Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu - 3 ( Re-run )

Advertisement

நிச்சயதார்த்தத்திற்கான அடுத்தடுத்த வேலைகள் மளமளவென நடந்தன. புருஷோத்தமனும், பரமேஷ்வரனும் ஜோசியரிடம் ஜாதகபொருத்தம் பார்த்து அனைத்தும் திருப்தியாக இருக்க வீட்டிற்கு அழைத்து புருஷோத்தமன் கூறியது போல மாலை நிச்சயதார்த்தம், யார் மாப்பிள்ளை, எப்போது வருவார்கள் என்பது பற்றி பரணிக்கும், சரஸ்வதிக்கும் அழைத்து சொன்னவர் மகளுக்கு இதை பற்றி கூறவேண்டாம் என்றும் மறக்காமல் சொல்லிவிட்டார்.

பரணிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. காலையில் தான் அவ்வளவு களேபரம் நிகழ்ந்திருக்கிறது. அப்படி இருந்தும் இவரால் எவ்வாறு இவ்வளவு நம்பிக்கயோடு அதுவும் நிச்சயதார்த்தம் வரை செல்ல முடிகிறது என்று யோசித்து யோசித்து தலைதான் வலித்தது. சரஸ்வதியிடம் மெல்ல வீட்டை கொஞ்சம் மகளில் கண்ணை உறுத்தாமல் அலங்காரம் செய்ய ஆலோசனை நடத்தியவர் அதன் படி வேலையாட்களை கொண்டு வேலையில் ஆழ்ந்தார்.

ஹர்ஷிவ்தாவோ நிஷாந்திற்கு மொபைலில் அழைத்து அழைத்து சோர்ந்துபோனவள் அவனை மனதிற்குள் தாளித்தவரே தன் தாயின் மீது கொண்ட கொஞ்சம் பயத்தின் காரணமாக இன்டர்காமில் சாப்பாட்டை மாடிக்கு அனுப்பும் படி பணித்துவிட்டு தன் அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டாள். அதனால் கீழே நடக்கும் விஷயங்கள் எதுவும் அவளை எட்டவில்லை.

மாலை தனக்கு தெரிந்த முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்புவிடுத்துவிட்டு அலுப்புடன் வீடு திரும்பினர் பரமேஷ்வரன், அவரின் கூடவே அவரது அண்ணன் செல்வமும். பரணியையும், சரஸ்வதியையும் தனியாக அழைத்து நடந்த விபரங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினார்கள்.

ஷக்தியையும், புருஷோத்தமனையும் பற்றி நன்றாக தெரியும் என்றாலும் அவர்களுக்கு இது எந்தளவிற்கு சரியாக வரும் என்பதை விட திடீரென்று நிச்சயதார்த்தம் என்று சொன்னால் மகளின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று நினைக்கும் போதே அடிவயிறு கலங்கியது. பரமேஷ்வரன் ஓய்ந்துபோய் அமர்ந்திருந்தார். மனம் முழுவதும் எப்படியாவது இந்த திருமணம் கைகூடிவிடவேண்டும் என்ற எண்ணம் தான் வியாப்பித்திருந்தது. ஆனாலும் இனி நடப்பது நடக்கட்டும் என்று விட்டனர். அந்தளவிற்கு விரக்தி சூழ்ந்திருந்தது அவர்களின் நெஞ்சங்களில்.

இங்கே ஷக்தியோ நேராக நிஷாந்தை அழைத்துகொண்டு பரமேஷ்வரனின் டெக்ஸ்டைல்ஸ்க்கு சென்றவன் நிஷாந்தின் உதவியோடு ஹர்ஷிவ்தாவிற்கு பொருத்தமான அவளுக்கு பிடித்தமான கலரில் நிச்சயதார்த்த புடவையை எடுத்தவன் அதை பில் போட்டுவிட்டு அங்கேயே அதற்கான மேட்சிங் ப்ளவுசையும் தைக்க சொல்ல ஹர்ஷிவ்தாவின் அளவுகள் அங்கிருந்த டெயிலருக்கு தெரியுமென்பதால் அது சுலபமான ஒன்றாகிவிட்டது.

பரமேஷ்வரனின் உத்தரவின் பேரில் துரிதகதியில் சட்டை தைத்து வரப்பட அதற்குள் நகைக்கடை ஒன்றிற்கு சென்று நிச்சயத்திற்கான மோதிரமும் தாம்பூலத்தில் வைத்து கொடுக்க ஒரு ஆரமும் வாங்கிகொண்டு புடவையையும், ப்ளவுசையும் வாங்கிக்கொண்டு நேராக திருவேங்கடத்தின் வீட்டிற்கு சென்றுவிட்டான் நிஷாந்தையும் அழைத்துகொண்டு. தன்னை விட்டு எங்கும் செல்லகூடாது என்ற கட்டளைக்கு உடன்பட்டு நிஷாந்தும் அவனை விட்டு எங்கும் நகரவில்லை.

திருவேங்கடத்தின் வீட்டில் ஷக்தியின் சித்தியும் சித்தப்பாவும் மட்டுமே இருந்தனர். சீர்வரிசை தட்டுகளை எல்லாம் சரிபார்த்துகொண்டிருந்தனர் சகுந்தலாவும் திருவேங்கடமும். அவர்களுக்கு உதவியாக ஷக்தியின் சித்தி வேதவள்ளி, சித்தப்பா குமரன் இருவரும். மாலை நெருங்கவும் புருஷோத்தமனும் வந்துவிட அனைவரும் புறப்பட தயாராக திருவேங்கடமும் சகுந்தலாவும் தயாராகாமல் இருந்தனர்.

காரணம் தெரிந்தும் ஷக்தி அவர்களிடம், “என்னாச்சு மாமா, நீங்க கிளம்பலையா?...” என கேட்டதும்,

“இல்லைப்பா நான் வரமுடியாது. நேத்துதான் கோவத்துல பரமு வீட்டுக்கு போய்அவன்கிட்ட கண்டபடி பேசிட்டு வந்துட்டேன். நாங்க இல்லைனா என்ன? அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்கல்ல...” நல்லபடியா நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டு வாப்பா. உங்க கல்யாணம் நல்லபடியா நடந்தா மருதமலை முருகனுக்கு வேல் செஞ்சு வைக்கிறதா நேத்திக்கடன் போட்டிருக்கேன். எங்க ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போவும் இருக்கும்...” என்று கலங்கிய கண்களை கட்டுப்படுத்திகொண்டே பேச,

“ஏன் மாமா, காதல் கல்யாணம் செய்யவிடமாட்டோம்னு சொந்தபந்தம் எல்லோரும் எதிர்த்து நின்னப்போ அம்மாவுக்கு ஒரு அண்ணன் ஸ்தானத்துல இருந்து எங்கப்பாக்கு கல்யாணம் செய்து கொடுத்தீங்க. அதிலிருந்து எனக்கொரு தாய்மாமாவா நீங்கதானே முறை எல்லாம் செய்துட்டு வறீங்க. அம்மா இறந்தப்போ கூட அண்ணன்ன்ற உரிமையை விட்டுகொடுக்காம உங்க கடமையை சரியா செய்துட்டு வந்த நீங்க இப்போ என் வாழ்க்கையில முக்கியமான நேரத்துல நீங்க இல்லைனா அம்மாவோட ஆத்மா சாந்தியடையுமா?...” என உடைந்துபோய் கேட்டவனை கட்டிகொண்டு அழுதவரை அதட்டினார் சகுந்தலா.

