தன் அன்னையிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் நினைவு மலரை பற்றியே இருந்தது. பல முறை அவன் வீட்டு எண்ணிற்கு அழைத்து இருக்கிறான்…. இது வரை ஒரு முறை கூட மலர் அவனிடம் பேசியது இல்லை.
அவளோட நம்பர் அவங்கிட்ட இருக்கு இருந்தும் ஒரு சின்ன தயக்கம் மலரிடம் பேச… இதுவே லன்ட்லைன்-ல அழைத்தா அவகிட்ட சுலபமா பேசிரலாம்.
அவளை பற்றி கேட்கும் போது அவனுக்கு கிடைக்கிற பதில் “மலர் ரூம்ல படிச்சிட்டு இருக்காடா” , “இவினிங்க் ஸ்டிச்சிங் க்ளாஸ் போயிருக்கா கண்ணா” மட்டுமே கிடைக்கும்.
ஆனால், இன்று மலர் போனை எடுத்தது அவன் எதிர்பாரா ஒன்று.. ‘பயம், வெட்கம்’ இந்த இரண்டு மட்டும் தான் மலரிடம் இதுவரை சூர்யா பார்த்திருக்கிறான்.
ஆனால், இன்று அவளின் குரலில் இருந்த மெல்லிய கோபம் அவனுக்கு இன்னும் ஆச்சிரியத்தை கூட்டியது என்னமோ உண்மைதான்.
ஒரு மாதம் எப்படியோ ஓடி விட்டது சூர்யாவிற்கு, சொல்ல போனால் இந்த அமெரிக்கா வாழ்க்கை அவனுக்கு பல விஷயங்களை கத்து கொடுத்திருகிறது.
அவன் மனதில் உள்ள வலிமை பின் அந்த வயதிற்கு உரிய பக்குவம் எல்லாம் சேர்த்து அவன் முகத்தில் இருந்த தேஜசும் வாலிபனாய் இருந்தவனை ஒரு கம்பீரமான் ஆண்மகனாக காட்டியது.
விமான நிலையத்தில் இருந்து இறங்கி வந்தவனை நவீனின் புன்னகை முகமும், கையில் இருந்த ஃபொக்கையும் வரவேற்றது.
“என்னடா, மச்சான் எப்படி இருக்க?? உன் ஆட்டோமொபைல் பிஸ்னஸ் எப்படி போய்ட்டு இருக்கு” – சூர்யா.
“ம்ச்ச் ஃபர்ஸ்ட் நம்ம தலைவர் ஸ்டைலில் ஒரு கட்டிபிடி வைத்தியம் பண்ணிப்போம் மச்சான்” சூர்யாவை இறுக்கமா கட்டி அணைத்து விடுவித்தான் அவன் நண்பன்.
“டேய் எரும விடுடா. என்னமோ ஒரு பொண்ண கட்டி பிடிக்கிற மாதிரி இப்டி புடிச்சி இறுக்குற”
“ஹ்ம்ம் என் கரகத்துக்கு உன்னை தான் கட்டி புடிக்க முடியுது மச்சான். மகனுக்கு 27 வயசு ஆகுதே ஒரு கல்யாணத்தை பண்ணி வைப்போம் அப்டினு தோணுதா என் பெத்தவுங்களுக்கு” என சோக பெருமூச்சு விட்டான் நவீன்.
“கருமம் ஃபோன்ல பேசுனாலும் இதை தான் சொல்லி அழுவுற. நேர்லையும் இப்படி கழுத்த அருக்காத மச்சான் என்னால முடியல” கை எடுத்து கும்பிட்டான் சூர்யா.
“என் பேச்ச கன்ட்ரோல் பண்ணிரலாம் சூர்யா ப்ட் என் ஹார்மோன்ஸ என்னால கன்ட்ரோல் செய்ய முடியல”
“ஹாஹா பார்த்துடா ஹார்மோன்ஸ் சிக்கிரம் எக்ஸ்பிரி ஆகிறாம!” சூர்யா.
நண்பனின் பேச்சில் அரண்டு போனவன் சூர்யா வாயை கைகளால் மூடி “எப்பா ராசா வாயை வச்சிட்டு சும்மா இருடா” –நவீன்
காரில் எறியதில் இருந்து வாய் ஓயாமல் பேசி தீர்த்துவிட்டான் நவீன்.
“டேய் சிட்டிக்குள்ள போகாம வேற எங்கையோ போற?” சூர்யா
“அம்மா உன்கிட்ட எதுவும் சொல்லலையா?!”.
