என்னவள்_43
அதிர்ச்சியோடு ஃபோனை பார்க்க அவளது முகத்திலேயே கவனம் வைத்திருந்த சக்தி “என்ன பிருந்தா ஏன் இப்படி பயந்தமாதிரி பார்க்கற என்ன ஆச்சு…”
“இல்லை அண்ணி ஒன்றும் இல்லை ஃகாபி குடிங்க”என்று சொல்லியபோதே மறுபடியும் ஃபோன் அடிக்க ஆரம்பித்தது.
“யார்ன்னு பாரு எடுத்து பேசு பிருந்தா ஏதாவது முக்கியமான ஃபோனா இருக்க போகுது. ஏன் இப்படி ஃபோனை பார்க்கற…”
“இல்லை அண்ணி அப்புறம் பேசறேன் என்று சொல்ல மறுபடியும் அழைப்பு விடாமல் வந்து கொண்டு இருந்தது. எடுத்து பேசு பிருந்தா ஃபோனையே பார்த்தா எப்படி அதுவே அட்டென் ஆகி பேசுமா என்ன? என கேட்டபடி ஃபோனை எடுத்து நீட்ட..”
இப்போதும் ஃபோனை வாங்காமல் பார்த்து கொண்டு இருக்க…”சக்தியின் கையில் இருக்கும் போதே அடுத்த அழைப்பு வந்தது. சக்தி அட்டென் செய்து இருந்தாள்.”
“என்ன ஃபோன் பண்ணினா எடுக்கமாட்டியா உனக்கு அவ்வளவு திமிரா…என்ற கேள்வி இவளது காதிற்கு கேட்க நெற்றியை சுருக்கியபடி
பிருந்தாவை நோக்கினாள்.”
“வேண்டாம் அண்ணி ஃபோனை கட் பண்ணுங்கள் அது ராங்க் நம்பர் பேச எல்லாம் வேண்டாம் என்று சொல்லியபோதே மறுபடியும் பேசி இருந்தான்.”
“என்ன பிருந்தா நீ சரிபட்டு வரமாட்டே..நான் ஃபோட்டோவை அப்லோட் பண்ணினா பயம் வருமா என்ற கேள்வி இவளது காதிற்கு மெதுவாக கேட்க…சட்டென ஃபோனை கட் செய்தவள் இங்கே என்ன நடக்குது பிருந்தா இவனோட பேச்சு சரியில்லையே…முதல்ல வாயை திறந்து பதில் சொல்லு யார் இவன் ஏன் மிரட்டறமாதிரி பேசறான்.இவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் அதுக்கு முதல்ல பதில் சொல்லு…”
“அண்ணி அது வந்து…கண்களில் நீர் வழிய நடந்ததை சொன்னவள் இவளுக்கு வந்திருந்த ஃபோட்டோவை காட்ட…”
“எப்படி பிருந்தா எப்படி முகம் தெரியாதவனுக்கு ஃபோட்டோ வரைக்கும் அனுப்பி இருக்கற…எந்த நம்பிக்கையில் இப்படி பண்ணின…இப்போது இது மாதிரி எத்தனை பிரச்சினை நடக்கிறது தெரியுமா நீயூஸ் எல்லாம் நீ பார்க்கிறது இல்லையா…இல்லை காலேஜில் இதை பற்றி ஃப்ரெண்டுங்ககிட்ட பேசறது இல்லையா…ஏன் பிருந்தா யோசிக்கவே மாட்டியா…எப்படி இப்படி மாட்டின்…அவனை நேரில் பார்த்து இருக்கிறாயா…”
“இல்லை அண்ணி டிக்டாக்ல தெரியும் ஓரு நாள் அவன்தான் ஷாட்டிங் வந்தான் அப்படிதான் பழக்கம் அவனோட மேனரீசம் அப்படியே கார்த்திக் அண்ணாவோடது மாதிரியே இருக்கும் அதனால பேச ஆரம்பிச்சேன் இப்படின்னு தெரியாது. கண்களில் மறுபடியும் கண்ணீர் வழிய ஆரம்பித்து இருந்தது. “
“உன்னோட அண்ணாவும் மற்றவனும் ஒன்னா பிருந்தா இப்படியா சிக்கல்ல மாட்டிக்குவ ..”
“எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியவில்லை அண்ணி ஏதாவதுன்னா நான் உயியோடவே இருக்கமாட்டேன். இது…இந்த மாதிரி நான் எப்படி? அழுதபடியே கேட்க…”
“பைத்தியமா பிருந்தா பெரிய வார்த்தை எல்லாம் பேசற…பிருந்தா உன்னை எனக்கு தெரியும். நீ மட்டும் இல்லை எந்த நல்ல பொண்ணும் இப்படி எல்லாம் ஃபோட்டோ எடுக்க மாட்டா நீ அழாதே…”
“அண்ணா தெரிஞ்சா…அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா எனக்கு பயமாக இருக்கிறது அண்ணி..”
“யாருக்கும் தெரியவேண்டாம் இரு என்னன்னு பார்க்கலாம் என்று சொல்லும் போதே மறுபடியும் ஃபோன் வர…இப்போது சக்தி அட்டென் செய்தாள்.”
“என்ன வேணும் உனக்கு எதுக்காக இப்படி மிரட்டிவிட்டு இருக்கற கோபமாக கேட்க..”
“நீ யாருமா குரல் புதுசா இருக்கு அவளுக்கு நீ வாய்ஸ் கொடுக்கறையா…”
“டேய் உனக்கு அது தேவை இல்லையாதது நீ எதுக்காக எங்க வீட்டில் பொண்ண மிரட்டற..”
“ஒ…நீ அவளோட அண்ணி தானே நிறைய சொல்லி இருக்கறா உன்னை பற்றியும்…வாய்ஸ் அவளோடது விடவும் உன்னது நல்லாவே இருக்கு…”
“தேவை இல்லாதது பேசாதே… சுற்றி வளைத்து ஏன் பேசறேன்… உனக்கு என்ன வேணும்”.
“தி கிரேட் பிசினஸ்மேன் கார்த்திக்கோட ஓய்ப் இல்லையா அதுதான் கரெக்டா பிசினஸ் பேசற ..பெருசா என்ன கேட்டுட போறேன் பணம் தான் வேற என்ன? பொண்ணுங்க விஷயத்தில் கொஞ்சம் நான் சரி கிடையாது தான் ஆனாலும் இந்த பிருந்தா மேல வேற எதுவும் தோணலை…அது ஆரம்பத்தில் இருந்தே அண்ணா அண்ணான்னு கூப்பிட்டதாலா கூட இருக்கலாம் அதனால எனக்கு தேவை பணம்…
மூன்றெழுத்து பணம்…”
“தரலைன்னா…சக்தி கேட்க…”
“அந்த பொண்ணுக்கு அனுப்பின ஃபோட்டோ பார்த்ததானே அது சாம்பில் தான் இன்னும் நிறைய அதை விடவும் மோசமா நிறைய இருக்கு…டிரெஸ்சே இல்லாமல் கூட இருக்கு அனுப்பவா…இல்லை அப்லோட் பண்ணவா…”
“வேண்டாம் அப்படி எதுவும் செஞ்சிடாதே…பணம் எவ்வளவு வேணும்… எவ்வளவு எதிர் பார்க்கற…அதை சொல்லு இது அவள் ஃபோட்டோ கிடையாது அது எனக்கு தெரியும் ஆனால் இது வெளியே தெரிஞ்சா…அவ வாழ வேண்டிய பொண்ணு சக்தி வேகமாக பேசி முடிக்க…”
“கரெக்ட் பெருசா எதுவும் கேட்கலை ஒரு முப்பது லட்சம்…அப்புறம் இந்த விஷயம் யாருக்கும் தெரியவில்லை கூடாது. முக்கியமா இங்கே பேசிட்டு போலீஸ்க்கு போகலாம்ன்னு முடிவு பண்ணினா என்னோட இன்னோரு முகத்தை பார்க்க வேண்டியது வரும்…வேற யாருக்காவது தெரிஞ்சாலும் இதே தான்… என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது விளைவு விபரீதமாக இருக்கும். அப்புறம் பணம் நாளைக்கே வேணும்…”
“இல்லை வேற யாருக்கும் சொல்ல மாட்டேன். பணம்…இவ்வளவு பணம் கையில் இல்லை ரெண்டு நாள் டைம் வேணும் .”
