அடுத்த நாள் காலையிலும் ஆதிரை எட்டு மணியாகியும் எழாமல் இருக்கவே.. கனகாவிற்கு அத்தனை சந்தோசம். ‘ஆதி உன்னை புரிஞ்சிக்கிட்டாளா ரூபா.?” என மகனென்றும் பாராமல் கேட்டேவிட்டார்.
‘புரிஞ்சிக்கிட்டாம்மா.. ஆனா என்னை விட உங்களைதான் ரொம்ப நல்லா புரிஞ்சிருக்கா..” என குடும்பத்தினரைப் பற்றி ஆதிரை சொன்ன அனைத்தும் சொல்லி.. ‘நைட் இரண்டு மணி வரைக்கும் பேசிப் பேசியே டையர்டாகி இப்போ தூங்கிட்டிருக்கா..” என்றான் மகிழ்வாக.
‘தூங்கட்டும்.. தூங்கட்டும்.. நீ வரும்போதுதான பேசமுடியும்..?” என மருமகளிற்கு ஆதரவளித்தார். மொழியாள்.. ‘அப்பா..” என குரல் கொடுக்க.. ‘இதோடா பட்டு..” என குழந்தையை தூக்க சென்றான்.
நேற்றுபோல் அதிரூபனின் பகல் பொழுதை இன்றும் மொழியாள் எடுத்துக்கொள்ள.. தந்தை மகள் உரையாடலை ஆசையாய் பார்த்திருந்த ஆதிரையை பெருமையாய் பார்த்தனர் குடும்பத்தினர்.
அதிரூபன் இருப்பதால் வழக்கம்போல் பகலில் சற்று நேரம் தூங்கியெழுந்த மொழியாள் இரவு எட்டு மணிக்கெல்லாம் தூங்கிட.. எட்டரைக்கெல்லாம் உண்டுமுடித்து கணவன் வருகைக்காக அறைக்குள் சென்றுவிட்டாள் ஆதிரை.
‘ப்ரியா நினைவு தினத்தன்னைக்கு வம்பு செய்த ஒரு பொம்பளகிட்ட பட்டு என் புருசன் ரத்தம்னு ஆதி சரியான பதிலடி கொடுத்தா.. ஆதிக்கு பட்டு பத்தின உண்மையை சொல்லிடலாமே ரூபா.. ரொம்ப உறுத்தலா இருக்கு..” என்றார் கனகா.
தான் சொன்னதற்காக பட்டு விசயத்தை பேணிக்காக்கும் மனைவியை நினைத்து பெருமையடைந்தவன்.. ‘நம்ம ப்ரியாக்காக இதை ஏத்துக்கிட்டுதான் ஆகனும்.. இந்த பேச்சு திரும்பவும் கூடாது..” என்றான் ஆணையாக.
மகனைப் பற்றி அறிந்தவராதலால்.. ‘ஹ்ம்..” என வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டு.. ‘சரி ஆதி தனியா இருப்பா.. நீ போ..” என்றார்.
ரூபன் உள்ளே வந்ததும்.. ‘நேத்து கேள்விக்கு நீங்க பதிலே சொல்லல.. நீங்க ஏன் நடிக்க கூடாது..?” என ஆரம்பித்தாள் ஆதிரை.
‘ஹையோ.. இன்னைக்குமா..?” என அதிரூபன் அலற.. ‘பேசமாட்டிங்களா என்னோட.. நான் தூங்கறேன் போங்க..” என படுக்க போனாள் ஆதிரை.
‘அச்சோ.. முதலுக்கே மோசம் செய்தா எப்படியாகுறது.?” என பதறியவன்.. ‘எனக்கு சண்டை வர அளவுக்கு நடிப்பு வராது ஆதிம்மா.. அதோட கதாநாயகனுக்கு ஒன்னு ரெண்டு படம் தொடர்ந்து ஃபெயிலியர் அகிடுச்சினா மார்க்கெட் போய்டும்.. திரும்ப பழைய இடத்துக்கு வரது அவ்வளோ சுலபம் இல்ல, ஆனா எனக்கு அப்படியில்ல..
