அத்தியாயம் -8
திருமண வாழ்க்கையில் கனவுகள் பல கொண்ட பெண்களின் வாழ்வில்,ஒரு பக்கம் குடும்பம்,இன்னொரு பக்கம் மறக்க முடியாத நினைவுகள் இதற்கிடையில் அவர்களுக்கென்ற தேடல் என்று கடைசி வரை போராட்டம் தான். அந்த போராட்டத்தை வென்று அவர்கள் ஒவ்வொரு நாள் துவக்கத்தில் சிரிப்புடனும்,ஒவ்வொரு நாள் முடிவில் ஏக்கங்களுடனும் கடந்து வருகின்றனர்.
‘கௌதம் பற்றி சொல்லலாம்னு நினைக்கிறப்ப அவரு தடுத்துட்டாரு இப்போ இவர் கிட்ட ஷேர் பண்ணலாமா வேணாமா?’ என்று யோசனையுடன் இருந்தாள் லதா. சரி அவர் வரட்டும் பாத்துக்கலாம் என்று தன் அன்றாட வேலையை கவனிக்க துவங்கினாள்.
“அம்மா நான் கிளம்புறேன்”என்று சொல்லிவிட்டு விடை பெற்று சென்றான் கார்த்திக்.
“என்ன மச்சினரே என்கிட்ட சொல்லிட்டு கிளம்ப மாட்டீங்களா இதுநாள் வரைக்கும் அம்மாகிட்ட சொல்லி இருப்பீங்க இப்போ இந்த வீட்ல அண்ணின்னு ஒருத்தி நான் இருக்கேன் ஃப்ரெண்டு மாதிரி கூட பேச வேண்டாம் அட்லீஸ்ட் சாதாரணமா கூட என்கிட்ட பேசலாமே” என்றாள் லதா தன் மைத்துனர் கார்த்திக்கை பார்த்து.
“அதுக்கில்லை அண்ணி , நான் ஒருத்தர்கிட்ட அட்டாச் ஆக கொஞ்ச நாள் ஆகும். நீங்க இந்த வீட்டுக்கு வந்து முழுசா ஒரு மாசம் கூட ஆகலை எப்படி நான் எதார்த்தமா இருக்க முடியும். கவலைபடாதீங்க நான் பேசாமலாம் இருக்க மாட்டேன்” என்று ஒரு சின்ன புன்னகையுடன் கடந்து விட்டான் கார்த்தி.
கார்த்திக் கிளம்பும் வழியில் கனகா காத்துக்கொண்டு இருந்தாள். அந்த மதிய நேர வெயிலில் குடை பிடித்தப்படி சாலை ஓரத்தில் நின்றிருந்தாள். ‘எப்பவும் இப்படி சட்டுன்னு ரோட்ல மீட் பண்ண கூப்பிடவே மாட்டாளே இன்னைக்கு என்ன திடீர்னு ‘ என்று யோசித்துக் கொண்டே பைக்கை சாலை ஓரத்தில் நிப்பாட்டினான்.
“என்ன ஜிங்லி திடிர்னு கூப்டிருக்க”என்றான் கார்த்திக்.
“இங்க பாரு சும்மா ஜிங்லி அது இதுன்னு கொஞ்சாத தானே வெறுப்புல இருக்கேன்” என்றாள் கனகா முகத்தை சுள்ளென்று வைத்துக்கொண்டு.
“என்னடி இவ்ளோ டென்ஷனா இருக்க என்ன ஆச்சு “என்றான் கார்த்திக்.
“எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க கார்த்திக் நீ என்ன பண்ணுவியோ எது பண்ணுவியோ எனக்கு தெரியாது நீ உங்க வீட்ல போய் பேசி உங்க வீட்டு ஆளுங்களோட வந்து என்னை பொண்ணு கேட்டு வந்தினா நல்லா இருக்கும்”என்றாள் கனகா.
“அடிப்பாவி நான் உன்கிட்ட லவ்வு சொல்லி இன்னும் ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சிட்டே” என்றான் கார்த்திக்.
