18.
சிங்கப்பூர் வந்த பிறகு அவளுடைய வாழ்க்கையில் சற்று மாற்றங்கள் நிகழ்ந்தது. ஒரே குட்டையில் தத்தளிக்கும் மீனாக இல்லாமல் ,கடலில் நீந்தும் சுறாவாய் இருந்தாள். எங்கு பார்த்தாலும் கண்ணாடி புதைக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிடம் ,சுகாதாரமான குடியிருப்பு, ஆரோக்கியமான மருத்துவ வசதி என்று எல்லாமே இருந்தது.
சிங்கப்பூரில் கோபி தங்கியிருந்தது ஒரு கேட்டட் கம்யூனிட்டி ,நிறைய குடியிருப்பு வீடுகள், சுற்றி பூச்செடிகள்,பசுமையான அலங்காரங்கள் என்று பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும்.
“லதா உனக்கு ஒன்னு தெரியுமா இந்த கேட்டட் கம்யூனிட்டில நாலு தமிழ்காரங்க குடும்பம் இருக்கு ,நம்மோடு சேர்த்து ஐந்து தமிழ் குடும்பம். நம்ம ஐந்து பேரும் அவ்ளோ ஒற்றுமையா இங்க இருக்கலாம். அதோ அந்த g-1 ப்ளாக்ல இருக்காங்களே அவங்க பேரு பார்வதி , அவங்க பையன் பேரு தனிஷ்க் ,ஷி இஸ் சிங்கில் பேரண்ட் அவங்க அப்பா அம்மா இவங்க கூடவே இருக்காங்க.” என்றான் கோபி
“ஓ ஓகேங்க மற்ற மூன்று குடும்பம் ” என்க.
“அதோ அந்த a -2 block ல ஒரு அம்மா அப்பா இரண்டு பசங்க ,b 1ப்ளாக் ல ஒரு வயசான தாத்தா பாட்டி அவங்களுக்கு பசங்க கிடையாது, ரொம்ப வருஷமா சிங்கப்பூர்ல தான் இருக்காங்க ,அப்றம் b2 ப்ளாக்ல ஒரு லிவிங் இன் கப்புல்ஸ் இருக்காங்க”. என்றான் கோபி.
“ஹாஹா ஓகே” என்றபடி. வீட்டை பராமரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டாள். காலிங் பெல் சத்தம் கேட்டது. கதவை திறந்தாள் லதா”
“ஹாய் மருமகளே . என் பேரு பங்கஜம் நான் பி 1 ப்ளாக்ல இருக்கேன் ” என்று அந்த வயதான பாட்டி அறிமுகம் செய்து கொள்ள…
“ஓ வாங்க வாங்க ஆண்டி” என்று அமர வைத்தாள் லதா.
“என்னடா மருமகளேன்னு கூப்பிடுறேன்னு நினைக்காத ,கோபி எங்களுக்கு மகன் மாதிரி, குழந்தை இல்லாத எங்களுக்கு,கோபி இங்கு எங்களை ரொம்ப கேரிங்கா பாத்துக்குறான்,அவன் மகன்னா அப்போ நீ எனக்கு மருமக தானே ” என்று புன்னகைத்தாள் அந்த வயதான பெண்மணி.
“கரெக்டு தான் அத்தை, அப்போ இனி உங்களை அத்தைன்னு கூப்பிடலாம்ல “
“ஓ தாராளமா கூப்பிடலாம். இதோ உனக்கும் கோபிக்கும் சமையல் பண்ணி எடுத்து வந்துருக்கேன் நீ எதுவும் சமைச்சிட்டு இருக்காத மா, வீடு க்ளீனிங்ல பிஸியா இருக்க அதனால ரெஸ்ட் எடு கிச்சன் பக்கம் போகாத ” என்றார் பங்கஜம்.
“ரொம்ப தேங்க்ஸ்” என்று கண்கலங்கி நின்றாள் லதா.
