தோகை 1:
நன்னியூர்....
காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள... அழகிய கிராமம்.தென்னை மரங்களும்....நெல் வயல் வெளிகளும்.... பசுமையாய் காட்சியளிக்க....ஜனசந்தடி இல்லாத...ஒரு அமைதியான கிராமம்.
விவசாயமே இங்கு பிரதான தொழிலாக இருக்க....சிறு குறு தானியங்கள் தொடங்கி...நெல்,தென்னை போன்றவையும் செழித்து வளரும் பூமியாக இருந்தது.
காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால்....தண்ணீர் வரத்து நாட்களில்...காண்போரை கொள்ளை கொள்ளும் அழகுடன் திகழும்.
வீடுகள் என்று பார்த்தால்...பெரிய அளவில் இல்லை. அதனை குக்கிராமம் என்றே வரையறுக்க முடியும்.
பொதுவாக அதனை சுற்றியுள்ள பகுதிகளும் செழிப்பாக காணப்பட...அதை எல்லாம் மிஞ்சி விடும் அளவிற்கு அந்த பகுதி இருந்தது.
இடையில் ஏற்படும் பஞ்சங்களையும் தாங்கிக் கொள்ளும் பூமியாக இருந்தது.
இதற்கு மேல் கதையில் வருபவை அனைத்தும் கற்பனையே..!
காலை நேரப் பரபரப்பில்..அனைவரும் தோட்டம், காட்டிற்கு சென்று கொண்டிருக்க...
சுந்தர மகாலிங்கம்-அந்த ஊரின் தலைவர் வீட்டில்...
செயற்கை சாயம் பூசப்படாத உதடுகளும்...பால்வண்ண மேனியும்... முன்னால் தூக்கிப் போடப்பட்ட ஆறடி கூந்தலும்....,சிவப்பு கரையிட்ட பச்சைப் பாவடையும்,அதே வண்ணத்தில் மேல் சட்டையும், சிவப்பு தாவணியும் அணிந்து...எழில் ஓவியமாய் வந்தாள் சக்தி...என்று அழைக்கப்படும் சிவ சக்தி.
சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டதால்...மகாலிங்கம் அவளை பொத்தி பொத்தி வளர்த்தார்.ஒற்றை பெண் என்றாலும்..அவள் தான் அவருக்கு எல்லாம்.மகனுக்கு மகனாகவும்,மகளுக்கு மகளாகவும் இருந்து அவரைப் பார்த்து கொண்டாள் சக்தி.
அசாத்திய துணிச்சலும்,தைரியமும் மிக அதிகம்.சமையல் கட்டே கதி என்று இல்லாமல்....வயலில் அவளுக்கு தெரியாத வேலையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு..அனைத்து வேலைகளையும் கற்று தேர்ந்திருந்தாள்.
படிப்பு என்று பார்த்தால்..உயர் நிலை பள்ளிப் படிப்பு மட்டுமே.மகாலிங்கம் எவ்வளவு எடுத்து சொல்லியும் மேலே படிக்க அவள் விருப்பம் கொள்ளவில்லை.அதற்காக படிப்பு வராத பெண் என்று சொல்ல முடியாது.பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேறியிருந்தாள்.
அப்பாவின் உடல்நிலையை கருதி....வயல்,தோப்பு என அனைத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டாள்.
“ஏட்டுக் கல்வியை விட அனுபவ அறிவே பெரிது” என்ற வாசகம் அவள் விசயத்தில் உண்மையாகிப் போனது.
“அடியாத்தி...! எம்புட்டு நேரம் தான் கண்ணாடி முன்னாடி நிப்பவ...?” என்று அலுத்துக் கொண்டார் அவளின் பாட்டி பாப்பம்மாள்.
“பாட்டி....” என்று பல்லைக் கடித்தவள்....
“என்னைப் பார்த்தா அலங்காரம் பண்ணிட்டு இருக்க மாதிரியா தெரியுது...?” என்று மூக்கு விடைக்க கேட்க...
