என்னவள்_8
ஃபார்க்கில் அபிநயா சருக்கு மரம் ஏறி விளையாடிக்கொண்டு இருக்க…சுற்றிலும் இருந்த மலர்களோ பசுமையான புல் வெளியோ எதுவுமே திவ்யாவிற்கு மகிழ்ச்சியை தரவில்லை நினைவு மட்டும் மறுபடியும் மறுபடியும் சக்தியை சுற்றிக் கொண்டு இருந்தது.
“அம்மா பட்டர்பிளை பாது”, என சத்தமாக அழைத்த மகளின் சத்தத்தில் களைந்தவள் “பாது இல்லை பாரு…”
இவள் திருத்தமாக சொல்லி தர..மறுபடியும் அபி “பாது என அப்படியே கூறினாள்”, எப்போதும் போல சிரிப்பு வர…”விளையாடு அபி இங்கே தான் அம்மா இருக்கிறேன் உன்னை பார்த்திட்டு என சொன்னாள்.”
“அம்மா அப்பா எப்போது வருவாங்க என மழலையில் கூற”…
“இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்திடுவாங்க தங்கம்…வரலைன்னா ஃபோன் பண்ணி கூப்பிடலாம் நீ அப்பாகிட்ட பேசறையா..”
“பேசலாமே என்றபடி திவ்யா அருகில் வந்து சிவா அமர்ந்தான்”..
“நீங்களே வந்தாச்சா எங்கடா வரேன்னுட்டு இன்னும் வரலையேன்னு யோசிச்சேன். “
“உன்கிட்ட சொல்லிட்டு எதையாவது மாற்றி செஞ்சிருக்கறேனா என்ன? மகளிடம் கண்களை வைத்தபடி இவளிடம் கூற…அம்மா என்ன சொன்னாங்க திவ்யா. “
“வழக்கம்போல தான் எப்படி இருக்கற…அடிக்கடி வான்னு எப்போதும் போல தான் பேசினாங்க மதியம் அங்கேயே சாப்பிடுடாச்சு…பச்..ஏன் தனித்தனியாக இருக்கனும் எனக்கு சுத்தமா பிடிக்கலை சிவா..”
“ஐ…அப்பா” என இவனை பார்த்து ஒடி வந்தாள் அபி…தாவியமகளை கையில் தாங்கியபடி “போகலாமா குட்டிமா”..என கேட்கும் போதே அவர்களை தாண்டியபடி ஆறுமாத குழந்தையை வாக்கரில் தள்ளியபடி நகர…இதை பார்த்த திவ்யா “சிவா நம்ம சக்தியும் நல்ல மாதிரி இருந்து இருந்தா இது போல ஒரு குழந்தை அவளோட கையில் இருந்து இருக்கும்ல்ல..”
“நீ மாறவே போறது இல்லை திவ்யா கொஞ்சம் வெளியே வா இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்காதே…இங்கே சுற்றி பாரு இடம் எவ்வளவு அழகாக இருக்கு. அதை ரசித்துப் பாரு…அம்மா வீட்டுக்கு போயிட்டு தான் இங்கே வந்தேன் அங்கே போனா அம்மா திட்டறாங்க உன்னை பார்த்து பத்து நாள் இருக்குமா அதுக்குல்ல உடம்புக்கு முடியாமல் படுத்து எழுந்தமாதிரி இருக்கறா…நீ என்ன செய்யற எஸ்டேட் எஸ்டேட்ன்னு அதையே கட்டிக்கிட்டு அலையறையான்னு கேட்கறாங்க… உன்னால பார்க்க முடியாண்டி இங்கே கொண்டு வந்து விடு நான் பார்த்துக்கறேன் என்னுடைய மருமகளைன்னு சொல்லறாங்க…”
“இதை சொன்னதும் லேசாக சிரித்தவள் அவங்களுக்கு நான்னா ரொம்ப இஷ்டம் அவங்களுக்கு உங்களை விடவும் என்னை தான் ரொம்ப பிடிக்கும். “
[the_ad id=”6605″]
“ம்…இந்த பெருமைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை தனியா எல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேன் கேட்டாங்கலா கல்யாணம் முடியவும் வீடு,எஸ்டேட்ன்னு பிரிச்சி கொடுத்து நீ தனியாக உன்னோட குடும்பத்தை பாருன்னு அனுப்பி வச்சிட்டாங்க…இன்னமும் அப்பா,அம்மா மேலும் எனக்கு வருத்தம் தான் தெரியுமா…”
“அபி குட்டி செடியை பிடிச்சி இழுக்காதே..சரிங்க புறப்படலாமா அங்கே போய் அத்தைகிட்ட சொல்லிட்டு வீட்டுக்கு புறப்படலாம்.”
