என்னவள்_32
தாயாரின் அழைப்பை கேட்கவும் வேகமாக புறப்பட்டு வந்திருந்தான் கார்த்திக். காலையில் புறப்படும் போது அவளது பேச்சு ஞாபகம் வந்தது. ஒரு வேளை இவள் காலையில் பேசினதை வச்சிகிட்டு வம்பிழுக்கறாலோ என்று வேகமாக வீட்டிற்கு வந்தான்.
“காலையில்இருந்து சாப்பிடலைடா ..வயிற்றில் பிள்ளையை சுமக்கறா…எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியவில்லை. ஒவ்வொரு தடவையும் போய் கதவை தட்டியாச்சு..ஏன் இந்த பொண்ணு இப்படி பண்ணறான்னு தெரியலை…ஏண்டா கார்த்திக் நீ ஏதாவது சண்டை போட்டியா…”
“ம்மா…என்று ஆரம்பித்தவன் இருங்கள் முதலில் கேட்டுட்டு வரேன் என்று இரண்டு இரண்டு படிகளாக வேகமாக மாடிப்படி ஏறினான்.அங்கே மாயா பெட்ரூம்பில் கதவடைத்து படுத்திருந்தாள் ஹாலில் நின்றபடி வேகமாக கதவை தட்டினான். மாயா கதவை திற..என்னதான் உனக்கு பிரச்சினை. ஏன் இப்படி பண்ணற..
கதவை திற….வேகமாக கதவை தட்டினான். எதற்கும் பேசவில்லை பதிலும் சொல்லவில்லை. “
“மாயா இப்ப கதவை திறப்பாயா இல்லையா..”சற்று நேரம் பார்த்தவன் அவளது தந்தைக்கு அழைப்பு விடுத்திருந்தான்.”இங்கே கொஞ்சம் பிரச்சினை அங்கிள் ப்ளீஸ் கொஞ்சம் வீடு வரைக்கும் வாங்க…” இது வரைக்கும் அவரை அழைத்தது இல்லை. இப்போது தான் முதல் முறை…அதுவே அவனுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது. மாயாவின் பிடிவாதம் கொஞ்சம் தெரிந்ணே இருந்தது ஒரு வேளை தந்தையின் குரலுக்கு செவி சாய்ப்பாலோ என்ற சிறு நம்பிக்கை தான். அதுவும் கூட உறுதியாக தெரியவில்லை…இருந்தாலும் அழைத்து இருந்தான். மாமனார் என்ற உறவு தாண்டி சிறு வயதில் இருந்தே நல்ல நட்பும் மரியாதையும் இருந்தது. எளிதாக புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அழைத்து இருந்தான்.
சற்று நேரத்தில் எல்லாம் அவரோடு அவரது மனைவி இருவருமே வந்து இருந்தனர் . வந்தவரிடம் விவரம் சொல்லி மாடிக்கு அழைத்து வந்தான். சிறிது நேரத்தில் எல்லாம் மொத்தமாக மாடியில் குழுமி இருந்தனர் மொத்த குடும்ப உறுப்பினர்களும்…
மாயாவின் தந்தை தான் இப்போது அழைத்து கொண்டு இருந்தார். “மாயா..முதலில் கதவை திற…என்று வேகமாக தட்ட…அதற்கும் பதில் இல்லை மாயாவின் இடத்தில் …”
[the_ad id=”6605″]
பத்து நிமிடம் காக்க வைத்து கதவை திறந்தாள். “எதுக்காக இப்படி கதவை உடைக்கறிங்க…என்று எதுவும் நடக்காதது போல…”
“ஏன் காலையில் இருந்து சாப்பிடாமல் இருக்கற மாயா…முதலில் அதற்கு பதில் சொல்லு என்று மாயாவின் தந்தைதான் பேசினார்.”
“கொஞ்சம் யோசித்து பார்த்தேன் எனக்கு இங்கே இருக்க பிடிக்கலை ஏன் வெளிநாடுக்காரங்க மாதிரி இங்கே கல்யாணம் பண்ணி தனிக்குடித்தனம் வைக்கலைன்னு…எனக்கு இந்த ஜாயின்பேமிலி கல்ச்சர் சுத்தமாக பிடிக்கவில்லை. காலையில் கார்த்திக் கிட்ட ஜஸ்ட் கேட்டேன் அவன் பதில் சொல்லலை…எனக்கு இங்கே இப்படி இருக்க சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கு நான் தனியா இருக்கணும். அப்பா எப்படி யோசிச்சலும் என்னோட குடும்பம் அப்படி யோசிச்சா கார்த்திக் நான் இதை தவிர வேற எதுவுமே தோணமாட்டேங்குது. விருப்பம் இல்லாமல் ஏன் நான் இங்கே இருக்கணும் அது தான் இத்தனை நேரமாக யோசிச்சேன். முகம் அத்தனை
வாடி தெரிந்தது.”
