என்னவள்_10
மாலை மூன்று மணியை தொட்டு இருந்தது நேரம் சக்தியின் வீடே பரபரப்பாக காணப்பட்டது…கோமதி ஒருபக்கம் தட்டு நிறைய கட்டிய பூக்களை பெரிய துண்டுகளாக வெட்டியவர் அருகில் இருந்த பெண்ணிடம் கொடுத்து வந்து இருக்கற அத்தனை பேருக்கும் பூ கொடுத்துட்டு வா இந்தாம்மா என கொடுத்து அனுப்ப…
உறவுக்கூட்டம் மொத்தமாக கூடி இருந்தனர் இவர்களது வீட்டில்.. .
நீண்ட நாட்களுக்கு பிறகு நடக்கும் மகிழ்வான நிகழ்ச்சி அல்லவா.. கூடியிருந்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. .உறவுகள் கூட்டம் மட்டும் இல்லாமல் ஊரில் இருந்த பாதி பேருக்கு மேல் அழைத்து இருந்தனர் அனைவருமே சக்தியின் வீட்டில் கூடி இருந்தனர்.ஹாலில் தொடங்கி அனைத்து இடத்திலும் யாராவது ஒருவர் இன்னொருவரோடு சிரித்து பேசியபடி இருந்தனர்.”சக்தி சீக்கிரமாக புறப்பட்டு வெளியே வாடா மாப்பிள்ளை வீட்டில் புறப்பட்டுட்டாங்க வர்றதுக்குள்ள கோயிலுக்கு போயிட்டு வந்திடணும்”, என ரூம்பிற்கு வெளியே நின்று சக்தியின் தாயார் கோமதி சத்தமாக அழைப்பு விடுத்தார்….
,ஏன் கோமதி சத்தம் தர்ற மெல்ல புறப்பட்டு வரட்டும் இன்னும் தான் நேரம் இருக்கே…மாப்பிள்ளை வீடு ஒன்றும் பக்கத்தில் இல்லையே அவங்க வீடு பொள்ளாச்சியில் இருக்கு இப்போது தான் புறப்பட்டு இருக்கறாங்கன்னா இங்கே வர இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகுமே அதனால் மெதுவாக புறப்பட்டு வரட்டும். அலங்காரம் செய்ய ப்யூட்டிசனுக்கும் சொல்லி இருக்கறே…அழகா ரெடி பண்ண கொஞ்சம் டைம் எடுக்கத்தானே செய்யும் நம்ம பொண்ணு தேவதை போல ஜோலிக்க வேண்டாமா ஒரு பய கூட பொண்ண குறையா சொல்லக்கூடாது பார்க்க வர்றவங்க பொண்ணோட அழகை பார்த்து திகைத்து நிற்கணும் சக்தி பிள்ளை ஏற்கனவே அழகு இன்னும் கொஞ்சம் பண்ணினா இன்னும் பார்க்க அழகா இருப்பாளே…”
“என்ன புள்ள இப்படி சொல்லிட்ட நம்ம சக்திக்கு என்ன குறை அலங்காரம் எதுவுமே தேவை இல்லை சும்மா தலைவாரிட்டு பூ வச்சிட்டு முன்னாடி நின்றாள் போதுமே மஹாலட்சுமி மாதிரி இருப்பா..நாள் பூராவும் பார்த்திட்டே இருக்கலாமே…”வயதில் பெரிய பெண்மணி ஒருவர் சொல்ல…
“அதெல்லாம் சரி தான் நம்ம புள்ள நமக்கு அழகு தான் வர்றவங்களுக்கும் அப்படியே தெரியணுமே…”
[the_ad id=”6605″]
“ஏன் தெரியாம போகுது முருகேசன் அண்ணாவுக்கு ஒரு இடம் பிடிக்குதுன்னா சும்மாவா எல்லாம் நல்லா விசாரித்து தான் வரச்சொல்லி இருப்பாங்க…பார்த்துட்டு சரின்னு சொல்லப்போறாங்க அதுக்காகத்தானே எல்லோரும் இங்கே வந்து இருக்கறோம். பெரியவ திவ்யாவுக்கு பார்க்கலையா அதே மாதிரி தான் சின்னவலுக்கும் பார்த்து இருப்பாங்க.. கோமதி பெத்த ரெண்டு பொண்ணுங்கலுமே தங்கம்ல்ல யாராலையும் ஏதாவது குறை சொல்ல முடியுமா” என்ன என பேசிக்கொண்டு இருக்கும் போதே…கதவை திறந்து கொண்டு வந்தாள் சக்தி.. “அம்மா சரியா இருக்கிறதா என கேட்டபடி..”