“ப்ச். என்னங்க இது. நல்லநாள் அதுவுமா நீங்களும் அழுதுட்டு நம்ம புள்ளையையும் அழவைக்கிறீங்க?... போங்க போய் வேற ட்ரெஸ் மாத்துங்க. நான்லாம் கிளம்பிதான் இருக்கேனாக்கும். இது நம்ம வீட்டு கல்யாணம். ஹர்ஷூவும் நம்ம பொண்ணுதானே. நாமே தள்ளி நிக்கலாமா?...” என அந்த சூழ்நிலையை அழகாக கையாண்டு அனைவரையும் கிளப்பிக்கொண்டு பரமேஷ்வரனின் வீட்டை நோக்கி சென்றார் சகுந்தலா.

இங்கே ஹர்ஷிவ்தாவோ மாலை வரை நன்றாக தூங்கி எழுந்து கீழே வந்தவளுக்கு ஒரே ஆச்சர்யம். “காலையில் மாடிக்கு செல்லும் போது வீடு இருந்த இருப்பென்ன? இப்போது இருக்கும் இருப்பென்ன?, எதற்காக இந்த அலங்காரம். இவங்கலாம் நம்மோட சொந்தக்காரங்களாச்சே? எதுக்காக வந்திருக்காங்க?...” என யோசனையோடே கீழே இறங்கி வந்தாள்.

அவளை பார்த்த பரணி என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் ஹர்ஷிவ்தா வேறு யாரிடமும் பேசும் முன்பாக சரஸ்வதியை அனுப்பி சமாளிக்க சொன்னார். அதன்படி சரஸ்வதியும் சிந்தனையோடே அவளை வேகமாக நெருங்க,

“என்னாச்சு சித்தி, நம்ம வீட்ல எதுவும் விசேஷமா?...” என அவள் வாயாலேயே சரஸ்வதிக்கு நல்ல யோசனையை எடுத்துகொடுத்தாள்.

“ஆமாண்டா கண்ணு. உனக்கு கல்யாண யோகம் சீக்கிரமே கூடிவரனும்னு வீட்ல பூஜைக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம். அதான் எல்லோரும் வந்திருக்காங்க...” என்றவரை ஊன்றி பார்த்தவள் வேறொன்றும் கேட்காமல் மீண்டும் வீட்டை ஆராய அங்கே ஐயரை காணவும் உண்மைதான் போல என எண்ணிகொண்டாள்.

“ரொம்ப நேரமா தூங்கினதால தலைவலிக்குது. சித்தி காபி வேணும்...” என அடுக்களைக்குள் செல்ல முனைய,

“காபி தானே நானே மாடிக்கு கொண்டுவரேன். நீ போய் குளிச்சிட்டு நல்ல புடவையா எடுத்து கட்டிட்டு வாம்மா...”

“என்னது இப்போவும் புடவையா?...” என அதிர்ந்தவளிடம் இனியும் இங்கே வைத்து பேசமுடியாது என்று அவளை மடிக்கு தள்ளிக்கொண்டே,

“ஆமாம்டா. நீதானே சபையில பூஜையில உட்காரனும். அதுக்குதான். அதுவுமில்லாம காலையில நடந்த விஷயத்துல அப்பாம்மா ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. அவுங்களுக்காக இப்போவாச்சும் இதை கேளுடா...” என்று கெஞ்சலுடன் கூறி முடிக்கவும் ஹர்ஷூவின் அறை வரவும் சரியாக இருந்தது.

பலத்த யோசனைகளுக்கு பின் சரி என்று ஒப்புகொண்டாள். அரைமணி நேரத்தில் கிளம்பி இருக்குமாறு கூறிவிட்டு வந்தபின் தான் சரஸ்வதிக்கு மூச்சே விட முடிந்தது. ஆனாலும் இது எவ்வளவு நேரம்? மீண்டும் காபியோடு ஹர்ஷிவ்தா தயாராகிவிட்டாளா என்று நோட்டம் விட்டுவிட்டு அதில் திருப்தி அடைந்தவராக பரணியிடம் அந்த தகவலையும் சேர்ப்பித்து விட்டார்.

கௌரவ் ஷக்திவேல் தன் குடும்பம் சகிதமாக கம்பீரமாக நடந்துவர அவன் கையை பற்றிக்கொண்டு அருகில் கலவரம் கண்களை மீறி வெளியே தெரிய நடுக்கத்தோடே உடன் வந்தான் நிஷாந்த்.

திருவேங்கடம் வந்ததில் அப்படி ஒரு சந்தோஷம் பரமேஷ்வரனுக்கு. சகுந்தலாவை இழுத்து தன்னோடு நிறுத்திகொண்டார் பரணி. திருவேங்கடத்திற்கு கோபமே இருந்தாலும் நேற்று தான் பேசியதை மறந்துவிட்டு வெள்ளை சிரிப்போடு தன்னோடு பேசும் தன் நண்பனிடம் பாராமுகத்தை காட்ட மனம் வரவில்லை. அவரும் இயல்பாகவே இருந்தார்.

அனைவரையும் வரவேற்று அமரவைத்து சிலபல விசாரிப்புகளுக்கு பின் நிச்சயதார்த்தத்தை நடத்த ஹர்ஷிவ்தாவை அழைத்து வர சொன்னார் ஐயர். ஆயிரம் தெய்வங்களை வேண்டிக்கொண்டு பரணியும் சரஸ்வதியும் அவளை அழைத்துவர சென்றனர். அங்கிருந்தவர்களில் ஹர்ஷிவ்தாவின் குணமறிந்தவர்கள் அனைவருக்குமே, ஏன் புருஷோத்தமனுக்கும் கூட உள்ளூர ஒரு படபடப்பு நொடிக்கு நொடி அதிகரித்து கொண்டே சென்றது. ஆனால் ஷக்தியோ மிக இலகுவாக அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் மாடியிலிருந்து பெண்ணை அழைத்துகொண்டு கீழே வரும் அரவம் கேட்டும் ஷக்தி தன் விழிகளை தன்னவளை நோக்கி திருப்ப முனையவில்லை. அவளுக்கோ இறங்கி வரும் போதே இது எதற்கான ஏற்பாடு என்று தெள்ள தெளிவாகியது. உள்ளுக்குள் கடுகடுத்துகொண்டே வந்தவள் நமஸ்காரம் செய்யாமல் கூட அலட்சியமாக நின்றாள்.

பரணி,”ஹர்ஷூ, எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணு...” என்று மெல்ல காதில் கூறியும் திமிராகவே நின்றாள்.

