அத்தியாயம் – 11
“நான் இனிமே இங்க இருக்கவே மாட்டேன்.. யாராவது எனக்கு வந்து அட்வைஸ் பண்ணீங்க அவ்வளோதான்.. அவ இந்த வீட்டு மருமகளா வர்ரான்னா நான் இங்க இருக்க மாட்டேன்..” என்று காட்டு கத்தலாய் கத்திக்கொண்டு இருந்தாள் பமீலா..
வனமாலி வீட்டில் அனைவருமே இருக்க, ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு பாவனை. இந்திராவோ கலங்கிய விழிகளோடு கைகளைப் பிசைந்துகொண்டு அமர்ந்திருக்க, மணிராதா கொஞ்சம் அதிர்ச்சியோடு தான் இருந்தார். வனமாலியிடம் அவர் இப்படியான ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை.
வந்தனாவும், கோவர்த்தனும் இதை நாங்கள் எதிர்பார்த்தோம் என்று ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்துக்கொள்ள, வனமாலியோ யார் என்ன செய்தாலும் யார் என்ன சொன்னாலும் என் முடிவென்பது இதுதான் என்று அமர்ந்திருந்தான்.
மணிராதா முகத்தினில் தெரிந்த அதிர்ச்சி அவனுக்கு சிறு சங்கடம் கொடுத்தாலும், என் முடிவில் மாற்றமேயில்லை என்றுதான் அவன் திண்ணமாய் இருக்க, பமீலாவோ அனைவர்க்கும் சேர்த்து கத்திக்கொண்டு இருந்தாள்.
“ம்மா ஏன் அமைதியா இருக்க.. வா.. இவங்கக்கிட்ட எல்லாம் நியாயமே கிடைக்காது.. எல்லாருமே சுயநலம்.. சுய லாபத்துக்காக ஆரம்பத்துல இருந்தே உன்னையும் என்னையும் வச்சு எல்லாம் விளையாடுறாங்க..” என்று மணிராதாவை முறைத்தபடி பமீலா சொல்ல,
இந்திராவோ “என்ன அண்ணி இதெல்லாம்.. ஏன் இப்படி ஒவ்வொரு தடவையும் என்னையும் என் பொண்ணையும் அழ வைக்கிறீங்க.. உங்களோட சொல் பேச்சு கேட்டது தான் எங்க தப்பா? சொல்லுங்க...” என்று அவரும் இப்போது மணிராதாவை கேள்வி கேட்க,
இத்தனை வருடம் எதற்கும் தேவையற்று பேசாதிருந்த இந்திராவே இப்போது தன்னை கேள்வி கேட்பதை எண்ணி மணிராதாவிற்கு மிக மிக ரோசமாகிப் போனது.
ஆனால் அதுவும் யாரால்?? தான் பெற்ற மகனால் என்று நினைக்கையில் அவரின் அதிர்ச்சி தாண்டி கோபம் எல்லையை மீற,
“இது நடக்கவே நடக்காது வனா...” என்றார் உறுதியாய்.
“இது நடந்து தான் ஆகணும்மா...” என்றான் அவனும் உறுதியாக..
“பாத்தீங்களா.. பாத்தீங்களா... ஆரம்பத்துல இருந்து நான் சொன்னது சரியாப் போச்சா.. அவங்க எல்லாரும் ஒவ்வொன்னா ப்ளான் பண்ணி செய்றாங்க...” என்று பமீலா திரும்ப கத்த,
இம்முறை வனமாலி கோவர்த்தனைப் பார்த்தான் ‘உன் மனைவியை அடக்கி வை..’ என்பதுபோல்..
அண்ணனின் பார்வை உணர்ந்தவனோ “பமீ..” என்று எதுவோ சொல்லவர, “நீங்க பேசாதீங்க.. நீங்க பேசவே கூடாது..” என்று ஆங்காரமாய் அவனை நோக்கி விரல் நீட்டி கத்த, கோவர்த்தனின் முகம் அப்படியே வாடிப் போனது.