ஃபெயிலியர் ஆன படத்துலகூட நான் டூப் போட்ட சீனை ரொம்ப நல்லா வந்துருக்குனு தனியா மென்சன் செய்து ஆடியன்ஸ் சொல்லும்போது ரொம்ப சந்தோசமா இருக்கும்.. எனக்கு இந்த வேலை ரொம்ப பிடிச்சிருக்கு.” என விளக்கமளித்தான்.
‘சரி நடிக்க வேணாம்.. அதான் குரல் நல்லாயிருக்குல்ல.? பாட்டு பாட வேண்டியதுதான.?”
‘ஹே.. குரல் நல்லாயிருந்தா பாட்டு வந்திடுமா என்ன.? எனக்கு பாட வராதுடா.. ஆனா ஒரு குட் நியூஸ் சொல்லட்டுமா.?” என்றான் ஆவலாக.
இவளும் ஆர்வமாய் தலையாட்ட.. ‘ஒரு வரலாற்று கதை.. பிரபல டைரக்டர் டைரக்ட் பண்றார். அதுல வில்லன் ஹீரோ ரெண்டு பேருக்கும் நான்தான் டப்பிங் செய்யப் போறேன்.. ஹீரோக்கு டூப்பும் நான்தான் போடறேன்.. அந்த படம் நாலு லாங்வேஜ்ல ரிலீஸ் ஆகுது.. இது ரொம்ப பெரிய ஆஃபர்.. உன்ரூபன் கமிட் ஆகிருக்கேன்..” என்றான் பெருமையாக.
‘சும்மா சந்தோசப்படுறதுக்கு கன்னத்துலயாவது ஒரு முத்தம் கொடுக்கலாம்..” என்றான் ராகமாக.
ஆதிரை அதிரூபன் பிரிவை நினைத்திருக்க.. ‘முத்தம் கொடுக்கலனாலும் பரவால்ல.. இப்படி சோகமா முகத்தை வச்சிக்காத..” என கெஞ்சியவன்.. ‘சூட்டிங் ஆரம்பிச்சிட்டா வீட்டுக்கு வரது கொஞ்சம் கஷ்டம்தான் ஆதிம்மா..” என வருந்தி..
‘ஆமா.. நீ எதோ வேலைக்கு போகப்போறன்னியே.. பேசாம அதுக்கு ட்ரை பண்ணு.. நான் நல்லா படிச்சி பெரிய வேலைக்கு போகனும்னு அப்பா ஆசைப்பட்டது உன் மூலமா நிறைவேறட்டும்.. உனக்கும் டைம் பாசாகும்.. படிச்சதுக்கும் ஒரு அர்த்தமிருக்கும்..” என்றான்.
‘வேலைக்கெல்லாம் போக வேணாம்னு அம்மா சொல்லிட்டாங்க.. அதோட எனக்கும் பட்டுவோட இருக்க பிடிச்சிருக்கு..” என்றாள்.
‘முன்ன மாதிரி ஃபோன் கூட பேசாம இருக்கமாட்டேன்.. இந்த படம் சூட்டிங் ஸ்பாட்லாம் மோஸ்டா சிக்னல் கிடைக்கிற இடமாத்தான் இருக்கும்.. டைம் கிடைக்கும்போதெல்லாம் வீடியோ கால்ல வந்துடறேன்.. இடையில ஒரு நாள் கேப் இருந்தாலும் வீட்டுக்கு ஓடி வந்துடுவேன்..” என தேற்றினான்.
‘என்ன படம்.? யார் பத்தின கதை.?” என அடுத்த கேள்வியை ஆரம்பிக்க.. ‘ஆதிம்மா.. நமக்கு கல்யாணம் ஆகி இன்னைக்குதான் மூனாவது நைட் சேர்ந்திருக்கோம்.. என்னை பார்த்தா பாவமா இல்லையா.? வரலாற்று கதை கேக்குற நேரமா இது.?” என்றான் கொஞ்சலாக.
அதிரூபனின் பார்வை கண்டு ஆதிரை இமைகள் படபடக்க.. மனம் அதிவேகமாய் துடிக்க.. தன்னை கண்டுகொள்வானோ என்ற தவிப்போடு எழுந்து கபோர்டில் எதையோ தேடுவதுபோல் பாவனை செய்தாள்.
