காற்று இரண்டு
காலை கதிரவனின் செங்கதிர்கள் கூட சுட்டெரிக்கும் தீ போல் உணரும் கத்திரி வெயில் காலம் அது..
பள்ளி கல்லூரிகள் விடுமுறையில் இருக்க.. குடும்பங்கள் ஊட்டி கொடைக்கானல் என்று இந்த வெயிலில் இருந்து தப்பித்து கொண்டு சென்று விட…
எப்போதும் இரைச்சலாய் இருக்கும் அந்த சாலை.. இன்று ஏனோ அமைதியாக காண பட்டது
அந்த அமைதியிலும்.. மனம் முழுதும் நினைவுகளின் காயங்களுடன்.. மறக்க நினைத்தும் தோற்கும் மனதுடன்… மனதின் கோவம் கண்ணில் தெரிய.. கொந்தளித்த படி தன் காரில் சென்று கொண்டு இருந்தான் சத்யன்
எவ்வளவு நினைத்தும் அவனால் அந்த நிகழ்வை மறக்க முடுயவில்லை..இன்று அவன் இருக்கும் இடத்திற்கு, அன்று நடந்த சம்பவம் தானே காரணம் என்று மூளை எடுத்துரைத்தாலும்… ஏமாற்றத்தில் வாலி இதயத்தை தானே தாக்கியது.. அது மட்டும் அணையாமல் எரியும் தீ குழம்பு போல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது
செல்லும் பாதை கூட கவனத்தில் இல்லாமல்.. அவன் போய் நின்ற இடம் சென்னை கடற்கரை.. ஏதோ இங்காவது அமைதி கிடைக்கும் என்று தோன்றியது அவனுக்கு
அதற்கிடையே அவனின் கைபேசி அலற.. எடுத்தவன் “தம்பி எங்க இருக்க.. சொல்லாம கொள்ளாம எங்க போன? ” பதற்றத்துடன் ஒலித்தது விசுவின் குரல்
“இங்க பீச் வரைக்கும் வந்து இருக்கேன்பா.. எனக்கும் இன்னும் இல்லை.. சாப்பிட வீட்டுக்கு வந்துடுறேன்” கம்பீரமாக ஒலித்தது அவனின் குரல்
அதில் “சரி” என்று கைபேசியை அவர் வைத்து விட.. கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் அந்த பீச்சை வெறித்த படி அமர்ந்து இருந்தான் அவன்
மனம் முழுதும் அந்த நாளின் நியாபகமே அதிகம் இருந்தது… மனது ஒரு புறம் அழுது கொண்டு இருக்க.. கண்ணில் தேங்கிய கண்ணீரை கட்டு படுத்தியவனாய் வீட்டிற்கு சென்றான் சத்யன்
வாசலில் நாய் குட்டியுடன் விளையாடி கொண்டு இருக்கும் ஹரினியை பார்த்தவன்.. தன் கவலையை தன்னுள் மறைத்து கொண்டு.. சகஜமாக வீட்டிற்குள் நுழையுந்தான்…
வரும் அவனின் முக மாற்றத்தை கவனிக்காமல் இல்லை விசு..இருந்தும் அதை பற்றி கேட்டு சத்யனை மேலும் வருத்த பட செய்ய நினைக்க வில்லை.. அதனால் அவரின் வேலையில் அவர் இருக்க
சமையல் அறையில் இருந்தது வெளியே வந்த சாரதா “ஹரினி.. எவ்வளவு நேரம் அந்த நாய் கூட விளையாடுவ.. வா வந்து சாப்பிடு” என்ற படி குரல் கொடுக்க
“அண்ணன் வரட்டும்மா.. சேர்ந்து சாப்பிடுறேன்” என்ற படி பதில் வர
“சத்யா.. போப்பா.. நீயும் போய் குளிச்சிட்டு வந்துடு.. பாரு உடம்பு எல்லாம் வேர்வையா இருக்கு.. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்”
“சரிமா” என்ற படி மேலே சென்றவன், நேரே குளிக்க சென்றான்
தண்ணீரில் அவனின் கண்ணீரும் சேர்ந்து வழிய… குளியலுடன் அழுகையையயும் முடித்த படி வெளியே வந்தான் சத்யன்
?????
