எனக்கும் இதே சந்தேகம் கீர்த்தி சரண் சந்திச்சதே எழில் கல்யாணத்துக்கு முன்னாடி தானே அப்புறம் எப்படி பத்து வருஷம் ... டைப்பிங் மிஸ்டேக்கா இருக்குமா இல்ல இவ வேற ஆளாபத்து வருட காதலா
அந்த கீர்த்தி சின்ன வயசில் இருந்தே எழிலை தான் விரும்புனா
எழில் அலர் ஹனிமூன் போயிருந்த இடத்தில் தான் எழிலுக்கு கீர்த்தி சரண் விஷயம் தெரியும்
இப்போ அலர் பெத்த குட்டி அலாவுதீன் பூதத்துக்கு வயசு அஞ்சு தான் ஆகுது .
இவ இங்க இருக்கும் போது நாலு வயசு தான். அப்போ இவங்க காதலிச்சு ஐந்து வருஷம் தான் இருக்கும்
சரணுக்கே தெரியாமல் அவ பின்னாடி சுத்தியிருக்கா அப்போ சரணும் அந்த கீர்த்தியும் காதலிச்சது கூட தெரிஞ்சு இருக்குமே
இவ எந்த கீர்த்தியா இருந்தாலும் சரி பிரகாசத்தை பழி வாங்க தேர்ந்து எடுத்து இருக்க வழி தப்பு.
அந்த குழந்தை பிறந்த பிறகு சமூகத்தில் அதோட நிலை என்ன என்று சரண் சொன்ன பிறகும் இவ குழந்தை பெத்துகிட்டா பிரகாசத்துக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்
யார் கஷ்ட பட்டாலும் எனக்கு கவலை இல்லை என்னோட சந்தோஷம் தான் முக்கியம் என்று பிரகாசம் செஞ்ச மாதிரி எதிர்காலத்தில் இந்த குழந்தை என்ன கஷ்ட பட்டாலும் பரவாயில்லை எனக்கு பிரகாசத்தை பழி வாங்கணும் இது தான் இவள் எண்ணம்
இந்த குழந்தை மூலம் அவ நினைச்ச மாதிரி பிரகாசத்தை பழி வாங்கி முடிச்சிட்டா அவனும் செத்து போயிட்டான் அதுக்கு பிறகு இந்த குழந்தைக்கு என்ன நியாயம் செய்வா
அடிக்கிற அடியில் மூஞ்சி முகரை எல்லாம் கிழிந்து தொங்க வேண்டாமா நல்லா அடிடா உன்னை கஷ்ட படுத்துறதுக்காக இல்லை ஒரு பிஞ்சு குழந்தைய பயன் படுத்தி தன்னோட பழி வெறி தீர்க்க நினைக்குறதுக்காக
கீர்த்தி இவ்வளவு மோசமா நடந்திருக்கா இவன் ஏன் எழில் கிட்ட சொல்லவே இல்லை
வீட்டில் இருக்கும் போது டார்ச்சர் பண்றது வேற வெளில இருக்கிறவன இவ்வளவு நேரத்துக்குள்ள வீட்டுக்கு வரணும் என்று சொல்லி மிரட்டுவது வேற
இவ பண்ற டார்ச்சர்ல அவ்ளோ வேகமா வந்தானே ஒரு வேளை விபத்து எதாவது நடந்து சரண் உயிர் போயிருந்தால் என்ன செய்வா