தன்யாவின் அறையில் இருந்து மந்தகாச புன்னகையுடன், கையில் இருந்த பைலை தூக்கிப்போட்டு பிடித்தபடி நடந்து வந்த ஆதியை வேகமாய் நெருங்கிய கோகுல், “எல்லாம் ஓகேவா டா? ஒன்னும் ப்ரோப்ளம் இல்லையே? எதுவும் திட்டுனாங்களா?” என கேட்க, அவனை ஒருப்பார்வை பார்த்த ஆதி, சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றான்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், சிரித்துக்கொண்டே செல்பவனை பின்த்தொடர்ந்த கோகுல், “கேக்க கேக்க சிரிச்சுட்டே போற? இண்டர்வியூ ஒழுங்கா பண்ணியா? வேலை கிடைச்சுடும் தானே?” என்றான்.
அதே சிரிப்புடன், “ஓஓ!! அமோகமா கிடைச்சுடும்! நீ வேணா பாரேன்” என்றவனின் குரலில் எள்ளல் மட்டுமே இருக்க, “அடேய், ஏதாவது சொதப்பி வச்சுட்டு வந்துருக்கியா நீ?” என திகிலடைந்து போனான் கோகுல்.
“பெருசா ஒன்னும் இல்லடா, சும்மா ‘ஐ லைக் யூ’ன்னு மட்டும் தான் சொன்னேன்” என ஆதி இலகுவாய் சொல்லிவிட்டு தோளை குலுக்க, அதிர்ச்சியில் கோகுல் உயிருள்ள சிலையானான்.
அதை கண்டுக்கொள்ளாது, “நான் டிசைட் பண்ணிட்டேன்டா, இங்க தான் வேலை பார்க்க போறேன்!” என்ற ஆதி சௌகர்யமாய் இருக்கையில் அமர, “நீ பண்ண வேலைக்கு என் வேலையே போயிருக்கும் இந்நேரம்! இதுல நீ இங்க வேலை பார்க்க போறேன்னு முடிவு பண்ணுறியா?” என விரக்தியாய் சொன்னவனும் அவன் அருகிலேயே தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
பின்பு சில நிமிடங்களில், ஆதி ஏதோ ஒரு பாட்டை முனுமுனுத்தபடி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, “ஏன்டா இப்படி செஞ்ச?” என்றான் கோகுல்.
“பாட்டு தானே டா பாடுனேன்?”
“உன் மூஞ்சி…. போடா குரங்கே!!!”
கோகுல் திட்ட, ஆதி சிரிக்க என நேரம் சென்றுக்கொண்டிருக்க, நேர்முகத்தேர்வு முழுதாய் நடந்து முடிந்திருந்தது.
ஆதி மனதுக்குள் மௌனமாய் ஒரு திட்டம் தீட்டினான். பின்னே, கோகுலிடம் ரகசியம் சொல்பவன் போல மெல்ல குனிந்து, “உனக்கு ஒரு ப்ரீ அட்வைஸ் தரவா? இன்னும் கொஞ்ச நேரத்துக்கு நீ என்கூட இருக்காத, அதான் உனக்கு நல்லது” என ஆதி சொல்லிமுடிப்பதற்குள் அவனை விட்டு எழுந்தவன்,
“ஆளை விடுறா சாமி! உனக்கு ரெபரென்ஸ் குடுத்து என் தலைல நானே மண்ணள்ளி போட்டுக்கிட்டேன்! நானே எப்போடா எஸ்கேப் ஆவோம்ன்னு இருந்தேன், இப்ப நீயே சொன்ன பிறகு, இங்க நிப்பேன்னு நினைக்குற? ம்ஹும்!!” என்றவன், “கும்ததா!!” என்ற மந்திர சொல்லோடு மின்னல் போல மறைந்து(ஓடி) போனான்.
போனவனின் வேகத்தை எண்ணி சத்தமாய் சிரித்தான் ஆதித்யதேவ்.
[the_ad id=”6605″]
‘வீட்டுக்கு போங்க, லெட்டர் வரும்’ என்ற மாதிரியெல்லாம் எப்போதும் அங்கே செய்வதில்லை என்பதால், தன்யா தன் அறையில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்துடனே இருந்தாள்.
வந்திருந்த அறுவரில் இவள் எதிர்ப்பார்த்ததை விட அதிக தகுதியுடன் இருந்தது ஆதி மட்டுமே! அவனை ஒதுக்கிவிட்டு மற்றவரை கணக்கில் எடுக்கலாம் என்றால், ஏனோ மற்ற அனைவருமே இந்த வேலைக்கு தகுதி குறைவானவர்கள் என்றே தோன்றியது அவளுக்கு…!
