அத்தியாயம் 25
சென்னை மாநகரின் பரபரப்பான காலை நேரத்தில், அந்த ஒரு வீட்டில் மட்டும் நூலகத்தினை காட்டிலும் அமைதி நிரம்பி வழிந்தது.
அந்த வீட்டின் மாடிப்படிகளில் கவனமாய் கால் பதித்தபடி, தன் கையிலிருந்த காபி ட்ரேவை தூக்கிக்கொண்டு சென்றார் ரமாபாட்டி.
அங்கே ஒற்றை நாற்காலியில், கம்பீரமாய், அவள் கட்டியிருந்த காட்டன் புடவையின் மடிப்புகள் மயில் தோகைகளாய் அமைய, அமைதியான முகத்துடனும், அதற்க்கு எதிர்மறையாய் சுட்டெரிக்கும் கூர்விழிகளுடன் அசையாமல் எதிரில் இருப்பவர்களை பார்வையால் துளைத்துக்கொண்டிருந்தாள் மைதிலி.
அவள் முன் இருகைகளையும் கட்டிக்கொண்டு கருவிழி தரைப்பார்க்க, முறையே இடமிருந்து வலமாய் ரிஷி, ராம், கெளதம், சந்தோஷ் என அரைவட்ட வடிவில் குனிந்த தலை நிமிராமல் இணைபிரியா உதடுகளுடன் நின்றிருந்தனர்.
விஸ்வநாதன் மற்றும் குழுவை போலீஸ்லில் ஒப்படைத்து ஒரு வாரம் ஓடிவிட்டது. அந்த சம்பவம் நடந்த மறுநாளே ஒரு முக்கியமான வெளிநாட்டு வாடிக்கையாளரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதாக கேசவன் கால் செய்ய, வேறு வழியின்றி தனியே மும்பை கிளம்பினாள் மைதிலி.
மீட்டிங் முடிந்ததும் மூன்று மாதங்களாய் இவள் செய்யாமல் விட்ட வேலைகள் அவள் கண்ணில் பட, கேசவன் முடித்தது போக, மீதி இருந்த வேலைகளை கவனிக்கலானாள்.
“என்னம்மா நடந்துச்சு...?”
வந்ததிலிருந்து அவளே சொல்லுவாள் என எண்ணி கேசவன் பொறுத்திருக்க, இதற்கு மேல் சொல்ல போவது இல்லை என அறிந்ததும் அவரே கேட்டுவிட்டார்.
“சந்தோஷ் எல்லாம் சொல்லிட்டான் தானே அங்கிள்?” என சிரித்துக்கொண்டு அசால்ட்டாய் கேட்டாள் மைதிலி.
“சொல்லிட்டான் தான். இருந்தாலும் நீ ஒண்ணுமே சொல்லலையேன்னு தான்! சரி மாப்புள எப்படி இருக்காரு? தனியா விட்டுட்டு வந்துருக்க?” என அவர் கேட்க, சிரித்த அவள் முகம் மெல்ல சுருங்கியது.
“அவர் என்ன குழந்தையா? கூடவே கூட்டிட்டு சுத்துறதுக்கு?” அவள் குரலில் எரிச்சல் அப்பட்டமாய் தெரிய உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார் கேசவன்.
“நீதானேம்மா சொல்லுவ? அவர் குழந்தை மாதுரின்னு...” என சிரிப்பை அடக்கி அவர் கேட்க, கோப்புகளில் இருந்து முகத்தை விலக்கி, “சரியான பிராடு அங்கிள் அவன்... நம்மளைகூட ஏமாத்திட்டான்... இதுக்கு சந்தோஷ் சப்போர்ட் தெரியுமா?” என ஆதங்கமாய் சொன்னாள் மைதிலி.
“அச்சச்சோ!!! இப்படி ஏமாத்திட்டான் பாரேன்! ஒரு போர்ஜெரி கேஸ் போற்றுலாமா அவன்மேல?” என கேசவன் கேட்க, திடுக்கிட்டு அவர் முகம் பார்த்தவள், அவர் கண்கள் சிரிப்பதை கண்டு துணுக்குற்றாள். எதுவோ புரிவதை போல தோன்ற, “அங்கிள்??? உங்களுக்கும் முன்னாடியே தெரியுமா??” என்றாள் சந்தேகமாய்.
“ஹஹஹஹா.... ராம் குணமான அடுத்த நாளே எனக்கு போன் செஞ்சு பேசிட்டான். இனிமே மைதிலி என் பொறுப்பு. நீங்க நிம்மதியா இருங்கன்னு ராம் சொன்னதும் தான் எனக்கு மனசு அமைதியாச்சு. உன்கிட்ட இது எதுவும் சொல்ல வேணாம்ன்னு சொல்லிட்டான். அதான் எல்லார் மாறியும் நானும் உன்கிட்ட எதையும் சொல்லல.... ஹி இஸ் அ வெரி குட் சோல்... ரொம்ப நல்லவன் மைதிலி... அவனை மன்னிச்சுடு...” என்றார் கேசவன் நிறைவான புன்னகையுடன்.
அவர் சொன்னதைஎல்லாம் கேட்டவளுக்கு ராம் மீது ஆத்திரம் அதிகமானது.. ‘கடைசில நான் மட்டும் தான் முட்டாளா இருந்துருக்கேன்.. எல்லாருக்குமே உண்மை தெரிஞ்சுருக்கு’ என மனம் சொல்ல, சென்னை திரும்பாமல் இருந்த வேலைகள் அனைத்தையும் முடிக்க தொடங்கினாள்.
இடையிடையே ராம் தொலைபேசியில் அழைக்க, அவள் பிடிவாதமாய் அவனிடம் பேசாது இருந்ததில் ராமிற்கே பயம் கிளம்பியது. நேரில் வருவதாக அவன் கேசவனிடம் சொல்ல, ‘வரும் மாதம் முடிவு செய்யப்பட்ட திருமண வரவேற்ப்பு முடியும்வரை மும்பை வர வேண்டாம். அது முறையாய் இருக்காது. பலர் கண்ணும் பலதாய் பேசும்...’ என சொல்லி அவர் மறுத்துவிட தன்னையே நொந்துக்கொண்டான் ராம்.