“எங்களுக்கு தனி வீடு பார்த்து வச்சிடுங்கபா…”பேச்சு முடிந்தது என்பது போல அருகில் இருந்த ஷொபாவில் அமர்ந்து கொண்டாள் .
“ஸாரி மாயா இந்த ஜென்மத்தில் இது நடக்காது. நான் எப்போதும் அம்மா அப்பாவை விட்டுட்டு இருக்கணும்ன்னு யோசித்து பார்த்தது கூட கிடையாது. இது தான் காரணம்ன்னா இன்னும் எத்தனை நாள் வேணும்னாலும் நீ ரூம்பிலேயே இருக்கலாம் கார்த்திக் கோபமாக சொல்ல ..”
“தாராளமா கார்த்திக் ஆனால் நான் இன்னும் சாப்பிடலை நான் மட்டும் இல்லை வயிற்றில் வளர்ற உன்னோட குழந்தை கூடத்தான். இப்ப மட்டும் இல்லை எத்தனை நாள் ஆனாலும் சரி இனிமேல் சாப்பிடமாட்டேன். இது ப்ளாக்மெயில் இல்லை. இதுதான் என்னுடைய முடிவு…உங்களுக்கு வாரிசு வேணும்னா இதற்கு சம்மதித்து தான் ஆகணும். முடிவு எடுத்தா அதில் இருந்து மாற்றிக்கற பழக்கம் எனக்கு கிடையாது. “
“எப்படி மாயா இதுக்கெல்லாம் நான் சம்மதிப்பேன்னு நினைக்கறே…இதுக்கு வாய்ப்பே இல்லை. என்ன கோபப்பட்டு வைக்காதே…உன்னை மாதிரி தான் நானும் எனக்கும் மாற்றிக்கற பழக்கம் கிடையாது. இதுதான் என்னுடைய முடிவு…”
“மாயா இது தப்பு டா இங்கே உனக்கு ஒரு குடும்பம் கிடைச்சு இருக்கு அதை இழந்திடாதே குடும்பம்ங்கறது தேன்கூடு மாதிரி ஒருநிமிடத்தில் அதை கல் எறிந்துகலைச்சிடாதே…..மாயாவின் தந்தை தான் பொருமையாக அவளுக்கு புரிவது போல சொல்ல…”
“ஸாரி பா இது தான் என்னோட முடிவு இதில் மாற்று கருத்து எதுவுமே கிடையாது. அதென்ன இவன் ஏழு மணிக்கு வீட்டிற்கு வருவான்…பிசினஸ் பேச அப்பா வேணும் விளைமாட தங்கச்சி வேணும்…சாப்பாடு போட அம்மா வேணும்…அது பரபரவாயில்லை நான் சாப்பாடு போட்டு கொடுத்தது இல்லை தான். அப்புறம் நான் எதுக்காக இங்கே இருக்கிறேன். இவனுக்கு தோணும் போது கூட படுக்கவா…”இதை கோபமாக மாயா சொல்ல…”மாயா “என்ற சத்தம் ஒரே நேரத்தில் கார்த்திக் வாயில் மட்டும் அல்ல…மாயாவின் தந்தையும் சத்தமாக கத்தி இருந்தார்.
அந்த சத்தமே தன்னுடைய தப்பு தெரிந்தாலும் …அதை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் சுற்றி நின்றவர்களை பார்த்தபடி வேகமாக மறுபடியும் பெட்ரூம்பிற்கு சென்று கதவடைத்தாள்.
“அங்கிள் ஸாரி அங்கிள் நீங்க கிளம்புங்க…நான் பார்த்துக்கறேன் “என்று சொல்ல…மாயாவின் தந்தை முதன்முதலாக தன் மேலேயே வருத்தம் வந்து இருந்தது. ஸாரி கார்த்திக் இதை நான் எதிர் பார்க்கவில்லை. அவள் பேசுவாதான் ஆனால் இந்த அளவுக்கு பேசுவான்னு எதிர் பார்க்கவில்லை. இத்தனை வருஷ நட்பு இவளால் போயிடுமோன்னு பயமாக இருக்கு என்றபடி அவரது மனைவியிடம் திரும்பி புறப்படலாம் வா…என்றபடி புறப்பட்டு சென்று இருந்தார்.
