Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thennankeetrum Thendral katrum - 4

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 04


உன்னுடன் பேசிய
நினைவுகளை சுமந்துக்கொண்டு
வாழ்கிறேன் நீ
என்னுடன் இல்லாத
தருணங்களில்!!!



சஷ்டி வீட்டில் இருந்து கல்லூரி சென்று வர, அவர்களது வாழ்க்கை மட்டும் இயல்புக்கு மாறவே இல்லை… தன்னுடைய செய்கை தான் அப்பாவைக் கொன்று விட்டது என்று உறுதியாக நினைத்த ஷ்ரவ் அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டாள்… யாரிடமும் பேசுவது இல்லை… வயிற்றில் வளரும் குழந்தையின்பால் கூட அன்பு உண்டானதா என்று கேட்டால் தெரியாது யாருக்கும்…

நாளடைவில் மன அழுத்தத்திற்கு ஆளாகி மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டாள்… “சரியாகி விடுவாள் எல்லாம் சரியாகி விடும்…” என்று எண்ணிய எதுவுமே சரியாகவே இல்லை… பத்மாவும், சஷ்டியும் மிகவும் பயந்தே போனார்கள்…

தன் குடும்பம் இப்படி ஒரு நிலைக்கு வந்ததற்கு அவன் தானேக் காரணம், அவனையும் அவன் குடும்பத்தையும் பழி வாங்காமல் விடக்கூடாது என தனக்குள்ளே உறுதி பூண்டாள் சஷ்டி… இதற்கிடையில் ராஜவேலுவின் நண்பர் ஒருவரின் உதவியால் ஷ்ரவை மலேசியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஸ்பெஷல் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் வெஸ்லின் என்பவரிடம் அழைத்துச் சென்றனர்…

இப்போது அவர்கள் இருப்பது அதே மருத்துவமனையில் தான்… கர்ப்ப கால ஆரம்பக் கட்டத்தில் ஷ்ரவ் மருந்துகள் எடுத்துக் கொள்ளாததால், இப்போது பிரச்சனை ஆகியிருந்தது…

மருத்துவர் கொடுத்த தேதிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்க, திடிரென ஷ்ரவ்க்கு பிட்ஸ் வந்ததாக நேற்று பத்மா அழைத்து சஷ்டியிடம் கூறியிருந்தார்… அதனால் தான் அவளும் யாருக்கும் தெரியாமல் மலேசியா கிளம்பியிருந்தாள்…

இதெல்லாம் ஸ்ருதியின் உதவியில்லாமல் நடக்காது என்றுதான், அவளிடம் சொல்லி கிளம்பினாள். அவளோ சிவாவிடம் எல்லாவற்றையும் கூறி இங்கே வர வைத்து தன் பயணத்தையும் கெடுத்து வைத்திருக்கிறாள்…

கோபம், பாசம், அழுகை, பழி வெறி என கலந்து கட்டி, அனைத்தையும் அவனிடம் சொன்னவள், ஸ்ருதியைத் திட்டாமலும் இல்லை… “நான் உங்களை விட்டு நிரந்தரமா போகப் போறத சொன்னேன்… இனி இங்க வர மாட்டேன்னு சொன்னேன்….” என்றதும்,

“ம்ம்… அது தான் அவளை என் கிட்ட சொல்ல வச்சிருக்கு… நீயும் நானும் லவ்வே பண்ணலன்னாலும் நம்ம ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பண்ணனும்னு வீட்ல சொல்லிட்டே இருப்பா… அவ சொல்லி சொல்லி தான் உன் மேல எனக்கு ஈர்ப்பு வந்ததோ என்னமோ, ஆனா அது தான் உன்னைக் கவனிக்க வச்சது…”

“ஸ்ருதி பார்க்க விளையாட்டுப் பொண்ணு மாதிரி தெரிஞ்சாலும் ரொம்ப கேரிங்… அதுவும் என் மேல அளவுக்கதிகமான கேரிங்…. அவ எனக்கு ப்ரண்டா கிடைச்சது வரம் தான்…”

“அது இருக்கட்டும், அவளப் பத்தி பேச நமக்கு இன்னும் லைப் புல்லா இருக்கு, அப்போ பேசுவோம்… இப்போ நீ சொல்லு, நீ இங்க வந்த வேலை முடிஞ்சதா, நீ தேடின அவன் கிடைச்சானா…? நீங்க எல்லாரும் சொல்ற அவன் யாரு…? அவன் பேர் என்ன…? சொல்லு…? எனக்கும் தெரியனும்…” என்றவனிடம்,

பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவளின் தோளைப் பற்றியவன், “சொல்லு சசி… அவன் பேர் என்ன…? சொல்லு…” என்று உலுக்கியும் அமைதியாய் இருந்தவளின் முகம் பற்றி கண்களை நேருக்கு நேராய் நோக்கியவன், “அவன் பேர் கார்த்திக், கார்த்திக்கேயன் ஜெகதீஷ்வரன்… தி கிரேட் லிங்கஷ்வரனோட இரண்டாவது மகனான சிவபாலனோட அண்ணன் காத்திக்கேயன் சரியா…” என்றான் அழுத்தமாய்…

தெரியுமா…? எப்படித் தெரியும்…? கடவுளே… அப்போ நான் பழிவாங்கத்தான் இவனை லவ் பண்ணேன்னு நினைச்சிருப்பானோ…? இருக்கட்டும் அப்படியே நினைக்கிறது தான் சரி, நானும் இவனை விட்டு போக முடியும்…

ஆனா முடியுமா… இவன் இல்லாமல் இருக்க முடியுமா…? கண்களில் நீர் கோர்க்கத் தொடங்கியது… தன் கைகளில் இருந்த அவளது முகத்தில் தெரிந்த உணர்வுப் போராட்டத்தை அறிந்தவன், அதைத் தாங்க முடியாமல், தன் நெஞ்சில் இழுத்து சாத்திக் கொண்டான்…

“நீ உங்க அக்காவுக்காக இதை செய்யும் போது, நான் என் அண்ணனுக்காக எதையும் செய்ய மாட்டேனா…”? என்றான் பொறுமையாய்… அனைத்தும் புலப்பட்டது அவளுக்கு, தன் அண்ணணுக்காக புனே வரை சென்று விசாரித்திருக்கிறான் என்று புரிகிறது…

அதைத் தொடர்ந்து அனைத்தும் அவனுக்கு தெரிய வந்திருக்கும் என்பது புரிகிறது… அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை, பீறிட்டு எழ, அவனை இறுகக்கட்டிக் கொண்டு கொட்டித் தீர்த்தாள் சஷ்டி…

***********

“அர்வி எதுக்கு இவ்வளவு ஸ்பீடா போற, பயமாயிருக்குடா…” பயத்தில் அலறியவளை..

“பயமா இருந்தா என்னை கட்டிப்பிடிச்சுக்கலாம் பேபி, அதுக்காக மெதுவா போக முடியாது… உன் அண்ணன் பண்ணி வச்சிருக்க வேலைக்கு… ஏண்டி உங்களுக்கெல்லாம் அடுத்தவங்க ப்ளீங்சை புரிஞ்சக்கவே முடியாத…?” என்று பதிலுக்கு கத்தினான்.

“என்ன… சிவா என்ன சொன்னான், சஷ்டி கூட சண்டையா… அவ திரும்பி வர மாட்டேன்னு சொல்லவும் தான், சிவாக்கிட்ட சொன்னேன்… அவன் இப்படி பண்ணுவான்னுத் தெரியாது…”

“நீ எதைத் தான் தெரிஞ்சு வச்சிருக்க, சரி விடு, நமக்கு முக்கியமான வேலை இருக்கு… உன் அண்ணன் சீக்கிரம் இதெல்லாம் வாங்கிட்டு, உங்க கோவிலுக்கு வரச் சொன்னான்… அந்த ஐயரையும் இழுத்துட்டு…”

“என்ன திங்க்ஸ்… கோவிலுக்கு எதுக்கு… சிவா என்ன சொன்னான்…” ஒரு விதப் பயத்துடனே வந்தது அவளது குரல்…

“அதுவா… நம்ம ரெண்டு பேரையும் இனி தனியா விடக கூடாது, நமக்கு மேரேஜ் செய்து வச்சுடலாம்னு சொல்றான்… அதான், நானும் சரின்னு சொல்லிட்டேன்… இனியும் உன்னைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது பேபி…” முகம் தீவிரமாய் இருந்தாலும் கண்களில் குறும்பு வழிந்தது…

“ஐயோ… நான் மாட்டேன், உனக்கு இன்னும் நான் ஓகேன்னு சொல்லவே இல்ல, என்னை வீட்ல விட்டுடா, ப்ளீஸ்…” என அரண்டவளைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தவன், “அது ஒரு பிரச்சனையே இல்ல பேபி… நமக்கு ரெண்டு பேபிஸ் பிறந்த பிறகு கூட நீ ஓகே சொல்லலாம்… நல்லா டைம் எடுத்துக்கோ… பட், இன்னைக்கு நம்ம மேரேஜ் கண்டிப்பா நடக்கும்…” என்று மேலும் அவளை சீண்டி விட,