இரு மாதங்கள் முன்பே இந்த வேலைக்கென வந்திருந்த பல விண்ணப்பங்களில் சல்லடை போட்டு சலித்து எடுத்து நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த அந்த ஐவருமே ஆதியோடு ஒப்பிடுகையில் அவளுக்கு குறைவாய் தெரிந்தது அவனது திறனின் சான்றாய் அமைந்தது.
காலையில் அவனை கண்டதில் இருந்து அவன் தன்னைப் படுத்தி எடுத்ததை நினைத்தவள், ‘ஆட்டிடியூட்!!! அவனோட அந்த ஆட்டிடியூட் இருக்கே ச்சே!!’ என வெறுப்பாய் எண்ணினாள்.
இதில், ஆதி சொல்லி சென்ற ‘ஐ லைக் யூ’ வேறு அவள் செவிகளில் ரீங்காரம் போல ஒலித்து இம்சை செய்ய, தன்னை மீறி, “ஆஆஆ” என கத்திவிட்டாள். அந்த அளவுக்கு அவளை எரிச்சல் படுத்தியிருந்தான் ஆதித்யா.
இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தவள், அழைப்பு மணியை ஒலிக்க செய்து உதவியாளரை அழைத்த தன்யா, வந்திருந்த ரெஸ்யூம் அனைத்தையும் அவரிடம் கொடுத்து, “இந்த போஸ்டுக்கு நாங்க எதிர்ப்பார்க்குற குவாலிபிகேஷன் எங்களுக்கு கிடைக்கல! அதனால, வேற போஸ்டுக்கு ஆள் தேவைப்படும்போது உங்களை கான்டேக்ட் பண்றோம்ன்னு சொல்லி வந்தவங்களை அனுப்பிடுங்க! இந்த ரெஸ்யூம் எல்லாம் பைல் பண்ணிவச்சுடுங்க” என பணிந்தாள்.
வேலைக்கு ஆள் எடுக்க என நேர்முகத்தேர்வை நடத்திவிட்டு ஒருவரையும் வேண்டாம் என சொல்ல சொல்வது விசித்திரமாய் இருக்க, அவளிடம் எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல், தலை உருட்டியபடியே அங்கிருந்து சென்றார் அவர்.
அவர் சென்றதும், ‘உப்ப்ப்’ என அலுப்பை வாய்வழியே வெளிதள்ளியவள் சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
மனதில் எதையும் நினைக்க வேண்டாம் என எண்ணினாலும், அவள் அனுமதி இன்றியே உள்ளே நுழைந்தான் ஆதித்யதேவ்.
வந்தவன் ‘ஐ லைக் யூ’ என அவளை நெருங்கி சொல்ல, சட்டென எழுந்து அமர்ந்துக்கொண்டாள்.
‘எங்கிருந்து தான் வந்தானோ? என் உயிரை எடுக்க?’ என அவள் கடுப்பாய் வாய்விட்டே சொல்ல, அவள் அறை கதவை படாரென திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஆதித்யா. பின்னோடு அவள் கம்பெனி ஆட்கள் சிலரும் பரிதவிப்புடன் உள்ளே வந்தனர்.
வந்தவன், “என்ன மேடம் நினைச்சுட்டு இருக்கீங்க? உங்க இஷ்டத்துக்கு இன்டர்வியூ வைப்பீங்க, அப்புறம் வேலை இல்ல ‘போ’ன்னு சொல்லுவீங்க? எங்களை எல்லாம் பார்த்தா எப்படி இருக்கு உங்களுக்கு?” என்றான்.
திடுமென அனுமதியின்றி உள்ளே நுழைந்தவனை கண்டு முகத்தில் அதிருப்தியை காட்டியவள், “யுவர் பீகேவியர் ஸ்பீக்ஸ்!!!” என்றாள் கடுமையாய்.
“நான் தமிழ்ல தானே கேள்வி கேட்டேன்? அதுக்கு எதுக்கு இப்போ இங்கிலீஷ்ல பதில்? அதுவும் சம்பந்தமே இல்லாம?” ஒரு புருவம் தூக்கி அதிகாரமாய் அவன் கேட்க, ‘கெட் அவுட்’ என கத்த வேண்டும் போல தோன்றியதே தவிர அவளுக்கு அதை சொல்ல, வார்த்தை வெளிவரவில்லை.
பின்னே இருந்த கம்பெனி ஆட்கள் எல்லாம், அவனை வெளியே போகும்படி கெஞ்சிக்கொண்டிருக்க, தன்யாவே அமைதியாய் நிற்கையில் அவனை வலுக்கட்டாயகாக வெளியே இழுத்து செல்ல அவர்களுக்கு தயக்கம் வந்து சேர்ந்தது.
