என்னவள்_16
மொத்த கோபமும் முகத்தில் தெரிய வேகமாக தட்டி விட்டவனின் கோபம் உச்சத்தில் இருந்தது.
“டேய் மோகன் என்னடா செய்யற என கோபமாக தாயும் ,அதே போல அவனது தந்தையும் சத்தமிட்டனர். உறவினர்கள் அனைவருமே புறப்பட்டு இருந்தது எஞ்சி இருந்தது இவர்கள் மூவரும் தான். அப்போது தான் கோபமாக போட்டு இருந்த உடையை மாற்றி வந்தவன் வரவேற்பு ஷோபாவில் இருந்த தட்டு விட…மொத்த கோபமும் அங்கே திரும்பி இருந்தது. “
“என்ன மோகன் என்ன பழக்கம் இது… புதுசு புதுசா பழகறையா கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அவ்வளவு கோபமாக தட்டி விடறே..என தாயார் சத்தமிட்டார்.”
“என்னமா நடக்குது இங்கே எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலை நீங்க… நீங்களா முடிவு பண்ணி என்ன அழைச்சிட்டு போறிங்க… ஏன்மா காலையில் சொல்லி இருந்தா அப்பவே வேண்டாம்ன்னு சொல்லிட்டு போய் இருப்பேன்ல்ல…வழக்கம் போல வீட்டுக்கு வந்தா விடு முழுக்க ஆட்களை கூட்டி வச்சிட்டு அவ்வளவு கூலா சொல்லறிங்க பொண்ணு பார்க்க போறோம்ன்னு…உறவுக்காரங்க இருக்கும் போது உங்களை எதுவும் சொல்ல கூடாது, மரியாதையாக இருக்காதுன்னு தான் அமைதியாக புறப்பட்டேன். சரி பொண்ண பார்த்துவிட்டு வர்றதுதானேன்னு… வந்தா…யாரை கேட்டு நிச்சயம் வரைக்கும் முடிவு பண்ணினிங்க…நான் கேட்டேனா…எனக்கு பொண்ணு பார்த்து கட்டி வைங்கன்னு…”
அப்போது மோகனின் தகப்பன் பேச ஆரம்பித்தார்…”யாரைடா கேட்கணும்,யாரை கேட்கணும் இங்கே எல்லாமே என்னுடைய இஷ்டம் தான்…உன்னோட படிப்பில் இருந்து உன்னோட வாழ்க்கை உன்னோட நல்லது கெட்டது எல்லாமே முடிவு பண்ணறது இங்கே நான்தான்…நீ என்னுடைய பையன் உனக்கு நல்லதுன்னு படறதை தான் நான் செய்வேன். வேற யாராவது செய்ய முடியுமா..கோபமாக கேட்டவர் மனைவியிடம் திரும்பி இவன் ஏன் இப்படி துள்ளறான்னு நினைக்கற…நம்ம பார்த்து வளர்த்தோம்ல்ல அந்த செல்வியை மனதில் நினைச்சிட்டு சுத்தறான் போல இருக்கு… நான் பார்த்து இருக்கற வர்ற வரன் ஒன்றும் குறைஞ்சது இல்லை. இன்னும் நாலு தலைமுறைக்கு ,நீ மட்டும் இல்லை உன்னோட தலைமுறையே உட்கார்ந்து சாப்பிடலாம் அந்த அளவுக்கு வசதியான குடும்பம் அவங்களது…”
“இப்போது நாம எதில் குறைஞ்சு போயிட்டோம் அதை முதலில் சொல்லுங்க…பணம்,பணம் ,பணம் தவிர வேற எதுவுமே இல்லையா… இந்த பணத்தை எப்போது தான் விடுவிங்க…இங்கே என்ன இல்லை. இன்னும் எத்தனையை சேர்க்க போறிங்க…எனக்கு இது போதும்பா…இருக்கறதை வச்சிகிட்டு நிம்மதியாக வாழலாம் “.
