என்னவள் _45
சக்தி சொன்னது சரியாகப்பட இவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்திருந்தான்.உண்மையிலேயே பிருந்தா மிகவும் பயந்து இருக்க…”இவளை பார்க்கவும் அண்ணி என்றபடி இவளிடம் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.”
“எல்லாம் சரியாகிடுச்சு” என்றபடி கார்த்திக்கை பார்க்க இவளை தான் அவனும் பார்த்து கொண்டு இருந்தான்.
“ஸாரிணா என்றபடி கார்த்திக்கிடமும் மன்னிப்பு கேட்டு இருந்தாள் பிருந்தா”.
“நான் தான் மன்னிப்புக் கேட்கணும் பிருந்தா எதை பற்றியும் கவலை இல்லாமல் சுற்றி இருக்கிறேன் எப்போதும் போல இங்கே இருந்து இருந்தா இத்தனை பிரச்சினை வந்து இருக்காது.யோசிக்கவே முடியவில்லை பிருந்தா. உனக்கு ஏதாவது ஓன்னுன்னா சாகற வரைக்கும் நிம்மதியாக இருந்து இருக்க மாட்டேன். நிம்மதியை தொலைச்சிட்டு சுற்றி இருப்பேன்.”
“அதுதான் சரி ஆகிடுச்சே நீங்கள் புறப்படுங்க கார்த்திக் பிறகு பேசிக்கலாம் வேலையை முடிச்சிட்டு வாங்க என்று சொல்ல.”..மெல்லிய தலையாட்டலோடு புறப்பட்டு இருந்தான்.
சக்திக்கும் கொஞ்சம் தனிமை தேவை பட்டது. நடந்து முடிந்த நிகழ்வு அப்படி..”பிருந்தா கொஞ்சம் நேரம் தூங்கப்போகிறேன் டயர்டா இருக்கிறது அம்மா அப்பா எப்போது வருவாங்க வேந்தனை அழைச்சிட்டு..”
“நைட் தான் வராங்க அண்ணி ஃபோன் பண்ணி சொன்னாங்க…”
“ஒகே பிருந்தா”, என்றபடி தங்களுடைய ரூம்பிற்குள் சென்று படுத்திருந்தாள்.
இரண்டு மூன்று நாட்களாக இருந்த டென்ஷன் முழுக்க குறைந்திருக்க அவளையும் அறியாமல் அப்படி ஒரு தூக்கம்…மாலை ஏழு மணி வரையிலுமே…ஆறு மணிக்கு வந்த கார்த்திக் கூட இவள் அருகில் வந்து தலையை கோதி விட்டது எதுவும் அவளுக்கு தெரியவில்லை அந்த அளவிற்கு ஆழ்ந்த தூக்கம். பார்த்ததுமே புரிந்து இருந்தது இரண்டு நாளில் நிறைய யோசித்து இருப்பாள் என…எழுந்து வரும் போது வரட்டும் என நகர்ந்து சென்றிருந்தான்.
சிவா அங்கிருந்து புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் அழைத்து பேசி இருந்தான். “வீட்டில் பிருந்தாவையோ சக்தியையோ எதுவும் சொல்லக்கூடாது என…”இன்னமும் கார்த்திக்கால் பிருந்தாவை பெரிய பெண்ணாக நினைக்க முடியவில்லை குழந்தை தனம் மாறாமல் இருக்கும் அவளிடம் கோபப்பட்டு தான் என்ன செய்வது…சக்தியிடமும் அப்படி தான் அவள் செய்தது சரியானதும் கூட நிறைய யோசித்து இருக்கிறாள் இதை பற்றி… அவள் பிருந்தா விஷயத்தில் நடந்து கொண்டது யாருமே செய்ய முடியாதது மட்டும் அல்ல அதிகபடியானதும் கூட..
எப்படி யோசித்தாலும் இந்த இடத்தில் மாயா…இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்பதை… இருவருக்கும் இருக்கும் வித்தியாசத்தை கார்த்திக்கால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இணைந்து வாழ்ந்திருந்தால் பெரிதாக தெரிந்து இருக்காதோ…இப்படி பல யோசனையோடு வலம் வந்து கொண்டு இருந்தான் கார்த்திக்.
