என்னவள் எபி_44
“பணம் ரெடியா உனக்குகொடுத்த நேரம் இன்றைக்கோட முடியுது சக்தி…மிரட்டலாக பரணியின் குரல் போனில் தொடர…”
“ம்…ரெடியா இருக்கு வந்து வாங்கிக்கோ…”
“ஏய் என்ன… நான் சொல்லற இடத்திற்கு ஒரு பேக்ல்ல பணத்தை எடுத்துவிட்டு வந்திடு” அவன் பேசும் போதே “ஒரு நிமிஷம்” என சக்தியின் குரல் தடுத்தது.
“நீ சொல்லற இடத்திற்கு என்னால வர முடியாதுபணம் வேணும்னா நான் சொல்லற இடத்திற்கு நீ வா…”
“என்ன திமிரா நான் சொல்லறதை தான் நீ கேட்கணும் சக்தி என்ன… ஏதாவது ப்ளான் பண்ணறையா கூப்பிட்டு சிக்கவைக்க …”அவன் சொல்லவும் சிரிக்க ஆரம்பித்தால் சக்தி…”மாட்டி விடணும்ன்னு நினைச்சா இந்த மூன்று நாள் பத்தாதா…உன்னோட ஃபோன் நம்பர் போதும் நீ எங்கே இருக்கற…என்ன பண்ணற எல்லா ஜாதகமும் எடுக்க…இது வரைக்கும் அமைதியாக இருக்கறேன்னா நீ நம்பித்தான் ஆகணும் வேற வழி இல்லை .”
“நீ என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன் நான் சொல்லற இடத்திற்கு வா…பணத்தை ஃபேக்ல்ல எடுத்துக்கோ…கால் டாக்சி பிடிச்சி கரும்பு கடை ஏரியாவிற்கு நேராக வா அங்கே வந்ததும் மறுபடியும் சொல்லறேன் சொல்லற இடத்திற்கு வந்து சேரு…உன்மேல நம்பிக்கை துளி கூட கிடையாது பரணி ஃபோனில் இவளிடம் சொல்ல…”
“அதெப்படி நான் மட்டும் நம்புவேன் இத்தனை நாளா அண்ணான்னு பேசிட்டு இருந்த பொண்ணுக்கே இந்த நிலைமைன்னா…எனக்கு…எனக்கு என்ன பாதுகாப்பு தப்பு செஞ்சு நீயே நம்பாத போது நான் மட்டும் உன்னை நம்பணுமா…ஸாரி நீ நான் சொல்லற இடத்திற்கு வா…பணம் வேணும்னா….இதோ நீ கேட்ட பணம் என்னுடைய டேபிளில் தான் இருக்கிறது ஃபோட்டோ எடுத்து அனுப்பறேன் அப்புறமும் நம்பிக்கை வரலைன்னா…சொல்லு…என்றவள் பணத்தை ஃபோட்டோ எடுத்து அனுப்பி வைத்தாள்.”