[the_ad id=”6605″]
“டேய் அவனவன் இருக்கற வசதியை இன்னும் எப்படி பெரிசாக்கணும்ன்னு யோசிக்கனும்டா…எனக்கு…நீ எனக்கு தானே பிறத்த…இப்படி இருக்கற…ஒன்றும் இல்லாதவளை கட்ட நினைக்க கூடாது. உன்கிட்ட திரும்ப,திரும்ப சொல்லிட்டு இருக்க மாட்டேன் ஒரு தடவை முடிவு பண்ணினா பண்ணினதுதான் நான் பார்த்த பொண்ணுக்கு தான் தாலி கட்டற இதை தவிர வேற ஏதாவது செய்யணும்ன்னு நினைச்சே நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.உன்னை ஒன்றும் பண்ணமாட்டேன்.. இதுக்கப்பும் உன்னோட அம்மாவை மட்டும் அல்ல என்னையும் நீ உயிரோடு பார்க்க முடியாது. “
“என்னபா மிரட்டி பார்க்கறிங்களா இதுக்கெல்லாம் நான் பயப்படுவேன்னு நினைக்கறிங்களா, அதுக்கு நீங்கள் வேற ஆளை பார்க்கணும் எனக்கு வேணுங்கறதை நான் தான் முடிவு பண்ணுவேன் நீங்கள் கிடையாது புரியுதா…
கல்யாணம்ன்னு ஒன்று நடந்தால் அது செல்வியோட மட்டும் தான். ,
“என்ன டா வாய் ஒவரா பேசற…காலையில் கூப்பிட போணபோது அவள் எத்தனை வார்த்தை பேசினா தெரியுமா…தான் பார்த்து வளர்ந்தவ…எத்தனை பேச்சு…என்னோட உயிரே போனாலும் அவள் பெத்த பிள்ளை என்னுடைய வீட்டுக்கு வாழ வரக்கூடாது. “
“உங்கள் தங்கச்சி தானேப்பா அப்புறம் எப்படி குறைவாக பேசுவாங்க நீங்களே இந்த கல்யாணத்தை பேசிய மாதிரியே நிறுத்திடுங்க…பொன்னி அத்தைகிட்ட பேசி செல்விக்கும் எனக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்க அதுதான் உங்களுக்கு மரியாதையா இருக்கும். ஊருக்குள்ள நல்லவன்னு பேர் எடுத்தா பத்தாது….வீட்டுக்கும் அது போல இருக்கணும் என்றவன் கோபமாக சட்டையை எடுத்து போட்டபடி வீட்டை விட்டு வெளியேறினான்.”
டேய் இப்ப எங்கடா போற இந்த ராத்திரி நேரத்தில்…என்ன கேள்வி கேட்ட தாயாரிடம்….”எங்க போவேன் நேரா செல்வி வீட்டுக்கு தான் போறேன்.அவள் கிட்ட பேசி சமாதானம் செய்ய…என்னபடி தனது வண்டியை ஆன் செய்து புறப்பட்டான்.”
அதே நேரம் அங்கே செல்வியின் வீட்டில்…ரூம்பில் அமர்ந்து அழுதழுது முகம் வீங்கி இருக்கு கட்டிலில் படுத்தபடி அழுது கொண்டு இருந்தாள். பெண் பிடிக்கவில்லை என்று திரும்பி விடுவார்கள் என்று நினைத்து இருக்க…கொஞ்சமும் எதிர் பாராமல் நிச்சயம் முடிந்தது அதிர்ச்சியாக இருந்தது. இவளது ஃபோனிற்கு அடுத்தடுத்து வாட்சப்பில் ஃபோட்டோ வந்து கொண்டு இருந்தது.
அங்கே சக்தி ஸ்வீட் ஊட்ட கொண்டு போன புகைப்படம் அது போலவே இவன் கொடுக்க போனது இரண்டும் அடுத்தடுத்து வந்து இருந்தது. அதிலும் பெண்ணின் அழகு இவளை மேலும் கவலைப்பட வைத்தது. நிச்சயம் முடிந்த பெண்ணிற்கும் தனக்கும் இருக்கும் வித்தியாசம் பார்த்தவளுக்கு மோகன் தலையாட்டியது தப்பே இல்லை என்ற எண்ணம் தோன்றி இருந்தது அதை நினைக்கவும் இன்னும் அழுது கொண்டு இருந்தாள்.