“போகலாம் எழுந்திரு அபி குட்டி அப்பாகிட்ட வாங்க…நான் தூக்கிக்கறேன்.”
“நடக்க வைக்க சிவா இவள் இதையே சாக்காவச்சிட்டு கீழே இறங்கி நடக்கறது இல்லை சொன்னா உங்களுக்கும் புரியமாட்டேங்குது…”
“ஏய்…அவள் என்னோட ஏஞ்சல் ஆக்கும் நீ வாடா குட்டி அப்பா தூக்கிக்கறேன்” என தூக்க…”அப்பா தோள்ல தூக்குங்க கையை தலை உயரத்திற்கு தூக்கி காட்டினாள் அபி..”
“அப்பா பொண்ணு ரெண்டு பேரும் திருந்தப் போறது இல்லை”, வாய்க்குள் முனுமுனுக்க…நீ மட்டும் என்னவாம் என்றபடி தனது ஃபோனை எடுத்து ரிங்
விட எதிர் முனையில் எடுத்தவுடன் பேச ஆரம்பித்தான் “ஹலோ சக்தி எப்படி இருக்கறே” என…
“நல்லா இருக்கிறேன் மாமா அக்கா எப்படி இருக்கறாங்க நீங்கள் எப்படி இருக்கிறிங்க…குட்டி எப்படி இருக்கறா..”
“எல்லோரும் நல்லாஇருக்கிறோம் எங்க இருக்கற வீட்லயா இல்லை ஆபீஸ்லயா…”
“வீட்டுக்கு வந்துவிட்டேன் மாமா கொஞ்சம் தலைவலியாக இருந்தது பர்மிஷன் கேட்டுட்டு நாலு மணிக்கு கிளம்பி வந்துட்டேன்…இப்போது வீட்டில் தான் இருக்கிறேன். என்ன விஷயம் மாமா…”
“திவ்யா உன்னைப்பற்றி நிறைய யோசிக்கறா சரியா சாப்பிடறதும் இல்லை தூங்கறதும் இல்லை ஒரு தடவை இங்கே வந்துட்டு போயேன் இல்லைனா நான் அவளை அங்கே அழைச்சிட்டு லரேன்.”
“அக்காகிட்ட ஃபோனை கொடுங்கள் மாமா…”சில நிமிடத்தில் எல்லாம் திவ்யாவின் குரல் காதில் கேட்டது “சொல்லு சக்தி…”
“அக்கா நான் நல்லா இருக்கிறேன் நீ தேவை இல்லாமல் என்ன பற்றி யோசிக்காதே மாமாவையும் குட்டியையும் பார்த்துக்கோ…ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் ஆபீஸ் லீவு அதனால் தான் வரமுடியலை இந்த வாரத்தில் அம்மாவை அழைச்சிட்டு அங்கே வரேன். நீ ஏன் இப்படி இருக்கறக்கா..நல்லா சாப்பிடு என்ன காலையில் தானே பேசினோம் என்னுடைய வாய்ஸ்ச்ச கேட்டா கவலைபடற மாதிரியா இருக்கு…அங்கே ஆபீஸ் போனா ஜாலியாக இருக்கு தெரியுமா நேரம் போறதே தெரியறது இல்லை நான் மாமாவுக்கு தான் நன்றி சொல்லணும் இந்த வேலை வாங்கி தந்ததிற்கு…இங்கே நமக்கு மட்டும் பிரச்சினை இல்லைக்கா…நம்மை விடவும் கஷ்டப்படற நிறைய பேர் இருக்கறாங்க அப்படி பார்க்கும் போது நானெல்லாம் ஒன்னுமேயில்லை சரிக்கா ஃபோனை வைக்கவா அம்மா கூப்பிடறாங்க…”
“ம் சரி என்றபடி ஃபோனை கட் செய்தவள்”சிவாவிடம் போனை கொடுத்தாள்.”ஒகே வா இப்ப போகலாமா “,என்றபடி இவளின் கையை பிடித்தபடி தாயாரின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அங்கே சக்திக்கு அவளது தாயார் ஃகாபி எடுத்து வந்தவர் இவளிடம் தந்தபடி சக்தி தலைவலி இன்னும் இருக்கிறதா..
