அத்தியாயம் -14
கனகாவும் கார்த்தியும் குடும்பத்தோடு வந்து சேரும் நாள் அது. வாசலில் ஆரத்தி எடுக்க காத்திருந்தாள் மீனாட்சி.
ஆட்டோவில் இருவரும் வந்து இறங்கினர்.
“ஊர் கண்ணு உறவு கண்ணு எல்லா கண்ணும் போகட்டும்”. என்று சுற்றி ஆரத்தி எடுத்தாள் மீனாட்சி.
கல்யாணம் ஆகி இதான் முதல் நாள் மாமியார் வீட்டு படி ஏறுவது.
“உங்களுக்கு இந்த வீடு ஒன்னும் புதுசு இல்லையே ஏற்கனவே வந்துருக்கீங்களே கேஷுவலா இருங்க” என்றாள் லதா.
“ம்ம் ஆனாலும் ஒரு மாதிரி தயக்கமா இருக்கு ” என்று குறித்துக் கொண்டாள் கனகா.
“மாசமா இருக்கும் போது எப்படி இருக்கனும்னு நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை,நீங்களே நர்ஸ் தானே உங்களுக்கு எல்லாம் தெரியும் ஸோ பார்த்து நடந்துக்கங்க ” என்றாள் லதா.
“சரிங்க சிஸ்டர்”
“சிஸ்டரே சிஸ்டர்னு கூப்பிடுறாங்க பாருங்களேன்” என்று நக்கல் அடித்தாள் லதா. உடனே கனகாவும் சிரித்துவிட்டாள்.
ஒரு நிமிஷம் இதோ வந்துடுறேன் என்று நகர்ந்த லதா,அவசர அவசரமாக தன் அறையை ஏறக்கட்டினாள். அதைப்பார்த்து நம் கதாநாயகன் கோபி..
“ஏய் என்னடி பண்ணிட்டு இருக்க” என்றான்.
“நீங்க மறுபடியும் ஊருக்கு போற வரைக்கும் நம்ம ஹாலில் தான் படுக்க போறோம். இனி இந்த ரூம்ல கார்த்திக் கனகா இருக்கட்டும்” என்ற லதாவை பார்த்த கோபி.
“அடியேய் நாம இரண்டு பேர் ஏன் ஹாலில் படுக்கனும் “என்றான்.
“ஏன் படுத்தா என்னவாம் ? எப்படி இருந்தாலும் நீங்க அப்ராடு போனவுடன் நான் இங்க தனியா தானே இருந்தாகனும் ஸோ என் ஒருத்திக்கு எதுக்கு தனி ரூம் ,அவங்களாச்சும் இருக்கட்டுமே”என்றாள் லதா.
“ஆங் அது எப்படி நமக்குன்னு இருக்கிற ரூம விட்டுக் கொடுத்துட்டு நம்ம எங்க படுப்போமா ஹால்ல எல்லாம் என்னால படுக்க முடியாது ” என்றான் கோபி.
“அப்போ சரி இங்க நீங்க இன்னும் எத்தனை நாள் இருக்க போறீங்க” என்று வினவினாள் லதா.
“நான் இன்னும் ஒரு பத்து நாள் இங்க இருப்பேன்”என்றான் கோபி.
“அப்படின்னா நம்ம ஒன்னு பண்ணுவோம் இன்னும் பத்து நாள் நீங்க இங்க இருக்க போறீங்க பத்து நாள் நானும் நீங்களும் எங்கயாவது போயிட்டு வருவோம். நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா டைம் ஸ்பென்ட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சுல” என்றாள் பாசமாக.
“அதுவும் சரிதான் லதா நம்ப ரெண்டு பேரும் பேசாம உன் சொந்த ஊருக்கு போயிட்டு வருவோம் உன் அப்பா அம்மாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அங்க வீடு நல்லா விஸ்தாரமா இருக்கும் ரெண்டு பேரும் தங்கிட்டு வருவோம்” என்றான் கோபி.
