தன்முன் சிகப்பு ரோஜாவை நீட்டிக்கொண்டு நின்ற வீராவை மேலும் கீழும் பார்த்தாள் அவள்.
கைகள் தன் ஹேண்ட்பேகை இருக்கிக்கொண்டது.
அவள் அப்படியே நிற்கவும் தான்… சுயத்துக்கு வந்த வீரா, தான் ரோஜாவை நீட்டிக்கொண்டு நிற்ப்பதை கண்டு ‘அய்யயோ’ என திகைத்துவிட்டான்.
‘இதை எப்போ நீட்டுனேன்?’
எதிரே பார்த்தால், ஒரு விளங்கா பாவனையில் அவனையும் ரோஜாவையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் அஷ்டா.
உடனே சமாளித்துக்கொண்டு, “ஹாய்’ங்க” என்றான் அவன்.
“ஹாய்” என்றவள், இன்னமும் அந்த ரோஜாவையும் அவனையுமே பார்க்க,
“அது…. கோவிலுக்கு வரோம்ல! அதான் சாமிக்கு பூ வாங்கிட்டு வந்தேன்” என்றான் வீரா.
நம்பாத பாவனையில், “சாமிக்கா இந்த சிகப்பு ரோஜா?” என்றவள் கேட்டதும், “ஹிஹிஹி!!! ஆமாங்க” என்றான்.
அவன் சொன்னதை நம்பவில்லை என அவள் முகம் காட்ட, “நீங்களே போறப்போ சாமிக்கு வச்சுட்டு போயிடுங்களேன்! இந்தாங்க…. அட, புடிங்க… இந்தாங்க” என கிட்டத்தட்ட அவள் கரத்தில் திணித்துவிட்டான்.
‘ஹப்பாடா! ஒருவழியா பூவை குடுத்தாச்சு’ என்ற நிம்மதியோடு, “நிக்குறீங்களே!? அப்படி உட்காந்து பேசுவோமா?” என கேட்க, அவள் தலையசைத்ததும், அந்த மண்டபத்தின் நிழலில் சற்று தள்ளி தள்ளி அமர்ந்தனர் இருவரும்.
அஷ்டா, கேட்கவேண்டியதை மனதுக்குள் ஓட்டிப்பார்க்க, நேரத்தை வீணடிக்க விரும்பாது வீராவே பேச்சை ஆரம்பித்தான்.
“ஏங்க? ஸ்கூட்டிலையா வந்தீங்க?”
“ம்ம்ம்…”
“நான் கூட பைக்’ல தான் வந்தேன்”
பதில் சொல்லாது ஒருமுறை அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
‘மொக்கையா பேசுறோமோ?’ என தன்னைத்தானே கேட்டுக்கொண்டு,
“நீங்க ஸ்கூல்… எங்க படிச்சீங்க!?” என்றான்.
தன் மனவோட்டத்தை அவன் தொந்தரவு செய்வது போல பேசிக்கொண்டே இருக்க, “ஸ்கூல்’ல தாங்க படிச்சேன்” என லேசான கடுப்புடன் சொன்னாள் அவள்.
அவள் பதிலில் முழித்தவன், “அட, பாருங்களேன்! நான் கூட ஸ்கூல்’ல தாங்க ஸ்கூல் படிச்சேன்” என்றான் சமாளிப்பாய்.
மெல்லிய முறைப்புடன், அவனை பார்க்கும்படி நன்றாக திரும்பி அமர்ந்துக்கொண்டாள் அவள்.
‘கேப் விடாத! கேப் விடாத!’ என மனம் கூவ, அடுத்ததாய், “ரெண்டு பேரும் ஒரே ஊருல இத்தனை வருஷமா இருந்தும் பார்த்துக்காம, இப்ப இந்த ஒரு மாசமா மட்டும் என் கண்ணுல நீங்க படுறீங்கன்னா அதுக்கு என்ன அர்த்தம்?” என்றான்.
“என்ன அர்த்தம்?”
“கடவுள் நம்மளை சேர்த்து வைக்க தான் மீட் பண்ண வச்சுருக்காருன்னு அர்த்தம்”
“கடவுளுக்கு இது ஒன்னு தான் வேலை பாருங்க!!!” என்ற அஷ்டா ‘உச்’சுக்கொட்டி முகத்தை திருப்பிக்கொண்டாள்.