“உங்களை தான் மேடம் கேட்குறேன்! ஆள் எடுக்க முடியாதுன்னா எதுக்கு இண்டர்வியூ வைக்கணும்? காலைல இருந்து உங்களுக்காக காத்திருந்து, மதியானம் இண்டர்வியூ அட்டென்ட் பண்ணா, சாயங்காலமா பியூன்கிட்ட சொல்லிவிடுறீங்க, யாருக்கும் வேலை இல்லன்னு! எங்களை எல்லாம் பார்த்தா ‘பிஸ்கோத்து’ பசங்க மாதிரி தெரியுதா?” சட்டையின் கையை மடித்துவிட்டுக்கொண்டே அவன் அவளை நோக்கி ஓரடி முன்னே வைக்க,
‘என்ன இவன், டீசென்ட்டா இருந்துட்டு இவ்வளோ லோக்கலா பீகேவ் பண்றான்?’ என அவளுக்கு தான் திகைப்பானது.
“எனக்கு அதெல்லாம் தெரியாது, இப்போ வந்திருந்த எங்க ஆறு பேருல ஒருத்தருக்கு நீங்க வேலை குடுக்குறீங்க! என்ன? ஓகே வா?” என விரல் நீட்டி சொல்ல, அவன் முன் பொம்மை போல நிற்கிறோம் என்பதையே தன்யா அப்போது தான் உணர்ந்தாள்.
அவளுக்கு கீழே வேலை செய்பவர்கள் எல்லாம் வாயை பிளந்து சுவாரஸ்யமாய் வேடிக்கை பார்ப்பதை கண்டவள், சினம் கொண்டு, “இங்க என்ன ஷோ நடக்குதா? யாருக்கும் பார்க்க எந்த வேலையும் இல்லையோ?” என அவள் போட்ட ஒரு அதட்டலில் அவனைத்தவிர அனைவரும் ‘கப் சிப்’ என அவர்கள் இடத்திற்கு சென்றுவிட்டனர்.
[the_ad id=”6605″]
இவன் மட்டும் அவள் அறையில் நிற்க, “எல்லாரையும் அனுப்பிட்டா? எனக்கு ஒரு நியாயம் கிடைக்காம நான் இங்கிருந்து போக மாட்டேன்” என்றவன், அங்கிருந்த நாற்காலியை எடுத்துப்போட்டு அமர்ந்துவிட்டான்.
அவனிடம் மரியாதையாய் பேச வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எங்கோ போனது அவளுக்கு.
“இதென்ன பெட்டிக்கடைன்னு நினைச்சியா? அதிகாரமா வந்து வேலை குடுன்னு கேட்குற? அஸ் அ மேனேஜர், யாரை வேலைக்கு ரெக்ரூட் பண்ணனும்ன்னு நான் தான் டிசைட் பண்ணனும்!” என அவள் சொல்கையில்,
“அய்யய்ய…!!! அப்போ நீங்க இதுக்கு ஓனர் இல்லையா? மேனேஜர் தானா? அடச்ச! இது தெரியாம உங்ககிட்ட மல்லுக்கட்டிட்டு இருக்கேன் பாருங்க” என்றவன், “எங்க உங்க ஓனரு? அவரை வர சொல்லுங்க, நான் அவர்க்கிட்ட பேசிக்குறேன்” என்றான்.
தன்யாவுக்கு அவன் நடத்தையில் ‘ஆஆஆ’ என வாயை பிளப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
சொன்னவன் அதோடு நிற்காது, அறையை விட்டு வெளியே சென்று சற்று சத்தமாய், “ஷீலா! உங்க ஓனர் எங்க இருப்பாரு இப்போ?” என்றான் ரிசெப்ஷனைப் பார்த்து.
அவளோ தன்யாவை கண்டு சங்கடமாய் நெளிய, அவன் பின்னோடு வந்த தன்யா, “மைன்ட் யுவர் லாங்குவேஜ்! அவர் ஓனர் இல்லை! எம்.டி! மேனேஜிங் டைரக்டர்” என பல்லைக்கடித்தவள், “நீ IBM ஸ்டுடென்ட்ன்னு என்னால நம்பவே முடில! ஹொவ் சீப் யூ ஆர்!!” என்றாள் முகத்தை சுளித்து!
“நீங்க நம்பனும்ன்னு காலேஜ் ஐடி கார்டை கழுத்துல மாட்டிக்கிட்டேவா சுத்த முடியும்!” என நொடித்த ஆதி, அங்கிருந்தோரை பார்த்து, “ஏங்க, உங்க ஓனரை வர சொல்லுங்க, ஐ வான்ன மீட் ஹிம் நவ்! எனக்கொரு நியாயம் கிடைக்காம நான் இங்கிருந்து போக போறதில்லை” என்றான் சத்தமாக!!!