பச்சை நிறப்பட்டுடுத்தி அதற்கு ஏற்றாற்போல் நகைகள் அணிந்திருக்க..பிறைநெற்றியில் சிறு நெற்றி சுட்டி அதற்கு கீழே சிறுகல்பதித்த ஸ்டிக்கர் பொட்டு லேசாக உதட்டில் திற்றியிருந்த லிப்ஸ்டிக்…இடுப்பு வரையிலும் நீண்டிருந்த பின்னலில் மல்லிகை சரம்..இடுப்பில் ஒட்டியாணம் பட்டுபுடவைக்கு ஏற்றாற் நகைகள்,இரண்டு கைகளிலும் வளையல்கள்,காதில் மாட்டி இருந்த ஜிமிக்கி கம்பளம் இவள் அசையும் போது எல்லாம் அதன் சத்தம் இசையாய் ஓலித்தது..அவ்வளவு பொருத்தமாக, பாந்தமாக அழகாக இருந்தாள் சக்தி.
அவளுக்கு அடுத்ததாக பின்னால் வந்து கொண்டு இருந்தாள் திவ்யா.. அவளும் கிட்டத்தட்ட இவளது ஹேர்ஸ்டைலில் மெருன்கலரில் அதே அலங்காரத்துடன் வர…அவள்புறம் திரும்பியவள்” அக்கா மாமா வராதது எனக்கு ரொம்ப வருத்தம் தான் இந்த அப்பா இன்னும் ரெண்டு நாள் பொறுமையாக இருந்து இருக்கலாம்.உனக்கு வருத்தம் எதுவும் இல்லையே மாமா வர்றதுக்கு முன்னாடி இந்த ஃபங்சனை வைக்கறாங்கன்னு..உன்னோட அத்தை, மாமா எப்போது வர்றாங்க..”
“சக்தி இதெல்லாம் யோசிக்காதே நான் எவ்வளவு சந்தோஷமாக இன்றைக்கு இருக்கறேன் தெரியுமா…அத்தைக்கு இப்பதான் ஃபோன் பண்ணினேன் சக்தி இன்னும் கொஞ்சம் நேரத்தில் இங்கே வந்திடுவாங்க…உங்க மாமாவைதான் தெரியுமே தேயிலை அசோசியேஷன்ல இருக்கறாங்க இந்த தடவை அதிகமாக ஏற்றுமதி பண்ணினதுக்கு பாராட்டு விழா வைக்கறதா சொல்லி டெல்லி போய் இருக்கறாங்க இதுக்கு இடையில் இந்த அப்பா அவசரமா இந்த ஃபங்சனை நடத்த முடிவு பண்ணி எல்லோருக்கும் சொல்லியிச்சு பரவாயில்லை விடு நல்ல காரியத்தை தள்ளிப்போட கூடாது அவங்க வந்ததும் இங்கே வருவாங்க அப்போது பேசிக்கலாம்..”
அப்போது வாசலில் கார் வந்து நிற்க திவ்யாவின் மாமனார்,மாமியார் இருவரும் இறங்கி வந்தனர். வாங்க அத்தை,வாங்க மாமா என சக்தி வரவேற்றவள் இருவரின் காலிலும் விழ…
“நல்லா இருமா என ஆசிர்வாதம் செய்து தூக்கி விட்டவர் எங்க ஒரு பையனோட நின்று போச்சு இன்னோரு பையன் இருந்து இருந்தா இந்த சக்தி பிள்ளையையும் என்னோட வீட்டுக்கே கூப்பிட்டுட்டுபோய் இருப்பேன் மருமகளா…”
“வாங்க சம்பந்தி என வரவேற்ற கோமதி அதுதான் சம்பந்தி நானும் அடிக்கடி நினைச்சுப்பேன் அங்கே இன்னோரு பையன் இருந்திருந்தால் இந்த சக்தி பிள்ளையையும் அங்கேயே கொடுத்து இருக்கலாம்ன்னு எப்படி இருந்தாலும் என்ன சம்பந்தி இப்பவும் அவ உங்கள் வீட்டு பொண்ணு தானே…திவ்யா குடிக்க ஏதாவது எடுத்து கொடும்மா”…என்றவர்.”சக்தி கொஞ்சம் நேரம் ஹால்ல உட்காருடா அங்கே தோட்டத்தில் பூஜைக்கு எல்லாம் எடுத்து வச்சாச்சான்னு பார்த்துவிட்டு வந்திடறேன். சக்தியின் தோட்டத்தில் இவர்களுக்கு சிறு கோவில் ஒன்று இருந்தது. எப்போதும் அங்கே பூஜை முடியவும் நல்லது செய்வதை வாடிக்கையாக வைத்து இருந்தனர் இவர்களது குடும்பத்தினர்.”