‘என்னது இது? கிழிஞ்ச நோட்டு செம்ம கடுப்புல பேசுற மாதிரியே இருக்கே!!!?’ வீரா ஆராய்ச்சி நடத்த, அவனிடம் வேகமாய் பேச வந்தாள் அஷ்டா.
“இங்க பாருங்…” பேச ஆரம்பிக்கும்போதே, அவன் அலைபேசி அலறி இடையூறு செய்ய,
“ஒருநிமிஷம்ங்க! அம்மா தான் கூப்பிடுறாங்க” என்றவன், “சொல்லுங்கம்மா” என்றான்.
விஜயா, “டேய் கண்ணா!!! மதியம் சாப்பாட்டுக்கு வருவ தானேடா!?”
அமைதியான சூழலில் விஜயா போனில் பேசுவது வெளியே தெளிவாக கேட்டது.
“கொஞ்சம் லேட் ஆகும்’ம்மா” என்றவன், “நான் அவங்களை பார்க்க வந்துருக்கேன்” என்றான், தான் பேசுவதையே பார்த்துக்கொண்டிருக்கும் அஷ்டாவை ஓரக்கண்ணில் கண்டுக்கொண்டு.
“அவங்கன்னா? எவங்க?”
“ம்ச்! அவங்க தான்” என பல்லைக்கடித்தவன், கொஞ்சமாய் மறுபுறம் திரும்பி, நலிந்த குரலில், “அஷ்டலட்சுமி” என்றான்.
“அட! என்னடா திடீர்ன்னு?” என்ற விஜயாவுக்கு தன் மகனா இது? என புருவங்கள் வியப்பில் வில்லாய் வளைந்து.
‘பொண்ணு பார்க்கவே இவனை கெஞ்சி கெஞ்சி கூப்பிடனும்… இப்போ என்கிட்ட கூட சொல்லாம தனியா பேச போயிருக்குறதை பாரேன்!!! அந்த அளவுக்கா அந்த பொண்ணை பிடிச்சுப்போச்சு!?’ என நினைத்துக்கொண்டார்.
“சும்மா தான்ம்மா!! சரி நான் அப்புறம் பேசுறேன்”
“பொண்டாட்டி வந்ததும் அம்மாவை கழட்டி விட்டுட்ட பார்த்தியா? ஹும்ம்!!!” பொய்யான சலிப்போடு தொந்தரவு செய்யாமல், அழைப்பை துண்டித்தார் விஜயா.
அன்னையின் கேலியால் விளைந்த புன்சிரிப்புடன், “இப்போ சொல்லுங்க” என அவள் புறம் திரும்பினான் வீரா.
அவளோ பேச வந்ததை விடுத்து, “உங்க பேரு என்ன?” என்றாள்.
முகம் சுருங்கியது அவனுக்கு.
“பேரு கூடவாங்க தெரியாது இன்னும்?”
“இல்ல! உங்கம்மா உங்களை ‘கண்ணா’ன்னு சொல்றாங்க! எங்க வீட்டுல உங்களை ‘வீரா’ன்னு சொல்றாங்க! அதான் கேட்டேன்!”
சிரித்தவன், “ஏங்க! கண்ணா’ன்னு செல்லமா கூப்பிடுவாங்கங்க!!! என் பேரு வீரகேசரி” என்று சொல்ல, பக்கென சிரித்துவிட்டாள் அஷ்டா.
“என்னது கேசரி’யா? என்னங்க இது கேசரி, பாயசம்’ன்னு கூடவா பேரு வைப்பாங்க?” சிரிப்பை நிறுத்தாது அவள் கேட்க,
மறுபடியும் சுருங்கிய முகத்துடன், “கேசரி’ன்னா சமஸ்கிருதத்துல ‘சிங்கம்’ன்னு அர்த்தம்ங்க!” என்றான்.
“அதுக்கு ‘சிங்கம்’ன்னே வச்சுருக்கலாமே!?”
“இதை நீங்க என் அப்பாக்கிட்ட தான் கேட்கணும்” என்றான் ரோஷமாய்.
அவன் முகம் சுருங்கிக்கொண்டே போகவும், “ஓகே…ஓகே… வீரா கூட நல்லா தான் இருக்கு!” என்றாள் அவள் சிரிப்பை அடக்கி.