‘ஆஹா நல்ல ஐடியாவா இருக்கே பேசாம சரின்னு சொல்லிட்டு ஊருக்கு போவோம்’ என்று நினைத்த லதா. தன் துணிமணிகளை எடுத்து பேகில் வைத்துக்கொண்டு அவனுடைய துணியையும் எடுத்து பேகில் வைத்துக்கொண்டு ஊருக்கு வருவதாக தன் பெற்றோரிடம் கூறினாள்’
அவர்களுக்கு அளவுக்கடந்த மகிழ்ச்சி, தங்களின் மகள் திருமணமாகி முதல் தடவையாக கணவனுடன் இங்கு வந்த தங்கப் போகிறாள் என்று நினைக்கும் போது பூரிப்பாக இருந்தது.
“என்னங்க பிள்ளைங்க வருதுங்க , பலகாரம் எல்லாம் செய்யணும் கொஞ்சம் அரிசி மாவு அரைச்சிட்டு வாங்க” என்று கணவனிடம் கூறினாள் ராக்காயி.
“அதுக்கு என்ன ராக்காயி உடனே போய் அரைச்சிட்டு வரேன்”என்றார் ரங்கசாமி.
ஊருக்கு இருவரும் பேருந்தில் பயணம் செய்தனர். இருவரும் பக்கத்து பக்கத்து சீட்டில் அமர்ந்தபடி கதைத்துக் கொண்டு வந்தனர்.
“என்னங்க எங்க ஊரு வரத்துக்கு இன்னும் 50 கிலோமீட்டர் தான் இருக்கு. இதோ பாருங்க இந்த குளத்துல தான் வருஷா வருஷம் விளக்கு விடுவோம் கல்யாணம் ஆகாத பொண்ணுங்க. எங்களை சைட் அடிக்கிறதுக்காகவே பசங்க இங்க வருவானுங்க ” என்று கணவனிடம் சொல்லி சிரித்தாள் லதா.
“ஹாஹா “
“என்னங்க சிரிப்பு அடக்க முடியலையா”
“இல்லை, உங்க ஊரு பொண்ணுங்க அவ்ளோ அழகா இருக்காங்க எங்கேயும் பார்க்காத அழகாய் இங்க பார்க்க வராங்க அதை நினைச்சு சிரிச்சேன்” என்றான் கோபி.
“ஆனாலும் உங்களுக்கு நக்கல் கொஞ்சம் அதிகம் தான்”என்றாள் லதா.
“அது சரி உங்க ஊர பத்தி உன்னை பத்தி சொன்னா உனக்கு தான் கோபம் வருமே”என்றான் கோபி.
அவன் தோளில் தலை சாய்த்தாள் லதா.
“என்னங்க நீங்க என்னதான் சிங்கப்பூர் மலேசியான்னு வெளிநாட்டில் இருந்தாலும் நம்ம ஊர் அழகே தனி தான் தெரியுமா? இங்க கிடைக்கிற சந்தோஷம் வேற எங்க கிடைக்க போகுது” என்றாள் லதா.
“உண்மைதாங்க தான் நானும் அனுபவபட்டு இருக்கேன். வெளிநாடு போனதுல இருந்து எதையோ மிஸ் பண்ற மாதிரி இருக்கு தெரியுமா. அங்கேயும் எல்லாம் சவுகரியம் இருக்கு. ஊர் சுத்தமா இருக்கு,நாகரிகமான மக்கள்தான் ஆனாலும் இங்க இருக்கிறப்போ இருந்த ஒரு சந்தோஷம் அங்க இல்லை “என்றான் கோபி.
“ஹாஹா ஆமாங்க நியூஸ் சேனல் பார்க்காத வரைக்கும் நம்ம ஊர்ல நிம்மதியாக இருக்கலாம் ” என்றாள் லதா.
