என்னவள்_27
ஆண்டுவிழா என்று சொல்லி சென்ற நாளில் இருந்து நாட்கள் வேகமாக நகர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். அன்று என்னென்ன போட்டிகள் வைக்கலாம் என்று எழுதி தந்து விட்டு வர…அடுத்த நாள் காலையில் அழகாய் வரிசைபடுத்தி அனைவருக்கும் தெரியும் படி ஆபீஸ்ஸின் போர்டில் ஒரு ஓரத்தில் ஒட்டி இருந்தது.
கூடவே யார் யார் எந்த போட்டியில் கலந்து கொள்ள போகிறார்கள் என்று பெயர் கொடுக்க சொல்லியும் அதில் கூறி இருந்தனர்…தினமுமே அதைபற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருந்தனர். ஏதை பேசினாலும் கடைசியில் முடியும் இடம் ஆண்டுவிழாவாக இருந்தது.
சக்தி கூட ரேஷ்மாவிடம் “என்ன ரேஷ்மா எங்க போணாலும் இதை பற்றியே பேசறாங்க…அவ்வளவு நல்லா இருக்குமா என்ன? “.
“சக்தி இந்த ஃபங்சனுக்கு நாங்கள் புதுசா டிரஸ் எடுப்போம் தெரியுமா இந்த வாரம் கடைசி ஆகும் போது பாரு டிரஸை பற்றி மட்டும் தான் பேச்சு இருக்கும். நிறைய ஆபர் போட்டு இருக்கறாங்கல்ல நான் புதுசா ஒரு வண்டி என்னுடைய மாமாவுக்கு வாங்கலாம்மான்னு யோசிச்சிட்டு இருக்கிறேன் நீ என்ன சொல்லற…. எப்படியும் இன்னும் ரெண்டு வருஷத்தில் இங்கே வருவாங்க தானே…”
“வாங்கலாமே நல்ல யோசனை தான் ஆனால் அடிக்கடி எடுத்து வண்டியை ஓட்டனும் ரேஷ்மா இல்லையின்னா பேட்டரி வீக் ஆகிடும் ஸ்டாட் ஆக கஷ்டமா இருக்கும். வீட்டில் வேற யாராவது வண்டி ஓட்டுவாங்கன்னா வாங்கு…”
“ஓ…அப்படின்னா வேண்டாம். ஓட்டற மாதிரி யாரும் இல்லை சக்தி ..அப்பாவுக்கு டிவிஎஸ் எக்எல் தான்…ஓட்டச்சொன்னாலும் ஓட்டமாட்டாங்க…சரி ஃபங்சனுக்கு நீ என்ன கலர்ல டிரஸ் போட்டுவிட்டு வருவே…”
“நான் வருவேனா இல்லையான்னு தெரியாது ரேஷ்மா இந்த நிமிடம் வரைக்கும் நோ ஐடியா பார்க்கலாம். “
“சக்தி அப்படி சொல்லாத நீ வந்தா நல்லா இருக்கும் நீ வர்ற…வீட்டில் விடமாட்டேன்னு சொன்னா சொல்லு நான் கேட்கறேன்.”
“ரேஷ்மா அப்படி எதுவும் சொல்ல மாட்டாங்க…எனக்கு தான் வரணுமான்னு ஒரு எண்ணம்…இன்னும் தான் நாள் இருக்கே யோசிக்கலாம் என்றபடி அப்போதைக்கு அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தாள்.”
அந்த வார இறுதியில் ஸ்டாக் லிஸ்ட் வாங்க வந்திருந்த பிரபுவிற்கு யோசனை எல்லாம் எங்கோ இருந்தது. வந்தவன் கூட அங்கிருந்த இருக்கையில் ஓரமாக அமர்ந்து இருந்தான். முதலில் இதை கவனித்தது ரேஷ்மா தான். இரண்டு நிமிடம் வரைக்கும் பார்த்தவள் “என்ன பிரபு ஸார் ஓரே யோசனைமாக இருக்கறிங்க..என்னன்னு சொல்லுங்க நாங்கள் ஏதாவது உதவ முடியுமான்னு பார்க்கிறோம் என்று கூறினாள். ரேஷ்மா கொஞ்சம் அப்படிதான் கலகலப்பு டைப் எது என்றாலும் கேட்க தயக்கம் இருக்காது.”