“இப்போது இல்லை மா”, என ஃகாபியை வாங்கிக் கொண்டவளுக்கு நினைவு மதியம் நடந்ததிற்கு சென்று இருந்தது.
மயங்கி சரிந்தவள் விழித்து பார்க்கும் போது ரேஷ்மா, இன்னும் இரு பெண்கள் கூடவே பிரபுவும் அருகில் நின்றிருந்தான்.
“என்ன சக்தி இப்படி ரேஷ்மாவை பயங்காட்டிட்டிங்க ரெண்டு நிமிடம் விட்டிருந்தால் பயத்தில் ரேஷ்மா மயக்கம் போட்டு விழுந்து இருப்பாங்க போல இருக்கு.”
[the_ad id=”6605″]
“ஸாரி”.. கொஞ்சம் சங்கோஷத்தோடு எழுந்து நிற்க முயற்சிக்க…”சக்தி எழுந்திருக்க எல்லாம் வேண்டாம் அப்படியே உட்காருங்கள் வாசல் வரைக்கும் வந்ததை பார்த்தேன் உள்ள வருவிங்கன்னு பார்க்கும் போதே திரும்பி வேகமாக போறதை பார்த்தேன் சரி என்னன்னு கேட்கலாம்ன்னு வந்தா மயக்கம் போட்டு இருக்கறிங்க…பார்க்க ஸ்டென்தா தெரியறிங்க இவ்வளவு வீக்கான பர்சனா நீங்க…”
“அங்கே பேசிட்டு இருந்தவர்..”.கோர்வை இல்லாமல் இவள் கேட்க…
“யாரு அங்கே வண்டி வாங்க வந்து இருந்தாரே அவரா…அவர் அப்போதே போயாச்சே…நாளைக்கு அவங்க ஓய்ப் கூட வந்து வண்டியை டெலிவரி எடுத்துக்கறதா சொல்லிட்டு போய் இருக்கறாங்க.. உங்களுக்கு தெரிஞ்சவரா என்ன?”.
“இல்லை…வந்து…பேர் தெரிஞ்ச பேரா இருந்தது போல இருந்தது..அதுதான் கேட்டேன்.”
“ஒகே ஒகே அதுக்கு ஏன் பதட்டமாகறிங்க..”.
“ஸாரி ஸார் எனக்கு இன்றைக்கு மதியத்துக்கு மேல லீவ் தந்திடுங்க நான் வீட்டுக்கு போறேன்.”
“என்ன இது மயக்கம் போட்டதாலேயா…சக்தி ஏற்கெனவே வெய்யில் அதிகம் இதில் இந்த வெயிலில் போய் பாதி தூரத்தில் ஏதாவதுன்னா உங்கள் வீட்டுக்கு யார் பதில் சொல்வாங்க…நீங்க வேற இந்த இங்கே ஷோரூம் டீலருக்கு ரொம்ப வேண்டியவங்கலாம் உறவுக்காரங்கன்னு கூட பேசிக்கறாங்க…என்ன நிற்க வச்சி கேள்வி கேட்பாங்க ஒன்று செய்யுங்க…
வேலை எதுவும் இனி செய்ய வேண்டாம் நாலுமணிக்கு மேலும் வெய்யில் குறையவும் புறப்பட்டு போங்க…பக்கத்தில் உங்கள் வீடு இருந்தா பிரச்சினை இல்லை நாற்பது நிமிடம் வண்டியில் போகணுமே…அதுக்காகதான்… ஒகேங்களா…”
“போங்க அவங்க அவங்க வேலையை போய் பாருங்க ரேஷ்மா பார்த்துக்கோங்க உங்கள் ஃப்ரெண்ட.. என்றபடி இறங்கி சென்றிருந்தான் பிரபு.”
சற்று நேரத்தில் எல்லாம் இரண்டு பேருக்குமே ஃகாபியை கொடுத்து அனுப்பி இருந்தான். கொண்டு வந்த பெண்ணிடம் நன்றி சொல்லி விட்டு ஃகாபியை வாங்கியவள் ரேஷ்மாவை பார்த்து “ஸாரி ரேஷ்மா ரொம்ப பயப்படுத்திட்டேனா..”