ஒரு ஓரமாய் ஒளிந்திருந்து ஆதி செய்யும் அட்டகாசங்களை வயிற்றில் கரைக்கும் புளியோடு பார்த்துக்கொண்டிருந்த கோகுல், “PF கேட்டு இன்னைக்கே அப்ளை பண்ணிடுவோமா? வர பணத்தை வாங்கிகிட்டு ஊர் பக்கமா போய் ரெண்டு பன்னிக்குட்டி வாங்கியாச்சும் மேய்ச்சுக்கலாம்!” என தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தான்.
“ஷ்…!!! திஸ் ஸ் நாட் அ பிஷ் மார்கெட்! நீ பண்றதுக்கெல்லாம் நான் போலிஸ்க்கிட்ட போனா உனக்கு தான் ப்ளாக் மார்க்! ஒழுங்கா ப்ரோப்ளம் பண்ணாம இங்கிருந்து போய்டு” என தன்யா சொல்ல, “உங்களுக்கு மட்டும் தான் போலிஸ் தெரியுமா? எங்களுக்கு சிபிஐ-யே பழக்கம்!” என கெத்தாய் சொன்ன ஆதி, “என்னடா மச்சான்?” என்றான் கோகுல் நின்றிருந்த திக்கை நோக்கி…
தன்யா பார்ப்பதற்குள் சுவரோடு சுவராய் ஒண்டிக்கொண்ட கோகுல், “சைத்தான், சாகப்போனா கூட துணைக்கு வான்னு நம்மளையும் கூப்புடுதே! சிக்கிடாதடா கோகுலு! ஓடிடு” என சொல்லிக்கொண்டே, அடுத்த கணம் ‘கும்தத்தா’வாகிப்போனான்.
“வேர் இஸ் ஓனர்? வேர் இஸ் ஓனர்?” என ஆதி மோளம் கொட்டிக்கொண்டே நிற்க, அவன் பின்ப்பக்கம், “நான் தான் ஓனர்! என்ன விஷயம்?” என வந்து நின்றார் இராஜகோபாலன்.
தன் தந்தையை அந்நேரம் அங்கே எதிர்ப்பார்த்திராத தன்யா சற்றே படபடப்பானாள். பெரிய முதலாளி எப்போதாவது அங்கே விஜயம் செய்வதால் தேர்வறையில் ஆசிரியரை, அருகே கண்ட மாணாக்கர் போல எல்லாருக்குமே அவர் வருகையில் சிறு நடுக்கம் இருக்கும்!
இராஜகோபாலை கண்டதும், ஆதித்யாவின் உடல்மொழி சட்டென மாற்றம் கொண்டது. உடல் மொழியிலேயே ஒருவித ‘மரியாதை’ தோற்றத்தை கொண்டு வந்தவன், “ஹெலோ சார்… ப்ளீஸ் டு மீட் யூ” என்றான் இன்முகமாய்.
அவரோ, “திஸ் ஸ் நாட் அ ஹேப்பி மீட் யங் மேன்! என் ஆபிஸ்ல நின்னுக்கிட்டு என்ன பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க?” என்றார் சிறு கடுமை தொனிக்க…
“சார், ஆக்ட்சுவலி நான் எந்த ப்ரோப்ளமும் பண்ணல! என்ன நடந்துச்சுன்னு சொல்றேன்! யார் பக்கம் நியாயம்ன்னு நீங்களே சொல்லுங்க” என்றான் வெகு தணிவாய். (Zolpidem)
அவர் ‘சொல்’ என்றும் அனுமதி அளிக்கவுமில்லை. ‘சொல்லாதே’ என்றும் தடுக்கவுமில்லை!
ஆதியே, “சார், எல்லாரும் வேடிக்கை பார்க்குறாங்க! நம்ம ரூம்க்குள்ள போய் பேசுவோமா?” என்றான் கிசுகிசுப்பாய்.
அவனை ஆராய்ச்சியாய் சில நொடிகள் பார்த்தவர், சிறு தலையசைப்புடன் தன்யாவின் அறைக்குள் செல்ல, அவரை பின்தொடர்ந்து பணிவுடன் செல்பவனை முறைத்துக்கொண்டே உள்ளே சென்றாள் தன்யா.
“சொல்லுங்க”
ஆதி, “சார், இன்னைக்கு நடந்த இன்டர்வியூக்கு நானும் வந்திருந்தேன்! காலைல இருந்து இந்த வேலை கிடைக்குமான்னு எதிர்ப்பார்ப்போடு காத்திருந்தா, இந்த மேடம், பியூன்க்கிட்ட, யாருக்குமே வேலை கிடையாதுன்னு சொல்லிவிடுறாங்க!!” என்றவன்,
“நீங்களே சொல்லுங்க! சிட்டில ‘தன்யா பில்டர்ஸ்’க்கு எத்தனை பெரிய மதிப்பு இருக்கு! அவனவன் இங்க ஒரு செக்யூரிட்டி வேலை கிடைக்காதான்னு ஏங்கிட்டு இருக்கானுங்க! அப்படி இருக்கப்போ, இந்த வேலைக்கான முழு தகுதியோட இருக்க என்னை மாறி ஆளுக்கு வேலை கிடையாதுன்னு சொன்னா, மனசு வலிக்குமா இல்லையா சார்!!?” என்றான் பரிதாபமாய்!