“அட இதுக்கு போய் கண்கலங்கிட்டு ,கோபி லதாவை நல்லா கவனிச்சிக்க,” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
அவள் கண்கலங்கியபடி நின்றதற்கு காரணம் கோபி புரிந்து கொண்டு.
“என்ன லதா , இந்த அன்பு நம்ம வீட்ல இருந்தப்ப கிடைக்கலையேன்னு பாக்குறியா? எப்பவுமே,இல்லாதவர்களுக்கு தான் அன்பு புரியும். அவங்க குழந்தை பாக்கியம் இல்லாமல் வாழ்ந்தவங்க எல்லார் மேலயும் அன்பு அதிகமா இருக்கும். அங்க கிடைக்காத சந்தோஷத்தை இங்க அனுபவி” என்று ஆறுதலாய் அணைத்தான்.
அவள் வீடு முழுவதும் கூட்டி பெருக்கி எடுக்க ஒரு பர்ஸனல் டைரி ஒன்று கிடைத்தது. அந்த நீல கலர் டைரி வேறு யாருதோ அல்ல நம் தலைவன் கோபியின் டைரி தான்.
‘புருஷனோட டைரியாவே இருந்தாலும் பர்ஸனல் டைரி படிப்பது நாகரிகமற்ற செயல் ‘ என்று அதை படிக்காமலே ஓரம் வைத்துவிட்டு சென்றாள். ஒருவேளை படித்திருந்தாள்,ருத்ர தாண்டவம் ஆடியிருந்தாலும் ஆடியிருப்பாள் ஏனெனில் அதில் அவனுடைய ரகசிய காதலி ரித்விகாவை பற்றி எல்லாம் எழுதியிருந்தான். தற்போது அவளுக்கும் இவனுக்கும் எதுவும் தொடர்பு இல்லை என்றாலும்,நடந்த அத்தனை விஷயமும் தெரிந்தால் இப்போது இருக்கும் சொர்க்கமான வாழ்வு நரகமாக்கிடுமே !’
அந்த டைரியை பார்த்ததும் கோபியிற்கு வியர்வை கொட்டியது
‘அய்யய்யோ இத பார்த்தா இவ பத்ரகாளி ஆயிடுவாளே. இத அப்பவே ஒளிச்சு வைக்கணும்னு நினைச்சேன். அச்சச்சோ போச்சே…’ என்று அந்த டைரியை அவசரமாக எடுத்து அதிலிருக்கும் பக்கங்களில் சிலவற்றை கிழித்து எறிந்தான். நாம் வாழ்க்கையின் சில பக்கங்களை கிழித்து எறிய வேண்டும் இல்லாவிட்டால் இருக்கும் நல்ல பக்கங்கள் நிம்மதியற்று போய்விடும்.
இவள் சிங்கப்பூர் வந்த பிறகு,அங்கு கனகா தனித்து காணப்பட்டாள்.
“அக்கா உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்”, என்றெல்லாம் நிறைய தடவை வாட்ஸ் அப்பில் கூறுவாள். இருவரும் தங்களது பாசத்தை போன் உரையாடலில் காண்பிக்க அப்படியே உறவுகள் வளர்ந்தது. பொதுவாக அண்ணன் தம்பி பாசம் வளர்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை ஆனால் ஒரே வீட்டு மருமகள்களின் அக்கா தங்கை பாசம் தான் ஆச்சரியமான ஒன்று. சிலர் வீட்டில் எப்போடா ஓர்கத்திகளை மாமியாரிடம் போட்டுக்கொடுக்கலாம்,எப்போ டா அவ மேல குறை கண்டு பிடிக்கலாம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தேடும் பெண்கள் இருக்கும் பட்சத்தில் கனகா லதா உறவு உண்மையில் ஆச்சரியமானது.