ஆதிரையை நெருங்கியவன்.. ‘தள்ளிப் போனாலும் துள்ளியமா கேக்குது உன் இதயத்துடிப்பு..” என மனைவியை அள்ளி மெத்தையில் விட்டு விளக்கை அணைத்தான்.
—— ——- ——-
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு ஆதிரைக்கு காஞ்சனாவிடமிருந்து அழைப்பு வரவும்.. ‘ம்மா..” என்றாள் தூக்க கலக்கத்தோடே.
‘பட்டம்மா..” என குழந்தை முகம் சுருக்க.. ‘இது மொழியம்மாக்கு..” என காஞ்சனா வாங்கி வந்த டெடியை நீட்ட.. ‘ப்பா வேணாம்..” என முகம் சுணங்கி ரூபனைப் பார்த்தாள்.
‘ம்மா.. அங்க வைங்க.. நான் இங்க திரும்ப வந்ததுக்கப்புறம் விளையாட வச்சிக்கிறேன்..” என்றாள் ஆதிரை.
மாரியப்பனிற்கு கணேசனிற்கும் காஞ்சனாவை கண்டதும் அத்தனை சந்தோசம்.. ‘இது உனக்கு அண்ணன் வீடுன்னு எத்தனை சொல்லியும் வரவேயில்ல.. மருமகளை அழைச்சிட்டு போக சம்பந்தி முறையில வந்திருக்க..” என குறைபட்டார் கணேசன்.
மகள் புகுந்த வீட்டோடு இணங்கியிருக்கிறாளா என அறியாமல் இங்கு வர மனம் வரவில்லை காஞ்சனாவிற்கு. ரூபன் மீதான ஆதிரையின் கோபம் அறிந்தவராதலால் மகளின் அனுகுமுறை பற்றி கேட்டறிந்து கொள்ளவும் தயக்கம். எனவே எப்பொழுது ஃபோன் செய்தாலும் ஓரிரு வார்த்தையோடு முடித்துக்கொள்வார் காஞ்சனா.
தற்போது குழந்தையோடு ஆதிரை ஒன்றியிருப்பதும் ஆதிரையின் மலர்ந்த முகமும் சந்தோசத்தை கொடுக்க.. ‘இனி அடிக்கடி வரேண்ணா..” என்றார்.
‘ம்.. பார்க்கலாம் பார்க்கலாம்..” என சந்தேகத்தோடு சொல்லி.. ‘மாலா டிபன் ரெடியா..?” என்றார்.
‘ஆச்சுங்க..” என்ற மாலா ஆதிரைக்கு டீ கொடுத்து டிபனை மாலா எடுத்து வைக்கலானார்.
‘எழுந்ததும் டீ குடிச்சிடுவியே..” என சந்தேகத்தோடு கேட்ட காஞ்சனா.. ‘அப்போ என்கிட்ட பேசினதுக்கப்புறம் திரும்பவும் தூங்கிட்டடியா.? என்ன ஆதி இது.?” என கண்டித்தார்.
‘ம்மா.. நான் சீக்கிரம் எழுந்தாலும் அங்க போலவே இங்கயும் வெட்டியாத்தான் இருக்கனும்..” என சலுகையாய் சொன்னவள்.. ‘வேண்ணா நான் எழுந்து சமைக்கிறேன்.. உங்கண்ணன் அண்ணிலாம் சாப்பிட தயாரான்னு கேளுங்க..” என்றாள் சிரிப்போடு.
‘ஆதிம்மா.. எதுக்கு இப்படியொரு விபரீத விளையாட்டு..?” என கணேசன் பொய்யாய் பதற.. காஞ்சனாவின் மனம் பெருத்த நிம்மதி கொண்டது.
மாரியப்பனும் கணேசனும் காஞ்சனாவை பாசத்தோடு கவனித்த சந்தோசத்தில் ஆதிரைக்கு கண்ணீரே வந்துவிட்டது. மனைவியின் எண்ணம் அறிந்த ரூபன்.. ‘ஆதி.. அப்பா சொன்னதுக்காக அழாத.. நான் வேணா நீ சமைக்கிறதை சாப்பிடுறேன்.. பொண்டாட்டிக்காக இந்த ரிஸ்க்கு கூட எடுக்கலன்னா எப்படி.?” என்றான் குறும்போடு.