இருவரையும் காலேஜ்ஜில் இறக்கிய ஜனா.. உமாவை அழைத்து..
“இதோ பாரு.. இது புது இடம்.. புது படிப்பு.. ஸ்கூல் மாதிரி இது கிடையாது”
“யாராச்சும் வம்பு பண்ண உங்கிட்ட வந்து சொல்லட்டுமா அண்ணா” பேசுபவனை இடைமறித்து பாவமாக முகத்தை வைத்து கேட்ட உமாவை பார்த்து முறைத்தவன்
“நீ யார் கிட்டயும் வம்பு இழுத்துகிட்டு வராம இருந்தா போதும் தாயே.. நானும் இங்க தான் படிச்சேன்.. எனக்குன்னு கொஞ்சம் மரியாதை இருக்கு.. அதை கெடுத்து தொலைச்சிடாதனு சொல்ல வந்தேன்” என்றான் ஜனா, எரிச்சலாக
“என் கூட இருக்கறது அம்புட்டும் வேசமா இல்ல இருக்கு.. இவரு பெரிய துரை இவர் பேரை நாங்க கெடுக்குறோமாம்.. போ போய் வேலைய பாரு” என்ற படி அவள் அடங்காமல் பேச
“நீயெல்லாம்” என்று பல்லை கடித்து கொண்டு இருக்க..
“ஸ்ரீஜா.. இதுகூட சேராத.. உன்னையும் வம்புல மாட்டி விட்டுடுவா” என்று அவளுக்கு அறிவுரை கூற
அதற்கும் எதோ எடக்காக பேச வந்த உமாவை தடுத்தது அங்கு வந்த நான்கு மாணவர்கள் தான்
“என்ன சீனியர் இங்க வந்து இருக்கீங்க.. என்ன விஷயம் சீனியர்” படு பவ்யமாக வந்தனர் நால்வரும்
‘இல்ல.. இவங்க என்னோட தங்கச்சிங்க.. இன்னைக்கு தான் மொதல் நாள் காலேஜ் வராங்க.. அதன் விட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்றான் கம்பீரமாக சீனியர் என்ற கெத்துடன்
“நீங்க எதுக்கு சீனியர் கவலை படுறீங்க.. நாங்க இருக்கோமே.. நாங்க பார்த்துக்குறோம்… நீங்க கவலை படமா போய்ட்டு வாங்க” என்ற படி அவர்கள் கூற
ஜனாவும் சரி என்றபடி கிளம்பி விட்டான்..
அந்த நால்வரும்.. “சிஸ்டர்ஸ் உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் எங்களை தயங்காமல் கேளுங்க.. நாங்க செய்யுறோம்”
“நாங்களும் உங்கள் டிபார்ட்மென்ட் தான்.. பைனல் இயர் பண்றோம்…உங்க நம்பர் குடுத்தா கொஞ்சம் வசதியா இருக்கும்” முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டியபடி ஒருவன் கூற
“நம்பர் தானே “113456789” இந்த வரிசைல தான் வரும்.. நான் வேணும்னா அண்ணனை கேட்டு சொல்லடா” நக்கலுடனே உமா பேச
ஸ்ரீஜாவோ “புது எடத்துல எதுக்குடி பிரெச்சனை.. நமக்கு எதாவது தேவைனா இவங்க கிட்ட தான் கேக்கணும்.. இவங்களையும் பகச்சிக்காத” என்ற படி எச்சரிக்க
அது நால்வரில் ஒருவர் காதில் விழுந்து விட ” ஆமாம் சிஸ்டர்.. நாங்க உங்களுக்கு எல்லா உதவியும் பண்ணுவோம்” என்ற படி தலையை கோதி கொண்டு ஒருவன் கூற
