தோகை 2:
அந்தி சாயும் நேரம்....காற்று வந்து முகத்தில் மோத...காரின் கதவுகளை திறந்து விட்டு....அந்த ஊரின் இயற்கையை ரசித்தபடி வந்து கொண்டிருந்தான் அஜய்.
மாலை கிளம்ப வேண்டிய பயணத்தை ...கலையிலே தொடங்கியதாலோ என்னவோ...இருளிற்கு முன் நன்னியூரை நெருங்கிக் கொண்டிருந்தான்.
ஊரின் பசுமை...அவனின் மன அழுத்தத்தை குறைக்க..மனநிலையில் முற்றிலும் மாறிப்போனான் அஜய்.
கண்ணனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.திடுதிப்பென்று உடனே கிளம்பலாம் என்று அஜய் சொன்னவுடன் அவனுக்கு தலையும் புரியவில்லை...வாழும் புரியவில்லை.
“சார் இப்பவேவா..?” என்று அவன் கேட்க...
“உடனே..” என்று அழுத்தி சொன்னான்.
“சார்...கேரவன் எல்லாம் நாளைக்கு தான் வரும்...அதுமட்டுமில்லாம..அங்க ஏற்பாடு எல்லாம் எப்படி பண்ணியிருக்காங்கன்னு தெரியலை...நாம எப்படி..?” என்று இழுக்க...
“டிரைவர் வேண்டாம் காரை நீங்க எடுங்க....இன்னைக்கு மட்டும் பக்கத்துல எங்கையாவது ஹோட்டல்ல தங்கிக்கலாம்...” என்றான்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்த அஜயைக் கண்டவனுக்கு வியக்காமல் இருக்க முடியவில்லை.இருந்தாலும் அவன் சொல்லைத் தட்டவும் முடியவில்லை.
“ஹோட்டலில் தங்கிக் கொள்ளலாம் என்று சொன்னவன்...இடையில் வரும் போதே..அந்த முடிவையும் மாற்றிக் கொண்டான்.காரை நேரா அந்த ஊருக்கே விடுங்க...” என்று சொல்லவும்..கண்ணனும் அப்படியே ஓட்டிக் கொண்டிருந்தான்.
இருபுறமும் தெரிந்த பசுமையை கண்ணனும் ரசிக்கவே செய்தான்.
“இப்படி பசுமையை எல்லாம் சிட்டியில் எங்கே பார்க்க முடிகிறது..?” என்ற ஏக்க பெருமூச்சு அவனிடம் இருந்து வெளிப்பட...
“என்ன கண்ணன்..மூச்செல்லாம் பலமா இருக்கு..?” என்று கேட்டான் அஜய்.
“அது ஒண்ணுமில்லை சார்...இப்படி வாய்க்கால்,வரப்புன்னு பார்த்தே எவ்வளவு வருஷம் ஆச்சு...சின்ன வயசுல..பாட்டி,தாத்தா ஊருக்கு போனப்ப பார்த்தது..இப்பவெல்லாம் எல்லாமே மாறிட்டது தானே சார்...அதைத்தான் நினைச்சுகிட்டே வந்தேன் சார்...” என்றான்.
“உண்மைதான் கண்ணன்..” என்றான் அஜய்யும்.
அஜயை ஆச்சர்யமாய் பார்த்தான் கண்ணன்.எவ்வளவு பெரிய ஹீரோ...இவனுடைய கால்ஷீட்டுக்காக பலர் தவமாய் தவமிருக்க...இங்கே இவரென்றால்....சின்னப்பிள்ளை போல்...வேடிக்கை பார்த்துட்டு வராரே....என்று எண்ணிக் கொண்டான்.
கண்ணனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர்களுக்கும் இயல்பான ஆசைகள்,விருப்பு,வெறுப்புகள் இருக்கும் என்று.
தன்னைப் பற்றி யாரும் கணித்து விடாதபடி ஒரு முக மூடியையே அஜய் போட்டுக் கொண்டிருந்தான்.
