரு காரணம் ஆகிவிட்டோம் என்று உள்ளுக்குள் செத்தே விட்டான்.
“நீ விலகு முகிலா..இவளுக்கு குளிர் விட்டுப் போய்டுச்சு...! எத்தனை தடவை சொன்னேன்..! கேட்டாளா..?” என்று அவர் மூச்சு வாங்க...
“அவமேல எந்த தப்பும் இல்லை...! நான் சொல்றேன்ல விடுங்க..!” என்று அவன் சொல்ல...
விளக்கமாரை கீழே போட்டவர் ஓய்ந்து அமர்ந்து அழத் தொடங்கினார்.
“இவ படிச்சு...நல்ல வேலைக்கு போவான்னு நான் இருந்தா....இப்படி பேரு வாங்கிட்டு வந்து நிக்குறாளே..!” என்று பார்வதி தலையில் கைவைத்து அழ..
“இப்ப என்ன நடந்து போய்டுச்சு...இதெல்லாம் ஒரு விஷயமா..எனக்கும் அவனுக்கும் தான் பிரச்சனை...இதுல மதியோட தப்பு எங்க இருக்கு..?” என்று முகிலன் புரியாமல் கேட்க....
அப்போதுதான்..அந்த விஷயம் ஊருக்குள் எப்படி பரவி இருக்கிறது என்றே அவனுக்குத் தெரிந்தது.தெரிந்த நிமிடம் துடித்து விட்டான் முகிலன்.
மதியை தன் பின்னால் இருந்து இழுக்க...அவளோ பயத்துடன் அவன் முதுகுப் பக்கமே ஒண்டினாள்.
அவளை இழுத்துக் கொண்டு வெளியே சென்றவன்...வெளியில் இருந்த மற்றவர்களின் முன்னால் நிறுத்தினான்.அவன் வந்த உடனேயே...அந்த கூடமும் பின்னே வந்திருந்தது.முத்துவும் அவன் அம்மாவும் அவர்கள் வீட்டுத் திண்ணையில் கோபமாய் இருக்க...
“யாரு மதியை தப்பா பேசினது..? சொல்லுங்க முத்து கூட வச்சு யார் பேசினது..?” என்றான் கோபமாய்.
“என்ன மருமவனே...இல்லாததையா பேசிட்டாங்க..! நெருப்பில்லாம புகையாது.இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் விஷயம் வெளிய தெரிஞ்சிருக்கும்..!” என்று திலகா சொல்ல...
“வாயை மூடுங்க..!” என்றான்.
அதுவரை அமைதியாக இருந்த முத்துவின் அம்மா...வேகமாய் எழுந்து வந்தவர்...
“மதியை யாரு தப்பா பேசினது.நான் முகிலன் ஏன் என் மகனை அடிச்சான்னு கேட்க தான் போனேன்..! மதியைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்..அவ புடம் போட்ட தங்கம்..!” என்று அவரும் வக்காலத்து வாங்க...
அவரின் பேச்சில் பார்வதியும் வெளியே வர...
“இங்க பாருங்க மதினி...இவுக இவ்வளவு பேசினதுக்கு அப்பறம்....சும்மா இருக்க கூடாது...மதி பேசாம எனக்கு மருமகளா வந்துடுடி..அத்தை நான் நல்லா பார்த்துக்கறேன்..! பேசாம முத்துவைக் கட்டிக்க..!” என்றார் ஒரே போடாய்.
“என்னது கட்டிக்கிறதா...உங்க பையன் வயசு என்னன்னு தெரியுமா...? “ என்று முகிலன் நக்கலாய் கேட்க..
“நல்லா தெரியுமே..அந்த காலத்துல இவன் அப்பாவுக்கு கூட பதினெட்டு வயசுல தான் கல்யாணம்..அவரு கல்யாணம் பண்ணலை...இதோ இவனை நாங்க பெக்கலை..?” என்று அவர் கேட்க...
“நான் கல்யாணம் எல்லாம் பண்ண மாட்டேன்...!” என்றாள் மதி முதன் முறையாக வாய் திறந்து..!”
“நீ சின்ன பிள்ளை...பேசாம இரு..நாங்க பேசிக்கிறோம்..! நீங்க சொல்லுங்க பார்வதி மதினி...மதியை பேசாம முத்துக்கு குடுத்துடுங்க...பையன் இல்லாத வீட்டுக்கு உங்களுக்கு பையனா இருப்பான்..!” என்றார் அவர்.