“இது நன்றாகவே வேலை செய்தது…அவனது ஆசையை அழகாக தூண்டி விட்டு இருந்தாள்…எளிதாக அவளது முடிவுக்கே அவனும் வந்து இருந்தான். சரி எங்க வரணும் இடத்தை சொல்லு என்று கேட்க…”
“குட் காந்திபுரம் வந்திட்டு நீ கூப்பிடு நான் உனக்கு இடம் சொல்லறேன்…அங்கே எங்க வீடு ஒன்று இருக்கு அங்கே தான் வந்து வாங்கணும்…”
“என்ன ஏமாற்ற பார்க்கறையா உன்னோட வீட்டிற்கு வரச்சொல்லிட்டு…இல்லை இது சரி வராது பக்கத்தில் ஏதாவது ஹோட்டலுக்கு வா…”
“இத பார் உன்னை நம்பி எந்த ஹோட்டலுக்கும் வரமாட்டேன். அது எங்க வீடு நானும் என்னோட கணவரும் தனிக்குடித்தனம் இருந்த வீடு இப்போது நாங்கள் அங்கே இல்லை. வாரம் ஒரு முறை அங்கே வீட்டை கிளின் பண்ணன்னு போயிட்டு வருவேன். ஃபேக்கோட பொய் சொல்லிட்டு வரமுடியாது. இங்கே தனியாக எங்கேயும் அனுப்ப மாட்டாங்க…தெரிஞ்ச கால்டாக்சியை தான் அனுப்பி வைப்பாங்க வேற எங்கேயும் போக முடியாது. முக்கியமா நீ ஃபோட்டோவை கரெக்டா டிலைட் பண்ணறையான்னு எனக்கு நம்பிக்கை வரணும் வெளி இடத்தில் அதிக நேரம் உட்கார முடியாது புரியுதா…”
“இவளது பேச்சு அவனுக்கும் சரியாகப்பட…சரி வரேன் உன் மேல நம்பிக்கை வச்சு ஏதாவது ப்ளான் பண்ணறேன்னு தெரிஞ்சா…என்னோட ஃப்ரெண்டுக்கிட்ட சொல்லிட்டு வருவேன் எனக்கு ஏதாவது ஆச்சன்னா யோசிக்காமல் பிருந்தாவோட போட்டோ அப்லோட் ஆகிடும் இது உனக்கு நான் கொடுக்கிற எச்சரிக்கை புரியுதா…”
“புரியுது வந்து சேரு…நானும் பத்து மணிக்கு புறப்படறேன். காந்திபுரம் வந்ததும் கூப்பிடு” என்று கட் செய்ய ..அருகில் நின்ளிருந்த பிருந்தா அழுது கொண்டு இருந்தாள். “எனக்கு பயமாக இருக்கிறது அண்ணி எதுவும் பிரச்சினை ஆகாதுல்ல…”
“அழாதே பிருந்தா எதுவும் ஆகாது…”
“அண்ணி பணம் கொடுத்ததும் எல்லா ஃபோட்டோசையும் அழிச்சிடுவான் தானே ஏமாற்றிட மாட்டான்ல்ல…”
“ஏமாற்றமாட்டான் பிருந்தா நம்மலோட வீட்டுக்கு தான் வரச்சொல்லி இருக்கிறேன் பயந்துக்காத எதுவும் ஆகாது…அம்மா எங்கே பிருந்தா?”.
“வேந்தனை அங்கிள் வீட்டிற்கு அழைச்சிட்டு போய் இருக்கறாங்க அண்ணி அன்றைக்கு வந்த பிறகு அவங்க இன்னும் வீட்டுக்கு வரலை அதனால அப்பாவும் அம்மாவும் போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க…”
“சரி பிருந்தா நானும் புறப்படறேன் அம்மா வந்தாங்கன்னா அங்கே வீட்டை கிளின் பண்ண போய் இருக்கறதா சொல்லு…ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் சரியா என புறப்பட்டாள்.”
“அண்ணி எப்ப வருவிங்க..”.பயந்தபடி கேட்டாள் பிருந்தா, “வந்துடுவேன் “பிருந்தா என்று அவளது கன்னத்தில் கைவைத்து தட்டியவள் ஒரு ஃபேக்கில் பணத்தை எடுத்து வைத்தபடி புறப்பட்டாள்.
அங்கே சென்று சரியாக அரைமணி நேரம் கழித்து மறுபடியும் அழைத்து இருந்தான் பரணி…”நான் வந்துவிட்டேன் “என்று இவளுக்கு அழைத்து சொல்ல…சரியாக இவளது அட்ரசை அனுப்பி வைத்தாள். நிறைய பதட்டம் மனதில் இருந்தது…நினைத்தது போல நடக்குமா எதுவும் தவறாக நடந்து விடக்கூடாது இப்படியாக யோசித்தவள் இங்கும் அங்கும் நடந்து கொண்டு இருந்தாள்.