இரவு ஏழு மணியை தாண்டிய போது தான் எழுந்தாள் சக்தி.அதுவும் ஏதோ சத்தம் மெளிதாக கேட்க…அந்த சத்தத்தில்…எழுந்தவள் சத்தம் வந்த திசையை நோக்கி செல்ல…கார்த்திக்
அங்கே வீட்டில் சிறியதாக இருந்த ஸ்டோர் ரூம்பில் எதையோ தேடிக்கொண்டு இருந்தான்…வரும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் இவளை பார்த்து “ஸாரி நல்லா தூங்கிவிட்டு இருந்தே எழுப்பி விட்டுட்டேனா…”
“இல்லை அப்படி எல்லாம் இல்லை நான் தான் ரொம்ப நேரமாக தூங்கிட்டேன். ஏதாவது முக்கியமானதா தேடறிங்க… நான் ஏதாவது உதவி செய்யவா…”
“வச்ச நானே இடத்தை மறந்துவிட்டேன்.நீ தேடப்போகிறாயா…முக்கியமான ஃபைல் சக்தி ஆடிட்டர் கிட்ட கொடுக்கணும் அதுவும் இப்பவே…பத்து நிமிஷமா தேடறேன் இதை கொடுத்துட்டுதான் வீட்டுக்கு வரமுடியும் அங்கே ஆபீஸ்ல வெயிட் பண்ணறாரு…என்றபடியே ஒவ்வொன்றாக தேட…”சக்தி கீழே சென்று இருந்தாள். வேறு ஒரு ஃபைலில் இருந்து கவர் ஒன்று கீழே விழுந்தது. எடுத்து பார்த்த கார்த்திக் பிரித்து பார்க்க…மூன்றரை வருடத்திற்கு முன்பு சிவா அனுப்பி இருந்த கவர் பிரித்து பார்க்காமலேயே அந்த நேரத்தில் ஃபைலில் வைத்து இருந்தான். என்ன அனுப்பினான் என்பதும் அந்த நேரத்தில் ஞாபகத்தில் இல்லை. பொறுமையாக பிரித்து பார்க்கலாம் என்று எடுத்துவைக்க சுத்தமாக மறந்து இருந்தான்.
இப்போது கவரை பார்க்கவும் பிரிக்க நினைத்தவன் எடுத்து பிரிக்க… கொஞ்சம் ஆச்சர்யம் கூடவே கொஞ்சம் அதிர்ச்சியும் கூட உள்ளே கவரில் இருந்த ஃபோட்டோவில் சிரித்தபடி இருந்தது சக்தி…
ஒரு மரத்தின் வேரில் அமர்ந்தபடி நிளமான பின்னலை முன்புறத்தில் போட்டு அதை ஒரு கைகொண்டு பிடித்தபடி சிரித்து கொண்டு இருக்கும் புகைப்படம். அதை பார்த்தபடியே திருப்பிப்பார்க்க…அங்கே சிவாவின் கையைழுத்தில்…கார்த்திக் இது சக்தி…என் மனைவியோட சிஸ்டர் ரொம்ப நல்ல பொண்ணு உன்னோட குணத்துக்கு மேட்ச் ஆவா பிடிச்சி இருந்தா மேற்கொண்டு பேசலாம் என முடித்து இருந்தான்.
இரண்டு நிமிடம் ஃபோட்டோவை பார்த்தவன் எடுத்து தன்னுடைய பாக்கெட்டில் வைத்து கொண்டான். இது தான் நடக்க இருந்ததா அப்படி என்றால் மாயா அவள் ஏன் என்னுடைய வாழ்க்கைக்கு உள்ளே வந்து இத்தனை ஏன் நடக்க வேண்டும்…யோசித்தபடி கூடவே மனமும் கூட கொஞ்சம் நெகிழ்ந்து இருந்தது. இவள் எனக்காக படைக்கப்பட்ட பெண் என்று…தேடிய ஃபைலும் கிடைக்க எடுத்து கொண்டு வெளியே வந்தான்.ஹாலிற்கு வரவும்
சரியாக சக்தி இரண்டு டம்ளர் ஃகாபி எடுத்து வரவும் சரியாக இருந்தது.
