மனம்கவர்ந்தவள்5
மருத்துவமனையில் அவர்களுக்கென்று ஒதுக்கப் பட்ட அறையில் சாந்தி அழுது கொண்டிருந்தார்.
மா அழாதீங்க கண்டிப்பா பாட்டிக்கு சரியாகிவிடும்.
இல்லடி அம்மா ஒரு நாள் கூட உடம்பு சரியில்லைன்னு படுத்துதது கிடையாது.அவங்க இப்படி இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு.
நாம கொஞ்சம் சோர்வா இருந்தா கூட நம்மல கவனிச்சு பார்ப்பாங்க.ஆனா நாம அவங்கள கவனிக்காம விட்டுட்டோம்னு தோணுது.
எனக்கும் பாட்டி இப்படி இருக்கிறது கஷ்டமா இருக்குமா. நாம இன்னும் கவனமா அவங்கள பார்த்து இருக்கணும் என்று கூறி அவளும் அழ ஆரம்பித்தாள்.
சரிடா இனி பேசி ஒன்னும் ஆக போறது இல்ல நீ அழாதடா சீக்கிரம் அவங்களுக்கு சரியாயிடும்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது சுந்தரம் உள்ளே வந்தார்.
ஆமாண்டா தர்ஷினி அம்மா நாளைக்கு கண்டிப்பா கண்ணு முழிச்சுடுவாங்க.
“ஆபரேஷன் பண்ணா சரியாகிடும் டாக்டர் சொன்னாங்களே” நீ கவலை படாதே.
“நீங்க பேசாதீங்க மாமா” நீங்க சொல்றத நான் நம்ப மாட்டேன் என்றாள் கோபமாக.
ஏய், என்னடி மாமா கிட்ட இப்படி பேசுற என்று அதட்டினார்.
விடு சாந்தி ஏதோ மன கஷ்டத்துல பேசுது. தர்ஷினி கண்டிப்பா நாளைக்கு அம்மா நம்ம கிட்ட பேசுவாங்க.எனக்கு நம்பிக்கை இருக்கு.
இல்ல மாமாவிஷ்வா மாமா விஷயத்துலயும் இப்படி தான் என்கிட்ட சொன்னீங்க.
நீதான் என் மருமக அப்படினு. .
நானும் சின்ன வயசிலிருந்து அவங்கள தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் நினைச்சிட்டு இருந்தேன். நீங்க எல்லாரும் அப்படித்தான் சொல்லி வளர்த்தீர்கள்.
ஆனா அவரு திடீர்னு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டாரு.
என் நிலைமையை யாராவது யோசித்துப் பார்த்தீர்களா? என்றால் அழுகையோடு.
“நான் உனக்காக தாண்டா யோசிச்சேன்”. அதான் அவன்கிட்ட அதை பத்தி மேலும் பேசல.
புரியுது மாமா நீங்க என் மேல உள்ள பாசத்துல தான் விஷ்வா மேல கோவபடீங்க.
ஆன நீங்க விஷ்வா மேல ரொம்ப கோபமா இருந்ததலா தான் பாட்டியும் அவங்கள பத்தி பேசல.
ஆன பாட்டி விஷ்வா பத்தி தான் அதிகம் கவலை பட்டாங்க.
நீங்க யாரும் அதுக்கு அப்புறம் அவரை பத்தி யோசிக்கவே இல்லை.
அவர் மனைவி யாரு?
உண்மையா அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சானு.
எனக்கு அவங்கள கல்யாணம் பண்ண முடியலன்னு கஷ்டமா தான் இருக்கு.
ஆனா அவர பத்தி யோசிக்கணும் இல்ல.
அவராவது அவருக்கு பிடித்தவங்களோட சந்தோசமா இருக்கணும்.அவரைப் பற்றி நீங்க யாருமே கவலைப்படவே இல்லை.
இதை ஏன் இப்ப சொல்றேன்னா எனக்கு பாட்டி எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு விஷ்வா மாமாவும் பிடிக்கும்.
“அவங்க சந்தோஷமா இருக்கணும்.