“ஆமா என்ன பண்றது என்னுடைய சூழ்நிலை அப்படி” என்றாள் கனகா.
“சரி விடு பாத்துக்கலாம். ஆனால் இப்போ தான் என் அண்ணனுக்கு கல்யாணம் ஆகியிருக்கு , இன்னும் என் கல்யாணம் பத்தி பேச்சை கூட ஆரம்பிக்கவே இல்லை இப்போ போய் நான் நம்ப விஷயத்தை சொன்னா எப்படி ரியாக்ட் பண்வாங்கன்னு கூட தெரியலை”என்றான் கார்த்திக்
வந்த விஷயத்தை சொல்லிவிட்டு மனதில் ஒரு கலக்கத்துடன் விடை பெற்று நகர்ந்தாள் கனகா.
‘இந்த காதல்னாலே அப்படித்தான்ல விலகவும் முடியாது,சேர்த்து வைக்கவும் மாட்டாங்க,ஒரு மாசமா இருந்தா என்ன ஒரு வருஷமா இருந்தா என்ன காதல் காதல் தானே. சைக்கலாகிக்கலா ஒரு காதலை ஒரு பையன் பொண்ணு கிட்ட காதலை சொல்ல 88 நாள் ஆகும். ஆனால் ஒரே மாசத்துல எங்க லவ் இப்போ கேள்விக்குறியா இருக்கு. முதல்ல இது காதலா இல்ல ஜஸ்ட் இன்பேக்சுவேஷனா ஒன்னும் புரியலையே என்று புலம்பிய படி நடந்தாள் கனகா…
காதலால் மாட்டி தவிக்கும் கார்த்திக் இங்கு ஒரு பக்கம் என்றால், தகாத உறவினால் மாட்டி தவிக்கும் கோபி ஒரு பக்கம்.
“மச்சி நீ ரித்திகாவ கல்யாணம் பண்றது தவிர வேற வழியே இல்லை. இதுல இருந்து நீ தப்பிக்கணும் அப்படின்னா முதல்ல அவளை கல்யாணம் பண்ணு அதுக்கப்புறம் எப்படியாச்சும் சிங்கப்பூர் கிளம்பி ஓடிவிடு எல்லாம் சரியாகிடும் “என்றான் நண்பன்.
“ஆமா டா நீ சொல்ற மாதிரி தான் செய்யப்போறேன் “என்று சொல்லிவிட்டு ரித்விகாவை சந்திக்க சென்றான் கோவாவில் இருக்கும் ஒரு பீச்சில்.
மணல் பரப்பில் இருவரும் (கோபி மற்றும் ரித்விகா) ஒருவருக்கொருவர் அருகாமையில் அமர்ந்து இருந்தனர். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு இவர்கள் காதலர்களா கணவன் மனைவியா என்று குழப்பம் ஏற்படும் அளவுக்கு சற்று நெருக்கமாகவும் அமர்ந்திருந்தனர்.
இவர்கள் இருவருக்கு இடையே எதுவும் பேச்சு துவங்கவில்லை கடலை வேடிக்கை பார்த்தபடி இருவரும் அமர்ந்திருந்தனர். ரித்விகா உயிரோடு இருப்பதை நினைத்து அவன் ஒரு புறம் சந்தோஷப்பட்டாலும் இன்னொரு புறம் தான் அவளிடம் சிக்கிக் கொண்டோமே என்ற வருத்தமும் இருந்தது. ஒரு பிரச்சனையை சரிசெய்ய இங்கு வந்தால் அதிலிருந்து இன்னொரு பிரச்சனை வந்துவிட்டது என்று நினைத்து வருந்தினான். ரொம்ப நேரமாக மௌனம் மட்டுமே நிலவியது இருவருக்கு இடையில்.கடற்கரையை ரசிக்கும் மனப்பான்மையில் இருவருமே இல்லை ஆனால் இருவருக்கும் அந்த கடல் அலைகளின் சத்தம் ஒருவித மன அமைதியை கொடுத்தது.