அங்கு சென்னையிலோ ராம் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பணத்திற்காக தங்களை கடத்தி சித்தரவதை செய்ததாகவும், அங்கிருந்து தப்பித்து சென்று போலிசின் உதவியை தாங்கள் நாடியதாகவும் ராம் சொல்லியிருக்க, ‘நாங்கள் சென்று பார்த்தபோது ஒருவரையொருவர் வினோதமான முறையில் தாக்கிவிட்டு, மயக்கமுற்று கிடந்தனர். சொத்தை பங்கு பிரிப்பதில் நடந்த வாக்குவாதத்தின் காரணமாய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது..’ என போலீஸ் தரப்பு சொல்லிவிட்டது.
மைதிலி செயின் டாலர்லில் இருந்த ஸ்பை கேமராவில் பதிவாகிருந்த காணொளியை முக்கிய ஆதாரமாய் எடுத்துக்கொண்டும், இதுவரை அவர்கள் செய்த பண மோசடி, பொய்யான பத்திர தயாரிப்பு, மற்றும் ராமிருக்கு கொடுக்கப்பட்ட தவறான மருந்துக்கான ரசீது என அனைத்தையும் கோர்டில் சமர்பிக்க, இரண்டே நாட்களில் வழக்கு முடிவுக்கு வந்தது.
மறுபரிசீலனைக்கு வழியின்றி அந்த கானொளியில் விஸ்வநாதனும் லக்ஷ்மியும் தங்கள் வாய்மொழி வாக்குமூலம் கொடுத்திருக்க, போலீஸ்சிடம் அதை கொடுக்கும் முன்னே, விஸ்வநாதன் ராம் கழுத்தை நெரிக்கும் ஸீனிற்கு பிறகு நடந்தது ஏதும் இல்லாதபடி எச்சரிக்கையாய் கட் செய்துவிட்டே அதை கொடுத்திருந்தான் சந்தோஷ்.
அதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் விஸ்வநாதன் மற்றும் லக்ஷ்மிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும், வரதனுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மூர்த்திக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையோடு அவரது மருத்துவ உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
கோர்ட், கேஸ் என எல்லாம் முடிந்து வாழ்கை, இயல்பு நிலைக்கு திரும்பிருக்க, மும்பை சென்ற மைதிலி மட்டும் சென்னை திரும்பியபாடில்லை.
மைதிலி இல்லாத ஒரு வாரத்தில் மிகவும் சோர்ந்து காணப்பட்டான் ராம். உடல் அலைச்சலாலும், மனம் காதலாலும் துடண்டு கிடக்க, அவனை மிகவும் சோதிக்காமல் அன்று காலை புயல் வீட்டு வாசலில் இறங்கியது.
வந்து ஒரு மணி நேரம் ஆகியும் ஒன்றும் பேசாமல் அவர்களை முறைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் மைதிலி. எப்போது வருவாள் என காத்திருந்த ராமிருக்கு, வந்தவுடன் விசாரணை நடத்த தயாராய் அவள் இருப்பதை கண்டு மிகமெலிதாய் நடுங்கியது.
‘சொல்றதை எல்லாம் அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே!!’ என நினைத்துக்கொண்டான்.
நின்று நின்று கால் கடுக்க, “டேய்... இருந்தாலும் தங்கச்சி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா...! ஒரு மணி நேரமா நிக்குறோம்... இரக்கமே காட்டலடா...” என கெளதம் ராம் காதில் கிசுகிசுக்க, “அவளே வெறுத்து போயி போய் தொலைங்கன்னு சொல்றவரைக்கும் யாரும் நிமிர்ந்து அவளை பார்த்து தொலைக்காதீங்க.... அதே போஸ்ல நில்லுங்க...” என வார்த்தைகளை கடித்து துப்பியபடி சந்தோஷ் சொல்ல, ராம் எதுவும் பேசாமல் நின்றான்.
பொருத்தது போதும் என எண்ணினாளோ?!
“ரிஷி?” என அவள் உரக்க அழைக்க, தூக்கத்தில் இருந்து எழுபவனை போல திடுக்கிட்டு நிமிர்ந்தான் ரிஷிகேஷ்.
“க்கா??”
“உனக்கு எப்போ தெரியும்?” என அவள் நேரிடையாய் கேட்க, “எ..ன்ன...?” என கேட்க தொடங்கியவன், மைதிலியின் தீப்பார்வையில், “அன்னைக்கே தெரியும் அக்கா!” என்றான் மொட்டையாய்.
“ம்ம்ம்?” என அவள் புரியாமல் புருவம் சுருக்க,
“அதான் அக்கா.... இந்த ஆளு மேல பூந்தொட்டி விழுந்துச்சுள்ள? அதுக்கு அடுத்த நாளு காலைல தான்...” என விளக்கிய ரிஷியை வெறிக்கொண்டு முறைத்தான் கெளதம். ‘அடப்பாவி!!! ஷாப்பிங் மால்ல வரதன்ன பார்க்க போன அன்னைக்குன்னு சொன்னா ஆகாதாடா?’ என மனதுள் ரிஷியை வறுத்தான்.
“எப்படி தெரியும்?” என அவள் கேட்டதும், “காலைல உங்களை பார்க்க வீட்டுக்கு வந்தேன்ல? அப்போதான் ராம் என்னை கூப்பிட்டு பேசுனான் அக்கா... ப்ரோக்கு சரியாச்சுன்னு தெரிஞ்சதுமே ரொம்ப சந்தோசம் எனக்கு. ஆனா அவன் என்கிட்டே சத்தியம் வாங்கிட்டான் இதை யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு!!! அவன் ஒன்னு சொல்லி நான் இதுவரை கேக்காம இருந்ததே இல்லை. அதான் யார்கிட்டயும் நான் தெரிஞ்சமாறி காட்டிகல...” என தன்னிலை விளக்கம் கொடுத்தான் ரிஷி.
