காலைக் கதிரவன் மேலெழும்பி தன் வருகையை உலகிற்கு உறக்கச் சொல்லும் வேளை…
சென்னையில் ஒரு பெரிய திருமண மண்டபத்தில் நளனின் குடும்பச் சுற்றத்தாரும் நேத்ராவின் குடும்பச் சுற்றத்தாரும் புடை சூழ,
பட்டு வேஷ்டி சட்டையும் அங்கவஸ்திரமுமாக ஆண்மைக்குரிய இலக்கணங்கள் அனைத்தும் பொருந்திய ஆண்மகனாக நளனும், அடர் பச்சை வண்ண பட்டுச் சேலையில் தங்க சரிகை மினுமினுக்க, மணப் பெண்ணுக்குரிய அலங்காரத்துடனும் பெண்மைக்குரிய நாணத்துடனும் புன்சிரிப்புடன் அமர்ந்திருந்தாள் நேத்ரா.
நேத்ராவின் சங்குக் கழுத்தில் மங்கள நாணைப் பூட்டிய நளன், நேத்ராவின் லேசாக கலங்கிய கண்களைக் கண்டவன் அவள் கன்னம் தாங்கி அவள் பிறை நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.
மண்டபத்திற்கு வந்த அனைவரிடமும் ஆசிபெற்று நளனின் வீட்டிற்கு வர மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆகியிருந்தது.
வீட்டிற்கு வந்த மணமக்களுக்கு பால் பழம் கொடுத்தவர்கள், “நளா நீங்க ரெண்டு பேரும் வேணா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, நேத்ராவுக்கு வேற டிரஸ் எடுத்து குடு, நீ மாதிக்கோமா, அஞ்சு மணிக்கு பிளைட் இருக்கில்ல” என்ற நந்தினியிடம்,
“சரிம்மா என்ற நளன் நேத்ராவை அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்.
ஆம், திருமணம் முடிந்தவுடன் நளன் நேத்ராவின் முதலிரவு மற்றும் ஹனிமூனை, சென்னையிருந்து மூன்று மணிநேர விமானப் பயணத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய தீவினில் ஏற்பாடு செய்திருந்தார் கார்த்திகேயன், தன் மகனுக்கு திருமணப் பரிசாக.
நளனின் திடீர் அணைப்பில் திடுக்கிட்டவள்,”நளன் என்ன இது, யாராவது வந்திட போறாங்க” என்றவளை,
திருப்பி முகம் பார்க்க வைத்தவன் “யாரு வந்தா எனக்கென்ன? உன்னோட கழுத்துல தாலி கட்றதுக்கு முன்னடியே ஐ டோன்ட் கேர் அபௌட் அதேர்ஸ், இப்போ நீ என்னோட ஒய்ஃப், சோ…” என்றவன்,
நேத்ராவின் கழுத்தில் முகம் புதைத்தான், அவனது முரட்டு ரோமங்களின் குறுகுறுப்பில் நெளிந்தவளை, ஹனி சாரீல நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா, ஐ காண்ட் கண்ட்ரோல் மைசெல்ப், அதுவும் இந்த மல்லிகை பூ ஸ்மெல்… மூச்சை உள்ளிழுத்து ஹா…” என்றவன் அவள் இதழில் புதைந்தான்.
சிறிது நேரம் அவனுக்கு இசைந்தவள் நளனை அவளிடமிருந்து பிரித்து “அம்மு ப்ளீஸ் எனக்கு மொதல்ல குளிக்கணும், என்னோட டிரஸ் எங்க” என்றாள் கெஞ்சுவது போல்.
மெல்லிய சிரிப்பை உதட்டில் தவழ விட்டவன் விமானத்தில் செல்ல ஏதுவான அவன் தேர்ந்தெடுத்த இலகுவான உடையை அவளிடம் கொடுத்தான்.
நேத்ரா குளித்து உடை மாற்றி வந்தவள் நளன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு நைசாக அங்கிருந்து நழுவினாள்.
தூங்கிக் கொண்டிருந்த நளனுக்கு கட்டிலில் எதோ ஒரு உருவம் கைகளை ஊன்றி வருவது போல் இருக்கவும், ஹனி… என்றவன் அந்த உருவத்தை இழுத்து அணைத்திருந்தான்.
அணைத்தவனுக்கு மென்மையான உடலுக்கு பதில் வன்மையான உடலாக இருக்கவும் கண்களை திறந்து பார்த்தான். பார்த்தவன் வினோ….? என்றான் அதிர்ந்த முகமாக.
“வினோ தான் டா, ஏன் டா இப்படி பண்ற, சின்ன பையன்ல இருந்து உன்கூட தான் தூங்கீருக்கேன், நீ ஒரு தடவை கூட இந்த மாதிரி பிஹேவ் பண்ணதே இல்ல, இப்போ என்னோட கற்புக்கே நீ களங்கம் விளைவிக்க பாக்குற, என்ன கோபால் இப்படி பண்ணீட்டீங்களே கோபால் ” என்றான் வினோத் அழுவது போல்,
வினோத்தின் பேச்சில் வந்த சிரிப்பை உதட்டுக்குள் புதைத்தவன் “டேய் வினோ நீ எப்படி உள்ள வந்த, போட வெளிய” என்றான் நளன்.