பாட்டியும் அதை தான் விரும்புவாங்க”.
உனக்கு நல்ல மனசு டா அவன் உன்ன கல்யாணம் பண்ணலனாலும் அவன் சந்தோசமா இருக்கணும் நினைக்கிற,கண்டிப்பா நீ நல்லா இருப்படா.
உன்னை போல் நல்ல பொண்ணு மருமகளாக வர நாங்க கொடுத்து வைக்கல.
உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டோம் இல்லடா?
“எங்கள மன்னிச்சிடுமா” என்றார் குற்ற உணர்வோடு.
என்ன மாமா மன்னிப்புனு பெரிய வார்த்தை எல்லாம் பேசிக் கொண்டு.அதும் என்கிட்ட.
நீங்க என்ன பண்ண முடியும் இதுல.இனிமே இது மாதிரி என்கிட்ட பேசாதீங்க.
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
அம்மா நாளைக்கு காலையில சீக்கிரம் கோவிலுக்குப் போகணும்.பாட்டி பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டு வரலாம்.பாட்டிசீக்கிரம் குணமாகனும்.
விஷ்வா மாமா தான் எனக்கு இல்லனு ஆகிடுச்சு ஆனா எனக்கு பாட்டி கண்டிப்பா வேணும் என்றாள் சோகமாக.
பாட்டி கூட போன வாரம் விஷ்வா மாமா பத்தி தான் பேசிட்டு இருந்தாங்க.
அவங்க மனைவியை கூட்டிட்டு வர சொல்லணும் சொல்லிட்டு இருந்தாங்க.
இந்த குடும்பத்தை பொறுத்தவரை இது தான் தர்ஷினி. எல்லாரும் மேலும் பாசம் வைக்கும் நல்லவள்.
ஆனால் அவளைப் பற்றி ஓரளவு உண்மை விஷ்வா மற்றும் சாய்க்கு தெரியும்.
ஆமா நீ இப்படியே நல்லவளா இரு. இவங்க எல்லாம் உன்னை ஏமாற்றி விட்டு போயிட்டே இருப்பாங்க.
அண்ணா “எனக்கு தெரியாது என் பொண்ணு உங்க வீட்டு மருமகளாகணும்”
நீங்க என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ?.
அதான் சாய் இருக்கான்ல.
அம்மா என்ன பேசுறீங்க!
இப்போ இந்த பேச்சு தேவையா.
இல்லடி இத்தனை வருஷம் நீ இந்த வீட்டு மருமகள்னு சொல்லி வளர்த்துட்டு இப்போ அப்படி இல்லனு சொன்னா நாம என்ன பண்றது.
ஊரு முழுக்க நீ இந்த வீட்டுக்கு தன் மருமகளா ஆக போறேனு சொல்லி வச்சுட்டோம்.
என்ன சாந்தி இதுலாம் இப்போ பேசுற விஷயமா?
நாங்க தர்ஷிய அப்படியே விட்ருவோமா?
என்ன பண்ணுவீங்க? ஒன்னும் பண்ண முடியாது.
“உங்களால என் பொண்ணு நிலைமை என்ன ஆச்சு” இனிமே இவள யாரு கல்யாணம் பண்ணுவா? என்றார் அழுகையாக.
சாந்தி நீ கவலைப்படாத தர்ஷிக்கு நல்ல வாழ்கை அமையும்.
அம்மா சும்மா மாமாவ திட்டாத. அவங்க என்ன பண்ண முடியும்.
நீங்க என்ன பத்தி கவலைப்படாதீங்க.என்ன பத்தி அப்புறம் பார்த்துக்கலாம்.
இப்போ பாட்டியை சந்தோஷமா வச்சுக்கணும்.கண்டிப்பா அவங்க விஷ்வா மாமா பத்தி தான் கேப்பாங்க.
இந்த சந்தர்ப்பத்தை விட்டால் விஷ்வா மாமாவை சமாளிக்க முடியாது.