“திவ்யா அபிகுட்டி எங்கே மா”..என அவளது மாமியார் கேட்க…அபி பிறந்து அப்போது தான் மூன்று மாதங்கள் முடிந்து இருந்தது. சென்ற வாரத்தில் அவளை மாப்பிள்ளை வீட்டிற்கு என குழந்தையோடு அனுப்பி இருக்கிறேன் அடுத்த இரண்டு நாட்களில் மறுபடியும் இங்கே தாயார் வீட்டிற்கு வந்து இருந்தால் திவ்யா.
“அத்தே தொட்டிலில் தூங்கறாத்தே எடுத்துவிட்டு வரட்டுமா….”
“இல்லை தூங்கட்டும் வீடு முழுக்கஇவ்வளவு கூட்டமாக இருக்கறாங்க கூட்டம் பார்த்தாலே அழுது ஊரையெல்ல கூட்டறா…தூங்கட்டும் அப்புறம் எடுத்துக்கறேன். “
“சரி அத்தை” என்றபடி அவருக்கு ஃகாபி எடுத்து வர உள் சென்றாள். இவளிடம் வா சக்தி அங்கே வந்து உட்காரு என ஹாலிற்கு அழைத்து வர ஏற்கனவே வந்து அமர்ந்து இருந்த உறவினர்களுக்கு புன்னகையுடன் வரவேற்றவள் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
சலசலவென பேச்சு சத்தம் கூடவே நலம் விசாரிப்புகள் என மொத்த சத்தமும் கலவையாக கேட்டுக்கொண்டு இருந்தது அந்த இடத்தில்…ஃகாபியோடு வந்த திவ்யா இவருக்கு ஃகாபி கொடுத்தவள் எடுத்து வந்த தட்டோடு “இன்னும் யாருக்காவது ஃகாபி வேண்டுமா” என கேட்டு கொடுத்து கொண்டு இருந்தாள்.
“சற்று நேரம் அமர்ந்து இருக்க மறுபடியும் கோமதி வந்தவர் இப்போது புறப்படலாம் கோவிலுக்கு போயிட்டு வரவும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வர நேரம் சரியாக இருக்கும். சம்பந்திம்மா சக்தியை அழைச்சிட்டு போங்க…வாங்க எல்லோரும் கோவிலுக்கு போயிட்டு வந்திடலாம் என்ன அழைக்கவும் அனைவரும் வீட்டிற்குபின்புறத்தில் இருந்தது கோவிலுக்கு புறப்பட்டனர்.”
திவ்யா கையில் குழந்தையை தூங்கியபடி நடக்க கோவிலை வந்தடைந்தனர் அனைவரும் ஏற்கனவே பூஜை செய்ய ஏற்பாடுகள் முடிந்து இருக்க காத்திருந்த பூஜை செய்பவர் தீபாரதனை காட்ட ஆரம்பித்தார்.
[the_ad id=”6605″]
அரைமணி நேரம் வேகமாக முடிந்து இருந்தது சலசலப்பு பேச்சு சத்தத்தில் முருகேசனின் சத்தம் தனியே ஒலித்தது. மாப்பிள்ளை வீட்டில் இருந்து வர்றவங்க துடியலூர் தாண்டியாச்சாம் இன்னும் கொஞ்சம் நேரத்தில் இங்கே வந்திடுவாங்க வாங்க வீட்டுக்கு போகலாம் என மொத்த பேரையும் திரும்பி அழைத்து கொண்டு வந்தார்.
ஹாலில் பெரிய ஜமுக்காளம் விரித்திருக்க குத்து விளக்கு ஏற்றி ,தட்டு,பூ பழம் தேவையானதை எடுத்து வைத்து இருந்தனர். எல்லா ஏற்பாடுகளையும் முடித்து மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருபவர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தனர். எல்லோருக்குமே கொஞ்சம் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஏனென்றால் யாரும் மாப்பிள்ளையை இது வரையிலும் பார்க்க வில்லை. ஏன் சக்தி மட்டும் அல்ல கோமதி கூட எதிர் கால மருமகனின் முகத்தை பார்க்கவில்லை. ஏன் போட்டோ கூட வாங்கி வந்து வீட்டில் இருப்பவர்களுக்கு காட்டவில்லை.
