காற்று 1
“கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்”
பாடலின் வரிகளை பாடிய படி தன் ஆறடி கூந்தலை முன்னாள் விட்டு, கையால் சுற்றிய படி மான் போல் குதித்த படி சென்று கொண்டு இருந்தாள் உமா
அந்த அழகிய பல நிற மலர்களோடு பூத்து குலுங்கும் நந்தவனத்தில் அவ்வப்போது பார்வையை சுழற்றிய படி அதன் அழகை ரசித்ததோடு மட்டும் நின்று விடாமல், யாரையோ எதிர் பார்த்து காத்திருந்தது அவளின் பூவிழிகள்
கிட்ட தட்ட தோணுத்தொன்பது வகை மலர்கள் கொண்டு ரம்மியமாய் காட்சி அளிக்கும் அந்த ஆள் இல்லா பூங்காவில்… நூறாவது மலராக, மலர்ந்த முகமும்,சுழித்து பழகாத இழத்துடன் வளம் வந்தாள் உமா
“என்ன இவ்வளவு நேரம் ஆகியும் வரவே இல்ல..நாம தான் ஆர்வ கோளாறுல சீக்கிரம் வந்துட்டோமோ!!” கையில் இருக்கும் கடிகாரத்தில் பத்தாவது தடவையாக மணி பார்த்தாள் அவள்
“இல்லையே.. சொன்ன நேரத்துக்கு தானே வந்து இருக்கோம்” என்ற படி அவள் நடக்க
வானத்தில் விமானம் ஒன்று மெல்லிய சத்தத்துடன் பறக்க…அதுவரை இருந்த யோசனை எல்லாம் மறந்து “ஆஆஆ” என்று அந்த விமானத்தை பார்த்தவள்.. அது அவளின் கண் பார்வையை விட்டு மறையும் வரை வானத்தை தான் பார்த்து கொண்டு இருந்தாள் (90ஸ் கிட்டா இருப்பாளோ…இருக்கும் இருக்கும்)
வானத்தில் கவனம் வைத்தவளுக்கு தரையில் கவனம் தப்ப…அங்கு இருந்த சிறிய கல்லில் கால் தடுக்கி கீழே விழுந்தாள்
எழுந்து நின்று தன் ஆடையை சுத்தம் செய்து, கை கால்களில் இருக்கும் மண்ணை தட்டி விட்டவள், பார்வையை சுழற்ற,
“ஹையோ.. அம்மா.. என்ன யாராச்சும் காப்பாத்துங்க.ஹையோ” என்று அலற துவங்கி நின்ற இடத்திலேயே சிலையாகி விட்டாள்
சின்ன மண் மேடு போன்ற உயர்வான இடத்தில் அவள் நிற்க.. அவளை சுற்றி புதைகுழி போல் சேரும் சகதியுமாக நீர் இருக்க..அதில் இருந்து நூற்று கணக்கான பாம்புகள் ஒரே நேரத்தில் வெளியே வர… அதில் சிலவை அந்த மண் மேட்டில் இருக்கும் அவளை அடைய முயற்சி செய்ய.. வேர்த்து விறுவிறுத்து போய்..அசையாமல் சிலையென நின்று கொண்டு இருந்தாள் உமா
அதில் ஒரு பெரிய கரு நாகம் ஒன்று ஐந்து தலைகளுடன் அவள் முன் படம் எடுத்த படி ஓங்கி அவள் உயரத்திற்கு நிற்க..அடுத்த நொடி அது உமாவை தாக்க சீற
“கண்ணா”என்ற படி கண் மூடினாள் உமா.. இரண்டு மூன்று வினாடிகள் கழித்தும் சத்தம் எதுவும் வராமல் போக…
“ஒரு வேலை பாம்போட வயித்துல ட்ராவள் பண்றோமோ”என்று அவள் எண்ணி இருக்கும் நேரம்.. அவள் கால்கள் தரைக்கு மேல் எழ, எதோ காற்றில் பார்ப்பது போல் உணர்வு வர.
“போச்சு போச்சு..பாம்ப சாப்பிடுற சீனா காரண எல்லாம் இதுங்க இன்னும் பண்றது இல்ல…அப்பாவியான தமிழ் பொண்ணுங்கள தான் அட்டாக் பண்ணுதுங்க.. இன்னும் கொஞ்சம் நேரத்துல நாம பாம்போட உடம்புல ஐக்கியம் ஆக போறோமா” என்ற படி அவள் யோசனையில் இருக்க
அவளின் மென்மையான கால்கள் எதோ பட்டு விரிப்பில் படுவது போல உணர்வு வர.. கண்ணை திறந்தவள், கண் பிதுங்கி வெளியே வரும் அளவிற்கு முழித்தாள்
சந்தன நிற பட்டுடுத்தி.. சிகப்பு நிற சட்டையில்.. கிட்ட தட்ட ஆறடி உயரத்தில், தலையில் கிரீடம் போல் ஒன்றை அணிந்து கொண்டு, நெற்றியில் விபூதி வைத்த படி, அவளை ஒரு கையிலும், குதிரையை ஒரு கையிலும் ஏந்திய படி அவளுக்கு மிக அருகில் இருந்தான் அவன்..
