அதிரூபன் அருகிலில்லாதது ஏமாற்றம் என்றாலும் உலகில் அனைத்தும் தன்வசமான நினைவில் பூரித்திருந்தாள் ஆதிரை. ‘பட்டு எப்போ எழுந்துப்பாங்கத்தை.?” என்றாள் கனகாவிடம்.
திருமணம் முடிந்து மூன்று நாட்களாய் யாரிடமும் சரிவர பேசியிராத ஆதிரை.. தற்போது இயல்பாய் பேசியதில் சந்தோசமடைந்த கனகா.. ‘எப்பவும் ஒரு மணிபோல எழுந்துப்பா.. இன்னைக்கு காலைல சீக்கிரம் எழுந்ததால இரண்டு மணிபோல ஆகிடும் ஆதி..” என்றார்.
பட்டு விசயத்தில் ரூபனின் பெருந்தன்மை எத்தனை பாராட்டிற்குரியதோ அத்தனையும் வீட்டினர் உதவியில்லையென்றால் சாத்தியமில்லை என ஆதிரைக்குப் புரிய.. அனைவரிடமும் இயல்பாய் பழகவேண்டும் என நினைத்தாள். ஆனால் என்ன பேசுவது எனப்புரியாமல் அமர்ந்திருந்தாள்.
‘என்னம்மா போரடிக்குதா.? எதாவது படம் பார்க்கிறியா.? அந்த டிராவில நிறைய கேசட் இருக்கும்.. எதுவேணுமோ போட்டு பாருடா..” என்றார் மாரியப்பன்.
‘நான் படம் நிறைய பார்க்க மாட்டேன் தாத்தா..” என்றவளுக்கு ரூபன் நடித்த காட்சிகளை பார்க்கும் ஆவல் வர.. ‘அவங்க நடிச்ச படம் இருக்கா தாத்தா..” என்றாள் தயங்கிய குரலில்.
மருமகளின் தயக்கம் உணர்ந்து.. ‘ஹா..ஹா.. நீ இப்படி கேக்கனும்னுதான்மா அப்பா படம் பார்க்க சொன்னார்.. அவருக்கு பேரன் பெருமை பேசினா போதும்.. பசி கூட எடுக்காது. இதுல நீயே கேட்டுட்டியா.? இனி உன்னால தப்பிக்க முடியாது..” என்றார் சிரிப்போடு.
சிறு வெக்கத்தோடு ஆதிரை முகம் மலர.. அதை கண்ட மாரியப்பனிற்கு புது உற்சாகம் வந்திருக்க.. அதிரூபன் நடித்த கேசட்டை எடுத்தது ஆர்வத்தோடு இணைத்தார்.
கணேசன்.. ‘ரூபன் படம் நடிக்க ஆரம்பிக்கும் முன்ன வரைக்கும்.. இதென்னடா கணேசா ஒரு எழவும் புரிய மாட்டிக்குது.. நியூஸ் போட்டு விடுடான்னு என்கிட்ட கெஞ்சுவார்.
ரூபனோட முதல் படம் வந்ததும் இரண்டொரு முறை கேட்டவர்தான்.. தன்னபோல போட ஆரம்பிச்சிட்டார் ஆதிம்மா.” என்றார் பெருமையாக.
‘இங்க பாரு ஆதிம்மா.. இப்ப குதிக்கிறது நம்ம ரூபன்தான்.. என் பேரன்.. உன் புருசன்.. எங்கயிருந்து எங்க குதிச்சிருக்கான் பாரு.. என் பேரன்.. உன் புருசன்..” என காட்சியில் வரும் ஒவ்வொரு ஷாட்டிற்கும் என் பேரன் உன் புருசன் என பெருமை பொங்க சொல்லிக்கொண்டிருந்தார் மாரியப்பன்.
ஆனால் ஆதிரைக்குத்தான் மனம் நிறையவில்லை. ‘எங்க தாத்தா ஒரு இடத்துல கூட இவங்க முகத்தை காணல..” என்றாள் ஏமாற்றமாக.