[the_ad id=”6605″]
“உங்கள் கிட்ட சொல்ல என்ன தயக்கம். இங்கே ஆண்டுவிழாற்கு வேலை பார்க்கணும் இந்த வாரத்தில் ஊருக்கு போக முடியாது அதுதான் யோசனை..இனி இங்கே தான் தொடர்ந்து வேலையில் இருக்க போறேன். அம்மா தங்கச்சி மட்டும் ஏன் சென்னையில் இருக்கணும் இங்கேயே அழைச்சிட்டு வந்திடலாமான்னு ஒரு யோசனை இருக்கு. வாரம் ஒரு தடவை எப்படியும் போக வேண்டியது இருக்கு…அதுவே மாதம் எட்டாயிரம் வரைக்கும் ஆகுது…இங்கே வந்திட்டா அந்த செலவு மிச்சம்…அதற்கும் சேர்த்து வீட்டுக்கு ஏதாவது வாங்கி கொடுக்கலாம். சரியா வருமான்னு யோசனை…”
சக்தி ரேஷ்மா இரண்டு பேரும் அவனைதான் பார்த்து இருந்தனர். சக்தி தான் இதற்கு பதில் சொன்னாள்.” நல்ல யோசனை தானே அப்படியே செய்யுங்க..அங்கே சென்னையில் உங்களுக்கு சொந்த வீடா ஸார்.”
“இல்லைங்க… அந்த அளவுக்கு இன்னும் முன்னேறலை வாடகை வீடு தான். “
“அப்புறம் என்ன இங்கே மாறிடுங்க… பணம் கூட அப்புறம் தான் நிஜமாகவே அலைச்சல் மிச்சம்…டென்சன் இல்லாமல் நீங்கள் இங்கே வேலை செய்யலாம். யாருக்காவது உடம்பு முடியலைன்னாலோ இல்லை பிரச்சினைன்னா இங்கே இருந்து வருதப்படணும் நினைச்ச நேரத்தில் போகவும் முடியாது. இங்கே பக்கத்தில் வாடகைக்கு நல்ல வீடு கிடைக்கும். “
“ஆமாம் ஸார் சக்தி சொல்லறதும் க்ரெக்ட் நானும் இதை தான் சொல்லுவேன். “
“தேங்க்ஸ் சக்தி அன்ட் ரேஷ்மா எக்ஸாம் முடியவும் அழைச்சிட்டு வந்திடறேன். மேக்சிமம் நிறைய பேர் போட்டிக்கு பேர் தந்து இருககறாங்க… இன்னும் இங்கே இருக்கற தீங்க ரெண்டு பேரும் தான் தரலை..ஏதாவது ஒன்றிற்கு பேரை கொடுங்க “என்றபடி எழுந்தவனிடம்..”.எங்க ஸார் இந்த சக்தி வரமாட்டேன்னு சொல்லிட்டு இருக்கறா…”
“ஏன் சக்தி அப்படி சொல்லாதிங்க இங்கே எல்லோரும் நம்ம ஸ்டாப் தான் புதிதாக யாரும் வரப்போகிறது இல்லை. கட்டாயம் வரணும் என்றபடி புறப்பட்டான். “
“இப்ப யாரு உன்னை சொல்ல சொன்னாங்க என்று கோபமாக ரேஷ்மாவை முறைக்க…அவளோ இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேனாக்கும் என்றபடி நகர்ந்தாள்.”
இதோ இதோ ஆண்டுவிழாவும் வந்து இருந்தது. ரேஷ்மா வீட்டில் சக்தியின் தாயாரிடம் ஃபோனில் பேசியவள் இவளை வரச்சொல்லி அழைக்க…கோமதி இவளிடம் கூறி இருந்தார்.
“போயிட்டு வா சக்தி எந்த ஃபச்சனுக்கும் போகிறது இல்லை இதற்காவது போயிட்டு வா என்று கூறி இருந்தார்.”