“அவன் யார்” என்று மூளை புரிந்து கொள்ளும் முன்,அந்த குதிரை தன் றெக்கையை விரித்து கொண்டு வானில் பறக்க.. அவனை மேலும் ஆராய அவன் முகம் பார்க்க அவள் எத்தனிக்கை
முகத்தில் எதோ தூறல் போல் தண்ணீர் துளிகள் பட..அதை அவள் கண்டுகொள்ளாமல் போக..ஒரு செம்பு தண்ணீர் அவளின் தலையில் வந்து விழுந்தது
“ஐயோ..அம்மா” என்று அவள் பதறி கொண்டு எழுந்து அமர்ந்து, “எங்க என் குதிரை, எங்க என் கண்ணன்”என்று எதோ பிதற்ற
“அடியே பைத்தியகாரி.. என்னடி பண்ணுற..எத தேடுற” என்று ஒரு குரல் வர
குரல் வந்தா திசையில் பார்த்தவள்.. அங்கு அவளின் அம்மா கோமதி கையில் காபி டம்ளருடன் நின்று இருந்தாள்
தலையை நான்கு உலுக்கி மறுபடியும் பார்த்த பிறகு தான் அது கனவு என்பதே அவளின் மூளைக்கு எட்டியது
“ஏம்மா நான் தெரியாம தான் கேக்குறேன்..கனவுல கூட நிம்மதியா இருக்க விட மாட்டியா..தண்ணிய ஊத்தி என் கனவுல மண்ணள்ளி போட்டுட்டியே” என்ற படி அவள் சலித்து கொள்ள
“கனவா.. அப்டி என்ன கனவா கண்டு சலிச்சிக்குறீங்க மகாராணி” கையில் இருக்கும் டம்ளரை மேஜை மேல் வைத்த படி கோமதி கேட்க
உமா தன் கனவை, காபி அருந்திய படி கூற..
“அடடே.. இப்டி பட்ட பைத்திய கார கனவு எல்லாம் என் பொண்ணுக்கு தான் வரும்” என்று குறை பட்டு கொண்டு
“ஒழுங்கா போய் குளிச்சிட்டு ரெடி ஆகுற வழிய பாரு.. அதை விட்டுட்டு வெள்ள குதிரை,பச்ச கொரங்குனு பேசிகிட்டு.. பைத்திய காரி”என்ற படி அவர் அந்த அறையை ஒழுங்கு படுத்த நகர
“ஒரு நாள் இல்ல ஒரு நாள்.. என் கனவு பலிக்க போகுது.. அப்போ நீயெல்லாம் வாய் மேல விரல் வெப்ப பாரு” கட்டிலில் சிறிதும் அசையாமல் அவள் பேச
“உலகத்துல இல்லாத சீம ராஜா.. இவளுக்காக வெள்ளை குதிரைல கல்யாண மாலையோட வரானாம்…காலைலயே கனவ பாரு சிரிக்கிக்கு” என்று கோமதி சலித்து கொள்ள
“நான் என்ன வேணும்னேவா சொன்னேன்.. கனவு வந்துது சொன்னேன்.. ஒரு கனவு கண்டது குத்தமாடா இந்த வீட்டுல… ச்சா” சலித்த படி அவள் புலம்ப
“என்னமா அங்க சத்தம்” என்ற படி கோமதி முறைக்க
“ஒன்னும் இல்ல..பேசிகிட்டு இருக்கோம் மாமா..அடிச்சா பேசிகிட்டு உருக்கேன்மா” துள்ளி குதித்த படி பாத்ரூமில் புகுந்தாள் உமா
குளித்து முடித்து…தன் அறையில், தன் ஆறடி கூந்தலை காய வைத்தபடி.. போன வாரம் கடை தெரு சென்ற போது வாங்கிய சுடிதாரை எடுத்து போட்டு கொண்டவள்.. அலமாரியை மூடும் போது கண்ணில் பட்டது..அது
இத்தனை நாட்கள் யாருக்கும் தெரியாமல் அவளுக்குள் பொத்தி பொத்தி வைத்து இருந்த அந்த ரகசியத்தின் சாட்சி
எதோ ஒரு துணியின் கிழிந்த பாகம் அது..கிட்ட தட்ட மூன்றும் வருடமாக எங்கோ தொலைத்த அவளின் கண்ணின் முதலும் கடைசியுமான அடையாளம் அது.. உயிரை விட அதிகமாகவே அதை பாத்துர படுத்தி வைத்து இருக்கிறாள்
அவள் அவளின் கண்ணனின் நினைவில் மூழ்கி இருக்க..