சற்று நேரம் வரைக்கும் பார்த்தவர் மகளிடம் வந்து அருகில் அமர்ந்தபடி “செல்வி நடந்ததை ஏற்றுக்கொள்ள பழகிக்கோ…அவன் கூட உனக்கு கல்யாணம் நடக்காது…எனக்கு என்னுடைய அண்ணாவை நல்லா தெரியும் அவன் முடிவு பண்ணிட்டா அத்தனை சீக்கிரம் மாத்திக்கமாட்டான் தெரிஞ்சு இருந்தே அழுது ஆகப்போகிறது எதுவும் இல்லை. அவன் மரியாதை, கெளரவம் சொல்லிட்டு ஊருக்குள் திரியறவன் கட்டாயம் இனி மாற மாட்டான் இந்த கல்யாணம் நின்னா அது அவனுக்கு அசிங்கம் அப்படிதான் யோசிப்பான் புரஞ்சிக்கோ செல்வி”.
[the_ad id=”6605″]
“ஏன் மா எனக்கு என்ன குறை எதுக்காக மாமா இப்படி பண்ணினாங்க…நான் நினைவு தெறிஞ்ச நாளில் இருந்து… மோகன் மாமாவைதானே கட்டிக்க போறேன்னு சொல்லி சொல்லி வளர்த்தாங்க இப்ப மட்டும் ஏன் பிடிக்காமல் போச்சு…அத்தை கூட எதுவும் பேசலைமா..நான் அவங்களுக்கு என்ன பண்ணினேன். ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கு போனா வாடி எம்மருகளேன்னு எவ்வளவு ஆசையாக கூப்பிடுவாங்க அவங்க கூட எதுவும் சொல்லலை…எப்படி மா ஒரே நிமிடத்தில் மாற முடியுது என்னால தாங்க முடியலைமா…”
“அவங்களுக்கு பணத்து மேல ஆசை வந்திடுச்சுமா நாம கண்ணுக்கு தெரிய மாட்டோம் இனிமேல் இப்படி அழாதே செல்வி எனக்கு இருக்கிறது நீ மட்டும் தான் என்னால உன்னை இப்படி பார்க்க முடியலை…உனக்கு அவனை விடவும் அழகான பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கறேன் நாமலும் எதிலேயும் குறைஞ்சு போகலை…இங்கே தோட்டம் துறவு இருக்கே படிச்ச மாப்பிள்ளையா,அழகான பையனா உனக்கு பார்க்கிறேன்.கவர்மெண்டில் வேலை பார்க்கற மாப்பிள்ளையை அவனோட கல்யாணத்துக்கு முன்னாடியே பார்த்து உனக்கு கட்டி வைக்கறேன்”.
“அம்மா அப்படி பேசாதமா…இன்னோருதரம் இப்படி பேசினால் என்ன பண்ணுவேன்னு தெரியாது…இந்த ஜென்மத்தில் கல்யாணம் ஒன்று நடந்தால் அது மோகன் மாமா கூட மட்டும் தான் வேற எதையும், யாரையும் என்னால யோசிக்க கூட முடியலை…அழுது கொண்டு இருக்கும் போதே வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டது. கூடவே சில நிமிட நேரத்தில் கதவு தட்டும் ஓசை கேட்க..பொன்னி எழுந்து கதவை திறக்க போனார்.”
கதவை திறக்கவும் வாசலில் நின்றது மோகன்” அத்தை உள்ள வரலாமா…நான்கொஞ்சம் செல்விக்கிட்ட பேசணும்.”
“என்ன பேச போற மோகன் எல்லாமே முடிஞ்சு போச்சு..இனி பேச எதுவும் இல்லை. எல்லாம் என்னுடைய தலையெழுத்து எனக்கு அண்ணா இருக்கிறான் அவன் எல்லாவற்றையும் பார்த்துக்குவான்னு நினைத்தேன் எல்லாமே கனவா போச்சு…”
“இல்லை அத்தை நான் செல்விக்கிட்ட பேசிட்டு போறேன் அவளை இங்கே கூப்பிடுங்கள்… உள்ளே வந்தபடியே கூறினான் மோகன்.”
“என்ன என் பொண்ணு எப்படி அழறான்னு பார்க்கணுமா தாராளமாக பார்த்துட்டு போ…செல்வி ஏய் செல்வி வந்து முகத்தை காட்டிவிட்டு போ…இதுக்கு தானே ஆசை பட்டிங்க… இப்போது நிம்மதி தானே…கோபமாக உள்ளே நுழைத்த பொன்னி வேகமாக செல்வியை இழுத்து கொண்டு வந்து இவன் முன் நிருத்தினாள். நல்லா பாருங்க இப்போது சந்தோஷமா
இப்படி இவளை பார்க்கணும்ன்னு எத்தனை நாளா உங்க குடும்பம் ஆசை பட்டிச்சு….இப்போது அழறதுதான் கடைசியாக இருக்கணும் செல்வி…இனி எதையாவது நினைத்து அழுதா நான் பொல்லாதவளாக ஆயிடுவேன்.”