“உங்க ரெண்டு பேருக்கும் என்ன பஞ்சாயத்து..?” என்றபடி வந்தார் மகாலிங்கம்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா...நீங்க சாப்பிட வாங்க..! குப்பாயி அக்கா...சாப்பாடு ரெடியா..?” என்று கேட்டுக் கொண்டே சமையலறை நோக்கி போக...
அவளை பெருமிதம் வழியும் கண்களோடு பார்த்தனர் தாயும்,மகனும். இது தான் அவள்.செல்லம் கொஞ்சவோ....விளையாட்டுப் பிள்ளையாய் இருக்கவோ...அவளுக்கு நேரம் இருந்ததில்லை.
“எல்லாம் தயாரா இருக்கு சாமி..” என்றார் குப்பாயி வாஞ்சை வழியும் கண்களுடன்.
“அப்பாவுக்கு கம்மங் கூழும்,மோர் மிளகாயும் எடுத்து வைங்க...! பாட்டிக்கு கேப்பை களி....எனக்கு சாப்பாடு...” என்று மடமடவென்று சொன்னவள்... அவளே அனைத்தையும் எடுத்து வைக்க...அவளை ஆச்சர்யப் பார்வை பார்த்தார் குப்பாயி.
சக்தியின் வாய் தான் அவருக்கு வேலை சொல்லுமே தவிர..கைகள் பாதி வேலையை முடித்து விடும்.அவளுக்கு அப்படியே அவள் அம்மாவின் கைப் பக்குவம்...குப்பாயியை விட நன்கு சமைத்தாலும்....
“உங்கள மிஞ்ச முடியாதுக்கா...!” என்று பெருந்தன்மையோடு சொல்வாள்.
“இன்னைக்கு என்ன வேலைம்மா..?” என்றார் மகாலிங்கம்.
“இன்னைக்கு வயல்ல நடவு இருக்குப்பா...அப்பறம் வெங்காய காட்ல களை எடுக்க ஆள் வராங்க....தோப்புல தேங்காய் வெட்ட..இன்னைக்கு வரலையாம்..நாளைக்கு வரதா சொல்லியிருக்காங்க..! அப்பறம் இன்னைக்கு சம்பளப் பணம் குடுக்கணும்...பணம் எடுக்கு டவுன் பேங்க் வரை போகணும்...” என்று சாப்பிட்டுக் கொண்டே மடமடவென்று சொல்ல....கேட்டுக் கொண்டிருந்தவர்கள வாயைப் பிளந்தனர்.
“என்ன ஆத்தா..இத்தனை வேலையும் ஒத்த ஆளா எப்படி செய்ய முடியும்..?” என்று பாப்பம்மாள் வாயைத் திறக்க...
“நான் எப்ப பாட்டி அப்படி சொன்னேன்...அப்பா நீங்க ஒரு எட்டு வயல் வரைக்கும் போயிட்டு வந்திடுங்க...நான் வெங்காய காடு வரை போயிட்டு அப்படியே டவுனுக்கு போயிட்டு வந்திடுறேன்...அப்பறம் சாயங்காலமாய் கூலி குடுத்துடலாம்..” என்றாள்.
“சரிம்மா..!” என்றார் மகாலிங்கம்.சதி சொன்னால் அவள் வார்த்தைக்கு மறு பேச்சு என்பதே கிடையாது.அதற்காக அவள் பிடிவாதக்காரி இல்லை. தப்பென்று சொன்னால் உடனே ஏற்றுக் கொள்வாள்.
“பொம்பளைப் புள்ளை....இப்படியே காடு கரைன்னு திரிஞ்சுகிட்டு இருந்தா...எப்படி உன்னை ஒருத்தன்கிட்ட கரை சேர்க்கிறது...நம்மகிட்ட என்ன குறையா இருக்கு..?பேசாம நகை நட்டுன்னு போட்டு..ஊரே அதிர சீர் செஞ்சு ஒரு கல்யாணத்தை பண்ணிப் புடு மகாலிங்கம்..” என்று பாட்டி பெரிய மனுஷியாய் அறிவுரை சொல்ல...