ஷக்தியோ அதை கண்டுகொள்ளாமல் திருவேங்கடத்தை ஒரு பார்வை பார்க்க, அவர், “ஐயரே நீங்க நிச்சயப்பத்திரிக்கையை வாசிங்க...” என சப்தமாக ஹர்ஷிவ்தாவை முறைத்துக்கொண்டே கூறினார்.

அதில் மேலும் எரிச்சலடைந்தவள் தன் தந்தையின் அருகில் போய் அமர்ந்துகொண்டு, “என்னப்பா இது? என்கிட்ட ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லலை?...” என பரமேஷ்வரனிடம் முணுமுணுக்க அதை கண்டுகொள்ளாமல் அவர் தாம்பூலம் மாற்றுவதிலேயே கவனமாக இருந்தார்.

அவர் திரும்ப மாட்டார் என தெரிந்துகொண்டவள் பல்லை கடித்தவாறே ஷக்தியை பார்க்க அவனோ இவளின் பார்வையை வேண்டுமென்றே தவிர்த்தான். அதை தவறாக கணித்த ஹர்ஷூ, “ஒ சார் வெளில நம்மை பத்தி விசாரிச்சிருப்பார் போல. அதான் புள்ள நம்மளை பார்க்க பயப்புடுது போல...” என கித்தாய்ப்பாக எண்ணிக்கொண்டே அவனருகில் அமர்ந்திருந்த நிஷாந்தை பார்த்து முறைத்தாள். அவனோ கெஞ்சல் பார்வை பார்த்தான்.

இதற்கு மேலும் தாமதித்தால் அனைத்தும் கைமீறிவிடும் என நினைத்தவள் வேகமாக எழுந்து நின்று, “ எனக்கு இந்த மாப்பிள்ளை சாரோட கொஞ்சம் பேசனும். அந்த ரூம்க்கு வர சொல்லுங்க...” என கூறிவிட்டு விடுவிடுவென்று அவளின் ராசியான விருந்தினர் அறைக்குள் சென்று மறைந்தாள். அவனிடம் மன்னிப்பை வேண்டும் பார்வையை விட்ட பரமேஷ்வரனுக்கும், அனைவருக்கும் பார்வையாலே தைரியம் சொல்லிவிட்டு தானும் அந்த அறைக்குள் சென்றான்.

அங்கே இவனை முறைத்தவண்ணம் நின்றிருந்தாள் அவனவள். அதை அசால்ட்டாக எதிர்க்கொண்டவன் அவளை பார்வையாலேயே ஊடுருவ அதிலிருந்த ஏதோ ஒன்று சில நொடிகள் அவளை கட்டிப்போட்டதென்பது தான் உண்மை. சபையில் கண்டுகொள்ளாமல் இருந்தவன், இங்கே வந்ததும் இப்படி ஆழ்ந்த பார்வை பார்த்ததில் கோவமடைந்தவள்,

“ஹலோ மிஸ்டர், எதுக்காக இப்படி பார்க்கறீங்க?...” என அந்த கொந்தளிப்பு குறையாமல் கேட்டதும்,

“என்னோட பேர் மிஸ்டர் இல்லை. கௌரவ் ஷக்திவேல். அதுமட்டுமில்லை நீயும் தான் என்னை பார்த்த. நான் எதுவும் சொல்லலையே?...” என திருப்பிக்கொடுத்தவன் தப்பி தவறி கூட தன் ரசனையை, அவள் மீதான தன் விருப்பத்தை அவளுக்கு துளியளவும் காட்டவில்லை.

“ஹலோ நான் உங்களை பார்க்கிறதும் நீங்க என்னை பார்க்கிறதும் ஒண்ணா? ப்ச், அதை விடுங்க. எனக்கு இந்த நிச்சயத்தில இஷ்டம் இல்லை. என்னை பிடிக்கலைன்னு நீங்களே சொல்லிட்டு உங்க கூட வந்தவங்களை கூட்டிட்டு உடனடியா இந்த வீட்டை விட்டு கிளம்புற வழியை பாருங்க...”

“இன்னும் நிச்சயதார்த்தமே முடியலை. அதுவும் இல்லாம, நான் ஏன் உன்னை பிடிக்கலைன்னு சொல்லனும்? எங்க வீட்ல எல்லாருக்குமே உன்னை பிடிச்சிருக்கு. பொய் சொல்லி எனக்கு பழக்கமில்லை. இந்த கல்யாணம் வேண்டாம்னு நீ வேணும்னா போய் சொல்லேன்...” என அவளது தற்போதைய திட்டத்தை தெரிந்துகொள்ள மனதை படிக்க முயன்றான்.

“அது...அதெல்லாம் சொல்லமுடியாது. இந்த நிச்சயமே நடக்காதுன்னு சொல்றேன். ஏன் நீங்க கல்யாணத்தை பத்தியே பேசறீங்க? ப்ளீஸ். நிறுத்திடுங்க...” அவனின் பார்வையை உணர்ந்ததுமே தெரிந்து விட்டது ஹர்ஷூவிற்கு நம் மிரட்டல் இவனிடம் செல்லாது என்பது. அதனால் தணிந்து பேச முயன்றாள்.

“ம்ஹூம். இந்த கல்யாணம் நடந்தே ஆகனும். எங்கப்பாவுக்காக நான் என்னவேணும்னாலும் செய்வேன். அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சுப்போச்சு. நீதான் அவரோட மருமகள்ன்னு எப்போவோ முடிவு பண்ணிட்டார். அவரோட முடிவுதான் என்னோட முடிவும். அதை மாத்த முடியாது...” என்றவனது வார்த்தையில் தனக்கு தேவையானதை எடுத்து கொண்டு தனக்கு சாதகமான விஷயத்தை பிடித்துகொண்டாள்.

“அப்போ உங்கப்பாவோட சந்தோஷத்துக்காகத்தான் இந்த சம்பந்தம். அப்டித்தானே?...” என கொஞ்சம் குரலில் உற்சாகம் தெறிக்க கேட்டவளை ஒரு நமுட்டு சிரிப்பை வாயினுள் அசைபோட்டபடி அமைதியாக தலையை மட்டும் ஆட்டினான்.

இப்போது எள்ளலாக அவனை பார்த்தவள், “சீ மிஸ்டர் கௌரவ் ஷக்திவேல், எனக்கு லைப் பாட்னரா வரபோறவர் என்னை விரும்பித்தான் மேரேஜ் செய்துக்கனும். யாரோட ஆசைக்காகவும், நிர்பந்தத்திற்காகவும் இல்லை. இன்னைக்கு உங்கப்பாவுக்காக அவரோட ஆசைக்காக என்னை கல்யாணம் செய்துக்கற நீங்க நாளைக்கே உங்கப்பாவுக்கு பிடிக்காம போனா என்னை கைவிடமாட்டீங்கன்னு என்ன நிச்சயம் சார்?...” என அவனை மடக்கிவிட்ட குஷியில் கேட்க,

“ஓஹ் ரியலி!!!.... இதுதான் உன் ப்ராப்ளமா?... நான் உன்னை விரும்பி தான் கல்யாணம் செய்துக்கனும்ன்ற உன்னோட ஆசையை இவ்வளவு வெளிப்படையா சொன்னதுக்கு தேங்க்ஸ். எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு. நானும் உன்னை விரும்பித்தான் மேரேஜ் பண்ணிக்க போறேன். போதுமா?...” என அப்பாவியாக கண்கள் மின்ன கேட்டவனை அடப்பாவி என்பது போல விழி விரித்து திகைத்து போய் பார்த்தாள்.