அவன் பேசிய பேச்சையும், பேசிய விதத்தையும் கண்டவள், “அடப்பாஆஆஆஆவி!!!” என கண்கள் விரிய அதிர்ந்து போய் நின்றாள்.
“ஒரு நாள் வேலை பார்த்தாலும், ‘தன்யா பில்டர்ஸ்’ மாதிரி ஒரு பெரிய கம்பெனில வேலை பார்க்கனும்ன்னு தான், IBMல படிச்சுட்டு பாரின் கீரின்னு போகாம மகாராஷ்டிரால இருந்து வேலை கேட்டு இங்க வந்து நிக்குறேன்!!” என ஆதங்கமாய் சொன்னபோது, ‘ஐயோ, நடிக்குறான்ப்பா இவன், நடிக்குறான்’ என வாய்விட்டே அலற வேண்டும் போல இருந்தது அவளுக்கு!!!
[the_ad id=”6605″]
‘அவ்வளவுதான், பேசி முடித்து விட்டேன்’ என்பதை போல இருக்கையை விட்டு எழுந்து நின்றவன், “சாரி சார்! வேலை கிடைக்கலங்குற ஆதங்கத்துல ஏதோ பேசிட்டேன்! நான் கிளம்புறேன் சார்” என திரும்பியவனை, “ஒரு நிமிஷம்” என தடுத்தார் இராஜகோபாலன்.
தன்யாவுக்கு புரிந்து போனது அடுத்து என்ன நடக்கும் என!
‘ப்பா! இவன் சரியான பிராடுப்பா! நம்பாதீங்க! நடிக்குறான்’ என ஊமையாய் புலம்பினாள்.
மணியை ஒலித்து உதவியாளரை அழைத்தவர், “இவரோட ரெஸ்யூம் கொண்டு வாங்க” என பணிந்துவிட்டு, ஆதியை மீண்டும் இருக்கையில் அமர செய்தார்.
அப்போது அமர்ந்திருந்த ஆதியை பார்க்கையில், ‘இவனா என்னிடம் அத்தனை வம்பு செய்தது?’ என சந்தேகிக்காமல் இருக்க இயலவில்லை அவளால்! அவன் முகத்தில் இருந்து பால் எடுத்து பத்து வீட்டுக்கு பிரித்து கொடுக்கலாம் போல அப்படி ஒரு அப்பாவித்தனம்!
‘இந்த மூஞ்சியை எங்கடா ஒளிச்சு வச்சுருந்த? இப்படி நடிக்குறியேடா’ என எண்ணிக்கொண்டாள்.
அவனது சுயவிவரத்தை மேற்ப்பார்வையிட்ட ராஜகோபாலின் முகம் முழு திருப்தியை காட்ட, தன்யாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
முழுதாய் பார்த்து முடித்தவர், “சோ, வாட்ஸ் யுவர் நேம்?” என்றார் தன்யாவை போலவே!!!
தன்யா மனதுக்குள், ‘ம்ம்.. தவளைவாயன்’ என நொடிக்க, அவனோ, “ஐ’யம் மிஸ்டர் ஆதித்யதேவ்” என்றான் நிமிர்வாய்.
தன்யா, ‘இதேதானேடா நானும் கேட்டேன்!’
“IBM மாதிரி பெரிய இன்ஸ்டியூஷன்ல படிச்சுட்டு இங்க எதுக்கு வேலைக்கு வரணும்?” அவரின் அடுத்த கேள்வி, தன்யா கேட்ட அதே கேள்வி!
அவளிடம், ‘அப்போ இது மொக்க கம்பெனியா?’ என கேட்டவன், அவரிடம், “நம்ம நாட்டுல படிச்சுட்டு வெளிநாட்டுக்கு சம்பாரிச்சு குடுக்க எனக்கு துளியும் விருப்பம் இல்லை சார். அதோட, ‘தன்யா பில்டர்ஸ்’ மேல எனக்கு தனிப்பட்ட முறைல நிறைய அபிமானம் இருக்கு! ‘விதை’ போட்டதும் செடி வரணும்ன்னு நினைக்காம, பின்னால தளைச்சு ஓங்கி நிற்க்கனும்ன்னு நீங்க நினைச்சு, இந்த கம்பெனியை கொஞ்ச கொஞ்சமா மெருக்கேத்தி இன்னைக்கு இந்த நிலைக்கு கொண்டு வந்துருக்கீங்க! சோ, இதுல ஒரு அங்கமா நான் இருக்கனும்ன்னு ஆசைப்படுறேன்!!” என சொல்ல,
தன்யா, ‘அடங்க்கொக்கமக்க…’ பல்லைக்கடித்தான்.