“நோ… நோ… அர்வி, நீ நல்ல பையன், இப்படியெல்லாம் செய்யக் கூடாது… நம்ம ரெண்டு வீட்லயும் நமக்குத் தான் மேரேஜ் செய்து வைப்பாங்க, முன்னாடியே அப்பா சொல்லியிருக்கார் தானே… ப்ளீஸ் அர்வி இப்படித் திருட்டுக் கல்யாணம் எல்லாம் வேண்டாம்… நான் சிவாக்கிட்ட வேணும்னா பேசுறேன்டா…”

‘இதோ வந்து விடுவேன்’ என இருந்த கண்ணீரோடு பேசியவளை, ஒரு நிமிடம் நேராகப் பார்த்தவன், “ஓகே. உன்னோட விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது…” பட், “நீ நினைக்குற மாதிரி நம்ம கல்யாணத்தை நம்ம ரெண்டு வீட்லயும் செய்து வைக்க மாட்டாங்க…” என்றான் இறுக்கமாய்…

இவ்வளவு நேரம் இருந்த இலகு நிலை போய், இப்போது ஏன் இப்படி பேசுகிறான் என்பது போல அவனைப் பார்க்க,

“உனக்கும் சிவாவுக்கும் உன் அப்பா வேற இடத்துல மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டார்… அதுவும் பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்குற மாதிரி ப்ளான்…”

“வாட்… இது எப்படி முடியும்… அப்போ அங்கிள் ஒன்னும் சொல்லலயா… ஏன்… சஷ்டி… அவளை அண்ணா லவ் பண்றான்…” அதிர்ச்சியாய் பேச…

“ஹான்… அங்கிளா… அவர் என்ன சொல்ல முடியும்… அவரை தான் உன்னோட டாடி தன் பிஸ்னஸ்ல இருந்து கழட்டி விட்டுட்டார்… சிவா பிரச்சனை தெரிஞ்சு தான், என்னைக் கூடவே வச்சிருக்கான்… லவ் பண்ணா பண்ணட்டும், ஆனா அதை எப்படி உடைக்கிறதுன்னு உன் அப்பாவுக்குத் தெரியாதா என்ன…? ஆல்ரெடி ஒரு லவ்வை ப்ரேக் பண்ண ஆள் தானே டேமிட்…” என்று கார்க் கதவைக் குத்த,

“என்ன சொல்ற, எதையும் முழுசா சொல்லாம எனக்கு எப்படி புரியும்… சொல்லு அர்வி… என்ன நடக்குது, யாருக்கு என்ன நடந்துச்சு…” பயந்தவளாய் கேட்க,

“சஷ்டி ஏன் இங்க வந்தான்னு தெரியுமா உனக்கு…? உன்னைப் பார்க்க, உன் கூட இருக்க எல்லாம் வரல, உன் குடும்பத்தை பழி வாங்க… ஆனா, அப்படி எதையும் செய்யல, ஏன் தெரியுமா…? அவளும் சிவாவை லவ் பண்றா அதான்…. ஆனால் என்னைக் கேட்டா மொத்தக் குடும்பத்தையும் அவ ஏதாவது பண்ணியிருக்கனும், அவ சிச்சுவேசன்ல நான் இருந்தா, அதைத் தான் செஞ்சிருப்பேன்…” என்றான் கோபம் கொஞ்சமும் குறையாத குரலில்…

“அர்வி… நீ என்ன சொல்ற, சஷ்டி என்னோட ப்ரண்ட், அவ எப்படி இதை செய்ய முடியும், ஏன் செய்யனும், சொல்லு அர்வி எனக்கு ஒன்னும் புரியவே இல்ல…” என்றதும்,

“என்ன புரியல, சஷ்டி இன்னைக்கு அவ அப்பா இல்லாம இருக்குறதுக்கு முழு காரணமும் உன்னோட ப்ளடி கிரிமினல் மைண்ட் அப்பா தான்…” என்று கத்தியவன்…

அவள் முகத்தில் தெரிந்த பயத்தில், தன்னை சமன் படுத்திக் கொண்டு, ஷ்ரவந்தியைப் பற்றி அனைத்தையும் சொல்லி, கார்த்திக்கைப் பற்றியும் முழுதாக சொல்லிவிட்டான்…

அனைத்தையும் கேட்டவளுக்கு எதுவும் பேசவேத் தோணவில்லை… “அப்பாவா இப்படி…” நம்பவே முடியாமல் திரும்பத் திரும்ப அதையேக் கேட்டாள்…