சூர்யா பதிலுக்கு ‘இல்லை’ என்று தலை அசைக்கவும் “உன் குடும்பம், என் குடும்பம் எல்லாம் இப்போ மதுரை சிட்டியில் இல்லை மச்சான். எல்லாரும் கோவில் திருவிழாவுக்கு உன் அம்மா ஊரு வேப்பனுத்துக்கு போய் இருக்காங்க. கங்காம்மாதான் உன்னை அங்க கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றான் நவீன்.
“ம்ச்ச், என்னடா இது கிராமத்துக்கு போகனுமா. ஏன்டா இதை நேற்றை போனில் சொல்லி இருந்தா நான் இன்னும் ஒரு வாரம் கழித்து வந்து இருப்பேன்”.
“ஹாஹா நீ இப்டி ஏதாவது செய்யவனு தெரிஞ்சிதான் கங்காமா என்கிட்ட திருவிழா பற்றி அவனுக்கு தெரிய வேண்டாம்னு சொன்னாங்க போல!”
“டேய் நீ வேற கோபத்த கிளப்பாத. சீக்கிரம் போய் தொலை” என்றவன் கண் மூடி இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டான்.
சூர்யாவின் தாத்தா சொந்த ஊர் தான் வேப்பனுத்து கிராமம். தொழில் விசயமாக மதுரை வந்தவர்களுக்கு. அதுவே நிரந்தர இருப்பிடமாக மாறி விட்டது.
சூர்யா சிறு வயதில் இருந்த பொழுது அங்கு சென்ற நினைவு ஏதோ நிழல் படம் போல் அவனுக்கு தோன்றியதே தவிர, முழு நினைவு வரவில்லை. அதன் பின் இன்று தான் செல்கிறான்.
நவீனின் தந்தை சொந்த ஊரும் இதுதான். அது மட்டும் இன்றி இருவரின் அப்பாவும் தொழில் துறை மற்றும் குடும்ப நண்பர்கள் என்பதால் நவீனின் குடும்பமும் சேர்ந்து வந்து இருந்தார்கள்.
மூச்சு குழாய் சுவாசித்த மண் மணத்திலும், முகத்தில் வந்து மோதிய சில்லென்ற காற்றின் ஸ்பரிசம் மூலம் கண்விழித்தவன் அந்த ஊரின் பசுமை வளத்தை கண் மூடாது ரசித்து கொண்டு இருந்தான்.
மனதில் மூண்ட எரிச்சல், கோபம் எல்லாம் அந்த காற்றோடு கரைந்து விட்ட உணர்வு சூர்யாவிற்கு ஏற்பட்டது.
“டேய், மச்சான் இந்த இடம் எப்படி இருக்கிறது பார்?!. என்ன சுத்தமான காற்று” என்றவன் கண் மூடி அந்த காற்றை தன் சுவாசத்துடன் கலந்து கொண்டான்.
“போதும்டா இன்னும் பத்து நாளு இங்கு தான் இருக்க போறோம். நீ பொறுமையா இந்த ஊரை சுத்தி பார்க்கலாம்” சிறு புன்னகையுடன் நவீன் சொன்னான்.
கார், ஒரு பெரிய அரண்மனை போன்ற வீட்டில் நுழையவும் “மச்சான், நீயும் இந்த வீட்லையாடா இருக்க போகிற??” உற்சாகமாக கேட்டான் சூர்யா.
“ஹ்ம்ம் ஆமாடா. பெரிய பாட்டி எல்லாரும் ஒரே வீட்டில, இங்கேயே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க” என்றான்.
‘எல்லாருமா.??? என்ன இவன்! ஏதோ ஒரு கும்பலே வந்தது போல சொல்றான்’ என்று நினைத்தவன் ஒன்றும் கேட்காது வண்டியில் இருந்து இறங்கினான். ஆனால், வீட்டிற்குள் சென்றதும் நவீன் சொன்னதுக்கான அர்த்தம் அவனுக்கு நன்கு புரிந்தது.
“என்னடா ரொம்ப வருத்ததுடன் சொல்வது போல் இருக்கிறது” என்றான் சூர்யா.
“பின்ன, என்னடா உங்க பெரிய பாட்டி வீட்டில ஒரு பொண்ணுகிட்ட கூட அவ்வளவு சுலபமாக பேச முடியல. எல்லா ஒரே கும்பலாவே இருக்குதுங்க. ஒருத்தி கூட தனியா மாட்ட மாட்டிகா மச்சான். இதுவே நான் தனியா எங்க தாத்தா வீட்டில இருந்தா எத்தனை பேரை கரெக்ட் செய்திருப்பேன் தெரியுமா??…. எல்லாத்தையும் உன் பாட்டி கெடுத்துட்டு” என்றான் பொருமலுடன்.
