காற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே
அத்தியாயம் 04
ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் இதழியனி சிறிது நடப்பு வாழ்க்கைக்கு முன்னேறி இருந்தாள்..
படிப்பில் கவனத்தை முழுவதுமாக செலுத்தி இருந்தாள். இதுக்கான மொத்த காரணமாக அனலன் இருந்தான் அவளுக்கு பக்கத்துணையாக இருந்து வந்தான்.
இந்த ஒரு மாத காலத்தில் அவள் இந்த இல்லத்தினுள் ஒன்றி இருந்தாள்..
அனலனும் கல்லூரி வாழ்க்கையை பார்த்துக் கொண்டும் இரு பெண்களை கவனித்துக் கொண்டும் இருந்தான்.
அனலன் இதழியனி மற்றும் அக்னிகா என மூவரும் வார இறுதியில் கடைவீதி சுற்றி பார்த்து விட்டு வருவார்கள். அவர்கள் கூடவே விதுஷாவும் இதழியனியின் நண்பனான செழியனும் உடன் வருவார்கள்.
அந்த ஒரு நாள் முழுவதும் கொண்டாட்டமாக இருக்கும்…
செழியன் இதழியனி மற்றும் விதுஷாவின் குடும்ப நண்பரின் மகன் . இவ்விரு குடும்பங்களும் இவர்கள் சிறு வயதில் இருக்கும் போதிலிருந்து நண்பர்களாக இருக்கின்றனர்.
இதழியனியும் செழியனும் ஒரே வயதை உடையவர்கள். செழியனே வந்து வார இறுதியில் விதுவை அழைத்துக்கொண்டு செல்வதால் ராமராஜன் எதிர்ப்பு எதுவும் சொல்லவில்லை. அதுவே அவர்களுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
இன்னும் ஒரு மாதமே இருந்தது பப்ளிக் தேர்வு வருவதற்கு. அதற்காக இதழியனி தீவிரமாக படித்துக் கொண்டு இருந்தாள் . அவளுக்காக எல்லா உதவிகளையும் மாதவி மற்றும் அனலன் திறம்பட செய்து கொடுத்தனர்.
இதற்கிடையில் இதழியனிக்கு பிறந்தநாள் வருவதாக விது கூற அதற்கான வேலையில் இறங்கி இருந்தான் அனலன்.
அவள் அன்று தந்த முத்தத்திற்கு பிறகு அவன் அவளிடம் சிறிது ஒதுங்கி இருந்தாலும் அவளுக்கான வேலையை தவற விடாமல் செய்து கொடுத்தான்.
இது அவளது முதலாவது பிறந்தநாள் அதுவும் அவள் திருநங்கையாக மாறியதன் பின் கொண்டாடும் முதல் பிறந்தநாள். அதனால் அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று எண்ணி அதன் வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தான் அனலன் .
அக்னிகா படிக்கும் நேரத்தை தவிர்த்து மற்ற எல்லா நேரத்திலும் இதழியனியுடனே சுற்றி திரிந்தாள்.
அடுத்தநாள் அவளது பிறந்த நாள் என்றிருந்த நிலையில் அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றிருந்தனர்.
அவளுக்கு பிடித்த ஒவ்வொன்றையும் வாங்கித் தந்தனர் மாதவியும் அந்தோனியாரும்….
அன்று முழுவதும் எப்படியோ அவர்கள் நேரத்தை கழிக்க இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்தனர்.
வெளியே சுற்றி வந்ததால் அசதியாக இருப்பதாக கூறி படுக்க சென்று விட்டாள் இதழியனி.
சரியாக பதினொன்று ஐம்பத்தைந்தாக இருக்க கரன்ட் கட்டாகவும் இதழியனின் பக்கத்தில் உறங்கிக் கொண்டு இருந்த அக்னிகா பயத்தில் அழ தொடங்கி விட்டாள்…
அவளை எவ்வளவு சமாதானம் படுத்த முயன்றும் அவள் அழுகை குறைவதாக இல்லை.. அதனால் அவளை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்…
அங்கே இருட்டாக இருந்தாலும் காற்று சில்லென்று அடிக்க அக்னிகாவை சமாதானம் படுத்தியவாரு அந்த இயற்கையின் வாசனையை உணர தொடங்கினாள்..