மணிராதாவோ “பமீலா...” என்று அதட்ட,
“என்னை ஏன் இப்போ எல்லாம் பேசாத சொல்றீங்க.. வனா மாமா சொல்றது சரியா? இல்லை அவர் பண்றதுதான் சரியா?? அவரை ஏன் யாரும் சொல்றதில்லை...” என்று மேலே மேலே குரலை உயர்த்திக்கொண்டு போக, வனமாலி எழுந்துவிட்டான்..
‘என்ன செய்யப் போகிறான்..’ என்று அனைவரும் பார்க்க, வனமாலியோ நேராய் மணிராதாவின் அருகே வந்தமர்ந்தவன், “ம்மா.. இதுதான் என் முடிவு.. இது மட்டும் தான் என் முடிவு.. சொல்லப் போனா சிவகாமி அத்தை என்கிட்டே கேட்கிறதுக்கு முன்னமே நான் கமலியை கல்யாணம் செய்யனும்னு நினைச்சிட்டேன்..” என,
வீட்டினர் அனைவரும் ‘ஆங்...!!!’ என்றுதான் வாய் பிளந்தனர்.
மணிராதா திகைத்துப் போய் மகனின் முகம் பார்க்க, “ம்மா சிலது நான் சொன்னா உங்களுக்கு கஷ்டமா தான் இருக்கும்.. ஆனா கேட்டுதான் ஆகணும் வேற வழியில்லை...” என்று அவரின் கைகளை பிடித்தவன்,
“நீங்க ஆரம்பத்துல ஒவ்வொரு விசயத்துக்கும் இப்போ உங்க பசங்க நாங்க பதில் சொல்லிட்டு இருக்கோம்.. நேரடியாவும்... இல்ல எங்க வாழ்க்கைல நடக்கிறது வச்சும்...” என்று சொல்ல, மணிராதாவின் மனதில் அடியாளத்தில் இருந்த ஒரு பயம் இப்போது மேலெழுந்து வந்தது.
‘சிவகாமிக்குத் தான் செய்தவைகள் எல்லாம் என் பிள்ளைகள் வாழ்வில் விளையாடுகிறதோ...’ என்ற எண்ணம் இந்த கொஞ்ச வருடங்களாகவே இருக்க, அதன்பொருட்டே வந்தனா நிச்சயத்தில் சிவகாமி வந்து சீர் செய்தபோதும், அத்தனை எதுவும் மறுக்கவில்லை.
அவர் வந்தது பிடிக்கவில்லை தான் ஆனால் மணிராதா நினைத்திருந்தால் அங்கேயே மறுத்திருக்க முடியும். செய்யவில்லை.. இருந்தாலும் பிறவி குணம் என்பது போகுமா?? கடைசியில் வார்த்தைகளை விட்டு, கமலியை சீண்டிவிட்டார்..
விளைவு.. இதோ அவள் இங்கேயே வரப்போகிறாள்.. சர்வ உரிமையோடு.. சர்வ அதிகாரத்தோடு.. வனமாலியின் மனைவியாக கமலி இங்கே வருகையில் அதன் பின் நடப்பவைகள் எல்லாம் மணிராதாவிற்கு நினைத்தும் பார்க்க முடியாது கண்களை இறுக மூடிக்கொண்டார்.
“அம்மா...” என்று வனமாலி திரும்ப அழைக்க, கைகளை உயர்த்தியவர், “போதும் வனா..” என்றுசொல்லி அப்படியே சாய்ந்துகொள்ள,
“ஆ ஊன்னா இப்படி கண்ணா மூடிக்கோங்க.. இல்லையோ வந்தனா கல்யாணம் அது இதுன்னு சொல்லுங்க..” என்று பமீலா மீண்டும் ஆரம்பிக்க,
கோவர்த்தனோ “பமீலா பேச்சை நிறுத்து...” என்று கத்தினான்.