ராஜகோபால் அவன் பதிலில் பரம திருப்தியாய் சிறு புன்னகையோடு ஒரு லெட்டர் பேடை எடுக்க, கிடைத்த கேப்பில் தன்யாவை கண்டு நமட்டு சிரிப்பு சிரித்து வெறுப்பேற்றினான் ஆதித்யா.
“சோ, இந்த வேலைக்கு நீ செலக்ட் ஆனா, சேலரி எப்படி எதிர்ப்பார்க்குறீங்க?” என இன்முகமாய் அவர் கேட்க, தன்யாவோ, ‘அடுத்த பிட்டை போடப்போறான்’ என உள்ளங்கையை இருக்க மூடி தன்னை அடக்கிக்கொண்டு அமர்ந்திருக்க, அவனோ,
“பேங்க்ல போட்டாலும் ஓகே, கைல குடுத்தாலும் ஓகே” என அவளிடம் சொன்ன அதே பதிலை சொல்ல, ஆரவாரமாய் சிரித்தார் இராஜகோபாலன்.
ஒரு நிமிடம் வரை நீண்ட அவர் சிரிப்பில், தன்யா புசுபுசுவென புகைவண்டி போல மூச்சுவிட்டுக்கொண்டு அமர்ந்திருக்க, ஆதிக்கு அவளை பார்க்கப் பார்க்க உல்லாசமாய் இருந்தது. ஏனோ அவள் கடுப்பாவது அவனுக்கு பேரானந்தத்தை கொடுத்தது.
நீண்ட சிரிப்பை குறைத்தவர், “ஐ லைக் யூ” என்றார் சிரிப்பினூடே!!!
இம்முறை பட்டென ஆதியின் விழிகள் தன்யாவை நோக்கி திரும்ப, அவளும் அவனைத்தான் முறைத்துக்கொண்டிருந்தாள்.
அவள் முறைப்பில் குஷியானவன், அவரிடம் சொல்வதை போல தன்யாவை பார்த்தே, “ஐ லைக் யூ டூ!!” என்றான் MANDHAGAASAMAAIமந்தகாசமாய்…
“ஒகே யங் மேன்! உங்களுக்கு ஒன் வீக் டைம்! அதுக்குள்ள எப்போ வேணாலும் இங்க ஜாயின் பண்ணிக்கலாம்” என்று சொல்லி அவர் கையொப்பமிட்ட லெட்டர் பேடை அவனிடம் நீட்டி, “இதை ரெக்ரூட்மென்ட் ஆபீசர்கிட்ட குடுங்க, அப்பாயின்மென்ட் ஆர்டர் குடுப்பாங்க” என சொல்ல,
“ஐயோ சார்! ஐ கான்ட் பிலீவ் திஸ்! எனக்கு வேலை கிடைச்சுடுச்சா?! தன்யா பில்டர்ஸ்ல இப்போ நானும் ஒரு அங்கமா மாறிட்டேனா? என்னால நம்பவே முடியல… தேன்க்யூ சார், தேன்க்யூ சோ மச்!” என சொல்ல, “இது உங்க திறமைக்கு கிடைச்ச வேலை” என்றவர், அவன் கரம் குலுக்கி வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு, தன்யாவை திரும்பியும் பார்க்காது அவ்விடம் விட்டு சென்றார்.
ராஜகோபால் சென்றதும், தன்யாவை பார்த்தவன் எள்ளல் பார்வையுடன், “மேடம்! மேடம்! ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்லலாமே மேடம்!!!” என போலியாய் கெஞ்சியபடி, நமட்டு சிரிப்பு சிரிக்க, “கெட் அவுட்ட்ட்ட்ட்” என தொண்டை கிழிய கத்தினாள் தன்யா.
உல்லாசமாய் சிரித்துக்கொண்டே வெளியே வந்தவன் அப்பாயின்மென்ட் ஆர்டரை வாங்கிக்கொண்டு கோகுலை தேட, அவனோ ஏதோ ஒரு படிவத்தை நிரப்பிக்கொண்டிருந்தான்.
அருகே சென்று அவன் தோளில் கைப்போட்டு அணைத்தபடி, “என்ன மச்சி பண்ற? லீவ் லெட்டரா?” என்றான் ஆதி.
