அப்போது தான் வனமங்கை கண்களில் தெரிந்த பயம் கீதாவின் கண்ணில் படகு. அது தன்னால் தான் என்று புரிந்து கொண்ட கீதா தானா ஒரு பெண்ணை இந்த அளவுக்கு பயப்பட வைத்திருக்கிறோம் என்று எண்ணி தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.
“என்னோட மருமக என்னைப் பாத்து பயப்படுறதா?”, என்று எண்ணியவள் “வனிதா கூட இன்னும் எழுந்துக்கலை. அதனால நீ கவலைப்படாம இரு. போய் சாமி ரூம்ல மட்டும் விளக்கேத்திட்டு வா”, என்று சொன்னதும் உடனே அதைச் செய்து முடித்தாள்.
சாமி கும்பிட்டு விட்டு அவள் வந்ததும் “மாதவன் எழுந்துட்டானா மா?”, என்று கேட்டாள் கீதா.
“எழுந்துட்டாங்க அத்தை?”
“நீ சாப்பிடுறியா? பசிக்குதா?”
“அவங்க வரட்டுமே?”
“சரி வா இப்படி உக்காரு”, என்று சொன்னதும் அவள் அருகே சென்று அமர்ந்தாள்.
வனமங்கையின் கரத்தைப் பற்றிக் கொண்ட கீதா “என்னை மன்னிச்சிரு டா. அன்னைக்கு என்னோட வார்த்தைகள் உன்னை ரொம்ப காயப் படுத்திருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. நான் உன்னைக் காயப் படுத்தணும்னு எதுவும் சொல்லலை”, என்றாள்.
“ஐயோ, பரவால்ல அத்தை, நான் ஒண்ணுமே நினைக்கலை”
“நீ நினைக்கலை தான். நீங்க சூதுவாது தெரியாதவ. உன்னைப் போய் தவிக்க வச்சிட்டேனேன்னு கஷ்டமா இருக்கு”
“நீங்க என்னைக் காயப் படுத்தனும்னு எதுவும் சொல்லலை அத்தை. நீங்க எதார்த்தமா சொன்னீங்க. அதுவும் என்னைப் பத்தி தெரிஞ்சா சொன்னீங்க? இல்லை தானே? அப்புறம் என்ன? விடுங்க”
“இருந்தாலும் என்னை மன்னிச்சிரு மா”
“நீங்க தப்பே பண்ணலை. அப்புறம் எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேக்குறீங்க? வேண்டாமே?”
“சரி, உன்னை வந்ததுல இருந்து சரியா கவனிச்சிக்க முடியலை. இங்கே ஒரே வேலை. வனிதா கல்யாணம் மாப்பிள்ளை ஊர்ல நடந்துச்சு. ஆனா உங்க கல்யாணம் இங்க வச்சு பாத்தியா? அதான் சொந்தக்காரங்க கூட்டம் அதிகம். எல்லாரும் உன் அழகைப் பத்தி தான் பேசினாங்க. உனக்கு திஸ்டி சுத்திப் போடணும்”, என்று கீதா சொன்னதும் வனமங்கை பயம் நீங்கி சிரித்தாள்.
இருவரும் நெருக்கமாக அமர்ந்து பேசுவதைப் பார்த்த் படியே வந்த மாதவனுக்கு நிம்மதியாக இருந்தது. அவனைக் கண்டதும் எழுந்த கீதா இருவரையும் சாப்பிட வைத்தாள். இருவரும் உணவருந்தும் போது தான் “மாமா”, என்ற படி வைஷ்ணவி வந்தாள். அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டே அவன் உண்ண அவளுக்கு வனமங்கை ஊட்டி விட்டாள். அதன் பின் வனிதா கிருஷ்ணன் எழுந்து வர அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அன்று உறவினர்களுக்கு கரி சோறு என்பதால் சிறிது நேரத்தில் வேலைகள் ஆரம்பிக்க உறவினர்களின் வருகையும் அதிகரித்தது. வனமங்கையைச் சுற்றி எப்போதும் ஆட்கள் இருந்து கொண்டே இருக்க அவள் தனியே சிக்க மாட்டாளா என்று தவித்துக் கொண்டிருந்தான் மாதவன்.
மகனின் தவிப்பு தாய்க்கு புரியாதா என்ன? “மங்கை மாதவன் கூப்ட்டான் மா. என்னன்னு கேட்டுட்டு இந்த காபியை அவனுக்கு கொடுத்துட்டு வா”, என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தாள்.
அறைக்குள் வந்தவளைக் கண்டு மாதவனின் கண்கள் மின்னியது. அவன் அவளை ரசனையாக பார்க்க அவனைக் கண்டதும் அவள் முகச் சிவப்பு ஏறியது. நேற்றைய நினைவுகள் மனதில் உலா வந்து வெட்கத்தை தந்தது.
“கூப்பிட்டீங்களா? அத்தை சொன்னாங்க”, என்று தயக்கத்துடன் கேட்டாள்.
