மண மேடை.. அறைவட்ட வடிவம் முழுவதும் தங்க நிற திரைசீலைகள்.. அதன் முன் நான்கு துண்களாக கண்ணாடி பாசிமணிகள்.. அதன்மேல் வட்டவடிவம் முழுவதும் வெள்ளை ரோஜாகள் கொண்டும்.. அதை சுற்றிலும் கண்ணாடி பாசிகள் தொங்கியது. வட்டத்தின் நடுவே தங்க நிற இருக்கை இருக்க.. அதன்பின்னால் வெள்ளை செவ்வக வடிவ சிறிய தூண்களிலும் வெள்ளைரோஜாகளை கொண்டு அலங்கரித்து.. மேடை தங்கம், மஞ்சள் நிற விளங்குகளின் மூலம் கண்ணாடி மேடை போல் ஜொலித்தது. கூடவே ரோஜாவின் மணம் மண்டபம் முழுவதும் வீசி.. சற்றுமுன் இருந்த வளைகாப்பு மேடை மட்டும் அல்லாது.. சூழ்நிலையே முற்றிலும் மாறி.. மணமேடையை ஒத்த.. நிச்சிய மேடையானது காண்பவர்களை ரசிக்க வைத்தது.
தங்கநிற இருக்கையின் முன் மஞ்சள் பிள்ளையார், தேங்காய்பழம், வெற்றிலை பாக்கு, நகைகள், உடைகள், பூக்கள், பழங்கள், இனிப்புகள், பெண்ணிற்கான சீர்வரிசைப் பரிசுப் பொருட்கள், இருவருக்கான மாலை என பல சீர்வரிசை தட்டுகள் வைக்கப்பட்டு.. அதனை சுற்றிலும் இருகுடுப்பத்தின் முக்கிய உறுப்பினர்கள், பொதுவான சிலர் அமர்ந்திருந்தனர்.
வேந்தனும், எழிலரசியும் சேர்ந்து அழைக்கப்பட்டு.. அவர்களுக்கு உரிய நிச்சிய உடையை இருவரின் பெற்றோர்கள் தங்கள் வருங்கால மருமகள், மருமகனிற்கு கொடுக்க.. அதனை வாங்கிச் சென்றுவர்கள்.. அடுத்த சிலநிமிடங்களில்
வேந்தன்.. இன்பா, கமலேஷ் உடன்.. வினோதினி, சுரபி, யோகாவுடன் எழிலரசியும் ஒன்றாக வெளிவந்தனர். இருவரும் தன்னவனையும், தன்னவளையும் பார்த்து மகிழ்ந்தனர்.
‘ எழிலரசி ஆலிவ்பச்சைநிற சேலை.. அதில் வெள்ளி சரிகையினால்.. இலைகொடியும் அதில் பூக்களும் உடல்முழுவதும் பரவியிருந்து. தங்கநிற பாடரில் மயில்கள் என.. சேலைமுழுவதும் பிரத்தேகமாக வெள்ளி சரிகையினால் நெய்யப்பட்ட சேலை. அதற்கு அதில் மயில்கள், பூக்கள் என 3d நூல் வேலைபாடு செய்த வைலட் நிற பிளெளஸ். ‘
‘ ஆன்டிக்டிசைன் நகைகளாக லட்சுமி உருவம், காசு, மாங்காய் வடிவம் என தங்கம், வைர , மகரதகற்களினால் செய்த தோடு, நெக்லஸ், ஆரமும்.. வெள்ளியினால் ஆன தங்கமூலம் பூசப்பட்டு.. லட்சுமி முழுஉருவத்தினாலான ஒட்டியானம் மற்றும் நெற்றியில் லட்சுமி உருவ சுட்டி அணிந்துயிருந்தாள். ‘
‘ பிரத்தேக அழகுகலை நிபுணர்களால் மிக நேர்த்தியான முகம், தலையலங்கரம் செய்யப்பட்டு என தன்னவன் வேந்தன்!.. தானே சென்று தன் அரசிக்கு அனைத்தையும் தேர்ந்தெடுத்தை அணிந்து.. அழகு பதுமையாக தன்னவனின் அருகில் வந்தாள். ‘
‘ அவளவன் வேந்தன் வெள்ளி சரிகையினால் வைலட்நிற சட்டையும்.. வெள்ளி சரிகை பாடர்வேஷ்டியும், மெல்லிய நகைகள் அணிந்து.. தன் முயல்குட்டியின் உரிமையனவன் என முகம் மின்ன தன் அரசியை பார்த்தவாறு வந்தான். ‘
இருவரும் தங்கள் உடை முழுவதும் வெள்ளி சரிகையினால் உடைகள் அணிந்து ஜொலித்தனர். இருவரையும் பார்த்து வீட்டில் உள்ளவர்கள் உட்பட.. அனைவரும் வியக்கும் அளவிற்கு இருந்தனர்.