“நிமிர்ந்து பார்க்க முடியாமல் அழுதவள் மோகனை பார்த்து..
பொண்ணு பார்க்க போகும் போது எதுவும் நடக்காதுன்னு சொல்லிட்டு போனிங்களே அங்கே போனதும் ஏன் மாறி போனிங்க…
பொண்ணு அழகாக இருந்ததாலேயா…சொல்லுங்க மோகன் மாமா..நான் இங்கே உங்களுக்கு காத்து இருக்கிறது கண்ணுக்கு தெரியலை அப்படி தானே…இப்போது இங்கே என்ன சொல்ல வந்திங்க…இல்லை இவள் இன்னும் உயிரோடு இருக்கறாலான்னு பார்த்து விட்டு போக வந்திங்களா…நானும் போயிட்டா அம்மாவுக்கு யார் இருக்கறா…அழுதபடியே மயங்கி சரிந்திருநாதாள்.”
“செல்வி என்றபடி நெருங்க போனவனை அங்கேயே நிறுத்தி இருந்தார் பொன்னி…போதும் மோகன் அங்கேயே நில்லு… இனி என் பொண்ண எனக்கு பார்த்துக்க தெரியும். சாயங்காலத்தில் இருந்து அழுதுட்டு இருக்கறா இந்த நேரத்தில் முதலில்உன்னை உள்ள விட்டதே தப்பு…ஏன் விட்டேன்னா இன்றைக்கோட அவளோட அழுகை முடிவுக்கு வரட்டுமேன்னு தான். இனி அவளுக்கு நீ இல்லைன்னு புரிய வச்சிடுவேன்..நீ புறப்படு…இதையெல்லாம் கேட்க அங்கே மோகன் இருக்கவில்லை வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்து தண்ணீர் ஒரு சொம்பில் எடுத்து வந்து இருந்தான். நகருங்க என்றபடி இவளது முகத்தில் தெளிக்க…மெல்ல கண் விழித்தாள் செல்வி…”
“மறுபடியும் மோகனை பார்த்தவள் அழஆரம்பிக்க…இப்போதும் பொன்னி தான் பேசினார் கிளம்பு மோகன் இனி இங்கே வராதே எங்க வீட்டுக்கு வர்றது இதே கடைசியாக இருக்கட்டும் அப்புறம் இனி எக்காரணம் கொண்டும் செல்வியை பார்க்க முயற்சி பண்ணாத…அது தான் உங்கள் ரெண்டு பேருக்கும் நல்லது. அவளும் வேற வீட்டில் போய் வாழ வேண்டியவ…இந்த ஊர்க்காரங்க உங்கள் ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி இத்தனை நாளா பேசிணது போதும் இனியும் பேச வேண்டாம். எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு தான் என்னோட உயிர் என்னோட ஆதாரம் அவள் தான். இனி அவளை பார்க்க முயற்சி பண்ணாதிங்க அவளும் இனி உன்னை பார்க்க மாட்டா பேசவும் மாட்டா…நம்ம ரெண்டு குடும்பத்து உறவும் முடிஞ்சி போச்சு…புறப்படு என்றவர் அவன் வாசலை நோக்கி நகர பின்னோடு வந்து கதவை மூடி விட்டு வீட்டிற்குள் நுழைந்தார். வாசலுக்கு போனவனின் காதில் செல்வியின் அழுகுரல் சத்தமாக விழ ஆரம்பித்தது.”
[the_ad id=”6605″]
அழுகுரலை கேட்டபடி கோபமாக வண்டியை எடுத்தவன் நேராக நிறுத்தியது அங்கிருந்த டாஸ்மாக் முன்பு…இதற்கு முன்பு இந்த பழக்கம் கிடையாது தான் ஆனால் இப்போது இருந்த கோபம் யோசிக்காமல் வாங்க சொன்னது…கையில் வாங்கியவனுக்கு என்ன செய்வது என புரியாமல் இரண்டு நிமிடம் நின்றவன் அங்கேயே குடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டான்.
