என்னவள்_9
உடலோடு இருக்கி பிடித்த ஜூன்ஸ் பேன்ட் வெள்ளை நிறத்தில் டீ சர்ட் இருக்கும் தலைமுடியை தூக்கி குதிரைவாலாய் சிறு பேண்டில் அடக்கி இருக்க….கண்களை கவ்விய கூளர்ஸ்..லேசான லிஸ்டிக்கோடு ஒரு மாடன்மங்கையாக காரில் இருந்து இறங்கினாள் மாயா…
கண்கள் முழுக்க கார்த்திக்கின் மேல் இருக்க..”ஹாய் கார்த்திக் இங்கே என்ன எதிர்பார்க்கலைதானே என்றபடி இறங்கி நின்றாள்..”
“ஹாய் நிறமாகவே உன்னை இங்கே எதிர் பார்க்கலை…அங்கிள் மட்டும் வந்து இருக்கறாங்கன்னு நினைச்சேன் உன்னை கவனிக்கலை ஸாரி..என்ன சொல்லு மாயா…இவ்வளவு தூரம் தேடி வந்து இருக்கறே…”
“ஹலோ நீங்கள் தான் சொல்லணும் கார்த்திக்…கார்த்திக்ன்னு கூப்பிடலாம்ல்ல இல்லை மரியாதையாக கூப்பிடணுமா ஏன்னா எனக்கு அப்படி சட்டுன்னு கூப்பிட வராது. முன்னாடியே சொன்னால் பழகிக்க வசதியாக இருக்கும்.”
“கார்த்திக்ன்னே கூப்பிடலாம் பேர்
வச்சது கூப்பிடத்தாங்க…சரளமாக பேசியவளை பார்த்தபடி கூற…”
“தேங்க் காட் எங்க பழைய காலம் மாதிரி கூப்பிட சொன்னால் என்ன பண்ணறதுன்னு நினைச்சிட்டே வந்தேன் நல்லவேளை அப்படி எதுவும் சொல்லலை..சொல்லி இருந்தா என்னோட நிலைமை கஷ்டம் தான். அவள் சொன்னது அந்த நிமிடம் கார்த்திக்கிற்கு சிரிப்பை தூண்ட..
மொத்த பற்களும் தெரியும் அளவில் கார்த்திக் சிரிக்க இரண்டு நிமிடம் கண் சிமிட்டாமல் அவன் சிரிப்பதையே பார்த்து நின்றாள்.”
“சரி என்ன தீடின்னு… இந்த பக்கமா காற்று அடிச்சிருக்கு… ஏதாவது முக்கியமான விஷயம் ஏதாவது இருக்கா என்ன?”.
“ம்… என்ன கேட்டிங்க…அதுவா உங்கள் கிட்ட சண்டை போடத்தான் வந்து இருக்கிறேன். என்கேஜ்மெண்ட் ஆகி முழுசா ஒரு வாரம் ஆகுது இது வரைக்கும் ஒரு ஃபோன் பண்ணலை நானும் தினமும் ஃபோன் பண்ணுவிங்க,பண்ணுவிங்கன்னு எதிர் பார்த்து கடுப்பாகி நேரா புறப்பட்டு வந்துட்டேன் ஏன் ஃபோன் பண்ணலைன்னு கேட்டு சண்டை போட..சண்டை போடலாம் தானே எனக்கு இப்போ அந்த உரிமை இருக்கிறதுதானே…”
என்ன பதில் சொல்ல..”.அங்கிள் என்ன இது”, மாயாவின் தகப்பனாரை பார்க்க…அவரோ “விளையாட்டுக்கு சொல்லறா கார்த்திக் நீ வேலை செய்யற இடத்தை பார்க்கணும்ன்னு சொன்னா அது தான் அழைச்சிட்டு வந்தேன்”.