“பாட்டி நான் போய்ட்டா..உன்னைய,அப்பாவை எல்லாம் யார் பாத்துக்கறது...அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..அது மட்டும் இல்லாம..நான் வேற ஊருக்கு எல்லாம் போக மாட்டேன்...” என்று பிடிவாதமாய் சொன்னாள்.சக்தி பிடிவாதம் பிடிக்கும் ஒரு விஷயம் உண்டு என்றால் அது இதுதான்.
“பாட்டி சொல்றதும் சரிதானே சக்தி...நான் உயிரோட இருக்கும் போதே உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா..எனக்கும் நிம்மதியா போய்டும்..” என்று தந்தையும் சேர்ந்து கொண்டு சொல்லும் போது..அவளால் மறுக்க முடியவில்லை.
“சரிப்பா...ஆனா கொஞ்ச நாள் மட்டும் போகட்டும்..” என்று அனுமதி வாங்கினாள்.
“பேங்க்குக்கு எதுல போறமா...?” என்றார்.
“நான் டவுன்பஸ்ல போயிட்டு வந்தறேன்ப்பா..” என்றாள்.
“வேண்டாம்மா....நம்ம கந்தன் ஆட்டோவை வர சொல்றேன்..அதுலயே போயிட்டு..அதுலயே வந்திடுமா..” என்றார்.
“சரிப்பா..” என்றவள்....
“குப்பாயக்கா....வயல்ல வேலை பாக்குறவங்களுக்கு...நீச்சத்தண்ணியம், மோரும் கலந்து வச்சிடுங்க...நான் போறப்ப... அப்படியே அப்பா கூட போய் குடுத்துட்டு போய்டுறேன்..” என்றபடி சாப்பிட்டு முடித்தாள்.
“சரி சாமி...” என்றவர் அதை கலக்க உள்ளே சென்றார்.குப்பாயி எப்பொழுதும் சக்தியை சாமி என்று தான் அழைப்பார்.தாயில்லாத பெண் என்ற பாசம் எப்பொழுதும் அவரிடம் இருக்கும்.
“நத்தத்து சாலை வழி...
நான் வருவேன் ஒத்தை வழி...
தண்ணிக்கு போரவரே....
துணைக்கு வந்தால் ஆகாதோ...”
என்ற பாடலை வாய் மொழியாக படித்துக் கொண்டு அங்கிருந்த பெண்கள் களையெடுத்துக் கொண்டிருக்க....
“என்ன ராசமாக்கா...பாட்டெல்லாம் பலமா இருக்கு..?”என்றபடி வரப்பில் நின்றாள் சக்தி.
“வாடியம்மா...! குனிஞ்சு நிமிந்து வேலை பார்க்கனும்ல...இப்படி எதையாவது முனுமுனுத்தா தான்...அசதி தெரிய மாட்டேங்குது... இன்னைக்கு என்னமோ ஒருத்தியும் வாயைத் திறக்காம வேலை பாக்குறாளுக..அதான் பாட்ட படிச்சேன்..” என்றாள் அவள்.
“சரி சரி...முன்னாடி இருக்குற மண்ணை வெட்டி..பின்னாடி இருக்குற புல்லை மூடாம...பார்த்து வெட்டுங்க..வெங்காய தாள் எல்லாம் இளசா இருக்கு...கொஞ்சம் பட்டாலும் செடி போய்டும்...” என்று அவள் லாவகமாய் சொல்ல..
“நீ சொல்லனுமா சக்தி..அதெல்லாம் சரியா செய்வோம்...புல்லு நல்ல வளர்ந்திருக்கு..அதான் பார்த்து மெதுவா வெட்டிட்டு இருக்கோம்..!” என்றாள் அவள்.
“நல்ல கோரைப் புல்லுக்கா..அப்படியே அரிச்சு வைச்சா..மாட்டுக்கு ஆகும்..பாலும் நல்லா கறக்கும்...” என்றாள் சக்தி.
