என்னவள்_42
விடியற்காலை வேளையில் சக்தியை அழைத்து கொண்டு திருமணத்திற்கு புறப்பட்டு இருந்தான் கார்த்திக். ரேஷ்மாவின் திருமணத்திற்கு… அவளுக்கும் அவ்வளவு சந்தோஷம் மகிழ்ச்சியாக புறப்பட்டுக்கொண்டு இருந்தாள்.
வேந்தனை ஹாஸ்ப்பிடலுக்கு அழைத்து சென்று விட்டு வந்த அன்று இரவு மறுபடியும் அழ ஆரம்பித்து இருந்தான் மறுபடியும் ஹாஸ்ப்பிடல் டாக்டருக்கு ஃபோன் செய்து பேசியபிறகு மறுபடியும் மருந்து கொடுக்க இரவு இரண்டு மணிக்கு மேல் ஆகி இருந்தது. கடைசியில் வேந்தனை அழைத்து கொண்டு தங்களது அறைக்குள் வந்திருந்தாள் சக்தி. அருகில் படுக்க வைத்து தட்டிக்கொடுக்க அதன் பிறகே தூங்கினான். ஆக இந்த பரபரப்பில் இருவருக்கும் தோன்றி இருந்த உணர்வு கூட எங்கோ ஓடி ஓழிந்து இருந்தது. பொங்கிய பாலில் நீர் தெளிந்து அமிழ்ந்தது போல…வேந்தன் மட்டுமே மொத்த பேரின் கவனத்தில் இருந்தான்.பழைய நிலைக்கு வர நான்கு நாட்கள் முடிந்து இருந்தது.
இதோ அவளோடு புறப்பட்டு இருந்தான் கார்த்திக் ரேஷ்மாவின் திருமணத்திற்கு என…இதற்கும் போக வேண்டும் என்று என்ற கேள்வியும் கேட்கவில்லை. வழக்கம்போல அவன் வேலை செய்யும் டேபிளில் முன்பு பத்திரிக்கையை எடுத்து மட்டுமே வைத்து இருந்தாள்..பார்த்து விட்டு புறப்படு என்று இவளை அழைத்து கொண்டு வந்து இருந்தான்…பட்டு சேலை சரசரக்க அழகு பதுமையாக அருகில் அமர்ந்து இருக்க… அவளுக்கே உரிதான இதமான நறுமணம் அவனை ஆட்கொள்ள நிறைய தடுமாற்றம் அவனுக்குள்…அவ்வப்போது அணிந்திருந்த உடை அவனை தீண்டிச்செல்ல வேறு உலகத்திற்கு அடிக்கடி சென்று வந்தான்.
அங்கே இவர்கள் செல்லவும் முதலில் பெண்ணில் அறைக்குள் சென்று ரேஷ்மாவை பார்த்து விட்டு இவனுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். மூகூர்த்தத்திற்கு நிறைய நேரம் இருந்தது. “இன்னும் நிறைய நேரம் இருக்குங்க கொஞ்சம் நேரம் கழித்தே புறப்பட்டு வந்து இருக்கலாம்” என இவள் பேச ஆரம்பிக்க….இவளை தொடர்ந்து கார்த்திக்…” சக்தி இதுமாதிரி ஒரு கல்யாணம் பண்ணனும்ன்னு ஆசைபட்டாயா சக்தி.இந்த மாதிரி மண்டபம் பிடிச்சி கிராண்டா…ஏன்னா நம்பலோட கல்யாணம் அது மாதிரி கல்யாணம் கிடையாது. எதிர்பாராத கல்யாணம் நம்மோடது…உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்ன்னு யோசிச்சது கூட கிடையாது. எதிர் பாராமல் நடந்தது.”