அம்மாவின் செய்கையை மனதுக்குள் பாராட்டியவன் “ஆமா ஆமா இப்படி உக்காரு சொல்றேன்”, என்றதும் காபியைக் கொடுத்த படியே அமர்ந்தாள். ஆனாலும் நேற்றைய நினைவுகள் மிச்சமிருக்க அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடிய வில்லை.
அவள் முகத்தில் இருந்த நாணச் சிவப்பு அவன் மனதை மயக்கியது என்று சொன்னால் மிகையில்லை. அவளை ரசனையுடன் பார்த்த படி நெருங்கினான் மாதவன்.
அவன் நோக்கம் புரிந்தவள் “கீழ நம்ம சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க. நான் போகணும். நான் இங்க இருந்தா ஏதாவது நினைச்சிக்குவாங்க”, என்றாள்.
“காலைல இருந்து பாக்க முடியாம தவிக்கிறேன் டி”
“ஏனாம்? ஒண்ணா தானே சாப்பிட்டோம்?”
“அதெல்லாம் ஒரு விஷயமா?”, என்று அவன் கேட்டதும் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளது ஒற்றைப் பார்வையில் கிறங்கிப் போனான் மாதவன். அவளை இன்னும் நெருங்கி அவளுடைய கரத்தைப் பிடித்தான். அவள் தளிர் உடல் நடுங்கியது.
துடித்துக் கொண்டிருக்கும் அவளது இதழ்களையும், விடாமல் படபடக்கும் அவளது இமைகளையும் பார்த்தவனுக்கு அவள் மீதான காதலும் மோகமும் பொங்கி எழுந்தது.
துடிக்கும் இதழ்களை அவன் தன்னுடைய விரலால் வருட அதை தாங்க முடியாமல் இமை மூடிக் கொண்டாள். அவளது ரத்த நாளங்கள் சற்று சூடேறியது. அதன் தகிப்பை தாங்க முடியாமல் அவன் நெஞ்சில் தஞ்சமானாள்.
வெற்றி கொண்ட இறுமாப்புடன் அவன் கரங்கள் அவள் உடல் மேல் பரவிப் படற விலக முடியாத தாபத்தோடு அவனுடன் சங்கமமானாள். அவளுடைய முகம் நோக்கிக் குனிந்தவனின் கழுத்தை அவள் கரம் வளைத்து அனைத்துக் கொண்டது;
சிறிது நேரம் கழித்து அவள் கீழே வரும் போது உறவுக்கார பெண்மணி ஒருத்தி “என்ன இந்நேரம் தலைக்கு குளிச்சிட்டு வந்திருக்க? மேலுக்கு ஏதாவது வந்துறப் போகுது”, என்று சோள என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் விழித்தாள் வனமங்கை.
“காலைல இருந்து அவளுக்கும் ஒரே வேலை தானே? கசகசன்னு இருக்குன்னா. நான் தான் குளிச்சிட்டு வரச் சொன்னேன்”, என்று சொல்லி அவளைக் காப்பாற்றினாள் கீதா. அன்றைய நாள் அழகாகவே கடந்தது, அடுத்த நாள் அவர்களை வெளியே எங்கேயாவது போகச் சொன்னாள் கீதா.
அவனோ மறுத்து விட்டான். “டிரான்ஸ்பர் பத்தி எந்த தகவலும் வரலை மா. அது வரைக்கும் தான் வீட்ல இருக்க முடியும். அதனால எங்கயும் போகலை. அப்புறம் ஏதாவது ஒரு காட்டுக்குள்ள போய் ஹனிமூன் கொண்டாடிக்கிறோம்”, என்று சொல்லி மறுத்து விட்டான்.
அன்று இரவு அனைவரும் அமர்ந்து உணவு உண்ணும் போது அவளையே பார்த்த படி உண்டு கொண்டிருந்தான் மாதவன்.
“சட்னி வைக்கவா டா?”, என்று கேட்டாள் வனிதா.
“ம்ம்”, என்றானே தவிர அவள் சட்னியை வைத்தாளா இல்லையா என்று கூட அவன் கவனிக்க வில்லை.
“என் மாப்பிள்ளைக்கு இப்ப நீ என்ன வச்சாலும் அது என்னன்னு கூட தெரியாது”, என்று கிண்டல் அடித்தான் கிருஷ்ணன்.
அவனின் கிண்டல் பேச்சைக் கேட்ட வனமங்கைக்கு தான் என்னவோ போல இருந்தது. அவனுடைய பார்வையில் இருந்து தப்பிக்கவும் முடியாமல் அனைவரின் முன்னிலையில் பதில் பார்வையும் பார்க்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் இருவரும் கோவிலுக்கு சென்றார்கள். பிரகாரத்தைச் சுற்றி வரும் போது இருவர் மனதும் நிறைந்திருந்தது. சாமியை வணங்கி விட்டு மண்டபத்தில் அமர்ந்தார்கள். இவ்வளவு நிறைவான வாழ்க்கையைத் தந்த அவனை காதலாக பார்த்தாள் வனமங்கை. செதுக்கி வைத்த சிற்பம் போல இருந்த அவனைக் காண்கையில் ரோமானியச் சிற்பம் தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவனுடைய கம்பீரத்தையும் அழகையும் கண்டு அவன் மீதான காதல் இன்னும் பெருகியது.