பிருந்தாவும் அருகில் நின்றிருக்க… அவளுக்கும் அத்தனை அழுகை “அண்ணா இனி உங்கள் கிட்ட பேச எல்லாம் மாட்டேன் அண்ணிகிட்ட சொல்லுங்க எதுவுமே கேட்க மாட்டேன் இங்கே இருந்து போயிடாதேண்ணா என்று தேம்பிதேம்பி அழுதாள்”. அவளை தன்னுடைய தோளில் சாய்த்தபடி
மெதுவாக தட்டிக்கொடுத்தவன்” அப்படி எல்லாம் போக மாட்டேன் அவள் ஏதோ தெரியாமல் பேசிட்டா நீ அழாதே பிருந்தா போ போய் தூங்கு..”.என்று அனுப்பி வைக்க…லட்சுமியும் கண்களை துடைத்தபடி கீழே போனார்.
கார்த்திக்கின் தந்தை இரண்டு நிமிடம் நின்றவர் “கார்த்திக் கீழே வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றபடி வெளியேறினார்.
[the_ad id=”6605″]
அவர்கள் அத்தனை பேர் போனபிறகும் எதுவும் செய்ய தோண்றாமல் அங்கேயே அமர்ந்து இருந்தாள் பூட்டி இருந்த கதவை பார்த்தபடி.கார்த்திக் அரைமணி நேரம் இருந்தவன் கீழே வர அங்கே ஷோபாவில் இவனது தந்தை இவனுக்காக காத்து இருந்தார்.
“நான் அம்மா கிட்ட பேசிவிட்டேன் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து யோசித்து தான் இந்த முடிவு செய்து இருக்கறோம் மாயா ஆசைப்பட்டது போல தனிக்குடித்தனம் போயிக்கோ…நமக்கு நம்ம வீட்டு வாரிசு வேணும் அதுக்கு எதுவும் ஆகக்கூடாது. இவள் அந்த குழந்தையை கஷ்டப்படுத்தறதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது. “
“அப்பா…அதுக்காக… என்னால முடியாது அவள் தேவை இல்லாமல் யோசிக்கறாப்பா…சொன்னால் புரிஞ்சிப்பா..”
“இல்லை டா…ஆரம்பம் முதலே அவள் அப்படிதான் இருக்கறா…இந்த காலத்து பொண்ணுங்க என்ன யோசிக்கறாங்கன்னு நமக்கு தான் புரியவில்லை. பழைய காலத்து பழக்கவழக்கம் இனி உதவாது. நானும் அம்மாவும் பேசி முடிவு பண்ணிட்டோம் அங்கே ஆபீஸ்சிற்கு மேல இருக்கற வீடு இப்போது காலியாகத்தான் இருக்கிறது அந்த வீட்டை உனக்காக ரெடி பண்ணறேன் இன்னும் ரெண்டுநாளில் அங்கே போயிடு… மாயாவையும் கூப்பிட்டுட்டு…இனி பேச எதுவும் இல்லை. இதுதான் கடைசி முடிவு…இங்கே இருந்து இந்த உறவை சிதைச்சுக்க வேண்டாம் கார்த்திக். தினமும் இங்கே வா…நானும் சரி அம்மாவும் சரி எதுவும் சொல்ல மாட்டோம். “
“அப்பா இதுதான் உங்கள் முடிவா…கார்த்திக் கேட்க…”
“வேற எந்த ஆப்சனும் இல்லை கார்த்திக். லட்சுமி இங்கே வா…இவனுக்கு புரியவை …என்று எழுந்து தனது மொபைலோடு நகர்ந்து சென்றார். எடுத்து முடிவை தனது நண்பனுக்கு சொல்லுவதற்காக…”
அடுத்த இரண்டு நாளில் ஆபீஸ்ச்சிற்கு மேல் இருந்தது வீட்டிற்கு குடியேறி இருந்தனர் இரண்டு பேரும் கூடவே இங்கே சமைக்கும் சமையற்கார அம்மாவையும் அங்கே அனுப்பி வைத்தனர். வழக்கம் போல காலை எட்டு மணிக்கு சமைக்க வந்து விட்டு மாலை ஆறுமணிக்கு புறப்பட்டு விடுவதாக ஏற்பாடு…
அதுவும் கூட மாயாவிற்கு சமைக்க தெரியாது என்ற காரணத்தால் இதில் மாயா எதுவும் தலையிடவில்லை. அவளுக்கு தான் சமைக்க தெரியாதே…இரண்டு பேரும் சாப்பிடவேண்டுமே அதனால்…மகிழ்ச்சியுடனேயே இரண்டு பேரையும் அனுப்பி வைத்தனர் மனதில் வருத்தம் இருந்தாலும்…கார்த்திக் அங்கே சென்று ஒரு வாரம் முடிந்து இருந்தது. மாயாவிடம் சுத்தமாக பேச்சை நிறுத்தி இருந்தான். காலை புறப்பட்டால் இரவு வருவதை வழக்கத்தில் வைத்து இருந்தான்.