“என்ன ரெண்டு நாளில் ஏதாவது ப்ளான் பண்ண டிரை பண்ணறதுக்கா…முடியாது நாளைக்கே வேணும்.”
“நீ என்ன லூசா அத்தனை பணம் கையிலா இருக்கும் பேங்க்கில் இருந்து எடுத்தா கூட வீட்டுக்கு கூப்பிட்டு சொல்லிடுவாங்க…வேற ஏதாவது தான் ஏற்பாடு செய்யணும். யாருக்கும் தெரியாமல் ஜூவல்ஸ் எதையாவது விற்று…புரியுதா…ஆனால் நாங்கள் பணம் தந்த பிறகு நீ ஏமாற்ற மாட்டே அப்படிங்கறது என்ன நிச்சயம்…”
“இல்லை பரணி வாக்கு சுத்தமானவன் நீ என்ன ஏமாற்றாத வரைக்கும் நானும் உனக்கு பிரச்சினை பண்ண மாட்டேன். நீ பணத்தை கொடுத்த நொடி இருக்கற ஃபோட்டோஸை அழிச்சிடுவேன் நீ என்ன நம்பலாம் .”
“ஒகே நான் நம்பறேன் இனி தேவை இல்லாமல் பிருந்தாவை தொந்தரவு பண்ணக்கூடாது இனி பேச்சு வார்த்தை எல்லாம் உனக்கும் எனக்கும் மட்டும் தான். “
“ம்…ஒகே உன்னால பிரச்சினை எதுவும் வராதுன்னா நானும் எதுவும் செய்யமாட்டேன். ரெண்டு நாள் எப்ப பணம் கிடைக்கும். “
“நான் தான் சொன்னேனே நீ கேட்கற பணம் அதிகம் எனக்கு டைம் வேணும் ரெண்டு நாள் அப்படிங்கறது நால்நாளா கூட மாறலாம் நீயும் அடிக்கடி ஃபோன் பண்ணக்கூடாது. “
“டிலிங் ஒகேதான் இன்னும் ரெண்டு நாள் கழித்துகூப்பிடறேன் என்று கட் செய்ய… அமைதியாக ஃபோனை வைத்தாள்.”
“அண்ணி எனக்கு பயமாக இருக்கு இப்ப என்ன செய்யறது…”
“யோசிக்கலாம் பிருந்தா இன்னும் தான் நாலு நாள் இருக்கே ஏதாவது ஐடியா கிடைக்கும் இனி இதை பற்றி நீ கவலை படாதே எல்லாம் சரி ஆகிடும்…முதலில் இப்படி அழாதே நீயே காட்டிக்கொடுப்ப போல இருக்கு…”
“வீட்டில் யாருக்கும் தெரியவில்லை கூடாது அண்ணி…”
“யாருக்கும் தெரியாது இப்ப நீ வெளியே வா…ரூம்பிற்குள்ளேயே அடைஞ்சு கிடைக்காத ..என்றபடி இவளையும் அழைத்து கொண்டு வெளியே வந்தாள்.”
அந்த நிமிடத்தில் பிருந்தாவிற்கு தைரியம் சொல்லி அழைத்து வந்தவளுக்கு அதற்கு பிறகு யோசனை மட்டுமே பிரதானமாக இருந்தது எப்படி இதில் இருந்து வெளியே வருவது…பணம் கொடுத்ததும் மறுபடியும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்பதை துளி கூட சக்தி நம்பவில்லை. மொத்தமாக அனைத்து ஃபோட்டோகளையும் அவனிடம் இருந்து பெற வேண்டும் எப்படி ? என்ன செய்யலாம். இதே யோசனையில் ஒரு நாள் முழுக்க வலம் வந்து கொண்டு இருந்தாள்.