“அப்பா…”என்றவள் இவனிடம் திரும்பி “பயங்கர சத்தமா இருக்கு டஸ்ட் நிறைய இருக்கு எப்படி இந்த இடத்தில் தொடர்ந்து வேலை செய்யறிங்க..இங்கேயே தான் நாள் முழுக்க இருக்கணுமா…”
“இது என்ன கேள்வி வேலையே இது தானே இப்படியே பழகி போயிடுச்சு” என்றவன் மாயாவின் தந்தையிடம் பேச ஆரம்பித்து இருந்தான் கார்த்திக் வேலை எப்படி போகுது கார்த்திக் என ஆரம்பித்து இவர்களின் தொழிலை பற்றி பேச ஆரம்பிக்க ..”கார்த்திக் ஃபோனை கொடுங்கள் “என்றவள் அவன் எடுத்து தரக்கூட நேரம் தராமல் அவனுடைய சட்டை பாக்கெட்டில் இருந்து எடுக்க..இவனும் ஏன் எதற்கு என்று எதுவுமே கேளாமல் இரு என்பது போல கையை அசைத்தவன் ஃபாக்கெட்டில் இருந்த ஃபோனை எடுத்து இவளிடம் தந்து விட்டு மறுபடியும் இவளது தந்தையிடம் பேச ஆரம்பித்து இருந்தான்.
ஃபோன் பாஸ்வேட்டில் இருக்க…கார்த்திக் பாஸ்வேட் என்ன? என மட்டும் கேட்டாள்.
“என்னுடைய பர்த்டே “என்றவன் இப்போதும் இவளின் தந்தையுடம் பேச்சு இவர்களது தொழில் சம்பந்தமாகத்தான் இருந்தது.
“ஒகே “என்றவள் நகர்ந்து சென்று ஆன் செய்ய..அப்போது தான் கேட்டது மனதில் பட..”.மாயா என்னோட டேட்ஆப் பர்த் தெரியுமா” என கேட்க..”.அதெல்லாம் தெரியும் எப்போ நீங்கதான் என்னோட ஹப்பின்னு முடிவு பண்ணினாங்களோ அப்பவே உங்களை பற்றின எல்லா டிட்டெய்லும் தெரிஞ்சுகிட்டேன். நீங்களும் என்ன பற்றி தெரிஞ்சு வச்சிக்கோங்க..அதுதான் உங்களுக்கு நல்லது..”
[the_ad id=”6605″]
“அப்படியா…கட்டாயமா தெரிஞ்சே ஆகணும்ன்னு தேவை ஏற்பட்டால் … அங்கிள்கிட்ட கேட்டுக்கப்போறேன். இது கஷ்டமா என்ன? “
“உங்களுக்கு என்ன பற்றி தெரியவில்லை கார்த்திக் தெரிஞ்சு வச்சிக்கோங்க இல்லையின்னா நிறைய கஷ்டபடவேண்டியது இருக்கும். நான் கொஞ்சம் டிப்பரண்ட் எங்க வீட்டிலேயே..ஒருத்தரை பிடிச்சு போச்சுதுன்னா அவங்களுக்காக உயிரை வேணும்னாலும் தருவேன் அதே நேரம் அவங்களும் என் கிட்ட அதே அளவு பிரியம் காட்டணும் இல்லையின்னா..அப்படி எல்லாம் விட்டுட மாட்டேன் அவங்க காலி தான் அந்த மாதிரி குணம் படைச்சவ நான்…”
“ரொம்ப நல்ல குணம் தான் இப்போதைக்கு ஃபோன் வந்தால் மட்டும் கொடு முக்கியமான ரெண்டு கஷ்டமர் இப்போது கூப்படற டைம் அவங்க ஃபோன்காலுக்காகத்தான் வெயிட்டிங்…”
“ஸாரி கார்த்திக் எத்தனை பெரிய ஆளா இருந்தாலும் வேலை முடியாமல் உங்கள் ஃபோன் உங்கள் கைக்கு வராது என்றவள் அவனது ஃபோனில் தனது மொபைலில் இருந்த நிச்சயதார்த்தஃபோட்டோ அனைத்தையும் அவனது மொபைலுக்கு மாற்றிக்கொண்டு இருந்தாள். “
“அப்படி என்ன வேலை செய்யற மாயா…”
“அதென்ன நிச்சயம் முடிஞ்சாச்சு இன்னும் பேச்சிலர் லுக்ல போனை வச்சி இருக்கறிங்க..அதுவும் ஸ்கூல் பையன் மாதிரி ஒரு டிபி…பார்த்தா சிரிப்பு வருது. இதென்ன பேமிலி போட்டோவை டிபியா வச்சி இருக்கற ஒரே ஆள் நீங்களா இருப்பிங்க…மற்றபடி நாட்பேட்..எங்க ஃபோனை என் கையில் தரமாட்டிங்களோன்னு நினைச்சேன். கொஞ்சம் நல்ல பையன் தான் போல இருக்கு…ஃபோன் பயங்கர நீட்…தப்பா எதுவும் இல்லை. வித்தியாசமான பையன் தான் அப்பா ஏன் உங்க பேர் சொன்னதும் உடனே உருகறாங்கன்னு இப்போது தெரியுது.