இவன் இப்படி கேட்கவும் இவன் புறம் திரும்பியவள் “கார்த்திக் கல்யாணம் எப்படி நடந்தா என்ன கல்யாணத்துக்கு பிறகு எப்படி வாழறோம்ங்கறது தானே முக்கியம்…அப்படி பார்க்க போனா நாம நல்லாதானே இருக்கிறோம்.நிறைய நிம்மதி உங்களை கல்யாணம் பண்ணின பிறகு எனக்கு கிடைச்சு இருக்கு. பயம் இல்லை நிறைய பேசறேன் நிறைய சிரிக்கறேன். எனக்கு உங்கள் குடும்பத்தில் இருக்கறவங்களை எல்லோரையும் ரொம்ப பிடிச்சு இருக்கு கார்த்திக். “
“தேங்க்ஸ் சக்தி இதை கேட்க எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கு. எப்படி சக்தி என்னால இன்னமும் நம்ப முடியவில்லை இந்த மாதிரி ஒரு குணத்தோட … பொண்ணுங்க ரொம்ப அபூர்வம் சக்தி…சக்தி என்ன உனக்கு பிடிக்கும் தானே…இயல்பாக வருமே அடிக்கடி இது போன்ற கேள்வி…கொஞ்சம் பைத்தியகாரதனமானதும் கூட…பிடிக்காது என்று சொல்லி விடாதே என்ற யாசிப்பும் அந்த கேள்வியில் இருந்தது. “
“இதென்ன கேள்வி கார்த்திக் உங்களை வச்சி தானே இந்த உறவே கிடைச்சு இருக்கு அப்படி இருக்கும் போது எப்படி உங்களை பிடிக்காமல் போகும்…அதுவும் அன்றைக்கு…சொல்ல தொடங்கியவள் முகம் சிவக்க பேச்சு திசை மாறுவதை புரிந்து கொண்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.”
சற்று நேரம் அமைதியாக அமர்ந்து இருக்க எந்த கேள்வியும் அவளிடம் கேட்காமல் அவளது அவளது கையை எடுத்து தனது கைக்குள் வைத்து கொண்டான். ஏதோ ஒரு விதமான நெருக்கம் மனதிற்குள் நிறைவான ஒரு மனநிலை…அமைதியாக அமர்ந்து இருக்க…கண்கள் சுற்றிலும் வேடிக்கை பார்த்தது . நிறைய மனிதர்கள் சுற்றிலும்.. அழகான உடையோடு நிறைய அலங்காரத்தோடு என…”எனக்கு இந்த கூட்டத்தை எல்லாம் வேடிக்கை பார்க்க பிடிக்கும் கார்த்திக் என்று சொல்ல…”
“அப்படியானால் நான் சரியில்லை சக்தி எனக்கு இந்த கூட்டம் எப்பவும் அலர்ஜி பெரும்பாலும் வர்றது இல்லை. “
“அப்புறம் இன்றைக்கு எப்படி? கேள்வியை ஆர்வமாக கேட்க…”
“பத்திரிகை கொண்டு வந்த அன்றைக்கு அத்தனை சந்தோஷம் உன் முகத்தில் தெரிஞ்சுது. நீயும் இங்கே வந்து இத்தனை நாளில் எங்கேயும் போகணும்ன்னு கேட்டது இல்லை. இன்றைக்கு கூட கல்யாணத்துக்கு போகணும்ன்னு நீ கேட்க கூட இல்லை. அதுதான் நானே அழைச்சிட்டு வந்தாச்சு..”
“எங்க போக கார்த்திக் அதிகமாக சுற்றினது எல்லாம் இல்லை. இங்கே வந்த பிறகு நிறைய மாறி இருக்கறேனே பிருந்தா கூட அடிக்கடி வெளியே போறேன்.அப்புறம் நீங்க உங்க கூட கூட இப்ப எல்லாம் வெளியே போகிறோமே…..எங்க வீட்டில் பிடிவாதம் பிடிக்கிற பழக்கம் எப்பவும் கிடையாது. வேணும் வேண்டாம் அப்படிங்கற சண்டை எல்லாம் வந்தது இல்லை. கேட்பேன்… வேண்டாமா… சரி…அவ்வளவுதான் இத்தனை நாள் இப்படித்தான். ஆனால் தபபுன்னு தோணினா இது சரியில்லைன்னு சொல்லுவேன்.”
“சின்ன சின்ன பிடிவாதம் அவசியம் சக்தி அது கூட வாழ்க்கையில் ஒரு பகுதி தானே…அதுவே அதிகம் ஆனால் பிரச்சினை தான். “
“ஆக…பின்னாடி உங்கள் கிட்ட அடம் பிடிக்கலாம் அப்படி தானே…”
“அவசியமானதிற்கு மட்டும்…சொல்லி சிரிக்க…அந்த சிரிப்பு மனதில் ஆழமாக பதிந்தது சக்திக்கு…அவனது முகத்தை விடாமல் பார்த்து கொண்டு இருக்க…ஹாய் சக்தி என்ற அழைப்பு இவளை களைத்தது. திருமணத்திற்கு தனது தாயாரையும் அழைத்தபடி வந்திருந்தான் பிரபு.”
