அத்தியாயம் -4
“என்னங்க நேத்து ஒரு பொண்ண மீட் பண்ணேன்ல கேஸினோல, அந்த பொண்ணு பக்கத்துல இருக்கிற ஒரு ஐஸ்கிரீம் ஷாப்ல வெயிட் பண்றாளாம். நான் போய் கொஞ்ச நேரம் பேசிட்டு வரட்டுமா ” என்றாள் லதா.
“இது என்ன புது பழக்கம் வந்த இடத்துல பிரண்டு உனக்கு வேற வேலையே இல்லையா” என்றான் கோபி. “
“இப்போ அப்படி என்ன வெட்டி முறிக்கும் வேலை இருக்கு எனக்கு? கொஞ்ச நேரம் தானே போய்ட்டு வரேனே ரொம்ப ஓவரா பண்ணாதிங்க”
என்று வெடுக்கென்று பதிலளித்தாள் லதா.
லதாவின் இந்த துருதுரு பேச்சு தான் அவனுக்கு சற்று பிடிக்கவில்லை இருப்பினும் வந்த இடத்தில் எதற்கு சண்டை என்றபடி யுவராணியை பார்க்க அனுமதித்தான் கோபி.
“சரி சரி போய்ட்டு சீக்கிரம் வந்திடு”என்றதற்கு சரியென்று தலையசைத்து விட்டு சென்றாள். யுவராணி அங்கு காத்துக்கிடந்தாள்.
“ஹே யுவி என்ன திடிர்னு என்ன மீட் பண்ண கூப்பிட்ட ” என்று லதா கேட்டதும்.
“இல்லை லதா, ஜஸ்ட் உங்களை பார்க்க வரலாம்னு தோணுச்சு அதான் வந்தேன். நாளைக்கு நானும் ஹஸ்பண்டும் சென்னை கிளம்பிடுவோம் ஸோ அதான் வந்தேன்.” என்றாள் யுவராணி.
“யுவி உன் குரல்ல ஏதோ வருத்தம் இருக்கு. இங்க பாரு எதுவா இருந்தாலும் சொல்லு. நாம் தான் ப்ரண்ட்ஸ் ஆயிட்டோமே இன்னும் என்ன தயக்கம். இன்பேக்ட் நானும் சென்னைல தான் இருக்கேன்,நம்ம இரண்டு பேரும் இனி அடிக்கடி பார்க்கலாம் பேசலாம் டென்ட் வொரி” என்று தோள்களை தட்டிக்கொடுத்தாள் லதா.
லதாவின் அன்பான பேச்சு அவளை மெல்ல ஈர்த்தது. தன் மனதில் இருப்பதை இவளிடம் சொல்லி தீர்த்து விட வேண்டும் என்று தோன்றியது சில நேரங்களில் சோகங்கள் மனதுக்குள் தேக்கி வைத்திருந்தாலும் அதை சொல்லி அழுவதற்கு கூட ஆள் இருக்காது ஆனால் இப்போது இவள் இருந்தும் நான் சொல்லாமல் போய்விட்டால் என்னை விட பைத்தியக்காரி உலகத்தில் இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு யுவராணி லதாவிடம் பேச்சை துவங்கினாள்.
“அது வந்து லதா, எனக்கும் என் ஹஸ்பண்டுக்கும் பெருசா அன்டர்ஸ்டாண்டிங் இல்லை. நானும் அவரும் ஒரு ரிலாக்ஸேஷனுக்காக கோவா வந்தோம் ஆனால் வந்த இடத்தில கூட பிரச்சனை தான் எனக்கும் அவருக்கும். “என்று சொல்லி முடிப்பதற்குள்..
“பிரச்சனை யாருக்கு தான் இல்லை யுவராணி எல்லாருக்கும் தான் இருக்கு இவ்வளவு ஏன் தேனிலவுக்கு வந்த எனக்கும் என் புருஷனுக்குமே வந்து சின்ன சின்ன மிஸ் அன்டர்ஸ்டாண்டிங் வர தான் செய்யுது. இதை நீ பெருசா மண்டையில் போட்டு குழப்பிக்கிட்ட என்றால் உன் நிம்மதி தான் கெடும். ” என்றவளிடம்.