சுருக்கம் தளர்ந்து அவளைப்பார்த்து சிரித்தான் வீரா.
“அப்பா பேரு ராகவன்… அவரோட முதல் எழுத்து ‘ரா’… அம்மாவோட முதல் எழுத்து ‘வி’…… ரெண்டும் சேர்ந்து ‘வீரா'” என்றான் முகம் விகாசிக்க.
‘ம்ம்ம்’ என தலையசைத்தாள்.
சில நிமிடங்கள் அவள் சுற்றி இருந்த இடத்தை கவனமாய் வேடிக்கைப்பார்ப்பதை போல திரும்பிக்கொள்ள, வீராவும் அமைதியாய் இருந்தான். அவர்களுக்கு சற்று அருகே ஐந்து வயது குழந்தை ஒன்று ஓடி ஓடி விளையாட, வீராவின் கண்கள் சுற்றி சுற்றி வந்தது அந்த குழந்தையிடம்!!!
எடுத்துக்கொண்ட அமைதி போதும் என எண்ணியவளாய், “உங்களுக்கு என்னைதான் பொண்ணு பார்க்க போறோம்ன்னு முன்னவே தெரியுமா? நீங்க தான் ‘வான்டட்’ஆ என்னை கேட்டு வந்தீங்களா?” என்றாள்.
“உங்களை ரெண்டு முறை பார்த்துருக்கேனே தவிர, நீங்க யாரு? எந்த ஏரியா? எதுவுமே தெரியாது! அப்புறம் எப்படிங்க நானா ‘வான்ட்ட’ஆ வர முடியும்? தரகர் அவரா கொண்டு வந்து தான் உங்க ஜாதகம் குடுத்தாங்க! அம்மாக்கு பிடிச்சுருந்துச்சு! நேர்ல வந்தோம்” என்றான்.
“ம்ம்ம்” என கேட்டுக்கொண்டாள்.
அடுத்து கேட்கட்டும் என அவன் அமைதியாக இருக்க, “என்ன படிச்சுருக்கீங்க?” என்றாள்.
“பி.காம்! பிஷப் ஹீபர்’ல முடிச்சேன்”
“வெறும் பி.காம் தானா? ஏன் அதுக்குமேல படிக்கலை” அவன் ஒரு டிகிரி தான் முடித்துருக்கிறானா? என அதிர்ச்சியாய் இருந்தது அவளுக்கு.
“எவ்ளோ படிச்சாலும் இந்த தொழில் தானே பார்க்க போறேன்!! அதான் சீக்கிரமே தொழிலுக்கு வந்துட்டேன்” என்றான்.
“ஓஓ” எதையோ யோசித்தாள்.
“எவ்ளோ சம்பளம் வரும் உங்களுக்கு?”
அவள் கேட்ட விதத்தில், சிரிப்பு வந்தது அவனுக்கு.
“சம்பளம் இல்லங்க… லாபம்!!!” என்று திருத்தியவன், “அது வரும்ங்க, ஒரு மூணு, நாலு” என்றான்.
“மூணு, நாலுன்னா? நாற்பதாயிரமா?” என கேட்டவளை ஆராய்ச்சியாய் பார்த்தான் வீரா.
‘கிண்டல் பண்றாங்களோ?’ என தோன்ற, “உங்களுக்கு ஹுயூமர் சென்ஸ் அதிகம்ங்க” என்றான் அவன்.
“அப்போ நாற்பதாயிரம் இல்லையா?”
“ஏங்க! ஒரு மாசத்துக்கு பங்க்’ல வேலை செய்யுறவங்களுக்கு மட்டுமே நான் தர சம்பளமே மொத்தமா ஐம்பதாயிரம் தாண்டும்!” என்றுவிட்டு, “மூணுல இருந்து நாலு லட்சம் கைல நிக்கும்ங்க” என்றான்.
அஷ்டாவுக்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை.
“லட்சமா?” என்றாள் வாயை பிளந்து!
“ம்ம்ம்” என்றவனுக்கு அவள் பாவனை கண்டு சிரிப்பாய் தான் வந்தது.