நவீன் பேச்சில மட்டும்தான் இப்படி… ஆனால், பொண்ணுங்ககிட்ட சும்மா ஜாலியாக பேசுவானே தவிர அதற்கு மேல் கட்டுபாட்டுடன் இருப்பான் எல்லை மீறமாட்டான்.
அதனாலே, காலேஜில் அவனுக்கு பெண் தோழிகள் அதிகம் இருக்கும். அப்படி பட்டவன் ‘அனிக்காவிடம்’ மட்டும் இது நாள் வரை பேசி சூர்யா பார்த்தது இல்லை.
இதை ஒரு சில முறை சூர்யா நவீன்கிட்ட கேட்டதும் உண்டு அதற்கு ஏதாவது பதில் சொல்லி மழுப்பி விடுவான். அதன் பின் அவனும் கேட்டது இல்லை.
“இப்போ என்ன நல்லா ஜாலியா இருக்கனும் அவ்வளவுதானே, வா பெரிய பாட்டிகிட்ட நானே சொல்றேன்” என்று அலுங்காமல் ஒரு குண்டை தூக்கி நவீன் தலையில் போட்டான்.
அவனின் பதிலில் கண்கள் தெறிக்க அவனை பார்த்து தன் தலைக்கு மேல் கைகளை கூப்பி “அடேய் கொலைகாரா சத்தம் போட்டு சொல்லி தொலைக்காதடா. டேய் மச்சான் இதை மட்டும் நீ பாட்டிகிட்ட சொன்னனா எனக்கு இங்கே சமாதி தான். பின்ன உன் உயிர் நண்பனை உன்னால் பார்க்க கூட முடியாது”.
அவனின் அலறலில் வந்த சிரிப்பை கட்டு படுத்த முடியாது வாய் விட்டு சிரித்தான் சூர்யா. “என்னடா, இரண்டு பேருக்கும் உள்ள வரனும்னு எண்ணம் இல்லையோ?” என்றார் கங்கா.
தன் அன்னையை கண்டதும் அவரை தோளோடு அணைத்து கொண்டு “எப்படிம்மா இருக்க?” என்றான் முகம் நிறைந்த மகிழ்ச்சியில்.
“ம்ம், இங்க எல்லாரும் நலம் கண்ணா…. நீதான் அங்க போயிட்டு வந்ததும் ஆண் அழகனாக மாறி வந்து இருக்கிற” என்றார் பெருமையுடன்.
இவர்களின் பாச பிணைப்பை பார்த்து கொண்டு இருந்த நவீன் “க்கும்… இங்கு ஒருத்தன் இருக்கேன், ஏர்போட்ல இருந்து இந்த சார் தானா நடந்து வரல இந்த அடியேன் தான் அழைத்து வந்தேன். என்னையும் கொஞ்சம் கவனிக்கலாம். அங்க பொழியிற பாச மழையோட சாரல் இக்கடையும் கொஞ்சம் வந்தா நல்லா இருக்கும்”
“அச்சோ, சாரிடா கண்ணா…. இவனை பார்த்து இரண்டு வருசம் ஆகுதா அதான்…. சரி உள்ள வாங்க பெரிய பாட்டி அப்பவே இருந்து உங்களுக்காக காத்துட்டு இருக்காங்க” என்றவர் வேலை ஆளிடம் சொல்லி இருவர் பெட்டியையும் உள்ளே எடுத்து வைக்க சொல்லி விட்டு அவர் சமையல் அறையை நோக்கி சென்று விட்டார்.
“என்னடா மச்சான், இந்த சினமாவில் வருவது போல நம்ம இரண்டு பேருக்கும் ஆரத்தி எல்லாம் எடுத்து வரவேற்க மாட்டங்களா?
“ஆமா, நம்ம போருக்கு போய் சண்டை எல்லாம் போட்டு வந்திருக்கிறோம் பார்!?…. நீ உள்ளே வா பெரிய பாட்டி உனக்கு ராஜ மரியாதை கொடுக்க காத்துட்டு இருக்காங்க”.
“ஹ்ம்ம் அந்த கிழவி கொடுத்துட்டாலும்….” என்று சலித்தவன், வாசலிலே கண்கள் மின்ன நின்று விட்டான்.
அவன் பின்னே வந்த சூர்யா ‘இவன் ஏன் இப்படி நிற்கிறான்??’ என்று நவீன் பார்த்த திசையை நோக்கி தன் பார்வையை செலுத்தியவன் கண்கள் மட்டும் இல்லை மனம் முழுவது ஏதோ ஒரு இதமான உணர்வு, பனிக்கு இதமா கதகதப்பு உடம்புல பாய்ஞ்சதும் வரும் சுகத்தை போல் உணர்ந்தான் சூர்யா.
