கரிசல் 19:
நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து அனைவரும் சாப்பிட்டு முடிக்க, மீண்டும் ஒவ்வொருவராய் மதியின் அருகில் வந்து அமர்ந்தனர்.
“என்னப்பா...? எல்லாரும் சாப்பிட்டாச்சுல? நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ணை அழைச்சுட்டு கிளம்புங்கப்பா..!” என்று பெரியவர் ஒருவர் சொல்ல...
“ஆமாம்..! கிளம்புங்க...!” என்றபடி அனைவரும் கிளம்ப ஆயத்தமாயினர். அதற்கு முன்னாடியே முகிலனைக் கிளம்ப சொல்ல, அவனோ மனமே இல்லாமல் கிளம்பி சென்றான்.
கிராமத்தில் மண்டப்பத்தில் வைத்து திருமணம் செய்வது எல்லாம் அரிது. முதல் நாள் இரவே பெண்ணை அழைத்துக் கொண்டு போய், மாப்பிள்ளை வீட்டில் அல்லது மாமன், மச்சினன் வீட்டில் தங்க வைப்பது வழக்கம்.
இங்கு மதியும், முகிலனும் ஒரே ஊர் என்பதால், அதிக ஏற்பாடு தேவையில்லாமல் போனது. நடந்தே சென்று விடும் தூரம் என்பதால், அனைவரும் அவளை அழைத்து செல்ல தயாராகினர்.
மதிக்கு அப்போதே அழுகை துவங்கியது. நடப்பது அவளுக்கு புதிதாய் இருந்தது. இது நாள் வரையில் மற்றவர்கள் வீட்டில் அவள் தங்கியதில்லை. இனியும் அப்படி இருக்கமுடியுமா..? இனி முகிலனின் வீடு தான் அவள் வீடு..! என்று மனதில் பதிய வைத்தனர் அனைவரும் சேர்ந்து.
மதியின் கண்கள் கலங்கியிருந்ததைப் பார்த்த பார்வதிக்கும் கண்கள் கலங்க, விவரம் தெரியாத சுமதியோ அழுதே விட்டாள்.
“எல்லாரும் சேர்ந்து எங்க அக்காவை எங்க கூட்டிட்டு போகப் போறீங்க..?” என்று அவள் சிறுபிள்ளைத்தனமாய் கேள்வி கேட்க,
“உங்க அக்காவுக்கு காலையில கல்யாணம். அதனால உங்க அத்தை வீட்டுக்கு தான் கூட்டிட்டு போறோம்..!” என்றனர்.
“எங்க அக்கா எப்ப திரும்பி வருவா..?” இது சுமதி.
“உங்க அக்கா இனி இங்க எல்லாம் வர மாட்டா..! இனி உங்க மலர் அத்தை வீட்ல தான் இருப்பா..!” இது உறவினர்கள்.
“அப்ப நான் எப்படி தனியா இருக்குறது..?” இது சுமதி.
“அது பழகிடும் சுமதி. உங்க அக்கா பக்கத்துலதான் இருக்க போறா..! நீ நினைச்சா உடனே போய் பார்த்துக்கலாம்..!” என்று சொல்லி புரிய வைத்தனர்.
“அதெல்லாம் வேண்டாம். எங்களுக்கு தான் வீடு இருக்குள்ளா..? எங்க அக்கா இங்கயே இருக்கட்டும். நான் அக்காவை விட மாட்டேன்..!” என்று சுமதி அவளைக் கட்டிக் கொண்டு அழ...
வயதில் முதிர்ச்சியும், பக்குவமும் இல்லாத மதியும் தங்கையுடன் சேர்ந்து அழுதாள்.
“என்ன மதி..? அவதான் சின்ன பிள்ளை..! நீயும் சேர்ந்து அழுதா, அவ இன்னமும் அழுவா..?” என்று உறவினர்கள் கடிந்து கொள்ள,
“சுமதி..! அக்காவை விடு..!” என்று பார்வதி கொஞ்சம் அதட்டலாய் சொல்ல, அம்மாவிற்கு பயந்து, மதியை விட்டு விலகினாள் சுமதி.
எதற்கும் கலங்காத மனோகரனுக்கு கூட கொஞ்சம் கண்கள் கலங்கியது.
“குத்துவிளக்க எடுத்து கைல குடுங்க..! நேரம் ஆச்சு..” என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல, மதியின் கையில் ஒரு குத்து விளக்கு கொடுக்கப்பட்டது.