அப்பா என்ன பண்ணினாலும் பொதுவாக நான் ஆப்போசிட்டாதான் பண்ணுவேன் ஆனால் உங்கள் விஷயத்தில் அப்பாவை கூட கொஞ்சமாக பிடிக்குது எனக்கு இப்போது தெரியுமா…சளசளவென அருவி போல பேசிக்கொண்டு இருந்தாள் மாயா…”
“சரி அப்படி என்ன வேலை செய்யற..என்னோட ஃபோன்ல.”..கார்த்திக் கேட்க…
“எஸ்..வேலை முடிஞ்சுது..டிபி மாத்தியாச்சு இந்த ஃபோட்டோ நல்லா இருக்கா இருவரும் சேர்ந்து எடுத்து இருந்தது புகைப்படம் அதுவும் இரண்டு பேரும் சற்று நெருங்கிய நிலையில் நிற்கும் புகைப்படம் அதை காட்டியவள் …இப்போது சூப்பர் இப்படியே வச்சிக்கோங்க…ஃபோன் தான் கொஞ்சம் பழைய மாடலா இருக்கு ஃபோன் தான் புதுசு மாற்றனும்.”
மாயா கையில் இருந்து ஃபோனை வாங்கியவன் அவளிடம் திரும்பி “இது வேண்டாம் மாயா வேற ஏதாவது ஃபோட்டோ வச்சிக்கறேன். யாராவது ஃபோனை வாங்கி பார்த்தா எனக்கு அன்ஈசியா இருக்கும். “
“ஹலோ மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சு…அங்கே சேர்த்துை ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது தெரியலையா கார்த்திக்…தைரியமாக எடுத்து காட்டலாம் நான் கட்டிக்க போற பொண்ணுன்னு… நானே கூச்சபடாமால் அந்த ஃபோட்டோ தான் வச்சி இருக்கறேன் நீங்க என்ன பொண்ணு மாதிரி பேசறிங்க…ஒகே வந்து வேலை முடிஞ்சுது.. பை ஒரு நாள் உங்கள் வீட்டுக்கும் வந்து நிற்பேன் பார்க்கணும்ன்னு தோணினா உங்களுக்கு எப்படி ஸார்… இந்த ஃபோட்டோ பார்த்துட்டு ஒரு ஃபோன் நைட்டுக்கு பண்ணினா நான் ஹேப்பி ஆவேன்…எப்படிங்க ஸார் ஃபோன் பண்ணுவிங்களா.. கால் பண்ணுங்க கார்த்திக் நைட் உங்க ஃபோணுக்காக வெயிட் பண்ணுவேன்…என்னப்பா புறப்படலாமா…டைம் ஆச்சு நீங்கள் கூட எங்கேயோ அவசரமாக போகணும்ன்னு சொன்னிங்க…”
“ஒகே கார்த்திக் மாயாவை அழைச்சிட்டு புறப்படறேன். அப்பாவை பார்க்க வரணும் அப்பாகிட்ட சொல்லு ரெண்டு நாளையில் வரேன்னு என்றபடி புறப்பட்டார்.”