அந்த நேரம் பார்த்து மாடியில் லைட் எறிய தீடிரென்று போடப்பட்தால் கண்களை மூடித் திறக்க அவளுக்கு முன்பு அவளது இல்லத்து குடும்பத்தினர்களும் விது மற்றும் செழியன் நின்றிருந்தனர்..
அவள் புரியாமல் அவர்களையே நோக்க..,, அனலன் “ஹாப்பி பேர்த்டே டூ யூ ” என்று பாடியவாறு கையில் கெக்கை எடுத்துக் கொண்டு வந்தான்..
அதை கண்டவள் அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அவனது முகம் நிலவை போன்று பிரகாசமாக தெரிய அதில் அவளை துளைத்து போனாள்…
அனலனை பார்த்துக் கொண்டிருக்க..,, தீடிரென்று பட்டாசு வெடிக்கவும் பயந்து போன இதழியனி பக்கத்தில் நின்றிருந்த அனலனை அணைத்துக் கொண்டாள்…
இதுவும் அவளுக்குள் நடந்த மாற்றத்தின் அடிப்படையில் நடந்தது.. பெண்மையின் அனைத்தும் செயல்பாடுகளும் அவளுக்குள் வரத் தொடங்கி விட்டது…
அனல் எனக்கு ஏனோ தெரியல இந்த பட்டாசு சௌண்ட் எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று அவனது சட்டை காலரை இறுக்கமாக பிடித்து கூற..
ஒரு பக்கத்தில் அவளுக்கான கேக்கை ஒரு கையிலும் மறு கையில் அவளை அணைத்தும் ” ஒன்னும் இல்ல டா இதழி மா கண்ண கொஞ்சம் திறந்து பாருங்க ” என்று சொல்ல
“என்னால முடியாது ” என்று விடாப்பிடியாக அவனது பிடித்துக் கொண்டு கூற
” நான் சொன்னா நீ கேப்ப தான ” என்றே கேட்க
அவள் ஆமாம் என்பது போல் தலையசைக்க ” அப்போ கண்ண திறந்து பாரு நான் உன்கூட தான் இருக்கேன் ” என்க அவளும் மெதுவாக அவனிடம் இருந்து பிரிந்து நிற்கு
“அங்க பாருங்க அக்கா ” என்று விது கைக்காட்ட
விது கைக்காட்டிய வானத்தை பார்க்க பட்டாசு வெடித்து ஹேப்பி ஃப்ரேத்டே இதழியனி என்ற எழுத்துக்கள் வந்தது…
அதை கண்டவள் விழி விரித்து நோக்க அடுத்து அவளுக்காக கேக் வெட்டும் நேரம் வரவே அனலன் அந்த கேக்கை டேபிள் மீது வைக்க அக்னிகா மற்றும் விது அவளை அழைத்துக் கொண்டு கேக் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர்…
இதழியனி கேக் வெட்டிட அனைவரும் அவளுக்கு பாடல் பாடினர். முதல் பீஸ் எடுத்து மாதவிக்கு ஊட்ட அடுத்தாக அவள் அனலனுக்கு சிறு வெட்கத்துடன் ஊட்ட அதை வாங்கி அவளுக்கும் சிறிது ஊட்டி விட்டான்…
பின்னர் விது அக்னிகா மற்றும் செழியனுக்கு இதழியனி ஊட்டி விட அவளுக்கான பிறந்தநாள் பரிசை வழங்கினர்.
அனலன் மட்டும் அவளுக்கு எந்த ஒரு விதமான பரிசு தராமல் இருக்க அதை அவளது மனம் ஏங்க தொடங்கி இருந்தது..