‘நான் பண்றது சரியா தப்பா என்று கூட தெரியல கோபிக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சும் அவன கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறது சரியா?’ இன்று மனதுக்குள் கேள்வி எழுப்பிய படி அமர்ந்திருந்தாள் ரித்விகா
‘நல்லா வந்து மாட்டிக்கிட்டோம் டாசாமி என்று மனதுக்குள் புலம்பியபடி இருந்தான் கோபி.
“நான் சென்னைக்கு கிளம்பலாம்னு இருக்கேன் நாளைக்கு என்று பேச்சை துவங்கினான்” கோபி.
“ம்ம் கிளம்பு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ” என்றாள் ரித்விகா.
“என்ன ரித்வி இவ்ளோ கேஷுவலா சொல்ற”
“சரி என்னை கல்யாணம் பண்ணிட்டு அதுக்கப்புறம் சென்னை போ இப்படி சொன்னா நீ ஓகேன்னு சொல்லுவியா”என்றாள் ரித்விகா.
‘ஐயோ நானே வாய் கொடுத்து வம்பு இழுத்து விட்டேனே’ என்று தலையில் அடித்துக் கொண்டான்.
“என்ன மிஸ்டர் கோபி தலையில் அடிச்சிக்கிறீங்க. ஆக்சுவலி தலையில் அடிச்சிக்கிட்டு புலம்ப வேண்டியது நானு ” என்றாள் ரித்விகா.
“நீ செய்தது உனக்கே சரின்னு தோணுதா ரித்விகா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஏன் இப்படி அடம்புடிக்கிற”என்றான் கோபி.
“அதே கேள்வியை இப்ப நான் உங்ககிட்ட கேட்கிறேன் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சும் ஏன் என் கூட மீட் பண்ண சம்மதம் சொன்னீங்க. அன்னைக்கு அரை மணி நேரம் நான் எப்படி உங்களுக்கு தேவைப்பட்டனோ அதேபோல இப்போ நீங்க எனக்கு தேவைப்படுறீங்க. எனக்கு ப்ரெக்னன்ஸி கன்பார்ம் ஆனால் அந்த குழந்தைக்கு நீங்க தானே அப்பா?”என்றாள் ரித்விகா.
“ப்ளீஸ் என்ன விட்டுடு ,எனக்கு ஏற்கனவே இன்னொரு லைஃப் இருக்கு இப்பதான் எனக்கு ஆபீஸ் மூலமா சிங்கப்பூர் போற வாய்ப்பு கிடைச்சிருக்கு இதுக்கு நடுவுல இந்த தலைவலி எல்லாம் எனக்கு தேவையா கன்ஃபார்ம் ஆனா என்ன? அபார்ஷன் பண்ணிடு ப்ளீஸ்” என்று கையை பிடித்து கெஞ்சினான்.
‘இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் போல இருக்கு முதல்ல கொஞ்சம் வேண்டியது அப்புறம் கெஞ்ச வேண்டியது’ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டே..
“உனக்கு எதுக்கு நான் எக்ஸ்கியூஸ் கொடுக்கணும்?” என்று புருவத்தை உயர்த்தியபடி கேட்டாள் ரித்விகா.
“ப்ளீஸ் டி ரித்விகா ” என்று முகத்தை கெஞ்சும் தோரணையில் வைத்துக்கொண்டு கேட்டான்.
“அப்படின்னா ஒன்னு பண்ணு.” என்று ஆரம்பித்ததும் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்ற ஆர்வம் அவனுக்குள் தொற்றிக் கொண்டது.
“என்ன என்ன சொல்லு” என்றான் கோபி.
“எனக்கு நஷ்ட ஈடா ஒரு 25 லட்சம் கொடுத்துட்டு நீ எங்க வேணாலும் போ. நானும் உன்னை கண்டுக்க மாட்டேன். அந்த பணத்தை வச்சிக்கிட்டு எப்படியோ வாழ்க்கை ஓட்டிடுவேன்” என்றாள் ரித்விகா.