வண்டி புறப்படவும் இவனும் “பை” என கை அசைக்க பதிலுக்கு மாயா நைட் ஃகால் பண்ணு என்பது போல சைகை செய்தவள் கையை ஆட்டி டாட்டா காட்டியபடி புறப்பட்டாள். சரியான விளையாட்டு புத்தி என்ன இவனும் மனதில் நினைத்தபடி அடுத்து பார்க்கவேண்டியவருக்கு ஃபோன் செய்தவன் புறப்பட்டான்.
மதியம் இரண்டு மணிக்கு மேல் தாண்டி இருக்க வீட்டுக்கு வந்து இருந்தான் கார்த்திக் அம்மா சாப்பாடு எடுத்து வைங்க சாப்பிட்டு சீக்கிரம் போகணும் என வந்து அமர்ந்தான்.
“என்னடா மதியத்துக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு காலையில்அப்படி பறந்திட்டு ஒடின இப்ப வந்து இருக்கறே…”
“லஷ்மி சோறு போடுவியா மாட்டாயா.. இந்த பக்கமாக வேலையா வந்தேன்
சாப்பாடு இல்லையின்னா இப்படியே கிளம்பி போயிடுவேன். அந்த வாலு எங்க போணா…ஸ்கூலுக்கு போயாச்சா..அப்பாவுக்கு சாப்பாடு அணுப்பியாச்சா…”
“அதெல்லாம் ஆச்சு இனி பிருந்தா ஏழு மணிக்கு தான் வருவாய் டியூசன் முடிச்சிட்டு இரு எனக்கும் எடுத்துட்டு ரெண்டு பேரும் சாப்பிடலாம். “
“என்னமா இன்னுமா சாப்பிடாமல் இருக்கறிங்க நேரம் என்ன ஆகுது”.
“டேய் போதுடா மணி ரெண்டு தான் ஆகுது. தனியாக இருந்தா சாப்பிட பிடிக்க மாட்டேங்குது டா…நல்லா பசியானதும் சாப்பிடலாம்ன்னு இருந்தேன்.”
“அம்மா லேட்டாக சாப்பிட்டு எதையாவது இழுத்து வச்சிக்காதிங்க… இருக்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணறேன் மதியம் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்து சாப்பிட முடியாதான்னு..அங்கே தான் வேலைக்கு ஆட்கள் இருக்கறாங்கதானே…அப்புறம் அங்கேயே இருக்காட்டி என்ன. “
[the_ad id=”6605″]
“டேய் இப்ப கூப்பிடவேண்டாம் நைட் வந்ததும் பேசிக்கோ…என்னவோ ஏதோன்னு பயந்தபடி போறாங்க…எடுத்து ஃபோனை வாங்கி வைத்தபடி கூறினார். “
“யாரு அந்த ராஜாராமா..பயப்படறதா…போங்கம்மா..”
“டேய் எத்தனை தடவை சொல்லறது அப்பாவோட பேரை சொல்லி கூப்பிடாதேன்னு…லஷ்மி கூறியபடியே மறுபடியும் சாதத்தை எடுத்து தட்டில் வைக்கப் போக…அம்மா போதும் இதுவே அதிகம் எங்க தட்டில் சாதத்தை வச்சிட்டே போறிங்க.”.
“சாப்பிடுடா வளர்ற பையன் எப்பப்பாரு போதும் போதும்ன்னுட்டு…”
“அம்மா வளர்ற பையனா இதுக்கு மேல எந்த பக்கத்தில் வளரணும்…நேரா வளர்ந்தாச்சு இனிமேல் வளர்ந்தால் சைடுலதான் வளரணும். அப்படி வளர்ந்தால் வீட்டை தான் ஒடச்சி வாசலை பெருசு பண்ணனும்.”