“இதை குடிச்சிட்டு கிளம்புங்க கார்த்திக் என்றபடி அமர…” ஏற்கனவே இருந்து மனநிலை…இப்போது அவளை பார்க்க தூங்கி எழுந்ததால் தெரிந்த தெளிவாக முகம் லேசாக கூட ஒப்பனை இல்லாமல் இருக்க அவனை இன்னும் வசீகரித்தது. பார்வை முழுக்க மாறி இருக்க அவளை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தான் கார்த்திக். விலகி செல்ல சுத்தமாக மனம் இல்லை.
“என்ன ஆச்சு…ஃகாபி எடுத்துக்கோங்க போகணும் சொன்னிங்களே “என்ற கேள்வியை தொடர்ந்து…கார்த்திக் ஃகாபியை குடிக்கவும் அழைப்பு வரவும் சரியாக இருந்தது. வேகமாக குடித்தவுடன் அதே வேகத்தில் புறப்பட்டு இருந்தான் போயிட்டு வந்திடறேன் என்றபடி…
இரவு கார்த்திக் வீட்டிற்கு வரவும் உணவு உண்டு முடிக்க…சிவா இவனுக்கு ஃபோனில் அழைத்து பேசி இருந்தான். “கார்த்திக் அந்த ப்ராடுக்கு இது தான் வேலையே…அந்த ப்ராடு மேல ஏற்கனவே இரண்டு கேஸ் இருக்கு இது போல..பெண்களை மிரட்டி பணம் பறிச்சது சம்பந்தமாக…பிருந்தாவோடது எதுவும் வெளியே வராது. அவனோட வீட்டில் இருந்த லேப்டாப்பில் இன்னும் நிறைய பேரோடது இருந்து இருக்கு. இன்னும் இவன் மேல நிறைய பேர் கம்ளைண்ட் தருவாங்க போல இருக்கு..இனி இதை பற்றி யாரும் யோசிக்க வேண்டாம். சக்தி கிட்ட சொல்லிடு…அநேகமாக நாளைக்கு அவன்தான் எல்லா சேனலுக்கும் ஹாட் டாபிக்ன்னு நினைக்கிறேன் இனி எப்போதும் வெளியே வர வாய்ப்பே இல்லை…என்றபடி ஃபோனை கட் செய்து இருந்தான்.”
தங்களது அறைக்குள் கார்த்திக் வரும் போது சக்தி கட்டியில் சாய்ந்தபடி அமர்ந்து இருந்தாள். இவனை பார்க்கவும் நிமிர்ந்து அமர…அருகில் சென்று அவளது கையை தனது கைக்குள் எடுத்து வைத்து கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தான்.
இரண்டு நிமிடம் அவனது முகத்தை பார்த்தவள் “என்ன கார்த்திக் ஏன் அமைதியாக இருக்கறிங்க என்று கேட்க…”
“நிறைய பேசணும் சக்தி…பேசவா…என்று கேட்டான். “
“தினமுமே பேசறோமே கார்த்திக் என்று சிரித்தபடி கூற…”
“இல்லை இது வேற…”என்றவனுக்கு நிறைய தடுமாற்றம்…கார்த்திக்கின் கண்களில்…அவனது முகத்தையே பார்த்தவள் “என்ன சொல்லுங்க என்று கேட்க…”
“மனசு முழுக்க நீதான் இருக்கற சக்தி..இன்னும் தள்ளி இருக்கணுமா இனி சேர்த்து வாழலாம் தானே…தங்கியபடி மனதில் இருப்பதை ஓரு மாதிரி சொல்லி இருந்தான். “
“நான் எப்பவுமே உங்களை எதுவும் சொல்லலையே டயம் வேணும் கொஞ்ச நாள் போகட்டும்ன்னு நீங்க தானே சொன்னிங்க..”