காலையிலேயே சக்தி குளித்து விட்டு நைட்டியோடு வந்தவள் தாயாரை அழைத்து கொண்டு இருந்தாள். “ம்மா அங்கே கட்டிட்டு போக ஏதாவது சேலை செலக்ட் பண்ணி தாங்கமா என்று…”
“இன்னும் மாறவே இல்லை சக்தி எங்கேயாவது போறதுன்னா எந்த டிரஸ் போடறதுன்னு இன்னும் குழப்பம் வந்திடுது உனக்கு…என்றபடி இவளது பிரோவில் தேடி இதை கட்டேன் போன திபாவளிக்கு அக்கா எடுத்து தந்தது இன்னும் நீ கட்டலைதானே…”
“அம்மா அது பட்டு சேலைமா அதையா கட்டணும்…”
“லைட்வெயிட் சேலை பெருசா தெரியாது பார்க்க சிம்பிளாதானே இருக்கு அதையே கட்டிக்கோ..சேலையை கட்டிட்டு .வா உனக்கு தலைபிண்ணி விடறேன் என்றபடி நகர்ந்து சென்றார். அதற்குள் ரேஷ்மா அழைத்து இருந்தாள் இவளை…சக்தி புறப்பட்டாச்ச…வராமல் இருந்திடாதே நான் பாவம் டி…”
“யாரு நீ பாவமா…யாருக்கிட்டேயும் உனக்கு பேசவே தெரியாது அப்படி தானே…”
“சக்தி நீ வந்தா கம்படபிளா இருக்கும். வந்ததும் கூப்பிடு உன்னை தான் தேடிட்டே இருப்பேன் என்றபடி ஃபோனை கட் செய்தாள். சத்தி வேகமாக உடை மாற்றியவள் தாயாரை தேடி நகர்ந்தாள்.”
இவள் வரவும் இவளை பார்க்க அந்த சேலையில் அவ்வளவு அழகாக இருந்தாள் சக்தி…பிங்க் ரோஜா நிறத்தில் கருநீலபார்டரோடு இவளுக்காக நெய்தது போல இருந்தது. “நல்லா இருக்கிறது சக்தி உன்னை இந்த சேலை இன்னும் எடுப்பா காட்டுது…”தலைபிண்ணியவள் பூவை எடுத்து தலைவைத்தபடி கோமதி சொல்ல…
“எடுத்தது திவ்யா மா…அவள் எனக்கு எடுத்தா பார்த்து பார்த்து செலக்ட் பண்ணுவாம்மா…காலையில் சாப்பாடு வேண்டாம்மா இன்றைக்கு அங்கே தான் மூன்று வேலைக்கும்…என்றபடி புறப்பட்டாள்..”
“அந்த ரேஷ்மா பொண்ணுக்கு பூ எடுத்துவிட்டு போகிறாயா சக்தி என்று கோமதி கேட்க…”
“ஆமாம் மா…கொடுங்கள் நான் எடுத்துவிட்டு வர்றதா சொல்லி இருந்தேன் என்று வாங்கி அவளது ஹேன்ட் ஃபேக்கில் வைத்தபடி புறப்பட்டாள்.போகும் போது ஒரு செல்பி எடுத்து திவ்யாவிற்கு அனுப்பியவள்…நல்லா இருக்கிறதா என்று மெசேஜ் தட்டியபடி புறப்பட்டாள்.”
அங்கே இவளுக்காக வாசலிலேயே ரேஷ்மா காத்திருந்தாள். “வா வா…உனக்காக தான் வெயிட்டிங்…என்றபடி இவளை அழைத்து கொண்டு உள் நுழைந்தாள்.”
“வாவ் அழகான இருக்கற சக்தி என்று ரேஷ்மா கூறியவள் … இவளது கழுத்தை பார்த்து…வாவ் ஒரே ஒரு நெக்லஸ் அதுக்கு மேட்சாக கம்மல்…கல்லெல்லாம் டால் அடிக்குது சக்தி….சூப்பராக இருக்கற…”
“அது வைரம் அப்படிதான் டால் அடிக்கும் என்றபடி இவளும் சொல்ல ..”
“நம்பிட்டேன் நம்பிட்டேன்” என்றபடி நடந்தனர். வாசலில் வரவேற்புக்காக நிறைய பலூன்கலால் அரண்மனை போல வடிவமைத்து இருந்தனர். உள்ளே இருபது குடில்கள்வரைக்கும் இருந்தது. ஒவ்வொரு குடிலிலும் பத்து இருக்கை வரைக்கும் இருக்க…ஸ்டேஜில் இன்னமும் மலர்களை அங்கங்கே ஒட்டிக்கொண்டு இருந்தனர். ஆண்கள் பெண்கள் இருவருமே இவர்களும் வேடிக்கை பார்த்தபடி அங்கே செல்ல…இயல்பாக இவர்கள் கையிலும் மலர்கள் கொடுத்து ஓட்டச்சொல்லி தந்தனர்.