‘போங்க.. நான் ஒன்னும் அழல..” என ஆதிரை சமாளிக்க.. ‘என்ன ஆதி அழுவுதா.?” என மாரியப்பன் உண்மையாய் பதற..
‘தாத்தா.. மருமகளை மகள் போல பார்த்துக்கிற குடும்பம் கிடைக்கிறதே பெரிய விசயம்.. இதுல எங்கம்மாவையும் இப்படி கவனிச்சதும் அழுகை வந்துடுச்சி தாத்தா..” என்றாள் சந்தோசமாக.
‘ப்பா.. பட்டம்மா அழ வேணாம் சொல்லி..” என மொழியாள் கவலையாக.. அவசரமாய் கண்ணைத் துடைத்தவள்.. ‘நான் அழலடா பட்டு.” என முத்தமிட்டாள் குழந்தைக்கு.
குழந்தை சந்தோசமாய் சிரிக்கவும்.. ‘பட்டுமா.. பெரிய பட்டுவும் நானும் இன்னைக்கு வேலைக்கு போகனும்.. பாட்டியை படுத்தாம இருக்கனும் சரியா.?” என்றான் அதிரூபன்.
‘ப்பா.. பட்டம்மா வேலைக்கு வாணாப்பா..” என குழந்தை மறுப்பாய் முகம் சுருக்க.. ‘குழந்தையை கூட்டிட்டு போலாம் தம்பி..” என்றார் காஞ்சனா.
‘இல்லைங்கத்தை.. அது சரி வராது.. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்..” என திடமாய் மறுத்தவன்.. ‘ஒன்னு.. இரண்டு.. மூனு நாளைக்கு மட்டும்தான் பட்டம்மா வேலைக்கு போவாங்க.. அப்புறம் சின்ன பட்டுகிட்ட வந்திடுவாங்க..” என தன் கண்களை பெரிதாக்கி எடுத்துரைக்க..
‘ப்பா.. ஒன்னு மூனு..” என ஐந்து விரலை காட்டிய குழந்தை.. ‘பட்டம்மா வந்திடுவாங்க..” என்றாள் கை தட்டியபடி.
யாரிடமும் குழந்தை ஒட்டமாட்டாள் என கணேசன் சொல்லியிருக்க.. ஆதிரையிடம் குழந்தை ஒன்றியதையும்.. தன் மகளை பிரிய மனமில்லாமல் மறுத்த குழந்தை, அதிரூபன் எடுத்துரைத்ததும் உடனே ஏற்றுக்கொண்டதையும் ஆச்சர்யமாய் பார்த்திருந்தார் காஞ்சனா.
நேரம் பத்தரையை தாண்டியிருக்க.. ‘அண்ணா.. பதினொன்னரை வரைதான் நல்ல நேரம்..” என்றார் காஞ்சனா.
‘அத்தை.. ஒரு அரை மணிநேரத்துல பட்டு தூங்கிடுவா.. அவ தூங்கினதும் கிளம்பலாம்..” என சோபாவில் படுத்தவன் பட்டுவை மார்பில் போட்டு ‘பட்டு தூங்குவியாம்..” என வழக்கம்போல பேச ஆரம்பிக்க.. காலை ஆறு மணிக்கே எழுந்ததால் இருபது நிமிடத்தில் தூங்கியிருந்தாள் மொழியாள்.
‘போய்ட்டு வரேன் தாத்தா..” என மாரியப்பனிடம் சொல்லவும்.. ‘சந்தோசமா போய் வாம்மா..” என்றார் மாரியப்பன். பிறகு கணேசன் கனகாவிடம் விடைபெற.. ‘அங்க போய் பட்டுவ நினைச்சிட்டிருக்க கூடாது.. எல்லாரோடவும் சந்தோசமா இருக்கனும்..” என்று..
காஞ்சனாவிடம்.. ‘அடிக்கடி வரன்னு சொல்லியிருக்க காஞ்சிமா.. பார்க்கலாம் சொன்னதை செய்வியானு..” என எடுத்துரைத்து மகன் மருமகளை அனுப்பி வைத்தார் கணேசன்.