“ஏன் ஏன் நான் பேசக்கூடாது.. இப்போ சொல்றதுதான்.. நல்லா கேட்டுகோங்க எல்லாம்.. யாருக்கு கல்யாணம் நடக்கது நடக்கலை, அது வந்தனாவா இருந்தாலும் சரி, இல்லை வனா மாமாவா இருந்தாலும் சரி, அது எனக்கு கவலையில்லை. ஆனா அந்த கமலி இங்க வரக்கூடாது..” எனவும்,
“பமீலா...!!!!!!” என்று வனமாலியும் சரி மணிராதாவும் சரி கத்தியே விட்டனர்..
பமீலாவின் இப்பேச்சைக் கேட்டு மணிராதா மனதில் பயப்பந்து உருளத் தொடங்கியது.. வந்தனாவின் திருமணம்.... கோவர்த்தனுக்கும் பமீலாவிற்கு ஒரு பிள்ளை... வனமாலியின் வாழ்வு... இதெல்லாமே முற்றுப்பெறாது அப்படி அப்படியே நிற்கிறது... இதற்கான பதில்கள் யார் சொல்வது?
அப்படியிருக்கையில் இவளே இப்படி பேசினால் எப்படி?? என்னமாதிரி பேச்சு இது.. அனைவருமே வந்தனாவைப் பார்க்க, இத்தனை நாள் இல்லாது அவள் விழிகளில் லேசாய் கண்ணீர் கோடுகள் தெரிய, வனமாலியின் பொறுமை எல்லைக் கடந்துவிட்டது.
“நல்லா கேட்டுக்கோங்க.. வந்தனா கல்யாணம் நடக்கும்.. சீரும் சிறப்புமா நடக்கும்... நான் மட்டுமில்ல, நானும் கமலியும் சேர்ந்து நின்னு அதை நடத்திவைப்போம்..” என்றவன்
“கண்டிப்பா எனக்கும் கமலிக்கும் அடுத்த வாரம் கல்யாணம் நடக்கும்.. யார் சரின்னு சொன்னாலும் சரி இல்லைன்னாலும் சரி..” என்றுவிட்டு வந்தனாவிடம் வந்தவன் “நீ எதுக்கும் அழக் கூடாது...” என்று சொல்லி வெளியே கிளம்பிவிட்டான்.
வனமாலி கிளம்பியதும் வீட்டினில் அப்படியொரு அமைதி.. புயல் வருவதற்கு முன்னிருக்கும் ஓர் அமைதியா?? இல்லை புயல் வந்தபின்னே இருக்கும் அமைதியா?? யாராலும் இனம் காணமுடியவில்லை.
ஆனால் எதோ ஒன்று நடக்கப் போகிறது என்பது மட்டும் அனைவர்க்கும் உறுதியாய் புரிந்தது..
கோவர்த்தன் பமீலாவிடம் “நீ பேசுற எல்லாத்துக்கும் எல்லாருமே பதில் சொல்லவேண்டி இருக்கு...” என்று கடிய,
“நான் இங்க இருக்கவே போறதில்லை...” என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.
“பமீலா கொஞ்சம் வாய் மூடு...” என்று மணிராதாவும் கத்த, இந்திராவோ “ஏன் அண்ணி நீங்களும் இப்படி மாறிப் போனீங்க...” என்றார் ஒருவித இயலாமையில்.
வந்தனா யாரோடும் எதுவும் பேசாது அவளின் அறைக்குள் சென்றுவிட, கோவர்த்தன் “ம்மா நீங்க கொஞ்சம் பொறுமையா யோசிங்க.. அண்ணன் சொல்றான்னா ஏதாவது ஒரு ரீசன் இருக்கும்.. அவன் எப்பவும் தப்பா செய்ய மாட்டான்...” என,
“அப்போ நாங்க எல்லாம் தப்பா?? நாங்க பண்றது எல்லாம் தப்பா??” என்றாள் பமீலா..