“சரி அக்கா அப்போ நாங்க கிளம்புறோம் ” என்று விது சொல்ல
“இந்த நேரத்துல நீங்க ரெண்டு பேரும் எங்கேயும் போக தேவையில்லை. நாளைக்கு காலைல போங்க ” என்று மாதவி கூற
“ஆமா டி ஆல்ரெடி ரொம்ப லேட் ஆய்டுச்சி பாரு இன்னைக்கு என் கூடவே இருந்துடு டி ” என்று இதழியனி சொல்ல அதை ஆமோதிக்கும் விதமாக “ஆமா நீங்க நாளைக்கே போங்க ” என்றான் அனலன்..
“சரி நாம இன்னைக்கு இங்கேயே இருந்துக்கலாம் ” என்று செழியன் சொல்ல விதுவும் சம்மதித்தாள்…
” சரி எல்லாரும் வாங்க கீழ போகலாம் ” என்று விட்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றார் மாதவி…
இதழியனியை அழைத்த அனலன் ” நான் பின்னாடி இருக்கேன் நீயும் வா ” என்று அழைக்க
“சரி வரேன் ” என்றவள் அவனுடன் முற்றத்திற்கு சென்றாள்…
“சொல்லு அனல் எதுக்கு என்ன கூப்பிட்ட” என்று கேட்க
“இத கொடுக்க தான் ” என்றவன் அவள் கையில் ஒரு கிஃப்ட் பாக்ஸை திணித்தான்..
அதை பிரித்து பார்க்க அதில் அழகிய ஊதா மற்றும் பிங்க் நிறத்தின் செய்யப்பட்ட லெஹங்கா ஒன்று இருக்க அதை கண்டவள் “தேங்க்ஸ் அனல் ” என்றுவிட்டு அவனின் கண்ணத்தில் இதழ் பதித்து விட்டு ஓடி மறைந்து விட்டாள்….
“எப்ப பார்த்தாலும் இவளுக்கு இதே வேலையா போச்சி ” என்று அவனது கண்ணத்தை மெதுவாக தடவியவனின் முகத்தில் புன்னகை அரும்பியது..
அடுத்தநாள் குடும்பமாக கோவிலுக்கு சென்று வந்தனர்.
மாலை வேலையில் அனலன் அவளின் நச்சரிப்பிற்கு இணங்க அவளை திருநங்கைகளின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களின் வாழ்த்துக்களோடு வீடு திரும்பினர்….
நாட்கள் விரைவாக ஓட தொடங்கியது. பரிட்சை வர இன்னும் பத்து நாளே இருக்க இதற்கிடையில் அனலன் கல்லூரியில் இருந்து ஒரு கேம்பிற்கு சென்றிருந்தான்…
அவன் போகும் போது ” சீக்கிரமா வந்துடு அனலா எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும் ப்ளிஸ் சீக்கிரமா வந்துடு சரியா ” என்று கெஞ்ச..
“கண்டிப்பா சீக்கிரமே வந்துடுறேன் ” என்று சொல்ல…
“அண்ணா நீ கிளம்பி போ னா இவ இப்படி தான் பண்ணிட்டு இருப்பா ” என்று அவளை கிண்டலடிக்க…
” குட்டி ” என்றவனின் குரலில் சிறிது பொய்யான கோபம் எட்டி பார்க்க
” சும்மா அண்ணா.. நான் பாத்துக்கிறேன் நீங்க பொயிட்டு வாங்க அண்ணா ” என்று கூறி வழி அனுப்பி வைத்தாள் அக்னிகா.
இதழியனி அவன் செல்லும் வழியே கண்ணில் நீருடன் பார்த்தாள்…
பத்து நாட்கள் சென்றதே தெரியாமல் செல்ல இதழியனி அவளது தேர்வுக்கு சரியாக பிடித்திருந்தாள்..
ஆனாலும் அவளுக்கு பயமாகவே இருந்தது.ஏனோ தெரியவில்லை அவளது மனம் அனலனின் ஆதர்வை எதிர்பார்த்து காத்திருந்தது.
ஆனால் அவனால் அன்று வர முடியவில்லை . எவ்வளவு முயன்றும் வர இயலவில்லை. அவனுக்கு அவன் மீதே கோபம் வந்தது.