சரியாக அந்த சமயத்தில் வந்து சேர்ந்தனர் பார்வதியின் தங்கையும், அவரின் மகள் வினோதினியும்.
“என்ன இவ்வளவு நேரம் கழிச்சு வரீங்க..?” என்று பார்வதி மனந்தாங்களுடன் கேட்க,
“அக்கா...! நாங்க சேலத்துக்கு எப்பவோ வந்துட்டோம்..! உங்க ஊருக்கு பஸ்சும் கிடைக்கலை ஒன்னும் கிடைக்கலை. ஒரு வழியா வந்த பஸ்ல வர இவ்வளவு நேரம்..” என்று பார்வதியின் தங்கை ஆற்றாமையாய் சொல்லி முடித்தார்.
மதியைக் கண்ட வினோதினி பாய்ந்து அணைத்துக் கொள்ள, சுமதி அதை அதிசயமாய் பார்த்தாள்.
“எப்படி இருக்குற மதி..?” என்றாள் வினோதினி.
“நல்லா இருக்கேன் வினோ..! நீ எப்படி இருக்குற..?” என்றாள் மதி பதிலுக்கு.
“எனக்கென்ன..? நான் நல்லா இருக்கேன். இப்போ என்ன அவசரம்..? உடனே கல்யாணம் பண்ணனும்ன்னு...! ஏன் பெரியம்மா மதியை மேல படிக்க வைக்கிறேன்னு நீங்க தான சொன்னிங்க...?” என்று வினோதினி குறைபட,
“வினோ பேசாம இரு..! பெரியவங்க மாதிரி பேசாம வாயை மூடு.நம்மைக் கேட்டா எல்லாம் செய்றாங்க..?” என்று அவர் தன் கோபத்தைக் காட்டினார்.
“உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லை. டக்குன்னு முடிவு பண்ணியாச்சு.அதான் உடனே சொல்ல முடியலை.இப்ப என்ன எப்படியோ வந்துட்டல்ல. எங்க உங்க வீட்டுக்காரர் வரலையா..?” என்று பார்வதி கேட்க,
“இல்லக்கா அவருக்கு லீவு இல்லை. அதான் நானும் வினோவும் மட்டும் வந்தோம்..!” என்றார் பார்வதியின் தங்கை.
“சரி சரி பேசிட்டு இருந்தா, நல்ல நேரம் போய்டும்.. கிளம்புங்க...!” என்றபடி மதியை அழைத்துக் கொண்டு கிளம்பினர் அனைவரும்.
வினோதினியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
பெண்கள் பாதிப் பேர் முன்னால் செல்ல, மதியை நடுவில் விட்டு, பாதிப் பெண்கள் பின்னால் சென்றனர்.
பார்வதியும்,மனோகரனும் செல்லவில்லை. அது முறையும் இல்லை என்பதால் அவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டனர்.
மதியை அழைத்துக் கொண்டு சென்ற பின்பு, அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் பார்வதிக்கு வெளிவர, உள்ளே சென்று வாய்விட்டு அழ ஆரம்பித்தார்.
“அக்கா.. என்னக்கா நீ..? நீ தான முன்னாடி நின்னு எல்லாத்தையும் பண்ணின..? இப்ப நீயே இப்படி அழுதா..அங்க மதிக்கு யாரு ஆறுதல் சொல்றது..?” என்று அவரின் தங்கை அவரைத் தங்க,
“என் பிள்ளை கடைசி வரைக்கும் நான் படிக்க வைப்பேன்னு நம்புனா..? ஆனா அதை என்னால நிறைவேத்த முடியாம போய்டுச்சே..!” என்று அவர் அழுக,
“நீ அவசரபட்டிருக்க கூடாதுக்கா..!” என்று அவர் சொல்ல,
“நான் எங்க அவசரப்பட்டேண்டி, எல்லார் வாயிலையும் என் மக விழுக வேண்டாம்ன்னு தான் சரின்னு சொல்லிட்டேன்..!” என்றவர் தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டார்.
“நடந்ததை இனி மாத்த முடியாதுக்கா..! அவளுக்கு ஒரு நல்லது நடக்க போறப்ப, இப்படி அழுகலாமா..?” என்று அவர் சொல்ல,
“உண்மைதான்..! முகிலன் மாதிரி ஒரு பையனைத் தேடுனாலும் கண்டுபிடிக்க முடியாது. எனக்கு ஒரே ஆறுதல் முகிலன் மட்டும் தான்...!” என்று முகிலனை மட்டுமே நம்பினார் பார்வதி.