“லீவ் லெட்டர் இல்ல, PF செட்டில்மென்ட் பாரம்!” என கோகுல் சொன்னதும், “ஏன் மச்சி? வேலையை விட்டு போறப்போ வாங்கிக்கலாம்ல?” என்றான் ஆதி!
[the_ad id=”6605″]
“வேலையை விட்டு தான் அனுப்ப போறாங்களே! அதான் இப்போவே எழுதி கொடுத்துட்டு போய்டலாம்ன்னு!!” என்றவனை கண்டு உரக்க சிரித்தவன், அவன் முன்னே தன் அப்பாயின்மென்ட் ஆர்டரை போட, அதைப்பார்த்த கோகுலுக்கு சர்வமும் ‘சர்ர்ர்ர்’ரென சுற்றியது.
“எப்படிடா?” என்றான் ஆச்சர்யம் தாளாது!!
“அதெல்லாம் தொழில் ரகசியம்டா அய்யாசாமி!” என கிண்டல் செய்தவன், அவனோடு உற்சாகமாய் வீட்டிற்க்குச் சென்றான்.
அங்கே மகாராஸ்ட்ராவில் தெய்வானைக்கு சதா சர்வக்காலமும் தன் நடுமகனின் நினைவே!
‘குழந்தை என்ன பண்ணுதோ தெரியலையே?’ என அவர் புலம்புகையில், மதுதேவாவே, “ம்மா, அவன் மத்தவங்களை என்ன பண்றானோன்னு பீல் பண்ணுங்க, அதுல ஒரு நியாயம் இருக்கு” என வாருவாள்.
அவள் அப்படி சொல்கையில், “ம்ச்! போடி! என் புள்ள வழவழன்னு பேசுவானே ஒழிய, அவனுக்கு சூது வாது தெரியாது” என்பார். அவருக்கே ‘இது கொஞ்சம் ஓவர்’ தான் என தெரிந்தாலும், வெளியே விட்டுக்கொடுக்க முடியுமா?!
அன்று இரவு தன் கணவர் உறங்கியதும் மகனிடம் பேசலாம் என முடிவெடுத்தவர், ஒன்பது மணி உணவு வேளையை எட்டு மணிக்கே மாற்றி, பத்து மணி மாத்திரையை ஒன்பதுக்கே அவர் வாயில் தள்ளி, பத்து மணிக்குள் அவரை படுக்கையில் தள்ளி விட்டிருந்தார்.
பத்து பத்துக்கு எல்லாம் போர்வையை தலை வரை போர்த்திக்கொண்டு, மகனுக்கு அலைபேசியில் அழைக்க, மறுமுனையில் ஆதி அழைப்பை எடுத்ததுமே, “மாத்தாஜி!!!” என்றான் உற்சாகமாய்.
அவன் உற்சாகம் அவரையும் தொற்றிக்கொள்ள, “டேய் ஆதிக்குட்டி! என்னடா பண்ற? அம்மாக்கு ஒரு போன் கூட பண்றது இல்ல!” என்றார்.
அவர் அருகே, ‘க்கும்ம்… க்கும்…’ என்ற சப்தம்.
ஆதி, “இன்னைக்கு துமாரா பேட்டா, படு பிஸி!” என அவன் சொல்ல, “என்ன பிசியா இருந்தாலும் அம்மாக்கிட்ட பேசிடனும் தங்கம்” என கொஞ்சினார் தெய்வானை.
அருகே, ‘க்கும்ம்… க்கும்…’ சப்தம்.
“தாய் சொல்லை தட்டாதே! நைனா சொல்றதை கேக்காதே!!” என ஆதி சொல்ல, “போடா லூசு” என சிரித்தார் தெய்வா.
மீண்டும், ‘க்க்கும்…க்க்கும்…’ சப்தம்.
தெய்வா, “கிருஷ்ணா கேட்டுட்டே இருக்கான்டா! அங்க போனதும், எவன் சிக்குனானோ அவனோட அக்கவுன்ட் நம்பர் வாங்கிக்குடுன்னு சொன்னேன்ல பணம் போட?” என சொல்ல, மறுப்பக்கம் ஆதி போன் ஸ்பீக்கரில் இருக்க, ‘எவன் சிக்குனானோ?’ என்ற தெய்வாவின் வார்த்தையில், குடித்துக்கொண்டிருந்த தண்ணீர் மூக்கில் புகுந்து, புரை ஏறியது கோகுலுக்கு.
ஆதி, “ஹீஹீ” என கோகுலை பார்த்து அசடு வழிய சிரித்துக்கொண்டே, “அதெல்லாம் தேவையில்லமா! நான் இங்க வேலைக்கு சேர்ந்துட்டேன்! பணம் எதுவும் தேவைன்னா கிருஷ்ணாக்கிட்ட கேட்டுக்குறேன்” என்றான் ஆதி.