“ம்…ஆமாம் ஆரம்பத்தில் நிறைய அடி வாங்கியாச்சு சக்தி…அந்த பயம் யாரையும் நம்ப முடியலை இன்னோரு பெண்ணை நம்ப சுத்தமாக தைரியம் இல்லை. அங்கிள், அப்பா, அம்மான்னு அத்தனை பேர் சொல்லி பிடிவாதமாக தான் உன்னை பார்க்க அனுப்பி வச்சாங்க…நீ என்ன வேண்டாம்ன்னு சொல்லணும்ன்னு நினைச்சே வேந்தனை அழஅழ இழுத்திட்டு வந்தேன்.”
லேசாக சிரித்தபடி “தெரியுமே… எல்லாத்தையும் தாண்டி அந்த நிமிடம் உங்களை பார்க்கும் போது எப்படி இருந்தது தெரியுமா..அழற அந்த குழந்தைக்கும் உங்களுக்கும் அப்போது பெரிசா வித்தியாசம் எனக்கு தெரியலை…உங்கள் கண்ணுல அத்தனை விரக்தி தெரிஞ்சது. அப்புறம் எனக்கும் கல்யாணம் பண்ணிக்க ஐடியா எதுவும் அப்போது இல்லை. வேண்டாம்ன்னு சொல்லணும்ன்னு முடிவோடதான் அந்த நிமிடம் வந்தேன்.
ஆனால் அந்த நிமிடம் உங்கள் முகத்தை பார்த்தபோது அதுக்கு அவசியம் இல்லைன்னு தோணிச்சு. சிவா அத்தான் கேட்கும் போது கூட அதைதான் சொன்னேன். உங்களுக்கு பிடிச்சு இருக்கான்னு கேட்க சொல்லி…”
கார்த்திக் இன்னும் அருகில் நெருங்கி அவளது கையை தனது கன்னத்தில் வைத்தபடி “வேண்டாம்ன்னு சொல்லி இருந்தா உன்னை போல ஓரு பொண்ணை மிஸ் பண்ணி இருப்பேன் சக்தி. இதை பாரு என்றபடி எடுத்து வைத்திருந்த ஃபோட்டோவை காட்டினான். உன்னை எனக்காக கேட்டு சிவா அனுப்பியது ஒரு வேளை இதை அப்போதே பார்த்து இருந்தா நடுவில் இத்தனை குழப்பம் வந்து இருக்காது வாழ்க்கை தெளிந்த நீரோடை போல அழகா போய் இருக்கும் இல்லையா…”
“பிடிக்காதுன்னு கூட சொல்லி இருப்பிங்க கார்த்திக். இதெல்லாம் நடக்கணும்ன்னு இருந்தா அது மாறிடவா போகுது…அதை விடுங்க நடந்து முடிஞ்சதை எதுக்காக பேசணும்… உங்களை மாதிரி எனக்கும் கூட மறக்க முடியாத காயம் இருக்கு.”
“அத்தனைக்கும் மருந்தா இருப்பேன் சக்தி. .ஆனால் சக்தி இனி அதை பற்றி ரெண்டுபேரும் யோசிக்க வேண்டாம்.முடிஞ்சு போன வாழ்க்கையை பற்றி… இது நமக்காக கடவுள் அமைச்சு கொடுத்த வாழ்க்கை இனி இதை பற்றி மட்டும் யோசிக்கலாம். ஒரு வேளை சக்தி உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனவன் ஒரு குழந்தை இருக்கிறவன் அப்படின்னு உருத்தலா தோணுமா…”
இப்படி கேட்கவும் சட்டென அவனது வாயை தன் கையை கொண்டு மூடியவள்” கார்த்திக் இப்படி பேசாதிங்க…நான் கூட உங்க கிட்ட கேட்கலாம் ஏற்கனவே டைவர்ஸ் ஆன பொண்ணு நான் அதுதான் உங்களுக்கு தயக்கமா இருக்கான்னு…”
“சக்தி…இனி பேசக்கூடாது என்றபடி அருகில் நெருங்க…பற்றியிருந்த கைவலியே மெல்லிய நடுக்கம் கார்த்திக்கை தீண்டியது.”