“சார்...இப்ப நாம ஊருக்குள்ள போனா...எங்க தங்குறது...கேரவன்...ஆட்கள் எல்லாம் இப்பதான் விழுப்புரம் கிட்ட வந்துட்டு இருக்காங்கலாம்...” என்று கண்ணன் சொல்ல...
“ஒன்னும் பிரச்சனையில்லை..அது வரைக்கும் கார்க்குள்ளேயே இருப்போம்..” என்றான் அசால்ட்டாய்.
“சரித்தான்..” என்று மனசுக்குள் எண்ணியவன்...”ஓகே சார்..” என்று முடித்துக் கொண்டான்.
கண்ணனுக்கு என்ன தெரியும் அவன் மன நிலையைப் பற்றி.
இவ்வளவு தூரம் நான் வரவேண்டிய அவசியம் என்ன..?” என்ற கேள்வியை நூறாவது முறையாக தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் அஜய்.
“வேற எதுக்கு...ஷூட்டிங்குக்கு தான்...” என்று தனக்குத் தானே சப்பக் கட்டும் கட்டிக் கொண்டான்.
நேரம் மாலை 5க் காட்ட...காற்று இப்போது பலமாக வீசத் தொடங்கியது.மேகமும் கருத்திருக்க...மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தது.
“மழை வரும் போல சார்...” என்றான் கண்ணன்.
“வரட்டும் ....வரட்டும்..” என்பதோடு முடித்துக் கொண்டான்.
சற்று தள்ளி ஒரு வயதான பாட்டி..புல்லுக் கட்டைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்து கொண்டிருக்க...தாவணியை தலைக்குப் போர்த்தியவாறு ஓடி வந்தாள் சக்தி.
“பாட்டி...எதுக்கு இப்படி தள்ளாடி நடந்துட்டு இருக்கீங்க...? மழை வரப் போகுது...நடங்க சீக்கரம்..” என்றாள்.
“நான் கொஞ்சும் குமரியா தங்கம்....நீ வயசு புள்ளை,,,போக வேண்டியது தான்..உன் வேகத்துக்கு நான் ஈடு கொடுக்க முடியுமா..?” என்று அந்த பாட்டி கேட்க...
“சரி..புல்லுக் கட்டைக் குடுங்க..நான் தூக்கிட்டு வரேன்..” என்று அவள் வாங்க போக...
“சிஸ்டர்....” என்ற சொல்லில் திரும்பினாள்.
அங்கே ஒரு புதிய மனிதனைக் காணவும்....”சொல்லுங்க..!” என்றாள்.
“நாங்க இந்த ஊருக்கு சினிமா ஷூட்டிங்க்காக வந்திருக்கோம்...கேரவன் எல்லாம் பின்னாடி வருது...மழை வரும் போல இருக்கு...இந்த ஊர்ல தங்க ஏதாவது இடம் கிடைக்குமா..?” என்றான் கண்ணன்.
அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவள்....”இங்க நீங்க தங்குற அளவுக்கு இடம் எல்லாம் இல்லையே...!” என்றாள்.
“ஹோ..ஓகே சிஸ்டர்...எனக்கும் புரிந்தது...இருந்தாலும் ஏதாவது ஒரு ஆப்சன் இருக்குமான்னுதான் கேட்டு பார்த்தேன்...கார் இருக்கு சிஸ்டர்..நாங்க அதுக்குள்ளயே இருந்துக்குறோம்..” என்றான்.
“சரிங்க..அது உங்க விருப்பம்..” என்றவள், அந்த பாட்டியிடம் இருந்த புல்லுக் கட்டை வாங்கிக் கொண்டு நடப்பதற்கும்...மழை லேசாக தூருவதற்கும் சரியாக இருந்தது.
கருமேகம் திரண்டிருக்க....வான மகள்...குளிர்வுடன் பூமியை நோக்கி தன் சாரல் துளிகளை அனுப்ப...தூறல் பட்ட இடமெல்லாம்....மண்மகள் சிவந்து....உயிர்வரை ஊடுருவும் ஒரு மண் வாசனையைக் கொடுக்க...சாலையின் இரும்புறமும் இருந்த..நெற்பயிர்களும்... சோளப்பயிர்களும்...ஆனந்த தாண்டவமாட...புல்லுக் கட்டைத் தூக்கி நடந்து கொண்டிருந்த சக்தியை உள்ளிருந்து ரசித்துக் கொண்டிருந்தான் அஜய்.ஆனால் அவன் மனதைக் கேட்டால்...