“ஏய், இப்போ நீ கொடுக்க போறியா இல்லை பாட்டியிடம் சொல்லவா” விரல் நீட்டி மலர் ஒரு சிறுமியிடம் சண்டை போட்டு கொண்டு இருந்தாள். அந்த காட்சியை தான் இருவரும் பார்த்து நின்றுவிட்டனர்.
“டேய், மச்சான் யாருடா இந்த பொண்ணு ….. ச்ச சான்சே இல்லை, எப்படி இருக்கிறாள்” நவீனின் அதே எண்ணம் தான் மலரின் நாயகனுக்கும்.
‘இத்தனை நாள் தெரியாத இந்த அழகு இப்போ ஏன்???! அதுவும் ஒரு மாதிரி மூச்சு முட்டுற மாதிரி….. ஓ காட்ட்ட்ட்ட்ட்ட்ட்’ முடியை கோதி பின்னகழுத்தை தேய்த்து பெரும் மூச்சை இழுத்துவிட்டான் சூர்யா.
“டேய், உன்கிட்ட தான் கேட்கிறேன் யாருடா அந்த பொண்ணு?” கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான் நவீன்.
அவனின் கேள்வியில் எரிச்சல் அடைந்தவன் , பதில் சொல்ல வாய் திறக்கவும் கங்கா சமையல் அறையில் இருந்து ‘மலர்’ என்று அழைத்தார்.
“இரு, உன்னை வந்து பார்த்துக்கிறேன்” அந்த சிறுமியிடம் சொன்னவள் தன் கால் கொலுசு சத்தம் போட கங்காவிடம் சென்று விட்டாள்.
“ஓகோ… நீ சொன்ன மலர் இவள் தானா. நல்ல வேலை மச்சான் பாட்டிக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவங்க மட்டும் இங்க இருக்க சொல்லலைனா நான் இந்த பியூட்டியை மிஸ் பண்ணிருப்பேன்டா” என்றான் நவீன்.
ஏதோ ஒரு மெல்லிய கோபம். அது மலர் தன்னை பார்க்காமல் போனதா இல்ல அவள் மேல் நவீனுக்கு இருக்கும் ரசனையா என்று அவனுக்கு தெரியவில்லை. இந்த இரண்டையும் அவன் மனம் விரும்பவில்லை.
அதற்குள் நவீன் சமையல் அறையை நோக்கி போகவும் இவனும் சென்றான். அங்கு மலர் நவீனின் அம்மா சுஜாவிடமும், கங்காவிடமும் கதைத்து கொண்டு இருந்தாள்.
வாசலில் யாரோ வரும் அரவம் கேட்டு திரும்பி பார்த்தவள். யாரோ ஒருவர் என்று நினைத்தவள் அங்கு சூர்யாவை நிஜமாவே எதிர்பார்க்கவில்லை.
முழுதாக இரண்டு வருசம்… எங்கோ தொலைந்து போன தன் பொருள் திரும்பி தன் கைக்கே கிடைத்த உணர்வோடு அவனை தலை முதல் கால் வரை கண்களால் வருடினாள்.
அவனும் அவளை தான் முகம் முதல் பாதம் வரை கண்களால் அளந்து கொண்டு இருந்தான். “வா, சூர்யா எப்படி இருக்கிறாய்?” என்றார் சுஜா.
புன்னகையுடன் “ம்ம் நல்லா இருகிறேன் ஆன்ட்டி. அங்கிள், நீங்கள் எல்லாரும் நலமா?” என்றவனின் பார்வை மட்டும் மலரிடம் இருந்து திரும்பவில்லை.
‘இது என்ன இவன் பார்வையில ஏதோ வித்தியாசம் இருக்குதே. இது வரை இப்படியெல்லாம் இவன் பார்த்தது இல்லையே’ மனம் தன் போக்கில் யோசிக்க அவன் பார்வையால் உள்ளே குளிர் பரவ உதட்டை கடித்து வேறு புறம் திரும்பி நின்றாள்.
இவர்கள் இருவரின் நாடகத்தை கவனிக்காது.., நவீன் மலரிடம் சென்று “ஹாய், பியூட்டி …. ஐ அம் நவீன்” அவளின் புறம் கை நீட்டினான்.
“ஹாய், ஐ அம் மலர்” புன்னகையுடன் அவனுக்கு கை கொடுத்தாள்.