“போடா என்னமோ நூறு கிலோ வெயிட்போட்டது மாதிரி தான் பேச்சு…”
“ம்மா சொல்ல மறந்துவிட்டேன் அங்கிளும் மாயாவும் இன்றைக்கு வேலை நடக்கறது இடத்திற்கு வந்தாங்க…”
“மாயா வந்தாலாடா எப்படி இருக்கறா என்ன சொன்னா..”
“என்ன சொன்னா…வந்தா பேசிணா நல்லா தான் இருக்கறா..போய் பார்க்கணும்ன்னா போய் பார்த்துட்டு வாங்க..”
“போடா கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் பேசற…லஷ்மி குறைபட்டுக்கொண்டே சாப்பிட்ட பாத்திரத்தை எடுத்தபடி நகர…கூடவே வந்தவன் அம்மா உங்களுக்கு பிடிச்ச பொண்ணு சோ நீங்க தான் நிறைய
பேசணும் உங்களுக்கு அங்கே போக முடியாட்டி இங்க அவங்களுக்கு வரச்சொல்லுங்கள்..”
“ஏண்டா இங்கே வரேன்னு சொன்னாலா…கடைசியாக யூஎஸ் போறதுக்கு முன்னாடி இங்கே வந்து இருந்தா உனக்கு ஞாபகம் இருக்கா…நீ கூட இந்த பொண்ணு என்ன இத்தனை சீன் போடுதுன்னு போன பிறகு சொன்னே…”
“நல்லா ஞாபகம் இருக்கு…என்னவோ மஹாராணி மாதிரி ஹால்ல உட்கார்ந்துட்டு இருந்தா அதுதான் அப்ப அப்படி சொன்னேன். இப்ப என்னமா வாய் அடிக்கறா அந்த பொண்ணு பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருக்கறாம்மா. உங்களுக்கு நல்லா டைம் பாஸ் ஆகும் .சரி புறபபடறேன்மா நைட்டு பதினோரு மணி ஆகிடும் வந்து நானே எடுத்து வச்சி சாப்பிட்டுக்கறேன் அந்த வாண்டு வீட்டுக்கு வந்ததும் கூப்பிடச் சொல்லுங்க…”
“எதுக்குடா அவள் கிட்ட வம்பிழுக்கவா…”
“இல்லை மா…ஸ்வீட் வேணும்ன்னு கேட்டா எந்த மாதிரி ஸ்வீட்…வாங்க கூட கடைக்கு வர்றியான்னு கேட்கனும். “
“வந்ததும் கூப்பிட சொல்லறேன்டா..என்று கூற புறப்பட்டு சென்றிருந்தான். இரவு ஏழுமணிக்கு பிருந்தா அழைத்து இருந்தாள் கார்த்திக்கிற்கு…டேய் நான் புறபட்டுட்டேன் வந்து கூப்பிட்டுக்கோ என சொல்லும் போதே இவனது தாயாரின் குரல் கேட்டது உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா பிருந்தா அண்ணான்னு கூப்பிடுன்னா வாடா,போடான்னு பேசற…”
“அம்மா அண்ணாவே எதுவும் சொல்லலை நீங்க ஏன் திட்டறிங்க..”
“சரிதான் இந்த பழக்கம் தானே கூட்டமாக இருக்கற இடத்திலேயும் வரும் அப்போது பார்க்கறவங்க சொல்லுவாங்க என்ன இந்த பொண்ணு இப்படி பேசுது மரியாதையா பேச தெரியாது போல இருக்குன்னு..திட்டியது எல்லாம் கார்த்திக் காதில் விழ…இந்த அம்மா இருக்கறாங்களே என்ன சொல்ல…முதலில் இந்த அம்மாவுக்கு சொல்லி புரிய வைக்கனும் எப்படி பாரு அவளை திட்டறதையே வேலையா வச்சி இருக்கறாங்க..”.