இதுதான் சமயமென்று அவனுக்கு அவளை பார்த்தவுடன் தோன்றிய அந்த உணர்வை அவளின் விழிகளின் வழியாக அவளின் இதயத்திற்குள் கடத்த முயன்று அதில் வெற்றிபெறும் தருவாயில் அவளது உள்ளுணர்வு விழித்துக்கொண்டதும் அவளிடம் தலைதூக்கிய அலட்சியபாவத்தால் தானும் தன்னிலை அடைந்தான்.

இதற்கு மேல் பேசி பயனில்லை என்றுணர்ந்தவன், “ இந்த கல்யாணம் நடக்கும் நடந்தே தீரும், உன்னை காதலிச்சுதான் கல்யாணம் செய்யனும்னா நான் தயார்...”

“கண்டிப்பா நீங்க நினைக்கிறது நடக்காது. அப்படியே நடந்தாலும் அது உங்களுக்குத்தான் ஆபத்தா முடியும்...” என்று எச்சரிக்கை குரலில் கூறவும் அவளை நெருங்கியவன் தன் மூச்சுக்காற்றை உணரும் வகையில் கொஞ்சமே இடைவெளிவிட்டு நின்று,

“உன்னால முடிஞ்சதை பாரு. ஆனா எதுவா இருந்தாலும் என் மனைவியாகி என் கூடவே இருந்து இதற்கு என்னை பழிவாங்கு. உன்னைத்தான் கல்யாணம் செய்துக்கனும்ன்ற என்னோட முடிவு என்னைக்குமே மாறாது. சரியா?...” என்று சவால் விட்டான்.

“இதுக்கெல்லாம் நீ அனுபவிப்படா...” என கத்தியவளை இன்னும் நெருங்க கொஞ்சமும் பின் வாங்காமல் சீற்றமுடன் நின்றவளை வியக்காமல் இருக்கமுடியவில்லை. ஆனாலும் விட்டுத்தராமல்,

“எதுக்காக கத்துற, நான் என்ன அவ்வளவு தூரமாவா இருக்கேன். வேணும்னா சொல்லு, இன்னும் பக்கத்தில வரேன். இவ்வளவு போதுமா?...” என நெருக்கத்தை கூட்டிக்கொண்டே அவளை அடுத்தடுத்து மண்ணை கவ்வ வைத்தான்.

அவனிடம் தோற்றுப்போன உணர்வு தன்மேல் கழிவிரக்கத்தை உண்டாக்க அந்த உணர்வை அடியோடு வெறுத்தவள் இப்படி தன்னையும் ஒருத்தன் மிரட்டி பணிய வைப்பான் என்று கற்பனையிலும் எண்ணவில்லை. இதற்கு மேலும் பேசினால் மேலும் ஏதாவது விவகாரமாக செய்துவிடுவான் என அவளின் பெண்மனம் எச்சரிக்க மனமே இல்லாமல் இரண்டடி பின்வாங்கினாள்.

அப்பாவிடம் குடுத்த வாக்கை மீறி தன்னால் இந்த திருமணத்தை நிறுத்த முடியாது என உணர்ந்து கொண்டவளுக்கு தெரிந்துவிட்டது இவனிடம் தன் பாட்சா பலிக்காது என்றும், ஷக்தி இந்த கல்யாணத்தை நடத்தியே தீருவான் என்றும். திருமணம் என்றதும் அவளுக்கும் சில பயவிதைகள் முளைக்க தொடங்கியது. ஆனாலும் அதையெல்லாம் பெரிதுபண்ணினால் அவளின் கெத்து என்னாவது?

கலங்க இருந்த கண்களை தடுத்து வலுக்கட்டாயமாக மனதை இறுக்கமாக்கி தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அவளும் முடிவுக்கு வந்துவிட்டாள். இனி நடப்பது நடக்கட்டும் என்று. ஆனால் இவனை சும்மாவா விடுவது? என நினைத்துக்கொண்டே அவனை நிமிர்ந்துபார்க்க சிறு நூலிழையில் அவனும் அவளருகிலேயே தான் நின்றிருந்தான்.

சட்டென்று பின்வாங்கியவள் தடுமாற அவளை தாங்கி பிடிக்க கைகொடுத்தவனை மீண்டும் அலட்சியப்படுத்தியவள் தன்னை சுதாரித்துகொண்டு நிலையாக நின்றாள். அதுவரை அவளது முகபாவங்களை கவனித்தவன் அவளது போராடி களைத்த தோன்றம் அவனை வாவென்று அழைக்க, “ம்ஹூம் இனிமேலும் நின்னா எசகுபிசகா எதாச்சும் செஞ்சு அதுவே கல்யாணத்தை நிறுத்த இந்த சண்டி ராணிக்கு சாதகமா போய்டும்..” என எண்ணிகொண்டவன்,

தொண்டையை செருமிக்கொண்டு, “ ம்ம் கல்யாணத்துக்கு தயாராகிட்டன்னு நினைக்கிறேன். ஓகே. வா போகலாம்...” என்று அழைத்துவிட்டு முன்னால் நடந்தவன், கதவை அடைந்து மீண்டும் அவளை திரும்பி பார்த்து,

“இன்னைக்கும் நான் அதே ஹோட்டல்ல அதே ரூம்ல தான் இருப்பேன். அதுக்குன்னு கத்தியோட பால்கனி வழியா மேல ஏறி வரவேண்டாம். போன் பண்ணு நானே உன்னை கூட்டிட்டு போறேன்...” எனவும் அவனை முறைத்துகொண்டிருந்தவள் ஷக்தி கூறியதில் மொத்த சக்தியும் வடிந்து போய் நின்றாள்.

அதைவிட இன்னும் பதினைந்து நாளில் திருமணம் என்பதுதான் அவளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்படியாவது இதை நிறுத்தவேண்டுமே என மூளையை எவ்வளவு கசக்கியும் அவளுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை. யோசித்து முடிப்பதற்குள் திருமணமும் நடந்து முடிந்தது. ஆனால் அதை நடத்தி முடிப்பதற்குள் அனைவரையும் தவிக்கவிட்டாள்.

அடாவடியின் மொத்த உருவமான தன் மனைவியானவளை கௌரவ் ஷக்திவேல் எப்படி சமாளிக்க போகிறான்?

நதி பாயும்....
Super.
 