ரிஷி பேச பேச குனிந்த தலையை நிமிர்த்தாமல் கண்ணை மட்டும் மைதிலி மீது வைத்தபடி நின்றிருந்த ராம், ரிஷி பேசிமுடித்ததும் அவள் திரும்பி தன்னை முறைப்பதை கண்டு சட்டென குனிந்துகொண்டான்.
“நீ வந்து உட்காரு..” என ரிஷியை சொல்லிவிட்டு, “மிஸ்டர் கெளதம்?” என்றாள்.
கெளதம் அசையாது நிற்பதை கண்டு “மிஸ்டர் கௌதம்ம்ம்?” என இம்முறை அவள் அழுத்தி அழைக்க, “டேய் உன்னதாண்டா...” என வேகமாய் கௌதமின் பின்னந்தலையில் தட்டிவிட்டு மீண்டும் கைகட்டிகொண்டு நின்றுக்கொண்டான் சந்தோஷ்.
“தங்கச்சி? மீ? யூ காலிங் மீ மிஸ்டர் கெளதம்? இந்த அண்ணன்ன போயி சட்டுன்னு யாரோ மாறி பேசிட்டியே?” என தன் வாய் மேல கை வைத்து வருத்தப்பட, “ம்ப்ச்!! ஐ டோன்ட் வான்ட் டு ஹியர் யுவர் ஸ்டுபிட் திங்க்ஸ் எனிமோர். கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க... வென் அண்ட் ஹொவ் டிட் யூ நோ?” என கௌதமின் ஆக்டிங்க்கு புல் ஸ்டாப் வைத்தாள் மைதிலி.
“அது..... நம்ம சென்னை வந்த அடுத்தநாள், நைட் தூக்கம் வராம ரூம் விட்டு வெளியில வந்தேன். அப்போ ராம் ஒரு மூலைல காலை சுருட்டிகிட்டு படுத்துருந்ததை பார்த்து பயந்துபோயி அவன்கிட்ட போனேன். பாதி மயங்கி கிடந்தான்... அவனுக்கு என்னாகிருக்கும்ன்னு எனக்கு கெஸ் பண்ண முடிஞ்சுது.
சித்ராகூட்ல இருந்து நம்ம கிளம்புறப்போ அந்த வைத்தியர் என்கிட்டே சொல்லிருந்தாரு. ராம்கிட்ட நல்ல முன்னேற்றம் இருக்கு, இப்படியே தொடர்ந்தா இன்னும் கொஞ்சம் நாள்ல பரிபூரணமா குணமாகலாம். ஆனா இப்போ வேற விதமான வைத்தியமுறையை ஆரம்பிச்சா மீண்டும் அவன் பழைய நிலைக்கு போகவும் வாய்ப்பு இருக்குன்னு சொன்னாரு..” என அவன் சொல்ல,
“இதை ஏன் நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லல?” என இடைமறித்தாள் மைதிலி.
“இல்லை மைதிலி...நான் சொல்லிருக்கணும். என்னோட தப்புதான் அது..” என உண்மையாய் வருந்தியவன் பின் தொடர்ந்தான்.
“அவனை மயக்கத்துல இருந்து எழுப்பி, என்னனு கேட்டேன். ரொம்ப நடுங்கி போய் இருந்தான். அவனுக்கு ஒண்ணுமே புரியல.. அவன்கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லி ஓரளவுக்கு சரி பண்றதுக்குள்ள பொழுதே விடிஞ்சுருச்சு...” என்றான் கெளதம்.
“ஏன் என்கிட்டே சொல்லாம மறச்சீங்கன்னு கேட்டேன் ?” என மைதிலி அழுத்தமாய் கேட்கவும், “ராம் தான் சொல்ல கூடாதுன்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டான்..” என ரிஷி சொன்னதையே தானும் சொன்னான் கெளதம்.
இம்முறை மீண்டும் அவள் ராமை முறைக்க, அதற்க்கும் எதுவும் சொல்லாமல் நின்றான் ராம்.
சந்தோஷிடம் திரும்பி, “உன்கிட்டயும் சத்தியம் வாங்கிட்டான். அதானே சொல்ல போற?” என மைதிலி கேட்கவும், “ஆமா மைதிலி... ஆனா யார்கிட்டையுமே சொல்லகூடாதுன்னு சொன்னான் ராம். கடைசில பார்த்தா உன்னைத்தவிர எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு..” என குறைபட்டான் சந்தோஷ்.
“உனக்கு மட்டும் தான் தெரியும்.. உனக்கு மட்டும் தான் தெரியும்ன்னு சொல்லியே ஊரு முழுக்க சொல்லிருக்கான் தங்கச்சி... இவனை சும்மா விடாத...” என அவளை ஏத்திவிட்டான் கெளதம்.
“அவன் செஞ்சது தப்புன்னா, நீங்க எல்லாம் செஞ்சதும் தப்பு தான். தப்புக்கும் மேல நம்பிக்கை துரோகம்... எல்லாருமா சேர்ந்து தானே நடிச்சுருகீங்க? அவனை யாரும் குறை சொல்ல வேணாம்...” என கோவத்தில் கூட தன் ராமை விட்டுகொடுக்காமல் சொன்னாள் மைதிலி.
ராம் எழுந்த சிரிப்பை அடக்கியபடி நிற்க, அவனை கண்டுக்கொள்ளாது, “அந்த போலீஸ்ஸ எப்போ பார்த்து பேசுன நீ?” என சந்தோஷிடம் கேட்டாள் மைதிலி.