மறுபடியும் கால்மணி நேரம் கடந்திடுக்க அழைப்பு மணி சத்தம் கேட்டது கண்ணாடிவழியே பார்த்தவள் வந்தவனை பார்த்து விட்டு கதவை திறந்தாள். தயங்கியபடி ஹாலை சுற்றிலும் நோட்டம் விட்டவன்” பணம் எங்கே முதல்ல குடும்பம் என்று கேட்க..”
“முதலில் உட்காரு ஃபோட்டோவை டிலைட் பண்ணு அப்புறம் அந்த ஃபோனை என்கிட்ட கொடுத்திடு அந்த ஃபோன் எனக்கு வேணும் சொன்னபடியே கதவை சாத்த அது வேகமாக அடைத்து கொண்டது.”
“ஏய் எதுக்கு இப்ப கதவை பூட்டற…பணம் எங்கே…”
“இரு அவசரப்படாதே பணம் பெட்ரூம்ல இருக்கு எடுத்துவிட்டு வரச்சொல்லறேன். அண்ணா உனக்காக ரொம்ப நேரமாக வெயிட் பண்ணிட்டு இருக்கறாங்க…”
“என்ன உளர்ற உன்னை தனியாக தான் எடுத்துவிட்டு வரச்சொன்னேன் நீ இப்ப மாற்றி பேசறையா…”
“பணம் பெரிய தொகை இல்லையா …அதுதான் சேப்டியா எடுத்துவிட்டு வரணும்ல்ல…அதுதான் எங்க அண்ணாவை எடுத்துட்டு வரச்சொன்னேன். இவள் இப்படி சொல்லவும் சட்டென வாசலை நோக்கி திரும்ப…”
“அது ஆட்டோமேடிக் டோர் தம்பி இந்நேரம் பூட்டி இருக்கும் கொஞ்சம் நக்கலாக சக்தி பதில் சொன்னாள்…”
“என்ன ஏமாற்றவா பார்க்கற உன்னை என்ன செய்யறேன் பாரு என இவளிடம் நிரும்பி பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்தபடி கையை அவளை நோக்கி நீட்டினான் பரணி….” கத்தியை பார்க்கவும் சட்டென நகர அந்த நேரத்தில் சரியாக பெட்ரூம் கதவு திறந்து கொண்டது. ஒரே நிமிடத்தில் என்ன நடந்தது என எதிர் பார்க்கும் முன்பே அவனது கை பின் புறத்தில் முறுக்கப்பட கத்தி சற்று நகர்ந்து சத்தமாக கீழே விழுந்தது. ஒரே நிமிடத்தில் அவனை தள்ளிவிட்டு தரையோடு படுக்க வைக்க…அதே வேகத்தில் இரண்டு கைகளையும் இணைத்து காலில் இருந்த சூலேஸ் கொண்டு இருக்கி கட்டியிருந்தான் கூடவே இரண்டு அடியும் பளார் பளாரென வேகமாக விழுந்து இருந்தது.
அதே நேரத்தில் அவனை தொடர்ந்து வந்து இருந்த சிவாவும் அவனது காலை ஒரு கயிற்றால் கட்ட…முதுகு சட்டையை பிடித்து அநாயசமாக தூக்கி அங்கிருந்த சேரில் அமர வைத்தவன் கையை சற்றே உதறியபடி வேகமாக அடிக்க… ஒரு அடியிலேயே ரத்தம் வாயிலிருந்து வழிய ஆரம்பித்தது.
சக்தி நடந்தது எல்லாவற்றையும் ஆச்சர்யமாக கவனித்து கொண்டு இருந்தாள் வந்து இருப்பது ஏதோ பெரிய போலீஸ் அதிகாரி என்பது தெரிந்தது ஆனால் இத்தனை வேகத்தை அவள் எதிர் பார்க்கவில்லை.