“நான் போறேன் மிஸ்டர் நளன், அதுக்கு நீங்க மொதல்ல எம்மேல இருந்து எந்திரிக்கணும்” என்று நளனை கூர்மையாகப் பார்த்துக் கொண்டு வினோத் கூறவும்,
தான் இன்னமும் வினோத்தின் மேல் இருப்பது புரிந்த நளன் அவனுக்கு அருகில் உருண்டு வேகமாக எழுந்து அமர்ந்தான். “ச்ச போடா…” என்றவன் தான் அவன் மேல் படுத்திருப்பது உணர்ந்து சடாரென்று, எழுந்தவன் அவன் பின்னங் கழுத்தைத் தேய்த்துக் கொண்டு அசடு வழியவும்,
“நானும் பாத்துகிட்டு தான் டா இருக்கேன், நீ சிஸ்டர பாத்ததுல இருந்தே சரி இல்ல, எப்படியோ சந்தோசமா இருந்தா சரி டா நளா” என்ற வினோத் நளனை ஆரத் தழுவிக் கொண்டான்.
வெளியே செல்லப் போனவன் மீண்டும் நளனிடம் “அப்புறம் ஒரு விஷயம் நான் என்னோட லாப்டாப்பை எடுக்க தான் வந்தேன், என்று லாப்டாப்பை கையில் எடுத்தவன், அதுக்குள்ள என்னை நீ மானபங்கப்படுத்த பாத்துட்ட” என்றவன் தலையை குலுக்கிக்கொண்டு,
“ஒன் மோர் அடிஷனல் இன்பார்மேசன், சிஸ்டர் கீழ இருக்காங்க, பிளைட்டுக்கு டைம் ஆச்சுன்னு அம்மா உன்னை கூட்டீட்டு வர சொன்னாங்க” என்ற வினோத் கீழே சென்றான்.
வினோத் சொன்னதும் தான் மணிக்கட்டைத் திருப்பி பார்த்தவன் “ஓ காட் இட்ஸ் 4ஓ கிளாக், இவ்வளவு நேரம் தூங்கீருக்கேன்” என்றவன் வேகமாக குளியலைப் போட்டுவிட்டு கீழே சென்றான்.
கீழே சென்றவனின் கண்கள் தன்னவளைத் தேட அவளோ அங்கே நந்தினியுடன் அரட்டையில் ஈடுபட்டிருந்தாள்.
நளனைக் கண்டவுடன் அவன் அருகில் வந்த நந்தினி “என்ன நளா தூங்கீட்டியா, சரி கிளம்புங்க டைம் ஆச்சுல்ல, என்றவர் நேத்ராவிடம் பாத்து பத்திரமா போயிட்டு வாங்க” என்றார்.
வினோத் நளனையும் நேத்ராவையும் ஏர்போட்டில் இறக்கிவிட்டவன், இருவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து விட்டு விடைபெற்றான்.
நேத்ராவைத் தோளோடு சேர்த்து அணைத்தவன் செக் இன் முடித்துவிட்டு, விமானத்தில் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தனர். அடுத்த மூன்று மணி நேரத்தில் விமானம் அந்த அழகான தீவில் இறங்கியது.
விமானம் கிளம்பியதும் நளனின் தோளில் சாய்ந்து உறங்க ஆரம்பித்த நேத்ரா, தீவில் தான் கண் விழித்தாள்.
இருவரும் அந்த தீவில் ஏற்கனவே புக் செய்திருந்த ஓட்டலை அடைந்தவர்கள், அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையினுள் கார்டை ஸ்வைப் செய்து நுழைந்தார்கள்.
அறையினுள் சிவப்பு நிற இதய வடிவ பலூன்கள் ஆங்காங்கு சிதறிக்கிடக்க, வெள்ளை நிற மெத்தை விரிப்பு விரிக்கப்பட்ட கட்டிலில், இதய வடிவம் போல் சிவப்பு வண்ண ரோஜா இதழால் அலங்கரித்திருந்தனர்.
அங்கிருந்த இரு சிறிய மேஜையில் ஒரு அழகான ஸ்ட்ராபெர்ரி கேக் வீற்றிருந்தது, அதில் ஹாப்பி ஹனிமூன் என்ற எழுத்துக்கள் கிரீமால் எழுதப்பட்டிருக்க அதன் அடியில் வித் லவ் வினோத் என்று இருந்தது.