இருவருக்கும் இன்பா, யோகாலட்சுமி மல்லிகைமாலையை அணிவித்தனர். இருவரும் ஒருமுறை தங்களை பார்வையால் தழுவி.. முயல்குட்டி , தனுமாமா ‘ சூப்பரா!. இருக்கிங்க ‘ என வாழ்த்தியும் வாங்கிக் கொண்டனர்.
வேந்தன், எழிலரசியை நடுவில் அமரவைத்து.. இருவரின் பெற்றோர்களும்.. பன்னீர் தெளித்து, சந்தனம், குங்குமம் வைத்துவிட்டு தேங்காய், வெற்றிலைபாக்கு, பூ மற்றும். தங்கள் மகள், மகன் இருவரும் திருமணம் செய்யக் கொள்ள அனைவர் முன்னும் உறுதி அளிக்கிறோம் என்ற முகூர்த்தபட்டேலை அடங்கிய தட்டை.. மாற்றிக்கொண்டனர்.
கல்யாணம் இன்னும் 3மாதங்கள் கழித்துவரும் அழகான சுபமுகர்த்த தினத்தில் என அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டன.
இருவரும் ஒருவரை ஓருவர் புன்னகையுடன் கைக்கொடுத்த பின் எழுந்து நிற்க.. வெள்ளித்தட்டில் ரோஜாமலர் இதழ்களின் மேல் வைரகற்கள் பதித்த ஜோடி மோதிரம் இருந்த தட்டை இன்பா பிடித்துயிருக்க..
வேந்தன் தன் அரசியின் வலது கையை பிடித்தவன்.. அவனிற்கு எப்போதும் தோன்றும் ..அவனின் பதின்பருவத்தில்.. தன் முயல்குட்டியின் பிஞ்சு விரல்களை பிடித்த அதே உணர்வுடன்.. இன்றும் விரல்களை மென்மையாக பற்றி.. அவனை ஈர்க்கும், மயக்கும், எப்போது தன்னை நிலைகுலைய செய்யும் தன்னவளின் கண்களை பார்த்தவாறே..
தன்னவளிற்கு மட்டும் கேட்கும் படியான குரலில் ” ஐ லவ் யூ முயல்குட்டி!. ” அழகாக மொழிந்து!.. ஏற்கனவே தான் 12வருடத்திற்கு முன் அணிவித்த மோதிரத்தை மென்மையாக தடவிவிட்டு.. தன் அரசியான எழிலரசிக்கு நிச்சிய மோதிரத்தை அணிவித்தான். வேந்தனின் இச்செயலை யோகலட்சுமி.. சந்தோகத்துடன் கூடிய ஒருவித மகிழ்ச்சியில் அவர்களை பார்த்துக் கொண்டுயிருந்தார்.
அரசியும்.. தன்னவனின் கைகளை பலமுறை பற்றி இருந்தாலும்.. இன்று ஏனோ அவளிற்கு தன் தனுவின் கையை பிடித்தவுடன் மிகவும் புதிதாக உணர்கிறாள். அதனால் பல இனிமையான உணர்விற்கு ஆளானவள் மென்மையாக தன்னவன் கைபிடித்து.. அவனின் கண்களை பார்க்க நினைத்தாள்.. ஆனால் அவள் கண்களுக்கு அவள் உயரமோ!.. தன்னவனின் செவ்விதழ்களை தான் முதலில் காண்பித்தது.