‘ஆளு தான் வளர்ந்துருக்கு! பேசுறதெல்லாம் சின்ன புள்ள மாறி இருக்கு’ என்று அவன் என்னும்போதே,
“லட்சத்துல காசு வரதுன்னா எதுக்கு அன்னைக்கு எங்க வீட்டுக்கு ஆட்டோ’ல வந்தீங்க?” என்றாள் அறிவு பெத்த மயிலாய்.
தன் சொந்த ஆட்டோ தான் அது என சொல்லிவிடலாமா? என்று எண்ணியவன், பிறகு இப்போது வேண்டாம் என நினைத்தவனாய், “ரெண்டு பேரு தானேன்னு ஆட்டோல வந்தோம்!” என்றான்.
‘கஞ்சனா இருப்பானோ?!’ என அவள் மனசாட்சி குடைந்தது. அதே யோசனையில் நகத்தை கடித்து துப்பிகொண்டிருந்தாள்.
அடுத்த கேள்வி இப்போதைக்கு இல்லை என தோன்றியதால், “நீங்க ஏன் வேலைக்கு போகல?” என பேச ஆரம்பித்தான் வீரா.
அவன் இப்படி கேட்டதுமே, “ஏன்? எதுக்கு நான் வேலைக்கு போகணும்?” என எகிறலாய் வந்தது அவள் பதில் கேள்வி.
“இல்லங்க! பெரிய படிப்பு படிச்சுட்டு ஏன் சும்மா இருக்கணும்!? எங்கயாவது வேலைக்கு போயிருந்தா உங்களுக்கும் அது ‘டைம் பாஸ்’ஸா இருந்துருக்குமே?”
“எனக்கு சும்மா இருக்குறது தான் ‘டைம் பாஸ்'” வெடுக்கென சொன்னாள் அவள்.
“சரி தான்!” என்றதோடு நிறுத்திக்கொண்டான்.
“கல்யாணத்துக்கு அப்புறம் என்னை வேலைக்கு போக சொல்லுவீங்களா?” திடுமென அவள் கேட்க,
“அது உங்க இஷ்டம்’ங்க! விருப்பப்பட்டா போங்க!”
‘எங்கே போகவேண்டாம்’ என்று சொன்னால் ‘அடக்குமுறை’ என வசனம் பேசுவாளோ என்று எண்ணி அவன் சொல்ல,
“இப்போ என் இஷ்டம்’ன்னு சொல்லுவீங்க! அப்புறம் கண்டிப்பா வேலைக்கு போயே ஆகணும்ன்னு கட்டாயப்படுத்துவீங்க!” என்றாள் அவள்.
அவள் பேசுவதே அவனுக்கு புரியவில்லை. தான் ஏன் அப்படி செய்ய வேண்டும்? அதற்கு என்ன தேவை இருக்கிறது? தன் வருமானம் சொன்ன பின்னும் இப்படி கேட்கிறாளே?! என்று நினைத்தான்.
“இல்லங்க! நான் அப்படி எதுவும் செய்ய மாட்டேன்!” என்றான் வீரா.
“சொன்னாலும் நான் போக மாட்டேன்” என்றவள் ‘தான் சொல்ல வந்த முக்கியமான விஷயத்தையே இன்னும் சொல்லவில்லையே! அதை இவனிடம் எப்படி சொல்வது?’ என சீரிய சிந்தைக்கு போக,
“உங்களுக்கு என்னை பத்தி எதுவும் தெரியாதுன்னு நினைக்குறேன்! அதனால சுருக்கமா சொல்லவா?” என்று கேட்டான் அவன்.
அவள் எதையோ நினைத்துக்கொண்டு தலையாட்ட, அதை தனக்கு சம்மதம் என எண்ணிக்கொண்டு,
“எங்க பூர்வீகம் எல்லாம் கும்பகோணம் பக்கம் தான்!!! அம்மாவும் அப்பாவும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு திருச்சி வந்தப்போ அப்பாவோட ஃபிரன்ட் தான் எங்களுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க! அப்பா இறந்ததுக்கு பிறகு இன்சூரென்ஸ் கிளைம் பண்ணி, அந்த அமவுண்ட்’ல வீடு வாங்கிக்குடுத்து, மீதி பணத்துக்கு, அவர் பங்க்’ல ‘ஃபார்ட்டி பர்சன்ட்’ ஷேரும் குடுத்து, மாசம் எங்க தேவைக்கு வருமானம் வர மாதிரி செஞ்சாரு!!!