“ஸார் வாங்க என்று அழைத்தபடி எழுந்து நிற்க…அவனது தாயார் இவளது கையை எடுத்து தனது கைக்குள் வைத்தபடி பேச ஆரம்பித்து இருந்தார்.எப்படி இருக்கற சக்தி உன்னோட கல்யாணத்துக்கு சொல்லவே இல்லை என்ற குறையோடு…”
“அவசரமா பிக்ஸ் ஆகிடுச்சு அதுதான் யாருக்கும் சொல்ல முடியவில்லை இவர் தான் என்னுடைய கணவர் என இவனை அறிமுகம் செய்து வைக்க…
நல்லா இரும்மா என வாழ்த்தி விட்டு புறப்பட்டார் ரேஷ்மாவை பார்க்க…”
அங்கே திருமணம் முடிந்து மணமக்களை வாழ்த்திக்கொண்டு இருந்தனர் .”நாமலும் புறப்படலாமா கார்த்திக். ஃகிப்ட்ட ரேஷ்மாகிட்ட கொடுத்துவிட்டு கிளம்பலாம்… நேரம் ஆச்சுதே நீங்கள் ஏதோ வேலை இருக்கிறதா நேற்று ஃபோனில் பேசிட்டு இருந்திங்கதானே…”
“சக்தி மறந்தே போச்சு உன்கூட இருந்தா எல்லாத்தையும் மறக்கறேன் வா போகலாம் என்று எழுப்பி விட…சிரித்தபடி ரேஷ்மாவை பார்க்க புறப்பட்டாள்.”
இருவரும் மேடை ஏற சற்று நேரம் ரேஷ்மாவிடம் பேசி விட்டு புறப்பட்டனர் இரண்டு பேரும்…அதற்குள் இவனுக்கு ஃபோனில் அழைப்பு வந்து இருந்தது. இதோ இன்னும் இருபது நிமிடத்தில் அங்கே இருப்பேன் என்று வாக்குறுதி தந்தபடி” சக்தி…ஞாபகப்படுத்தினது தான் படுத்தின கொஞ்சம் முன்னாடி சொல்லி இருக்கலாம்ல்ல…இப்ப பாரு அவசரமாக கூப்பிடறாங்க…”
“அதுக்காக வேகமாக எல்லாம் வண்டி ஓட்ட கூடாது பொறுமையாக போங்க” என்று மட்டுமே சொன்னாள். வீட்டின் வாசலுக்கு வரவும்” சரி புறப்படறேனு சக்தி அம்மாகிட்ட சொல்லிடு நேரம் ஆச்சு மதியம் நேரம் இருந்தா சாப்பிட வருவேன் இல்லாட்டி முடியாது என்று சொன்ன படி தலையாட்டி விட்டு புறப்பட்டான்.”
உள்ளே வந்தவள் லட்சுமியிடம் “போயிட்டு வந்தாச்சு அத்தை அவர் அப்படியே புறப்பட்டுட்டாங்க என்று தகவல் சொல்லிட்டு உடைமாற்ற என தங்களது ஃரூம்பிற்கு சென்று இருந்தாள். “
கீழே பிருந்தா அன்றைக்கு காலேஜ் வந்து விடுமுறை எடுத்து இருக்க…அவளுக்கு விடாமல் தொடர்ந்து தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து வர அட்டென் செய்து பேசினாள் பிருந்தா.
“யாருங்க நீங்க தொடர்ந்து ரீங் விட்டுட்டே இருக்கறிங்க உங்களுக்கு என்ன வேணும் என்று சற்று கோபமாக கேட்க…”
“என்ன பிருந்தா நம்பரை பிளாக் பண்ணிட்டா ஃபோன் பண்ண மாட்டேன்னு நினைச்சியா அப்படி எல்லாம் அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுடமாட்டேன்.”
“யார் நீ …”
“தெரியாத மாதிரி கேட்கற…நான் தான். பரணி உன்னோட டிக்டாக் ஃப்ரெண்ட்..”