“சும்மாதான் பார்த்துக் கொண்டிருந்தேன்....இதில் என்ன இருக்கு..?” என்று சொல்லும்.
அஜய் காரில் அமர்ந்திருந்ததை சக்தி கவனிக்கவில்லை.பார்த்திருந்தாலும் அவளுக்கு ஒன்றுமில்லை.ஏன் என்றால் அவனை யாரென்றே அவளுக்கு தெரியாது.
இதை அஜய் அறிந்தால் அவன் நிலை...ஒரு மாநிலத்தின் முன்னணிக் கதாநாயகனை..தெரியாது என்று சொல்வது அவனுக்கு இழுக்கு அல்லவா..?
ஆனால் உண்மை அதுதான்.சக்திக்கு எப்பொழுதும் அதில் ஆர்வம் இருந்ததில்லை.எப்பொழுதாவது...தன் பாட்டியுடன் அமர்ந்து அந்த கால நடிகர்களின் படத்தைப் பார்ப்பாள்.அதிலும் பாதியில் போக வர..என்று அரைகுறையாக தான் பார்ப்பாள்.
நடிகர்களின் பெயரையும்,அவர்களையும் உயிர்மூச்சாகக் கொண்டு.... அவர்கள் பின்னாடியே பயணிக்கும் சராசரி பெண்ணில்லை அவள்.
வயலும்,வாழ்வும் சக்தியாகவே அவள் இருந்தாள்.இருக்க ஆசைப் பட்டாள்.நடப்பிலும் இருந்தாள்.குடும்பத்தைத் தாண்டி வேறு உலகம் தெரியாத பெண்கள் அபூர்வம்...அவள் அந்த வகையைச் சேர்ந்தவள்.இந்த காலத்தில் இதெல்லாம் ஓவரா இல்லை...என்று லாஜிக் பேசும் பெண்களுக்கு அப்பாற்பட்டவள்.
அவள் முடிக்கற்றைகள் லேசான குளிர்ந்த காற்றில் பறக்க...சாரலில் நனைந்த அவள் முகத்தில்...துளிநீர்...நெற்றியில் இருந்து வடிந்து அவள் இதழ்வழி....தொண்டைக் குழியை தாண்டி சென்று கொண்டிருக்க...அதற்கு மேல் எண்ணிய அஜய்....தன்னைத் தானே மீட்டுக் கொண்டான்.
“அங்க தெரியற ஆலமரத்துக்கு கீழ நிறுத்திடுங்க கண்ணன்...கேரவன் வாரட்டும்..” என்றான் அஜய்.
“ஓகே சார்..!” என்றவன் சக்தியையும்,அந்த பாட்டியையும் ஓவர்டேக் செய்து...சிறிது தூரத்தில் இருந்த ஆலமரத்தின் அடியில் காரை.. நிறுத்தினான்”.
மழை தீவிரமாய் வலுக்க துவங்க...”பாட்டி பெரிய மழையா வருது..இப்ப என்ன பண்றது....?” என்றாள்.
“தங்கம் நம்ம ஆலமரத்துக்கு அடியில நின்னுட்டு...அப்பறம் போகலாம்..” என்றார் பட்டி.
“சரி பாட்டி..” என்று அவர்களும் அம்மரத்தை நோக்கி நகர்ந்தனர்.
“அந்த ஆலமரம் தான் அவர்கள் ஊரின் பஸ்டாப்...ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வரும் டவுன் பஸ்சுக்காக...பல மணி நேரம் காத்திருப்பார்கள்.ஊரை ஒட்டியே அமைந்திருந்தது.
அங்கே சென்றவுடன்..அங்கிருந்த திட்டின் மேல் புல்லுக் கட்டை வைத்தாள் சக்தி.
தன் தாவணி முந்தானையால்...தன் முகத்தில் வழிந்த நீரைத் துடைக்க...