ஆதிரையின் முகமும் வாடிட.. அவளைத் தேற்ற.. ‘ரூபன் குரலை கேக்குறியாடாம்மா.?” என இன்னொரு படத்தை போட்டு காண்பித்து.. ‘இந்த படத்துல நாயகனுக்கு என் பேரன்தான் குரல் கொடுத்திருக்கான். உன்புருசன் குரல் எத்தனை அம்சமா இருக்குனு கேட்டு பாரு..” என
படத்தில் மற்றவர் சீன்களை ஓடவிட்டு.. ரூபன் பேசிய சீன்களை மட்டும் போட்டுக் காட்டிக்கொண்டிருந்தார் மாரியப்பன். திருமண நாளிலிருந்து பொலிவிழந்து காணப்பட்ட ஆதிரையின் முகம் தற்போது மலர்ந்திருந்ததை கண்டு நிம்மதி கொண்டனர் கணேசனும் கனகாவும்.
மாரியப்பனோடு ஒரு மணிநேரம் வரை படம் பார்த்திருந்தாள் ஆதிரை. பிறகு பட்டுக்கு பெயர் தேர்வு செய்ய சொன்னானே.. என்ன பெயர் வைக்கலாம்..? நியூமராலஜி எதாவது பார்ப்பாங்களோ என யோசித்து.. தாத்தாகிட்ட கேட்டு பார்ப்போம் என.. ‘தாத்தா.. பட்டுக்கு பேரு செலக்ட் செய்யலாமா.?” என்றாள்.
ஆமாம் என்பதாய் பெருமை கலந்த வெக்கத்தோடு தலைகுனிந்தவள்.. ‘எந்த எழுத்துல பேர் வச்சா பட்டு ராசிக்கு சரிவரும்.?” என்றாள் ஆர்வமாக.
‘எவ்ளோ நாளைக்கு பட்டுனே சொல்றது.? கோவில் குளம்னு எங்க போனாலும் குழந்தை பேர் கேக்குறாங்க.. பேர் வைக்கும் வரை ப்ரியதர்ஷினினு கூப்பிடலாம்னேன். ரூபன்தான் வேணாம் சொல்லிட்டான்.. அப்புறம் ஜாதகம் பார்த்ததுல பட்டு ராசிக்கு ம வரிசைல வைக்க சொன்னாங்க.. நீ உனக்கு பிடிச்ச பேரை செலக்ட் செய் ஆதிம்மா..” என்றார்.
மகன் கிளம்பியதில் ஆதிரையின் முகம் வாட்டப்பட்டதை பார்த்த கணேசனிற்கு அத்தனை சந்தோசம். இப்படி கட்டாய கல்யாணம் வேணாம்.. ஆதிரையிடம் வேறு விதமாய் எடுத்துரைத்து அனைவர் சம்மதத்தோடு விமரிசையாய் திருமணம் செய்யலாம் என கணேசன் சொன்னபோது.. ஆதிரைக்கு தன்னை பிடித்திருக்கிறது..
ஆனால் முறைப்படி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள்.. அவளைப் பொருத்தவரை இப்படி கல்யாணம்தான் செய்தாகனும்.. போகப் போக எல்லாம் சரியாகிடும் என ரூபன் நம்பிக்கையாய் சொன்னதை நினைத்து பெருமை கொண்டார்.
‘ரூபன் இருக்கும்போது அவன்கிட்டயே சொல்லியிருக்கலாமே ஆதிம்மா..” என்றார் வாஞ்சையாக.
அவனோடு மனம் சமன்பட்ட அடுத்த நொடி கிளம்பிவிட்டான் என ஏமாற்றமாய் நினைத்தவள்.. ‘அவங்களே அவசரமா கிளம்பறாங்க.. கிளம்பும்போது டென்சன் வேணாம்னு சொல்லலை மாமா.” என்றாள்.
‘டிராவல் செய்யும்போது பேசினா என்னடா.? அன் டைம்னா தயங்கலாம்.. இப்போ பகல்தான.? நான் பண்றேன்.. நீ பேசு..” என ரூபனிற்கு அழைப்பு விடுத்தவர் அவன் ஏற்றதும்.. ‘ஆதிம்மா பட்டுக்கு பேர் வைக்கிறது பத்தி ஆதிம்மா பேசனுமாம்.. கொடுக்கிறேன் பேசு ரூபா..” என கொடுத்தார்.