“நம்ம எல்லாரும் பீச்ல இருந்து கிளம்பி விஸ்வநாதனை பார்க்க ஹாஸ்பிட்டல் போனப்போ, வழில தான் ராம் அவரை பார்த்துருக்கான். நீங்க ஹாஸ்பிடல் உள்ள போனதும், எல்லாத்தையும் என்கிட்டே சொல்லி, உடனே அவனை பார்த்து நான் ஹெல்ப் கேட்டேன்னு சொல்லுனு சொன்னான். அதான் உங்கள வீட்ல விட்டுட்டு நான் ராம் சொன்னதை செய்ய போய்டேன்...” என சந்தோஷ் சொல்ல, “ஓ!! தலைவலிக்கு டேபிலேட் வாங்கபோனியே? அதுவா?” என்றாள் குற்றம் சாட்டும் பார்வையில்.
பின்பு எல்லோரையும் பார்த்து, “சோ கிட்டத்தட்ட ஒரு மாசமா எல்லாரும் என்னை ஏமாத்திட்டு இருந்துருக்கீங்க??ம்ம்ம் இவ்ளோதானா?? இல்லை இன்னும் ஏதாது நடந்துச்சா??” என்றாள் மைதிலி.
மூவரும் திரு திருவென முழிக்க, வாயை திறந்தான் ராம்.
“மையு.. எல்லாமே நான் சொல்லிதான் செஞ்சாங்க... ப்ளீஸ் அவங்களை மன்னிச்சுடு...” என்றான்.
“உன்னையே நான் மன்னிக்க தயாரா இல்லை. இதுல நீ சொல்லி நான் இவங்களை மன்னிக்கனுமா??” என முகத்திற்கு நேரே கோவமாய் கேட்டாள் மைதிலி.
“மையு.... கூல் பேபி.. உன்கிட்ட கொஞ்சநாள் விளையாடலாம்ன்னு தான் இப்படி பண்ணிட்டேன்... சாரி பேபி... என்ன பனிஷ்மென்ட் வேணாலும் கொடு. செய்யுறேன்...” என அவன் பெருந்தன்மையாய் சொல்ல, “கெட் லாஸ்ட்.. என் கண்ணு முன்னாடியே வராத... அதான் உன் பனிஷ்மென்ட்..” என சொல்லிவிட்டு அவள் எழுந்துக்கொண்டாள்.
“அப்போ பின்னாடியே வரவா?” என கேட்டபடி அவள் புடவையை பிடித்து இழுத்தான் ராம்.
“ம்ப்ச்... தள்ளி போ ராம்...” என அவள் விலக, அவளை விடாமல் துரத்தி சென்று இறுக்கி பிடித்துக்கொண்டான்.
“என்ன பண்ற நீ? தள்ளி போன்னு சொன்னா புரியாதா??” என அவள் கடுப்படிக்க, “ஓ! அப்படி சொன்னியா? என் காதுல தள்ளிட்டு போன்னு விழுந்துச்சு..” என சொல்லிவிட்டு அசட்டு சிரிப்பு சிரித்தான் ராம்.
அவனை வேகமாய் தள்ளிவிட்டு அவள் செல்ல, “ஏய்!!! செல்லகுட்டி... தங்கக்கட்டி, நில்லுடி....
ஓய்!!!! புருஷன் கூப்புடுறேன்ல்ல?? நில்லுடி என் காஷ்மீர் பச்சைமிளகாய்...!!!” வாய் ஓயாமல் பேசியபடி அவள் பின்னே ராம் செல்ல, ராமின் பின்னே மற்ற மூவரும் சென்றனர்.
“என் செல்லக்கிளி? இங்க பாருடி...!” மைதிலி கோவத்தில் வீட்டையே மூச்சிரைக்க சுற்றிவர, ராமும் சளைக்காமல் அவள் பின்னே சுற்றினான்.
“பட்டுக்குட்டி, வெல்லக்கட்டி, மாமா மேல கொஞ்சம் கருணை காட்டும்மா!!! ஹய்யோ இவ்ளோ வேகமா நடக்குறியேடீ பேபி... பரவல்ல.. பின்னாடி பார்த்தா கூட செம்மையா இருக்க!!!!” என விஷமமாய் சிரித்துக்கொண்டு அவன் சொல்ல, வேகமாய் நடந்துக்கொண்டு இருந்தவள், அவன் சொன்னதில் கடுப்பாகி கீழே இருந்த சின்ன பூந்தொட்டியை தூக்கி அவன் மீது வீசினாள்.
அவள் செய்யபோவது முன்பே விளங்க, லாவகமாய் விலகிக்கொண்டான் ராம். குறி தப்பிய அந்த பூந்தொட்டி ‘எதையும் தாங்கும் மனிதருள் மாணிக்கத்தின்’ மீது சரியாய் பட, அலறிக்கொண்டு அங்கேயே விழுந்தான் கெளதம்.
இதற்குமேல் அலைய முடியாது என முடிவு செய்த ராம், ஓடிசென்று அவள் எதிர்பார்காத நேரத்தில் தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.
“விடு டா... விடூஊஊ....” என அவள் திமிர திமிர அதை பொருட்படுத்தாமல் தூக்கிச்சென்று தங்கள் அறையின் பஞ்சு மெத்தையில் ‘பொத்’தென போட்டுவிட்டு அறைக்கதவை தாழிட்டான் ராம்.
கட்டிலில் விழுந்தவள் எழுந்துக்கொள்ளாது முகத்தை மெத்தையில் அழுத்தியபடி படுத்திருப்பதை கண்டு, அவளை நெருங்கி சென்று தோளில் கை வைத்தான் ராம். வெடுக்கென அவன் கையை தட்டிவிட்டாள் மைதிலி.
அவள் செய்கையில் சிரிப்பு வர, சத்தமாய் சிரித்துக்கொண்டு, அவள் மீதே விழுந்தான் ராம்.
“இப்போ எப்படி என்னைதான்டி போவான்னு நானும் பார்க்குறேன்...” என அழுத்தமாய் அவள்மீது அவன் படுத்துக்கொள்ள, அசைவின்றி இருந்தாள் மைதிலி.