‘வெளிநாட்டில் இருந்து ஒருத்தன் வந்து இருக்கிறான். இரண்டு வருசம் பார்க்கலையே… எப்படி இருக்கிறான் என்று ஒரு வார்த்தை என்கிட்ட கேட்க்கல.. இங்கே சுத்திகிட்டு இருக்கிற இந்த நாதாரிக்கு கை கொடுத்து அறிமுகம் படலம் நடக்குது’ இருவரையும் மனதில் வருத்தேடுத்தான்.
நவீனிடம் பேசிட்டு இருந்தவள் திரும்பி சூர்யாவை பார்க்க ‘எதற்கு, இவன் இப்படி அய்யனார் போல முரைச்சிட்டு இருக்கான், கையில அருவா மட்டுமாதான் இல்லை’ . அவன் கோபம் முகம் கண்டு குழம்பி போய் நின்றாள்.
“டேய் மச்சான் எதுக்கு இப்படி அருவா இல்லாத அய்யனார் மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்க” தான் மனதில் நினைத்தை நவீனும் சொல்ல மலர் சிரித்து விட்டாள்.
இதழ் விரித்து வென்பற்கள் தெரிய சிரித்தவள் உதடு மட்டும் இல்லாது அந்த பூனை கண்களும் சேர்ந்து சிரிக்க நாவில் சுரந்த எச்சிலை தொண்டைக்குள் கடினபட்டு கடத்தினான் சூர்யா.
‘காட்ட்ட்ட்ட்ட் இது என்ன இப்படி இருக்கிறா??!.. அந்த உதடு, கண்ணு இதுலா இப்போ என்ன எனக்கு புதுசா தெரியுது?’
அவள் சிரித்ததால் வந்த கோபம், பின் அதில் மயங்கி அவளது முகத்தை கண்கள் சிமிட்டாது பார்த்தான்.
கண்களின் கருமணி சற்றும் அசையாது மெதுவாக அடியெடுத்து அவள் அருகில் வந்து நின்றவன் “எப்படி இருக்கிற மலர்?” . வார்த்தையில் அப்படி ஒரு மென்மை.
அவன் அருகில் வந்ததும் இதுவரை எடுத்து கொண்ட சங்கல்பம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு இருந்தது மலருக்கு.
காதலித்த மனம் வேறு ‘அவனை பார்’ என்று உந்தி தள்ளியது. இங்கு நவீன் பேசிய பேச்சு எதுவும் மலரின் காதில் ஏறவேயில்லை, அது கற்றோடு கரைந்து சென்றது.
நலம் விசாரித்தவனை நிமிர்ந்து பார்த்தவளின் நெஞ்சம் ‘கடவுளே, இவங்கிட்ட ஏற்கனவே என் மனசு மயங்கி போய் கிடக்கிறது. இதுல இப்போ இப்படி ‘மாடர்ன்’ போல வந்து நிற்கிறான். சொல்லவே வேண்டாம் இந்த வெட்கம் கெட்ட மனசு முழு அடிமை சாசனமே எழுதி கொடுத்து அவன் காலடியிலே தஞ்சம் ஆகிறும் போல’ மனதில் தத்தளித்தாள்.
“என்ன மலர், எப்படி இருக்கிறான் உன் அத்தான் கொஞ்சமாவது பாஸ் மார்க் கிடைக்குமா” நவீன் குறும்புடன் கேட்டான்.
‘சை இப்படி பக்கத்துல இருக்கவுங்க கவனிக்கிற அளவுக்கா இவனை பார்த்து கொண்டு இருந்தோம்’ என்றவள் சூர்யாவை பார்த்தாள். அவனும் அவளை தான் உதட்டில் உறைந்த புன்னகையுடன். கண்களில் குறும்பு மின்ன பார்த்து இருந்தான்.
மலர் அவனை பார்க்கவும் ‘என்ன’ என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான் அந்த கள்வன். அவ்வளவு தான் முகம் முழுவதும் சூடு ஏற ‘ஒன்னுமில்லை’ என்று வெறும் தலை அசைப்புடன் அவர்களை விட்டு விலகி வெளியே சென்று விட்டாள்.
அவள் செல்வதையே புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தவன் மனதில் ஏதோ தோன்ற திரும்பி தன் நண்பனை பார்த்தான். அவனும் இவனை தான் அளவிட்டு கொண்டு இருந்தான்.
“என்னடா, புதுசா பார்க்குற மாதிரி வெறிச்சி பார்க்க. உங்க அம்மாகிட்ட சொல்லி சீக்கிரம் உனக்கு ஒரு கல்யாணம் பண்ண சொல்லனும்” குரலில் சிறுது தடுமாற்றம் இருந்ததோ என்று அவனுக்கே தோன்றியது.