“லதா, நீங்க சொல்றது எல்லாம் சரிதான் எனக்கு தெரியும். ஆனால் எங்க விஷயம் வேற…” என்று சொல்லும் போதே லதாவின் எதிர்பார்ப்பு அதிகமானது. யுவராணியை கூர்ந்து கவனிக்கலானாள்.
“சொல்லு யுவி என்னதான் நடக்குது உங்க இரண்டு பேருக்கு நடுவுல ” என்றாள் லதா.
“அவரு இன்னமும்..அவருடைய பழைய காதலியை மனசுல நினைச்சிட்டு இருக்காரு. கல்யாணம் ஆகி ஆறுமாதம் ஆச்சு இன்னமும் எங்களுக்குள்ள எதுவுமே நடக்கலை லதா. சொஸைட்டி ப்ரஷர் ஒரு பக்கம் கடுப்பா இருக்கு. எங்க போனாலும் குட் நியூஸ் இருக்கா இருக்கான்னு கேட்டு தொல்லை பண்றாங்க லதா. ” என்று கண்ணீர் விட்டு அழுத யுவராணியை தன் தோளில் சாய்ந்தாள் லதா.
“எல்லாமே ஒருநாள் சரியாயிடும் யுவி நீ எதுக்கும் கவலைப் படாத. இங்க பாரு சொசைட்டி கொடுக்கிற பிரஷர் பத்தி எல்லாம் நீ கவலைப்படாத முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் வரணும் அதுக்கு நீ என்ன பண்ணனுமோ அதை முதல்ல பண்ண ஆரம்பி புரியுதா?. பழைய காதலியே அவர் மனசுல நினைச்சுட்டு இருக்காருன்னா அதை மறக்கடிக்கறதுக்கு நீ எந்த அளவு அவர் மனசுல நொழையணும் அப்படிங்கிறது கொஞ்சம் யோசிச்சு பாரு. நீ இன்னும் அவர் மனசுல நுழையவே இல்லை அதான் பிரச்சனை.” என்றதும் லதாவை நிமிர்ந்து பார்த்தாள் யுவராணி.
“யெஸ் யுவி, அவருக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு அதை பார்த்து பார்த்து செய். ஒருவேளை…..” என்று நிறுத்தினாள் லதா.
“ஒருவேளை…? என்னது லதா சொல்லு”என்று உலுக்கினாள் யுவராணி.
“தன்னுடைய பழைய காதலியை ஒருமுறை பார்க்கனும்னு ஆசைப்பட்டா அவங்க மீட் பண்ண ஹெல்ப் பண்ணு. ஆனால் அவர் மனசுல இருக்கிற பாரம் அப்போவே இறக்கி வச்சிட்டு முழுசா உன் புருஷனா அவரு திரும்பி வரனும் அப்படிங்கிறதையும் தீர்மானமா சொல்லிடு.” என்றாள் லதா.
“லதா,இது என்ன பைத்தியகாரத்தனமா இருக்கு? அவரு அவளை நினைச்சிட்டு இருக்காரு அப்படிங்கிறது தான் பிரச்சனையே இதுல அவரை அவளோட மீட் பண்ண வைக்கனுமா ஐயோ நினைச்சாலே பயமா இருக்கு.” என்று நெஞ்சில் கைவைத்தப்படி கூறினாள் யுவராணி.
“யுவி , இந்த பயம் தான் உன் ப்ராப்ளமே”என்றாள் லதா.
“எப்படி சொல்ற லதா இந்த பயம் நியாயமானது தானே”?.