இப்போ பாட்டியோட உடல் நிலையை காரணம் காட்டி அவர் மனைவியை கூட்டிட்டு வந்தே ஆகணும் நாம் சொல்லலாம்.
ஆமா அண்ணா அவள் கூறுவதும் சரி தானே.இவ தலையெழுத்து தான் இப்படி ஆகிடுச்சு.
அவனாவது சந்தோசமா இருக்கட்டும்.எனக்கு இவ எப்படியோ அப்படித்தான் விஸ்வாவும்.
விஷ்வா கல்யாணம் பண்ணிக்கிட்டேன் சொன்னதும் கோபத்துல நாம யாரும் அவன்கிட்ட என்ன எதுன்னு விசாரிக்கவே இல்லை.
அவன் மனைவியை சேர்த்துக்க முடியாதுனு சொல்லிட்டோம். .
அவனும் வேற ஏதும் கேட்க கூடாதுன்னு சொல்லிட்டான்.
எவ்வளவு நாள் இப்படியே இருக்கிறது.அவனும் குடும்பம் குழந்தையின் வாழனும் இல்லையா என்றார் அண்ணன் மகன் மேல் உள்ள பாசத்தில்.
சீக்கிரம் அவன் கிட்ட விசாரிச்சு அவன் மனைவி யாரு என்னன்னு கேட்டு கூட்டிட்டு வர சொல்லணும்.
அம்மா கண்ணு முழிச்சதும் இதை பேசணும்.அம்மா சொன்னா தான் கண்டிப்பா கூட்டிட்டு வருவான்.நம்ம சொன்னால் கேட்க மாட்டான் பிடிவாதக்காரன்.
சரி நான் அவன் கிட்ட இதைப் பத்தி பேசுறன்.நாம தர்ஷினிக்கு ஒரு கல்யாணத்த பன்னிட்டு அவன்ட பேசலானு இருந்தேன் பாக்கலாம்.
என்னது என்ன கல்யாணம் பண்ணி அனுப்ப பாக்குறீங்களா. கண்டிப்பா அப்படி ஒன்னும் நடக்காது.
நான் தான் இந்த வீட்டு மருமகள். இந்த வீட்ல தான் இருப்பேன்.
ஆன எப்படியோ இவங்கள விஷ்வா பத்தி யோசிக்க வச்சாச்சு.
விஷ்வா இனிமே தப்பிக்க முடியாது.
எவ்வளவு நாள் எல்லாத்தையும் ஏமாத்திட்டு இருப்ப என்று மனதில் சந்தோச பட்டாள்.
அடுத்த நாள் காலை வடிவழகி பாட்டி கண் விழித்து விட்டார் என்ற செய்தி கேட்டு குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில் இருந்தனர்.
அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததால் ஒவ்வொருவராகச் சென்று பார்த்து வந்தனர்.
இதற்கிடையில் ஜானகி மல்லிகாவிடம் நேற்று தர்ஷினி மற்றும் அவள் தந்தையும் பேசியதை கூறிவிட்டார்.
அவராலும் அதை நம்ப முடியவில்லை.சாந்தியின் கணவர் ஓரளவு பணத்தாசை பிடித்தவர் என்று அவர் அறிந்தே இருந்தார்.
ஆனாலும்இவ்வளவு மோசமாக இருப்பார்கள் என்று நினைத்தே பார்க்கவில்லை.
இதில் நாம் என்ன செய்ய முடியும் அக்கா. நாம சொல்றத இந்த வீட்ல யாரும் நம்ப மாட்டங்க.
என்னதான் அத்தை சொன்னாலும் விஷ்வா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டான்.
நீங்க கவலை படாதீங்க அக்கா என்று ஆறுதல் கூறினார்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த தர்ஷினி அத்தம்மா கவலைப்படாதீங்க கண்டிப்பா பாட்டிக்கு சரியாயிடும்.
இந்தாங்க கோவில் போயிட்டு வந்தேன் திருநீர் எடுத்துக்கோங்க.
அவள் செயல்களை பார்த்த இருவரும் குழம்பிப் போயினர்.
இவளா பணத்தாசை பிடித்தவள் என்று யோசித்தனர்.