Sakthi ku periya challenge kaathiruku:D:Dmadam kalyanam varaikum entha plan pannama irukanum athanpa marriage a niruthurathuku .Nice epi sis:love:
 
நிச்சயதார்த்தத்திற்கான அடுத்தடுத்த வேலைகள் மளமளவென நடந்தன. புருஷோத்தமனும், பரமேஷ்வரனும் ஜோசியரிடம் ஜாதகபொருத்தம் பார்த்து அனைத்தும் திருப்தியாக இருக்க வீட்டிற்கு அழைத்து புருஷோத்தமன் கூறியது போல மாலை நிச்சயதார்த்தம், யார் மாப்பிள்ளை, எப்போது வருவார்கள் என்பது பற்றி பரணிக்கும், சரஸ்வதிக்கும் அழைத்து சொன்னவர் மகளுக்கு இதை பற்றி கூறவேண்டாம் என்றும் மறக்காமல் சொல்லிவிட்டார்.

பரணிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. காலையில் தான் அவ்வளவு களேபரம் நிகழ்ந்திருக்கிறது. அப்படி இருந்தும் இவரால் எவ்வாறு இவ்வளவு நம்பிக்கயோடு அதுவும் நிச்சயதார்த்தம் வரை செல்ல முடிகிறது என்று யோசித்து யோசித்து தலைதான் வலித்தது. சரஸ்வதியிடம் மெல்ல வீட்டை கொஞ்சம் மகளில் கண்ணை உறுத்தாமல் அலங்காரம் செய்ய ஆலோசனை நடத்தியவர் அதன் படி வேலையாட்களை கொண்டு வேலையில் ஆழ்ந்தார்.

ஹர்ஷிவ்தாவோ நிஷாந்திற்கு மொபைலில் அழைத்து அழைத்து சோர்ந்துபோனவள் அவனை மனதிற்குள் தாளித்தவரே தன் தாயின் மீது கொண்ட கொஞ்சம் பயத்தின் காரணமாக இன்டர்காமில் சாப்பாட்டை மாடிக்கு அனுப்பும் படி பணித்துவிட்டு தன் அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டாள். அதனால் கீழே நடக்கும் விஷயங்கள் எதுவும் அவளை எட்டவில்லை.

மாலை தனக்கு தெரிந்த முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்புவிடுத்துவிட்டு அலுப்புடன் வீடு திரும்பினர் பரமேஷ்வரன், அவரின் கூடவே அவரது அண்ணன் செல்வமும். பரணியையும், சரஸ்வதியையும் தனியாக அழைத்து நடந்த விபரங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினார்கள்.

ஷக்தியையும், புருஷோத்தமனையும் பற்றி நன்றாக தெரியும் என்றாலும் அவர்களுக்கு இது எந்தளவிற்கு சரியாக வரும் என்பதை விட திடீரென்று நிச்சயதார்த்தம் என்று சொன்னால் மகளின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று நினைக்கும் போதே அடிவயிறு கலங்கியது. பரமேஷ்வரன் ஓய்ந்துபோய் அமர்ந்திருந்தார். மனம் முழுவதும் எப்படியாவது இந்த திருமணம் கைகூடிவிடவேண்டும் என்ற எண்ணம் தான் வியாப்பித்திருந்தது. ஆனாலும் இனி நடப்பது நடக்கட்டும் என்று விட்டனர். அந்தளவிற்கு விரக்தி சூழ்ந்திருந்தது அவர்களின் நெஞ்சங்களில்.

இங்கே ஷக்தியோ நேராக நிஷாந்தை அழைத்துகொண்டு பரமேஷ்வரனின் டெக்ஸ்டைல்ஸ்க்கு சென்றவன் நிஷாந்தின் உதவியோடு ஹர்ஷிவ்தாவிற்கு பொருத்தமான அவளுக்கு பிடித்தமான கலரில் நிச்சயதார்த்த புடவையை எடுத்தவன் அதை பில் போட்டுவிட்டு அங்கேயே அதற்கான மேட்சிங் ப்ளவுசையும் தைக்க சொல்ல ஹர்ஷிவ்தாவின் அளவுகள் அங்கிருந்த டெயிலருக்கு தெரியுமென்பதால் அது சுலபமான ஒன்றாகிவிட்டது.

பரமேஷ்வரனின் உத்தரவின் பேரில் துரிதகதியில் சட்டை தைத்து வரப்பட அதற்குள் நகைக்கடை ஒன்றிற்கு சென்று நிச்சயத்திற்கான மோதிரமும் தாம்பூலத்தில் வைத்து கொடுக்க ஒரு ஆரமும் வாங்கிகொண்டு புடவையையும், ப்ளவுசையும் வாங்கிக்கொண்டு நேராக திருவேங்கடத்தின் வீட்டிற்கு சென்றுவிட்டான் நிஷாந்தையும் அழைத்துகொண்டு. தன்னை விட்டு எங்கும் செல்லகூடாது என்ற கட்டளைக்கு உடன்பட்டு நிஷாந்தும் அவனை விட்டு எங்கும் நகரவில்லை.

திருவேங்கடத்தின் வீட்டில் ஷக்தியின் சித்தியும் சித்தப்பாவும் மட்டுமே இருந்தனர். சீர்வரிசை தட்டுகளை எல்லாம் சரிபார்த்துகொண்டிருந்தனர் சகுந்தலாவும் திருவேங்கடமும். அவர்களுக்கு உதவியாக ஷக்தியின் சித்தி வேதவள்ளி, சித்தப்பா குமரன் இருவரும். மாலை நெருங்கவும் புருஷோத்தமனும் வந்துவிட அனைவரும் புறப்பட தயாராக திருவேங்கடமும் சகுந்தலாவும் தயாராகாமல் இருந்தனர்.

காரணம் தெரிந்தும் ஷக்தி அவர்களிடம், “என்னாச்சு மாமா, நீங்க கிளம்பலையா?...” என கேட்டதும்,

“இல்லைப்பா நான் வரமுடியாது. நேத்துதான் கோவத்துல பரமு வீட்டுக்கு போய்அவன்கிட்ட கண்டபடி பேசிட்டு வந்துட்டேன். நாங்க இல்லைனா என்ன? அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்கல்ல...” நல்லபடியா நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டு வாப்பா. உங்க கல்யாணம் நல்லபடியா நடந்தா மருதமலை முருகனுக்கு வேல் செஞ்சு வைக்கிறதா நேத்திக்கடன் போட்டிருக்கேன். எங்க ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போவும் இருக்கும்...” என்று கலங்கிய கண்களை கட்டுப்படுத்திகொண்டே பேச,

“ஏன் மாமா, காதல் கல்யாணம் செய்யவிடமாட்டோம்னு சொந்தபந்தம் எல்லோரும் எதிர்த்து நின்னப்போ அம்மாவுக்கு ஒரு அண்ணன் ஸ்தானத்துல இருந்து எங்கப்பாக்கு கல்யாணம் செய்து கொடுத்தீங்க. அதிலிருந்து எனக்கொரு தாய்மாமாவா நீங்கதானே முறை எல்லாம் செய்துட்டு வறீங்க. அம்மா இறந்தப்போ கூட அண்ணன்ன்ற உரிமையை விட்டுகொடுக்காம உங்க கடமையை சரியா செய்துட்டு வந்த நீங்க இப்போ என் வாழ்க்கையில முக்கியமான நேரத்துல நீங்க இல்லைனா அம்மாவோட ஆத்மா சாந்தியடையுமா?...” என உடைந்துபோய் கேட்டவனை கட்டிகொண்டு அழுதவரை அதட்டினார் சகுந்தலா.