[the_ad id=”6605″]
கை திறைய மலர்களோடு சக்தி நிற்க ரேஷ்மா ஒவ்வொன்றாக எடுத்து ஓட்டிக்கொண்டு இருந்தாள்.அப்போது பிரபு அங்கு வந்தவன் அனைவருக்கும் குட்மானிட் சொன்னவன்…”காலையில் டிபன் ரெடியாக இருக்கு…அப்படியே ஒவ்வொருவராக சாப்பிட்டு வாங்க்…பத்தரைக்கு எல்லாம் ஃபங்சன் ஸ்டார்ட் ஆகிடும்.”
“சக்திக்கு பூ என்றால் அவ்வளவு பிடிக்குமா…பிடிச்சதுன்னா கையில் இருக்கறதை நீங்களே வச்சிக்கலாம் “என்று சொல்ல..”.ரேஷ்மா இப்படி எல்லாம் வாக்கு கொடுக்காதிங்க பிரபு ஸார் இங்கே பொண்ணுங்க இருபது பேர் பக்கம் இருக்கிறோம் ஆளுக்கு நான்கு எடுத்தா…ஸ்டேஜ்ல் பூவே இருக்காது பார்த்துகோங்க…”
“ஐயோ…ரேஷ்மா இந்த விளையாட்டுக்கு நான் வரலிங்க…என்றவன் சக்தியிடம் திரும்பி பூவுக்கும் உங்களுக்கும் பெரிசா வித்தியாசம் தெரியலிங்க… அதுதான் உளரிட்டேன் போல…என்றவன் மறக்காமல் போய் சாப்பிட்டு வந்திடுங்க என்றபடி அடுத்து வேலை நடக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தான்.”
நேரம் பத்தரையை துவங்கிய போது நிகழ்ச்சி துவங்கியது. வரவேற்புரை முடியவும் போட்டிகள் துவங்கி இருந்தது.
ஆண்களுக்கு ஓட்டப்பந்தயம் கபடி என்று ஒரு பக்கம் தொடர்ந்து நடக்க…பெண்களுக்கு என்று ஒரு புறம் தனியாக நடத்தினர். சிரிப்பு மட்டுமே அங்கே இருந்தது ஒருவரை ஒருவர் கலாய்க்க…
வேடிக்கை மட்டுமே சக்தியும் ரேஷ்மாவும் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது அருகில் வந்த பிரபு..”.என்ன ரெண்டு பேரும் எதிலேயும் கலந்துக்க இஷ்டம் இல்லையா…ஒவ்வொருவரும் ரெண்டு கேம்மில் கலத்துக்கணும் அப்படிங்கறது விதி…ரெண்டு பேரும் எதிலேயாவாது சேருங்கள் என்று கூறியபடி இருவரையும் பார்க்க…சக்திதான் வேகமாக தலையாட்டினாள் மாட்டேன் என்பது போல ..”
“அப்படி எல்லாம் விடமுடியாது. ரேஷ்மா நீங்கள் லெமன் அண்ட் ஸ்பூன் போங்க அப்புறம் பலூன் ஊதி கட்டறது அதுக்கும் பேர் எழுதிக்கறேன். சக்தி நீங்கள் பலூன் ஊதி கட்டறது அடுத்தது கவிதை எழுதறது இதற்கு உங்கள் பேர் எழுதறேன் ஏன்னா கவிதை எழுத வைக்கலாம்ன்னு சொன்னது உங்கள் ஐடியா அப்படின்னா எழுத தெரியுன்னு தானே அர்த்தம்…பேர் கூப்பிடும் போது வந்திடுங்க…என்றபடி நகர… இவள் ரேஷ்மாவை முறைத்தாள். ஏண்டி என் பேர் போட்ட…”
“ஹலோ ஐடியா உன்னதுமா அப்புறம் உன் பேர் போடாமல் என் பேரா போட முடியும். அதென்ன இந்த பிரபு ஸார் நம்மல மாட்டி விடறது வா நாமலும் எதிலாவது அவரை சிக்க வைக்கலாம் என்றபடி இவளது கைபற்றி நடக்க…”
“வேண்டாம் ரேஷ்மா அதெல்லாம் வேண்டாம் பேசாமல் வேடிக்கை பாரு…அப்போது பானை உடைக்கும் போட்டி நடந்து கொண்டு இருந்தது.”
“ஹலோ பிரபு ஸார் நீங்கள் எதில் கலந்துக்க போறிங்க…ரேஷ்மா கேட்டே விட்டாள்…”
இவள் ஆரம்பிக்கவும் அவனை சுற்றிலும் சூழ்ந்து கொண்டனர்.கடைசியில் பானை உடைக்கும் போட்டிக்கு அவனது கண்ணையும் கட்டி அனுப்பி வைத்தனர்.