அவள் வதனம் இன்னும் சிவப்பேரி கடினப்பட்டு இடமாற்றம் செய்யப்போகும் போது.. தன்னவனின் அடங்கப்பட்ட புன்னகை.. அவன் உதட்டின் ஒரம் ஒலித்த மொழி.. அவளை ‘ கள்ளி முயல்குட்டி!.. ‘ என தெரிவித்ததை கேட்டுக்கொண்டும்.. அவன் கண்கள் காட்டிய அளவிளா காதலை பார்த்தப்படியே ” லவ் யூ தனுமாமா “ மொழிந்து.. தன்னவனிற்கு மோதிரத்தை போட்டுவிட்டாள்.
ஒருநொடி இருவரின் கண்களும் சந்தித்துக்கொள்ள.. அங்கு நான்கு கண்களும் கலந்து.. சிறிதேசிறிது கலங்கியும் இருந்தனர். அவர்கள் மிகவும் எதிர்பார்க்கும் திருமணத்தின் நடுபகுதியை கடந்துவிட்டனர் அல்லாவா. நெருங்கிய உறவினர்களுக்கும் மட்டும் இதுநாள் வரை தெரிந்தது.. இனி அனைவருக்கும்.. இன்னும் உரிமையுடன் என்னவன், என்னவள் என்று இன்று முதல் உலகிற்கு உரக்க கத்தி கூறலாம் என்பதினாலேயே.
தங்களை உடனே தன் உரிமையுள்ளவர்களின் இறுக்கிய அணைப்பின் பிடியில் இருக்கவேண்டும் என்ற ஏங்கிய உணர்வை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு.. புன்னகையுடன் அந்த உணர்வை தங்களின் கைகளின் பிடியில் காண்பித்து இருக்கையில் அமர்ந்தார்கள்.
இளையவர்களின் கிண்டல், சிரிப்புடனே.. முதலில் இருவரும் தங்களுக்குள் சந்தனம் வைத்துக் கொண்டனர். கன்னத்தை பிடித்து இழுக்கவும் தவறவில்லை அவனின் அரசி. பின் உறவினர்கள், பெரியவர்கள், என அனைவரும் தம்பதிகளாக வந்து சந்தனம், குங்குமம் வைத்துவிட்டு.. இருவருக்கும் பூக்கள் தூவினர். உறுதி அன்று அரசி ஆசைப்பட்ட படி வேந்தன்.. திலகனின் அம்மாவை அழைத்து ஆசி பெறவும் தவறவில்லை. நலங்குகள் வைக்கப்பட்டு பின் செல்பவர்களுக்கு வெற்றிலைபாக்கு, பூ, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.
எழிலரசிக்கு சித்ரா அழகிய வைர நெக்லஸ், வேந்தனுக்கு இன்பா பிளாட்டினம் செயின் போட்டுவிட..
வேந்தன் ‘ என்ன இது?. ‘ என்பது போல பார்க்க.. ” டேய் இது எங்க எல்லோரோட பரிசுடா.. இதெல்லாம் நீ தடுக்கக் கூடாது. ” சிறு புன்னகையை வெளிப்படுத்தி சென்றார்.
அவர்களையே பார்த்திருந்தவனை.. அரசி கையை சுரண்டி அழைத்து.. ” இதை பண்ணுவதில் அவங்களுக்கு சந்தோஷம் கொடுக்கும் தனு. இதை நாம்ம முழு மனசோட ஏத்துக்கனும். சரி உங்க பரிசு எங்க?. ” அவன் மனதை மாற்ற கேட்டு அவள் மாட்டிக்கொண்டாள்.