ரூபன் அமைதியாய் இருக்கவும்.. ‘ஹலோ.. ஏங்க..” என எப்படி அழைக்கவென ஆதிரை தடுமாற.. சிரித்தவன்.. ‘உன் மொபைல்ல வரேன்.. இப்போ பிஸியாயிருக்கேன்.. அப்புறம் பேசுறேன்னு சொல்லிட்டேன்னு மொபைலை அப்பாகிட்ட கொடுத்துட்டு ரூம்க்கு போ..” என இணைப்பை துண்டித்தான்.
மொபைலை கணேசனிடம் நீட்டிவயள்.. ‘என் மொபைல்ல வராங்களாம்.. ச்சு.. இல்ல இப்போ பிஸியா இருக்காராம்..” என ஆதிரை தடுமாறி முடிக்கும் முன்னே.. ‘சரிடாம்மா.. காலைல நேரமா எழுந்தது சோம்பலாயிருக்கும்.. போய் ரெஸ்ட் எடு..” என தன் மொபைலை வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்றார்.
ஆதிரை உள்ளே வந்து ஐந்து நிமிடம் கழித்து அழைப்பு வர ஏற்றவள்.. ‘ம்..” என்றாள் ஆர்வமாக.
‘என்ன ம்.?”
‘ஈவ்னிங் வரைக்குமாவது இருந்திருக்கலாமில்ல.? நாங்க பேர் சொன்னாலும் அவ ஏத்துக்க மாட்டா.” என்றாள் சிறு கோபமாக.
‘ஆசையா அன்பா சொல்லலைன்னாலும்.. இப்படி அதட்டி சொல்லியிருந்தா கூட ஈவ்னிங் வரை இருந்திருப்பேன்.. நீதான் நான் எப்படா போவேன்னு பார்த்திட்டிருந்த.. உனக்கு சிரமம் கொடுக்கவேணாம்னுதான் கிளம்பிட்டேன்..”
‘மாமா ப்ரியதர்ஷினின்னு வைக்க கேட்டாங்களாம்.. நீங்கதான் வேணாம்னுட்டிங்களாம்..” என குறைபட்டாள்.
‘பட்டு பெரியவளானதுக்கப்புறம் நம்ம அப்பாக்கு ப்ரியானு ஒரு அத்தை மகள் இருந்தா.. நாம பொறந்து பத்து நாளுக்கப்புறம் அவங்க இறந்துருக்காங்க.. ப்ரியதர்ஷினினு அவங்க பேரைதான் நமக்கு வச்சிருப்பாங்களோ.? ஒருவேளை அவங்கதான் நம்ம அம்மாவா இருக்குமோன்னு சந்தேகம் வர நாமளே வழிவகுக்க கூடாது அதான் வேணாம்னேன்.” என கண்டித்து..
ஆமாம் நாம் ஏன் இப்படி யோசிக்கல என ஆதிரை அமைதியாக.. ‘உன்ன பார்க்கும் முன்ன வரைக்கும் பட்டு என்பொண்ணு.. இப்போ நம்ம பொண்ணு. நமக்கு நடுவுல ப்ரியா வரக்கூடாது. நீ சொல்லு.. நம்ம பொண்ணுக்கு என்ன பேர் செலக்ட் செய்திருக்க.?”
அதிரூபனின் மனதில் தனக்கான இடத்தை அறிந்தவளிற்கு அத்தனை பெருமை வந்தமர கனவுலகத்தில் மிதந்தாள். ‘ஆதி.. நான் பேசுறது கேட்குதா இல்லையா.? இனிதான் பேரு செலக்ட் செய்யனுமா.? இல்ல செலக்ட் செய்துட்டியா.? எதாவது சொல்லு..” என்றான்.
ஆதிரையின் உரிமைக்கோபம் பிடித்திருந்தாலும்.. ‘வெறும் பேச்சுக்கொன்னும் குறைச்சலில்ல.. பக்கத்துல இருக்கும்வரை என்னை நெருங்கவிடாம செய்துட்டு.. வச்சா வச்சிக்கோங்கனு கோபம் வேற வருதா உனக்கு.? ஆளும் மூஞ்சும்.. வைடி போனை.” என கோபத்தோட இணைப்பை துண்டித்தான்.