பொதுவாக எந்த ஒரு உறவும் சற்று விலகி இருக்கும்போது அன்பு பாசம் எல்லாம் சமச்சீராக இருக்கும். மெழுகு போல் எப்போதும் உருகிக் கொண்டே இருந்தால் அவ்வளவு தான் ஒரு நாள் அந்த உறவு காணாமல் போகிடும். உறவுகள் பேணிக்காப்பது எப்படி என்று பள்ளியிலிருந்தே கற்பிக்க துவங்கினால் பிற்காலத்தில் அவர்கள் வாழ்க்கைக்கு உதவும். சரி கதைக்குள் வருவோம்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது. மதிய உணவு சாப்பிட்ட பிறகு அசதியில் லதா மெத்தையில் சாய்ந்தாள். லேப்டாப்பில் தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு கோபி அறைக்குள் நுழைந்தான். விலகி இருந்த தன் ஆடையை சரி செய்தாள் லதா.
“ஹாஹா லதா,இங்க உன்னையும் என்னையும் தவிர வேற யாரும் இல்லையே அப்றம் ஏன் தயக்கம்” – கோபி.
“இது பெண்களுக்கு இருக்கிற இயல்பான குணம் கோபி” என்று சிரித்தாள் லதா.
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவன் கை விரல்கள் அவள் இடையை தீண்டுவதை உணர்ந்தாள்.
“கோ…பி என்ன இது விடுங்க”
“லதா….என்ன நீ தானே ரொம்ப நாள் கழிச்சு ஏங்கிட்டு இருக்கேன் பிடி கொடுக்கவே மாட்டேங்குற ,அம்மா ஆகனும்னு ஆசை இருந்தா போதுமா அதுக்கான வேலை நடக்கனுமே” என்றான் கோபி.
கரெக்டு தான் ஆனால்….
என்ன ஆனால் என்று சொல்லியபடியே அவள் மீது சாய்ந்து நெற்றியில் முத்தமிட்டான். அன்றைய ஈவ்னிங் இவர்கள் இருவருக்கும் ரொமான்டிக் ஈவ்னிங் ஆனது. மாலை நேரம் ஆனதும் எழுந்து இருவருக்கும் காபி தயாரித்தாள் லதா. நல்ல அடக்கமான கிச்சன். காபி மெஷின்,மைக்ரோவேவ் , ப்ரிட்ஜ் போன்ற உபகரணங்கள் எல்லாம் இருந்தது. சமைக்கும் மேடை மட்டும் கொஞ்சம் சின்னது.
காபி மெஷின் மூலமாக காபியை தயாரித்து இருவருக்கும் கோப்பையை எடுத்து வந்து ஊற்றி பருகினார். க்ரீன் கலர் மேட் போட்டவாறு ஒரு பால்கனி ஒரே ஒரு ரோஜா செடி இரண்டு நாற்காலி. இருவரும் எதிரெதிர் அமர்ந்து காபியை பருகினார்கள்.
‘இப்படி ஒரு ஃபீல் தான் எல்லா பொண்ணும் விரும்புது போலருக்கு. ப்ரைவேசியான இடம் ,புருஷனோட ஒரு கப் காபி ,ரொமான்டிக்கா ஒரு மொமன்ட் இதானே அவங்க எதிர்பார்ப்பு. இதை எல்லா ஆம்பளையும் சரியா பண்ணிட்டா புருஷன் பொண்டாட்டி பிரச்சனை எதுவும் டிவோர்ஸ் வரைக்கும் போகாதே’ என்று நினைத்தான் கோபி.
நாட்கள் இப்படியே சென்றுக்கொண்டிருந்தது.
கோபியின் போன் லதா கையில் இருக்க திடிரென்று ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது, எடுக்கலாமா வேணாமா என்று சிந்தித்து சரி எடுப்போம் என்று எடுத்து பேசினாள். எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல்.
“ஹலோ “
“சொல்லுங்க நீங்க யாரு”
“நான் ரித்விகா “
“ஓ…அவரு வெளியே போயிருக்கார் வந்தவுடனே பேச சொல்றேன்” – லதா.