வழக்கம்போல இரவு ஏழுமணிக்கு தாயார் வீட்டுற்கு சென்றால் அங்கே தாயாருடனும் பிருந்தாவிடமும் பேசிவிட்டு எட்டு மணிக்கு இங்கே வருவது…இப்படி…சாப்பிட்டாலா இல்லையா என்பதை வேலை செய்பவரிடம் கூட இவன் கேட்பது இல்லை.
ஆனால் மாயா ஒரு வாரமாக இவனின் ஒதுக்கத்தை பார்த்தவள் கொஞ்சமும் யோசிக்காமல் லட்சுமியிடமே ஃபோன் செய்து இவனை பற்றி புகார் வாசித்து இருந்தாள்.
“அத்தை நான் என்ன அத்தை இவர்கிட்ட தப்பா கேட்டேன். தனியாக இருக்கணும்ன்னு கேட்டது தப்பா.. நான் கெட்ட பொண்ணு எல்லாம் கிடையாது அத்தை…ஒரு வாரம் ஆச்சு…மாதமா இருக்கறத பொண்ணு தானே நானும்… ஏதோ தனியா இருந்ணா நல்லா இருக்கும்ன்னு யோசிச்சேன் அது தப்பா…சரியா சாப்பிடறேனா இல்லையா எதுவும் கேட்கிறது இல்லை. இவர் இஷ்டத்துக்கு வர்றாரு இவர் இஷ்டத்துக்கு போகிறாரு…இதையே நான் செய்தா ஒத்துக்குவாரா…நான் ஒன்றும் உங்கள் கிட்ட சண்டை போடலைதானே.. நீங்கள் விருப்பப்ளட்டு தானே அனுப்பி வச்சிங்க ..நீங்களாவது அவர்கிட்ட பேசுங்கள் அத்தை…என்று ஃபோன் செய்ய… அவ்வளவு தான் லட்சுமி உருகியே விட்டார்.”
அன்று மாலையில் வீட்டுக்கு வந்தவனுக்கு நன்றாக டோஸ் விழுந்தது. என்ன கார்த்திக் தனியா
அனுப்பி வச்சது ரெண்டு பேரும் முகத்தை திருப்பிட்டு இருக்கவா…அவள்கிட்ட எப்பவும் போல இரு…நல்லா இருக்கணும்ன்னு தானே அனுப்பி வைத்தோம் என்று கூற…
“அம்மா அவள் நடிக்கறாமா அவளுக்கு காரியம் ஆகணும்னா எந்த அளவுக்கு வேணும்னாலும் போவார்….”
“கார்த்திக் அவள் உன்னோட மனைவி இப்படி பேசாத… இங்கே பேசற வாய்தான் எல்லா பக்கமும் வரும் யார் கிட்டேயும் அவளை விட்டு தரக்கூடாது. பிடிவாதமாக சொல்லி அனுப்பி இருக்க… இங்கே வீட்டுக்கு வந்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்து இருந்தது. “
“உள்ளே நுழையவுமே இவனது அருகில் வந்தவள் ஸாரி கார்த்திக் நான் பண்ணியது தப்பு தான். அதுக்காக இப்படி பேசாமல் இருக்காதே. .என்னால தாங்க முடியலை. .நேற்றிலிருந்து நிறைய வாந்தி வருது…இன்றைக்கு வாந்தி கூட ரத்தமும் சேர்ந்து வந்தது எனக்கு ரொம்ப பயமாக இருக்கு. ஒரு வேளை நான் சாகப்போறேனோ…நீயும் இப்படி செய்யாதே….இங்கே பாரு அப்பாவுக்கு கூப்பிட்டேன் ஃபோனை எடுக்கவே இல்லை கட் பண்ணி விடறாங்க என்னால தாங்கவே முடியலை….சொல்லியபடி அழுது இருந்தாள்.”