கார்த்திக் கூட கவனித்து விட்டு” என்ன சக்தி மேடம் ஒரே யோசனையா சுத்தறிங்க என்று கேட்க…”
“ம்…உங்க சொத்து எப்படி எழுதி வாங்கறதுன்னு டீப் திங்கிங்…எப்படி.. எழுதி தர போறிங்களா என்று கேட்க…”
“எப்படி சக்தி சொத்து மட்டும் போதுமா நான் வேண்டாமா என்று கேட்டபடி இவளிடம் நெருங்க…”
“கார்த்திக்…”
“அப்பா அதெப்படி உன்னால மட்டும் ஒரே வார்த்தையில் தள்ளி நிருத்த முடியுது.”
“யார் உங்களை தள்ளி நிற்க சொன்னதாம் சின்ன குழப்பம் கார்த்திக் சரியாகிடும்ங்கற நம்பிக்கை நிறைய இருக்கு.”
“என்னன்னு சொல்லு சக்தி நான் வேணும்னா உனக்கு உதவறேன்.”
“தேங்க்ஸ் என்னால முடியாட்டி உங்ககிட்ட தான் வருவேன் நீங்கள் தூங்குங்க என்றபடி நகர்ந்து இருந்தாள்.”
அன்றைக்கு பேசியவன் அடுத்த நாள் மறுபடியும் அழைத்து பேசி இருந்தான் கொஞ்சம் மிரட்டும் தோணியில்…”திரும்ப திரும்ப சொல்லறதா நினைக்க வேண்டாம் எதையாவது புத்திசாலிதனமா யோசித்து ஏதாவது செய்யணும்ன்னு முயற்சி பண்ணாதே அப்படி ஏதாவது பண்ணினன்னு தெரிஞ்சது நான் யோசிக்கமாட்டேன். அடுத்து என்ன செய்யணுமோ அதை செஞ்சிடுவேன் உங்கள் வீட்டு பொண்ணோட மானம் மட்டும் இல்லை குடும்பத்தோடு மொத்த மானமும் காற்றில் பறந்திடும்.”
“இதை பாரு சும்மா சொன்னதே சொல்லாத உனக்கு தேவை பணம் தானே அதை தான் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கிறேன் வேற எதுவும் பண்ணறதா ஐடியா இல்லை. நீ சொன்னது மாதிரி நியாயமாக நடந்துப்பேன்னு நம்பறேன். நீயும் என்ன ஏமாற்ற மாட்டேங்கற நம்பிக்கையில் தான் இத்தனை பண்ணறேன் வீட்டுக்கு தெரியாமல்…என்று பேசி முடித்து இருந்தாள் .”
பிருந்தாவை பார்க்க பாவமாக இருந்தது. எப்போதும் முகத்தில் சிரிப்பு என்பதையே மறந்து சுற்றிக் கொண்டு இருந்தாள். இவளை பார்க்கும் போது எல்லாம்” அண்ணி எனக்கு பயமாக இருக்கு”, என்று சொன்ன படி ஒவ்வொரு நிமிடமும் பயத்தில் நடுங்கிக்கொண்டு இருந்தாள் என்றுதான் சொல்லி வேண்டும். அவளை சமிதானப்படுத்துவதே பெரிய வேலையாக இருந்தது சக்திக்கு…
“பயப்படாதே பிருந்தா அவனோட முக்கியமான ஏமிங்கே பணம் தான் அதுமட்டும் தான் வாங்க டிரை பண்ணுவான்.அதைதாண்டி வேற எதற்கும் முயற்சிக்க மாட்டான் நீ ஃபோனை அட்டென் பண்ணாதே..
இன்னும் ரெண்டு நாள் எல்லாம் சரியாகிடும்”. இரண்டு நாட்களுமே பரபரப்பாக வேகமாக நகர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். கார்த்திக் இரண்டு நாள் கேரளா வரைக்கும் செல்ல வேண்டும் என்று சென்றிருந்தான். லட்சுமி கூட மாலை ஆனதும் தினமும் கோவிலுக்கு செல்வதை இப்போது எல்லாம் வழக்கத்தில் வைத்து இருந்தார். அதனால் பிருந்தாவையோ சக்தியையோ கூர்ந்து கவனிக்க இங்கே தற்சமயம் யாரும் இல்லை.