அவள் நினைத்தை போல அவர்களை மறந்து.. அவளை தலைமுதல் கால்வரை பார்த்தவன்.. ” ஓய் முயல்குட்டி.. நீ போட்டுயிருப்பது எல்லாமே என் பரிசு தானே. இன்னும் என்ன வேண்டுமாம்?.. ”
புன்னகையுடன் ” ம்.. ஒன்னு மிஸ்ஸாகுது.. அத நீங்க தான் வைத்துயிருக்கிங்க. அது வேண்டும். ” கையை நீட்டி கேட்டாள்.
கள்ளப்புன்னகையுடன்.. ” அதை நான் என் கையால் தான் போட்டுவிடனுமே. “
நினைத்து பார்த்தவள்.. ” ம்ஹூம்.. அதெல்லாம் முடியாது. நீங்க கையிலே கொடுக்க. இல்லையைனா நீங்களே வைச்சுக்கோங்க. ” வெக்கத்துடன் கூற..
அவள் வெக்கத்தை ரசிச்சவன்.. “ முடியாவே முடியாது முயல்குட்டி.. ” புன்னகையுடன் கூறியவன் காதின் அருகே.. ” ஏற்கனவே இரண்டு பார்த்துட்டேன். மூணாவதா அங்க ஏதாவது??. இருக்கானு பார்க்கனும் முயல்குட்டி. அதனால நான் தான் போட்டுவிடனும். ” அடக்கப்பட்ட புன்னகையுடன் கூற..
என்ன சொல்லுறான்?.. இரண்டு பார்த்தேன்.. மூணாவது?. ‘ யோசனையுடன் பார்க்க.. அவள் பார்வையை உணர்ந்து.. அவனின் மாலை சரி செய்து கழுத்தை கைக்குட்டையால் துடைத்து காண்பித்தான். அவளின் கை தன்னிச்சையாக கழுத்தை நோக்கிச் சொல்ல.. பின் உணர்ந்து.. அதிர்ந்து.. தன்னவனை பார்க்க முடியாமல் திணறினாள்.
” அங்க ஏதாவது இருக்கா முயல்குட்டி?.. ” சட்டென்று காதில் குனிந்து கேட்க..
அவளின் அந்நிலையில்.. அவனின் முச்சுக்காற்று பட்டு.. அவளவனின் காதுமடல் அவள் மாலையில் இருந்த தாமரையின் ஒத்த நிறத்திற்கு மாறியதை பார்த்தவன்.. ஒரு நிமிடம் ரசித்து புன்னகையுடன் திருப்பிக் கொண்டான். ‘ வேந்தா இதுக்கு மேல முயல்குட்டிய சீண்டின சேதாரம் உனக்கு தான்டா.. ‘ என்று நல்ல பையனாக நினைத்து திரும்பியவனை..
புன்னகையுடன்.. ” தனு மாமா எனக்கு நீங்க இப்ப என் கையில் கொடுக்கவில்லை என்றால்.. எனக்கு இப்பவே போட்டுவிடனும். ”
அவனின் பேச்சை கேட்டவள்.. தனியாக தான் அவனிடம் மாட்டினாள் அவ்வளவு தான். தன் கையில் கொடுத்து விடுவான் என நம்பி அவனிடம் கேட்க..
தன் முயல்குட்டி கூறியதை கேட்டவனோ.. ‘ வாவ் ‘ என்று நினைத்தான். அவனும் அவளிடம் தனியாக மாட்ட விரும்பவில்லை.. சுற்றிலும் பார்த்தான்.. பெரியவர்கள் சற்று தொலைவிலும், அவர்களின் சற்று அருகில் இருவரின் நண்பர்கள் மட்டுமே இருக்க..
” ம்.. சரி முயல்குட்டி. இப்பவே நான் உனக்கு போட்டு விடுகிறேன். ” என அவளுக்கு யோசிக்கும் அவகாசம் கொடுக்காமல்.. அதற்கான பதிலை கூறவிடாமல்.. தன்னவளை இருக்கையில் அமர வைத்தான்.