“ஓகே ஓகே ஆக்சுவலி நான் இப்போ சிங்கப்பூர் வந்துருக்கேன் , ஜஸ்ட் விஸிட் பண்ண ,இங்க யாரையும் எனக்கு தெரியாது கோபியை தவிர ,அவரு எனக்கு நல்ல ப்ரண்டு அதான்… அட்ரஸ் சொன்னா வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன்” – ரித்விகா.
“அதுக்கென்ன தாராளமா வாங்க தாராளமா வாங்க என்று சொல்லிவிட்டு அட்ரஸ் அனுப்பி வைத்தாள். கொஞ்சம் நேரத்தில் ரித்விகா அந்த அட்ரஸ் ஐ தேடி வந்தாள் .
“வாங்க வாங்க உக்காருங்க” என்று வரவேற்று காபி தந்தாள் லதா.
வீட்டை சுற்றி காண்பிக்க ரித்விகாவும் ஆச்சரியமாக பார்த்தாள். வெளியே சென்று இருந்த கோபி வீடு வந்து சேர்ந்த நேரம் அது சற்று இயல்பாகவே உள்ளே நுழைந்தவன் லதாவுடன் ரித்திகா அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனான்..
“நீ..நீ….” என்று வார்த்தை குளறியது.
“நானே தான் பேபி வாங்க உள்ள என்றாலள் ரித்விகா இயல்பாக.
“என்னங்க உங்க பிரண்டு வந்து இருக்காங்க நீங்க பாட்டுக்கு அடிச்ச மாதிரி நிக்கிறீங்க” என்றாள் லதா.
“இல்லை லதா அது வந்து”
“என்ன வந்து போயின போய் கை கால் அலம்பிட்டு வாங்க” – லதா.
ஐயோ என்ன பிரச்சினை காத்துட்டு இருக்கு தெரியலையே இந்த கோவா காரி இருக்காளே ! ஏற்கனவே பணம் கொடுத்து செட்டில் பண்ணியாச்சு இப்போ என்னவாம் இவளுக்கு. ஒருவேளை நல்லா வாழ்ற வாழ்க்கையை கெடுக்க வந்துருக்காளா? க்ராதகி இவளை எப்படியாவது அனுப்பிடனுமே என்று நினைத்தவன் . கைகால் அலம்பிட்டு வந்து லதா லதா என்று குரல் தந்தான்.
“லதா இன்னைக்கு நம்ம வெளியே போகலாம் னு சொல்லியிருந்தேனே. நீ கூட அந்த சிங்கம் வாய்ல இருந்து தண்ணி வருமே அந்த இடத்தை பாக்கனும் போட்டோ எடுக்கனும் சொன்னியே ” – கோபி.
“ஆமாங்க ஆனால் ரித்விகாவை விட்டு எப்படி போறது”
“அதானே…ஆங் ரித்விகா இப் யூ டோன் மைண்ட் இன்னொரு நாள் பார்ப்போம் நாங்க வெளியே கிளம்புறோம் ” – கோபி.
“கோபி டோன்ட் வொரி நான் இன்னும் அரை மணி நேரம் தான் இருப்பேன் ,இங்க ஒரு வேலையா வந்தேன் நீங்க சிங்கப்பூர்ல இருக்கிறது எனக்கு ஏற்கனவே தெரியும் அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன் ” – ரித்விகா.
ஆத்தாடி இவ இங்க இருக்கிற ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தாச்சே என்று வருந்தினான். ஆனால் விதி என்ன செய்ய போகிறது பார்ப்போம்.
அன்பு வாசகர்களே! ரித்விகா மூலமாக கோபிக்கு ஏதேனும் நிகழுமா ?, ஏற்கனவே பணம் கொடுத்து பைசல் பண்ண விஷயம் மீண்டும் துளிர் விட காரணம்? எதற்காக ரித்விகா இங்கே வந்தாள்? காத்திருங்கள்.
தொடரும்