சென்னை மாநகரின் பரபரப்பான காலை நேரத்தில், அந்த ஒரு வீட்டில் மட்டும் நூலகத்தினை காட்டிலும் அமைதி நிரம்பி வழிந்தது.
அந்த வீட்டின் மாடிப்படிகளில் கவனமாய் கால் பதித்தபடி, தன் கையிலிருந்த காபி ட்ரேவை தூக்கிக்கொண்டு சென்றார் ரமாபாட்டி.
அங்கே ஒற்றை நாற்காலியில், கம்பீரமாய், அவள் கட்டியிருந்த காட்டன் புடவையின் மடிப்புகள் மயில் தோகைகளாய் அமைய, அமைதியான முகத்துடனும், அதற்க்கு எதிர்மறையாய் சுட்டெரிக்கும் கூர்விழிகளுடன் அசையாமல் எதிரில் இருப்பவர்களை பார்வையால் துளைத்துக்கொண்டிருந்தாள் மைதிலி.
அவள் முன் இருகைகளையும் கட்டிக்கொண்டு கருவிழி தரைப்பார்க்க, முறையே இடமிருந்து வலமாய் ரிஷி, ராம், கெளதம், சந்தோஷ் என அரைவட்ட வடிவில் குனிந்த தலை நிமிராமல் இணைபிரியா உதடுகளுடன் நின்றிருந்தனர்.
விஸ்வநாதன் மற்றும் குழுவை போலீஸ்லில் ஒப்படைத்து ஒரு வாரம் ஓடிவிட்டது. அந்த சம்பவம் நடந்த மறுநாளே ஒரு முக்கியமான வெளிநாட்டு வாடிக்கையாளரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதாக கேசவன் கால் செய்ய, வேறு வழியின்றி தனியே மும்பை கிளம்பினாள் மைதிலி.
மீட்டிங் முடிந்ததும் மூன்று மாதங்களாய் இவள் செய்யாமல் விட்ட வேலைகள் அவள் கண்ணில் பட, கேசவன் முடித்தது போக, மீதி இருந்த வேலைகளை கவனிக்கலானாள்.
“என்னம்மா நடந்துச்சு...?”
வந்ததிலிருந்து அவளே சொல்லுவாள் என எண்ணி கேசவன் பொறுத்திருக்க, இதற்கு மேல் சொல்ல போவது இல்லை என அறிந்ததும் அவரே கேட்டுவிட்டார்.
“சந்தோஷ் எல்லாம் சொல்லிட்டான் தானே அங்கிள்?” என சிரித்துக்கொண்டு அசால்ட்டாய் கேட்டாள் மைதிலி.
“சொல்லிட்டான் தான். இருந்தாலும் நீ ஒண்ணுமே சொல்லலையேன்னு தான்! சரி மாப்புள எப்படி இருக்காரு? தனியா விட்டுட்டு வந்துருக்க?” என அவர் கேட்க, சிரித்த அவள் முகம் மெல்ல சுருங்கியது.
“அவர் என்ன குழந்தையா? கூடவே கூட்டிட்டு சுத்துறதுக்கு?” அவள் குரலில் எரிச்சல் அப்பட்டமாய் தெரிய உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார் கேசவன்.
“நீதானேம்மா சொல்லுவ? அவர் குழந்தை மாதுரின்னு...” என சிரிப்பை அடக்கி அவர் கேட்க, கோப்புகளில் இருந்து முகத்தை விலக்கி, “சரியான பிராடு அங்கிள் அவன்... நம்மளைகூட ஏமாத்திட்டான்... இதுக்கு சந்தோஷ் சப்போர்ட் தெரியுமா?” என ஆதங்கமாய் சொன்னாள் மைதிலி.
“அச்சச்சோ!!! இப்படி ஏமாத்திட்டான் பாரேன்! ஒரு போர்ஜெரி கேஸ் போற்றுலாமா அவன்மேல?” என கேசவன் கேட்க, திடுக்கிட்டு அவர் முகம் பார்த்தவள், அவர் கண்கள் சிரிப்பதை கண்டு துணுக்குற்றாள். எதுவோ புரிவதை போல தோன்ற, “அங்கிள்??? உங்களுக்கும் முன்னாடியே தெரியுமா??” என்றாள் சந்தேகமாய்.
“ஹஹஹஹா.... ராம் குணமான அடுத்த நாளே எனக்கு போன் செஞ்சு பேசிட்டான். இனிமே மைதிலி என் பொறுப்பு. நீங்க நிம்மதியா இருங்கன்னு ராம் சொன்னதும் தான் எனக்கு மனசு அமைதியாச்சு. உன்கிட்ட இது எதுவும் சொல்ல வேணாம்ன்னு சொல்லிட்டான். அதான் எல்லார் மாறியும் நானும் உன்கிட்ட எதையும் சொல்லல.... ஹி இஸ் அ வெரி குட் சோல்... ரொம்ப நல்லவன் மைதிலி... அவனை மன்னிச்சுடு...” என்றார் கேசவன் நிறைவான புன்னகையுடன்.
அவர் சொன்னதைஎல்லாம் கேட்டவளுக்கு ராம் மீது ஆத்திரம் அதிகமானது.. ‘கடைசில நான் மட்டும் தான் முட்டாளா இருந்துருக்கேன்.. எல்லாருக்குமே உண்மை தெரிஞ்சுருக்கு’ என மனம் சொல்ல, சென்னை திரும்பாமல் இருந்த வேலைகள் அனைத்தையும் முடிக்க தொடங்கினாள்.
இடையிடையே ராம் தொலைபேசியில் அழைக்க, அவள் பிடிவாதமாய் அவனிடம் பேசாது இருந்ததில் ராமிற்கே பயம் கிளம்பியது. நேரில் வருவதாக அவன் கேசவனிடம் சொல்ல, ‘வரும் மாதம் முடிவு செய்யப்பட்ட திருமண வரவேற்ப்பு முடியும்வரை மும்பை வர வேண்டாம். அது முறையாய் இருக்காது. பலர் கண்ணும் பலதாய் பேசும்...’ என சொல்லி அவர் மறுத்துவிட தன்னையே நொந்துக்கொண்டான் ராம்.