நான் ஸ்கூல் முடிக்குறவரைக்குமே என்னை பங்க்’ பக்கம் வரவிடலை! படிப்பை முடி அப்புறம் வேலையை கவனிக்க்கலாம்ன்னு சொல்லுவாரு! காலேஜ் லீவ்ல அப்பப்ப போய் அவர்கூடவே இருந்து கொஞ்சகொஞ்சம் தொழில் கத்துக்கிட்டேன்!
அவர் பசங்க பெங்களூருல செட்டில் ஆகவும் பங்க்’கை முழுசா என் பொறுப்புல விட்டுட்டு இவரும் அங்கேயே போயிட்டாரு! அவர் ஷேர் மட்டும் மாசாமாசம் நான் போட்டுவிட்டுடுவேன்!!! எப்பவாது வந்து கொஞ்ச நாள் இங்க தங்கி பங்க்’கை கவனிப்பாரு! அப்ப எனக்கு லீவ் மாதிரி!!!
நான் தலையெடுக்குற வரைக்கும் எங்களை பணத்துக்காக கஷ்டப்பட விடாம பார்த்துக்கிட்டே அவருக்கு நான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டுருக்கேங்க!!! அவரு மட்டும் இல்லனா என் அம்மா என்ன ஆகிருப்பாங்களோ?
யாரும் தப்பா பேசிடக்கூடாதுன்னு எங்க வீட்டுக்கு கூட வரமாட்டாரு! ரொம்ப நல்லவரு!!!
படிக்குற வயசுல பணக்கஷ்டத்தை அனுபவிக்குறது ரொம்ப கொடுமைங்க! ஏதோ என்னால முடிஞ்சது ஒரு பத்து பதினைஞ்சு பிள்ளைங்களோட படிப்பு செலவை எடுத்து பண்றேன்! இன்னும் நிறைய பண்ணனும்ன்னு ஆசைங்க! நீங்க வந்ததும் இன்னும் பெரு….” அதுவரை தன்போக்கில் பேசிக்கொண்டே போனவன், அவளை திரும்பிப்பார்க்க,
இல்லாத நகத்தை கடித்து துப்புகிறேன் பேர்விழி என விரலை கொதரிக்கொண்டிருந்தாள் அஷ்டா. அவள் கவனம் சுத்தமாய் அங்கே இல்லை என்பது தெளிவாய் தெரிந்தது.
‘இவ்ளோ நேரம் பேசுனதெல்லாம் வேஸ்ட்டு’ என முனகிய வீரா, “ஏங்க? ஏங்க?” என கைத்தட்ட, அந்த சத்தத்தில் “ஹான்!!!” என திரும்பியவளிடம்,
“நான் சொன்னது கரெக்ட் தானேங்க?” என்றான் வீரா.
என்ன பேசினான் என்று தெரிந்தால் தானே பதில் சொல்ல!!!
குத்துமதிப்பாய் தலையாட்டிவள், “கரெக்ட்… ரொம்ப கரெக்ட்” என்று வேறு சொல்ல, போலியாய் அவளை முறைத்தவன்,
“என்னை பேச விட்டுட்டு, சுகமா கனவு கண்டுட்டு இருந்துருக்கீங்க?” என்றான்.
பேய் முழி முழித்த அஷ்டா, அசடு வழிய சிரிக்க, “ப்ச்! போங்க” என சலித்தான் அவன்.
மறுபடியும் அவள் நகத்தை கடிக்க போக, “இதுக்குமேல கடிக்க அங்க ஒண்ணுமே இல்லங்க! எதுக்கு அந்த விரலை இப்படி பாடாப்படுத்துறீங்க!!!” என வீரா சொல்ல,
“நான் உங்ககிட்ட சில விஷயத்தை பேசி முடிவு பண்ண தான் வந்தேன்! நான் சொல்றதுக்கெல்லாம் ‘ஒகே’ன்னா நம்ம கல்யாணம் செஞ்சுக்கலாம்! இல்லன்னா இப்டியே இந்த பேச்சை விட்டுடுவோம்!” என்று படபடவென சொல்லிமுடித்தாள் அஷ்டா.
வீரா அவளை நிலைக்குத்தி பார்த்தான். ‘இதை இப்படியே விடுவதா? முடியுமா?’ என்று தான் திகைத்தது அவன் மனம்.