“டாமல்” என்று கதவை திறந்த படி உள்ளே வந்தாள் ஸ்ரீஜா.. உமாவின் எதிர் வீட்டு தோழி ..ஒரே வயது தான்..சிறு வயது முதலே உமாவுடன் இருக்கும் தோழி..உமாவின் ரகசிய கண்ணை கண்டதும், அறிந்து வைத்து இருப்பவளும் அவள் ஒருத்தி தான்
“வாடி என் ஆச தோழியே .. என்னடா கோழி கூவி, கொழம்புக்கே போயிடுச்சி.. இன்னும் மகாராணியை காணோமேன்னு பார்த்தேன்” என்றாள் கையில் இருக்கும் துணி துண்டை உள்ளே வைத்த படி
“நான் வர்றது இருக்கட்டும்.. நீ என்ன உன் கண்ணன் கூட காலைலயே ரொமான்ஸ்ஸா..அவன் அன்னைக்கு காத்து மாதிரி வந்து காத்துலயே மறைஞ்சிட்டான்… நீ தான் அவனை நெனச்சி பைத்தியமா சுத்துற” எப்போதும் கூறும் அறிவுரை தான் என்றாலும், தோழியின் மேல் இருக்கும் கவலையில் இன்றும் அதையே கூறினாள் ஸ்ரீஜா
அவள் கூறியது காற்றில் மட்டுமே கரைய.. உமாவின் மூடிய காதை எட்ட வில்லை.. அது பழகிய ஒன்று தான் என்பதால் ஸ்ரீஜாவும் பெரிதாக அலட்டி கொள்ள வில்லை
“அடியே.. இன்னைக்கு மொத நாள் காலேஜ்க்கு போறோம்.. ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் கிளம்பு..உன்னால எனக்கு லேட் ஆச்சு.. உன்ன வேட்டி பூமில பொதச்சிடுவேன்”
“வாடி வாடி.. அதுக்குள்ள மீச வேர்த்துடும் இவளுக்கு.. அறை அடி முடி தான் இருக்குன்ற காண்டு தானே” அவளின் முடியில கைவைத்த படி உமா கிண்டல் அடிக்க
“பேசுடி பேசு.. ஒரு நாள் பாரு.. ராவோட ராவா சிவகாசி படத்துல வர மாதிரி உன் முடிய ஒருத்தன் வெட்டிட்டு போக போறான்.. நீ கதற போற”என்று அவள் பதில் சொல்லி கொண்டே, கீழே உள்ள முற்றத்திற்கு இருவரும் வந்து சேர்ந்தனர்
டைனிங் டேபிள்ளில் அமர்ந்து உணவருந்தி கொண்டு இருந்தார் செல்வம்..
“ஹாய் அப்பா..எப்போ பார்த்தாலும் சாப்பாடும் தட்டுமா தான் சுத்துறீங்க போல” அவரை வம்பிழுத்த படி உமாவும், ஸ்ரீஜாவும் வர
“போடி கழுத..மொத நாள் காலேஜ்க்கு நேரம் ஆகிட போகுது… சீக்கிரம் வந்து சாப்பிடுங்க” என்ற படி அவர் சாப்பிட்டு முடிக்க
சமையல் அறை சென்றவள்…
“அன்னபூரணி தாயே.. இன்னைக்கு என்ன சாப்பாடு” என்ற படி தட்டை கையில் எடுக்க
“உப்மா பண்ணி இருக்கேன்டி.. மதியத்துக்கு சாம்பாரும், உருளைக்கிழங்கும் பொறிச்சி இருக்கேன்.. ரெண்டு பேருக்கும் சாப்பாடு கட்டிட்டேன்.. போகும் போது எடுத்து தரேன்”
“என்னாது உப்மாவா.. இந்த கருமத்தயா அந்த மனுஷன் ருசிச்சு ருசிச்சு சாப்டுட்டு இருக்காரு.. ஹையோ இதுக்கு நான் சாப்பிடாமலே இருப்பேனே” என்ற படி அவள் வாய் அடிக்க
“சரி போடி.. சாப்பாடு இல்லாமல் பட்னி கேட..எனக்கு என்ன” என்ற படி அவர் வேளையில் முழ்கி விட
ஸ்ரீஜா மட்டும் தனக்கு ஒரு தட்டில் எடுத்து கொண்டு சாப்பிட சென்று விட்டாள்