வண்டி கூட கொஞ்சம் ஆடியபடி வீட்டின் வாசலில் நிற்க அதை நிறுத்த முடியாமல் வண்டியை சரித்தபடி கூடவே அங்கேயே விழுந்து இருந்தான். மோகனை திட்டியவர் கோபமாக படுக்க போயிருந்தார் மோகனின் தந்தை…இவனுக்காக காத்து இருந்தது இவனது தாயார் மட்டும் தான். அவரும் கூட மோகன் புறப்பட்டு செல்லவும் கணவனிடம் மகனுக்காக பேசி இருந்தார்.
“நான் தான் முதலிலேயே சொன்னேன்ல்ல செல்வி பிள்ளையை விரும்பறான் போல இருக்கு அவன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு இந்த பெண்ணை பாருக்கன்னு சொன்னேன் தானே…நமக்கு பையனோட நிம்மதி தானே முக்கியம். இந்த வரன் வேண்டாம்ன்னு சொல்லிடலாங்க…அவன் ஆசைபடறது மாதிரியே கட்டி வச்சிடலாம் என்ன சொல்லறிங்க” . என்று கேட்டார் .
“உனக்கு பைத்தியமாடி பிடித்து இருக்கு அங்கே பொண்ணு வீட்டை பார்த்த தான…பையனோட ஃபோட்டோ கூட பார்க்கலை அந்த பொண்ணு அப்பவும் அப்பா சொன்னா சரிண்ணு வந்து நிற்கிறது. இங்கே இவன் என்னன்னா…இப்படி வந்து பேசறான். அப்போ…நாம வளர்ப்பு சரியில்லையா…சொல்லு மறுபடியும் அங்கே போய் என் பையன் வேற பொண்ண விரும்பறான் இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொன்னா அங்கே இருக்கறவங்க என்னை காரி துப்ப மாட்டாங்க… ஏன்யா முதலிலேயே கேட்டுட்டு வரவேண்டியது தானே…நிச்சயம் முடிஞ்சாச்சு…இப்ப வேண்டாம்ன்னா எங்க பொண்ண தானே தப்பா பேசுவாங்கன்னு நிற்க வச்சி கேள்வி கேட்பாங்க…என்னால எங்கேயும் போய் அசிங்க பட முடியாதுஉன் பையன்கிட்ட தெளிவாக சொல்லிடு அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணனும். அந்த பொண்ணு எவ்வளவு அழகாக இருக்கு. இந்த செல்வி பொண்ணு அந்த பொண்ணோட கால் தூசிக்கு வருமா…கேள்வி கேட்கிறத பாரு…வருவான் பேசி சமாதானப்படுத்து இந்த கல்யாணம் நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும்ன்னு எடுத்து சொல்லு…”என்றபடி உள் அறைக்குள் தூங்க போயிருந்தார்.அதே நினைவில் அமர்ந்து இருந்தவருக்கு வெளியே விழும் சத்தம் கேட்ட வேகமாக வாசலுக்கு சென்றார்.
“மோகன் விழுந்து கிடப்பதை பார்த்து சத்தமாக என்னங்க இங்கே வாங்க மோகனை வந்து பாருங்க என்றபடி வேகமாக ஓடினார். தாயின் நெஞ்சம் எங்கே எதையாவது குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறானோ என்ற பயம் அவருக்கு…சத்தம் கேட்டு பின்னாலேயே அவரும் எழுந்து வர…பக்கத்தில் வரவுமே தெரிந்து விட்டது. குடித்து விட்டு வந்து இருக்கிறான் என…”
“கருகம் கருமம் இந்த பழக்கம் வேறையா…இது எத்தனை நாளா நடக்குது என கோபமாக மனைவியை முறைத்தார்.”
“இல்லங்க…இன்றைக்கு தான் இப்படி வரான் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே செல்வி…செல்வி என உளறியபடி அங்கேயே வாந்தி எடுத்து இருந்தான்.தலையெழுத்து எனக்கு இப்படி ஒருத்தன் பையன்னு வந்து பிறந்து இருக்கறான்…என திட்டியபடியே அவனை தோளோடு தூங்கியவர் இன்னும் இவனால எத்தனையை பார்க்க போறேன்னோ தெரியவில்லை என்றபடி பாத்ரூம்பிற்குள் விட்டவர்…வேகமாக ஷவரை திறந்து விட்டார்.”
தொடரும்.