“அப்பறம் என்னக்கா? கவலை விடு..! போய் ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போம்..!” என்றபடி அவர்கள் இயல்பிற்கு திரும்பினர்.
“அங்கு மதியை அழைத்துச் சென்று முகிலனின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மாமன், மச்சினன் வீட்டில் தங்க வைத்தனர்.
மதிக்கு சந்கோஜமாய் இருந்தது. இதுவரை இப்படி எங்கும் அவள் சென்றதில்லை. வினோதினி மற்றும் செல்வி, கங்கா என அனைவரும் அருகில் இருக்கவும் அவளுக்கு கொஞ்சம் பதட்டம் இல்லாமல் இருந்தது.
“என்னாச்சு மதி? முகம் ஒரு மாதிரி இருக்கு..?” என்றாள் வினோதினி.
“முத்து வந்திருக்கான்..!” என்றாள்.
“முத்துவா..? அது யாரு..?” என்று வினோ கேட்க,
“எங்கடி இருக்கான் அவன்..?” என்றாள் கங்கா கோவமாய்.
“ஜன்னலுக்கு வெளிய பாரு..!” என்று மதி சொல்ல, எட்டிப் பார்த்தாள் கங்கா. இருட்டில் சரியாகத் தெரியாவிட்டாலும் அது முத்து தான் என்பது உறுதியாகத் தெரிந்தது.
“இந்த லூசுப்பையன் அடங்கவே மாட்டானா..? ஏற்கனவே நடந்த பிரச்சனை எல்லாம் பத்தாதா...? அந்த பெரியம்மா இவனை இங்க விட்டுட்டு அங்க என்ன பண்ணுது..?” என்று கங்கா பொரிந்து தள்ளினாள்.
“எதுக்கு வந்திருக்கான்னு கேளு கங்கா..! ஏதாவது முக்கியமான விஷயமா இருக்க போகுது..!” என்றாள் மதி.
ஏனென்றால் அந்த இருட்டிலும் அவனின் முகம் அவ்வளவு தவிப்பாய் இருந்தது. எதையோ சொல்லத் துடிப்பவனைப் போல் இருந்தான் முத்து. அதனால் தான் என்னவென்று கேட்க சொன்னால் மதி.
“ஆமா...! ரொம்ப முக்கியமான விஷயம் பேச வந்திருப்பான். எவடி இவ..? ஏற்கனவே நடந்த பிரச்சனை பத்தாதா..?” என்று கடுப்பாக சொன்னவள் அவனை நோக்கி சென்றாள்.
“டேய் முத்து..! இந்த நேரத்துல இங்க என்ன பன்ற..? இப்ப எதுக்காக இங்க வந்து நிக்குற..? உன்னைய இங்கன பார்த்தா எல்லாரும் மதியைத்தான் தப்பா நினைப்பாக, பேசாம போய்டு..!” என்றாள் கங்கா.
“என்ன கங்கா..? நீயே இப்படி பேசுனா எப்படி..! உனக்கு என்னைய நல்லாத் தெரியும்ல...நான் நிஜமாவே மதிக்கு கெடுதல் நினைப்பேனா..?” என்றான்.
“இங்க பாரு முத்து..நீ நல்லவனா, கெட்டவனான்னு எனக்கேத் தெரியலை.ஆனா ஒன்னு மட்டும் உறுதியா தெரியும்..நீ இங்க இப்படியே நின்னுட்டு இருந்தா, கண்டிப்பா ஒரு பிரச்சனை வரும். அது மட்டும் தெள்ளத் தெளிவா தெரியுது. அதனால நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு..” என்று கங்கா சொல்லிக் கொண்டிருக்க,
கங்கா எதற்காக பயந்து கொண்டிருந்தாளோ அது தான் அங்கு நடந்தது.ஆனால் வெளிப்படையான சண்டையாக நடக்கவில்லை.
“பார்த்திங்களா அண்ணே..! நான் சொன்னப்ப நீங்கதான் நம்பலை.இப்ப நீங்களே பாருங்க. அவன் அவளுக்காக வந்து அங்கன நிக்குறதும், உடனே இவ அந்த கங்காவ தூது அனுப்புறதும்...எனக்கென்னவோ சரியா படலை அண்ணே..!” என்று பெரியசாமிக்கு மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார் திலகா.
நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து அனைவரும் சாப்பிட்டு முடிக்க, மீண்டும் ஒவ்வொருவராய் மதியின் அருகில் வந்து அமர்ந்தனர்.
“என்னப்பா...? எல்லாரும் சாப்பிட்டாச்சுல? நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ணை அழைச்சுட்டு கிளம்புங்கப்பா..!” என்று பெரியவர் ஒருவர் சொல்ல...
“ஆமாம்..! கிளம்புங்க...!” என்றபடி அனைவரும் கிளம்ப ஆயத்தமாயினர். அதற்கு முன்னாடியே முகிலனைக் கிளம்ப சொல்ல, அவனோ மனமே இல்லாமல் கிளம்பி சென்றான்.
கிராமத்தில் மண்டப்பத்தில் வைத்து திருமணம் செய்வது எல்லாம் அரிது. முதல் நாள் இரவே பெண்ணை அழைத்துக் கொண்டு போய், மாப்பிள்ளை வீட்டில் அல்லது மாமன், மச்சினன் வீட்டில் தங்க வைப்பது வழக்கம்.
இங்கு மதியும், முகிலனும் ஒரே ஊர் என்பதால், அதிக ஏற்பாடு தேவையில்லாமல் போனது. நடந்தே சென்று விடும் தூரம் என்பதால், அனைவரும் அவளை அழைத்து செல்ல தயாராகினர்.
மதிக்கு அப்போதே அழுகை துவங்கியது. நடப்பது அவளுக்கு புதிதாய் இருந்தது. இது நாள் வரையில் மற்றவர்கள் வீட்டில் அவள் தங்கியதில்லை. இனியும் அப்படி இருக்கமுடியுமா..? இனி முகிலனின் வீடு தான் அவள் வீடு..! என்று மனதில் பதிய வைத்தனர் அனைவரும் சேர்ந்து.
மதியின் கண்கள் கலங்கியிருந்ததைப் பார்த்த பார்வதிக்கும் கண்கள் கலங்க, விவரம் தெரியாத சுமதியோ அழுதே விட்டாள்.
“எல்லாரும் சேர்ந்து எங்க அக்காவை எங்க கூட்டிட்டு போகப் போறீங்க..?” என்று அவள் சிறுபிள்ளைத்தனமாய் கேள்வி கேட்க,
“உங்க அக்காவுக்கு காலையில கல்யாணம். அதனால உங்க அத்தை வீட்டுக்கு தான் கூட்டிட்டு போறோம்..!” என்றனர்.
“எங்க அக்கா எப்ப திரும்பி வருவா..?” இது சுமதி.
“உங்க அக்கா இனி இங்க எல்லாம் வர மாட்டா..! இனி உங்க மலர் அத்தை வீட்ல தான் இருப்பா..!” இது உறவினர்கள்.
“அப்ப நான் எப்படி தனியா இருக்குறது..?” இது சுமதி.
“அது பழகிடும் சுமதி. உங்க அக்கா பக்கத்துலதான் இருக்க போறா..! நீ நினைச்சா உடனே போய் பார்த்துக்கலாம்..!” என்று சொல்லி புரிய வைத்தனர்.
“அதெல்லாம் வேண்டாம். எங்களுக்கு தான் வீடு இருக்குள்ளா..? எங்க அக்கா இங்கயே இருக்கட்டும். நான் அக்காவை விட மாட்டேன்..!” என்று சுமதி அவளைக் கட்டிக் கொண்டு அழ...
வயதில் முதிர்ச்சியும், பக்குவமும் இல்லாத மதியும் தங்கையுடன் சேர்ந்து அழுதாள்.
“என்ன மதி..? அவதான் சின்ன பிள்ளை..! நீயும் சேர்ந்து அழுதா, அவ இன்னமும் அழுவா..?” என்று உறவினர்கள் கடிந்து கொள்ள,
“சுமதி..! அக்காவை விடு..!” என்று பார்வதி கொஞ்சம் அதட்டலாய் சொல்ல, அம்மாவிற்கு பயந்து, மதியை விட்டு விலகினாள் சுமதி.
எதற்கும் கலங்காத மனோகரனுக்கு கூட கொஞ்சம் கண்கள் கலங்கியது.
“குத்துவிளக்க எடுத்து கைல குடுங்க..! நேரம் ஆச்சு..” என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல, மதியின் கையில் ஒரு குத்து விளக்கு கொடுக்கப்பட்டது.