“உங்களுக்கு என்னங்கணா வேணும் நான் தான் சரி வராதுன்னு அன்றைக்கே சொல்லிட்டனே திரும்ப கூப்பிட்டா என்ன அர்த்தம்…இனி ஃபோன் எதுவும் பண்ணாதிங்க… உங்கள் கிட்ட சாட்டிங் வந்தது என்னுடைய தப்பு தான் கோபமாக பேச…”
” இவ்வளவு கோபம் வரக்கூடாதுமா அது ரொம்ப தப்பு நீ என்ன பண்ணற…நேரா பஸ் ஏறி நான் சொல்லற இடத்திற்கு வர்ற…வரமாட்டேன் போகமாட்டேன் இந்த பேச்சு இங்கே ஆகாது…எங்கே…ம்…பஸ் பிடித்து உக்கடம் பஸ் ஸ்டாப்பிற்கு வா…”
“லூசா நீ நான் எதுக்காக நீ சொல்லற
இடத்திற்கு வரணும் அதுக்கு வேற ஆளைப்பாரு போனை வைடா நானும் போனா போகிறதுன்னு மரியாதையா பேசினா ஓவரா போற..இனி ஃபோன் பண்ணாத தேவை இல்லாமல் ஃபோன் பண்ணின நான் சும்மா இருக்க மாட்டேன். “
“என்னமா செய்வ…என்ன செய்வ சொல்லு கேட்டு தெரிஞ்சுக்கறேன்…சொல்லு பயமாக இருக்காண்ணு பார்க்கலாம்.. பயம் உனக்கு தான் வரணும் எனக்கு இல்லை. “
“இதப்பாரு உன்கிட்ட பேசிட்டு இருக்க எனக்கு எதுவும் இல்லை இனி இப்படி ஃபோன் பண்ணாத…எத்தனை முறை சொல்ல…நீயெல்லாம் எப்படிபட்டவன்னு தெரியாமல் பேசினது என்னுடைய தப்பு தான். “
“ஏய்…என்ன ஓவரா பேசற பிருந்தா உனக்கு வேற சான்ஸோ சாய்ஸோ கிடையாது வான்னா வந்து தான் ஆகணும் அதுதான் உன்னோட தலையெழுத்து இனி. உன்னை வச்சி எத்தனை திட்டம் போட்டு வச்சி இருக்கிறேன் அதற்கு இப்படி எல்லாம் நீ பேசவே கூடாது.”
“என்ன உளர்ற…பிருந்தா கோபமாக கேட்க…”
“உளரலா உண்மை பிருந்தா உனக்கு வேற வழியை கிடையாது. நான் சொன்னது மாதிரி கேட்கலை விளைவு வேற மாதிரி இருக்கும் என்ன பார்க்கற சும்மா உதாருக்கு பேசறான்னு பார்க்கறையா கிடையாது சின்ன சேம்பிள் காட்டவா இப்ப உன்னோட இன்பாக்சுக்கு ஒரு ஃபோட்டோ வரும் அதை பார்த்துவிட்டு வந்து மறுபடியும் பேசலாம் இப்ப கட் பண்ணறேன்…ஒகே என்றபடி அந்த பரணி போனை கட் செய்து இருந்தான்.”
என்ன ஃபோட்டோ ஏன் அனுப்பறான் நான் ஏன் அதை பார்க்கணும். ஒன்றும் புரியவில்லை பிருந்தாவிற்கு சற்று நேரம் தலையில் கைவைத்து அமர்ந்து இருக்க…மெசேஜ் வந்ததிற்காக பிப் சத்தம் காதில் விழுந்தது. ஒபன் செய்து பார்க்க அப்படியே திகைத்தபடி அமர்ந்து விட்டாள்.அனுப்பி இருந்தது அந்த மாதிரி அரைகுறை உடையோடு அவளுடைய புகைப்படம் பார்க்கவே முடியாத அளவிற்கு…கண்களில் தரதரவென கண்ணீர் வழிய திகைத்தபடி அமர்ந்து இருந்தாள்.