“ஒன்னுமில்லை மச்சான் இப்பொழுது என்ன கேட்டாலும் நீ எதுவும் சொல்ல போவது இல்லை, முத்தின காய் சந்தைக்கு தானே வரும் அப்போ உன்னை கவனித்து கொள்கிறேன்” என்றான்.
“போதும்டா அரட்டை அடித்தது சீக்கிரம் போய் பெரிய பாட்டியை பார்த்துட்டு வாங்க” என்று கங்கா இருவரையும் வெளியே விரட்டி விட்டார்.
இந்த வேப்பனுத்து கிராமத்தை பொறுத்த மட்டில் வசதியானவர்கள் என்றாள் அது சூர்யாவின் கொள்ளு தாத்தா அதாவது கங்காவின் தாத்தா வீட்டினர் தான், இவர்கள் அடுத்து வசதி படைத்தவர்கள் நவீனின் தாத்தா பரம்பரை.
இந்த வீட்டை மட்டும் இல்லை ஊரில் பெரிய மனிதர்களின் முதல் பட்டியலில் இருப்பது சூர்யாவின் தாத்தா சுந்தரம் மற்றும் பெரிய பாட்டி என்று அழைக்கப்படும் விசாலாட்சி அவர்து துணைவியார்.
சுந்தரம் இறந்த பின் ஒற்றை பெண்ணாக இருந்து எல்லாவற்றையும் பார்த்து கொண்டு இருக்கிறார். அவர் இறந்த கொஞ்ச நாளிலே தன் மகன், மருமகள், மகள் என எல்லாரையும் இழந்த துக்கம் ரொம்பவே அவரை தாக்கியது.
பாட்டியின் ரூமிற்கு போகும் வழியில் மலர் எங்காவது தென்படுகிறாளா என்று கண்களால் அலசி கொண்டேதான் சென்றான். அவனுக்கே அவன் செயல்கள் எல்லாம் சின்ன பிள்ளை தனமாக தோன்றியது.
‘லிஸ்சென் சூர்யா மலர் நீ வளர்ந்ததுல இருந்து பார்க்குற அதே சின்ன பொண்ணுதான்.’ தனக்கு தானே சொல்லி கொண்டு இருந்தவன் ஆழ் மனம் ‘ப்ட் இப்போ இங்க வந்த இரண்டு மணி நேரமா என் கண்ணுக்கு அவள் சின்ன பொண்ணா தெரியலேயே?’ என வாதாட அதை தலையில் தட்டி அடக்கினான்.
அங்கு அவன் பாட்டி இரு வேலை ஆட்களிடம் பேசுவதை கண்டு வெளியே நின்றான். அவர்கள் வெளியே வந்ததும் உள்ளே சென்று பாட்டியின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கியவன் “என்ன பாட்டி எப்படி இருக்கீங்க?” என்றான் அவர் அருகில் அமர்ந்தவாறு.
அவனின் கையை எடுத்து தன் கைக்குள் அடக்கி கொண்டவர் “எனக்கு என்ன ராசா குறை உங்களையும் பார்த்து விட்டேன். இந்த கிழவிக்கு வேறு என்ன வேணும். அப்படியே உங்க தாத்தா போல இருக்கடா” முகம் வழித்து முத்தமிட்டார்.
“ம்ச்ச் பாட்டி அம்மா, நான் அப்பா மாதிரி இருக்கேன்னு சொன்னாங்க.”
“அடேய் கூறுகெட்டவனே உன் அப்பே அவன் அப்பா மாதிரி இருப்பான். நீங்க ரெண்டு பேரும் என் புருக்ஷே ஜாடை தான்” என்றவர்,
“ஆமா, அந்த நவீன் பயல எங்க? உன்கூட தானே வந்தான்” என்று விசாரித்தார்
“ஒரு முக்கியமான ஃபோன் பாட்டி அதான் பேசிட்டு உங்களை பார்க்க வருவதாக சொன்னான்” என்றவன் கொஞ்சம் நேரம் பாட்டியிடம் பேசி விட்டு தன் அறைக்கு சென்றான்.
குளித்து முடித்து ஒரு குட்டி தூக்கத்தை போட்டவனின் வயிறு சத்தம் போட தானே தட்டில் சாப்பாடு போட்டு கொண்டு வரண்டாவில் டிவி பார்த்து சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
அந்த வழியே சென்ற வேலைக்காரி பதறி கொண்டு அவன் அருகில் வந்து “ஐயா என்னைய கூப்பிட்டு இருந்தால், நானே சாப்பாடு வச்சி கொடுத்து இருப்பேனுங்க. நீங்க ஒரு குரலு ‘தேனு’ அப்படினு கொடுங்க சாமி நான் உடனே வந்து விடுவேன்” என்றாள் அந்த வீட்டின் முதன்மை வேலைக்காரி தேனு.