“நான் இனிமே இங்க இருக்கவே மாட்டேன்.. யாராவது எனக்கு வந்து அட்வைஸ் பண்ணீங்க அவ்வளோதான்.. அவ இந்த வீட்டு மருமகளா வர்ரான்னா நான் இங்க இருக்க மாட்டேன்..” என்று காட்டு கத்தலாய் கத்திக்கொண்டு இருந்தாள் பமீலா..
வனமாலி வீட்டில் அனைவருமே இருக்க, ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு பாவனை. இந்திராவோ கலங்கிய விழிகளோடு கைகளைப் பிசைந்துகொண்டு அமர்ந்திருக்க, மணிராதா கொஞ்சம் அதிர்ச்சியோடு தான் இருந்தார். வனமாலியிடம் அவர் இப்படியான ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை.
வந்தனாவும், கோவர்த்தனும் இதை நாங்கள் எதிர்பார்த்தோம் என்று ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்துக்கொள்ள, வனமாலியோ யார் என்ன செய்தாலும் யார் என்ன சொன்னாலும் என் முடிவென்பது இதுதான் என்று அமர்ந்திருந்தான்.
மணிராதா முகத்தினில் தெரிந்த அதிர்ச்சி அவனுக்கு சிறு சங்கடம் கொடுத்தாலும், என் முடிவில் மாற்றமேயில்லை என்றுதான் அவன் திண்ணமாய் இருக்க, பமீலாவோ அனைவர்க்கும் சேர்த்து கத்திக்கொண்டு இருந்தாள்.
“ம்மா ஏன் அமைதியா இருக்க.. வா.. இவங்கக்கிட்ட எல்லாம் நியாயமே கிடைக்காது.. எல்லாருமே சுயநலம்.. சுய லாபத்துக்காக ஆரம்பத்துல இருந்தே உன்னையும் என்னையும் வச்சு எல்லாம் விளையாடுறாங்க..” என்று மணிராதாவை முறைத்தபடி பமீலா சொல்ல,
இந்திராவோ “என்ன அண்ணி இதெல்லாம்.. ஏன் இப்படி ஒவ்வொரு தடவையும் என்னையும் என் பொண்ணையும் அழ வைக்கிறீங்க.. உங்களோட சொல் பேச்சு கேட்டது தான் எங்க தப்பா? சொல்லுங்க...” என்று அவரும் இப்போது மணிராதாவை கேள்வி கேட்க,
இத்தனை வருடம் எதற்கும் தேவையற்று பேசாதிருந்த இந்திராவே இப்போது தன்னை கேள்வி கேட்பதை எண்ணி மணிராதாவிற்கு மிக மிக ரோசமாகிப் போனது.
ஆனால் அதுவும் யாரால்?? தான் பெற்ற மகனால் என்று நினைக்கையில் அவரின் அதிர்ச்சி தாண்டி கோபம் எல்லையை மீற,
“இது நடக்கவே நடக்காது வனா...” என்றார் உறுதியாய்.
“இது நடந்து தான் ஆகணும்மா...” என்றான் அவனும் உறுதியாக..
“பாத்தீங்களா.. பாத்தீங்களா... ஆரம்பத்துல இருந்து நான் சொன்னது சரியாப் போச்சா.. அவங்க எல்லாரும் ஒவ்வொன்னா ப்ளான் பண்ணி செய்றாங்க...” என்று பமீலா திரும்ப கத்த,
இம்முறை வனமாலி கோவர்த்தனைப் பார்த்தான் ‘உன் மனைவியை அடக்கி வை..’ என்பதுபோல்..
அண்ணனின் பார்வை உணர்ந்தவனோ “பமீ..” என்று எதுவோ சொல்லவர, “நீங்க பேசாதீங்க.. நீங்க பேசவே கூடாது..” என்று ஆங்காரமாய் அவனை நோக்கி விரல் நீட்டி கத்த, கோவர்த்தனின் முகம் அப்படியே வாடிப் போனது.