“நியாயமானதுதான் ஆனால் இப்போதைக்கு இது தேவையில்லாத பயம் அப்படின்னு தான் நான் சொல்லுவேன் அவளை மறக்க முடியாமல் அவர் கஷ்டப்படுகிறார் அப்படிங்கறது உண்மைதான் ஆனால் அதுக்காக அது தவறா போயிடுமோ அப்படின்னு நீ உனக்குள்ளேயே கற்பனை பண்ணிக்கிறது தேவையில்லாத விஷயம் தானே. கடைசியா ஒரு தடவை அவகிட்ட சாரி சொல்லணும் அப்படின்னு கூட அவருக்கு தோணலாம் இல்லையா அவர் மனசுல என்ன இருக்குன்னு நீ எப்படி முடிவு பண்ணுவ?” என்றதும் சிந்திக்க துவங்கினாள் யுவராணி.
“கண்டிப்பா நான் இத பத்தி அவர்கிட்ட பேசுறேன் லதா ஆனா இப்போ உன்கிட்ட பேசினா அப்புறமா ஒரு தெளிவு கிடைச்சிருக்கு அப்படின்னு கூட சொல்லலாம். சீக்கிரமே என்னோட வாழ்க்கை மாறும்ன்னு நான் நம்புறேன்”என்றாள் லதாவின் கைகளை அழுத்தி பிடித்தப்படி.
“ம்ம் குட் லக் ” என்று சொல்லிவிட்டு விடைப் பெற்றாள் லதா.
நாட்கள் இப்படியே வெகுவாக கடந்தது. லதா கோபி இருவரும் சென்னை வந்ததும் கோபியின் தந்தைக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு பற்றி கேள்விப்பட்டதும் சற்று அதிர்ந்து தான் போனார்கள்.
“அம்மா அப்பாவுக்கு மைல்டு அட்டாக் வந்து இருக்குன்னு தெரிஞ்சும் ஏன்மா எனக்கு போன் பண்ணாம இருந்த?” என்ற மகனிடம்.
“கோபி நீயே உன் மனைவியோட சந்தோசமா இருக்கலாம் அப்படின்னு சொல்லி கோவாவுக்கு கிளம்பி போயிருக்க அந்த சந்தோஷத்தை நான் எப்படி பா கெடுக்க முடியும்?” என்றார் மீனாட்சி.
தன் மகன் மருமகளின் சந்தோஷத்தை பற்றி கவலைப்படும் மாமியாரை நினைக்கும் போது லதாவுக்கு அவ்வளவு பூரிப்பாக இருந்தது.
‘பரவால்ல நமக்கு கிடைத்தது நல்ல மாமியார் தான் போல இருக்கு’ என்று நினைத்து மனதுக்குள் மகிழ்ச்சி கொண்டாள் லதா.
“அம்மாடியோ லதா கொஞ்சம் காபி போட்டு எடுத்துட்டு வாம்மா “என்று மீனாட்சி சொன்னதும் விறு விறுவென்று சமையலறையில் நுழைந்து காபி தயாரிக்க சென்றாள் லதா.
இனி மாமியார் எள் என்றால் எண்ணெயாக வந்து நிற்பாள் லதா. பொதுவாக பெண்கள் எதிர்பார்ப்பது இந்த மாதிரி சின்ன சின்ன விஷயம் தானே. மாமியார் தனக்காகவும் தன் கணவனுக்காகவும் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுப்பதும், தங்கள் சுதந்திரத்திலும் சந்தோஷத்திலும் தலையிடாமல் இருப்பதிலும் தானே மருமகளின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது.
“அத்தை இந்தாங்க காபி எடுத்துக்கோங்க” என்று நீட்டினாள் லதா.
“அம்மாடி காபி எனக்குன்னு கேட்டா எனக்கு மட்டும் தான் எடுத்துட்டு வருவியா உனக்கும் ஒரு கப் எடுத்துட்டு வர வேண்டியதுதானே நீயும் நானும் கொஞ்ச நேரம் அப்படியே பேசிட்டு உட்கார்ந்திட்டு இருக்கலாம் இல்ல” என்று கரிசனையோடு பேசியதை கேட்டதும் மனசு ஒருமாதிரி ஆயிற்று லதாவுக்கு.
“இப்போ தான் அத்தை குடிச்சேன். சொல்லுங்க அத்தை என்கிட்ட நீங்க என்ன பேசணும் ” என்று அருகில் அமர்ந்தாள்.