அன்றைய பொழுதில் விடியற்காலை ஐந்தரை மணிக்கு கார்த்திக் வீட்டிற்கு வந்து இருந்தான் வந்தபிறகு கூட உடனே குளித்து விட்டு புறப்பட்டு கொண்டு இருந்தான்.
“கேரளாவில் இருந்து மரம் லோடு வருது சக்தி இங்கே கதவு ஜன்னல் செய்ய அங்கே குடோனில் இறக்கணும் இன்றைக்கு அங்கேதான் வேலை இருக்கும் ரெண்டு நாள் எப்படி போச்சுது சக்தி..என்னோட ஞாபகம் வந்ததா…என்ன கொஞ்சமாவது தேடினாயா என இவளிடம் கிண்டல் அடித்தபடி புறப்பட்டு கொண்டு இருந்தான். அம்மாகிட்ட சொல்லிடு சக்தி வந்துட்டேன்னு… வேந்தனை மதியம் வந்து பார்க்கறேன்னு செல்லு…”
“ம்..”.என்ற பதில் மட்டுமே அவளிடம் இருந்து பதில் வந்தது…இவளுமே அந்த நேரத்தில் குளித்து இருக்க…புறப்படும் அவனிடம் தான் பார்வை முழுக்க இருந்தது. அவசரகதியிலும் இவளிடம் பேச்சு கொடுத்தபடி கார்த்திக் புறப்பட…
அவனையே பார்த்தவள் புறப்பட திரும்பவும் கை பிடித்து நிருத்தி இருந்தாள்…என்ன என்பது போல அவளையும் பிடித்த கையையும் மாறி மாறி பார்க்க அருகில் நெருங்கி அவனுக்கு பின்புறத்தில் நின்றபடி முதுகோடு அணைத்து இருந்தாள்.கைகள் அவனது வயிற்று பகுதியை தொட்டபடி கண்களை மூடியபடி நின்றிருந்தாள்…ஏற்கனவே இருந்த குழப்பமான மனநிலையில் தற்சமயம் அவனது அருகாமை தேவையாய் இருந்தது.
இவளது குழப்பம் எதுவும் அவனுக்கு தெரியவில்லை அந்த நிமிடம் சக்தியை சமாதானப்படுத்தும் வகையில்
” ஏய்…சக்தி என்ன இது என்ன ஆச்சு…புதுசா இருக்கு…என்னை ரொம்ப மிஸ் பண்ணினாயா…இதெல்லாம் உன்னோட வழக்கமே இல்லையே…திரும்பி இவள் முகத்தை பார்த்தவள் குழம்பமான முகத்தை பார்த்து…என்ன சக்தி…என்ன பிரச்சனை ஏன் முகம் இப்படி இருக்கு…நிறைய குழப்பமா…எல்லாம் சரிமாகிடும்…என்ற பதிலோடு தேங்க்ஸ் சக்தி…நானும் உன்னை நிறைய மிஸ் பண்ணினேன் நிஜமாகவே நிறைய வேலை இருக்கிறது சக்தி…நைட் வரேன் நிறைய பேசணும் சக்தி உன்கிட்ட நிறைய பேச யோசிச்சிட்டு வந்து இருக்கிறேன் …என்றபடி இவளது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு நகரவும் ஃபோன் வரவும் சரியாக இருந்தது.”
“வந்துடுச்சா…இதோ நானும் புறப்பட்டுட்டேன் என்று பதில் சொன்னவன்…வரேன் சக்தி…வந்ததும் பேசிக்கலாம் என்றபடி புறப்பட்டான்.”
பிரச்சினை என்ன என்று கூட தெரியாமல் அவன் கூறிய ஆறுதல் வார்த்தை ஆயிரம் மடங்கு தைரியத்தை அந்த நிமிடம் அவளுக்கு தந்தது அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தபடி நகர்ந்தாள் சக்தி.
தொடரும்.