“ப்ச். என்னங்க இது. நல்லநாள் அதுவுமா நீங்களும் அழுதுட்டு நம்ம புள்ளையையும் அழவைக்கிறீங்க?... போங்க போய் வேற ட்ரெஸ் மாத்துங்க. நான்லாம் கிளம்பிதான் இருக்கேனாக்கும். இது நம்ம வீட்டு கல்யாணம். ஹர்ஷூவும் நம்ம பொண்ணுதானே. நாமே தள்ளி நிக்கலாமா?...” என அந்த சூழ்நிலையை அழகாக கையாண்டு அனைவரையும் கிளப்பிக்கொண்டு பரமேஷ்வரனின் வீட்டை நோக்கி சென்றார் சகுந்தலா.

இங்கே ஹர்ஷிவ்தாவோ மாலை வரை நன்றாக தூங்கி எழுந்து கீழே வந்தவளுக்கு ஒரே ஆச்சர்யம். “காலையில் மாடிக்கு செல்லும் போது வீடு இருந்த இருப்பென்ன? இப்போது இருக்கும் இருப்பென்ன?, எதற்காக இந்த அலங்காரம். இவங்கலாம் நம்மோட சொந்தக்காரங்களாச்சே? எதுக்காக வந்திருக்காங்க?...” என யோசனையோடே கீழே இறங்கி வந்தாள்.

அவளை பார்த்த பரணி என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் ஹர்ஷிவ்தா வேறு யாரிடமும் பேசும் முன்பாக சரஸ்வதியை அனுப்பி சமாளிக்க சொன்னார். அதன்படி சரஸ்வதியும் சிந்தனையோடே அவளை வேகமாக நெருங்க,

“என்னாச்சு சித்தி, நம்ம வீட்ல எதுவும் விசேஷமா?...” என அவள் வாயாலேயே சரஸ்வதிக்கு நல்ல யோசனையை எடுத்துகொடுத்தாள்.

“ஆமாண்டா கண்ணு. உனக்கு கல்யாண யோகம் சீக்கிரமே கூடிவரனும்னு வீட்ல பூஜைக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம். அதான் எல்லோரும் வந்திருக்காங்க...” என்றவரை ஊன்றி பார்த்தவள் வேறொன்றும் கேட்காமல் மீண்டும் வீட்டை ஆராய அங்கே ஐயரை காணவும் உண்மைதான் போல என எண்ணிகொண்டாள்.

“ரொம்ப நேரமா தூங்கினதால தலைவலிக்குது. சித்தி காபி வேணும்...” என அடுக்களைக்குள் செல்ல முனைய,

“காபி தானே நானே மாடிக்கு கொண்டுவரேன். நீ போய் குளிச்சிட்டு நல்ல புடவையா எடுத்து கட்டிட்டு வாம்மா...”

“என்னது இப்போவும் புடவையா?...” என அதிர்ந்தவளிடம் இனியும் இங்கே வைத்து பேசமுடியாது என்று அவளை மடிக்கு தள்ளிக்கொண்டே,

“ஆமாம்டா. நீதானே சபையில பூஜையில உட்காரனும். அதுக்குதான். அதுவுமில்லாம காலையில நடந்த விஷயத்துல அப்பாம்மா ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. அவுங்களுக்காக இப்போவாச்சும் இதை கேளுடா...” என்று கெஞ்சலுடன் கூறி முடிக்கவும் ஹர்ஷூவின் அறை வரவும் சரியாக இருந்தது.

பலத்த யோசனைகளுக்கு பின் சரி என்று ஒப்புகொண்டாள். அரைமணி நேரத்தில் கிளம்பி இருக்குமாறு கூறிவிட்டு வந்தபின் தான் சரஸ்வதிக்கு மூச்சே விட முடிந்தது. ஆனாலும் இது எவ்வளவு நேரம்? மீண்டும் காபியோடு ஹர்ஷிவ்தா தயாராகிவிட்டாளா என்று நோட்டம் விட்டுவிட்டு அதில் திருப்தி அடைந்தவராக பரணியிடம் அந்த தகவலையும் சேர்ப்பித்து விட்டார்.

கௌரவ் ஷக்திவேல் தன் குடும்பம் சகிதமாக கம்பீரமாக நடந்துவர அவன் கையை பற்றிக்கொண்டு அருகில் கலவரம் கண்களை மீறி வெளியே தெரிய நடுக்கத்தோடே உடன் வந்தான் நிஷாந்த்.

திருவேங்கடம் வந்ததில் அப்படி ஒரு சந்தோஷம் பரமேஷ்வரனுக்கு. சகுந்தலாவை இழுத்து தன்னோடு நிறுத்திகொண்டார் பரணி. திருவேங்கடத்திற்கு கோபமே இருந்தாலும் நேற்று தான் பேசியதை மறந்துவிட்டு வெள்ளை சிரிப்போடு தன்னோடு பேசும் தன் நண்பனிடம் பாராமுகத்தை காட்ட மனம் வரவில்லை. அவரும் இயல்பாகவே இருந்தார்.

அனைவரையும் வரவேற்று அமரவைத்து சிலபல விசாரிப்புகளுக்கு பின் நிச்சயதார்த்தத்தை நடத்த ஹர்ஷிவ்தாவை அழைத்து வர சொன்னார் ஐயர். ஆயிரம் தெய்வங்களை வேண்டிக்கொண்டு பரணியும் சரஸ்வதியும் அவளை அழைத்துவர சென்றனர். அங்கிருந்தவர்களில் ஹர்ஷிவ்தாவின் குணமறிந்தவர்கள் அனைவருக்குமே, ஏன் புருஷோத்தமனுக்கும் கூட உள்ளூர ஒரு படபடப்பு நொடிக்கு நொடி அதிகரித்து கொண்டே சென்றது. ஆனால் ஷக்தியோ மிக இலகுவாக அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் மாடியிலிருந்து பெண்ணை அழைத்துகொண்டு கீழே வரும் அரவம் கேட்டும் ஷக்தி தன் விழிகளை தன்னவளை நோக்கி திருப்ப முனையவில்லை. அவளுக்கோ இறங்கி வரும் போதே இது எதற்கான ஏற்பாடு என்று தெள்ள தெளிவாகியது. உள்ளுக்குள் கடுகடுத்துகொண்டே வந்தவள் நமஸ்காரம் செய்யாமல் கூட அலட்சியமாக நின்றாள்.