“இங்க பாரு லதா நான் மத்த மாமியார் மாதிரியெல்லாம் கிடையாது. நீயும் என் மகனும் சந்தோஷமா இருக்கணும் அதை தவிர எனக்கு வேற எதுவுமே வேண்டாம் மத்த மாமியார் மாதிரி எப்போ விசேஷம் அப்படின்னு கேட்டு நச்சரிக்கலாம் மாட்டேன் நீங்க ரெண்டு பேரும் ஒரு புரிதலோட சந்தோஷமா வாழ்ந்தா அதுவே எனக்கு போதும். மத்ததெல்லாம் தானா நடக்கும் அப்படிங்கற நம்பிக்கை எனக்கு. இங்க பாரு என்ன உன்னோட அம்மா மாதிரி நினைச்சுக்கோ உங்க அம்மா கிட்ட எப்படி இருப்பியோ அப்படி நீ என்கிட்ட இருக்கலாம். தினமும் நீதான் சமைக்கணும் அப்படின்னு எல்லாம் கிடையாது ஒரு நாள் நீ சமைச்சா இன்னொரு நாள் நான் சமைக்கிறேன் மாத்தி மாத்தி செஞ்சுக்கலாம் ஓகேவா?” என்றார் மீனாட்சி.
இதையெல்லாம் தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்.
‘நம்மள கட்டிக்க போற கனகாவும் கொடுத்து வச்சவதான்.பரவாயில்லையே நம்ப அம்மா ரொம்ப மெச்சூரிட்டியா இருக்கே. முதல்ல நம்ம லவ் விஷயத்தை அம்மா கிட்ட தான் சொல்லணும் அம்மா ஓகே பண்ணிடுச்சுன்னா மத்தவங்க எல்லாருக்குமே ஓகே தான் நினைக்கிறேன்’ இன்று தனக்குள் கூறிக்கொண்டு தலையை சொரிந்தான் கார்த்திக்.
“என்னடா தலையை சொரிஞ்சிட்டு நிக்கிற. இன்னைக்கு வேலைக்கு போலையா” என்றான் கோபி.
“ஒன்னுல அண்ணே இப்பதான் ஆபிஸ் கிளம்புறேன் ,மதியம் ஷிப்ட் எனக்கு அதான் ” என்றான் கார்த்திக்.
“ம்ம் சரி சரி. இன்னைக்கு எனக்கு சம்பளம் நாளு. உங்க அண்ணி அம்மா எல்லாரையும் கூட்டிகிட்டு ஹோட்டல் போலாம்னு இருக்கேன் அதான் உன் கிட்டயும் தகவல் சொல்லலாமேன்னு. நீ ஆபிஸ்லயே சாப்ட்டு வந்துருவியோ! சரி சரி “
“ஆமாண்ணே ஷிப்ட் இரண்டு டூ பத்து. வீட்டுக்கு வரவே நைட்டு பதினோரு மணி ஆயிடும்” என்றான் கார்த்திக்.
“சரிடா போயிட்டு வா பாய்”
“சரி மா சாயந்திரம் நீயும் லதாவும் ,அப்பாவும் ரெடி ஆயிட்டு இருங்க. நான் வந்த உடனே எல்லாரும் சேர்ந்து ஹோட்டல் போயிட்டு வந்துடலாம்” என்றான் கோபி.
“டேய் உங்க அப்பாக்கு வேற உடம்பு முடியாம இருக்கு டிஸ்சார்ஜ் பண்ணி ரெண்டு நாள் தான் ஆகுது இதுல எதுக்குடா ஹோட்டல் எல்லாம்” என்றார் மீனாட்சி.
“மா மைல்டு அட்டாக் தானே அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அவரும் நம்ம கூட வரட்டும் ரொம்ப ஆயில் ஐட்டம் எல்லாம் இல்லாம நார்மலா ஏதாவது சாப்பிடட்டும்” என்று சொல்லிவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றான் கோபி.
stay tuned