இப்படிப் பட்ட ஆண்மகனுக்கு மனைவியானதில் அவள் பூரித்துப் போனாள். சிறிது கர்வமாகவும் இருந்தது. எதற்கோ திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் மனைவியின் பார்வை பட “என்ன டி?”, என்று கேட்டான். அந்த ஒற்றைக் கேள்விக்கே கிறங்கிப் போனாள். ஆனால் கோவிலில் வைத்து மன உணர்வுகளை வெளிப படுத்த முடியாமல் “ஏன் பாக்க கூடாதா?”, என்று எதிர்க் கேள்வி கேட்டாள்.
“என்னை நீ பக்காம வேற யார் பாப்பாங்களாம்?’, என்று அவன் கேட்டதும் அவளுக்கு அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.
“வீட்டுக்கு போகலாமா?”, என்று கேட்டதும் முதலில் எழுந்து கொண்டவன் அவன் எழுவதற்காக கரம் கொடுத்தான். ஆனந்தமாக அவன் கரம் பிடித்தாள் வனமங்கை.
அதற்கு அடுத்த நாள் அவனை சென்னைக்கு வரச் சொல்லி தபால் வந்தது. எதனால் இவ்வளவு சீக்கிரம் அடுத்த டிரான்ஸ்பர் கேக்குறீங்க? அங்க என்ன பிரச்சனை? என்று கேள்வி கேட்டு அதற்கு தெளிவான விளக்கம் கொடுக்க அவனை அழைத்திருந்தார்கள்.
மாதவன் மட்டும் கிளம்பிச் சென்றான். என்ன காரணம் சொல்ல என்று தெரியாமல் தடுமாறிய படி வந்தவன் அங்கே உள்ள காலநிலை தனக்கு ஒத்துக் கொள்ள வில்லை என்ற பொய்யைச் சொன்னான்.
அதற்கு அவர்கள் தமிழ் நாட்டுக்குள் இப்போது டிரான்ஸ்பர் கொடுக்க முடியாது என்று சொல்ல அது தெரிந்த விஷயம் என்பதால் “பரவால்ல”, என்றான்.
அதன் படி டெல்லி பக்கம் அவனுக்கு டிரான்ஸ்பர் கிடைத்தது. தனியாக திருமணத்திற்கு என்று லீவ் கேட்க இது வரை அவன் லீவ் எடுத்ததில்லை என்பதால் மேலும் பத்து நாட்கள் அவனுக்கு லீவ் வழங்கி அதன் பின் அவனை வேலையில் சேர அனுமதி தந்தார்கள்.
எல்லா லீவையும் குடும்பத்துடன் கழித்தான் மாதவன். வனமங்கைக்கும் அது தான் பிடித்திருந்தது. ஒரு வழியாக அவர்கள் கிளம்பும் நாள் வந்தது. “அக்கா குழந்தையோட அவ வீட்டுக்கு போன பிறகு நீ என் கூட வந்துரனும் மா”, என்றான் மாதவன்.
“சரி டா, வரேன். இங்க தனியா இருந்து என்ன பண்ணப் போறேன்?”, என்றாள் கீதா.
கிளம்பும் போது அன்னையின் நினைவில் கீதாவை கட்டிக் கொண்டு வனமங்கை கண்ணீர் விட அனைவரின் கண்களும் நிறைந்து போனது. கீதாவும் மருமகளுக்கு ஆறுதல் சொன்னாள். கூடவே சீக்கிரம் குழந்தையை பெற்றுக் கொள்ளவும் சொன்னாள். வனமங்கையும் சரி என்று புன்னகைத்தாள். அனைவரிடமும் விடை பெற்று கிளம்பிச் சென்றார்கள்.
புதிதாக இருந்த அந்த காட்டில் இருவருக்கும் பாஜக சற்று சிரமமாக தான் மொழி மாறியதும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் பழகிக் கொண்டார்கள். தேவையான பொருள்களை எல்லாம் வாங்கிப் போட்டான் மாதவன். முதலில் அவனுக்கு பிடித்தது போல உணவு செய்ய தடுமாறினாள். ஆனால் அவன் கற்றுக் கொடுக்க சமையலும் அவளுக்கு எளிதாக இருந்தது. சிறிது நாட்களில் அங்கிருந்தவர்களும் நட்புடன் பழகினார்கள்.
வேலை நேரம் தவிர மற்ற நேரங்களெல்லாம் கணவனும் மனைவியும் பசி தூக்கம் இல்லாமல் காதலில் மூழ்கி முத்தெடுத்தார்கள். அந்த வனமே அவர்களின் தேனிலவு தளமாகத் இருந்ததில் அவர்களுக்கு சந்தோசமே.