அங்கு சென்னையிலோ ராம் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பணத்திற்காக தங்களை கடத்தி சித்தரவதை செய்ததாகவும், அங்கிருந்து தப்பித்து சென்று போலிசின் உதவியை தாங்கள் நாடியதாகவும் ராம் சொல்லியிருக்க, ‘நாங்கள் சென்று பார்த்தபோது ஒருவரையொருவர் வினோதமான முறையில் தாக்கிவிட்டு, மயக்கமுற்று கிடந்தனர். சொத்தை பங்கு பிரிப்பதில் நடந்த வாக்குவாதத்தின் காரணமாய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது..’ என போலீஸ் தரப்பு சொல்லிவிட்டது.
மைதிலி செயின் டாலர்லில் இருந்த ஸ்பை கேமராவில் பதிவாகிருந்த காணொளியை முக்கிய ஆதாரமாய் எடுத்துக்கொண்டும், இதுவரை அவர்கள் செய்த பண மோசடி, பொய்யான பத்திர தயாரிப்பு, மற்றும் ராமிருக்கு கொடுக்கப்பட்ட தவறான மருந்துக்கான ரசீது என அனைத்தையும் கோர்டில் சமர்பிக்க, இரண்டே நாட்களில் வழக்கு முடிவுக்கு வந்தது.
மறுபரிசீலனைக்கு வழியின்றி அந்த கானொளியில் விஸ்வநாதனும் லக்ஷ்மியும் தங்கள் வாய்மொழி வாக்குமூலம் கொடுத்திருக்க, போலீஸ்சிடம் அதை கொடுக்கும் முன்னே, விஸ்வநாதன் ராம் கழுத்தை நெரிக்கும் ஸீனிற்கு பிறகு நடந்தது ஏதும் இல்லாதபடி எச்சரிக்கையாய் கட் செய்துவிட்டே அதை கொடுத்திருந்தான் சந்தோஷ்.
அதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் விஸ்வநாதன் மற்றும் லக்ஷ்மிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும், வரதனுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மூர்த்திக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையோடு அவரது மருத்துவ உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
கோர்ட், கேஸ் என எல்லாம் முடிந்து வாழ்கை, இயல்பு நிலைக்கு திரும்பிருக்க, மும்பை சென்ற மைதிலி மட்டும் சென்னை திரும்பியபாடில்லை.
மைதிலி இல்லாத ஒரு வாரத்தில் மிகவும் சோர்ந்து காணப்பட்டான் ராம். உடல் அலைச்சலாலும், மனம் காதலாலும் துடண்டு கிடக்க, அவனை மிகவும் சோதிக்காமல் அன்று காலை புயல் வீட்டு வாசலில் இறங்கியது.
வந்து ஒரு மணி நேரம் ஆகியும் ஒன்றும் பேசாமல் அவர்களை முறைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் மைதிலி. எப்போது வருவாள் என காத்திருந்த ராமிருக்கு, வந்தவுடன் விசாரணை நடத்த தயாராய் அவள் இருப்பதை கண்டு மிகமெலிதாய் நடுங்கியது.
‘சொல்றதை எல்லாம் அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே!!’ என நினைத்துக்கொண்டான்.
நின்று நின்று கால் கடுக்க, “டேய்... இருந்தாலும் தங்கச்சி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா...! ஒரு மணி நேரமா நிக்குறோம்... இரக்கமே காட்டலடா...” என கெளதம் ராம் காதில் கிசுகிசுக்க, “அவளே வெறுத்து போயி போய் தொலைங்கன்னு சொல்றவரைக்கும் யாரும் நிமிர்ந்து அவளை பார்த்து தொலைக்காதீங்க.... அதே போஸ்ல நில்லுங்க...” என வார்த்தைகளை கடித்து துப்பியபடி சந்தோஷ் சொல்ல, ராம் எதுவும் பேசாமல் நின்றான்.
பொருத்தது போதும் என எண்ணினாளோ?!
“ரிஷி?” என அவள் உரக்க அழைக்க, தூக்கத்தில் இருந்து எழுபவனை போல திடுக்கிட்டு நிமிர்ந்தான் ரிஷிகேஷ்.
“க்கா??”
“உனக்கு எப்போ தெரியும்?” என அவள் நேரிடையாய் கேட்க, “எ..ன்ன...?” என கேட்க தொடங்கியவன், மைதிலியின் தீப்பார்வையில், “அன்னைக்கே தெரியும் அக்கா!” என்றான் மொட்டையாய்.
“ம்ம்ம்?” என அவள் புரியாமல் புருவம் சுருக்க,
“அதான் அக்கா.... இந்த ஆளு மேல பூந்தொட்டி விழுந்துச்சுள்ள? அதுக்கு அடுத்த நாளு காலைல தான்...” என விளக்கிய ரிஷியை வெறிக்கொண்டு முறைத்தான் கெளதம். ‘அடப்பாவி!!! ஷாப்பிங் மால்ல வரதன்ன பார்க்க போன அன்னைக்குன்னு சொன்னா ஆகாதாடா?’ என மனதுள் ரிஷியை வறுத்தான்.
“எப்படி தெரியும்?” என அவள் கேட்டதும், “காலைல உங்களை பார்க்க வீட்டுக்கு வந்தேன்ல? அப்போதான் ராம் என்னை கூப்பிட்டு பேசுனான் அக்கா... ப்ரோக்கு சரியாச்சுன்னு தெரிஞ்சதுமே ரொம்ப சந்தோசம் எனக்கு. ஆனா அவன் என்கிட்டே சத்தியம் வாங்கிட்டான் இதை யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு!!! அவன் ஒன்னு சொல்லி நான் இதுவரை கேக்காம இருந்ததே இல்லை. அதான் யார்கிட்டயும் நான் தெரிஞ்சமாறி காட்டிகல...” என தன்னிலை விளக்கம் கொடுத்தான் ரிஷி.