“நீ சொன்னா சரிதான் சக்தி...பச்சப் புல்லை போட்டா...மாடெல்லாம் ..அப்படியே பாந்தமா சாப்பிடும்..!” என்றாள்.
“வசந்தி அக்கா....காட்டுக்குள்ள பல கீரையும் இருக்கு...களையெடுக்கும் போதே..பிடுங்கி..மடியில வைங்க..வெங்காய காட்டு கீரை...கடைஞ்சு எடுத்து அருமையா இருக்கும்...உங்க மகளுக்கு குடுங்க...படிக்கிற பிள்ளைக்கு நல்லது...” என்று தனக்கு தெரிந்ததை சொன்னபடியே... அங்கிருந்த மர நிழலில்..மோரை வைத்து விட்டு...
“கொஞ்ச நேரம் கழிச்சு...இந்த மோரை ஆளுக்கு ஒரு செம்பா குடுச்சுட்டு வேலையைப் பாருங்க..வெயிலுக்கு இதமா இருக்கும்..!” என்றபடி அங்கிருந்த காடுகளை பார்வையிட்டபடி சென்றாள்.
ஊரின் மற்ற தோட்டங்களில் கிடைக்காத ஒன்று இங்கு உண்டென்றால் அது வயித்துக்கு வஞ்சனை வைக்காத குணம் தான்.வெயில் காலங்களில்..நீச்சத் தண்ணியும்...குளிர்காலங்களில்..கடும் டீயும் கொண்டு வந்து கொடுத்து விடுவாள்.
தோட்டத்திற்கு சொந்தக்காரி என்ற பாகுபாடு இல்லாமல்...வேலைக்கு வருபவர்களுடன் சரிக்கு சரியாய் நடந்து கொள்வாள்.
அவள் செல்வதைக் கண்டவர்கள்...”இம்புட்டு அழகையும் கட்டிகிட யாருக்கு குடுத்து வச்சிருக்கோ..?” என்று மனதில் நினைத்து கொண்டனர்.
நன்னியூர்....
காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள... அழகிய கிராமம்.தென்னை மரங்களும்....நெல் வயல் வெளிகளும்.... பசுமையாய் காட்சியளிக்க....ஜனசந்தடி இல்லாத...ஒரு அமைதியான கிராமம்.
விவசாயமே இங்கு பிரதான தொழிலாக இருக்க....சிறு குறு தானியங்கள் தொடங்கி...நெல்,தென்னை போன்றவையும் செழித்து வளரும் பூமியாக இருந்தது.
காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால்....தண்ணீர் வரத்து நாட்களில்...காண்போரை கொள்ளை கொள்ளும் அழகுடன் திகழும்.
வீடுகள் என்று பார்த்தால்...பெரிய அளவில் இல்லை. அதனை குக்கிராமம் என்றே வரையறுக்க முடியும்.
பொதுவாக அதனை சுற்றியுள்ள பகுதிகளும் செழிப்பாக காணப்பட...அதை எல்லாம் மிஞ்சி விடும் அளவிற்கு அந்த பகுதி இருந்தது.
இடையில் ஏற்படும் பஞ்சங்களையும் தாங்கிக் கொள்ளும் பூமியாக இருந்தது.
இதற்கு மேல் கதையில் வருபவை அனைத்தும் கற்பனையே..!
காலை நேரப் பரபரப்பில்..அனைவரும் தோட்டம், காட்டிற்கு சென்று கொண்டிருக்க...
சுந்தர மகாலிங்கம்-அந்த ஊரின் தலைவர் வீட்டில்...
செயற்கை சாயம் பூசப்படாத உதடுகளும்...பால்வண்ண மேனியும்... முன்னால் தூக்கிப் போடப்பட்ட ஆறடி கூந்தலும்....,சிவப்பு கரையிட்ட பச்சைப் பாவடையும்,அதே வண்ணத்தில் மேல் சட்டையும், சிவப்பு தாவணியும் அணிந்து...எழில் ஓவியமாய் வந்தாள் சக்தி...என்று அழைக்கப்படும் சிவ சக்தி.
சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டதால்...மகாலிங்கம் அவளை பொத்தி பொத்தி வளர்த்தார்.ஒற்றை பெண் என்றாலும்..அவள் தான் அவருக்கு எல்லாம்.மகனுக்கு மகனாகவும்,மகளுக்கு மகளாகவும் இருந்து அவரைப் பார்த்து கொண்டாள் சக்தி.
அசாத்திய துணிச்சலும்,தைரியமும் மிக அதிகம்.சமையல் கட்டே கதி என்று இல்லாமல்....வயலில் அவளுக்கு தெரியாத வேலையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு..அனைத்து வேலைகளையும் கற்று தேர்ந்திருந்தாள்.
படிப்பு என்று பார்த்தால்..உயர் நிலை பள்ளிப் படிப்பு மட்டுமே.மகாலிங்கம் எவ்வளவு எடுத்து சொல்லியும் மேலே படிக்க அவள் விருப்பம் கொள்ளவில்லை.அதற்காக படிப்பு வராத பெண் என்று சொல்ல முடியாது.பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேறியிருந்தாள்.
அப்பாவின் உடல்நிலையை கருதி....வயல்,தோப்பு என அனைத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டாள்.
“ஏட்டுக் கல்வியை விட அனுபவ அறிவே பெரிது” என்ற வாசகம் அவள் விசயத்தில் உண்மையாகிப் போனது.
“அடியாத்தி...! எம்புட்டு நேரம் தான் கண்ணாடி முன்னாடி நிப்பவ...?” என்று அலுத்துக் கொண்டார் அவளின் பாட்டி பாப்பம்மாள்.
“பாட்டி....” என்று பல்லைக் கடித்தவள்....
“என்னைப் பார்த்தா அலங்காரம் பண்ணிட்டு இருக்க மாதிரியா தெரியுது...?” என்று மூக்கு விடைக்க கேட்க...
“உங்க ரெண்டு பேருக்கும் என்ன பஞ்சாயத்து..?” என்றபடி வந்தார் மகாலிங்கம்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா...நீங்க சாப்பிட வாங்க..! குப்பாயி அக்கா...சாப்பாடு ரெடியா..?” என்று கேட்டுக் கொண்டே சமையலறை நோக்கி போக...
அவளை பெருமிதம் வழியும் கண்களோடு பார்த்தனர் தாயும்,மகனும். இது தான் அவள்.செல்லம் கொஞ்சவோ....விளையாட்டுப் பிள்ளையாய் இருக்கவோ...அவளுக்கு நேரம் இருந்ததில்லை.
“எல்லாம் தயாரா இருக்கு சாமி..” என்றார் குப்பாயி வாஞ்சை வழியும் கண்களுடன்.
“அப்பாவுக்கு கம்மங் கூழும்,மோர் மிளகாயும் எடுத்து வைங்க...! பாட்டிக்கு கேப்பை களி....எனக்கு சாப்பாடு...” என்று மடமடவென்று சொன்னவள்... அவளே அனைத்தையும் எடுத்து வைக்க...அவளை ஆச்சர்யப் பார்வை பார்த்தார் குப்பாயி.
சக்தியின் வாய் தான் அவருக்கு வேலை சொல்லுமே தவிர..கைகள் பாதி வேலையை முடித்து விடும்.அவளுக்கு அப்படியே அவள் அம்மாவின் கைப் பக்குவம்...குப்பாயியை விட நன்கு சமைத்தாலும்....
“உங்கள மிஞ்ச முடியாதுக்கா...!” என்று பெருந்தன்மையோடு சொல்வாள்.
“இன்னைக்கு என்ன வேலைம்மா..?” என்றார் மகாலிங்கம்.