“ஹய்யோ நானா பயமா என்ன பார்த்தா பயந்தமாதிரியா தெரியுது நான் எவ்வளவு தைரியம் தெரியுமா ஆனாலும் செம வெயிட் சக்தி நீ…ஹப்பா எங்க கீழே வீட்டுட்டுவேனோன்னு ரொம்ப பயந்திட்டேன். இனிமே மயக்கம் வந்தா சொல்லிட்டு விழு என்ன சொல்லியபடியே சிரித்து விட…”
“அதெப்படி சொல்லிட்டு விழுவாங்க அதை கொஞ்சம் எனக்கு சொல்லி கொடேன் எனக்கு தெரியாது…மயக்கம் போட்டும் எனக்கு பழக்கம் எதுவும் இல்லை இது தான் முதல் முறை…அதனால ப்ளீஸ்..இதை சொல்லும் போதே பழைய இயல்புக்கு வந்திருந்தாள் சக்தி. “
“போ சக்தி எனக்கு உயிரே இல்லை. முதல் டைம் இப்போது தான் பார்க்கறேன் அதுவும் இவ்வளவு பக்கத்தில்…நல்ல வேளை பிரபு ஸார் கரெக்டா வந்தாங்க இல்லையின்னா ஸார் சொன்னது மாதிரி நானும் பக்கத்தில் பயத்தில் மயங்கி உன்பக்கத்திலேயே விழுந்து இருப்பேன்.”
“அப்படியா…என்ற கேள்வியோடு நிறுத்தியவள் சரி ஸ்டாக் லிஸ்ட் என்னாச்சு…”
“உன் கையில் இருந்ததா அதை கொடுத்து விட்டாச்சு…அதென்ன கையில் இருந்த பேப்பரை நீ விடலை தெரியுமா…அவ்வளவு இருக்கமாட்டார்கள் பிடிச்சு வச்சிருந்த..”
“பின்னே சக்தின்னா சும்மாவா வேலையின்னா நாங்கள் எல்லாம் அப்படி தான் தீ யா இருப்பேன். “
“பார்த்தேனே சொன்னபோதே சிரித்து விட இவரும் கூடவே சேர்ந்து சிரித்தாள்.”
நான்கு மணிக்கு சொல்லி விட்டு புறப்பட்டு விட்டாள் தனது வீட்டிற்கு…வீட்டிற்கு போகவுமே ரேஷ்மாவை அழைத்தவள் “நான் வீட்டுக்கு வந்தாச்சு ரேஷ்மா கவலை இல்லாமல் இருங்கள்…என்று கூறும் போதே…அவளும் எதிர் புறத்தில் இருந்து கிண்டலாக இது யாருக்கு மா இந்த தகவல்”..
“ம்…உங்கள் பிரபு ஸாருக்குதான் எப்படியும் புறப்பட்ட உடனே உன்கிட்ட சொல்லி இருப்பாங்களே ஒரு மணி நேரம் கழிச்சு வீட்டுக்கு போயாச்சான்னு கேட்டு கன்பார்ம் பண்ணிக்க சொல்லி…சொன்னாங்க தானே அதுக்காக தான். உனக்கு சிரமம் இல்லாமல் நானே கூப்பிட்டுட்டேன்.”
“சரிதான் சக்தி ஸாரை பற்றி நல்லாவே தெரிஞ்சு வச்சு இருக்கறே…நீ கூப்பிடாட்டி நான் அழைத்து இருப்பேன் ஒகே ரெஸ்ட் எடு…நாளைக்கு ஆபீஸ்ல பார்க்கலாம் என ஃபோனை கட் செய்தாள்.”
அடுத்த சில நிமிடம் கழித்து திவ்யா பேசி இருக்க…ஃபோனை வைத்தவள் தாயை தேடி நகர்ந்தாள். சமையல் அறையில் இருந்த தாயின் அருகில் அமர…
“என்ன சக்தி இப்போது எப்படி இருக்கறே தலைவலி சரியாகிடுச்சா…”
“இப்போது ஒகே பா அப்பா எப்ப வருவாங்க..”
“இன்றைக்கு பொள்ளாச்சி மார்கெட் வரைக்கும் போய் இருக்கறாங்க நைட் ஆகும்ன்னு சொன்னாங்கடா…இயல்பாக சொன்னவர் பாதியில் நிருத்த…”
“சரிமா நான் கொஞ்ச நேரம் தோட்டத்தை சுற்றி பார்த்திட்டு வரேன் என எழுந்து வீட்டின் பின்புறம் நகர்ந்தாள்.”