அந்தி சாயும் நேரம்....காற்று வந்து முகத்தில் மோத...காரின் கதவுகளை திறந்து விட்டு....அந்த ஊரின் இயற்கையை ரசித்தபடி வந்து கொண்டிருந்தான் அஜய்.
மாலை கிளம்ப வேண்டிய பயணத்தை ...கலையிலே தொடங்கியதாலோ என்னவோ...இருளிற்கு முன் நன்னியூரை நெருங்கிக் கொண்டிருந்தான்.
ஊரின் பசுமை...அவனின் மன அழுத்தத்தை குறைக்க..மனநிலையில் முற்றிலும் மாறிப்போனான் அஜய்.
கண்ணனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.திடுதிப்பென்று உடனே கிளம்பலாம் என்று அஜய் சொன்னவுடன் அவனுக்கு தலையும் புரியவில்லை...வாழும் புரியவில்லை.
“சார் இப்பவேவா..?” என்று அவன் கேட்க...
“உடனே..” என்று அழுத்தி சொன்னான்.
“சார்...கேரவன் எல்லாம் நாளைக்கு தான் வரும்...அதுமட்டுமில்லாம..அங்க ஏற்பாடு எல்லாம் எப்படி பண்ணியிருக்காங்கன்னு தெரியலை...நாம எப்படி..?” என்று இழுக்க...
“டிரைவர் வேண்டாம் காரை நீங்க எடுங்க....இன்னைக்கு மட்டும் பக்கத்துல எங்கையாவது ஹோட்டல்ல தங்கிக்கலாம்...” என்றான்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்த அஜயைக் கண்டவனுக்கு வியக்காமல் இருக்க முடியவில்லை.இருந்தாலும் அவன் சொல்லைத் தட்டவும் முடியவில்லை.
“ஹோட்டலில் தங்கிக் கொள்ளலாம் என்று சொன்னவன்...இடையில் வரும் போதே..அந்த முடிவையும் மாற்றிக் கொண்டான்.காரை நேரா அந்த ஊருக்கே விடுங்க...” என்று சொல்லவும்..கண்ணனும் அப்படியே ஓட்டிக் கொண்டிருந்தான்.
இருபுறமும் தெரிந்த பசுமையை கண்ணனும் ரசிக்கவே செய்தான்.
“இப்படி பசுமையை எல்லாம் சிட்டியில் எங்கே பார்க்க முடிகிறது..?” என்ற ஏக்க பெருமூச்சு அவனிடம் இருந்து வெளிப்பட...
“என்ன கண்ணன்..மூச்செல்லாம் பலமா இருக்கு..?” என்று கேட்டான் அஜய்.
“அது ஒண்ணுமில்லை சார்...இப்படி வாய்க்கால்,வரப்புன்னு பார்த்தே எவ்வளவு வருஷம் ஆச்சு...சின்ன வயசுல..பாட்டி,தாத்தா ஊருக்கு போனப்ப பார்த்தது..இப்பவெல்லாம் எல்லாமே மாறிட்டது தானே சார்...அதைத்தான் நினைச்சுகிட்டே வந்தேன் சார்...” என்றான்.
“உண்மைதான் கண்ணன்..” என்றான் அஜய்யும்.
அஜயை ஆச்சர்யமாய் பார்த்தான் கண்ணன்.எவ்வளவு பெரிய ஹீரோ...இவனுடைய கால்ஷீட்டுக்காக பலர் தவமாய் தவமிருக்க...இங்கே இவரென்றால்....சின்னப்பிள்ளை போல்...வேடிக்கை பார்த்துட்டு வராரே....என்று எண்ணிக் கொண்டான்.
கண்ணனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர்களுக்கும் இயல்பான ஆசைகள்,விருப்பு,வெறுப்புகள் இருக்கும் என்று.
தன்னைப் பற்றி யாரும் கணித்து விடாதபடி ஒரு முக மூடியையே அஜய் போட்டுக் கொண்டிருந்தான்.