அவளின் பக்கவாட்டில் முட்டியிட்டு அமர்ந்தவன்.. அவளின் பஞ்சுபோன்ற பாதத்தை தன் தொடையில் வைத்து.. தன் வேஷ்டியின் பாக்கெட்டில் இருந்து.. மிதமான சலங்கை ஒலிக் கேட்கும் படியான.. பூவும் மயிலும் வடிவத்தில்இருக்க.. அதில் இருஅடுக்கு செயின் இருக்கும்படியான வெள்ளிக் கொலுசு. ‘ அதனை தன் முயல்குட்டியின் இருகால்களில் அணிவித்து.. ஏற்கனவே அணிந்திருந்ததை தன்னுடன் வைத்துக்கொண்டான்.
புன்னகையுடன் அவள் கண்களை பார்த்துக்கொண்டே எழுந்தவன்.. சிலையாக அமர்ந்துயிருந்த தன் அரசியின் நெற்றியில் மென்முத்தம் ஒற்றை வழங்கி.. அந்த சிலைக்கு உயிர்கொடுத்து..
மெல்லிய குரலில் ” முயல்குட்டி அங்க மச்சமே இல்லடி. ” கள்ளப் புன்னகையுடன் கூறி தன் அரசியை கைநீட்டி அழைத்தான்.
அவள் பாதத்தை எடுத்து கொலுசு அணிவித்து.. பின் பாதத்தை மென்மையாக வருடியவன்.. மற்றொரு காலில் அணிவித்தும் அதே செயலை செய்தான். முத்தம் கொடுத்தபோது.. அடுத்த அதிர்ச்சியில் இருந்து வெளிவராமல் தன் தனுமாமாவின் சற்றும் எதிர்ப்பார்க்காத செயலை பார்த்து, அனுபவித்து ரசித்துயிருந்தவள்.. அவனின் மச்சமே இல்லடி.. குறைபட்டுக் கொண்டபோது தான் தெளித்தால் அந்த பாவை.
தன்னவனின் காதலுடன் கொடுத்த பரிசையும்.. அது கொடுத்த விதத்தை நினைக்க.. இவன என வெக்கம், கூச்சம், ஆனந்தம், சிறு நடுக்கம் என இருந்தாலும்.. அவன் நீட்டிய கையை பிடிக்காமல் முறைப்புடன் எழுந்தவள்.. அவளின் மனம் அவனின் இச்செயலால்.. தன்னவனை கொஞ்ச நினைத்து.. அவனின் கன்னத்தை பிடிக்க.. அவளின் கை அதன் அருகில் சென்றுவிட்டது. ஆனால் அவளின் மன்னவனுக்கு.. தன்னவள் அடுத்து என்ன செய்வாள்?. என்று தெரியும் ஆகையால்.. அவனின் மெல்லிய சிரிப்புடன் கூடிய முறைப்பில் தான்.. தனக்கு முன்பும், சுற்றும் பார்த்தாள். பின் தனுவின் கைகளை பிடித்துக் கொண்டாள்.
” ஓய்.. எனக்கு மட்டும்தான் தெரியனும். இப்படி வெளிப்படையாக செய்ய முயல்குட்டிக்கு அனுமதி இல்ல. “ தன்னவன் கூறிவதை கேட்டவளோ.. ‘ பண்ணினா?.. ‘ என்பது போல அவனின் அரசி அவனை பார்க்க.
அவளின் முகத்தின் அருகில்.. ” தாமரைக் கன்னங்கள்.. தேன்மலர்க் கிண்ணங்கள் என் முயல்குட்டியோட கன்னம். நானும் இங்கயே… “
‘ நீ என் கன்னத்தை பிடித்தால்.. தான் அப்போது உன் தொடுகையால் ஏற்படும் உணர்வில்.. உன் கன்னத்தை தான் இவ்வாறு உணர்கிறேன்.. அதனால் அப்போது இருக்கும் மனநிலையில் உனக்கு இடம்பாராது முத்தம் கொடுக்கவும் தயங்கமாட்டேன்.. நல்லா யோசிச்சுக்கோ முயல்குட்டி!. ‘ என்பதை கூறி தன்னவளை மறைமுகமாக.. தன் கண்களை உடன் தோழன் ஆகி.. அவளை மிரட்ட..