“என்ன லதா புதுசா சொல்ற”
“ஆமாங்க நியூஸ் சேனல் ஆன் பண்ணாலே ஒரே நெகடிவ் நியூஸ் தான் வரும். இந்த ஊர்ல இது நடந்துச்சு அந்த ஊர்ல அது நடந்துச்சுன்னு பயமுறுத்தும் விதமாக எதாவது போடுவாங்க ,அதை பாத்துட்டு நாமளும் ஐயோ நம்ம ஊர் இப்படி ஆயிடுச்சே அப்படி ஆயிடுச்சேன்னு கவலை பட்டுட்டு இருப்போம். மற்றபடி நம்ம உண்டு வேலை உண்டுன்னு இருந்தாலே எங்கேயும் சந்தோஷமா இருக்கலாம். ” என்றாள் லதா.
‘நியூஸ் சேனல் என்றதும் அவனுக்கு ரித்விகாவை நியாபகப்படுத்தியது. ப்பா…என்ன பொண்ணு அவ ஒரே பித்தலாட்டம். எப்படியோ பணத்தை கொடுத்து செட்டில் பண்ணியாச்சு ‘ என்று நினைத்துக்கொண்டே இருக்க.
“ஹலோ என்னங்க யோசிச்சிட்டு இருக்கீங்க”என்றாள் லதா.
“ஒன்னும் இல்ல லதா”
“சரி சரி ஊர் வரப்போகுது பையை எடுங்க இறங்க தயாரா இருப்போம்” என்றாள் அவள்.
இருவரும் பேருந்தை விட்டு இறங்கினர். சுற்றி முற்றி பார்த்தாள். இங்க அந்த ஆட்டோக்கார அண்ணே இருப்பாரு எங்க காணோம் என்று பார்க்க சர்ரென்று வந்து நின்றார் ஆட்டோக்கார அண்ணா.
“என்ன லதா கன்னு எப்படி இருக்க”என்றார் பாசமாக.
“நல்லாருக்கேன் அண்ணே இதோ இவர் தான் வீட்டுக்காரு பேரு கோபி”
“ம்ம் வணக்கம் சார், ஏறுங்க வீட்ல கொண்டு போய் விடுறேன்” என்று இருவரையும் ஏற்றிக்கொண்டு லதாவின் வீட்டை நோக்கி பயணித்தனர்.
போகும் வழி எங்கும் மரங்களும் செடி கொடிகளும் பச்சை பசேல் என்று இருந்ததை பார்த்துக் கொண்டே வந்தான் கோபி. நகரத்தில் எங்கு பார்த்தாலும் அடுக்கு மாடி கட்டிடங்களும் உயர் ரக ஓட்டல்கள் மட்டுமே இருக்கும் ஆனால் இங்குதான் சுத்தமான காற்றையே சுவாசிக்க முடிகிறது என்று நினைத்தான் கோபி.
“என்ன கோபி பொண்ணு பார்க்க வந்ததோடு சரி அதோட இப்பதானே வரீங்க எங்க ஊருக்கு”என்றாள் லதா.
“காமராஜர் இவ்வளவு நாளா இந்த அழகான ஊரை மிஸ் பண்ணிட்டேன்” என்று வருந்தினான் கோபி.
“அதுக்கு என்ன கோபி இங்க தானே ஒரு வாரம் இருக்க போறோம் டோன்ட் வொரி” என்றாள் லதா.
இவர்கள் பேசுவதற்கு ப்ரைவேசி தருவது போல் அந்த ஆட்டோக்காரரும் அமைதியாக வந்தார்.
“ஆமா சுற்றி முற்றி எந்த ஆட்டம் இல்லையே நீங்க மட்டும் தான் வந்தீங்க” என்று கேள்வி எழுப்பினான் கோபி.
“அட இந்த ஊருக்கு ஆட்டோ ஸ்டாண்ட் அப்படி என்று ஒன்று இருக்கிறது தான் பெருசு. ஆனால் மிஞ்சு போனால் 4 ஆட்டோ தான் நிற்கும். இன்னைக்கு மத்த மூனு ஆட்டோவும் வெளியே எங்கயோ சவாரி போயிருக்கு. அதான் நான் வந்தேன்”என்றார் ஆட்டோக்காரர்.