[the_ad id=”6605″]
சொன்னது போலவே அரைமணிநேரம் கழியவும் பிருந்தாவை அழைத்து செல்ல வந்து இருந்தான். “ம்மா அண்ணா வந்தாச்சு நான் போயிட்டு வந்திடறேன் என்ன புறப்பட்டு சென்றாள் இவள் ஏறவும் நேராக அன்னபூர்ணா போகலாமா பிருந்தா இல்லையின்னா கிருஷ்ணா ஸ்வீட்சா எங்க வண்டியை விட…”
“அன்னபூர்ணாவுக்குணா…”
“சரி என்றவன் காந்திபுரம் சென்று கடையின் முன்பு நிறுத்தியவன் போய் எந்த ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வா நான் இங்கேயே வெயிட் பண்ணறேன்.”
“ஓ…கீழே வரமாட்டியா இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஃகாபி குடிக்காட்டி எப்படி…நீ காரில் இருக்கத்தான் இவ்வளவு தூரம் கூப்பிட்டுட்டு வந்தியா எனக்கு எதுவும் வேண்டாம் வா வீட்டுக்கு போகலாம்.”
“ஏய் பிருந்தா என்ன இது நீ கேட்டேன்னு தான அரைமணிநேரம் இங்கேவர டைம் ஆகி இருக்கு.. கூப்பிட்டுட்டு வந்தா இப்படி சொல்லற…”
“அரை மணிநேரம் வரமுடியும்…ஆனால் என் கூட அரைமணிநேரம் கூட வந்து உட்காரமாட்டே அப்படிதானே அப்ப ஏன் வர்ற… நீயே போய்க்கோன்னு சொன்னால் நானே வந்து வாங்கி இருப்பேன்ல்ல இங்கே வரத்தெரியாதா வீட்டுக்கும் இங்கே வர்றதுக்கும் அவ்வளவு தூரமாக என்ன…”
“பட்டாசு தான் போல இருக்கற… வரேன் என்ன வேணும் ஆர்டர் பண்ணு சாப்பிட்டுட்டே போகலாம். கார்த்திக்கை முறைத்தபடியே போய் அமர்ந்தவள் முன்பு வைத்திருந்த மெனு கார்ட்டை பார்த்தவள் வந்து நின்ற பேரரிடம் அண்ணா இரண்டு காலான் ரெண்டு ஃகாபி என ஆர்டர் செய்தாள்”.
“பிருந்தா எனக்கு ஃகாபி மட்டும் போதும்…என கார்த்திக் பதில் சொன்னான்.”
“ஹலோ இங்கே உனக்கு எதுவும் ஆர்டர் பண்ணலை சரியா ஆர்டர் பண்ணினது எனக்கு மட்டும் தான் எதிலேயாவது கையை வச்ச மவனே காலி…”
“அடப்பாவி பார்க்கறவங்க உன்னை வித்தியாசமா பார்ப்பாங்க…”
“பார்த்தா பார்க்கட்டும் அது என்னோட பிரச்சினை சரியா என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே எதிரில் கொண்டு வந்து வைக்க… ஒரு ஃகாபியை எடுத்து வேகமாக குடிக்க ஆரம்பித்தான் கார்த்திக். “
இரண்டு பேரும் சண்டையிட்டு சாப்பிட்டு முடித்து இவளை அழைத்து வந்து வீட்டில் விட்டவன் மறுபடியும் வேலை நடக்கும் இடத்திற்கு சென்று இருந்தான். இரவு அழைக்கச் சொன்ன மாயாவை சுத்தமாக மறந்து இருந்தான். பதினோருமணிக்கு வீட்டிற்கு வந்தவன் அமர்ந்து இருந்த தந்தையிடம் பேசிவிட்டு தூங்க செல்கையில் பன்னிரெண்டு மணியை நெருங்கி இருந்தது. படுத்தவன் சற்று நேரத்தில் எல்லாம் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று இருந்தான் இங்கே மாயாவோ மொபைல் போனை பார்த்தபடி கார்த்திக்கின் அழைப்பிற்காக தூங்காமல் ஃபோனையே வெறித்து பார்த்தபடி ஹாலில் அமர்ந்து இருந்தாள்.
தொடரும்.