நான் பார்த்தாச்சு நல்ல பையன் உனக்கு பிடிக்கணும் அது போல தான் அவரது எண்ணமாக இருந்தது. திவ்யாவும் சரி சக்தியும் சரி இது வரையிலும் எதற்குமே எதிர்த்து பேசியது இல்லை. அப்பா சொன்னா சரியா இருக்கும் என்ற மனநிலை தான் இருவருக்கும்…திவ்யாவிற்கு சிவாவை பார்த்த போதும் அப்படி தான் இவர்களிடம் எதுவும் கேட்கவில்லை பார்ப்பதற்கு என தீடிரென ஒருநாள் அழைத்து வந்திருந்தார்.
ஒரே ஒரு நல்ல விஷயம் எது என்றால் அப்போது இன்றைக்கு சக்திக்கு அழைத்தது போல உறவினர்களை,ஊர்க்காரர்களை அழைக்கவில்லை..அப்போது இருந்தது இவர்கள் வீட்டினர் மட்டும் தான்..ஏற்கெனவே முதலில் சிவாவின் வீட்டில் பார்த்து பிடித்திருக்க வரச்சொல்லி விட்டு வந்து இருந்தார். அவர்களும் அடுத்த இரண்டு நாளில் வீட்டிற்கு வந்து இருக்க..வீட்டில் அனைவருக்குமே சிவாவை பார்க்கவும் பிடித்து இருந்தது. ஆனால் திவ்யாவிடம் இரண்டு வார்த்தை பேசிய பிறகு தனது விருப்பத்தை கூறுவதாக கூறியவன்.
அதற்கும் ஏற்பாடு செய்ய…இதோ இன்றைய தோட்டத்தில் முதல் முதலாக திவ்யாவிடம் தனது சம்மதத்தை கூறியவன் இவளுக்கும் அவனை பிடிக்கும் என்பதை உறுதி செய்த பிறகே திருமணத்திற்கு சம்மதித்தான். அது போலவே இப்போதும் அழைத்து வந்திருக்க அனைவருக்குமே ஆர்வம் அதிகமாக இருந்தது.
சக்தியை அடுத்து இருந்த அறைக்குள் அமர்ந்து வைத்து இருந்தனர் வந்ததும் கூப்பிட்டுட்டு வந்தா போதும் என…அவளுக்கு பெரிதாக எதுவும் தோணவில்லை…அங்கே அபிநயாவை அவளுக்கு பக்கத்தில் படுக்க வைத்து விட்டு போய் இருந்தாள் திவ்யா படுத்திருந்த குழந்தைக்கு விளையாட்டு காட்டியபடி அமர்ந்து இருந்தாள் .
“திவ்யா தான் அவளிடம் என்ன சக்தி உனக்கு படபடப்பா இல்லையா…குழந்தை கூட விளையாடிக்கிட்டு இருக்கற..”
“அக்கா எனக்கு என்ன பயம் நீங்க எல்ஸாம் இருக்கறிங்களே…அப்புறம் அப்பா முடிவு பண்ணினா சரியாக தான் இருக்கும். ஏன்கா மாமா உன்னை பார்த்து பேசினபோது உனக்கும் இப்படி தான் படபடப்பா இருந்ததா…”
“அப்போது நிறைய பயம் இருந்தது சக்தி இப்போது அப்படி எல்லாம் இல்லை. “
“அதுதான் தெரியுமேக்கா இப்பதான் மாமா உன்னை பார்த்து பயப்படறாரே…”
“அடிங்க…அந்த மனுஷன் பயந்திட்டாலும்..”.சிரித்தபடியே சொன்னவள்,” இந்த அப்பா மாப்பிள்ளை ஃபோட்டோ மட்டுமாவது வாங்கிட்டு வந்து காட்டி இருக்கலாம் உன்மையில் ஆர்வத்தை அடக்க முடியலை…சிவாவுக்கும் பெருசா எந்த தகவலும் தெரியவில்லை கேட்டா ஃபோன்ல சொன்னாங்க வந்து பார்க்கறேன்னு சொல்லி முடிச்சாச்சு..எல்லாம் இவங்க இஷ்டம் தான். கொஞ்சம் யோசிச்சா கடுப்பாகுது…”
“ஏண்கா ஏன் இப்படி சொலலற…நமக்கு நல்லதுன்னு படறதை தானே பார்த்து,பார்த்து செய்யறாங்க…”
“அப்படி இல்லை சக்தி எனக்கு சிவாவை பிடிச்சி இருந்தது அதனால பிரச்சினை இல்லை ஒரு வேளை எனக்கு பிடிக்காட்டி என்ன செஞ்சு இருப்பாங்க.. பொண்ணுக்கு பிடிக்கலை வேண்டாம்ன்னு மறுத்து இருப்பாங்களா…நிறைய நேரம் யோசித்து இருக்கிறேன். ரொம்ப அவங்களோட இஷ்டத்துக்கு நம்மளை தலையாட்ட வைக்கறாங்களோன்னு…”
இவளுடைய பேச்சு எல்லாமே சக்திக்கு மட்டும் கேட்கும் அளவில் இருந்தது.