“உங்களை எல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவானுங்களா தெரியலையேடா..சரி ஏதாச்சுனா சொல்லுறோம்..மத்த படி இந்த நம்பர் கேக்குற வேலை வெச்சிக்கிடீங்க.. அப்டி பண்ணீங்க, பேச நம்பர் இருக்கும்… ஆனா கேக்க காது இருக்காது” என்ற படி சென்று விட்டாள் உமா
செல்லும் அவளை பார்த்து கொண்டு இருந்த நால்வரும்…”இவ மட்டும் அந்த வருண் கிட்ட மாட்டனும்.. அப்போ தெரியும்டா இவளுக்கு… எதோ சீனியர் தங்கச்சின்னு உதவி பண்ணலாம்னு பார்த்தா.. ரொம்ப தான் வாய் பேசுறா” ஒருவன் கூற
“டேய்.. அடங்குங்கடா.. வாய் நெறைய சிஸ்டர்னு கூப்டுட்டு.. நம்பர் தான்னு கேட்டா.. பொறுக்கின்னு தான் நினைப்பாக.. சீனியர் ஓட தங்கச்சி நாம தான் பார்த்துக்கணும்” என்ற படி ஒருவன் கூற.. அதை ஆமோதித்து அனைவரும் தலை அசைத்தனர்
பின் பிஏ மேத்ஸ் பிரிவை தேடி கண்டு பிடித்து..உள்ளே நுழைய.. அங்கு முதல் பெஞ்சில் இருக்கைகள் காலியாக இருக்க.. அங்கு சென்று இருவரும் அமர்ந்து கொண்டனர்
மாலை வர.. அவர்களை அழைக்க ஜனா வந்து காத்திருக்க.. அப்போது ப்ரின்சிபிள் அறையை விட்டு அந்த நான்கு மாணவர்கள் வருவதை கண்ட ஜனா..
பதறி போய் அவர்களிடம் சென்று.. “என்னடா இது.. உடம்பெல்லாம் காயம்…தலையில வேற கட்டு போட்டு இருக்கு” என்று வினவ
அப்போது ஸ்ரீஜாவுடன் எதையோ பேசி, சிரித்து கொண்டு வந்து கொண்டு இருந்தாள் உமா
அவளை பார்த்த அந்த நால்வரும் மேலும் பம்மி கொண்டு..
“சீனியர் இதோ, எங்களோட இந்த கோலத்துக்கு… இதோ வாரங்களே உங்க அருமை தங்கச்சி அவுங்க தான் காரணம்… பொண்ண வளக்க சொன்னா.. குட்டி சாத்தான வளத்து வெச்சி இருக்கீங்க…அது மொத்தமா எங்க மேல காட்டு காட்டுனு கட்டிடுச்சி” கூறிய படி நால்வரும் நகர
“பொண்ண நல்லா வளத்து இருக்கீங்க சீனியர்.. நல்லா வளத்து இருக்கீங்க.. அவுங்களுக்கு நாங்க பாதுகாப்பு இல்லை.. எங்களுக்கு தான் அவுங்க பாதுகாப்பு குடுக்கணும்…என்னா அடி” நொண்டிய படி அந்த நால்வரில் ஒருவன் கூறி கொண்டே போக, எதுவும் தெரியாதது போல் வந்து நின்றாள் உமா
வந்தவளின் காதை பிடித்த ஜனா.. “என்னடி பண்ண மொத நாளே.. இப்டி கதறி அடிச்சிக்கிட்டு ஓடுறாங்க” என்று கேட்க
“ஹையோ அண்ணா.. நான் எதுவும் பண்ணல.. நிஜமா.. என்னை நம்பு” குழந்தை போல் முகத்தை வைத்து கொண்டு கூறும் போதே, எதோ பெரிதாக செய்து இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் ஜனா
காதை மேலும் திருகிய படி “உன்னயெல்லாம்” என்று பல்லை கடித்தவன்