அதனை புரிந்தளோ.. ‘ இவன் செஞ்சாலும் செய்வான் ‘ என்ற படப்படப்பில் அவளோ அழகாக விழி விரித்து தன்னவனை பார்க்க.. தன் அரசியின் பார்வையில் ஒருநொடி மயங்கியவன்.. ‘ தாங்காது வேந்தா!.. தாங்கவே தாங்காது.. ‘ புன்னகையுடன் நெற்றிமுட்டி தோள்வளையில் வைத்துக்கொண்டான்.
இவர்களின் இவ்வளவு நேர பேச்சுவார்த்தை, தன்னவளிற்கு பரிசை வழங்கியது, கொஞ்ச நினைத்தது.. எல்லாம் நிச்சியத்திற்கு வந்திருப்பவர்கள் வாழ்த்துக்கூறி முடித்தவுடன்.. தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டுயிருந்தபோது.. நடுவில் நடந்துக் கொண்டுயிருக்க.. இவர்களை புகைப்படம் எடுப்பவருக்கு.. அவர்களே அறியாமலே பலபல அற்புதமான இருவரின் உணர்வுகளை கொடுத்துக் கொண்டுயிருக்க.. புகைபடம் எடுப்பவரும்.. அவர்களை புன்னகையுடன் வாழ்த்தியபடியே.. விதவிதமாக புகைபடங்களை எடுத்துக் கொண்டுயிருந்தார்.
ஆனால் இவர்களை பார்த்தவர்களில்.. நண்பர்கள் வேந்தனின் அதிரடியில் இவனுக்கு இருந்தாலும் இவ்வளவு தைரியம் கூடாது. ஆனா எவ்வளவு காதல் எழிலரசியின் மீது என்று ஆனந்தம் கொண்டனர். திலகன், வினோத் அவர்களின் இணைகளான சத்யா, தீபிகாவை பார்த்தனர்.
மேடையில் சில நெருக்கமான புகைபடங்கள் எடுக்கும் போது அவர்கள் கூச்சப்படுவார்களோ என நினைத்து ( நல்லா நினைத்திங்க போங்க. அவங்களுக்கு கூச்சம்மா?.. ) சற்று தொலைவில் நெருங்கிய உறவினர்கள், சென்னையில் இருந்து வந்தவர்கள் மட்டும் மீதம் இருந்தார்கள். இவ்வளவுநேரம் தங்களை பற்றியும், தங்கள் வீடுகளில் நடந்த நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்.
கடுப்புடன் அமர்ந்து இவர்கள் இருவரையும் அவ்வப்போது பார்த்தும் பார்க்காதது போல பேசிக் கொண்டுயிருந்த வசுவும், நந்தினியும் அப்போது அவர்கள் அருகில் வந்தமர்ந்த.. சித்ராவிடம்.. ” அம்மா அங்க அண்ணாவ பாரேன்.. என்ன பண்ணுறாங்க?.. அண்ணாக்கு என்னாச்சு?.. ஏன் இப்படி நடந்துகிறாங்க?. ” சற்று அதிக குரலில் கேட்க..
வசுந்தரவின் கேள்வி அங்குயிருந்த அனைவருக்கும் கேட்டது. என்னவென்று அனைவரும் மேடையை பார்க்க.. அப்போதுதான் வேந்தன் தன் அரசிக்கு அவளை அமர வைத்து.. கீழ்முட்டியிட்டு அவள் காலில் கொலுசு அணிவதையும்.. அவனின் மிரட்டல்.. அதன் பின் நெற்றி முட்டி தோள்வளைவில் வைத்து.. பின் புகைபடங்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பிக்க வரையிலும் என 10நிமிடத்திற்கும் மேலாக.. படம் பார்ப்பது போல இன்முகத்துடன் பார்த்தபடி இருந்தனர்.