நிமிட நேரத்தில் மறுபடியும் ஃபோன் அடித்தது. ஃபோனையே வெறித்தபடி அமர்ந்து இருந்தவள் ஆன் செய்ய…”என்ன ஃபோனை அட்டென் பண்ண இத்தனை நேரமா…இப்ப சொல்லு நான் சொல்லறதை நீ ஏன் கேட்க கூடாது. “
“அந்த மாதிரி ஃபோட்டோ நான் எடுத்தது எல்லாம் இல்லை நீ என்னவோ செஞ்சி இருக்கற…அது நான் இல்லை. “
“அது எனக்கும் தெரியுமே பிருந்தா. இப்ப பிரச்சினை அது இல்லையே…இதை நான் என்னுடைய ஃபேஜ்ல போட்டு விட்டால் என்ன நடக்கும் தெரியுமா…உன்னோட அப்பா அம்மா ரொம்ப சந்தோஷபடுவாங்க அப்படிதானே பிருந்தா. “
“இத பாரு அதமாதிரி எதுவும் செஞ்சிடாதே…அவங்க உயிரோடவே இருக்க மாட்டாங்க…வேகமாக கண்ணீரோடு பதில் சொல்ல…”
“குட் வெரி குட் இதுதானே எனக்கு வேணும்…இப்ப சொல்லு பிருந்தா கூப்பிடற இடத்திற்கு வருவேதானே…”
“முடியாது நான் எங்கேயும் வரமாட்டேன் அதுக்கு வேற ஆளைப்பாரு…என்றபடி ஃபோனை கட் செய்தாள்”..அழுகை அதிகமாக வந்து இருந்தது பிருந்தாவிற்கு இது எதிர் பாராதது இப்படி கூட மனிதர்கள் நடந்து கொள்வார்கள் என்பதை இப்போது தான் முதலில் கேள்விப்படுகிறாள்..என்ன செய்ய எப்படி வெளியே வருவது எதுவும் தெரியவில்லை. கார்த்திக் அண்ணாவிடம் சொல்லலாம் என்றால் இந்த ஃபோட்டோவை எப்படி காட்ட முடியும். அழுகை கண்களில் வழிய…செய்வது அறியாமல் அமர்ந்து இருந்தாள் பிருந்தா.
வழக்கம்போல உடை மாற்றி விட்டு கீழே வந்தவள் சமையல் அறைக்குள் சென்று ஃகாபி வைத்தபடி அங்கே சமையல் வேலையை கவனித்து கொண்டு இருந்த லட்சுமியிடம்” அத்தை உங்களுக்கும் சேர்த்து ஃகாபி வைக்கவா என்று கேட்க…”
“வேண்டாம் சக்தி பிருந்தாவுக்கு எடுத்துட்டு போ அவள் இந்த நேரத்தில் குடிப்பா என்று சொல்ல…”
“சரி அத்தை” என்றபடி இரண்டு டம்ளரில் எடுத்துக்கொண்டு “பிருந்தா கூட குடிச்சிக்கறேன் அத்தை” என்றபடி டம்ளரோடு பிருந்தா அறைக்கு சென்றாள்.
அங்கே இவள் சென்றபோது பார்த்தது அழுது கொண்டு இருந்த பிருந்தாவை…”பிருந்தா ஏன் அழற என்ன ஆச்சு என்று கேட்க…”வேகமாக கண்களை துடைத்தவள் “இல்லை அண்ணி ஒன்றும் இல்லை கண்ல தூசி விழுந்திடுச்சு என்றபடி திரும்பி நின்று கொண்டாள்.”
“சரி…இந்தா ஃகாபி இதை குடி…”என்றபடி அங்கிருந்த சேரில் அமர…
“அண்ணி நான் குடிச்சிக்கறேன் நீங்கள் புறப்படுங்க” என்று சொல்ல…”பிருந்தா நீ ஒகேதானே ஏன் இப்படி வித்தியாசமாக நடந்துக்கற… உன்கூட சேர்ந்து ஃகாபி குடிக்க எடுத்துவிட்டு வந்து இருக்கிறேன் நீ என்ன போன்னு சொல்லற…”
“இல்லை அண்ணி அப்படி இல்லை உட்காருங்கள்..”.என்றபடி அமைதியாக டம்ளரை எடுத்தபடி அமர…மறுபடியும் பிருந்தாவின் ஃபோன் அடித்தது. ஒரு நிமிடம் பயம் முகம் முழுக்க தெரிய அதிர்ச்சியோடு ஃபோனை பார்த்தாள்..
தொடரும்.