ரிஷி பேச பேச குனிந்த தலையை நிமிர்த்தாமல் கண்ணை மட்டும் மைதிலி மீது வைத்தபடி நின்றிருந்த ராம், ரிஷி பேசிமுடித்ததும் அவள் திரும்பி தன்னை முறைப்பதை கண்டு சட்டென குனிந்துகொண்டான்.
“நீ வந்து உட்காரு..” என ரிஷியை சொல்லிவிட்டு, “மிஸ்டர் கெளதம்?” என்றாள்.
கெளதம் அசையாது நிற்பதை கண்டு “மிஸ்டர் கௌதம்ம்ம்?” என இம்முறை அவள் அழுத்தி அழைக்க, “டேய் உன்னதாண்டா...” என வேகமாய் கௌதமின் பின்னந்தலையில் தட்டிவிட்டு மீண்டும் கைகட்டிகொண்டு நின்றுக்கொண்டான் சந்தோஷ்.
“தங்கச்சி? மீ? யூ காலிங் மீ மிஸ்டர் கெளதம்? இந்த அண்ணன்ன போயி சட்டுன்னு யாரோ மாறி பேசிட்டியே?” என தன் வாய் மேல கை வைத்து வருத்தப்பட, “ம்ப்ச்!! ஐ டோன்ட் வான்ட் டு ஹியர் யுவர் ஸ்டுபிட் திங்க்ஸ் எனிமோர். கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க... வென் அண்ட் ஹொவ் டிட் யூ நோ?” என கௌதமின் ஆக்டிங்க்கு புல் ஸ்டாப் வைத்தாள் மைதிலி.
“அது..... நம்ம சென்னை வந்த அடுத்தநாள், நைட் தூக்கம் வராம ரூம் விட்டு வெளியில வந்தேன். அப்போ ராம் ஒரு மூலைல காலை சுருட்டிகிட்டு படுத்துருந்ததை பார்த்து பயந்துபோயி அவன்கிட்ட போனேன். பாதி மயங்கி கிடந்தான்... அவனுக்கு என்னாகிருக்கும்ன்னு எனக்கு கெஸ் பண்ண முடிஞ்சுது.
சித்ராகூட்ல இருந்து நம்ம கிளம்புறப்போ அந்த வைத்தியர் என்கிட்டே சொல்லிருந்தாரு. ராம்கிட்ட நல்ல முன்னேற்றம் இருக்கு, இப்படியே தொடர்ந்தா இன்னும் கொஞ்சம் நாள்ல பரிபூரணமா குணமாகலாம். ஆனா இப்போ வேற விதமான வைத்தியமுறையை ஆரம்பிச்சா மீண்டும் அவன் பழைய நிலைக்கு போகவும் வாய்ப்பு இருக்குன்னு சொன்னாரு..” என அவன் சொல்ல,
“இதை ஏன் நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லல?” என இடைமறித்தாள் மைதிலி.
“இல்லை மைதிலி...நான் சொல்லிருக்கணும். என்னோட தப்புதான் அது..” என உண்மையாய் வருந்தியவன் பின் தொடர்ந்தான்.
“அவனை மயக்கத்துல இருந்து எழுப்பி, என்னனு கேட்டேன். ரொம்ப நடுங்கி போய் இருந்தான். அவனுக்கு ஒண்ணுமே புரியல.. அவன்கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லி ஓரளவுக்கு சரி பண்றதுக்குள்ள பொழுதே விடிஞ்சுருச்சு...” என்றான் கெளதம்.
“ஏன் என்கிட்டே சொல்லாம மறச்சீங்கன்னு கேட்டேன் ?” என மைதிலி அழுத்தமாய் கேட்கவும், “ராம் தான் சொல்ல கூடாதுன்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டான்..” என ரிஷி சொன்னதையே தானும் சொன்னான் கெளதம்.
இம்முறை மீண்டும் அவள் ராமை முறைக்க, அதற்க்கும் எதுவும் சொல்லாமல் நின்றான் ராம்.
சந்தோஷிடம் திரும்பி, “உன்கிட்டயும் சத்தியம் வாங்கிட்டான். அதானே சொல்ல போற?” என மைதிலி கேட்கவும், “ஆமா மைதிலி... ஆனா யார்கிட்டையுமே சொல்லகூடாதுன்னு சொன்னான் ராம். கடைசில பார்த்தா உன்னைத்தவிர எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு..” என குறைபட்டான் சந்தோஷ்.
“உனக்கு மட்டும் தான் தெரியும்.. உனக்கு மட்டும் தான் தெரியும்ன்னு சொல்லியே ஊரு முழுக்க சொல்லிருக்கான் தங்கச்சி... இவனை சும்மா விடாத...” என அவளை ஏத்திவிட்டான் கெளதம்.
“அவன் செஞ்சது தப்புன்னா, நீங்க எல்லாம் செஞ்சதும் தப்பு தான். தப்புக்கும் மேல நம்பிக்கை துரோகம்... எல்லாருமா சேர்ந்து தானே நடிச்சுருகீங்க? அவனை யாரும் குறை சொல்ல வேணாம்...” என கோவத்தில் கூட தன் ராமை விட்டுகொடுக்காமல் சொன்னாள் மைதிலி.
ராம் எழுந்த சிரிப்பை அடக்கியபடி நிற்க, அவனை கண்டுக்கொள்ளாது, “அந்த போலீஸ்ஸ எப்போ பார்த்து பேசுன நீ?” என சந்தோஷிடம் கேட்டாள் மைதிலி.