சற்றே நகர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தாள்.
முன்பு இவள் வீட்டிற்குள் வரவுமே சிவா இவளுக்கு அழைத்து சொல்லி இருந்தான் தாங்கள் முன்பாக வீட்டிற்கு வந்து காத்திருப்பதாக… உள்ளே வரவுமே ஃபோன் வரவும் இவர்களை பார்க்க எல்லாம் இல்லை ஏற்கனவே பேசியபடி நடந்து கொள்ளும்படி மட்டுமே கூறி இருக்க…யார் கூட வந்து இருப்பது எதுவும் தெரியாது.எல்லாமே நிமிட நேரத்தில் நடந்து இருக்க…இப்போதும் சரியாக முகம் பார்க்க வில்லை சக்தி.
“எங்க இதுதான் ஃபோனா வீடு எங்கே என கேட்டபடி அடுத்த அடி விழ…”பெண்ணிடம்தைரியமாக பேசியவனுக்கு பேச வார்த்தையே வரவில்லை.
“சொல்லுடா பொண்ணுங்ககிட்ட மட்டும் வீரமா பேச வருமா…நீ மட்டும்தானா இல்லை கூட யாராவது இருக்கறாங்களா கேட்டபடியே பாக்கெட்டில் இருந்து ஃபோனை எடுத்து பார்த்தவன்….ஃபோனை செக் செய்தபடி நிறைய பொண்ணுங்க போட்டோ இருக்கு சிவா ஸார் பெரிய ஆள் தான் ஸாரை இன்னும் கூட கொஞ்சம் கவனிக்கலாம்…என வேகமாக அடுத்த அடி விழ…”
“அடிக்காதிங்க ஸார் வலிக்குது நான் மட்டும் தான் வேற யாரும் கிடையாது. இனி இப்படி செய்ய மாட்டேன். தெரியாமல் செஞ்சிட்டேன்.”
“தெரியாமல் செஞ்சியா…பொண்ணுங்கன்னா அத்தனை ஈசியா போச்சுதா உனக்கு…எத்தனை தைரியம்…என்ன சிவா செய்யலாம் இவனை…”என்றபடி ஃபோன் செய்து..”எங்க வாசலில் தான் நிற்கறிங்களா…உள்ள வாங்க வந்து இவனை இழுத்திட்டு போங்க…”என்று சொல்ல கதவை திறந்தபடி இருவர் உள்ளே நுழைந்தனர்.”சிவா இங்கே இருக்கற சைபர்கிரைம்ல இருந்து வரச்சொல்லி இருக்கறேன்…இவனை அழைச்சிட்டு போகட்டும்…இவன் இனி எப்பவும் வெளிய வரமுடியாது அந்த அளவுக்கு ஸ்டாங்கா கேஸ் போட்டுடலாம்…இவனை இழுத்திட்டு போங்க…என்றவன் இவனோட வீடு எங்கேன்னு பார்த்து முழுக்க சர்ச் பண்ணுங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் மாதிரி இருந்தா தகவல் சொல்லுங்க நான் வரேன். அப்படியே எந்த மாதிரி கேஸ் எழுதணும்ன்னு சொல்லறேன் அது மாதிரி எழுதிக்கோங்க என்று சொல்ல…ஒகே ஸார் என சல்யூட் வைத்தபிறகு அவனையும் இழுத்து கொண்டு புறப்பட்டனர்..”
“தேங்க்யூ ஸார் எப்போதோ பார்த்தது நீங்கள் என்ன மறக்கவே இல்லை. உதவின்னு கேட்கவும் உடனே நீங்களே நேரில் வந்தது மறக்க முடியாத நிகழ்வு ஸார். இது சக்தி…என்ன சக்தியை அறிமுகம் செய்து வைத்தான்.”