அவள் மேல் ‘காதல்’ என்றெல்லாம் வந்தது போல தோன்றவில்லை அவனுக்கு. அவள் ‘தனக்கானவள்’ என கிட்டத்தட்ட முடிவாகிருந்த நிலையிலும், அவள் முகம் தாண்டி யோசிக்கும் அளவு கூட ஹார்மோன்கள் குதிக்கவில்லை அவனுக்கு.
ஆனாலும், அவள் சாதரணமாய் உதிர்த்துவிட்ட, ‘இதை இப்படியே விட்டுடலாம்’ என்ற சொற்கள் அவனுக்குள் எதையோ உடைத்தது மட்டும் நிஜம்!!!
வெளிவராத குரலில், “சொல்லுங்க” என்றான்.
பலமுறை ஒத்திகைப்பார்த்து, மனப்பாடமே ஆகிவிட்டபோதும், இதை அவன் முகம் பார்த்து பேச தயக்கம் வர, எதிரே தெரிந்த கோவில் தூணை பார்த்தபடி,
“நான் ரொம்ப நல்ல பொண்ணுன்னு எங்க வீட்டுல சொல்லிருப்பாங்க! ஆனா, நான் அப்படியெல்லாம் இல்ல” என்றாள். அதைக்கேட்டதுமே அவன் இறுக்கம் நொடியில் தளர்ந்து சிரிப்பாய் வந்தது அவனுக்கு.
‘நல்ல பொண்ணுன்னா!? ஆமா ஆமா!’ என உள்ளுக்குள் நகைத்தவன், வெளியே அதை காட்டாது சமத்தாய் அமர்ந்திருந்தான்.
“நான் நிறைய பொய் சொல்லுவேன்!
அப்பா என் செலவுக்கு காசு குடுத்தாலும், அப்பப்ப அவருக்கு தெரியாம ‘பாக்கெட் மணி’ திருடுவேன்!
வீட்டு வேலை ஒன்னுக்கூட செய்யமாட்டேன்…
இதுவரைக்கும் உப்பு டப்பா, சக்கரை டப்பாவை கூட திறந்தது இல்லை!
வெளில எங்கயும் வேலைக்கு போக மாட்டேன்! போகவும் பிடிக்காது!” என அவள் அடுக்கிக்கொண்டு செல்ல,
“தெரியும்!!!” என்ற ஒற்றை வார்த்தையில் அவளை அதிர வைத்தான் வீரா.
“தெரியுமா? எப்படி? என்ன தெரியும்?”
அதற்கும், “தெரியும்!!!” என்று மட்டுமே சொன்னான் வீரா.
“அதான் எப்டி தெரியும்?”
“தெரியும்ன்னா விடுங்களேன்!” என்றான். அவள் வீட்டாரே அவளை பற்றி குறை கூறினர் என அவளிடம் சொல்ல அவனுக்கு மனமில்லை.
அவள் கேட்டும் கூட ‘எப்படி தெரியும்!’ என அவன் சொல்ல மறுக்க,
“என்னை பத்தி எல்லாம் தெரியுமா உங்களுக்கு?” என்றாள், ‘உனக்கு ஒன்னும் தெரியாது!’ என்ற தொனியில்.
அவன், “தெரியும்’ன்னே வச்சுக்கோங்களேன்!” என்று சொல்ல…
ஒருவித ரோஷத்துடன், “என்ன தெரியும் என்னைப்பத்தி?!! எனக்கு ‘செக்ஸ்’ல கொஞ்சமும் விருப்பமில்லை! அது தெரியுமா உங்களுக்கு?” என்றாள் மிடுக்காய்!!!
இலகுவாய் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த வீரா, இதைக்கேட்டதும், விதிர்விதிர்த்து போய் எழுந்து நின்றுவிட, உச்சகட்ட அதிர்ச்சியை காட்டிய அவன் கண்கள்… விட்டால், தெறித்தே விழுந்திருக்கும்!
அடுத்து அவள் பேசும்முன், “எழுந்துரிங்க! எழுந்துரிங்க முதல்ல!!! முதல்ல இங்கிருந்து வெளில்ல போங்க” என்று கண்டிப்புடன் சீறினான் வீரா…!!!