சரியாக அந்த சமயத்தில் வந்து சேர்ந்தனர் பார்வதியின் தங்கையும், அவரின் மகள் வினோதினியும்.
“என்ன இவ்வளவு நேரம் கழிச்சு வரீங்க..?” என்று பார்வதி மனந்தாங்களுடன் கேட்க,
“அக்கா...! நாங்க சேலத்துக்கு எப்பவோ வந்துட்டோம்..! உங்க ஊருக்கு பஸ்சும் கிடைக்கலை ஒன்னும் கிடைக்கலை. ஒரு வழியா வந்த பஸ்ல வர இவ்வளவு நேரம்..” என்று பார்வதியின் தங்கை ஆற்றாமையாய் சொல்லி முடித்தார்.
மதியைக் கண்ட வினோதினி பாய்ந்து அணைத்துக் கொள்ள, சுமதி அதை அதிசயமாய் பார்த்தாள்.
“எப்படி இருக்குற மதி..?” என்றாள் வினோதினி.
“நல்லா இருக்கேன் வினோ..! நீ எப்படி இருக்குற..?” என்றாள் மதி பதிலுக்கு.
“எனக்கென்ன..? நான் நல்லா இருக்கேன். இப்போ என்ன அவசரம்..? உடனே கல்யாணம் பண்ணனும்ன்னு...! ஏன் பெரியம்மா மதியை மேல படிக்க வைக்கிறேன்னு நீங்க தான சொன்னிங்க...?” என்று வினோதினி குறைபட,
“வினோ பேசாம இரு..! பெரியவங்க மாதிரி பேசாம வாயை மூடு.நம்மைக் கேட்டா எல்லாம் செய்றாங்க..?” என்று அவர் தன் கோபத்தைக் காட்டினார்.
“உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லை. டக்குன்னு முடிவு பண்ணியாச்சு.அதான் உடனே சொல்ல முடியலை.இப்ப என்ன எப்படியோ வந்துட்டல்ல. எங்க உங்க வீட்டுக்காரர் வரலையா..?” என்று பார்வதி கேட்க,
“இல்லக்கா அவருக்கு லீவு இல்லை. அதான் நானும் வினோவும் மட்டும் வந்தோம்..!” என்றார் பார்வதியின் தங்கை.
“சரி சரி பேசிட்டு இருந்தா, நல்ல நேரம் போய்டும்.. கிளம்புங்க...!” என்றபடி மதியை அழைத்துக் கொண்டு கிளம்பினர் அனைவரும்.
வினோதினியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
பெண்கள் பாதிப் பேர் முன்னால் செல்ல, மதியை நடுவில் விட்டு, பாதிப் பெண்கள் பின்னால் சென்றனர்.
பார்வதியும்,மனோகரனும் செல்லவில்லை. அது முறையும் இல்லை என்பதால் அவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டனர்.
மதியை அழைத்துக் கொண்டு சென்ற பின்பு, அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் பார்வதிக்கு வெளிவர, உள்ளே சென்று வாய்விட்டு அழ ஆரம்பித்தார்.
“அக்கா.. என்னக்கா நீ..? நீ தான முன்னாடி நின்னு எல்லாத்தையும் பண்ணின..? இப்ப நீயே இப்படி அழுதா..அங்க மதிக்கு யாரு ஆறுதல் சொல்றது..?” என்று அவரின் தங்கை அவரைத் தங்க,
“என் பிள்ளை கடைசி வரைக்கும் நான் படிக்க வைப்பேன்னு நம்புனா..? ஆனா அதை என்னால நிறைவேத்த முடியாம போய்டுச்சே..!” என்று அவர் அழுக,
“நீ அவசரபட்டிருக்க கூடாதுக்கா..!” என்று அவர் சொல்ல,
“நான் எங்க அவசரப்பட்டேண்டி, எல்லார் வாயிலையும் என் மக விழுக வேண்டாம்ன்னு தான் சரின்னு சொல்லிட்டேன்..!” என்றவர் தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டார்.
“நடந்ததை இனி மாத்த முடியாதுக்கா..! அவளுக்கு ஒரு நல்லது நடக்க போறப்ப, இப்படி அழுகலாமா..?” என்று அவர் சொல்ல,
“உண்மைதான்..! முகிலன் மாதிரி ஒரு பையனைத் தேடுனாலும் கண்டுபிடிக்க முடியாது. எனக்கு ஒரே ஆறுதல் முகிலன் மட்டும் தான்...!” என்று முகிலனை மட்டுமே நம்பினார் பார்வதி.