பரணி,”ஹர்ஷூ, எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணு...” என்று மெல்ல காதில் கூறியும் திமிராகவே நின்றாள்.

ஷக்தியோ அதை கண்டுகொள்ளாமல் திருவேங்கடத்தை ஒரு பார்வை பார்க்க, அவர், “ஐயரே நீங்க நிச்சயப்பத்திரிக்கையை வாசிங்க...” என சப்தமாக ஹர்ஷிவ்தாவை முறைத்துக்கொண்டே கூறினார்.

அதில் மேலும் எரிச்சலடைந்தவள் தன் தந்தையின் அருகில் போய் அமர்ந்துகொண்டு, “என்னப்பா இது? என்கிட்ட ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லலை?...” என பரமேஷ்வரனிடம் முணுமுணுக்க அதை கண்டுகொள்ளாமல் அவர் தாம்பூலம் மாற்றுவதிலேயே கவனமாக இருந்தார்.

அவர் திரும்ப மாட்டார் என தெரிந்துகொண்டவள் பல்லை கடித்தவாறே ஷக்தியை பார்க்க அவனோ இவளின் பார்வையை வேண்டுமென்றே தவிர்த்தான். அதை தவறாக கணித்த ஹர்ஷூ, “ஒ சார் வெளில நம்மை பத்தி விசாரிச்சிருப்பார் போல. அதான் புள்ள நம்மளை பார்க்க பயப்புடுது போல...” என கித்தாய்ப்பாக எண்ணிக்கொண்டே அவனருகில் அமர்ந்திருந்த நிஷாந்தை பார்த்து முறைத்தாள். அவனோ கெஞ்சல் பார்வை பார்த்தான்.

இதற்கு மேலும் தாமதித்தால் அனைத்தும் கைமீறிவிடும் என நினைத்தவள் வேகமாக எழுந்து நின்று, “ எனக்கு இந்த மாப்பிள்ளை சாரோட கொஞ்சம் பேசனும். அந்த ரூம்க்கு வர சொல்லுங்க...” என கூறிவிட்டு விடுவிடுவென்று அவளின் ராசியான விருந்தினர் அறைக்குள் சென்று மறைந்தாள். அவனிடம் மன்னிப்பை வேண்டும் பார்வையை விட்ட பரமேஷ்வரனுக்கும், அனைவருக்கும் பார்வையாலே தைரியம் சொல்லிவிட்டு தானும் அந்த அறைக்குள் சென்றான்.

அங்கே இவனை முறைத்தவண்ணம் நின்றிருந்தாள் அவனவள். அதை அசால்ட்டாக எதிர்க்கொண்டவன் அவளை பார்வையாலேயே ஊடுருவ அதிலிருந்த ஏதோ ஒன்று சில நொடிகள் அவளை கட்டிப்போட்டதென்பது தான் உண்மை. சபையில் கண்டுகொள்ளாமல் இருந்தவன், இங்கே வந்ததும் இப்படி ஆழ்ந்த பார்வை பார்த்ததில் கோவமடைந்தவள்,

“ஹலோ மிஸ்டர், எதுக்காக இப்படி பார்க்கறீங்க?...” என அந்த கொந்தளிப்பு குறையாமல் கேட்டதும்,

“என்னோட பேர் மிஸ்டர் இல்லை. கௌரவ் ஷக்திவேல். அதுமட்டுமில்லை நீயும் தான் என்னை பார்த்த. நான் எதுவும் சொல்லலையே?...” என திருப்பிக்கொடுத்தவன் தப்பி தவறி கூட தன் ரசனையை, அவள் மீதான தன் விருப்பத்தை அவளுக்கு துளியளவும் காட்டவில்லை.

“ஹலோ நான் உங்களை பார்க்கிறதும் நீங்க என்னை பார்க்கிறதும் ஒண்ணா? ப்ச், அதை விடுங்க. எனக்கு இந்த நிச்சயத்தில இஷ்டம் இல்லை. என்னை பிடிக்கலைன்னு நீங்களே சொல்லிட்டு உங்க கூட வந்தவங்களை கூட்டிட்டு உடனடியா இந்த வீட்டை விட்டு கிளம்புற வழியை பாருங்க...”

“இன்னும் நிச்சயதார்த்தமே முடியலை. அதுவும் இல்லாம, நான் ஏன் உன்னை பிடிக்கலைன்னு சொல்லனும்? எங்க வீட்ல எல்லாருக்குமே உன்னை பிடிச்சிருக்கு. பொய் சொல்லி எனக்கு பழக்கமில்லை. இந்த கல்யாணம் வேண்டாம்னு நீ வேணும்னா போய் சொல்லேன்...” என அவளது தற்போதைய திட்டத்தை தெரிந்துகொள்ள மனதை படிக்க முயன்றான்.

“அது...அதெல்லாம் சொல்லமுடியாது. இந்த நிச்சயமே நடக்காதுன்னு சொல்றேன். ஏன் நீங்க கல்யாணத்தை பத்தியே பேசறீங்க? ப்ளீஸ். நிறுத்திடுங்க...” அவனின் பார்வையை உணர்ந்ததுமே தெரிந்து விட்டது ஹர்ஷூவிற்கு நம் மிரட்டல் இவனிடம் செல்லாது என்பது. அதனால் தணிந்து பேச முயன்றாள்.

“ம்ஹூம். இந்த கல்யாணம் நடந்தே ஆகனும். எங்கப்பாவுக்காக நான் என்னவேணும்னாலும் செய்வேன். அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சுப்போச்சு. நீதான் அவரோட மருமகள்ன்னு எப்போவோ முடிவு பண்ணிட்டார். அவரோட முடிவுதான் என்னோட முடிவும். அதை மாத்த முடியாது...” என்றவனது வார்த்தையில் தனக்கு தேவையானதை எடுத்து கொண்டு தனக்கு சாதகமான விஷயத்தை பிடித்துகொண்டாள்.

“அப்போ உங்கப்பாவோட சந்தோஷத்துக்காகத்தான் இந்த சம்பந்தம். அப்டித்தானே?...” என கொஞ்சம் குரலில் உற்சாகம் தெறிக்க கேட்டவளை ஒரு நமுட்டு சிரிப்பை வாயினுள் அசைபோட்டபடி அமைதியாக தலையை மட்டும் ஆட்டினான்.

இப்போது எள்ளலாக அவனை பார்த்தவள், “சீ மிஸ்டர் கௌரவ் ஷக்திவேல், எனக்கு லைப் பாட்னரா வரபோறவர் என்னை விரும்பித்தான் மேரேஜ் செய்துக்கனும். யாரோட ஆசைக்காகவும், நிர்பந்தத்திற்காகவும் இல்லை. இன்னைக்கு உங்கப்பாவுக்காக அவரோட ஆசைக்காக என்னை கல்யாணம் செய்துக்கற நீங்க நாளைக்கே உங்கப்பாவுக்கு பிடிக்காம போனா என்னை கைவிடமாட்டீங்கன்னு என்ன நிச்சயம் சார்?...” என அவனை மடக்கிவிட்ட குஷியில் கேட்க,

“ஓஹ் ரியலி!!!.... இதுதான் உன் ப்ராப்ளமா?... நான் உன்னை விரும்பி தான் கல்யாணம் செய்துக்கனும்ன்ற உன்னோட ஆசையை இவ்வளவு வெளிப்படையா சொன்னதுக்கு தேங்க்ஸ். எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு. நானும் உன்னை விரும்பித்தான் மேரேஜ் பண்ணிக்க போறேன். போதுமா?...” என அப்பாவியாக கண்கள் மின்ன கேட்டவனை அடப்பாவி என்பது போல விழி விரித்து திகைத்து போய் பார்த்தாள்.