“சார்...இப்ப நாம ஊருக்குள்ள போனா...எங்க தங்குறது...கேரவன்...ஆட்கள் எல்லாம் இப்பதான் விழுப்புரம் கிட்ட வந்துட்டு இருக்காங்கலாம்...” என்று கண்ணன் சொல்ல...
“ஒன்னும் பிரச்சனையில்லை..அது வரைக்கும் கார்க்குள்ளேயே இருப்போம்..” என்றான் அசால்ட்டாய்.
“சரித்தான்..” என்று மனசுக்குள் எண்ணியவன்...”ஓகே சார்..” என்று முடித்துக் கொண்டான்.
கண்ணனுக்கு என்ன தெரியும் அவன் மன நிலையைப் பற்றி.
இவ்வளவு தூரம் நான் வரவேண்டிய அவசியம் என்ன..?” என்ற கேள்வியை நூறாவது முறையாக தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் அஜய்.
“வேற எதுக்கு...ஷூட்டிங்குக்கு தான்...” என்று தனக்குத் தானே சப்பக் கட்டும் கட்டிக் கொண்டான்.
நேரம் மாலை 5க் காட்ட...காற்று இப்போது பலமாக வீசத் தொடங்கியது.மேகமும் கருத்திருக்க...மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தது.
“மழை வரும் போல சார்...” என்றான் கண்ணன்.
“வரட்டும் ....வரட்டும்..” என்பதோடு முடித்துக் கொண்டான்.
சற்று தள்ளி ஒரு வயதான பாட்டி..புல்லுக் கட்டைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்து கொண்டிருக்க...தாவணியை தலைக்குப் போர்த்தியவாறு ஓடி வந்தாள் சக்தி.
“பாட்டி...எதுக்கு இப்படி தள்ளாடி நடந்துட்டு இருக்கீங்க...? மழை வரப் போகுது...நடங்க சீக்கரம்..” என்றாள்.
“நான் கொஞ்சும் குமரியா தங்கம்....நீ வயசு புள்ளை,,,போக வேண்டியது தான்..உன் வேகத்துக்கு நான் ஈடு கொடுக்க முடியுமா..?” என்று அந்த பாட்டி கேட்க...
“சரி..புல்லுக் கட்டைக் குடுங்க..நான் தூக்கிட்டு வரேன்..” என்று அவள் வாங்க போக...
“சிஸ்டர்....” என்ற சொல்லில் திரும்பினாள்.
அங்கே ஒரு புதிய மனிதனைக் காணவும்....”சொல்லுங்க..!” என்றாள்.
“நாங்க இந்த ஊருக்கு சினிமா ஷூட்டிங்க்காக வந்திருக்கோம்...கேரவன் எல்லாம் பின்னாடி வருது...மழை வரும் போல இருக்கு...இந்த ஊர்ல தங்க ஏதாவது இடம் கிடைக்குமா..?” என்றான் கண்ணன்.
அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவள்....”இங்க நீங்க தங்குற அளவுக்கு இடம் எல்லாம் இல்லையே...!” என்றாள்.
“ஹோ..ஓகே சிஸ்டர்...எனக்கும் புரிந்தது...இருந்தாலும் ஏதாவது ஒரு ஆப்சன் இருக்குமான்னுதான் கேட்டு பார்த்தேன்...கார் இருக்கு சிஸ்டர்..நாங்க அதுக்குள்ளயே இருந்துக்குறோம்..” என்றான்.
“சரிங்க..அது உங்க விருப்பம்..” என்றவள், அந்த பாட்டியிடம் இருந்த புல்லுக் கட்டை வாங்கிக் கொண்டு நடப்பதற்கும்...மழை லேசாக தூருவதற்கும் சரியாக இருந்தது.
கருமேகம் திரண்டிருக்க....வான மகள்...குளிர்வுடன் பூமியை நோக்கி தன் சாரல் துளிகளை அனுப்ப...தூறல் பட்ட இடமெல்லாம்....மண்மகள் சிவந்து....உயிர்வரை ஊடுருவும் ஒரு மண் வாசனையைக் கொடுக்க...சாலையின் இரும்புறமும் இருந்த..நெற்பயிர்களும்... சோளப்பயிர்களும்...ஆனந்த தாண்டவமாட...புல்லுக் கட்டைத் தூக்கி நடந்து கொண்டிருந்த சக்தியை உள்ளிருந்து ரசித்துக் கொண்டிருந்தான் அஜய்.ஆனால் அவன் மனதைக் கேட்டால்...