சிறிது நேரம் யோசித்த உமா.. கோமதியிடம் சென்று “நான் பிடிக்காதுன்னு தானே சொன்னே.. சாப்பிட மாட்டேன்னு சொல்லலியே..குடு.. நானும் சாப்பிடணும்.. இன்னைக்கு மொத நாள் காலேஜ் வேற.. லேட் ஆகுது எனக்கு” கோமதியை பேச விடாமல் சாப்பிட அமர்ந்தாள் உமா
“அம்மா.. வெறும் உப்மா எப்படிமா சாப்பிடுறது.. கூட தொட்டுக்க எதுவும் இல்லையா” என்று அவள் குரல் கொடுக்க
“குடுத்தாத திங்குறாளா பாரு..வாய் ஓயாம பேசிக்கிட்டே இருக்கா பாரு..ஏமா மதி.. அந்த சக்கரையை கொண்டாந்து உம் மகளுக்கு கொடு” வெற்றியலையை இடித்த படி பேசினார் சிவகாமி, உமாவின் பாட்டி
“ஆமா.. சிவகாமி தேவி சாசனம் போட்டுட்டாங்க.. அப்டியே நிறைவேத்திடுங்க” என்ற படி உப்புமாவை உள்ளே தள்ளினாள் உமா
“வாயை பாரு.. வங்கலாம் வரைக்கும் போய்ட்டு வருது.. எவன் இவ கிட்ட மாட்டிகிட்டு முழிக்க போறானோ” பேசிய படியே “டொக் டொக்” என்று இடி பட்டது வெற்றிலையும்,பாக்கும்
“பார்த்துகிட்டே இரு..ராஜகுமாரன் குதிரைல வந்து.. அப்டியே என்னை கடத்திகிட்டு போக போறான்” என்று உமா கூற
அதே நேரம் ஸ்ரீஜாவிற்கு பொறக்குகேர..அதை பார்த்தவள் “தனிய குடி.. தனிய குடி.. இதெல்லாம் நாங்க வசந்த மாளிகைலயே பார்த்துட்டோம்” என்ற ஓடி தண்ணீரை நீட்டினாள்
“அடியே.. உன்ன அப்படியே கடத்திட்டு போனாலும்..அப்டியே கொண்டு வந்து விட்டுட்டு போயிடுவான்.. அவனுக்கும் உயிர் பயம் இருக்கும்ல” என்று சிவகாமி கூற
அதை கேட்டு அங்கு இருந்த அனைவரும் சிரிக்க..அதில் அதிக சத்தத்துடன் சிரித்த படி வந்தான் ஜனா.. உமாவின் அண்ணன்
“ஏய்.. கெழவி.. வெத்துலய இடிக்கறத மட்டும் பண்ணு..நடுவுல என்னை இழுத்த.. அப்றம் உன்னை நான் மர்கயா பண்ணிடுவேன்” என்ற படி அவள் வீர வசனம் பேச
“போடி போடி.. பொக்கேத்த சிறுக்கி” என்ற படி அவர் இடிக்கும் வேலையை தொடர
இதை அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த ஜனாவை பார்த்தவள் “என்ன இளிப்பு..போ போய் வண்டியை எடு.. நாங்க காலேஜ்க்கு போகணும்” என்றாள் மீசையில் மண் ஒட்டாத குறையாக
அதில் சிரித்தவன்.. “சரிங்க மகாராணி” என்ற படி ஜீப்பை கிளப்ப
இருவரும் சாப்பிட்டு, கை கழுவி… வண்டியை நோக்கி நடந்தனர்
போகும் முன்.. பூஜை அறையில் புல்லாங்குழலுடன் சிரித்த படி நின்று கொண்டு இருந்த அந்த கோகுல கண்ணை பார்க்க தவறவில்லை அவள்
காற்று வீசும்…..
ஹாய் மக்களே
இது ஒரு குட்டி கதையா தான் நான் எழுத நெனச்சி இருக்கேன்.. ஆனா எது வரைக்கும் போகும்னு தெரில… இது முடிஞ்ச அப்றம் தான் இலக்கியனை உங்களால பார்க்க முடியும்
அது வரைக்கும் நம்ப உமா பொண்ணுகூட சிரிச்சிகிட்டே இருங்க
மறக்காம இந்த ud எப்படி இருந்ததுன்னு கமெண்ட் பண்ணிடுங்க…