” யோகா அக்கா இருந்தாலும் இந்த அண்ணா அநியாத்திற்கு அண்ணிய தாங்குறாரு. நம்ம அண்ணாவா இதுனு?. ஒவ்வொரு தடவையும் யோசிக்க வைக்கிறார். ஆனாலும் அண்ணா பண்ணியது செம்ம கியூட்டா இருக்கு. எனக்கு மாமாவ தெரியும் என்றாலும்.. கல்யாணம் அன்றைக்கு கூட இந்த மாதிரி போட்டோ எடுப்பதற்கு கொஞ்சம் கூச்சமா இருந்தது. ஆனா இவங்கள பாருங்க.. விதவிதமா அவர் சொல்லாமலே நிறைய போஸ் கொடுக்குறாங்க. போட்டோஸ் எல்லாம் சூப்பரா வரும்பாருங்க. “
” இவர்களின் நடவடிக்கையை பார்த்தா.. இப்பதான் ஒருமாதம் முன்புதான் தெரியும் என்று.. யாரும் நம்பமாட்டாங்க. அண்ணாவ பார்க்க பார்க்க ஆசையா இருக்கு அக்கா. இவ்வளவு நாள் இந்த சிரிப்பை எங்கு வச்சுயிருந்தாரோ.. இப்பவே போய் திருஷ்டி போடனும். ” வேந்தனின் முதல் தங்கை வினோதினி தன் மனதில் இருப்பதை சந்தோஷடன் தன் அக்காவிடம் கூற..
யோகலட்சுமியும் அவர்களை பார்த்தபடியே கேட்க அவரோ.. ‘ சரிதான் வினோ அவங்க இப்ப ஒருமாதம் முன்பு பார்த்தவர்கள் இல்லதான். பல வருடங்கள் முன்பே மனதில் என்றும் நீங்காத, ஆழப்பதிந்த அறிமுகம் அவர்களுக்கு உள்ளது. ஆனால் ஏன் இத்தனை வருடங்கள் இந்த சிரிப்பை தனக்குள் மறைத்து.. உன் அண்ணா இருந்திருப்பான் தெரியலையே.. ‘ நினைத்தபடி புன்னகையை மட்டும் வினோவிடம் காண்பித்தார்.
அவர்களின் சற்று தள்ளியிருந்த வசுந்தரா.. ” அம்மா ஏன் ம்மா.. இந்த அண்ணா இப்படி நடந்துகிறாங்க?. இப்படி அவங்களுக்கு சேவகம் மாதிரி பண்ணினா நம்ம பாடு அவ்வளவு தான் . இப்பவே இது நம்ம அண்ணாவானு இருக்கு. இதுநாள் வரை எப்படி நம்மள பார்த்துப்பாங்க?. இனி அப்படி பார்த்துப்பாங்களானு எனக்கு சந்தேகம் வந்துருச்சு ம்மா. ” சற்று கண் கலங்கி சித்ராவை பார்த்தாள்..
” ஆனாலும் உங்க மருமக இப்பவே நல்லா உங்க மகனை கைகுள்ள போட்டு வைத்துயிருக்காங்க அத்த. நிச்சியத்திற்கே.. உங்க பையன் சேலை, நகைக்கு மட்டுமே பல லட்சம் செய்துயிருப்பார் போல.. இதில இன்னும் வீட்டல நிறைய டிரஸ், நகை என்று நிறைய வாங்கிட்டு வந்து இருக்காறாமே!.. வசு சொன்னா. ”
நந்தினி.. எழிலரசியின் மீதான தன் மனதில் உள்ள கோபத்தை வெளிப்படையாக முதலிலும்.. அவர்கள் தான் கூறியதை மறக்கும் படியான ஒரு புது விஷயத்தை அடுத்து கூற.. சித்ரா நந்தினியை மறந்து வேந்தன் இதுபற்றி எதுவும் கூறவில்லை என.. வசுவை.. அப்படியா?.. என்று அதிர்வுடன் பார்க்க..