“ஸ்ரீஜா என்ன நடந்ததுன்னு நீ சொல்லுமா.. நீதான் உண்மையை பேசுவ” கேள்வி ஸ்ரீஜா பக்கம் திரும்ப
“சொல்லாத சொல்லாத” என்ற படி உமா அவளை கண்களால் உருட்டி மிரட்ட… அதை கண்ட ஜனா.. ஒரு கையால் காதை திருகிய படி.. மறுகையால் மண்டையில் “நாங்” என்று ஒரு கொட்டு வைக்க
“நீ எதாவது பேசுன..உன்ன இங்கயே கொன்னு போட்டுடுவேன்.. அமைதியா இருடி” உமாவை அதட்டி, ஸ்ரீஜாவின் பக்கம் திரும்பினான் ஜனா
“அண்ணா நாங்க ஒன்னும் பண்ணலை.. அந்த பசங்க தான் எங்க கிட்ட வம்பிழுத்தாங்க” என்ற படி ஸ்ரீஜா துவங்க
“அண்ணா.. என் காதை விட்டுட்டு மேல பாரு.. பிளஷ்பக் சொல்லுறால.. பூமியை பார்த்தா எப்படி பிளஷ்பக் தெரியும்” நடுவில் உமா வாயடிக்க
“எல்லாம் என் தலையெழுத்து” என்ற படி அவனும் மேலே பார்த்தான்
வகுப்புகள் ஆரம்பித்து.. பாதி நாள் சென்று இருக்க… உணவு நேரத்தில் சாப்பாடு பைகளுடன் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர் இருவரும்
“ஏன்டி.. இங்கயும் ஸ்கூல் மாதிரி மரத்தடில தான் உக்காந்து சாப்பிடணுமா.. அதுக்குன்னு தனியா இடம் எல்லாம் கிடையாதா” கேட்டபடி உருளைக்கிழங்கை உள்ளே தள்ளி கொண்டு இருந்தாள் உமா
“ஆமா… மகாராணி.. தனி ரூம் இருந்தா தான் சாப்புடுவீங்களோ… அமைதியா சாப்பிடுடி.. அறை மணி நேரம் தான் சாப்பிட டைம் இங்க” பேசினாலும் கவனத்தை சாப்பாட்டில் வைத்தே இருந்தாள் ஸ்ரீஜா
“இல்லடி குண்டச்சி.. நாம இப்டி வெளிய உக்காந்து சாப்பிடுறோமே.. மரத்து மேல இருந்து காக்க சிலுமிஷம் பண்ணிட்டா..நம்ப சாப்பாடு தானே கேட்டு போகும்…அதான் கேட்டேன்” என்றாள் சாவகாசமாக
“அடி சண்டாளி..உன் வாயை கழுவுடி.. பேச்சை பாரு..ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு சாப்பிடுடி.. சாப்பிடும் போது அபசகுனமா பேசிகிட்டு” ஸ்ரீஜா கடிந்து கொள்ள.. ஒரு வழியாக இருவரும் சாப்பிட்டு முடித்தனர்
முடித்து கை கழுவ இருவரும் வர.. அங்கு கிட்டத்தட்ட பத்து குழாய்கள் நீளமா அமைக்க பட்டு இருக்க.. முதல் இரண்டு குழாய்களில் கை கழுவி கொண்டு இருக்கும் போது
“டேய் மச்சா.. சும்மா சொல்ல கூடாதுடா.. புதுசா வந்து இருக்க ஜூனியர் பொண்ணுங்க எல்லாம் சும்மா பாக்க செமயா இருக்காளுங்கடா.. யார பாக்குறது, யார விடுறதுனே தெரிலடா… நடுவுல நம்ப மனசு தான் பாடா படுது” கடைசி குழாயின் அருகில் ஒருவன்.. நண்பர்கள் நால்வரோடு முதுகு காண்பித்து பேசி கொண்டு இருக்க
அவற்றை கேட்ட உம்மாவிற்கு கோவம் புசுபுசுவென வந்து விட.. அதை கவனித்த ஸ்ரீஜா