இதுதான் சமயமென்று அவனுக்கு அவளை பார்த்தவுடன் தோன்றிய அந்த உணர்வை அவளின் விழிகளின் வழியாக அவளின் இதயத்திற்குள் கடத்த முயன்று அதில் வெற்றிபெறும் தருவாயில் அவளது உள்ளுணர்வு விழித்துக்கொண்டதும் அவளிடம் தலைதூக்கிய அலட்சியபாவத்தால் தானும் தன்னிலை அடைந்தான்.

இதற்கு மேல் பேசி பயனில்லை என்றுணர்ந்தவன், “ இந்த கல்யாணம் நடக்கும் நடந்தே தீரும், உன்னை காதலிச்சுதான் கல்யாணம் செய்யனும்னா நான் தயார்...”

“கண்டிப்பா நீங்க நினைக்கிறது நடக்காது. அப்படியே நடந்தாலும் அது உங்களுக்குத்தான் ஆபத்தா முடியும்...” என்று எச்சரிக்கை குரலில் கூறவும் அவளை நெருங்கியவன் தன் மூச்சுக்காற்றை உணரும் வகையில் கொஞ்சமே இடைவெளிவிட்டு நின்று,

“உன்னால முடிஞ்சதை பாரு. ஆனா எதுவா இருந்தாலும் என் மனைவியாகி என் கூடவே இருந்து இதற்கு என்னை பழிவாங்கு. உன்னைத்தான் கல்யாணம் செய்துக்கனும்ன்ற என்னோட முடிவு என்னைக்குமே மாறாது. சரியா?...” என்று சவால் விட்டான்.

“இதுக்கெல்லாம் நீ அனுபவிப்படா...” என கத்தியவளை இன்னும் நெருங்க கொஞ்சமும் பின் வாங்காமல் சீற்றமுடன் நின்றவளை வியக்காமல் இருக்கமுடியவில்லை. ஆனாலும் விட்டுத்தராமல்,

“எதுக்காக கத்துற, நான் என்ன அவ்வளவு தூரமாவா இருக்கேன். வேணும்னா சொல்லு, இன்னும் பக்கத்தில வரேன். இவ்வளவு போதுமா?...” என நெருக்கத்தை கூட்டிக்கொண்டே அவளை அடுத்தடுத்து மண்ணை கவ்வ வைத்தான்.

அவனிடம் தோற்றுப்போன உணர்வு தன்மேல் கழிவிரக்கத்தை உண்டாக்க அந்த உணர்வை அடியோடு வெறுத்தவள் இப்படி தன்னையும் ஒருத்தன் மிரட்டி பணிய வைப்பான் என்று கற்பனையிலும் எண்ணவில்லை. இதற்கு மேலும் பேசினால் மேலும் ஏதாவது விவகாரமாக செய்துவிடுவான் என அவளின் பெண்மனம் எச்சரிக்க மனமே இல்லாமல் இரண்டடி பின்வாங்கினாள்.

அப்பாவிடம் குடுத்த வாக்கை மீறி தன்னால் இந்த திருமணத்தை நிறுத்த முடியாது என உணர்ந்து கொண்டவளுக்கு தெரிந்துவிட்டது இவனிடம் தன் பாட்சா பலிக்காது என்றும், ஷக்தி இந்த கல்யாணத்தை நடத்தியே தீருவான் என்றும். திருமணம் என்றதும் அவளுக்கும் சில பயவிதைகள் முளைக்க தொடங்கியது. ஆனாலும் அதையெல்லாம் பெரிதுபண்ணினால் அவளின் கெத்து என்னாவது?

கலங்க இருந்த கண்களை தடுத்து வலுக்கட்டாயமாக மனதை இறுக்கமாக்கி தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அவளும் முடிவுக்கு வந்துவிட்டாள். இனி நடப்பது நடக்கட்டும் என்று. ஆனால் இவனை சும்மாவா விடுவது? என நினைத்துக்கொண்டே அவனை நிமிர்ந்துபார்க்க சிறு நூலிழையில் அவனும் அவளருகிலேயே தான் நின்றிருந்தான்.

சட்டென்று பின்வாங்கியவள் தடுமாற அவளை தாங்கி பிடிக்க கைகொடுத்தவனை மீண்டும் அலட்சியப்படுத்தியவள் தன்னை சுதாரித்துகொண்டு நிலையாக நின்றாள். அதுவரை அவளது முகபாவங்களை கவனித்தவன் அவளது போராடி களைத்த தோன்றம் அவனை வாவென்று அழைக்க, “ம்ஹூம் இனிமேலும் நின்னா எசகுபிசகா எதாச்சும் செஞ்சு அதுவே கல்யாணத்தை நிறுத்த இந்த சண்டி ராணிக்கு சாதகமா போய்டும்..” என எண்ணிகொண்டவன்,

தொண்டையை செருமிக்கொண்டு, “ ம்ம் கல்யாணத்துக்கு தயாராகிட்டன்னு நினைக்கிறேன். ஓகே. வா போகலாம்...” என்று அழைத்துவிட்டு முன்னால் நடந்தவன், கதவை அடைந்து மீண்டும் அவளை திரும்பி பார்த்து,

“இன்னைக்கும் நான் அதே ஹோட்டல்ல அதே ரூம்ல தான் இருப்பேன். அதுக்குன்னு கத்தியோட பால்கனி வழியா மேல ஏறி வரவேண்டாம். போன் பண்ணு நானே உன்னை கூட்டிட்டு போறேன்...” எனவும் அவனை முறைத்துகொண்டிருந்தவள் ஷக்தி கூறியதில் மொத்த சக்தியும் வடிந்து போய் நின்றாள்.

அதைவிட இன்னும் பதினைந்து நாளில் திருமணம் என்பதுதான் அவளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்படியாவது இதை நிறுத்தவேண்டுமே என மூளையை எவ்வளவு கசக்கியும் அவளுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை. யோசித்து முடிப்பதற்குள் திருமணமும் நடந்து முடிந்தது. ஆனால் அதை நடத்தி முடிப்பதற்குள் அனைவரையும் தவிக்கவிட்டாள்.

அடாவடியின் மொத்த உருவமான தன் மனைவியானவளை கௌரவ் ஷக்திவேல் எப்படி சமாளிக்க போகிறான்?

நதி பாயும்....
Nice
 
Top