மனம் மயங்குதே
எபிசொட்-10
அடுத்த நாள் காலை அவள் அவனுடைய ஆபீஸ்க்கு வந்தாள். அவன் அவளை பார்த்து அழைத்தான் . “தியா , இங்க வாருங்கள்” . எப்போது என்னுடைய வீட்டுக்கு வருவீங்க என்று கேட்டான் . அதற்கு அவள் இன்று மாலை வருகிறேன் என்று கூறினாள் , அவன் அவளை பார்த்து , நீங்க தங்குவதற்கு தனி தனி அறை வேண்டுமா இல்லை eமூன்று பேரும் ஒரே அறையில் தாங்குவீர்களா என்று அவளிடம் கேட்டான் . அதற்கு அவள் ஒரே அறை போதும் , நாங்கள் ஒருவரை ஒருவர் பிரிந்தது இல்லை என்று கூறினாள் . அவனுக்கு வியப்பு , சிறு வயது முதல் இவர்கள் எப்படி பிரியாமல் இருக்க முடியும் என்று . அதன் பின் அவளுக்கு என்ன வேலை என்று தெளிவாக கூறினான் . அவளும் வேலையை நன்றாக புரிந்து கொண்டு வேலை செய்தாள். அவளிடம் அவளது தோழிகளை ஆபீஸ்க்கு வர சொல்ல சொன்னான் . சரி என்று அவளும் அவர்களுக்கு போன் செய்து விசயத்தை சொன்னாள். அவர்களும் சரி என்று வந்தார்கள் . அஜய் அவளை பார்த்து ,” தியா! உங்க விடுதிக்கு ஏற்கனவே நான் லாரி அனுப்பிவிட்டேன் உங்கள் பொருட்கள் எடுக்க , உங்கள் தோழிகள் இங்கே வந்துவிட்டால் நாம் எல்லாரும் சேர்ந்து என் வீட்டிற்கு செல்லலாம் ” என்று கூறினான் . அவளும் சரி என்றாள். அவளது தோழிகள் வந்து விட்டார்கள் . அவனிடம் அன்று பேசியதற்கு மன்னிப்பு கேட்டார்கள் . அவன் அவர்களை பார்த்து சிரித்தான் , ” எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை , நீங்கள் எனக்கு ஒரு சகோதரிகள் மாதிரி , நீங்கள் பேசியது ஒன்றும் இல்லை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ” என்று கூறினான் . அவர்களும் , ” ரொம்ப நன்றி சார் , எங்களை உங்க தங்கச்சி என்று சொல்வதை கேட்பதற்கு எங்களுக்கு மகிழ்ச்சி , எங்களுக்கு யாரும் இல்லை . இப்போது ஒரு அன்னான் இருக்கிறான் என்கிற சந்தோசம் போதும் ” என்று கூறி கண் கலங்கினார்கள் . அவனுக்கு ஒரே ஆனந்தம் , அவனுக்கு ஒரு காதல் கிடைத்ததோடு இரண்டு தங்கச்சிகள் கிடைத்துள்ளார்கள் என்று அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை , ஆனால் அவன் தியாவை தங்கச்சி என்று கூப்பிட வில்லை அவளும் அவனை அண்ணன் என்று கூப்பிடவில்லை . அவள் சார் என்று அழைப்பாள் அவன் தியா என்று அழைப்பான் அவ்ளோ தான் . முதல் நாள் என்பதால் அவர்களும் பெரிதாக கண்டுகொள்ள வில்லை . அவன் வீட்டுக்கு போனார்கள் . அது ஒரு அரண்மனை மாதிரி இருந்தது அவன் வீட்டு நுழைவாயாலே ஒரு ராட்சஸ கதவு இருந்தது உள்ள கார் போகையில் இரு பக்கங்களிலும் பெரிய பெரிய மரங்கள் இருந்தது அதில் நிறைய வண்ண வண்ண பூக்கள் இருந்தது அவர்கள் கார் ஜன்னலை கீழயே இறக்கி பார்க்கையில் அந்த பூக்கள் அப்படியே பூ மழை போல் கொட்டியது , இதை பார்த்து இவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் . உள்ள போனதும் அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள் , அதை பார்த்து அவர்கள் கண்கள் கலங்கி விட்டது , அவர்கள் அவனை பார்த்து , ” அண்ணா ரொம்ப நன்றி , நாங்க இதை எதிர் பார்க்கவில்லை . எங்களை இது வரை மனிதராக கூட மதித்தது இல்லை ஆனால் நீங்க எங்களை ஆரத்தி எடுத்து வரவேற்பது மிகவும் ஆனந்தம் ” என்று கூறி அழுதார்கள் , அதை பார்த்து அவனும் அழுதான் . தியா , ” சார் , ரொம்ப நன்றி , எனக்கு இவ்ளோ மரியாதை குடுத்து வீட்டில் தங்க வைத்து என் தோழிகளை உங்கள் சகோதரிகளாக ஏற்று இவ்ளோ தூரம் எங்களுக்காக பண்றீங்க உங்களுக்கு நாங்க என்ன பண்ண போகிறோம் என்று தெரிய வில்லை , நான் என்னால் முடிந்த அளவு உங்களுக்கு ஒரு நல்ல துணையாக இருபேன் ” என்றாள் . அவன் அவளை பார்த்தான் , ” நீங்க எனக்கு துணையாக வாழ்க்கை முழுவதும் இருப்பிங்களா ? ” என்று கேட்டான். அவள் சற்றென்று ,” சார் , ஒரு நல்ல நண்பராக இறுதி வரை இருபேன்” என்று கூறினாள் . அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி இல்லை என்றாலும் வருத்தம் இல்லை . அவள் அவனை நண்பனாக ஏற்றதே பெரிதாக எண்ணினான்.அவளும் அவளது தோழிகளும் உள்ள போனார்கள். 10 சமையல்காரர்கள் வந்தார்கள் , அவர்களிடம் அவன் ” இவர்கள் என்னுடைய தங்கைகள் , இவள் என்னுடைய தோழி என்று தியா வை அறிமுகம் படுத்தினான் , இவர்கள் இனிமேல் இங்கே தான் இருப்பார்கள் . பெரிய பெட் ரூமை இவர்களுக்கு ரெடி பண்ணுங்க , 3 பேர் ஒரே அறையில் இருப்பார்கள் . தனி தனி கப் போர்டு வச்சுருங்க , ரொம்ப அழகா ரெடி பண்ணுங்க ” என்று கூறினான் . அவர்கள் ஆச்சர்யத்துக்கு அளவே இல்லை , எப்படி ஒரு மாமனிதர் நம்மை அவர் வீட்டில் தங்க வைத்து பார்ப்பார் என்று ஆனால் வெளியே காட்டிக்கொள்ள வில்லை . அவன் அவர்களிடம் , ” இதுவரை என்னுடைய வீட்டுக்கு எனக்கு சொந்தமாக யாருமே வந்தது இல்லை , இன்று நீங்கள் தான் முதல் , எனக்கு ரொம்ப சந்தோசம் , யாருமே இல்லாத எனக்கு 2 தங்கச்சிகள் கிடைச்சுருக்கீங்க ஒரு நல்ல தோழி கிடைத்திருக்கிறார்கள் , இதை விட எனக்கு ஒன்றும் தேவை இல்லை என்று கூறி மகிழ்ந்தான்.