“அடியே அடங்குடி… என்ன விஜய சாந்தினு நெனப்பா.. தப்ப தட்டி கேக்க போறியா.. மூடிக்கிட்டு அமைதியா நில்லு..சாயந்தரம் அண்ணன் கிட்ட சொல்லிக்கலாம்” என்ற படி உமாவை இழுத்து கொண்டு சென்றாள் ஸ்ரீஜா
“அவனுங்க அவ்வளவு பேசுறானுங்க அவனுங்க வாயை உடைக்காம.. என்னை அமைதியா இருன்னு கூட்டிட்டு வராபாரு..பயந்தாங்கோலி” என்ற படி உமா சீர
“நீ உன்னோட எமோஷன்ஸ்ஸ அடக்கு.. கோவத்தை கட்டு படுத்து…இல்லனா இந்த காலேஜ்ஜை விட்டு தொரத்திடுவாங்க நம்மளை” வடிவேலு பாணியில் ஸ்ரீஜா பேச
கோவத்தில் சீறி கொண்டு இருந்த உமாவிற்கு சிரிப்பு வந்து விட… சிரித்த படி அவ்விடம் விட்டு நகர்ந்தனர், இருவரும்
“அடியே அடியே நில்லுடி.. அங்க பாரு.. அந்த ரோஸ்.. வெள்ளை கலர்ல அழகா இருக்குல.. வாடி பரிச்சிட்டு வரலாம்” என்ற படி உமா குதிக்க
“அடியே நெட்ச்சி.. குத்திக்காகடி.. சாதாரண ரோஸ் தானே..உங்க வீட்ல தான் அவ்வளவு ரோஸ் செடி வளக்குறல.. அப்றம் இந்த வெள்ளை ரோஸ்க்கு மட்டும் ஏன் இப்டி அலையுற” ஸ்ரீஜா நொடிந்து கொள்ள
“வெள்ளை ரோஸ் எவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா.. சாதாரணமா நம்ப நாட்டு மண்ணுக்கும், வெப்பத்துக்கும் அது வளராது..குளிர்ந்த நாட்டுல தான் அது வளரும்…
ரோஜா பூக்கள் எல்லாமே முகல் அரசர்கள் நமக்கு விட்டுட்டு போனதுனு தானே நமக்கு தெரியும்.. ஆனா இந்த வெள்ளை ரோஸ் மட்டும்…ரொம்ப காலத்துக்கு இங்கிலாந்து ராஜா பரம்பரை மட்டுமே இதை வளர்த்துக்கிட்டு வந்துது..இதை அதிஷ்ட செடியாவே அவுங்க பார்த்தாங்க..
முக்கியமா ராஜ குடும்பத்தை சேர்ந்த ராணிகள் யாராவது கர்ப்பமா இருந்து, அவுங்களோட ஒன்பதாவது மாசத்துல அவுங்க தோட்டத்துல இந்த வெள்ளை ரோஜா பூத்தா.. ராஜ குமாரன் பொறக்க போறான்னு அர்த்தமாம்.. அதே மாதிரி இளவரசன் தான் பிறப்பாராம்” உமா மிக சுவாரசியமாக பேசி கொண்டு இருக்க
“ஆஆஆஆஆ” வாயை திறந்து ஸ்ரீஜா கொட்டாவி ஒன்றை விட.. அதில் கடுப்பான உமா, அவளை முறைக்க
“என்ன என்னடி பண்ண சொல்லுற.. வயிறு நெறைய சாப்பிட்டுட்டு..ராஜா கதை கேட்டாலே தூக்கம் வரும் ..இதுல வெள்ளை ரோஜா கதை வேற.. போடி.. அந்த ரோஸ் தானே வேணும்.. போய் பரிச்சிகிட்டுவா.. என் உயிரை வாங்காத”
“வரவர ரொம்ப தான்டி சலிச்சிக்குற குண்டச்சி… பார்த்துக்குறேன் உன்னை” என்ற படி உமா துள்ளி குதித்து கொண்டு ஓடி போய் அந்த மலரை பறித்து கொண்டு வகுப்பிற்கு சென்று விட்டனர்
வாசலில் நுழைய.. பெரிய கூட்டம் ஒன்று வகுப்பறையில் இருப்பதை கண்டவள்..