பின்புறத்தில் மல்லிகை பூ,முல்லை இரண்டும் சாகுபடி செய்திருக்க சற்று தூரம் வரைக்கும் நடக்க நினைத்தவள் பாதை வழியே நடக்க ஆரம்பித்தாள்..சற்று தூரம் நடக்கவுமே குருவிகளின் சத்தத்தோடு பூக்களின் வாசனை இவளது நாசியை வந்தடைந்தது.கொத்து கொத்தாக இவையே தெரியாத அளவிற்கு புக்கள் மட்டுமே செடியில் நிறைந்திருக்க…முகம் கூட பூக்களை பார்க்கவும் சற்று தெளிந்தது போல் தோன்றியது.
இவளை பார்க்கவுமே பூக்களை பறித்து கொண்டிருந்த பெண் “சக்தி மா…தலைக்கு வைக்க பூ கொஞ்சம் தரவா..என அங்கிருந்தே கூப்பிட்டு கேட்க..”.
“வேண்டாம் வேடிக்கை பார்க்க தான் வந்தேன் நீங்க வேலை செய்யுங்க.. என இவள் கேட்ட பெண்ணிற்கு பதில் சொன்னாள்.”
“சக்தி மா தோட்டத்திற்கு வந்து எவ்வளவு நாள் ஆச்சு…அடிக்கடி இங்கே வாங்கமா…உங்களுக்கு பிடிச்சது இந்த பூ தோட்டம் தானே அய்யா கூட சொல்லுவாங்களே என்னுடைய சக்தி பொண்ணுக்காக மட்டும் தான் இந்த பூவை வெள்ளாமை பண்ணறேன்னு.”..
[the_ad id=”6605″]
“தலைவலியா இப்போது வேண்டாம் என்றவள் பாதை வழியாக மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தாள்.”
“சக்தி நைட்க்கு தோசை சுடவா வேறு ஏதாவது உனக்கு வேண்டுமா…”
“அம்மா ஏதாவது ஒன்று செய்ங்கம்மா உங்களுக்கு எது ஈசியா இருக்கிறதோ அதை செய்யுங்க என்றபடி மறுபடியும் தாயாரின் அருகில் அமர்ந்து கொண்டாள். “
“என்ன சக்தி ஏன் இன்றைக்கு இங்கேயும் அங்கேயும் நடந்துகிட்டே இருக்கறே…”
“மனசு சரியில்லை மா..கோபமாக ,எரிச்சலா இருக்கு. எனக்கு என்னையவே படிக்கலை..பார்க்கறவங்க பாவமா பார்க்கறமாதிரி இருக்கு இன்னும் எத்தனை நாள் தான் இப்படி வேடிக்கை பார்ப்பாங்க…”
“இது இன்னும் கிராமம் மாதிரி தானே இருக்கு யாரும் உன்னை தப்பு சொல்லலையேடா அப்புறம் ஏன் நீ இதை பற்றி யோசிக்கற நீதான் இதெல்லாம் ஒன்றுமே இல்லையின்னு வெளியே வரணும்.கோமதியம்மாள் சொல்வதும் சரிதானே இவள் தான் வெளியே வரவேண்டும் பழைய நினைவுகளில் இருந்து…இரவு உணவை உண்டு முடித்தவள் தன் அறைக்குள் படித்து கொள்ள.. தந்தை வந்ததிற்கான அடையாளமாக பேச்சு சத்தம் கேட்டது.”
“என்னங்க சாப்பிட எடுத்து வைக்கவா…என்ற கேள்விக்கு…”
“வேண்டாம் கோமதி சாப்பிட மனசே இல்லை இந்த ஊர் மார்கெட்டிற்கு தேங்காய் ஏற்றிவிட்டு போனா அங்க நாம ஏமாற்றினது தான் கண்ணு முன்னாடி நிற்குது…எல்லோரும் நல்லா இருக்கறாங்க…நம்ம பொண்ணு இவளுக்கு எப்போது விடிவு காலம் வருமோ தெரியவில்லை”, சொல்லியபடி தனது அறைக்குள் செல்ல…இங்கே சக்தி தனது கடந்த காலத்திற்குள் பயணம் ஆனாள்.
தொடரும்.