அறையின் அலங்காரத்தில் லயித்திருந்த இருவரும் அந்தக் கேக்கில் எழுதப்பட்ட வினோத் அண்ட் நந்தன் என்ற பெயரில், நளன் உதட்டில் புன்னகையை தவழ விட, நேத்ரா “அண்ணாவா நமக்காக இதெல்லாம் செஞ்சாங்க” என்றாள்.
வினோத்தின் கேள்விக்கு புன்னகைத்தவன் “ம்ம் ஜஸ்ட் நொவ் என்றான். பின், ஆமா இந்த ரூம் டெகரேஷன் எல்லாம் நீ தான் பண்ண சொன்னியா” என்றான்.
“ஆமான்டா நந்தன் தான் ஐடியா கொடுத்தாங்க, ஆனா அந்த கேக் ஐடியா என்னோடது எப்படி” என்றவனிடம், மனம் நெகிழ “தேங்க்ஸ் டா” என்றான்.
“ஓகே டா ஓவர் பீலிங் உடம்புக்கு ஆகாது, என்ஜோய், அப்புறம் உனக்கு நான் ஏன் இதெல்லாம் செய்யுறேன் தெரியுமா? என்னோட ஹனி மூனுக்கும் நீ இதே மாதிரித் தான் எனக்கு சர்ப்ரைஸ் பண்ணனும் சரியா, நான் இதுக்கு மேல பேசி உன்னோட டைமை வெஸ்ட் பண்ண விரும்பலை, குட் நைட்” என்ற வினோத் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
பின் நந்தனுக்கு அழைத்த நளன் அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, நேத்ரா குளிக்கச் சென்றிருந்தாள்.
குளித்து இரவு உடையை அணிந்தவள், அவள் அன்னைக்கு அழைத்துப் பேசிக்கொண்டிருந்தாள்.
நந்தன் மற்றும் அவன் ஆபீஸ் வேலை சம்மந்தமாக மேலும் சிலருடன் பேசிக் கொண்டிருந்தவன், பேசி முடித்து நேத்ராவை பார்த்தான்.
மஞ்சள் வண்ண ஸ்லீவ் லெஸ் இரவு உடையில் தலையை கலைத்துவிட்டு, அழகோவியமாய் அமர்ந்திருந்தவளைக் கண்டவன், அவள் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பதால், வேகமாக குளியல் அறைக்குள் புகுந்தான்.
நளன் குளித்து முடித்து அவனது முழங்கால் வரையிலான டிரௌசரை அணிந்தவன் வெற்று மார்புடன், வெளிவந்தான்.
வந்தவன் கண்டது அறையுடன் கூடிய பால்கணியின் காற்றின் வேகத்தால் இரவு உடை மற்றும் அவிழ்த்துவிட்ட கூந்தல் காற்றின் போக்கில் நடனமாட, இன்று அதிகாலை அவன் கட்டிய புத்தம் புது மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தாலி அவளது மார்பைத் தொட்டுக் கதை பேசிக் கொண்டிருக்க, அந்த மஞ்சள் கயிற்றிற்கு ஈடு கொடுக்கப் போராடும் அவளது முகத்தின் பொலிவுடன் தேவதை போல் நின்றிருந்த நேத்ராவைத் தான்.
“ஹனி…” என்று அழைத்தவன், நேத்ரா திரும்பியதும் வா என்பது போல் வலக்கையை நீட்டினான்.
மேல் சட்டை இல்லாமல் முறுக்கேறிய உடம்புடனும் கண்களில் காதலை நிரப்பி ஏக்கத்துடன் அழைப்பவனின் அழைப்பில் உருகிக் கரைந்தவள், ஓடிச்சென்று அவன் மார்பில் தஞ்சமடைந்தாள்.
நேத்ராவின் முகத்தை நிமிர்த்தி முத்தமழை பொழிந்தவன், பின் நிதானித்து “ஹனி கேக் கட் பண்ணலாமா” என்றான். நளனின் காதல் வேகத்தில் கண்கள் மூடி நின்றிருந்தவள், கண்களைத் திறக்காமல் ம்ம் என்றாள்.
“ம்ம் என்றவளோ கண்களை திறக்காமல் இருக்கவும்,”ஹனி ஓபன் யுவர் ஐஸ், நான் உன்னோட கண்களை பாக்கணும்” எனவும் மெல்ல கண்களை மலர்த்தினாள்.
அவள் கைகளில் மரக்கத்தியைக் கொடுத்தவன் தானும் அவள் கைமேல் கைவைத்து இருவரும் ஒன்றாகக் கேக்கை வெட்டினர்.
பின் வெட்டிய கேக்கை எடுத்து அவளுக்கு ஊட்டியவன், அவள் கைகளால் தானும் பெற்றுக் கொண்டு அதை மீண்டும் அவளுக்கு அவன் நாவால் இடம் மாற்றினான்.
கேக்கின் சுவை கரைந்து தன்னவளின் இதழ் தேனை சுவைத்தவன், தன்னவளை கைகளில் அள்ளிக்கொண்டு பஞ்சு மெத்தையில் கிடத்தினான்.