“என்னடி.. கிளாஸ் மாறி வந்துட்டோமா என்ன” என்ற படி வெளியே இருக்கும் பலகையை இரண்டு முறை சரி பார்த்தாள் ஸ்ரீஜா
“சரியா தான்டி வந்து இருக்கோம்…உள்ள பாரு.. அந்த கொரங்கு கூட்டம் இருக்குங்க.. அதுங்க நம்ப கிளாஸ்ல என்ன பண்ணுதுங்க?” என்று யோசித்த படி இருவரும் உள்ளே செல்ல
கைகழுவும் இடத்தில் இருந்த அதே கூட்டம்,இன்னும் சிலருடன் அங்கு நின்று கொண்டு.. அந்த கிளாஸ் பெண்களிடம் எதையோ கூறி கொண்டு இருந்தனர்
அதற்கு அவர்கள் தலையை குனிந்த படி.. முழித்து கொண்டு பயந்து போய் நின்று கொண்டு இருந்தனர்
மேலும் அந்த கூட்டத்தில் முன் வரிசையில் போய் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்க துவங்கினார் உமாவும், ஸ்ரீஜாவும்
“ஏய் காதுல விழலையா.. இதோ இவனுக்கு ப்ரொபோஸ் பண்ணுனு சொல்லிக்கிட்டு இருக்கோம்…நீ என்ன மல மாதிரி நிக்குற.. இப்போ நீ ப்ரொபோஸ் பண்ணல.. அப்றம் அவனே உன்னை கிஸ் பன்னிடுவான்.. பையன் வேற ரொம்பவே காஞ்சி போயிருக்கான்” பெஞ்சின் மேல் ஏறி கொண்டு நாட்டாமை போல் ஒருவன் பேச
அதை கேட்டு அந்த பெண் என்ன செய்வது என்று புரியாமல்.. திரு திருவென முழித்து கொண்டு நிற்க…அந்த கூட்டத்தை சார்ந்த ஒருவனோ… அவளையே பார்த்த படி நின்று இருந்தான்
இதை கண்ட உமாவிற்கு மறுபடியும் கோவம் வந்து விட
“பத்தியாடி.. அந்த காண்டாமிருகத்துக்கு அந்த பொண்ணு ப்ரொபோஸ் பண்ணுமாம்.. நல்லா குட்டி சாத்தான் மாதிரி பெஞ்ச் மேல உக்காந்துகிட்டு ஏகாதலத்தை பார்த்தீல இவனுங்களுக்கு” என்ற படி உமா போங்க
“ஆமாம்டி உமா.. இவனுங்க கெட்ட கேட்டுக்கு கிளி மாதிரி இருக்க அந்த பொண்ணு கேக்குதா.. இவனுகளை..” ஸ்ரீஜா பல்லை படிக்கும் முன் பணியில் இறங்கினாள் உமா
தன் பையில் இருந்த வாழை பழத்தை எடுத்தவள்.. பழத்தை விடுத்து.. தோலை மட்டும் கையில் எடுத்தவள்
“சீனியர் சார்.. அங்க நின்னுக்கிட்டே பேசுனா எப்படி… இதோ இங்க வந்து.. அப்டியே ஸ்டைலா நடந்து பொண்ணா.. பொண்ணு பார்த்து மயங்கி ப்ரொபோஸ் பண்ண போறா” எங்கோ நின்றவனை தன் அருகில் அழைத்தாள் உமா
அவனும் தான் பலி கடா ஆக போவதை உணராமல்… உமா அருகில் சென்று நின்றான்
“ஹாங்..இப்போ இங்க இருந்து ஸ்டைலா நடந்துட்டு அவ கிட்ட போங்க பாப்போம்” என்றாள் நல்லவள் போலவே
“பச்ச மண்ணு.. பலி ஆக போகுதே” என்ற படி ஸ்ரீஜா சிரித்து கொண்டு இருக்க
அவனும் நடந்த படி அவளிடம் செல்ல.. நேரம் பார்த்து கையில் இருந்த வாழை தோலை, அவன் பாதையில் போட்டாள் உமா
அவனும் ஸ்டைல் என்ற பேரில் காலை தரையில் ஊனி நடக்காமல்… லேசாக நடக்க.. அந்த தோல் வழுக்கி அந்த பெண்ணின் காலிலேயே விழுந்தான்..