“இன்னைக்கு வயல்ல நடவு இருக்குப்பா...அப்பறம் வெங்காய காட்ல களை எடுக்க ஆள் வராங்க....தோப்புல தேங்காய் வெட்ட..இன்னைக்கு வரலையாம்..நாளைக்கு வரதா சொல்லியிருக்காங்க..! அப்பறம் இன்னைக்கு சம்பளப் பணம் குடுக்கணும்...பணம் எடுக்கு டவுன் பேங்க் வரை போகணும்...” என்று சாப்பிட்டுக் கொண்டே மடமடவென்று சொல்ல....கேட்டுக் கொண்டிருந்தவர்கள வாயைப் பிளந்தனர்.
“என்ன ஆத்தா..இத்தனை வேலையும் ஒத்த ஆளா எப்படி செய்ய முடியும்..?” என்று பாப்பம்மாள் வாயைத் திறக்க...
“நான் எப்ப பாட்டி அப்படி சொன்னேன்...அப்பா நீங்க ஒரு எட்டு வயல் வரைக்கும் போயிட்டு வந்திடுங்க...நான் வெங்காய காடு வரை போயிட்டு அப்படியே டவுனுக்கு போயிட்டு வந்திடுறேன்...அப்பறம் சாயங்காலமாய் கூலி குடுத்துடலாம்..” என்றாள்.
“சரிம்மா..!” என்றார் மகாலிங்கம்.சதி சொன்னால் அவள் வார்த்தைக்கு மறு பேச்சு என்பதே கிடையாது.அதற்காக அவள் பிடிவாதக்காரி இல்லை. தப்பென்று சொன்னால் உடனே ஏற்றுக் கொள்வாள்.
“பொம்பளைப் புள்ளை....இப்படியே காடு கரைன்னு திரிஞ்சுகிட்டு இருந்தா...எப்படி உன்னை ஒருத்தன்கிட்ட கரை சேர்க்கிறது...நம்மகிட்ட என்ன குறையா இருக்கு..?பேசாம நகை நட்டுன்னு போட்டு..ஊரே அதிர சீர் செஞ்சு ஒரு கல்யாணத்தை பண்ணிப் புடு மகாலிங்கம்..” என்று பாட்டி பெரிய மனுஷியாய் அறிவுரை சொல்ல...
“பாட்டி நான் போய்ட்டா..உன்னைய,அப்பாவை எல்லாம் யார் பாத்துக்கறது...அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..அது மட்டும் இல்லாம..நான் வேற ஊருக்கு எல்லாம் போக மாட்டேன்...” என்று பிடிவாதமாய் சொன்னாள்.சக்தி பிடிவாதம் பிடிக்கும் ஒரு விஷயம் உண்டு என்றால் அது இதுதான்.
“பாட்டி சொல்றதும் சரிதானே சக்தி...நான் உயிரோட இருக்கும் போதே உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா..எனக்கும் நிம்மதியா போய்டும்..” என்று தந்தையும் சேர்ந்து கொண்டு சொல்லும் போது..அவளால் மறுக்க முடியவில்லை.
“சரிப்பா...ஆனா கொஞ்ச நாள் மட்டும் போகட்டும்..” என்று அனுமதி வாங்கினாள்.
“பேங்க்குக்கு எதுல போறமா...?” என்றார்.
“நான் டவுன்பஸ்ல போயிட்டு வந்தறேன்ப்பா..” என்றாள்.
“வேண்டாம்மா....நம்ம கந்தன் ஆட்டோவை வர சொல்றேன்..அதுலயே போயிட்டு..அதுலயே வந்திடுமா..” என்றார்.
“சரிப்பா..” என்றவள்....
“குப்பாயக்கா....வயல்ல வேலை பாக்குறவங்களுக்கு...நீச்சத்தண்ணியம், மோரும் கலந்து வச்சிடுங்க...நான் போறப்ப... அப்படியே அப்பா கூட போய் குடுத்துட்டு போய்டுறேன்..” என்றபடி சாப்பிட்டு முடித்தாள்.
“சரி சாமி...” என்றவர் அதை கலக்க உள்ளே சென்றார்.குப்பாயி எப்பொழுதும் சக்தியை சாமி என்று தான் அழைப்பார்.தாயில்லாத பெண் என்ற பாசம் எப்பொழுதும் அவரிடம் இருக்கும்.