சக்திக்குள் ஏதோ படபடப்பு இதயம் எகிறி குதித்து விடுமோ…புதிதாக ஏதோ ஒரு பரவசம் என்னவென்றே தெரியாத உணர்வில் உடல் முழுக்க சிலிப்பு ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தது கார்த்திக்கிற்கும் அவளது நிலை புரிய..
“சக்தி என்ன பார்த்தா பயமா இருக்கா என்ன…எவ்வளவு தைரியமா பிரச்சினையை ஹேன்டில் பண்ணி இருக்க… இப்ப கையை பிடிச்சதுக்கே நடுங்கற..”என்றபடி ஒரு கைகொண்டு இடையோடு அணைத்து பிடிக்க…மொத்தமாக தன்னை அவனிடம் தொலைக்க ஆரம்பித்தாள் . பேச்சு கூட தயங்கி தயங்கி வந்தது சக்திக்கு…
“அது வேற…இது வேற பேசாதிங்க கார்த்திக் என்று கூறியவளின் குரலே மெளிந்து ஒலித்தது முகம் முழுக்க சிவந்து இருக்க…”
“அதே தான் இனி பேசக்கூடாது” இந்த சிவந்த முகம் என்னை வா வான்னு அழைக்கிறது சக்தி என்றபடி அவளது இதழை நோக்கி நெருங்கி இருந்தான் கார்த்திக் சக்தியின் கண்கள் தானாக மூடிக்கொண்டது. இதமான மயக்கத்தோடு…மெல்லிய முத்தத்தில் தொடங்கி சக்தியை மொத்தமாக தனக்குள் சுருட்டிக்கொண்டான் கார்த்திக்…சக்தியின் அனுமதியோடு..
பிறகும் கூட விலக விடவில்லை அவளை தனது கையணைப்பில் சக்தியை வைத்தபடியே “தேங்க்ஸ் சக்தி புதிதாக பிறந்தது மாதிரி இருக்கு” எனறு சொன்னபடி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அப்படியே தூங்கி இருந்தான் கார்த்திக்.
ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக்கிற்கு…விடிந்த போது கண்விழித்து பார்க்க அங்கே சக்தி அருகில் இல்லை. அவளை தேடியபடியே குளித்து புறப்பட்டவன் வெளியே வர… எங்கும் இருப்பதற்கான அடையாளம் எதுவும் தெரியவில்லை.
ஹாலிற்கு வர..அங்கே பிருந்தா மட்டும்தனியாக அமர்ந்து இருந்தாள்.
“பிருந்தா சக்தி எங்கே” என்ற கேள்விக்கு…”அண்ணா கோவிலுக்கு…இப்ப வந்திடுவாங்க…”
“என்ன திடின்னு “என்று கேட்க…
“அண்ணி வந்ததும் அவங்க தான் முதலில் சொல்லணும் அப்புறம் நான் சொல்லுவேன்…”
“என்ன சொல்ல போற பிருந்தா” என்று கேட்க… அதே நேரம் வாசலில் காரின் ஓசே கேட்டது…”இதோ அம்மாவும் அண்ணியுடன் வந்தாச்சு “என்று பிருந்தா சொல்லும் போதே புன்னகை முகமாக சக்தி இவனிடம் நெருங்கியவள்…”பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக் “என்று சிரித்தபடி திருநீரை எடுத்து லேசாக நெற்றியில் வைத்து விட்டாள்.
“அண்ணா ஹேப்பிபர்த்டே அண்ணா” என்றபடி ஒருபுறம் ஓடிவந்து கையை பற்றி குலுக்கியவள் அவனது தோளில் சாய்ந்து கொள்ள…அந்த நிமிடம் இவர்களை பார்த்த லட்சுமி மனதிற்குள் நிறைவாக உணர்ந்தார்.
தொடரும்.