“என்னது 25 லட்சமா” என்று வாயை திறந்தான் கோபி.
‘இந்த offer அவன் கண்டிப்பா ஏத்துப்பான் நினைக்கிறேன். ‘ என்று கணிப்போடு அவனை நோக்கினாள்.
‘கல்யாணம் பண்றதுக்கு பதிலா இந்த ஆஃபர் எவ்வளவோ பரவாயில்லை போல இருக்கு’ என்று நினைத்தவன் சரி என்று ஒப்புதல் அளித்து விடைப்பெற்றான்.
பணத்தை அவள் அக்கவுண்ட் செய்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அவன் நண்பனுடன் கிளம்பி சென்னை வந்தான் கோபி. கோபியை கண்டவுடன் லதா ஓடி வந்தாள்.
“இவ்வளவு நாள் எங்க போயிருந்தீங்க இந்த நாலு நாலு என்கூட எந்த காண்டாக்ட்மே இல்ல ஏன் இப்படி பண்றீங்க” என்றாள் லதா
“சரி விடு அதான் வந்துட்டேன்ல” என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான். மனதுக்குள் அந்த 25 லட்சம் எப்படி டா புரட்டப் போகிறோம் என்ற வருத்தம் அவனுக்குள் இருந்தது. ரித்விகாவை திருமணம் செய்து கொள்வதை விட இந்த ஆஃபர் எவ்வளவோ மேல் தான் என்றாலும் மாத சம்பளம் வாங்கும் ஒருவனுக்கு 25 லட்சம் என்பது சாதாரண பணம் அல்லவே.
‘இந்த காலத்துல எல்லாமே பணம் தான் போல இருக்கு அப்போ ரித்விகா பணத்துக்காக தான் என்கிட்ட பழகுனாளா’ என்று வருந்தினான் கோபி.
‘சரி எதுவாக இருந்தாலும் இந்த சூழ்நிலையை சமாளிக்க பணம்தான் ஒரே வழி இந்த பணத்தை எப்படி புரட்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான் கோபி’ மறுநாளில் இருந்தே அலுவலகத்திற்கு சகஜமாக போக ஆரம்பித்தான் கோபி. ஆனால் குடும்பத்தினரிடம் மட்டும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை அவன் செய்த தவறினால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி ஒரு பக்கம் இன்னொரு பக்கம் பணம் புரட்டும் குழப்பம் வேற.
‘தன் கணவனின் சில மாற்றங்களை உணர்ந்த லதா அவனிடம் எப்படி டா கேட்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். சரி அவனாக விருப்பப்பட்டால் சொல்லட்டும் இல்லையென்றால் பரவாயில்லை என்று தன் வேலையை கவனித்தாள் லதா’
கார்த்திக் ஒரு பக்கம் கனகா விஷயத்தை எப்படிடா வீட்டில் சொல்வது என்று சிந்தித்து கொண்டு இருந்தான் அப்போதுதான் தோன்றியது இந்த விஷயத்தை ஏன் லதா அண்ணி மூலமாக சொல்லக்கூடாது? என்று யோசித்து விட்டு, தன் அண்ணியிடம் இதைப் பற்றி பேச எத்தனித்தான்.
“அண்ணி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் வெளியே வாங்களேன்”என்றான் கார்த்திக்.
“என்ன கார்த்திக் சொல்லு “
“அது வந்து”
“என்ன”
“அண்ணி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா” என்றான் பாவமாக.
“ஹெல்பா ? என்ன செய்யணும்” என்று கேட்டாள் லதா.
தனக்கு கனகா மீது உள்ள காதலை பற்றி விவரமாக எடுத்து சொன்னான் கார்த்திக். அதை எல்லாம் காதில் வாங்கியபடி அமைதியாக நின்றிருந்தாள் லதா.
கார்த்திக் காதலுக்கு லதா உதவி செய்வாளா?
தொடரும்.