“அப்பறம் என்னக்கா? கவலை விடு..! போய் ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போம்..!” என்றபடி அவர்கள் இயல்பிற்கு திரும்பினர்.
“அங்கு மதியை அழைத்துச் சென்று முகிலனின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மாமன், மச்சினன் வீட்டில் தங்க வைத்தனர்.
மதிக்கு சந்கோஜமாய் இருந்தது. இதுவரை இப்படி எங்கும் அவள் சென்றதில்லை. வினோதினி மற்றும் செல்வி, கங்கா என அனைவரும் அருகில் இருக்கவும் அவளுக்கு கொஞ்சம் பதட்டம் இல்லாமல் இருந்தது.
“என்னாச்சு மதி? முகம் ஒரு மாதிரி இருக்கு..?” என்றாள் வினோதினி.
“முத்து வந்திருக்கான்..!” என்றாள்.
“முத்துவா..? அது யாரு..?” என்று வினோ கேட்க,
“எங்கடி இருக்கான் அவன்..?” என்றாள் கங்கா கோவமாய்.
“ஜன்னலுக்கு வெளிய பாரு..!” என்று மதி சொல்ல, எட்டிப் பார்த்தாள் கங்கா. இருட்டில் சரியாகத் தெரியாவிட்டாலும் அது முத்து தான் என்பது உறுதியாகத் தெரிந்தது.
“இந்த லூசுப்பையன் அடங்கவே மாட்டானா..? ஏற்கனவே நடந்த பிரச்சனை எல்லாம் பத்தாதா...? அந்த பெரியம்மா இவனை இங்க விட்டுட்டு அங்க என்ன பண்ணுது..?” என்று கங்கா பொரிந்து தள்ளினாள்.
“எதுக்கு வந்திருக்கான்னு கேளு கங்கா..! ஏதாவது முக்கியமான விஷயமா இருக்க போகுது..!” என்றாள் மதி.
ஏனென்றால் அந்த இருட்டிலும் அவனின் முகம் அவ்வளவு தவிப்பாய் இருந்தது. எதையோ சொல்லத் துடிப்பவனைப் போல் இருந்தான் முத்து. அதனால் தான் என்னவென்று கேட்க சொன்னால் மதி.
“ஆமா...! ரொம்ப முக்கியமான விஷயம் பேச வந்திருப்பான். எவடி இவ..? ஏற்கனவே நடந்த பிரச்சனை பத்தாதா..?” என்று கடுப்பாக சொன்னவள் அவனை நோக்கி சென்றாள்.
“டேய் முத்து..! இந்த நேரத்துல இங்க என்ன பன்ற..? இப்ப எதுக்காக இங்க வந்து நிக்குற..? உன்னைய இங்கன பார்த்தா எல்லாரும் மதியைத்தான் தப்பா நினைப்பாக, பேசாம போய்டு..!” என்றாள் கங்கா.
“என்ன கங்கா..? நீயே இப்படி பேசுனா எப்படி..! உனக்கு என்னைய நல்லாத் தெரியும்ல...நான் நிஜமாவே மதிக்கு கெடுதல் நினைப்பேனா..?” என்றான்.
“இங்க பாரு முத்து..நீ நல்லவனா, கெட்டவனான்னு எனக்கேத் தெரியலை.ஆனா ஒன்னு மட்டும் உறுதியா தெரியும்..நீ இங்க இப்படியே நின்னுட்டு இருந்தா, கண்டிப்பா ஒரு பிரச்சனை வரும். அது மட்டும் தெள்ளத் தெளிவா தெரியுது. அதனால நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு..” என்று கங்கா சொல்லிக் கொண்டிருக்க,
கங்கா எதற்காக பயந்து கொண்டிருந்தாளோ அது தான் அங்கு நடந்தது.ஆனால் வெளிப்படையான சண்டையாக நடக்கவில்லை.
“பார்த்திங்களா அண்ணே..! நான் சொன்னப்ப நீங்கதான் நம்பலை.இப்ப நீங்களே பாருங்க. அவன் அவளுக்காக வந்து அங்கன நிக்குறதும், உடனே இவ அந்த கங்காவ தூது அனுப்புறதும்...எனக்கென்னவோ சரியா படலை அண்ணே..!” என்று பெரியசாமிக்கு மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார் திலகா.