“நம்ம எல்லாரும் பீச்ல இருந்து கிளம்பி விஸ்வநாதனை பார்க்க ஹாஸ்பிட்டல் போனப்போ, வழில தான் ராம் அவரை பார்த்துருக்கான். நீங்க ஹாஸ்பிடல் உள்ள போனதும், எல்லாத்தையும் என்கிட்டே சொல்லி, உடனே அவனை பார்த்து நான் ஹெல்ப் கேட்டேன்னு சொல்லுனு சொன்னான். அதான் உங்கள வீட்ல விட்டுட்டு நான் ராம் சொன்னதை செய்ய போய்டேன்...” என சந்தோஷ் சொல்ல, “ஓ!! தலைவலிக்கு டேபிலேட் வாங்கபோனியே? அதுவா?” என்றாள் குற்றம் சாட்டும் பார்வையில்.
பின்பு எல்லோரையும் பார்த்து, “சோ கிட்டத்தட்ட ஒரு மாசமா எல்லாரும் என்னை ஏமாத்திட்டு இருந்துருக்கீங்க??ம்ம்ம் இவ்ளோதானா?? இல்லை இன்னும் ஏதாது நடந்துச்சா??” என்றாள் மைதிலி.
மூவரும் திரு திருவென முழிக்க, வாயை திறந்தான் ராம்.
“மையு.. எல்லாமே நான் சொல்லிதான் செஞ்சாங்க... ப்ளீஸ் அவங்களை மன்னிச்சுடு...” என்றான்.
“உன்னையே நான் மன்னிக்க தயாரா இல்லை. இதுல நீ சொல்லி நான் இவங்களை மன்னிக்கனுமா??” என முகத்திற்கு நேரே கோவமாய் கேட்டாள் மைதிலி.
“மையு.... கூல் பேபி.. உன்கிட்ட கொஞ்சநாள் விளையாடலாம்ன்னு தான் இப்படி பண்ணிட்டேன்... சாரி பேபி... என்ன பனிஷ்மென்ட் வேணாலும் கொடு. செய்யுறேன்...” என அவன் பெருந்தன்மையாய் சொல்ல, “கெட் லாஸ்ட்.. என் கண்ணு முன்னாடியே வராத... அதான் உன் பனிஷ்மென்ட்..” என சொல்லிவிட்டு அவள் எழுந்துக்கொண்டாள்.
“அப்போ பின்னாடியே வரவா?” என கேட்டபடி அவள் புடவையை பிடித்து இழுத்தான் ராம்.
“ம்ப்ச்... தள்ளி போ ராம்...” என அவள் விலக, அவளை விடாமல் துரத்தி சென்று இறுக்கி பிடித்துக்கொண்டான்.
“என்ன பண்ற நீ? தள்ளி போன்னு சொன்னா புரியாதா??” என அவள் கடுப்படிக்க, “ஓ! அப்படி சொன்னியா? என் காதுல தள்ளிட்டு போன்னு விழுந்துச்சு..” என சொல்லிவிட்டு அசட்டு சிரிப்பு சிரித்தான் ராம்.
அவனை வேகமாய் தள்ளிவிட்டு அவள் செல்ல, “ஏய்!!! செல்லகுட்டி... தங்கக்கட்டி, நில்லுடி....
ஓய்!!!! புருஷன் கூப்புடுறேன்ல்ல?? நில்லுடி என் காஷ்மீர் பச்சைமிளகாய்...!!!” வாய் ஓயாமல் பேசியபடி அவள் பின்னே ராம் செல்ல, ராமின் பின்னே மற்ற மூவரும் சென்றனர்.
“என் செல்லக்கிளி? இங்க பாருடி...!” மைதிலி கோவத்தில் வீட்டையே மூச்சிரைக்க சுற்றிவர, ராமும் சளைக்காமல் அவள் பின்னே சுற்றினான்.
“பட்டுக்குட்டி, வெல்லக்கட்டி, மாமா மேல கொஞ்சம் கருணை காட்டும்மா!!! ஹய்யோ இவ்ளோ வேகமா நடக்குறியேடீ பேபி... பரவல்ல.. பின்னாடி பார்த்தா கூட செம்மையா இருக்க!!!!” என விஷமமாய் சிரித்துக்கொண்டு அவன் சொல்ல, வேகமாய் நடந்துக்கொண்டு இருந்தவள், அவன் சொன்னதில் கடுப்பாகி கீழே இருந்த சின்ன பூந்தொட்டியை தூக்கி அவன் மீது வீசினாள்.
அவள் செய்யபோவது முன்பே விளங்க, லாவகமாய் விலகிக்கொண்டான் ராம். குறி தப்பிய அந்த பூந்தொட்டி ‘எதையும் தாங்கும் மனிதருள் மாணிக்கத்தின்’ மீது சரியாய் பட, அலறிக்கொண்டு அங்கேயே விழுந்தான் கெளதம்.
இதற்குமேல் அலைய முடியாது என முடிவு செய்த ராம், ஓடிசென்று அவள் எதிர்பார்காத நேரத்தில் தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.
“விடு டா... விடூஊஊ....” என அவள் திமிர திமிர அதை பொருட்படுத்தாமல் தூக்கிச்சென்று தங்கள் அறையின் பஞ்சு மெத்தையில் ‘பொத்’தென போட்டுவிட்டு அறைக்கதவை தாழிட்டான் ராம்.
கட்டிலில் விழுந்தவள் எழுந்துக்கொள்ளாது முகத்தை மெத்தையில் அழுத்தியபடி படுத்திருப்பதை கண்டு, அவளை நெருங்கி சென்று தோளில் கை வைத்தான் ராம். வெடுக்கென அவன் கையை தட்டிவிட்டாள் மைதிலி.
அவள் செய்கையில் சிரிப்பு வர, சத்தமாய் சிரித்துக்கொண்டு, அவள் மீதே விழுந்தான் ராம்.
“இப்போ எப்படி என்னைதான்டி போவான்னு நானும் பார்க்குறேன்...” என அழுத்தமாய் அவள்மீது அவன் படுத்துக்கொள்ள, அசைவின்றி இருந்தாள் மைதிலி.