"பார்வை"
----------------
முன்பொரு வருடம்-
இன்டெர்-கல்லூரிகளுக்கான பெண்கள் Volley Ball போட்டியில் எங்களது ஜூனியர் பெண்கள் விளையாடுகையில், தன்னோட ஆள் "சர்வீஸ்" (அவளும் ஜூனியர்தான்) செய்வதை கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்த என் நண்பனிடம் முன்னே கை ஆட்டி வினவினேன்- "சார் அப்படி என்னத்த ரசிக்கிறீங்க?"
"மச்சி... அவ சர்வீஸ் பண்றப்ப...."
"டேய் டேய் டேய் ... அவ உன் ஆளுடா.. வேணாம்.."
அடச்சீ.. ஒவ்வொரு தடவ அவ சர்வீஸ் பண்றப்பவும் அவ வலது கால் பெருவிரலை மட்டும் மூணுதடவ மடக்கி நீட்டுறா பாரேன்.. என்ன அழகு...! என்றவன் ஜொள்ளிக்கொண்டே மெய்மறந்ததை "கிறுக்குபயபுள்ள" என்றப்போது எண்ணினாலும்,
ஐம்பது மீட்டர் தொலைவில் பெருங்கூட்டம், பேரிரைச்சல், Tight Shirt & ஷார்ட்ஸ்-இல் மேலுங்கீழுமாய் விம்மியெழுந்த சாயாக்கொங்கை பெண்களென்று அனைத்தையும் தாண்டி, பிடித்த பெண்ணின் வெகுசிறு விஷயத்தை ரசித்த அவன் "பார்வை", பின்னாளில் நானெழுதிய புத்தகத்தில் ஒரு Chapter ஆகியதை மறுக்கவியலாது. காரணம்,
"A Designer needs to observe beauty among chaos" எனும் "பார்வை" தியரி. இது Architecture-இல்.
நிதர்சனத்தில்..
"பார்வை" என்பது உலக சுழற்சிக்கே அதியற்புத விஷயம். பாறை உருள்வதை பார்த்து சக்கரமும், ஆப்பிள் விழுவதை பார்த்து Gravity-யும் பிறந்தது, "அறிவுப்பார்வை"யின் விளைவே. "கிறக்கப்பார்வை" காட்டிடுங் காதலியின் முலை வடிவு தெரியும் முந்தானை விலகலை ரசிக்கும் காதலன் பார்வை காதலிலுஞ் சேராது காமத்திலும் சேராது திரியும் தவிப்பில் இருப்பதெல்லாம் "இன்பத்துப்பார்வை" என்று வள்ளுவனும், "கடைக்கண் பார்வைதனை கன்னியர்தம் காட்டிவிட்டால்" என்று பாரதிதாசனும் எழுதியது "பார்வை"யின் வீரியமறிந்து என்றுணர்க.
அறிவியலும் இலக்கியமும் தள்ளிவைத்து கொஞ்சம் இதனை நிஜவாழ்வில் பொருத்துகையில், எரிச்சல்சூழ் புறவுலகில் (I Mean Office, Workplace, Society, Day to day Stress..) நாம் அன்றாடங் காண்பதெல்லாம் அழகாயிராது என்பது சர்வ நிச்சயமாதலால், மாற்றிக்கொள்ள வேண்டியது சூழலை அல்ல, நம் பார்வையை என்பதில் கொஞ்சம் நிச்சயமாய் இருங்கள். I Mean, எது வந்தாலும் வரட்டும், Just Look Positively. உங்கள் மீதான மற்றவர்களின் பார்வையை "மயிராப்போச்சு" என்று அமைதியாய் கடந்து விடுவதில் இருக்கும் நிம்மதியை விட, வேறேதும் பெரிதில்லை.
கடவுளின் மீதான பக்தனின் பார்வை..
கருவின் மீதான தாயின் பார்வை-தன்
உருவின் மீதான நடிகையின் பார்வை..
உலகின் மீதான எனதின் பார்வை-
என்று ஒரு குறிப்பின் கீழேழுத "பார்வை" என்பது கடுகல்ல. முடிவும் தொடக்கமுமற்ற பெருங்கடல் என்பதால் இங்கே நிறுத்துவது சரியென்றாலும், Personally எனக்கு பிடித்த “பார்வை” யாதெனில்,
பசியில் மயங்கியதொரு பள்ளி மாணவியை பார்த்ததும், "படிக்கணும்னு நா தொறந்து வச்ச பள்ளிக்கூடத்துக்கு இப்படி பசியோட புள்ளைங்க வந்தா எப்படி படிக்கும்னேன்? என்று சத்துணவு போட்டான் பாரு என் தலைவன் காமராசன்.. அவனது "வெகுளிப்பார்வை" மட்டுமே!!!
-------------------------