“ஹலோ எப்படிமா இருக்கற…என்று கேட்க…”
இப்போது தான் முகத்தை நன்றாக பார்த்தாள் சக்தி..”.ஸார் நீங்கள்…வெங்கட ரமணன்…. ஸார் அது நீங்கள் தானே சென்னை சிட்டி கமிஷ்னர்…மை காட் நீங்கள் தானா…”
“குட் என்ன கூட தெரிஞ்சு வச்சி இருக்கறிங்க…இப்போது கூடுதல் பொறுப்பாக சைபர்கிரைமும் தந்து இருக்கறாங்க பெண்களுக்கு அவேர்னஸ் பண்ணறதுக்காக.…”
“நீயூஸ்ல அடிக்கடி பார்க்கறேனே எப்படி மறக்கும்… சிவா அத்தான் இவங்க உங்கள் ஃப்ரெண்டா..என்று ஆர்வமாக சக்தி கேட்க…”
“அப்படியும் சொல்லலாம் முன்னாடி ஒரு முறை ஊட்டி வந்தப்போ அறிமுகம்..அது இன்னும் தொடருது…இந்த முறை வந்தது நம்ம நல்ல நேரம்..வந்ததும் தெரிஞ்சு பார்க்க போனேன் உன்னோட பிரச்சினையை சொல்லி என்ன பண்ணலாம்ன்னு ஹெல்ப் கேட்டேன். அவரே நேரில் வந்துட்டாங்க…”
“சிவா என்ன இது மரியாதை எல்லாம் வேண்டாமே…சக்தி உண்மையிலேயே நீங்க கிரேட் பொண்ணுங்களுக்கு தைரியம் கட்டாயம் வேணும் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் ரொம்ப தைரியமாக ஹேன்டில் பண்ணினிங்க..குட் . “
” தேங்க்ஸ் ஸார்..ஸார் அந்த ஃபோட்டோஸ்…”
“பயப்படாதிங்க இப்பவே டிலைட் பண்ணிடறேன்…சக்தி பொண்ணுங்க தகவல் எதுவும் வெளியே வராது…அவன் பேர்ல் கூட வேற மாதிரி கேஸ் போட்டு இனி வெளியே வராத மாதிரி பண்ணிடலாம்… இன்னும் எத்தனை பேரை மிரட்டி இருக்கறான் வேற யாரும் பாதிக்கப்பட்டு இருக்கறாங்களான்னு பார்க்க தேவைபடுது இனி இதை பற்றி யோசிக்காதிங்க.”
அதே நேரம் அங்கே கார்த்திக்கிற்கு ஃபோன் செய்து இருந்தாள் பிருந்தா…தைரியமாக சக்தி சென்று இருந்தாலும் அதிகமாக பயமாக இருக்க கார்த்திக்கை அழைத்து அழுதபடியே “அண்ணா வீட்டுக்கு வாங்க.. உங்க கிட்ட பேசணும் என்று அழுதபடி அழைக்க…”
நடந்துகொண்டிருந்த வேலையை பார்த்து கொள்ள வேறு ஆளை அமர்த்தி விட்டு வீட்டிற்கு வந்திருந்தான்.
“அவனை பார்க்கவுமே நடந்ததை அப்படியே சொன்னவள் அண்ணி தனியா போய் இருக்கறாங்க எனக்கு பயமாக இருக்கிறது நீங்கள் போய் அண்ணியை அழைச்சிட்டு வாங்க என்று அழுதபடி சொல்ல…அப்போதுதான் புரிந்தது சக்தி காலையில் அவனிடம் நடந்து கொண்டதின் அர்த்தம்…வேகமாக தங்களது வீட்டை நோக்கி புறப்பட்டு இருந்தான் கார்த்திக். “
கார்த்திக் அங்கே வீட்டிற்கு வந்து போது சிவா,ரமணன் ,சக்தி மூவர் மட்டுமே இருந்தனர்…கதவு கைபிடியை வேகமாக திறக்க மூவருமே வாசலை திரும்பி பார்த்தனர்.