ரூபனின் கோபத்தில் முதலில் அதிர்ந்தவள்.. பின்னே சன்னப் புன்னகை புரிந்தாள். ‘கல்யாணம் ஆகி இன்னைக்கோட மூனாவதுநாள்தான் ஆகுது.? அதிலயும் ஒன்றரை நாள் நீங்க வெளில போய்ட்டிங்க.. என்னவோதான் என்னை மட்டும் குறை சொல்றிங்க..” என தானும் கோபமாய் தன் குரலை பதிந்து அனுப்பினாள்.
இவளின் கோபத்தில் அதிரூபனிற்கு சிரிப்பு வர பதிலனுப்பாமல் ஆதிரை அனுப்பியதையே திரும்ப திரும்ப கேட்டிருந்தான்.
செய்தி பார்த்ததற்கான அறிகுறி வந்தபோதும் ரூபனிடமிருந்து பதிலில்லாமல் போகவே கோபமானவள்.. ‘இப்போ என்ன.? தள்ளியிருக்கும்போது லவ் பண்ணிட்டு.. அப்புறம் டைம் இருக்கும்போது புருசன் பொண்டாட்டி ஆகிக்கலாமில்ல..?” என தனக்குத்தானே நொடித்துக்கொண்டாள்.
மதிய உணவின்போது பட்டுவிற்கு தான் உணவூட்ட நினைக்க.. குழந்தை சாப்பிட முகம் சுழித்தாள். ஆதிரை குழந்தைக்கு ஊட்ட நினைத்ததையே பெருமையாய் நினைத்த கனகா. ‘போகப் போக பழகிடுவா ஆதிம்மா..” என்றார் நெகிழ்வாக.
மாலை ஐந்து மணியாகவும் குழந்தைக்கு மற்றுமொரு புத்தாடையை உடுத்தி கோவிலுக்கு அழைத்து செல்ல தயாரான கணேசன்.. ‘ஆதிம்மா நீயும் கோவிலுக்கு வரியாடா.? இங்க பக்கத்துலதான்.. மனசுக்கு அமைதியா இருக்கும்.” என்றார்.
‘தாத்தா.. ஆத்திமா இல்ல.. பட்டம்மா..” என திருத்தினாள் குழந்தை.
ஆதிரை.. ‘பட்டுமா எனக்கு ஆதிரை பட்டம்மானு ரெண்டு பேரு..” என்றாள் பெருமையாக.
குழந்தை ஆச்சர்யமாய் விழிவிரிக்கவும்.. ‘உனக்கும் ரெண்டு பேரு வைக்கலாமா.?” என்க.. குழந்தை ‘நா பட்டூ..” என முகம் சுருக்கினாள்.
‘ம் பட்டூ.. அப்புறம் மொழியாள்.. சரியா.? இப்போ என்னை போல உனக்கும் ரெண்டு பேரு..” என்றாள் பெருமையாக.
‘மொளி.. ஹா..ஹா.. எனக்கு ரெண்டு..” என சிரித்தாள் மொழியாள். ஆதிரை வைத்த பெயரை குழந்தை ஏற்றுக்கொண்டதை ஆச்சர்யத்தோடு பார்த்தனர் குடும்பத்தினர்.
‘பட்டுவோட இன்னொரு பேரு நல்லாயிருக்கா தாத்தா..?” என ஆதிரை கேட்க.. மாரியப்பன்.. ‘ரொம்ப நல்லா இருக்குமா..” என்றார் சந்தோசமாக.
‘பெரிய தாத்தா.. ரெண்டு பேரு..” என மீண்டும் சந்தோசித்த குழந்தை.. ‘அப்பாக்கு சொல்லி..” என ரூபன் அறை நோக்கி போனாள்.
“அச்சோ ஏமார்ந்து போவா..” என கனகா வருந்த.. ‘நான் பார்த்துக்கிறேன் அத்தை..” என ரூமிற்கு சென்றவள்.. ‘மொழியாள் பட்டு.. அப்பா வேலைக்கு போயிருக்கார்.. பட்டம்மாக்கு கதை சொல்றியா.?”என்றாள் ஆர்வமாக.
ரூபன் இல்லாததால் குழந்தையின் முகம் சுருங்கினாலும்.. ‘அப்பா வேலைக்கு போயி.. பாட்டி படுத்த கூடாது..” என ரூபன் சொன்னதை தனக்கு தானே மழலையில் கூறி ஆதிரையோடு ஒன்ற ஆரம்பித்தாள் மொழியாள்.