மணிராதாவோ “பமீலா...” என்று அதட்ட,
“என்னை ஏன் இப்போ எல்லாம் பேசாத சொல்றீங்க.. வனா மாமா சொல்றது சரியா? இல்லை அவர் பண்றதுதான் சரியா?? அவரை ஏன் யாரும் சொல்றதில்லை...” என்று மேலே மேலே குரலை உயர்த்திக்கொண்டு போக, வனமாலி எழுந்துவிட்டான்..
‘என்ன செய்யப் போகிறான்..’ என்று அனைவரும் பார்க்க, வனமாலியோ நேராய் மணிராதாவின் அருகே வந்தமர்ந்தவன், “ம்மா.. இதுதான் என் முடிவு.. இது மட்டும் தான் என் முடிவு.. சொல்லப் போனா சிவகாமி அத்தை என்கிட்டே கேட்கிறதுக்கு முன்னமே நான் கமலியை கல்யாணம் செய்யனும்னு நினைச்சிட்டேன்..” என,
வீட்டினர் அனைவரும் ‘ஆங்...!!!’ என்றுதான் வாய் பிளந்தனர்.
மணிராதா திகைத்துப் போய் மகனின் முகம் பார்க்க, “ம்மா சிலது நான் சொன்னா உங்களுக்கு கஷ்டமா தான் இருக்கும்.. ஆனா கேட்டுதான் ஆகணும் வேற வழியில்லை...” என்று அவரின் கைகளை பிடித்தவன்,
“நீங்க ஆரம்பத்துல ஒவ்வொரு விசயத்துக்கும் இப்போ உங்க பசங்க நாங்க பதில் சொல்லிட்டு இருக்கோம்.. நேரடியாவும்... இல்ல எங்க வாழ்க்கைல நடக்கிறது வச்சும்...” என்று சொல்ல, மணிராதாவின் மனதில் அடியாளத்தில் இருந்த ஒரு பயம் இப்போது மேலெழுந்து வந்தது.
‘சிவகாமிக்குத் தான் செய்தவைகள் எல்லாம் என் பிள்ளைகள் வாழ்வில் விளையாடுகிறதோ...’ என்ற எண்ணம் இந்த கொஞ்ச வருடங்களாகவே இருக்க, அதன்பொருட்டே வந்தனா நிச்சயத்தில் சிவகாமி வந்து சீர் செய்தபோதும், அத்தனை எதுவும் மறுக்கவில்லை.
அவர் வந்தது பிடிக்கவில்லை தான் ஆனால் மணிராதா நினைத்திருந்தால் அங்கேயே மறுத்திருக்க முடியும். செய்யவில்லை.. இருந்தாலும் பிறவி குணம் என்பது போகுமா?? கடைசியில் வார்த்தைகளை விட்டு, கமலியை சீண்டிவிட்டார்..
விளைவு.. இதோ அவள் இங்கேயே வரப்போகிறாள்.. சர்வ உரிமையோடு.. சர்வ அதிகாரத்தோடு.. வனமாலியின் மனைவியாக கமலி இங்கே வருகையில் அதன் பின் நடப்பவைகள் எல்லாம் மணிராதாவிற்கு நினைத்தும் பார்க்க முடியாது கண்களை இறுக மூடிக்கொண்டார்.
“அம்மா...” என்று வனமாலி திரும்ப அழைக்க, கைகளை உயர்த்தியவர், “போதும் வனா..” என்றுசொல்லி அப்படியே சாய்ந்துகொள்ள,
“ஆ ஊன்னா இப்படி கண்ணா மூடிக்கோங்க.. இல்லையோ வந்தனா கல்யாணம் அது இதுன்னு சொல்லுங்க..” என்று பமீலா மீண்டும் ஆரம்பிக்க,
கோவர்த்தனோ “பமீலா பேச்சை நிறுத்து...” என்று கத்தினான்.