அவ்வளவுதான் கார்த்திக் மொத்தமாக அவளின் கண்ணீரில் உருகி இருந்தான்.”அழாதே மாயா ஏன் நீ முன்னமே சொல்லலை…ஸாரி மாயா வா இப்போதே ஹாஸ்ப்பிடலுக்கு போகலாம். “
“இல்லை கார்த்திக் நாளைக்கு போகலாம் ரொம்ப டயர்டாக இருக்கு…இப்போது எனக்கு தூக்கம்தான் வருது தூங்கலாம் கார்த்திக் என்று கூறிவிட்டு போய் படுத்து இருந்தாள்.”
அடுத்த நாளே அழைத்து சென்றிருந்தான் மருத்துவ மனைக்கு…குழந்தையை செக் செய்து விட்டு “என்ன கார்த்திக் ரொம்ப வீக்கா இருக்கறாங்க…மற்றபடி எதுவும் இல்லை. குழந்தை ரொம்ப நல்லா இருக்கு பயப்பட எதுவும் இல்லை என்று டாக்டர் சொல்ல.. “
“டாக்டர் இரத்தமாக வாந்தி எடுக்கறதா சொன்னா டாக்டர் அது எதனால… இது மாதிரி கேள்விப்பட்டதும் கூட இல்லை “.
“கார்த்திக் எல்லோருடைய உடம்பும் ஒரே மாதிரி கிடையாது சிலருக்கு வாந்தி இருக்கும் சிலருக்கு வாந்தி சுத்தமாக இருக்காது. மாயாவுக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு…அதிகமாக தொடர்ந்து வாந்தி எடுத்ததால் தொண்டை புண் ஆகி இருக்கும். அதுதான் இப்படி இருக்கு. வாந்தி வராமல் இருக்க மாத்திரை எழுதி இருக்கிறேன். பயப்படவேண்டாம் என்று அனுப்பி வைத்தார். “
நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தது. இப்போது ஏழுமாதம் முடிந்து இருந்தது. வளைகாப்பு செய்யலாம் என்று கேட்டு வந்த தந்தையிடம் பிடிவாதமாக மறுத்து விட்டாள் மாயா…”நான் கூப்பிடும் போது பேசலைதானே நான் அங்கே வீட்டுக்கு வரமாட்டேன் நான் இங்கேயே தான் இருப்பேன் கார்த்திக் என்ன நல்லா பார்த்துக்குவான் என ஒரே பேச்சில் முடித்து கொண்டாள். “
[the_ad id=”6605″]
இவள் பிடிவாதம் தெரிந்ததாலேயே கார்த்திக் வீட்டில் அவனது தாயார் வந்து இவளிடம் பேசி இருந்தார் “அப்பா செய்யாட்டி பரவாயில்லை மாயா…நான் செய்யறேன் வளைகாப்பு முடியவும் ஒரு நாள் அங்கே வந்து தங்கு மறுபடியும் இங்கே வந்திடுவியாம்…குழந்தைக்கு நல்லது மாயா..”.என்று கேட்க…” உங்கள் இஷ்டப்படி செய்யுங்க அத்தை என்று முடித்து கொண்டாள்.”
அது போலவே ஒரு நாள் வந்து அங்கே தங்கிவிட்டும் வந்து இருந்தாள். வளைகாப்புக்கு மாயாவின் தாயார் தந்தை இரண்டுபேருமே வந்து இருந்தனர். “ஏன் மாயா” என்று தந்தை கேட்க…”நான் தான் அங்கே வரமாட்டேன் சொன்னேன் உங்களை வரவேண்டாம்ன்னு சொல்லலையே வேணும்னா அம்மாவை இங்கே வரச்சொல்லுங்கள்பா என்று கூலாக சொல்லி விட்டு நகர்ந்தாள்.”
மாயாவின் தாயாருக்கு கோபம் வந்து இருந்தது. ” ஏண்டி நீ வரமாட்டே…ஆனால் நான் வரணும் அப்படித்தானே ஏதாவது சொல்லிடப்போறேன் மாயா…மாசமா இருக்கறயேன்னு பார்க்கறேன் பொண்ணுக்கு இத்தனை பிடிவாதம் நல்லதுக்கு இல்லை பார்த்துக்கோ…எத்தனை தூரம் தான் உன்விஷயத்தில் பொறுத்து போறது..”
இதற்கெல்லாம் பயந்தால் அது மாயா இல்லையே…இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கிறது கார்த்திக்கின் குடும்பம் மட்டும் அல்ல. மாயாவின் குடும்பமும் தான். மாயாவின் உச்சக்கட்ட பிடிவாதம் எங்கே இவர்களை நிறுத்தப்போகிறது என்பது அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.
தொடரும்