“நத்தத்து சாலை வழி...
நான் வருவேன் ஒத்தை வழி...
தண்ணிக்கு போரவரே....
துணைக்கு வந்தால் ஆகாதோ...”
என்ற பாடலை வாய் மொழியாக படித்துக் கொண்டு அங்கிருந்த பெண்கள் களையெடுத்துக் கொண்டிருக்க....
“என்ன ராசமாக்கா...பாட்டெல்லாம் பலமா இருக்கு..?”என்றபடி வரப்பில் நின்றாள் சக்தி.
“வாடியம்மா...! குனிஞ்சு நிமிந்து வேலை பார்க்கனும்ல...இப்படி எதையாவது முனுமுனுத்தா தான்...அசதி தெரிய மாட்டேங்குது... இன்னைக்கு என்னமோ ஒருத்தியும் வாயைத் திறக்காம வேலை பாக்குறாளுக..அதான் பாட்ட படிச்சேன்..” என்றாள் அவள்.
“சரி சரி...முன்னாடி இருக்குற மண்ணை வெட்டி..பின்னாடி இருக்குற புல்லை மூடாம...பார்த்து வெட்டுங்க..வெங்காய தாள் எல்லாம் இளசா இருக்கு...கொஞ்சம் பட்டாலும் செடி போய்டும்...” என்று அவள் லாவகமாய் சொல்ல..
“நீ சொல்லனுமா சக்தி..அதெல்லாம் சரியா செய்வோம்...புல்லு நல்ல வளர்ந்திருக்கு..அதான் பார்த்து மெதுவா வெட்டிட்டு இருக்கோம்..!” என்றாள் அவள்.
“நல்ல கோரைப் புல்லுக்கா..அப்படியே அரிச்சு வைச்சா..மாட்டுக்கு ஆகும்..பாலும் நல்லா கறக்கும்...” என்றாள் சக்தி.
“நீ சொன்னா சரிதான் சக்தி...பச்சப் புல்லை போட்டா...மாடெல்லாம் ..அப்படியே பாந்தமா சாப்பிடும்..!” என்றாள்.
“வசந்தி அக்கா....காட்டுக்குள்ள பல கீரையும் இருக்கு...களையெடுக்கும் போதே..பிடுங்கி..மடியில வைங்க..வெங்காய காட்டு கீரை...கடைஞ்சு எடுத்து அருமையா இருக்கும்...உங்க மகளுக்கு குடுங்க...படிக்கிற பிள்ளைக்கு நல்லது...” என்று தனக்கு தெரிந்ததை சொன்னபடியே... அங்கிருந்த மர நிழலில்..மோரை வைத்து விட்டு...
“கொஞ்ச நேரம் கழிச்சு...இந்த மோரை ஆளுக்கு ஒரு செம்பா குடுச்சுட்டு வேலையைப் பாருங்க..வெயிலுக்கு இதமா இருக்கும்..!” என்றபடி அங்கிருந்த காடுகளை பார்வையிட்டபடி சென்றாள்.
ஊரின் மற்ற தோட்டங்களில் கிடைக்காத ஒன்று இங்கு உண்டென்றால் அது வயித்துக்கு வஞ்சனை வைக்காத குணம் தான்.வெயில் காலங்களில்..நீச்சத் தண்ணியும்...குளிர்காலங்களில்..கடும் டீயும் கொண்டு வந்து கொடுத்து விடுவாள்.
தோட்டத்திற்கு சொந்தக்காரி என்ற பாகுபாடு இல்லாமல்...வேலைக்கு வருபவர்களுடன் சரிக்கு சரியாய் நடந்து கொள்வாள்.
அவள் செல்வதைக் கண்டவர்கள்...”இம்புட்டு அழகையும் கட்டிகிட யாருக்கு குடுத்து வச்சிருக்கோ..?” என்று மனதில் நினைத்து கொண்டனர்.