வேகமாக வந்து கதவை திறந்த கார்த்திக் பார்த்தது சக்தியை தான்…வேறு யார் மீதும் கண்கள் செல்லவில்லை. பத்திரமாக இருக்கிறாள் என்று தெரியவுமே வேகமாக அருகில் இழுத்து அணைத்து கொண்டான்.” ஏன் சக்தி ஏன் சொல்லல உனக்கு ஏதாவது ஆகி இருந்தா…எனறபடி முகம் முழுக்க முத்தமிட ஆரம்பித்தான்”.
இருவர் நின்றது எதுவும் இவனுக்கு தெரியவில்லை.
“கார்த்திக்…” என்றபடி அவனை மெதுவாக நெஞ்சில் கை வைத்து நகர்த்த..”
இரண்டு பேருமே ஆளுக்கு ஒரு புறம் திரும்பி நின்றிருந்தனர். சிவா தான் “டேய் கார்த்திக் இங்கே ரெண்டு பேர் நிற்கறோம். இப்படியா செய்வ என்று கேட்க…ரமணனின் சத்தமான சிரிப்பு சத்தம் இவர்களை தொட்டது.”
“என்ன சிவா நம்மலையே வெட்கப்பட வைப்பான் போல இந்த பையன்…”
“சொன்னேனே…கார்த்திக் சக்தியோட ஹஸ்பெண்ட்…”
“ஹலோ என்று கைகுழுக்கிய ரமணன் ரொம்ப நல்ல பொண்ணு நல்லா பார்த்துக்கோ கார்த்திக், ரொம்ப புத்திசாலி ,தைரியசாலியும் கூட…சென்னை வந்தா ரெண்டு பேரும் ஒரு தடவை வீட்டிற்கு வாங்க…வராகிட்ட உங்களை பற்றி சொன்னா பார்க்கணும்ன்னு ஆசை படுவா…சிவா புறப்படலாமா…எதுக்கு அவங்களை டிஸ்டப் பண்ணிட்டு…”
“நோ ஸார்…அதெல்லாம் இல்லை வீட்டுக்கு வாங்க ஸார். “
“இப்ப அவசரவேலை இருக்கு கார்த்திக் போகணும் இன்னோரு முறை வரேன். பிரச்சினை எப்பவும் எல்லா இடத்திலேயும் இருக்கும் கார்த்திக் அதுக்காக வீட்டில் என்ன நடக்கிறது என்கிறதை கவனிக்காமல் இருக்க கூடாது இல்லையா…கொஞ்சம் கவனமாக இருந்து இருந்தா இந்த பிரச்சினை வந்து இருக்காது.கெட்டதிலேயும் ஒரு நல்லதுன்னு இதை பாடமாக எடுத்துக்கோங்க…புறப்படறேன் சிவா..”
“ரமணன் ஸார் நான் உங்களை டிராப்ட் பண்ணறேன்” என்றபடி சிவா கூற..”.கம் கம்” என்றபடி புறப்பட்டனர் இருவரும்.
அவர்கள் வெளிமேறியபிறகு ஐந்து நிமிடம் அமைதி மட்டுமே அங்கே ஆட்சி செய்தது.
ஸாரி கார்த்திக் உங்கள் கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்லை உறவுன்னு வரும் போது நிறைய தடுமாற்றம் இருக்கும். வேறமாதிரி ஆகிட்டா எனக்கு பயமாக இருந்தது அதுதான் சிவா அத்தான் கிட்ட ஹெல்ப் கேட்டேன் கோபபடாதிங்க…நாம வீட்டிற்கு போகலாமா…அங்கே பிருந்தா பயத்தோடு காத்திட்டு இருப்பாள் என்று சக்தி கூற… சக்தியிடம் பேச வேண்டியது நிறைய இருக்க… உண்மை நிலை புரிந்து அப்போது புறப்பட்டான் கார்த்திக்.
தொடரும்.