இதை பார்த்த அனைவர்க்கும் சிரிப்பு வந்தாலும்.. சீனியர்கள் இருப்பதால் அனைவரும் அமைதியாய் உள்ளுக்குள் சிரிக்க
உமா மட்டும் ” தலைவா யு ஆர் கிரேட்.. எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று பின்னால் இருந்து குரல் கொடுக்க
அதில் அந்த மொத்த கூட்டமும் சிரித்து வைக்க… அங்கு இருந்த சீனியர் அனைவர்க்கும் அசிங்கமாய் போனது
“என்ன குமாரு ஒரே அசிங்கமா போச்சா.. நம்ப சீனியர் தங்கச்சி ஆச்சே.. சும்மாவா” என்ற படி ஜனா அறிமுகம் செய்த நால்வர் கிளாஸ்ஸிற்குள் வர
“டேய் என்னங்கடா.. திமிரா..சீனியர் தங்கச்சினா நாங்க வணக்கம் வெக்கணுமா” என்று ஒருவன் பாய
“டேய் அடங்குங்கடா.. அதான் மண்ணுல விழுந்தாச்சுல… இனிமேல் ஆச்சும் எங்க டிபார்ட்மென்ட் பொண்ணுங்க கிட்ட வெச்சிக்காதீங்க..டேய் வருணே இனி புடவை கட்டிக்கோ.. சரியா” என்ற படி இவர்கள் வம்பிழுக்க
பேச்சு வார்த்தை, கைகலப்பில் முடிய.. இரு சாராருக்கும் பலத்த அடி தான்.. அவர்கள் பிரின்சிபால் முன் நிறுத்த பட…அவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுத்து விட பட்டனர்
இது அனைத்தையும் உமா தூர நின்று வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு.. தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பதை போல் இருக்க
வகுப்பின் பெண்கள் தோழிகளாகவும்.. ஆண்கள் சிலர் அண்ணன்கள் ஆனதும் தான் லாபம்
இதை அனைத்தையும் கேட்ட ஜனாவிற்கு தலை சுற்றலே வருவது போல இருக்க.. தலை தெறிக்க ஓடிய அந்த மாணவர்களை நினைக்கையில் சிரிப்பு வந்தாலும்
இவை அனைத்தையும் செய்த உமாவை பாராட்டுவதா இல்லை மண்டையில் ரெண்டு கொட்டு வைப்பதா என்பது தான் அவனுக்கு குழப்பமாக இருந்தது
பெண்கள் தங்களின் பாதுகாப்பை தானே செய்து கொள்ள வேண்டும்… யாரையும் நம்பியோ, எதிர் பார்த்தோ இருக்க கூடாது என்பது தான் ஜனாவின் எண்ணமும்.. அதனாலேயே உமா மற்றும் ஸ்ரீஜா பைகளில் பேப்பர் ஸ்பிரே, சின்ன கத்தி ஆகிய வற்றை அவர்கள் ஸ்கூல் படிக்கும் போதே வாங்கி கொடுத்து வருகிறான்
ஆனால் இவர்களுக்கு வக்காலத்து வாங்க வந்தவர்களின் நிலைமை தான்.. பார்க்கவே மோசமாக இருந்தது…
யோசனையில் நின்று இருந்தவனை “அண்ணா என்ன யோசனை… பிளஷ்பக் முடிஞ்சி அரைமணி நேரம் ஆகுது… வாபோலாம்… அந்த அண்ணாச்சி கடையில குலஃபீ ஐஸ் வாங்கி சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போகலாம்.. வண்டியை எடு” என்ற படி சொகுசாக வண்டியில் போய் அவள் ஏறி கொள்ள.. அவளை பார்த்த ஜனாவிற்கோஒன்றே ஒன்று மட்டும் தான் தோன்றியது
“இவளை மண்டையில் கொட்டுவதா இல்லை காதை திருகுவதா” என்று தான்
அவன் பாவம் குழம்பி போய் இருக்கான்… நீங்களே சொல்லிட்டு போங்க.. கொட்டுறதா இல்லை திருகுறதானு
காற்று வீசும்……
Hai makale
சத்யனை அறிமுகம் பண்ணிட்டேன்… அவனை பிடிச்சி இருக்கா… இந்த உமா பொண்ணை என்ன பண்ணலாம்னு சொல்லிட்டு போங்க
கருத்துகளை கீழே பதிவு பண்ணுங்கபா ???