“சரிடா சரிடா! தங்கிருக்க இடம் சௌகர்யமா தானே இருக்கு? சிக்குனவனை விட்டுடாதடா! அப்பறம் வேற ஒரு இளிச்சவாய் கிடைக்குறது கஷ்டமா போய்டும்” என்ற தெய்வா, பெரிய ஹஸ்யத்தை சொன்னவர் போல சிரிக்க, வேகமாய் ஸ்பீக்கரை அணைக்க போன ஆதியின் கரத்தை கெட்டியாய் பிடித்துக்கொண்டு, ‘பேசு’ என சைகை செய்தான் கோகுல், முறைப்புடனே!!!
[the_ad id=”6605″]
இம்முறை பலமாய், ‘க்க்க்க்கும்… க்க்க்க்கும்….’ என்ற சப்தம்.
தெய்வா, “போன்ல ஏதோ பிரச்சனை போல டா! நடுல நடுல கொற கொறன்னு ஒரு சத்தம்!!” என்றிட,
“எங்கிருந்துமா பேசுற?” என்றான் ஆதி.
“உங்க அப்பாக்கு ரெண்டு தூக்க மாத்திரையை குடுத்துட்டு நான் போர்வைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு பேசிட்டு இருக்கேன்!!! ஹிஹி” என தெய்வா சொல்ல,
கோகுலுக்கு, ‘ஆஹா…!!! குடும்பமே பைத்தியம் தான் போல’ என்றுதான் தோன்றியது.
ஆதியோ, “சத்தம் உன் பக்கத்துல இருந்து வருதா பாரு?” என கேட்க, அந்நேரம் பார்த்து ஜெயதேவும் ‘க்கும்.. க்கும்ம்…’ என கனைக்க, தெய்வா, “ஆமா ஆதி! உங்கப்பா தான் தூக்கத்துலயே தும்முறாரு” என்றார் சீரியசாய்.
“ஐயோ ம்மா, அவர் தூங்கவும் இல்ல, தும்மவும் இல்ல! நீ பேசுறதை தான் ஒட்டுக்கேட்டுட்டு படுத்துருக்காரு”
“அதெப்படி? நான் தான் ரெண்டு மாத்திரை குடுத்தேனே!!” என்றவர் மெல்ல நகர்ந்து ஜெயதேவின் மூக்கின் அருகே கைவைத்து பரிசோதிக்க, “நீ குடுத்த மாத்திரையை நைனா முழுங்கிருக்க மாட்டாரு! நீ என்கிட்ட பேசுறது அவருக்கு தெரியும்ன்னு காட்டிக்க தான் இப்படி ‘வசந்த மாளிகை’ சிவாஜி கணக்கா இருமிட்டு இருக்காரு!” என்றான் சிரிப்பாய்.
“பாரேன்” என ஆச்சர்யமானவர், “இப்போ என்னடா பண்றது?” என அவனிடமே கேட்க, “நீ போனை வைக்குற வரைக்கும் அவர் இருமிக்கிட்டே தான் இருப்பாரு! அதனால நீ போனை வச்சுட்டு தூங்கு, நான் நாளைக்கு பகல்ல பேசுறேன்” என்றான்.
“ஹோ! சரிடா! அப்போ அம்மா போனை வைக்குறேன்! நீ வாட்சப் பண்ணு” என சொல்லிவிட்டு அழைப்பை வைக்க, ஜெயதேவ் கண்ணை மூடிக்கொண்டு ஏகக்கடுப்பில் படுத்திருந்தார்.
அவர் அருகே சென்ற தெய்வா, “ஏங்க, நான் போனை வச்சுட்டேன்! நீங்க இனிமே இரும வேணாம்! மாத்திரை போட்டுட்டு தூங்குங்க, என்ன?” என அக்கறையாய் சொல்ல, திரும்பி அவரை முடிந்த மட்டும் முறைத்தவர், எழுந்து அமர்ந்துக்கொண்டு,
“இத்தனை நாளும் அந்த தடிமாட்டை பெத்தது தான் தப்புன்னு நினைச்சுட்டு இருந்தேன்! ஆனா, இப்போதான் தெரியுது, உன்னை கட்டுனதே பெரிய தப்புன்னு” என்றவர், தலையணையை தூக்கிக்கொண்டு வெளியே சென்றார் கோவமாய்.
செல்லும் அவரையே யோசனையாய் பார்த்த தெய்வானை, “அடப்பாவமே! இதையே நீங்க இப்போதான் கண்டுப்புடிக்குறீங்களா?” என திகைத்தவர், அந்த ஆயாசத்தோடே, நிம்மதியாய் உறங்கச் சென்றார்.
-கலாட்டா தொடரும்…