அவளது அலைப்புறுதலை காண சகிக்காமல், “ரதிம்மா… இங்கே பாரு, ரதி என்னைப் பாரு. நாம எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்… கார்த்திக்கையும், ஷ்ரவந்தியையும் சேர்த்து வைக்கனும், அவங்களுக்கு செய்த துரேகத்துக்கு உன் அப்பா கஷ்டப்படனும்…”

“அதோட சிவா சஷ்டிப் பத்தியும் ஏதோ டவுட் வந்துருக்கும் போல, அதான் ப்ராப்ளமே இல்லாத கம்பெனிக்கு எங்க ரெண்டு பேரையும் சென்னை அனுப்பிக்கார்… நாங்க சென்னை போன கேப்ல, இவர் போய் அவங்க வீட்டுல ஓகே சொல்லிட்டு வந்துருக்கார்… உங்க அப்பா தான் அப்படின்னா உங்க அம்மா அதுக்கும் மேல… இப்படியெல்லாம் உங்களுக்கு ஒரு பேரண்ட்ஸ்…” என்று பல்லைக் கடித்தான்…

“அப்போ, கார்த்திண்ணா USA ல இல்லை… டாடி சொன்னார், அவன் மேரேஜ் செய்துட்டு நம்மளை அசிங்கப் படுத்திட்டுப் போயிட்டான்னு…” எனவும்,

“எல்லார்க்கிட்டையும் அதையே தான் சொல்லி ஏமாத்தி வச்சுருக்கார்… உண்மைத் தெரியும் வர நாங்களும் நம்பினோம்… சரி விடு இனி பேசி நேரத்தை வீணாக்க முடியாது… உனக்கு என்ன தெரியனுமோ, அதை உன் அண்ணனும் அப்பாவும் தான் சொல்லனும்… இப்போ நாம கல்யாணத்துக்கு என்ன வாங்கனுமோ அதை வாங்கலாம்… உனக்கு அந்த அறிவு கொஞ்சமாவது இருக்கா…” என கிண்டலில் இறங்க,

“அப்போ நிஜமாவே கல்யாணம் நடக்கப் போகுதா… நீ என்னை மிரட்ட சொல்றன்னு நினைச்சேன்…” உள்ளே போன குரலில் சொல்ல…

“உன் டாடி பிசினஸ்ல இருந்து என் அப்பாவை ரிலீவ் பண்ணவுமே, இப்படி எதாவது செய்வார்னு தோணிச்சு, நீயும் உன் டாடி சொல்றதை அப்படியே கேட்ப, என்னை லவ் பண்றேன்னு சொல்லியிருந்தா கூட, எனக்கும் பயம் இருக்காது… ஆனா, நீ அதுவும் சொல்லல…”

“உன்னை லவ் பண்றது உண்மை, உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதும் உண்மை… உனக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கனும் அதுவும் எனக்குத் தெரியும், ஆனா அந்த டைம் கல்யாணத்துக்கு முன்னாடி என்னால கொடுக்க முடியல…”

“நம்ம மேரேஜ் வேனும்னா உன்னோட மனக் குழப்பத்துல நடக்கலாம்… ஆனா, நம்ம வாழ்க்கை உன்னோட விருப்பம் இல்லாம அடுத்த கட்டத்துக்கு கண்டிப்பா போகாது… ட்ரஸ்ட் மீ…” என்றதும்…

“என்னோட வாழ்க்கையில வர எல்லா மொமன்ட்லையும் நீ என் கூட இருக்கனும் அர்வி… நீ இல்லாத வாழ்க்கை எனக்கு எப்பவுமே கிடையாது… கண்டிப்பா கிடையவே கிடையாது…”

“அப்பா சொன்னா கேட்பேன் தான், ஆனா அதுக்காக எல்லாமே கேட்பேன்னு நீ சொன்னது தப்பு… என்னோட வாழ்க்கை அது என் அர்வி கூட மட்டும் தான்… அதை யாராலும் மாத்தவே முடியாது… இன்குலீடிங் மை டாடி… உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா…? என்னை நம்புவியா அர்வி…” என்று கேட்டவளை விழியகலாமல் பார்த்தவன்,

சட்டென தனக்குள் இழுத்துக் கொண்டு, “அடிக் குள்ளச்சி அப்போ இத்தனை நாளா, அந்த செம்பட்டையன் கூட சேர்ந்து என்னை வெறுப்பேத்திருக்க… ஹாஹா… காட் தேங்க்யூ… தேங்க்யூ சோ மச் ரதி பேபி… லவ் யூ டி குள்ளச்சி… லவ் யூ சோ மச்…” என்று தன் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளுக்கு முத்தத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தான் அரவிந்த்….

காற்று இதமாகும்..
 
Top