மூன்று முறையும் தவறுதலாக அடிக்க சிரித்தபடியே கண் கட்டை அவிழ்த்தவன் “நான் தான் சொன்னேன்ல்ல விளையாட்டு எல்லாம் எனக்கு வராதுன்னு என்றபடி நகர்ந்தான்.”
லெமன் அண்ட் ஸ்பூன் போட்டி நடக்க ரேஷ்மா ரேஷ்மா நன்றாகவே கத்தினர் சுற்றிலும் நின்றிருந்தவர்கள் ஜெயித்தது கூட அவள் தான்…முகத்தில் தோன்றிய வியர்வையை துடைத்தபடி சக்தியிடம் வந்து நிற்க…சக்தி அவளது கையை பிடித்து குழுக்கினாள்.சூப்பராக விளையாண்ட…எவ்வளவு வேகம்…என்று சொல்ல…
“என் ஏரியாவில் இந்த போட்டிக்கு மட்டும் தான் நான் வருஷாவருஷம் ப்ரைஸ் வாங்கறேன் தெரியுமா என்றபடி நின்றிருந்தாள்.”
பலூன் ஊதிக்கட்ட டிம் ஒர்க் என்று இருவரும் ஒரு குரூப்பில் நின்றனர். சக்தி ரேஷ்மா டிமிற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.
கடைசியாக கவிதை எழும் போட்டி வைக்க…சக்தி ஐந்தே நிமிடத்தில் எழுதி தந்து விட்டு நகர்ந்து இருந்தாள்.
[the_ad id=”6605″]
மாலை நான்கு மணியை தாண்டவும் பரிசை அறிவித்து ஒவ்வொருவருக்காக கொடுக்க ஆரம்பித்தனர்…கடைசியாக கவிதை போட்டிக்கு வந்த போது வின்னர் யார் என்பதை அறிவித்து வட்டு வெற்றி பெற்ற கவிதையை பிரபு வாசித்தான். கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு…முதல் பரிசு சக்தி என்று அறிவித்து விட்டு…
“நெருப்பில் பிறந்து
நெருப்பில் குளித்து
நெருப்பில் வாழும்
நெருப்பு பூக்கள்
தான் பெண்ணினம்…,
ஒவ்வொரு முறையும்
வலியில் இருந்து
மீண்டுவரும் போதெல்லாம்…
புணர் ஜென்மம்
கிடைக்கிறது.,
வலிகளை மட்டும் தாங்கி
வலிகளை மறைத்து
வாழக்கூடிய
பீனிக்ஸ் பறவைகள்
இந்த பெண்ணினம்…
போராடி போராடி
போர் களம்
பல கண்டாலும்…
என்றுமே புறமுதுகிட்டு
போனது கிடையாது.,
வார்த்தைகளால் வதைபட்ட போதும்
வாய் விட்டு சொன்னது
கிடையாது…
வலி தாங்கும் வலிமையை
கொண்டு பிறந்த
பெண்ணினம்…
நானும் அவ்வினம்….”
ரொம்ப டச்சிங்கான கவிதை இது…அடுத்தது டிஆர் ஸ்டெலில் ஒரு கவிதை…இதற்கு இரண்டாவது பரிசு மூன்றாவதாக ஒரு ஹெகூ கவிதை ரெண்டே வரியில் அழகாக சொல்லி இருக்கறாங்க…என்று கூறி முடித்தான்.
வின் பண்ணாதவர்களுக்கு என்று நினைவு பரிசு என சாக்லேட் பாக்ஸ் தந்து இனிதே முடிந்தது…அனைவருமே மகிழ்ச்சியோடு புறப்பட்டனர்.
அனைவருமே சென்றிருக்க கடைசியில் புறப்பட்டான் பிரபு…தனது வண்டியை எடுக்க பாக்கெட்டில் சாவிக்கு கையை விட அந்த பேப்பர் கையில் சிக்கியது.. அது சக்தி எழுதிய கவிதையின் வரிகள்… .எடுத்தவனுக்கு மனதில் தோன்றியது “இத்தனை வலிகள் நிறைந்த கவிதை….ஏன் சக்தி?
அந்த கேள்வியே மனதில் தங்கி நின்றது.”
தொடரும்.
(கவிதை கேட்டதும் எழுதிக் கொடுத்த ஆதிபிரபா அவர்களுக்கு மிக்க நன்றி )