அவளின் பேச்சில் கவர பட்டவன் அவளிடம் விளையாடி பார்க்கும் பொருட்டு “ஓ!!! அப்படியா …. நீதான் அந்த தேனுவா உன்னை பற்றி தான் இந்த ஊருல நான் காலடி எடுத்து வைச்சதுல இருந்து கேட்டுகிட்டே இருக்கிறேன்” அவன் சொன்னதும் அவனின் குறும்பை அறியாது முகம் முழுக்க சிரிப்புடன்,
“அப்படியா ஐயா! என்னைய இந்த ஊரில் எல்லாத்துக்கும் தெரியும், நான் நல்லா சமைப்பேன் அப்படின்னு நிறைய பேர் சொல்லிருக்காங்க” என்றாள் பெருமையுடன்.
“பட், நான் வேறு விதமா கேள்விபட்டேனே!!!”
தண்ணியில இருந்து வெளியே விழுந்த மீன் போல துடித்தவள் “அய்யோ அதை எல்லாம் நம்பாதிங்க சாமி. இந்த ஊருல இருக்குற பாதி சனத்துக்கு என் மேல பொறாமை சாமி. அதான் என் பத்தி தப்பு தப்பா வத்தி வச்சி இருக்குங்க” பல்லை கடித்து கழுத்தை நொடித்தாள்.
“என்ன தேனு நான் என்னமோ சபரி மலைக்கு மாலை போட்டது போல சாமி சாமினு கூப்புடுற” என்றான் எரிச்சலுடன்.
“அதுவா சாமி…. அது நீங்க எங்க சுந்தரம் ஐயா மாதிரி இருக்குறதா எங்க அம்மா சொன்னாங்க. ஐயா தான் எங்களுக்கு சாமி மாதிரி அதான் அப்படி கூப்ட்டேன். ம்ச்ச் அதை விடுங்க சாமி என்ன பற்றி கேள்விபட்டத சொல்லுங்க”.
அவங்க உழைக்கிறதுக்கு என் தாத்தா கூலி கொடுக்குறாங்க. இதுல எங்கு இருந்து வருது இந்த பெரியவுங்க, சின்னவுங்க அந்தஸ்த்து??. என்று யோசித்தவனை தேனுவின் “சாமி” என்ற அழைப்பு களைத்தது.
“நீ இப்படி என்னை சாமினு கூப்பிட கூடாது. நீ என்ன விட சின்ன பொண்ணுதான என்னைய அண்ணானு கூப்டனும் சரியா” அவனது கட்டளைக்கு தானாக தேனுவின் தலை ஆடியது. அவள் நெளிந்து கொண்டு நிற்பதை கண்டு சிரிப்பு வர
“அதாவது நீ ரொம்ப சோம்பேறி தனமா இருப்பியாம் அது மட்டும் அல்லாது உன் சமையலை வாயில் வைக்க முடியாதாம், அப்படியா தேனு!!?” முகத்தை அப்பாவியாக வைத்து அவளிடமே கேள்வி கேட்டான்.
சூர்யா அப்படி சொன்னதும் கண்கள் சிவக்க தன் முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியவள் “எவன் அது என்னைய பற்றி இப்படி சொன்னது. சா…. இல்ல அண்ணே அவனை மட்டும் என்கிட்ட காட்டுங்க அப்புறம் இருக்கு அந்த நாதாரிக்கு” சண்டைக்கு நான் ரெடி என்பது போல் நின்று கொண்டு இருந்தவளை பார்த்தவனுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.
அவன் சிரிப்பை அடக்குவதை கண்டு “அண்ணே நீங்க பொய் தான சொன்னிங்க” என்றவளின் கேள்வியில் வாய் விட்டு சிரித்தான்.
“ரொம்ப சீக்கிரம் கண்டு புடிச்சிட்ட” என்றவனின் பதிலில் புன்னகைத்தவள்,
“சரியான சேட்டை பண்ணுவிய போல” என்றவள் அவன் சாப்பிட்டு வைத்த தட்டை எடுத்து சமையல் அறையை பக்கம் சென்றாள்.
“என்ன வீட்டில் யாருமே இல்லை… எங்கே எல்லோரையும்?.