ஆனால் அடுத்த சில நிமிடத்திலேயே ஒரு சிறுமி ஒடி வந்தவள் மாப்பிள்ளை வீட்டில் வந்தாச்சு…ஒரு கார் ரெண்டு வேன்ல வந்து இருக்கறாங்க நிறைய பேர் என சத்தமிட்டு விட்டு ஒடி இருக்க அங்கே அமர்ந்து இருந்த பலரும் எழுந்து பார்ப்பதற்கு சென்றனர்.
“சக்தி அபி குட்டியை பார்த்திக்கோ நானும் போய் பார்த்திட்டு வரேன்” என்றபடி திவ்யாவும் எழுத்து சென்றிருந்தாள். தாய் தந்தைக்கு அருகில் இவளும் இவளுடைய மாமியார் என்ன குடும்ப உறுப்பினர்கள் வாசலுக்கு அருகில் நிற்க…மாப்பிள்ளை வீட்டினர் ஒவ்வொருவராக வந்தனர்.
பெண்கள் முன்னாள் வர ஆளுக்கு ஒவ்வொரு தட்டில் பூ ,பழம், ஸ்வீட் என்ன அடுத்தடுத்து எடுத்து வந்து இவர்களது ஹாலில் வைத்தவர்கள் அடுத்தடுத்து அமர…கொஞ்சம் சலசலப்பான சத்தம் சக்தியின் காதை தீண்டியது…
[the_ad id=”6605″]
வந்தவர்கள் அனைவரும் அமரவும் கொஞ்சமாக அமைதி தெரிய,இவளை நோக்கி வந்த திவ்யா ” மாப்பிள்ளை அழகாக இருக்கறாங்க சக்தி உனக்கு பொருத்தமாக இருப்பாங்க.. அங்கே ஷோபாவில் நடுவில் அமர்ந்து இருக்கறவர் தான் மாப்பிள்ளை,பக்கத்தில் இருக்கறவங்க அவரோட அப்பா அம்மா போல இருக்கு..மாப்பிள்ளை நல்ல உயரம் சக்தி வெள்ளை கவர் முழுக்கைசட்டை இங்கேயே இருந்து பாரு தெரியும் என கூறினாள். “
கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருக்கலாம்ன்னு தோணுது மாப்பிள்ளை ஒருவேளை சிரிக்க கூட காசு கேட்பாரோ ஆனால் அழகான இருக்கறாரு உனக்கு பொருத்தமாக இருப்பாரு அவங்க பக்கத்தில் எல்லோரும் நல்ல வசதி போல இருக்கு பார்க்கும் போது தனியா தெரியுது. எல்லோரும் ஆளுக்கு ஐம்பது பவுனாவது கழுத்தில் போட்டு இருப்பாங்க போல இருக்கு.அப்பா நல்ல இடமாகத்தான் தேடி இருக்கறாங்கன்னு தோணுது இடைவிடாமல் பேசிவிட்டு திவ்யா நகர…மெல்ல ஹாலை நோக்கி பார்வையை திரும்பினாள் சக்தி அங்கே அந்த கூட்டத்தில் நடுநாயகமாக அமர்ந்து இருந்தான் மோகன்…சிரிப்பை மறந்து கொஞ்சம் இருக்கமாக டிரிம் செய்யப்பட்ட தாடியோடு…பார்வை எங்கேயோ வெறித்திருக்க…சுழித்த உதட்டோடு அவனது தாயாருக்கும் தந்தைக்கும் நடுவில் அமர்ந்து இருந்தான்.
தொடரும்.