அவளுக்கு ஃபோன் போட்டு பேசி அவளின் பயத்தை மாற்ற நினைத்தான்…
“இங்க பாரு இதழி மா நீ என்னோட ஃபிரண்ட் தான அப்புறம் எதுக்கு இப்படி பயப்படுற சொல்லு நான் நாளைக்கு வந்துடுவேன் . நீ எத பத்தியும் யோசிக்காம நல்ல படியா படிச்சு எக்ஸாம் எழுதனும் சரியா ” என்று அறிவுரை சொல்ல…
” ம்ம்” என்ற வார்த்தைகள் மட்டுமே அவள் வாயிலிருந்து வர…
அதை கேட்டு நகைத்தவன் “இப்போ எதுக்கு உங்க மூஞ்ச தொங்க போட்டு வச்சிருக்கீங்க ” என்று கேட்க..
“நீ தான் வரலையே அதான் ” என்றாள்…
“நான் நாளைக்கு வந்துடுவேன் சரியா . இப்போ போய் நிம்மதியா சாப்ட்டு தூங்கு ” என்று சொல்லி ஃபோனை அணைத்தான்.
அவளும் மொபைலை மாதவியிடம் கொடுத்து விட்டு அக்னியுடன் சாப்பிட அமர்ந்தாள்..
பின்னர் சிறிது நேரம் படித்ததை ரிவைஸ் செய்து விட்டு உறங்கினாள்.
அடுத்தநாள் காலை விடிய சீக்கிரமாக எழுந்தவள் பரிசைக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தவள் பள்ளிக்கு சென்றாள்..
பள்ளிக்கு வந்தவளுக்கு அன்று இறுதியாக வந்த நாள் ஞாபகத்தில் வரவே அவள் கண்ணில் கண்ணீர் சுரந்தது..
அவள் கண்ணீருடன் அன்று பள்ளியை விட்டு சென்ற நினைவு அவள் மனதில் படங்களாக ஓட அதை கலைக்கும் விதமாக அவளது தோளில் யாரோ கை வைக்க
யாரோ ஏதோ என்று பயந்து போய் திரும்பியவள் எதிரே நின்ற அனலனை கண்டு நிம்மதியான மூச்சுற்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள்…
அவளின் நிலமை அறிந்தவன் தானே அவன். அதனால் தானே நேற்று இரவே அவளிடம் பேசி முடித்தபின் மனம் ஒப்பாமல் ஊருக்கு கிளம்பி வந்தது…
” இங்க பாரு இத நீ ஃபேஸ் பண்ணி தான் ஆகனும் இப்படி பயந்து ஓட கூடாது சரியா ” என்று அவள் முடியை கோதியவாறே அவன் சொல்ல..
” கடைசியா இந்த ஸ்கூல்ல விட்டு வரும்போது எல்லாரும் என்ன ஏதோ ஒரு காட்சி பொருளா பார்த்தது எனக்கு இப்பவும் அது கண்ணு முன்னாடி வருது அனல் ” என்று விசும்ப…
அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் “இங்க பாரு இதழி உனக்கு நான் இருக்கேன் நீ எதுக்காகவும் பயப்பட கூடாது சரியா. இப்போ இத பத்தி யோசிக்கிற நேரம் இல்ல சோ நீ படிச்சத நினைவு படுத்தி பாரு ” என்று சொல்ல அவள் தலையை ஆட்டி வைத்தாள்.
அதன் பின் பரிச்சைக்கு நேரமாக அவளை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் அனலன்…
தேர்வு முடிந்தவுடன் அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தனர்..
செழியனும் பத்தாவது தான் என்பதால் இருவரும் சேர்ந்து படித்தனர். அனலன் அவ்வப்போது வந்து வந்து பார்த்துக் கொண்டு அவனது செமஸ்டர் பரிச்சையில் கவனத்தை செலுத்தினான்.
இது போலவே எல்லா பரிசைக்கும் நடந்து எப்படியோ செழியனும் இதழியனியும் அவர்களது தேர்வுகளை நன்முறையில் எழுதினார்கள்…
அடுத்து அவர்களது ரிசல்டிற்காக காத்திருக்க தொடங்கினர்….
~சுவாசிக்கும்…