“சும்மாதான் பார்த்துக் கொண்டிருந்தேன்....இதில் என்ன இருக்கு..?” என்று சொல்லும்.
அஜய் காரில் அமர்ந்திருந்ததை சக்தி கவனிக்கவில்லை.பார்த்திருந்தாலும் அவளுக்கு ஒன்றுமில்லை.ஏன் என்றால் அவனை யாரென்றே அவளுக்கு தெரியாது.
இதை அஜய் அறிந்தால் அவன் நிலை...ஒரு மாநிலத்தின் முன்னணிக் கதாநாயகனை..தெரியாது என்று சொல்வது அவனுக்கு இழுக்கு அல்லவா..?
ஆனால் உண்மை அதுதான்.சக்திக்கு எப்பொழுதும் அதில் ஆர்வம் இருந்ததில்லை.எப்பொழுதாவது...தன் பாட்டியுடன் அமர்ந்து அந்த கால நடிகர்களின் படத்தைப் பார்ப்பாள்.அதிலும் பாதியில் போக வர..என்று அரைகுறையாக தான் பார்ப்பாள்.
நடிகர்களின் பெயரையும்,அவர்களையும் உயிர்மூச்சாகக் கொண்டு.... அவர்கள் பின்னாடியே பயணிக்கும் சராசரி பெண்ணில்லை அவள்.
வயலும்,வாழ்வும் சக்தியாகவே அவள் இருந்தாள்.இருக்க ஆசைப் பட்டாள்.நடப்பிலும் இருந்தாள்.குடும்பத்தைத் தாண்டி வேறு உலகம் தெரியாத பெண்கள் அபூர்வம்...அவள் அந்த வகையைச் சேர்ந்தவள்.இந்த காலத்தில் இதெல்லாம் ஓவரா இல்லை...என்று லாஜிக் பேசும் பெண்களுக்கு அப்பாற்பட்டவள்.
அவள் முடிக்கற்றைகள் லேசான குளிர்ந்த காற்றில் பறக்க...சாரலில் நனைந்த அவள் முகத்தில்...துளிநீர்...நெற்றியில் இருந்து வடிந்து அவள் இதழ்வழி....தொண்டைக் குழியை தாண்டி சென்று கொண்டிருக்க...அதற்கு மேல் எண்ணிய அஜய்....தன்னைத் தானே மீட்டுக் கொண்டான்.
“அங்க தெரியற ஆலமரத்துக்கு கீழ நிறுத்திடுங்க கண்ணன்...கேரவன் வாரட்டும்..” என்றான் அஜய்.
“ஓகே சார்..!” என்றவன் சக்தியையும்,அந்த பாட்டியையும் ஓவர்டேக் செய்து...சிறிது தூரத்தில் இருந்த ஆலமரத்தின் அடியில் காரை.. நிறுத்தினான்”.
மழை தீவிரமாய் வலுக்க துவங்க...”பாட்டி பெரிய மழையா வருது..இப்ப என்ன பண்றது....?” என்றாள்.
“தங்கம் நம்ம ஆலமரத்துக்கு அடியில நின்னுட்டு...அப்பறம் போகலாம்..” என்றார் பட்டி.
“சரி பாட்டி..” என்று அவர்களும் அம்மரத்தை நோக்கி நகர்ந்தனர்.
“அந்த ஆலமரம் தான் அவர்கள் ஊரின் பஸ்டாப்...ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வரும் டவுன் பஸ்சுக்காக...பல மணி நேரம் காத்திருப்பார்கள்.ஊரை ஒட்டியே அமைந்திருந்தது.
அங்கே சென்றவுடன்..அங்கிருந்த திட்டின் மேல் புல்லுக் கட்டை வைத்தாள் சக்தி.
தன் தாவணி முந்தானையால்...தன் முகத்தில் வழிந்த நீரைத் துடைக்க...