அவள் பேசும் போது ஜானகி அவளது முக பாவனைகளை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
நேற்று அவள் தந்தையுடன் பேசியபோது இருந்த பேராசையும் இப்போது இருக்கும் சாந்தமும் எந்தளவிற்கு அவள் நடிக்கிறாள் என்பதை காட்டியது.
நேற்று அவள் பேசும் போது அவள் முக பாவனைகளை பார்க்கவில்லை என்றால் நானும் இவளை தான் நம்பி இருப்பேன் என்று நினைத்தார்.
என்ன அத்தம்மா ரெண்டு பேரும் என்ன அப்படி பார்க்குறீங்க.இன்னிக்குத்தான் பாக்குற மாதிரி.
இல்லடா உன்ன மாதிரி நல்ல பொண்ண விஷ்வா மிஸ் பண்ணிட்டானேனு கஷ்டமா இருக்கு.
பரவால்ல அத்தம்மா, யார் யாருக்கு என்னென்ன வேணும்னு கடவுள் முடிவு பண்ணுவார்.
இன்னும் எதுவும் முடிவாக இல்லை என்றாள் திமிராக.
பின்பு பாட்டியை பார்க்க சென்றாள்.
அவள் அழுகையுடன் அவரை நெருங்கிய போது என்னடா பாட்டி நீ கேட்டத செய்யாம போயிருவேனு பயந்துட்டியா.
போங்க பாட்டி அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க இல்லாம ஒரு நாள் கூட இருக்க முடியல.
மத்ததெல்லாம் அப்புறம் தான். நீங்க எனக்கு ரொம்ப முக்கியம்.
“சரி டா கண்டிப்பா எல்லாத்தையும் சரி பண்ணலாம்”.
நீ அழாத போய் ரெஸ்ட் எடு. இரவில் தூங்காம அழுதுட்டே இருந்தேன்னு அம்மா சொன்ன.
அப்போதும் அவள் அழுது கொண்டே இருந்தாள்.
உன் பாட்டி கண்டிப்பா சரியாகி வந்துடுவேன். உனக்கு வேண்டியதை செய்ய. இப்போ சிரிச்சுட்டே இருப்பாளம் என் செல்ல பேத்தி.
சரி பாட்டி நீங்க ரெஸ்ட் எடுங்க. மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.
எனக்கு நீங்க தான் முதல.உங்க ஹெல்த் ரொம்ப முக்கியம்.நா வெளில இருக்கேன்.
அவள் வெளியில் வந்து தன் தந்தையிடம் யாரும் அறியாமல் வெற்றி குறி காண்பித்தாள்.
அனைவரையும் பார்த்த பாட்டி இறுதியாய் தன் கணவர் செல்லதுரையிடம் தன் பேரன் விஷ்வாவை உடனடியாக வரவழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது அங்கு வந்த மருத்துவர் இன்னும் இரண்டு நாளில் ஆபரேஷன் வைத்து கொள்ளலாம் என்று கூறினார்.
“இல்லை சார் என் பேரன் வந்த பின் எதும் முடிவு பண்ணலாம்” என்றார் பாட்டி.
அதெல்லாம் இன்றே வந்துடுவேன். நீங்க ஆபரேஷன்கு ரெடி பண்ணுங்க டாக்டர் என்றார் செல்லத்துரை.
அதன்பின் பாட்டியை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு அனைவரும் அறையில் இருந்தனர்.
அப்போது தாத்தா சுந்தரம் விஷ்வா எப்போ வரான்? சீக்கரம் வர சொல்லு.
உன் அம்மா பாக்கணும் சொன்னால்.
அவன் வந்த தான் ஆபரேஷன்கு சரி சொல்வாளாம்.
அவர் அவ்வாறு கூறிய போது சாய் தன் தாயை ஓர் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தான்.
தர்ஷினி தன் தந்தையை புன்னகையடன் பார்த்தாள்.
நா பேசிட்டேன் தாத்தா அண்ணா இன்னக்கி இங்க வந்துடுவாங்க.