“ஆமாங்க இந்த ஆட்டோக்கார அண்ணன் தான் நான் பள்ளிக்கூடம் போகும்போது சரி காலேஜ் ஹாஸ்டல் முடிச்சிட்டு வீட்டுக்கு வரும்போது சரி இவர் தான் என்னை கொண்டு வந்து விடுவார். இவர் கூட பயணம் செய்வது அவ்வளவு பாதுகாப்பா இருக்கும். எங்கேயாவது வெளியில் போகணும் அப்படின்னா இந்த ஆட்டோக்கார அண்ணனுக்கு ஒரு போன் பண்ணா போதும் வந்து நிப்பாரு” என்று பெருமையாக அந்த ஆட்டோக்காரரை பற்றி பேசிக்கொண்டு வந்தாள் லதா.
“அப்படின்னா அண்ணே நீங்க பேமஸ் ன்னு சொல்லுங்க” என்று சிரித்தான் கோபி.
பேசிக் கொண்டு வந்ததில் வீடு வந்து சேர்ந்ததே தெரியவில்லை. வாசலில் ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டிருந்தாள் ராக்காயி.
“ஊரு கண்ணு உறவு கண்ணு கொள்ளை கண்ணு எல்லா கண்ணும் போக” என்று த்ரிஷ்டி சுத்தி போட்டு உள்ளே இருவரையும் அழைத்தாள்.
“என்ன மாப்ள இப்பதான் ஊரு பக்கம் வரணும்னு உங்களுக்கு தோணுச்சா” என்றார் ரங்கசாமி.
“அப்படி எல்லாம் இல்லைங்க மாமா. நேரம் கிடைக்காது அவ்வளவுதான்” என்றான் கோபி.
“அம்மாடி மாப்பிள்ளைய பின்பக்கம் கூட்டிட்டு போய் கை கால் அலம்ப கிணத்துல தண்ணி சேர்த்து கொடு கை கால் அலம்பிட்டு வந்த உடனே ரெண்டு பேருக்கும் காபி போட்டு தரேன் குடிங்க” என்றார் ராக்காயி.
கிணற்றில் தண்ணீர் சேர்ந்தும் வேலை என்றால் நம் லதாவுக்கு ரொம்ப பிரியம் சின்ன வயதில் இருந்தே அது அவளுக்கு ஒரு விளையாட்டு போல. இப்பவும் துள்ளி குதித்தபடி பின்புறம் சென்றாள் லதா.
“என்னங்க வாங்க தண்ணி எடுத்து தரேன்” என்று கிணற்றில் வாலியை விட்டு ஒரு பக்கம் கயிற்றை இழுக்க துவங்கினாள்.
அவள் வாலியின் நீரை அவனுக்கு கை கால் அலம்ப ஊற்றும் போது சில்லென்று இருந்தது அவனுக்கு. மனதில் உள்ள பாரமும் உடலில் உள்ள களைப்பும் நீங்கியது போன்ற ஒரு உணர்வு.
“மாப்ள இருந்தாங்க காபி குடிங்க”என்று ராக்காயி நீட்டினாள். அதை வாங்கி பருகியதும் மீதம் உள்ள அசதியும் போனது போல் இருந்தது.
இருவரும் காப்பியை பருகி விட்டு அவளுக்கென்று ஒதுக்கி வைத்திருக்கும் அறையை நோக்கி நடந்தனர். அந்த அறையில் சுமார் பத்து பேரு ஒரே நேரத்தில் படுத்து புரலளாம் அவ்வளவு பெரிய அறை. சுவற்றின் ஓரமா ஒரு கட்டில் இருந்தது. அதில் வந்து அப்பாடா…என்று அமர்ந்தான் கோபி.
“என்ன கோபி என் ரூம் பிடிச்சிருக்கா”
“உன்னையே பிடிச்சிருக்கு அப்போ ரூம் பிடிக்காதா ” என்றான் லேசான புன்முறுவலுடன்.
தொடரும்