“அவுக எல்லா கோவிலுக்கு சிறப்பு பூசைக்கு போய் இருக்காங்க… இப்போ வர நேரம் தான்” என்றவள் தன் வேலையில் மூழ்கி விட்டாள்.
“சூர்யா, நீ கோவிலுக்கு போகல?” தோட்டத்தில ஃபோனை நோண்டி கொண்டு இருந்தவனை கேட்டான் நவீன்.
“இல்லை மச்சான் இப்போதான் எழுந்திருச்சேன்” என்று சொல்லி கொண்டு இருந்தவன் “ஹாய் சூர்யா” என்ற குரலில் திரும்பி பார்த்தான்.
அங்கு அனிக்கா நிற்கவும் ‘இவள் எப்படி இங்கே?’ என கண்களில் கேள்வியுடன் நவீனை பார்த்தான்.
நவீனோ இறுகி போய் இருந்தான். அதற்குள் அவர்கள் அருகில் வந்தவள் “நீங்கள் இன்னைக்கு வருவதா யாருமே என்கிட்ட சொல்லலியே. சொல்லியிருந்தால் நானே உங்கள பிக்கப் பண்ண வந்து இருப்பேன்” .
‘இவளின் குடும்பத்தின் வருகையைதான் கும்பல்னு நவீன் குறிப்பிட்டானோ’ என அறிந்தவன் அவளிடம் சிரித்த முகமாகவே நலம் விசாரித்தான் அதற்குள் கோவிலுக்கு போனவர்கள் வந்து விட மூவரும் வீட்டின் உள்ளே சென்றனர்.
உள்ளே சென்றதும் சூர்யாவின் கண்கள் மலரைத்தான் தேடியது. அவனின் கோபத்தை அதிகரிப்பது போல் நவீன் “டேய், அந்த பியூட்டி எங்கடா” மெதுவாக கண்களை அங்கும் இங்கும் ஓட விட்டவாரே.
“யாரு மச்சான் அந்த பியூட்டி. உன் கண்ணுக்கு எல்லா பொண்ணுங்களும் பியூட்டியாதான் தெரிவாங்க அதுல நீ யார கேட்குறனு எனக்கு எப்டி தெரியும்டா?”
“ம்ச்ச் இங்க வந்ததும் நான் பார்த்த முதல் பியூட்டி உன் மாமா பொண்ணு மலர்தான் மச்சான்.”
பதிலுக்கு சூர்யா வாய் திறக்கவும் நவீன் மலரை பார்த்து விட அவள் இருக்கும் இடம் நோக்கி சென்றான். பல்லை கடித்துபடி அவனை இழுக்க போகையும் “சூர்யா” என்றபடி அவன் கைகளை கோர்த்து கொண்டு நின்றாள் அனிக்கா.
அவளின் இந்த செய்கையில் முகம் சுளித்தவன் தழைந்த குரலில் “என்ன அனிக்கா இது…. கையை விடு பெரியவுங்க இருக்குற இடத்துல் இப்படி கையை கோர்த்துட்டு நிக்கிற. இங்க இருந்து போற வரைக்கும் கொஞ்சம் மரியாதையா நடந்துக்க”.
அவமானத்தில் கறுத்து போய் இருந்தவளை ஒரு நொடி பார்த்தவன் ஒன்றும் சொல்லாது இடத்தை விட்டு அகன்றான்.
இறுகிய முகத்துடன் சென்றவனை தடுத்தது பெரிய பாட்டியின் அழைப்பு. “என்ன பாட்டி” என்றவனிடம்
அனிக்காவை அழைத்து “சூர்யா, இது அனிக்கா நம் சுஜாவின் தூரத்து அண்ணன் பொண்ணு கோவில் விழாவுக்கு வந்திருக்கிறாள்”…
அனிக்கா ஏதோ சொல்ல வாய் திறக்கவும் “ம்ம் தெரியும் பாட்டி, என் காலேஜ் ஜூனியர்” என்றான்.
‘இப்படி இவர்களுக்குள் ஒரு சொந்தம் இருக்கிறது என்பதை நவீன் சொல்லவே இல்லை வெறும் பக்கத்து வீட்டு சொந்தம் அப்படின்னு சொன்னான்’ என யோசிதவனி கலைத்தது பாட்டியின் குரல்.
“ஓ… உனக்கு முன்னமே தெரியுமா! இவளுடைய தம்பியும் வந்திருக்கிறான் சூர்யா”,
‘என்ன விக்கியும் வந்து இருக்கிறானா!’ என்று நினைத்தவனின் பார்வை அனிச்சையாக நவீனிடம் பேசி கொண்டு இருந்த மலரிடம் சென்று மீண்டது.
மலரும்…