“ஏன் ஏன் நான் பேசக்கூடாது.. இப்போ சொல்றதுதான்.. நல்லா கேட்டுகோங்க எல்லாம்.. யாருக்கு கல்யாணம் நடக்கது நடக்கலை, அது வந்தனாவா இருந்தாலும் சரி, இல்லை வனா மாமாவா இருந்தாலும் சரி, அது எனக்கு கவலையில்லை. ஆனா அந்த கமலி இங்க வரக்கூடாது..” எனவும்,
“பமீலா...!!!!!!” என்று வனமாலியும் சரி மணிராதாவும் சரி கத்தியே விட்டனர்..
பமீலாவின் இப்பேச்சைக் கேட்டு மணிராதா மனதில் பயப்பந்து உருளத் தொடங்கியது.. வந்தனாவின் திருமணம்.... கோவர்த்தனுக்கும் பமீலாவிற்கு ஒரு பிள்ளை... வனமாலியின் வாழ்வு... இதெல்லாமே முற்றுப்பெறாது அப்படி அப்படியே நிற்கிறது... இதற்கான பதில்கள் யார் சொல்வது?
அப்படியிருக்கையில் இவளே இப்படி பேசினால் எப்படி?? என்னமாதிரி பேச்சு இது.. அனைவருமே வந்தனாவைப் பார்க்க, இத்தனை நாள் இல்லாது அவள் விழிகளில் லேசாய் கண்ணீர் கோடுகள் தெரிய, வனமாலியின் பொறுமை எல்லைக் கடந்துவிட்டது.
“நல்லா கேட்டுக்கோங்க.. வந்தனா கல்யாணம் நடக்கும்.. சீரும் சிறப்புமா நடக்கும்... நான் மட்டுமில்ல, நானும் கமலியும் சேர்ந்து நின்னு அதை நடத்திவைப்போம்..” என்றவன்
“கண்டிப்பா எனக்கும் கமலிக்கும் அடுத்த வாரம் கல்யாணம் நடக்கும்.. யார் சரின்னு சொன்னாலும் சரி இல்லைன்னாலும் சரி..” என்றுவிட்டு வந்தனாவிடம் வந்தவன் “நீ எதுக்கும் அழக் கூடாது...” என்று சொல்லி வெளியே கிளம்பிவிட்டான்.
வனமாலி கிளம்பியதும் வீட்டினில் அப்படியொரு அமைதி.. புயல் வருவதற்கு முன்னிருக்கும் ஓர் அமைதியா?? இல்லை புயல் வந்தபின்னே இருக்கும் அமைதியா?? யாராலும் இனம் காணமுடியவில்லை.
ஆனால் எதோ ஒன்று நடக்கப் போகிறது என்பது மட்டும் அனைவர்க்கும் உறுதியாய் புரிந்தது..
கோவர்த்தன் பமீலாவிடம் “நீ பேசுற எல்லாத்துக்கும் எல்லாருமே பதில் சொல்லவேண்டி இருக்கு...” என்று கடிய,
“நான் இங்க இருக்கவே போறதில்லை...” என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.
“பமீலா கொஞ்சம் வாய் மூடு...” என்று மணிராதாவும் கத்த, இந்திராவோ “ஏன் அண்ணி நீங்களும் இப்படி மாறிப் போனீங்க...” என்றார் ஒருவித இயலாமையில்.
வந்தனா யாரோடும் எதுவும் பேசாது அவளின் அறைக்குள் சென்றுவிட, கோவர்த்தன் “ம்மா நீங்க கொஞ்சம் பொறுமையா யோசிங்க.. அண்ணன் சொல்றான்னா ஏதாவது ஒரு ரீசன் இருக்கும்.. அவன் எப்பவும் தப்பா செய்ய மாட்டான்...” என,
“அப்போ நாங்க எல்லாம் தப்பா?? நாங்க பண்றது எல்லாம் தப்பா??” என்றாள் பமீலா..